Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

நீங்கள் எனது கேள்வியினை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என கருதுகிறேன்,

நீங்கள் எப்போது சொன்னீர்கள் விபத்து நடந்தால் பொரும் தொகை பணம் கிடைக்கும் என்று?
நான் உங்களை சொல்லவே இல்லை. சிறிஅண்ணா வேலை இடத்தில் நடந்த விபத்துக்கு நட்ட ஈடு  கொடுக்கமாட்டார்கள் என்று சொன்னதை படித்த போது விபத்து நடந்தால் பொரும் தொகை பணம் கிடைக்கும் என்று  சுலபமாக சொல்லி கொள்பவர்கள் நினைவிற்கு வந்தார்கள்.

  • Replies 89
  • Views 6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    நன்றி வசி. நீங்கள் நடந்த சம்பவத்தையும், மனித மனத்தையும்... வித்தியாசமான முறையில் ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்.  //மனித மனம் வித்தியாசமானது, மனதில் ஏற்படும் வலிகளை உணராதிருக்க முயற்சி செய்யு

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • குமாரசாமி
    குமாரசாமி

    வேலைக்கு போவது சந்தோசம்.  உடல் நிறையில் கவனமாக இருக்கவும். உலகிலை இப்ப அதுதான் பெரிய பிரச்சனை.ஆ...ஊ எண்டால் கால களட்டி எடுக்கிறாங்கள் 😡  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

இப்படியான வழக்குகளுக்கு ஒரு limitation period இருக்கும். செய்வதாயின் அதற்குள் செய்ய வேண்டும். 

யோசிக்கவும்🙏🏾.

 

காய இழப்பீடு,வேதனைக்குரிய பணம் என பல பெற முடியும். ஆனால் வேலை செய்யும் இடத்தில் பல முகச்சுளிப்புகளை சந்திக்க நேரிடும். வேலையிலிருந்து முற்று முழுதாக விலகுகிறேன் என முடிவெடுத்து விட்டால் பல சட்டபூர்வ வேலைகளை காட்டலாம். வாழ்நாள் வரைக்கும் பல பண வரவுகளை பெறலாம்.
பணம் பெரிதா மனம் தானே பெரிதென்றால் இப்படித்தான் வாழ வேண்டும்.


எல்லாமே அவரவர் செய்த காப்புறுதிகள் மூலமே பணம் வருகின்றது. நாமும் பல காப்புறுதிகள் செய்திருக்கின்றோம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

வீட்டிலும் உணவு விடயத்தில் 
நாட்டுக் கோழி முட்டைக் கோப்பி, திரிபோசா மா உருண்டை, ஆட்டுக்கால் சூப்
குரக்கன் மா புட்டுக்கு... பாரை  மீன் குழம்பு,  மரவள்ளிக்கிழங்கு கறி..  
பயத்தம் பணியாரம், பகோடா, தோடம்பழ சாறு என்று  நல்ல கவனிப்பு 

 

12 hours ago, தமிழ் சிறி said:

விபத்திலிருந்து  மீண்டு வர எவ்வளவு பணம் என்றாலும் செலவழிப்பார்கள்.
வேலை விபத்து ஆட்களுக்கு வைத்தியம் செய்வதற்காகவும், தெரப்பி செய்யவும் என்று 
குறிப்பிட்ட  இடங்களில் மருத்துவ மனைகள் உள்ளது.
அதில் உயர்தர உணவு,  சிகிச்சைகளுடன், சென்று வர வாகன வசதிகள் என்று..
எது தேவையோ.. அவற்றை அவர்களே ஒழுங்கு செய்து தருவார்கள்.  

அனுபவியுங்கள் மகா ராஜாவே, நீங்கள் அதற்கு தகுதியுள்ளவரே!

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

காய இழப்பீடு,வேதனைக்குரிய பணம் என பல பெற முடியும். ஆனால் வேலை செய்யும் இடத்தில் பல முகச்சுளிப்புகளை சந்திக்க நேரிடும். வேலையிலிருந்து முற்று முழுதாக விலகுகிறேன் என முடிவெடுத்து விட்டால் பல சட்டபூர்வ வேலைகளை காட்டலாம். வாழ்நாள் வரைக்கும் பல பண வரவுகளை பெறலாம்.
பணம் பெரிதா மனம் தானே பெரிதென்றால் இப்படித்தான் வாழ வேண்டும்.


எல்லாமே அவரவர் செய்த காப்புறுதிகள் மூலமே பணம் வருகின்றது. நாமும் பல காப்புறுதிகள் செய்திருக்கின்றோம் அல்லவா?

நான் இதை பணம், மனம் என பார்க்கவில்லை. நிகழ்ந்த இழப்புக்கு ஈடு அவசியம். 

விபத்துக்களின் பின் விழைவுகள் நீண்ட நாளின் பின்பும் தெரிவது உண்டு. அப்போ யோசித்து பயனில்லை அல்லவா?

வேலையிட முகசுழிப்பு வரும் என்பது உண்மைதான்.

ஆனால் முதலாளியாக நான் இருந்தால், இப்படி இழப்பீடு கேட்கும் தொழிலாளியை முகம் சுழிக்கமாட்டேன். நல்லவேளை காப்புறுதி இருக்கிறது, அவர்கள் கட்டட்டும், இந்த மனிதருக்கும் போதிய ஈடு கிடைக்கட்டும் என்றே இருப்பேன்.

👆🏼இதுதான் நல்ல மனம் என நினைக்கிறேன்.

அடுத்த வருடம் எனது பிறிமியம் கூடும்தான். ஆனால் அதுதான் தொழில் முனைவதன் ரிஸ்க். 

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்ல போனால் தமிழ்சிறி நீங்கள் எழுந்து நடப்பீர்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை ...வேலைக்கு போவதையிட்டு மிக்க மகிழ்ச்சி ...உங்கள் தன்னம்பிக்கைக்கு ஒரு சபாஷ் ...உங்கள் குடும்பத்தினரும் உங்களுக்கு பக்க பலமாய் இருந்திருப்பார்கள் ...வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2023 at 10:18, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் எப்போது சொன்னீர்கள் விபத்து நடந்தால் பொரும் தொகை பணம் கிடைக்கும் என்று?
நான் உங்களை சொல்லவே இல்லை. சிறிஅண்ணா வேலை இடத்தில் நடந்த விபத்துக்கு நட்ட ஈடு  கொடுக்கமாட்டார்கள் என்று சொன்னதை படித்த போது விபத்து நடந்தால் பொரும் தொகை பணம் கிடைக்கும் என்று  சுலபமாக சொல்லி கொள்பவர்கள் நினைவிற்கு வந்தார்கள்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2023 at 18:00, குமாரசாமி said:

எல்லாமே அவரவர் செய்த காப்புறுதிகள் மூலமே பணம் வருகின்றது. நாமும் பல காப்புறுதிகள் செய்திருக்கின்றோம் அல்லவா?

எல்லாமே நாம் செய்துள்ள காபுரிதிகளின் படிதான் எமக்கு கிடைக்கிறது - ஜென்மஜென்மத்துக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, nilmini said:

எல்லாமே நாம் செய்துள்ள காபுரிதிகளின் படிதான் எமக்கு கிடைக்கிறது - ஜென்மஜென்மத்துக்கும்

இங்கு ஜேர்மனியில் தொட்டது பட்டது எல்லாவற்றுக்கும் காப்புறுதிதான். அதிலும் மருத்துவ காப்புறுதியும் ஓய்வூதிய காப்புறுதியும் மிக மிக முக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

vasee    நீங்கள் விளங்கி கொண்டது மகிழ்ச்சி.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2023 at 22:17, ஈழப்பிரியன் said:

கியூடெக்ஸ் போட்ட காலை இணைத்துள்ளார்.

@நிழலி யின் கண்களுக்கு தெரிந்தது எப்படி உங்களுக்கு தெரியவில்லை.

உடலின் ஒவ்வொரு பகுதியாக இணைப்பாரோ?

 

நமீதாவை கூட பார்த்திரலாம் நம்ம ஆட்களை பார்க்க இயலாது 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2023 at 16:39, தமிழ் சிறி said:

வேலைக்கு போக முதல்… விபத்தை ஏற்படுத்தியவனுடன்
சாதாரணமாக கதைக்கலாம் என்ற மன உணர்வுடன்தான் சென்றேன்.
ஆனால்… அவன் என்னை கண்டு ஒளித்த போது,
அவனை கூப்பிட்டு கதைக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.

இன்றுடன் மூன்று நாட்களாகி விட்டது.
தவறு செய்தவன் தானே… என்னிடம் வந்து கதைக்க வேண்டும்.
நானாக போய் கதைப்பது… சரியல்ல என்பது எனது அபிப்பிராயம். 
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என அறிய ஆவல். 🙂

இன்றுதான் இந்தத் திரியைப் படிக்க நேரம் வந்தது. @தமிழ் சிறி ஐயா மீண்டும் வேலைக்குப் போவது சந்தோஷம்!

வீட்டில் அடைந்து கிடைக்காமல் வேலைக்குப் போனால் உடம்பும் குறையும். மனதும் இலகுவாகும்.

தவறு செய்தவன் குற்ற உணர்வில் வந்து கதைக்காமல் இருக்கலாம். அது அவனுக்கு தொடர்ந்து உறுத்திக்கொண்டு இருக்கும். இப்போதுவரை அவனுடன் கதைக்கவில்லை என்றால் உறுத்தல் பெருகும்.

ஒரு சாதாரண தருணத்தில் ஒரு சில வார்த்தைகளை சினேகபூர்வமாகச் சொன்னால் பெரிய மாற்றம் வரும். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நீண்டநாட்களின் பின் இன்றுதான் இத் திரி கண்ணில் பட்டது. தமிழ்சிறி குணமாகி மீண்டும் வேலைக்கு போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. உறவுகள் அனைவரும் உங்கள் நலனுக்காகப் பிராத்தித்தார்கள். உங்கள் உடல் நலனில் கவனமுடன் தொடர்ந்து வேலை செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

AAD20-BE4-12-FB-4-CFC-A286-3231214-CD5-B

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

AAD20-BE4-12-FB-4-CFC-A286-3231214-CD5-B

நீங்கள் இங்கு வரையும் ஓவியங்கள் ஒவ்வொன்றும் பொத்திப் பாதுகாக்கப்பட வேண்டியவை......!  👍

நன்றி கவி அருணாசலம்......!  

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இப்பதிவைப் பார்த்தேன் சிறி அண்ணா.. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
உங்கள் விபத்து பற்றி எழுதியபோது, விபத்தை ஏற்படுத்தியவன் மிகவும் மனம் வருந்தியதாக நீங்கள் எழுதி வாசித்தது போல உள்ளது.  எனது அபிப்பிராயம் அவனுக்கு குற்ற உணர்வு.
நானும் எந்த வித எதிர்பார்ப்புமின்றி எதாவது உதவிகள் அல்லது யாரையாவது மன்னித்து விட்டு, பின்னர் அவர்கள் அதை மதிக்காது, அல்லது அல்லது அதை பொருட்படுத்தாது கடந்து செல்லும் போது பயங்கர கோபம் வரும்... அது மனித மனித இயல்பு போல... எந்த வித எதிர்பார்ப்பும் இல்லது பெருந்தன்மையாக செய்திருப்போம்.  இப்போதெல்லாம் அப்படியானவர்களை கடந்து செல்ல முயற்சித்து வெற்றியும் கண்டு இருக்கிறேன் மன உளைச்சலும் பட்டிருக்கிறேன்.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.