Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இங்கே ஒரு வாழ்வு இருந்தது 
அங்கே ஒரு கதை இருந்தது 
அதிலும் ஒரு அறம் இருந்தது 
அப்போ எல்லாம் அழகு இருந்தது 

வீடு இருந்தது மரம் இருந்தது 
மரத்தில் பல பறவை இருந்தது 
பாடி இருந்தது கூடி இருந்தது 
பல குஞ்சுகள் அங்கு கூவி இருந்தது 

நிலவும் இருந்தது கனவும் இருந்தது 
நித்தம் இசைக்கும் பாடல் இருந்தது 
ஆட்டம் இருந்தது கூத்தும் இருந்தது 
எங்கும் சலங்கை ஒலியாய் இருந்தது

நதி இருந்தது கடல் இருந்தது 
பூ இருந்தது கனியும் இருந்தது 
அருகில் எங்கும் ஆலயம் இருந்தது 
அங்கே ஒலிக்கும் மணி இருந்தது 

பள்ளி இருந்தது படிப்பும் இருந்தது 
துள்ளித் திரிந்த காலம் ஒன்றிருந்தது 
அடிக்கடி கூடும் நண்பர் இருந்தனர் 
அணைத்து எம்மை தாங்கும் ஆலமரமிருந்தது 

கோவில் இருந்தது சாமி இருந்தது 
வருடா வருடம் திருவிழா நடந்தது 
அம்மன் ஆடி வரும் தேரும் இருந்தது 
அதை விட அழகு எது தான் இருந்தது 

அறிவு இருந்தது தேடல் இருந்தது
ஆயிரம் பள்ளிகள் அருகில் இருந்தது 
கலை இருந்தது தமிழ் மொழி இருந்தது 
காக்கவென்றொரு தெய்வம் இருந்தது 

மார்கழி மாதம் ஊர்களில் எல்லாம் 
கூவுத் திரியும் குயில்கள் இருந்தனர் 
பூவும் ஆட கூந்தலும் ஆட 
கண்கள் ஆலே கவிதைகள் பேசி 
சந்திரன் போலே பெண்கள் இருந்தனர் 

காதல் இருந்தது கனிவும் இருந்தது 
பாசம் இருந்தது நேசம் இருந்தது 
பங்கு பிரித்து உண்ணும் வாழ்வு இருந்தது 
உண்மை இருந்தது நேர்மை இருந்தது 

நீரும் இருந்தது நெருப்பும் இருந்தது 
நித்திய வாழ்வினில் சத்தியம் இருந்தது 
அறமும் இருந்தது தர்மமும் இருந்தது 
அழியாப் பிரம்ம ஜோதி எரிந்தது 

இத்தனை வாழ்வும் எங்கே போனது 
எத்தனை கனவுகள் வந்து போகுதே 
இன்னும் கனவுகள் உயிர்க்கவில்லையா
எமக்காய் இரவுகள் விடியவில்லையா 
எங்கே கனவுகள் தொலைந்து போனதா.

பா.உதயன்✍️
 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, uthayakumar said:

 

இங்கே ஒரு வாழ்வு இருந்தது 
அங்கே ஒரு கதை இருந்தது 
அதிலும் ஒரு அறம் இருந்தது 
அப்போ எல்லாம் அழகு இருந்தது 

வீடு இருந்தது மரம் இருந்தது 
மரத்தில் பல பறவை இருந்தது 
பாடி இருந்தது கூடி இருந்தது 
பல குஞ்சுகள் அங்கு கூவி இருந்தது 

நிலவும் இருந்தது கனவும் இருந்தது 
நித்தம் இசைக்கும் பாடல் இருந்தது 
ஆட்டம் இருந்தது கூத்தும் இருந்தது 
எங்கும் சலங்கை ஒலியாய் இருந்தது

நதி இருந்தது கடல் இருந்தது 
பூ இருந்தது கனியும் இருந்தது 
அருகில் எங்கும் ஆலயம் இருந்தது 
அங்கே ஒலிக்கும் மணி இருந்தது 

பள்ளி இருந்தது படிப்பும் இருந்தது 
துள்ளித் திரிந்த காலம் ஒன்றிருந்தது 
அடிக்கடி கூடும் நண்பர் இருந்தனர் 
அணைத்து எம்மை தாங்கும் ஆலமரமிருந்தது 

கோவில் இருந்தது சாமி இருந்தது 
வருடா வருடம் திருவிழா நடந்தது 
அம்மன் ஆடி வரும் தேரும் இருந்தது 
அதை விட அழகு எது தான் இருந்தது 

அறிவு இருந்தது தேடல் இருந்தது
ஆயிரம் பள்ளிகள் அருகில் இருந்தது 
கலை இருந்தது தமிழ் மொழி இருந்தது 
காக்கவென்றொரு தெய்வம் இருந்தது 

மார்கழி மாதம் ஊர்களில் எல்லாம் 
கூவுத் திரியும் குயில்கள் இருந்தனர் 
பூவும் ஆட கூந்தலும் ஆட 
கண்கள் ஆலே கவிதைகள் பேசி 
சந்திரன் போலே பெண்கள் இருந்தனர் 

காதல் இருந்தது கனிவும் இருந்தது 
பாசம் இருந்தது நேசம் இருந்தது 
பங்கு பிரித்து உண்ணும் வாழ்வு இருந்தது 
உண்மை இருந்தது நேர்மை இருந்தது 

நீரும் இருந்தது நெருப்பும் இருந்தது 
நித்திய வாழ்வினில் சத்தியம் இருந்தது 
அறமும் இருந்தது தர்மமும் இருந்தது 
அழியாப் பிரம்ம ஜோதி எரிந்தது 

இத்தனை வாழ்வும் எங்கே போனது 
எத்தனை கனவுகள் வந்து போகுதே 
இன்னும் கனவுகள் உயிர்க்கவில்லையா
எமக்காய் இரவுகள் விடியவில்லையா 
எங்கே கனவுகள் தொலைந்து போனதா.

பா.உதயன்✍️
 

அருமையான கவிதை உதயன். நன்றி !

  • கருத்துக்கள உறவுகள்

காலமாற்றமா? திட்டமிட்ட மாற்றமா?
யாமறியோம் பராபரமே.
இருப்பைத் தொலைத்த மனிதர்களானோம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, uthayakumar said:

 

இங்கே ஒரு வாழ்வு இருந்தது 
அங்கே ஒரு கதை இருந்தது 
அதிலும் ஒரு அறம் இருந்தது 
அப்போ எல்லாம் அழகு இருந்தது 

வீடு இருந்தது மரம் இருந்தது 
மரத்தில் பல பறவை இருந்தது 
பாடி இருந்தது கூடி இருந்தது 
பல குஞ்சுகள் அங்கு கூவி இருந்தது 

நிலவும் இருந்தது கனவும் இருந்தது 
நித்தம் இசைக்கும் பாடல் இருந்தது 
ஆட்டம் இருந்தது கூத்தும் இருந்தது 
எங்கும் சலங்கை ஒலியாய் இருந்தது

நதி இருந்தது கடல் இருந்தது 
பூ இருந்தது கனியும் இருந்தது 
அருகில் எங்கும் ஆலயம் இருந்தது 
அங்கே ஒலிக்கும் மணி இருந்தது 

பள்ளி இருந்தது படிப்பும் இருந்தது 
துள்ளித் திரிந்த காலம் ஒன்றிருந்தது 
அடிக்கடி கூடும் நண்பர் இருந்தனர் 
அணைத்து எம்மை தாங்கும் ஆலமரமிருந்தது 

கோவில் இருந்தது சாமி இருந்தது 
வருடா வருடம் திருவிழா நடந்தது 
அம்மன் ஆடி வரும் தேரும் இருந்தது 
அதை விட அழகு எது தான் இருந்தது 

அறிவு இருந்தது தேடல் இருந்தது
ஆயிரம் பள்ளிகள் அருகில் இருந்தது 
கலை இருந்தது தமிழ் மொழி இருந்தது 
காக்கவென்றொரு தெய்வம் இருந்தது 

மார்கழி மாதம் ஊர்களில் எல்லாம் 
கூவுத் திரியும் குயில்கள் இருந்தனர் 
பூவும் ஆட கூந்தலும் ஆட 
கண்கள் ஆலே கவிதைகள் பேசி 
சந்திரன் போலே பெண்கள் இருந்தனர் 

காதல் இருந்தது கனிவும் இருந்தது 
பாசம் இருந்தது நேசம் இருந்தது 
பங்கு பிரித்து உண்ணும் வாழ்வு இருந்தது 
உண்மை இருந்தது நேர்மை இருந்தது 

நீரும் இருந்தது நெருப்பும் இருந்தது 
நித்திய வாழ்வினில் சத்தியம் இருந்தது 
அறமும் இருந்தது தர்மமும் இருந்தது 
அழியாப் பிரம்ம ஜோதி எரிந்தது 

இத்தனை வாழ்வும் எங்கே போனது 
எத்தனை கனவுகள் வந்து போகுதே 
இன்னும் கனவுகள் உயிர்க்கவில்லையா
எமக்காய் இரவுகள் விடியவில்லையா 
எங்கே கனவுகள் தொலைந்து போனதா.

பா.உதயன்✍️
 

இருந்தவற்றை நினைத்து ஏங்கிய கவிதை.
உதயன்.. இதனை சுய ஆக்கம் பகுதியில் பதிந்தால் நன்றாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

 வரிகள் அருமை .பாராட்டுக்கள்.  கனவுகளைத் தொலைத்து நினைவாலே தேடுகிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் மிகவும் அருமையான கவிதை.
என்னை மறந்து சந்தத்தோடு லயித்து வாசித்த கவிதை இது.
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, uthayakumar said:

 

இங்கே ஒரு வாழ்வு இருந்தது 
அங்கே ஒரு கதை இருந்தது 
அதிலும் ஒரு அறம் இருந்தது 
அப்போ எல்லாம் அழகு இருந்தது 

வீடு இருந்தது மரம் இருந்தது 
மரத்தில் பல பறவை இருந்தது 
பாடி இருந்தது கூடி இருந்தது 
பல குஞ்சுகள் அங்கு கூவி இருந்தது 

நிலவும் இருந்தது கனவும் இருந்தது 
நித்தம் இசைக்கும் பாடல் இருந்தது 
ஆட்டம் இருந்தது கூத்தும் இருந்தது 
எங்கும் சலங்கை ஒலியாய் இருந்தது

நதி இருந்தது கடல் இருந்தது 
பூ இருந்தது கனியும் இருந்தது 
அருகில் எங்கும் ஆலயம் இருந்தது 
அங்கே ஒலிக்கும் மணி இருந்தது 

பள்ளி இருந்தது படிப்பும் இருந்தது 
துள்ளித் திரிந்த காலம் ஒன்றிருந்தது 
அடிக்கடி கூடும் நண்பர் இருந்தனர் 
அணைத்து எம்மை தாங்கும் ஆலமரமிருந்தது 

கோவில் இருந்தது சாமி இருந்தது 
வருடா வருடம் திருவிழா நடந்தது 
அம்மன் ஆடி வரும் தேரும் இருந்தது 
அதை விட அழகு எது தான் இருந்தது 

அறிவு இருந்தது தேடல் இருந்தது
ஆயிரம் பள்ளிகள் அருகில் இருந்தது 
கலை இருந்தது தமிழ் மொழி இருந்தது 
காக்கவென்றொரு தெய்வம் இருந்தது 

மார்கழி மாதம் ஊர்களில் எல்லாம் 
கூவுத் திரியும் குயில்கள் இருந்தனர் 
பூவும் ஆட கூந்தலும் ஆட 
கண்கள் ஆலே கவிதைகள் பேசி 
சந்திரன் போலே பெண்கள் இருந்தனர் 

காதல் இருந்தது கனிவும் இருந்தது 
பாசம் இருந்தது நேசம் இருந்தது 
பங்கு பிரித்து உண்ணும் வாழ்வு இருந்தது 
உண்மை இருந்தது நேர்மை இருந்தது 

நீரும் இருந்தது நெருப்பும் இருந்தது 
நித்திய வாழ்வினில் சத்தியம் இருந்தது 
அறமும் இருந்தது தர்மமும் இருந்தது 
அழியாப் பிரம்ம ஜோதி எரிந்தது 

இத்தனை வாழ்வும் எங்கே போனது 
எத்தனை கனவுகள் வந்து போகுதே 
இன்னும் கனவுகள் உயிர்க்கவில்லையா
எமக்காய் இரவுகள் விடியவில்லையா 
எங்கே கனவுகள் தொலைந்து போனதா.

பா.உதயன்✍️
 

தரமான கவிதை... வேறுபாடன கோணத்தில் பழையவற்றை எழுதியுள்ளீர்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2023 at 12:08, ரஞ்சித் said:

அருமையான கவிதை உதயன். நன்றி !

 

On 25/2/2023 at 16:38, தமிழ் சிறி said:

இருந்தவற்றை நினைத்து ஏங்கிய கவிதை.
உதயன்.. இதனை சுய ஆக்கம் பகுதியில் பதிந்தால் நன்றாக இருக்கும்.

 

On 25/2/2023 at 19:04, நிலாமதி said:

வரிகள் அருமை .பாராட்டுக்கள்.  கனவுகளைத் தொலைத்து நினைவாலே தேடுகிறோம். 

 

On 25/2/2023 at 19:49, நன்னிச் சோழன் said:

தரமான கவிதை... வேறுபாடன கோணத்தில் பழையவற்றை எழுதியுள்ளீர்கள்.

கள உறவுகளுக்கு நன்றிகள் 🌺

  • கருத்துக்கள உறவுகள்

உதய்ன்…, கவிதையைப் பல தடவைகள் படித்தேன்..!

கவலை மட்டுமே மிஞ்சியது…!

வெளிச்சம் வரும் என்று நம்புவோமாக!

நண்றி…!

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை உதயன் ......இன்றும் எல்லாம் இருக்கிறது ஆனால் இருக்கிற மாதிரி இருக்கிறது கானல் நீர்போல்........!

நிர்வாகத்திடம் சொல்லி சுய ஆக்கத்தில் பதியுங்கள், பலரும் பார்ப்பார்கள்......!

நன்றி உதயன்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2023 at 05:00, uthayakumar said:

 

பள்ளி இருந்தது படிப்பும் இருந்தது 
துள்ளித் திரிந்த காலம் ஒன்றிருந்தது 
அடிக்கடி கூடும் நண்பர் இருந்தனர் 
அணைத்து எம்மை தாங்கும் ஆலமரமிருந்தது 

பா.உதயன்✍️
 

மிகவும் அருமையான கவிதை உதயன். இளமைக்கால நினைவுகள் கண்முன்னே வந்து போனது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதயன் நீங்கள் கவிதை எழுதுவதில் வல்லவர் என தெரியும்.  ஆனாலும் இப்படி ஒரு தரமான கவிதை!?!?!?!?!

நன்றி உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி உதயன் நீங்கள் நிர்வாகத்திடம் சொல்லி இந்த திரியை அப்படியே அங்கே நகர்த்தி வைக்க சொல்லுங்கள்.......அப்போதுதான் இதில் இருக்கும் கருத்துக்களும் அப்படியே அங்கு வரும் .......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தும் என்ன

சுதந்திரம் இல்லாமல் போய்விட்டதே.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2023 at 22:00, uthayakumar said:

 

இங்கே ஒரு வாழ்வு இருந்தது 
அங்கே ஒரு கதை இருந்தது 
அதிலும் ஒரு அறம் இருந்தது 
அப்போ எல்லாம் அழகு இருந்தது 

வீடு இருந்தது மரம் இருந்தது 
மரத்தில் பல பறவை இருந்தது 
பாடி இருந்தது கூடி இருந்தது 
பல குஞ்சுகள் அங்கு கூவி இருந்தது 

நிலவும் இருந்தது கனவும் இருந்தது 
நித்தம் இசைக்கும் பாடல் இருந்தது 
ஆட்டம் இருந்தது கூத்தும் இருந்தது 
எங்கும் சலங்கை ஒலியாய் இருந்தது

நதி இருந்தது கடல் இருந்தது 
பூ இருந்தது கனியும் இருந்தது 
அருகில் எங்கும் ஆலயம் இருந்தது 
அங்கே ஒலிக்கும் மணி இருந்தது 

பள்ளி இருந்தது படிப்பும் இருந்தது 
துள்ளித் திரிந்த காலம் ஒன்றிருந்தது 
அடிக்கடி கூடும் நண்பர் இருந்தனர் 
அணைத்து எம்மை தாங்கும் ஆலமரமிருந்தது 

கோவில் இருந்தது சாமி இருந்தது 
வருடா வருடம் திருவிழா நடந்தது 
அம்மன் ஆடி வரும் தேரும் இருந்தது 
அதை விட அழகு எது தான் இருந்தது 

அறிவு இருந்தது தேடல் இருந்தது
ஆயிரம் பள்ளிகள் அருகில் இருந்தது 
கலை இருந்தது தமிழ் மொழி இருந்தது 
காக்கவென்றொரு தெய்வம் இருந்தது 

மார்கழி மாதம் ஊர்களில் எல்லாம் 
கூவுத் திரியும் குயில்கள் இருந்தனர் 
பூவும் ஆட கூந்தலும் ஆட 
கண்கள் ஆலே கவிதைகள் பேசி 
சந்திரன் போலே பெண்கள் இருந்தனர் 

காதல் இருந்தது கனிவும் இருந்தது 
பாசம் இருந்தது நேசம் இருந்தது 
பங்கு பிரித்து உண்ணும் வாழ்வு இருந்தது 
உண்மை இருந்தது நேர்மை இருந்தது 

நீரும் இருந்தது நெருப்பும் இருந்தது 
நித்திய வாழ்வினில் சத்தியம் இருந்தது 
அறமும் இருந்தது தர்மமும் இருந்தது 
அழியாப் பிரம்ம ஜோதி எரிந்தது 

இத்தனை வாழ்வும் எங்கே போனது 
எத்தனை கனவுகள் வந்து போகுதே 
இன்னும் கனவுகள் உயிர்க்கவில்லையா
எமக்காய் இரவுகள் விடியவில்லையா 
எங்கே கனவுகள் தொலைந்து போனதா.

பா.உதயன்✍️
 

வரிகள் ஒவ்வொன்றும் பல கடந்த கால நினைவுகளை கூறுகின்றது.. இன்று பலவித கோணங்களில் வாழ்வு போனாலும் எங்களை ஏதோவொரு வழியில் இயங்கவைப்பது இந்தக் கடந்த கால நினைவுகளே..  

கவிதைக்கு நன்றி!!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2023 at 06:00, uthayakumar said:

இத்தனை வாழ்வும் எங்கே போனது 
எத்தனை கனவுகள் வந்து போகுதே 
இன்னும் கனவுகள் உயிர்க்கவில்லையா
எமக்காய் இரவுகள் விடியவில்லையா 
எங்கே கனவுகள் தொலைந்து போனதா.

 

மனம் போல வாழ்வு. அனைத்தும் திரும்ப கிடைக்கும் எமது மனக் கதவுகள் அகலத்திறந்தால்!

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2023 at 11:00, uthayakumar said:

இத்தனை வாழ்வும் எங்கே போனது 
எத்தனை கனவுகள் வந்து போகுதே 
இன்னும் கனவுகள் உயிர்க்கவில்லையா
எமக்காய் இரவுகள் விடியவில்லையா 
எங்கே கனவுகள் தொலைந்து போனதா.

கவிதை அருமை. 👏

எப்போதும் முன்னைய காலங்களின் அனுபவங்கள் நனவிடை தோய்தலாக வந்து ஏங்கவைக்கும். ஆனால் மாற்றங்கள் ஒன்றே மாறாமல் இருக்கும். கனவுகள் கனவுகளாக இருக்க கழியும் நாட்களே வாழ்க்கை!

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இருந்தது

இப்போது இல்லையே கனவா என்று கேட்க வைப்பது

நாம் கடந்ததை மட்டுமே நினைத்தபடி நடப்பதனால்..... வாழ்வின் ஓட்டம் எதிர் வருவதை நோக்கப்பயப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2023 at 10:30, கிருபன் said:

கவிதை அருமை. 👏

எப்போதும் முன்னைய காலங்களின் அனுபவங்கள் நனவிடை தோய்தலாக வந்து ஏங்கவைக்கும். ஆனால் மாற்றங்கள் ஒன்றே மாறாமல் இருக்கும். கனவுகள் கனவுகளாக இருக்க கழியும் நாட்களே வாழ்க்கை!

 

 

On 24/3/2023 at 03:06, வல்வை சகாறா said:

எல்லாம் இருந்தது

இப்போது இல்லையே கனவா என்று கேட்க வைப்பது

நாம் கடந்ததை மட்டுமே நினைத்தபடி நடப்பதனால்..... வாழ்வின் ஓட்டம் எதிர் வருவதை நோக்கப்பயப்படுகிறது.

உணர்வுகளுக்குள் சிக்கி இருக்கும் போதெல்லாம்  தொலைந்து போன வாழ்வு  வந்து வந்து போகிறது, நினைவுகள் தொலையாமல் இருக்கும் வரையிலும். நீங்கள் கிருபன் சொல்லுவது போலும் எதையும் எதிர் கொள்ளும் சக்தியோடு மாற்றங்களோடு எழுவது மனித வாழ்வின் இன்னும் ஒரு பக்கமே. நன்றிகள்

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.