Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முழு நாடும் சிங்களவர்களுக்கே சொந்தம்! - விமல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


முழு நாடும் சிங்களவர்களுக்கே சொந்தம்! - விமல்


%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%

“இந்த நாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் பௌத்த மதத்துக்கும் – சிங்கள இனத்துக்கும் உரியவை என்பதைத் தமிழர்களும் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ள உறுப்பினர்களும் கவனத்தில்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத் தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இது பௌத்த சிங்கள நாடு. இப்படி இருக்கும் போது நாட்டின் எந்தப் பகுதியும் தமிழருக்குச் சொந்தமானவை அல்ல. இன, மத, பண்பாட்டு, கலாசார ரீதியில் எதையும் உரிமை கோரத் தமிழருக்குத் எந்த தகுதியும் இல்லை.

தமிழர் வாழும் பகுதிகளை பௌத்தர்கள் – சிங்களவர்கள் அபகரிக்கின்றார்கள் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த நாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் பௌத்த மதத்துக்கும் – சிங்கள இனத்துக்கும் உரியவை என்பதைத் தமிழர்களும் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ள உறுப்பினர்களும் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்றார்.


https://vanakkamlondon.com/news/2023/03/189042/

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

சச்சியர் எங்கே? 

😀

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் விமல், ஜின்னா இல்லாமல் போயிருந்தா டெல்லிக்காரன், பாகிஸ்தானிலும், பங்களாதேசிலும் வாழும் முஸ்லீக்களுக்கு இப்படித்தான் துண்ணூறு அடிச்சிருப்பான், என்ன? 🤔

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுவரை மகிந்தரோடு நின்று நாட்டைக் கொள்ளையடிச்சதும் இதே இனவாதி தான். இவருக்கு நாடு என்ற ஒன்றிருந்தால் தானே. அது இப்ப சீனாவுக்கும்.. ஹிந்தியாவுக்கும்.. ஐ எம் எவ்வுக்கும் அடமானம் வைக்கப்பட்டுவிட்டது தெரியாது போலும். 

  • கருத்துக்கள உறவுகள்

காசு கொஞ்சம் வந்திட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

காசு கொஞ்சம் வந்திட்டுது.

எழுத வந்தது நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஜனாதிபதி தேர்தல் வாற வருசம்.

இப்பவே தொடங்கினாத்தான் சரி.

இவனும், சரத் வீரசேரவும் இன வாதத்தில் முதலீடு செய்கிறார்கள். கோத்தாவுக்கு 69% போட்டு கை கொடுத்த சிங்களவர் மீது பெரும் நம்பிக்கை!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அடுத்த ஜனாதிபதி தேர்தல் வாற வருசம்.

இப்பவே தொடங்கினாத்தான் சரி.

இவனும், சரத் வீரசேரவும் இன வாதத்தில் முதலீடு செய்கிறார்கள். கோத்தாவுக்கு 69% போட்டு கை கொடுத்த சிங்களவர் மீது பெரும் நம்பிக்கை!

இனவாதிகள் தான் வரணும் அதிலும் சைனாவுக்கு  சார்பானவன் வரணும் .சிங்களவர்கள் இனவாதிகளை  வளர்த்து விட்ட  பலனை இனித்தான் அனுபவிக்க போகிறார்கள் கண்டதுகளுக்கும்  வரி கொடுத்து வாழனும் எனும் நிலை இலங்கையில் உருவாகும் .

Edited by பெருமாள்
பிழை

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்போது கருணா மாதிரி ஒரு கோடீஸ்வரர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்த நாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் பௌத்த மதத்துக்கும் – சிங்கள இனத்துக்கும் உரியவை என்பதைத் தமிழர்களும் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ள உறுப்பினர்களும் கவனத்தில்கொள்ள வேண்டும்.”

இதே அரசியலைத்தான் தமிழர்விடுதலைக்கூட்டணியில் இருந்தவர்கள் தம் பதவிக்காக செய்தார்கள்.

என்னைப்பொறுத்தவரைக்கும் கேடு கெட்டவர்கள்.

என்ன ஒன்று.......அவர்களில்  பலர் துரோகத்தின் பெயரால் கொலை செய்யப்பட்டதால் மட்டும் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவர்களாகி விட்டனர்.

இல்லையேல் இன்றும் சம்பந்தனைப்போல் சேடம் இழுத்துக் கொண்டிருப்பார்கள்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இதே அரசியலைத்தான் தமிழர்விடுதலைக்கூட்டணியில் இருந்தவர்கள் தம் பதவிக்காக செய்தார்கள்.

என்னைப்பொறுத்தவரைக்கும் கேடு கெட்டவர்கள்.

என்ன ஒன்று.......அவர்களில்  பலர் துரோகத்தின் பெயரால் கொலை செய்யப்பட்டதால் மட்டும் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவர்களாகி விட்டனர்.

இல்லையேல் இன்றும் சம்பந்தனைப்போல் சேடம் இழுத்துக் கொண்டிருப்பார்கள்.:cool:

நீலனை போடும்போதே சம்பந்தனையும் போட்டு இருக்கணும் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சச்சியர் எங்கே? 

😀

அவர் கிறிஸ்தவர்களை விரட்டியடிப்பதில் பிஷி. அவரை விட்டுவிடுங்கள்  தொந்தரவு செய்யாதீர்கள். இவரோ  இது சிங்கள பவுத்த நாடு என நம்மை விரட்டியடிக்கிறார், அவரோ கிறிஸ்தவர்களை விரட்டுறார். பக்குவப்படாத, நடந்தவற்றில் இருந்து பாடம் படிக்காத இளம் குருத்து அவர். வயத்துக்குத் தக்க அறிவு இல்லாவிட்டாலும் வாழ்ந்த அனுபவமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முழு நாடும் சிங்களவர்களுக்கே சொந்தம்! - விமல்

ஜேஆர் தொடக்கி வைத்ததை இன்றுவரை வந்த தலைவர்கள் சத்தமில்லாமல் செய்து கொண்டே வருகிறார்கள்.

எனவே விமல் தான் துவேசம் பிடித்தவர் மற்றையோர் எல்லாம் நல்லவர்கள் என்ற மாதிரி யாரும் எண்ண வேண்டாம்.

1 hour ago, பெருமாள் said:

நீலனை போடும்போதே சம்பந்தனையும் போட்டு இருக்கணும் .

ஏன் பெருமாள்

சம்பந்தரைப் போட்டால் அடுத்து ஒரு சுமந்திரன் ஒரு சாணக்கியன் இப்படி வரிசையில் வந்து கொண்டு தானே இருப்பார்கள்.

வரிசையில் நின்று வாக்கு போட்டுவிட்டு எப்படி இப்படி கதைப்பது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.