Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

அந்த கறுப்பின இளைஞன் எனக்கு உதவினான்” என்று சொல்வதாக எழுதினால் அது எவ்வளவு செயற்கைத்தனமாக இருக்கும்

கறுப்பின என்று கூறாமல் ஆபிரிக்க இளைஞர் என்று கூறலாம் தானே!  ( எம்மை ஆசியர் (Asien)  என்று கூறுவது போல,  அல்லது அவரின் நாடு தெரிந்தால் அவரது நாட்டை அடையாளமாக கூறலாமே! 

Link to comment
Share on other sites

  • Replies 84
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Justin

😂தவறேயில்லை! இப்படி நிறைய விடயங்கள் தவறில்லை. உதாரணமாக, உரிமையாளனுக்குத் தெரியாத வரையில் அவனிடமிருந்து எதையாவது "லவட்டி" விடுவதும் தவறல்ல, கண்டால் மட்டும் தான் தவறு! காவல் துறை அக்கப் பக்கம் இல்ல

நிழலி

யாயினி இணைத்து இருக்கும் திரியில் ஒரு கறுப்பு இனத்தவரைக் காப்பிலி என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு மோசமானது என்று தெளிவாக உரையாடப்பட்டு இருக்கு.  காப்பிலி என்ற பதத்துக்கு பின் வரலாற்று காரணங்கள்,

goshan_che

நானறிந்த வரை: காப்பிலி என்பது அரபிச்சொல்லான காபிர் இன் திரிபு. ஆசியாவில் இருந்து வட ஆபிரிக்கா நோக்கி நகர்ந்த அரபிகள், நம்பிக்கையற்றவன் என்ற பொருளில் காபிர் என அப்போ முஸ்லிம் அல்லாதவர்களாக இர

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இங்கு எம்மை இந்தியோஸ் என்கிறார்கள்.

எம்மை லண்டனில் பாக்கி என்கிறார்கள்

அதே மாதிரி கறுப்பினத்தவரை காப்பிலி என்பதில் தப்பில்லை

ஆனால் கட்டுரை கதைகள் என்று வரும்போது இப்படி எழுதலாமோ என்று சிந்திக்க வேண்டி உள்ளது.

உங்களை பாக்கி, இந்தியன் என்று யாராவது சொல்வதை  வாசிக்க அல்லது  கேட்க நேர்ந்தால் பேசாமல் ஓம் என்று தலையாட்டி விட்டு இருப்பீர்களா? ...அது குறித்த கவலை , ஆத்திரம் உங்களுக்கு வராதா அண்ணா 

41 minutes ago, goshan_che said:

இதே போல் சோனகர் என்ற இனத்தை சோனி என்ற வசை கொண்டு அழைப்பதையும், மோட்டு சிங்களவன் என்ற அடை மொழியையும், யாழ் தடை செய்யுமா?

 

இது தொடர்பாக நானும் வேறு திரிகளில் கேட்ட நினைவு ...உண்மையில் இவைகளும் தடை செய்யப்பட வேண்டும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

அவர்களுக்கு தெரியாமல் எழுதினால் பரவாயில்லை என்ற கருத்தின் மூலம் - கருத்தாடலின் போக்கையே அன்ரி மாத்திப்போட்டா🤣.

ஆனால் ஒரு இலக்கிய படைப்பில் that black man helped me என்பதை ஒரு தமிழ் கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்திடம் “அந்த கறுப்பின இளைஞன் எனக்கு உதவினான்” என்று சொல்வதாக எழுதினால் அது எவ்வளவு செயற்கைத்தனமாக இருக்கும்?

ஏன் கேட்கிறேன் என்றால் எனது யூகேயில் பிறந்த நண்பி ஒருவர் ஒரு முறை “that black bag” என்பதை “அந்த காப்பிலி பாக்” என சொல்லி - எல்லாரும் சிரித்தோம்.

உண்மையில் பெரும்பாலானா தமிழர்கள் இதை ஒரு இழிசொல்லாக கருதி பாவித்தால் - அது தவறான சொல்தான்.

 

 கொஞ்சம் அதிக sarcastic ஆகத் தான் எழுதி விட்டேன், சுமே தரும் பூசையை வாங்கிக் கொண்டு பாவம் தீர்க்கலாம் என்று இருக்கிறேன்😂.

ஆனால், சீரியசாக, நீங்கள் சொல்வது போல எழுதினால் சுவாரசியம் அல்லது கதையோட்டம் இழக்கப்படுமென நான் நம்பவில்லை (நான் ஒரிஜினல் கதையை வாசிக்கவில்லை). இன்னொரு வழி, அந்த இடத்தில் color-blind ஆக கடந்து போய் விடலாம்.

ஐலண்ட் மேலே சொல்லியிருப்பதையும் கவனிக்க வேண்டும்: சீனர், இந்தியர், ஜப்பானியரை "ஆசியர்" என்று அழைக்கும் போது, கறுப்பின நபர்களுக்கு "ஆபிரிக்க" என்ற அடை மொழியை வழங்குவது தவறல்ல - பூர்வீகம் குறிப்பிடும் பெயர்களில் negative connotation இருக்காதென நினைக்கிறேன்.

மொழி தெரியாத யுகே நண்பியை மன்னிக்கலாம்! ஆனால், தமிழ் தெரிந்த, சுற்றி நடப்பவையும் தெரிந்த நபர்கள் இது போன்ற சொற்களை அப்பாவித் தனமாகப் பாவிக்கிறார்கள் எனச் சொல்ல முடியாது. அப்படி "எனக்கு சுற்றி நடப்பது தெரியாது" என்றால் அது வேறு வகையான பிரச்சினை, அதற்கு வேறு வகையான தீர்வு: sensitivity training! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

உங்களை பாக்கி, இந்தியன் என்று யாராவது சொல்வதை  வாசிக்க அல்லது  கேட்க நேர்ந்தால் பேசாமல் ஓம் என்று தலையாட்டி விட்டு இருப்பீர்களா? ...அது குறித்த கவலை , ஆத்திரம் உங்களுக்கு வராதா அண்ணா 

ரதி நாம் எமக்குள் பேசிக் கொள்ளும் போது அன்றாடம் இப்படி தானே பேசுவோம்.

அவர்களோடு அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

ரதி நாம் எமக்குள் பேசிக் கொள்ளும் போது அன்றாடம் இப்படி தானே பேசுவோம்.

அவர்களோடு அல்ல.

நாங்கள் கறுப்பினத்தவர் என்று தான் சொல்கிறது அண்ணா...அவர்களுக்கு நாங்கள் கதைப்பது தெரியாது என்பதற்காக அவர்களை பற்றி பிழையாய் கதைக்க கூடாது அல்லவா! 
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2023 at 19:24, நிழலி said:

வணக்கம் சுமே,

ஆம் இது மிகவும் தவறான அவச் சொல் தான். கருப்பின மக்களை தரம் தாழ்த்த எம்மவர்களால் பயப்படுத்தப்படும் நிறவெறி கொண்ட ஒரு சொல்.

யாழ் விதிகளின் படி, இச் சொல்லை யாழில் எங்கும் பயன்படுத்தவும் முடியாது - தலைப்பில் உட்பட.

நன்றி

நிழலி,

இந்த விடயத்தில், நீங்கள் களத்தில் ஒரு பொது கருத்தாடல் செய்து அதன் முடிவினை விதியாக சேர்க்கலாம்.

இது அவப்பெயர் என்று சொல்வதை ஏற்றுகொள்ள முடியுமா என்று கேள்வி எழுகின்றது.

அதுபோல, கறுவல் என்ற சொல்லும் அவச்சொல்லாக நிர்வாகம் கருதுகிறது என்றே கருதுகிறேன். இந்த சொல், சாதாரணமாக ஊரில், பாவிக்கப்படும் சொல். உதாரணமாக, அவன் மூத்தவன் தகப்பனை போல கறுவல், இளையவன் தாயை மாதிரி சிவலை என்பார்கள். காளை மாடுகளுக்கு கூட, கறுவல், செவலை என்று சொல்வார்கள். நான் இதனை பயன்படுத்தியபோது, நீக்கப்பட்டது. இதுக்கும், கறுப்பின மக்களுக்கும் என்ன தொடர்பு என்று விளங்கப்படுத்த முடியுமா?

காப்பிலி எனும் சொல் பற்றி நல்ல விளக்கம் தரப்பட்டுள்ளது என்பதையும், கவனித்திருப்பீர்கள்.

நன்றி.

 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

சிந்திக்க வைக்கும் கருத்துகள் @ரதி @Justin @island.

அதுசரி பாக்கி என்ற (அவ)சொல்லை பயன்படுத்த ஏலுமோ?

ஏலும் எண்டு நினைக்கிறேன். அது பத்தி நிர்வாகத்துக்கு தெரியாது.

UK காரருக்கு மட்டும் தான் தெரியும். 🤣😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.

சப்பட்டை, அடையான், பானிபூரி வாயன் போன்றவை காரண பெயர்கள். இவை நிச்சயம் வசவு தான்.

அதே போலத்தான் working class அமெரிக்காவில் redneck  வெள்ளையினத்தவரை “ஊத்த வெள்ளை” என்பதும்.

ஆனால் பக்கத்து வீட்டு வெள்ளைகாரன் எனக்கு லிப்ட் தந்தான் என்பதை, “பக்கத்து வீட்டு வெள்ளை என்னை டிரொப் ப்பண்ணியது” என்றே நம்மில் பலர் அன்றாட வாழ்வில் சொல்லுவோம் என நினைக்கிறேன்?

இங்கே “வெள்ளை” என்பதற்கு கொடுக்காத வசை அர்த்தத்தை ஏன் “காப்பிலி”க்கு கொடுக்கிறோம்?

சப்பட்டை, ஜிங்சாங், போல காப்பிலி என்பது தமிழில் ஒரு காரண பெயர் அல்ல. அதற்கு இயல்பாகவே ஒரு வசவு அர்த்தம் இல்லை எனும் போது எதன் அடிப்படையில் இது வசவுதான் என சொல்கிறோம்?

 

17 minutes ago, Nathamuni said:

கறுவல் என்ற சொல்லும்

இதை நானும் வசவு என்றே கருதுகிறேன். இவை அஃறிணைக்குரிய சொற்கள் அதை உயர்திணைக்கு பாவிக்க்கும் போது அது வசவு ஆகிறது.

18 minutes ago, Nathamuni said:

உதாரணமாக, அவன் மூத்தவன் தகப்பனை போல கறுவல், இளையவன் தாயை மாதிரி சிவலை என்பார்கள்.

இங்கே கறுவல், சிவலை என்பது ஆட்களை குறிக்க அல்ல, நிறங்களை குறிக்கவே பயன்படுகிறது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2023 at 14:08, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

 

எனக்கு ஞாபக மறதி வந்துவிட்டதனால் முன்னரும் யாழ் களத்தில் இதுபற்றி எழுதினேனா தெரியவில்லை. அப்படி எழுதியிருந்தால் அந்த லிங்க்கை இதில் இணையுங்கள்.

உங்களோடு பேசிப் பிரியோசனம் ஒன்றும் இல்லை...ஆனாலும்  யார் தப்பு செய்தாலும் அதை அடுத்த முறையும் தொடராதவாறு நடந்து கொள்ள வேணும்...நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விடையத்தை பார்த்து விட்டுத் தான் முன்னர் இவை பற்றி  எழுதிய பகுதியும் படித்த நினைவு இருந்த படியால் இங்கு இணைத்தேன்.நீங்கள் என்ன மன நிலையிலிருந்து எழுதினீர்களோ நமக்கு தெரியாது தானே.எது எப்படியாயினும் வீடுகளில் அசாதரணமாக கதைப்பதற்கும் பொதுப்படையாக பேசுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறதல்லவா..குறைந்த பட்ச  நாகரீகத்தையாவது கடைப்பிடிக்க கற்றுக் கொள்ள வேணும்.சொல்லப் போனால் மிக கூடுதலான முதியோர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் எம்மவர்களின் மல:சலங்களை துப்பரவு செய்பவர்கள் நாம் அடையாளப்படுத்தும் இந்த மக்கள் தான்..அதுவும் பெண்கள் குடும்பஸ்தர்கள்..இன்றும் நான் என் கண்ணால் கண்டேன்..பிள்ளைகளுக்கு நல் வழிகாட்டியாக இருக்கும் நீங்களே விதண்டா வாதம் செய்யக் கூடாது.ஆண் பெண் யாரை சொன்னாலும் சொல் ஒன்று தான்..அதை நினைவில் கொள்ளவும்.நன்றி.✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

அதுசரி பாக்கி என்ற (அவ)சொல்லை பயன்படுத்த ஏலுமோ?

ஏலும் எண்டு நினைக்கிறேன். அது பத்தி நிர்வாகத்துக்கு தெரியாது.

UK காரருக்கு மட்டும் தான் தெரியும். 🤣😁

பாக்கி என்றால் அநேகமாக புலம்பெயர் தமிழர் அனைவருக்கும் அது இங்கிலாந்தில் ஆசியருக்கான வசவு என தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன் - நிர்வாகம் உட்பட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

யாயினி இணைத்து இருக்கும் திரியில் ஒரு கறுப்பு இனத்தவரைக் காப்பிலி என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு மோசமானது என்று தெளிவாக உரையாடப்பட்டு இருக்கு. 

காப்பிலி என்ற பதத்துக்கு பின் வரலாற்று காரணங்கள், பெயர் வரக் காரணங்கள் என்று பல இருந்தாலும், எம்மவர்களால் இச் சொல் கறுப்பு இனத்தவரை நோக்கி சொல்லப்படுவதன் காரணம், தம்மை உயர்வாகவும் அவர்களை தமக்கு கீழாகவும் கருதும் 'உயர்சாதி' மன நிலையில் தான். 

மேலும் எம்மவர்கள் கறுப்பு இனத்தவர்களை 'கறுவல்' என்றும், சீனர்களை 'சப்பட்டைகள்' என்றும், அல்ஜீரியர்களை 'அடை' என்றும் அழைப்பது அவர்களை இழிவுபடுத்துவதற்காகவே அன்றி வேறு எந்தக் காரணங்களாலும் இல்லை. சொந்த இனத்துக்குள்ளேயே சாதி பார்க்கும் இழி மனநிலையின் தொடர்ச்சி தான் இந்த பழக்கம்.

ஏற்கனவே சொல்லியது போல, இந்தச் சொல் தவிர்க்கப்பட வேண்டியது. யாழில் கண்டிப்பாக தவிர்க்கபட வேண்டிய, விதி மீறலுக்குரிய சொல்.

நன்றி

நம்மிடையே மட்டுமே சாதியம் இருப்பது போலவும், அதன் தொடர்ச்சியே இது என்று ஒரே போடாக போடுகிறீர்கள்.

இந்திய உபகண்டம் முழுவதும் உள்ளது.

மேலும், உகாண்டாவின் இடி அமீன், ஆசியர்களை வெளியேற சொன்னதன் காரணம், அவர் ஒரு இந்திய வம்சாவளி பெண்ணை விரும்பி, காதலை சொன்ன போது, அவர், எனது வீட்டில் குரங்கு ஒன்றினை ஏற்றுகொள்ள மாட்டார்கள் என்று சொன்னதாகவும், அதன் பின், அவர் பதவிக்கு வந்த போது. அந்த குடும்பத்தை பழிவாங்க ஆள் அனுப்பிய போது, இல்லாத காரணத்தால், ஆசியர்கள் அனைவரையுமே வெளியேற சொன்னார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

நீங்கள் சொன்ன, அடை, சப்படை, அய்யாதுரை (ஐரிஸ்) எல்லாம் ஒரு அடையாள குறியீடு. Black என்ற அடையாள குறியீடு தவறாக ஒருகாலத்தில் கருதப்பட்டது. பின்னர், நாளடைவில் அவர்களே அதனை அது சரியானது என்று ஏற்றுக் கொண்டார்கள் என்பார்கள்.

வெள்ளையரின் இனத்துவேசம் நம்மூரில் மட்டுமல்ல, இந்த நாடுகளிலும் மிக மோசமானது. ஒரு காலத்தில், நமது கணக்காளர்கள், இந்திய பட்டேல், சீக்கியர்களே வேலைக்கு ஒரே கதி என்று இருந்தார்கள். IT காரணமாகவே, இன்று இந்தியர்களும், எம்மவர்களும் பெரு நிறுவங்களின் வேலை செய்யக்கூடியதாக உள்ளது.   

ஆக, அடையாள குறியீட்டினை, சாதிய குறியீடாக கருதுகிறீர்கள் போல படுகிறது. இது குறித்து மேலதிக விளக்கம் தர முடியுமா?

நன்றி. 

Link to comment
Share on other sites

35 minutes ago, Nathamuni said:

நிழலி,

இந்த விடயத்தில், நீங்கள் களத்தில் ஒரு பொது கருத்தாடல் செய்து அதன் முடிவினை விதியாக சேர்க்கலாம்.

 

 

இதற்கு எல்லாம் பெரிய கருத்தாடல், வாக்கெடுப்பு என்று போக வேண்டிய தேவை இல்லை நாதம். 

பொதுவாக வழக்கத்தில் உள்ள பதங்களே போதும். வெள்ளையினத்தவராயின், வெள்ளையினத்தவர் என்றும், கறுப்பு நிறத்தவராயின்  கறுப்பு நிறத்தவர் என்றும், ஆசியர்களை ஆசியர்கள் என்றும் இந்தியர்களை இந்தியர்கள் அழைக்கலாம். அதுவும் ""கறுவலுடன் சேர்ந்து எம் தமிழ் இளைஞனும் சேர்ந்து...' என்பது மாதிரி இல்லாமல்."அவர்களின் நிறம் / இனம் பற்றி குறிப்பிட்டு சொல்லவேண்டிய தேவைகளுக்குரிய விடயங்களுக்கு மட்டும் குறிப்பிடலாம். 

இங்கு (கனடாவில் / அமெரிக்காவில்) Black Street, White Street என்ற பெயர்களில் ஒவ்வொரு ஊரிலும் தெருக்கள் உள்ளதால், அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதால் இவ்வாறு அவர்களது நிறங்களுக்குரிய பொதுவான பெயர்களில் அழைப்பது தவறில்லை என நம்புகின்றோம்.


எதிர்காலத்தில், அதை அவர்கள் எதிர்த்தால், நாமும் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதைக்காக, கைவிட வேண்டும்.

சோனி / மோட்டுச் சிங்களவர்:

இதில் சோனி என்ற பதம் மட்டுமல்ல, தொப்பி பிரட்டி என்ற பதங்களை நாம் காணும் போதெல்லாம் மட்டுறுத்துவதுண்டு. ஐலண்ட் குறிப்பிட்டதுள்ளது போன்று 'காக்கா' என்ற பதமும் நீக்கப்படல் வேண்டும்.

"மோட்டுச் சிங்களவர்" இந்த அடைமொழியுடன் ஒருவர் சிங்களவரை குறிப்பிடுவாராயின், இங்கு 'மோட்டு' என்ற அடைமொழிக்குள் உண்மையாக அடங்குபவர் யார் என்ற கேள்விதான் எழுகின்றது. ஏனெனில், சிங்களவர்களை முட்டாள்கள் என்று விழித்துக் கொண்டு, இருப்பதை எல்லாம் அவர்களின் தந்திரங்களுக்குள் ஒவ்வொன்றாக இழந்து கொண்டு நிற்பது நாங்கள் தான். 

நன்றி வணக்கம்!
 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

பாக்கி என்றால் அநேகமாக புலம்பெயர் தமிழர் அனைவருக்கும் அது இங்கிலாந்தில் ஆசியருக்கான வசவு என தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன் - நிர்வாகம் உட்பட.

UK யில் இருந்து ஒருவரும் நிர்வாகத்தில் இல்லாததால், தெரியாது என்றேன்.

மோகன் அண்ணை, இதனை கவனித்து, உங்களை மட்டு ஆக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, யாயினி said:

உங்களோடு பேசிப் பிரியோசனம் ஒன்றும் இல்லை...ஆனாலும்  யார் தப்பு செய்தாலும் அதை அடுத்த முறையும் தொடராதவாறு நடந்து கொள்ள வேணும்...நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விடையத்தை பார்த்து விட்டுத் தான் முன்னர் இவை பற்றி  எழுதிய பகுதியும் படித்த நினைவு இருந்த படியால் இங்கு இணைத்தேன்.நீங்கள் என்ன மன நிலையிலிருந்து எழுதினீர்களோ நமக்கு தெரியாது தானே.எது எப்படியாயினும் வீடுகளில் அசாதரணமாக கதைப்பதற்கும் பொதுப்படையாக பேசுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறதல்லவா..குறைந்த பட்ச  நாகரீகத்தையாவது கடைப்பிடிக்க கற்றுக் கொள்ள வேணும்.சொல்லப் போனால் மிக கூடுதலான முதியோர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் எம்மவர்களின் மல:சலங்களை துப்பரவு செய்பவர்கள் நாம் அடையாளப்படுத்தும் இந்த மக்கள் தான்..அதுவும் பெண்கள் குடும்பஸ்தர்கள்..இன்றும் நான் என் கண்ணால் கண்டேன்..பிள்ளைகளுக்கு நல் வழிகாட்டியாக இருக்கும் நீங்களே விதண்டா வாதம் செய்யக் கூடாது.ஆண் பெண் யாரை சொன்னாலும் சொல் ஒன்று தான்..அதை நினைவில் கொள்ளவும்.நன்றி.✍️

உங்களுக்கு நான் எழுதியது விளங்கவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

இதற்கு எல்லாம் பெரிய கருத்தாடல், வாக்கெடுப்பு என்று போக வேண்டிய தேவை இல்லை நாதம். 

பொதுவாக வழக்கத்தில் உள்ள பதங்களே போதும். வெள்ளையினத்தவராயின், வெள்ளையினத்தவர் என்றும், கறுப்பு நிறத்தவராயின்  கறுப்பு நிறத்தவர் என்றும், ஆசியர்களை ஆசியர்கள் என்றும் இந்தியர்களை இந்தியர்கள் அழைக்கலாம். அதுவும் ""கறுவலுடன் சேர்ந்து எம் தமிழ் இளைஞனும் சேர்ந்து...' என்பது மாதிரி இல்லாமல்."அவர்களின் நிறம் / இனம் பற்றி குறிப்பிட்டு சொல்லவேண்டிய தேவைகளுக்குரிய விடயங்களுக்கு மட்டும் குறிப்பிடலாம். 

இங்கு (கனடாவில் / அமெரிக்காவில்) Black Street, White Street என்ற பெயர்களில் ஒவ்வொரு ஊரிலும் தெருக்கள் உள்ளதால், அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதால் இவ்வாறு அவர்களது நிறங்களுக்குரிய பொதுவான பெயர்களில் அழைப்பது தவறில்லை என நம்புகின்றோம்.

சோனி / மோட்டுச் சிங்களவர்:

இதில் சோனி என்ற பதம் மட்டுமல்ல, தொப்பி பிரட்டி என்ற பதங்களை நாம் காணும் போதெல்லாம் மட்டுறுத்துவதுண்டு. ஐலண்ட் குறிப்பிட்டதுள்ளது போன்று 'காக்கா' என்ற பதமும் நீக்கப்படல் வேண்டும்.

"மோட்டுச் சிங்களவர்" இந்த அடைமொழியுடன் ஒருவர் சிங்களவரை குறிப்பிடுவாராயின், இங்கு 'மோட்டு' என்ற அடைமொழிக்குள் உண்மையாக அடங்குபவர் யார் என்ற கேள்விதான் எழுகின்றது. ஏனெனில், சிங்களவர்களை முட்டாள்கள் என்று விழித்துக் கொண்டு, இருப்பதை எல்லாம் அவர்களின் தந்திரங்களுக்குள் ஒவ்வொன்றாக இழந்து கொண்டு நிற்பது நாங்கள் தான். 

நன்றி வணக்கம்!
 

விளக்கத்துக்கு நன்றி.

காக்கா என்றால், உண்மையான அர்த்தம் என்ன?

கடல் கடந்து செல்லும் இஸ்லாமிய வியாபாரிகளை. 'குருவி' என்று அழைக்கின்றனர். இருவாரங்களுக்கு முன்னர் குவைத்தில் இருந்து, விமானத்தில் வந்த 113 குருவிகளிடம் இருந்து பல கோடி பெறுமதியான பொருட்கள் பறிமுதல் என்று, தமிழக செய்தி சொன்னது.

அதேபோல, ஊர், ஊராக சைக்கிளில் பொருட்களை கொண்டு சென்று வியாபாரம் செய்பவர், 'காக்கா' என்று அழைக்கப்பட்டாரோ?

எனது நினைவு சரியானால், களஉறவு ராசவன்னியன் இதன் அர்த்தம் என்ன என்று கேட்க, யாரோ, 'நானா' என்று பொருள்படும், சகோதரத்தினை குறிக்கும் அரபு சொல் என்று சொன்னதாக நினைவு.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

😂தவறேயில்லை!

இப்படி நிறைய விடயங்கள் தவறில்லை. உதாரணமாக, உரிமையாளனுக்குத் தெரியாத வரையில் அவனிடமிருந்து எதையாவது "லவட்டி" விடுவதும் தவறல்ல, கண்டால் மட்டும் தான் தவறு! காவல் துறை அக்கப் பக்கம் இல்லாவிட்டால் போக்குவரத்து விதிகளை மீறுவது தவறேயில்லை, காவல்துறை கண்டால் தான் தவறு அல்லது குற்றம்!

இது போன்ற ஒரு உரையாடல் சில மாதங்கள் முன்பும் யாழில், நாற்சந்தியில் நடந்திருக்கிறது. இதே போல கறுப்பின மக்களைக் குறித்த ஒரு தமிழ் பதம் அவர்களுக்குத் தெரிந்தால் மட்டும் தான் தவறு, இல்லையேல் அது nothing என்று!

உங்களுக்கு ஊர் சொலவடையொன்று தெரிந்திருக்கும்: "கண்டால் கட்டாடி, காணாட்டி **** (சாதிப் பெயர் சுய தணிக்கை)". இதையெல்லாம் அபிப்பிராயம் கேட்டு தீர்மானிக்க வேண்டிய நிலையிலா இருக்கிறீர்கள் சுமே?

வேறு ஒருவருடன் இதுபற்றிக் கதைத்தபோது என்னைக் கடுமையாக வார்த்தைகளால் தாக்கினார். எனக்கே என் எழுத்தில் சந்தேகம் வந்துவிட இருக்கவே இருக்கு யாழ் இணையம் என்று இங்கக்கு வந்து எழுதினேன்.  ஏனெனில் முகமூடியில் இருப்பவர்கள் துணிவாகத் தம் கருத்தைக் கூறுவார்கள் என எண்ணினேன். ஆனாலும் பலரிடமிருந்து சரியான விடை கிடைக்கவில்லை.

1 hour ago, island said:

கறுப்பின என்று கூறாமல் ஆபிரிக்க இளைஞர் என்று கூறலாம் தானே!  ( எம்மை ஆசியர் (Asien)  என்று கூறுவது போல,  அல்லது அவரின் நாடு தெரிந்தால் அவரது நாட்டை அடையாளமாக கூறலாமே! 

நான் எழுதியது ஒரு சம்பவம். அதில் அவனை நிறுத்திவைத்து எந்த நாடு என்றா கேட்க முடியும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நாங்கள் கறுப்பினத்தவர் என்று தான் சொல்கிறது அண்ணா...அவர்களுக்கு நாங்கள் கதைப்பது தெரியாது என்பதற்காக அவர்களை பற்றி பிழையாய் கதைக்க கூடாது அல்லவா! 
 

உண்மை தான் ரதி.

ஆனாலும் பேச்சுவளக்கில் அப்படித் தான் கதைக்கிறோம்.கூடாது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சொல் காரணப்பெயரையோ வரலாற்று ரீதியான பின்னணியையோ கொண்டிருந்தாலும், அந்த சொல் நடைமுறையில்  மற்றயவரை தாழ்த்தி சொல்ல அவரை மனம்  நோகும்படி செய்ய நடைமுறையில்  பாவிக்கப்பட்டால் அது வசவு சொல் தான்.  நடை முறை அர்ததம் தான் அது வசவு சொல்லா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது. 

அடுத்தவரை வசவு சொற்களால் அழைப்பது தான் நகைச்சுவை என்ற மனநிலை எம்மை அறியாமல் எமக்குள் உள்ளது.  நல்ல சொல்லாடல்களை கூட வசவு சொற்களாக மாற்றியவர்கள் நாம்.  உதாரணமாக அவய குறைபாடு உள்ளவர்களை குறிப்பிட  குருடு, செவிடு, நொண்டி, ஊமை போன்ற சொற்களை  வசவு சொற்களாக நமது முன்னோர்கள்  மாற்றிய பின்னர் அவர்களை மரியாதையாக அழைப்பதற்கு,  “ வலது குறைந்தவர்கள்” என்ற பதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அந்த சொல்லை “ வலசு” என்று கொச்சையாக வசவு சொல்லாக மாற்றப்பட்டது. பின்னர்,  “மாற்று திறனாளிகள்” என்ற புதிய பதத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் காப்பிலி என்று தான் சொல்ல வேண்டும் என்ற பிடிவாதம் 😟
ஐலண்ட் சொன்ன மாதிரி எங்களை ஆசியன் என்றோ அல்லது சிறிலங்கன் என்றே சொல்கின்றனர்.அது மாதிரி தானே அவர்களுக்கும் ஆபிரிக்கன் அல்லது அவர்களின் நாடு.

1 minute ago, island said:

அடுத்தவரை வசவு சொற்களால் அழைப்பது தான் நகைச்சுவை என்ற மனநிலை எம்மை அறியாமல் எமக்குள் உள்ளது.  நல்ல சொல்லாடல்களை கூட வசவு சொற்களாக மாற்றியவர்கள் நாம்.

நூறு வீதம் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

யாயினி இணைத்து இருக்கும் திரியில் ஒரு கறுப்பு இனத்தவரைக் காப்பிலி என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு மோசமானது என்று தெளிவாக உரையாடப்பட்டு இருக்கு. 

காப்பிலி என்ற பதத்துக்கு பின் வரலாற்று காரணங்கள், பெயர் வரக் காரணங்கள் என்று பல இருந்தாலும், எம்மவர்களால் இச் சொல் கறுப்பு இனத்தவரை நோக்கி சொல்லப்படுவதன் காரணம், தம்மை உயர்வாகவும் அவர்களை தமக்கு கீழாகவும் கருதும் 'உயர்சாதி' மன நிலையில் தான். 

மேலும் எம்மவர்கள் கறுப்பு இனத்தவர்களை 'கறுவல்' என்றும், சீனர்களை 'சப்பட்டைகள்' என்றும், அல்ஜீரியர்களை 'அடை' என்றும் அழைப்பது அவர்களை இழிவுபடுத்துவதற்காகவே அன்றி வேறு எந்தக் காரணங்களாலும் இல்லை. சொந்த இனத்துக்குள்ளேயே சாதி பார்க்கும் இழி மனநிலையின் தொடர்ச்சி தான் இந்த பழக்கம்.

ஏற்கனவே சொல்லியது போல, இந்தச் சொல் தவிர்க்கப்பட வேண்டியது. யாழில் கண்டிப்பாக தவிர்க்கபட வேண்டிய, விதி மீறலுக்குரிய சொல்.

நன்றி


 

நீங்கள் கூறிய எதுவுமே இதில் இல்லை நிழலி. கறுவல் என்று சொல்லும்போது  மற்றவர்களால் அவர்களை அடையாளம் காண்பது இலகுவாக்கிறது. காப்பிலிக் கோழி என்று கூறுவதும் தலைமுடிபோன்று இருப்பதானாலத்தான். தமிழர்கள் யாரும் தம்முள் கதைக்கும்போது அவர்களைத் தரம் தாழ்த்துவதற்காகக் கதைப்பதாக நான் எண்ணவில்லை. ஒரு விடயத்தை இலகுவாகக் கூறுவதற்காக அப்படியான சொற்களைப் பயன்படுத்துவதை நீங்கள் சாதீயத்துடன்  வேண்டுமென்றே முடிகிறீர்கள். ஒரு தமிழ் நூலில் வரும் காப்பிலி என்னும் சொல் எப்படி மற்றவரைப் பாதிக்கும் என்று எனக்கு ஒருக்கா விளக்குங்கோ??? ஏனெனில் என சிற்றறிவுக்கு எட்டவில்லை.  

4 hours ago, island said:

மிக தெளிவான பார்வை. இதை விட தெளிவாக கூறமுடியாது. அருமையான கருத்து நிழலி. அண்மையில் திண்ணை உரையாடல்  ஒன்றில் கூட லண்டன் மேயரை குறிப்பிடும் போது ஒரு நகர முதல்வர் என்ற அடிப்படை நாகரீகம் கூட இன்றி  அவர்முஸ்லீம் என்பதால்  “காக்கா” என்ற வார்ததை பயன்படுத்தப்பட்டது.  நீங்கள் குறிப்பிட்டது போல சொந்த இனத்துக்குள்ளேயே மற்றயவர்களை தாழ்த்தும் இழி மனநிலையின் வெளிப்பாடு தான் இது. 

நான் எழுதியிருப்பதை வடிவா வாசியுங்கோ. விளங்காட்டில் திருப்பவும் வாசிச்சால் விளங்கும்  

3 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கு எம்மை இந்தியோஸ் என்கிறார்கள்.

எம்மை லண்டனில் பாக்கி என்கிறார்கள்

அதே மாதிரி கறுப்பினத்தவரை காப்பிலி என்பதில் தப்பில்லை

ஆனால் கட்டுரை கதைகள் என்று வரும்போது இப்படி எழுதலாமோ என்று சிந்திக்க வேண்டி உள்ளது.

நன்றி அண்ணா கருத்துக்கு. இப்படி நான் எழுதியதால் யாருக்குப் பாதிப்பு என்று எண்ணுகிறீர்கள். 

2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

 

நேரடியாக கூறுவது என்றால் ஒரு எழுத்தாளர், சமூகத்தில் அறியப்பட்டவர் எனும் வகையில் உங்களை நோக்கும்போது நீங்கள் இனிமேல் இப்படி காப்பிலி என எழுதுவதை, பேசுவதை தவிர்த்தால் நல்லது. ஏற்கனவே எழுதியது, பேசியதற்கு ஒன்றும் செய்யமுடியாது. 

 

 

பட்டும்படாமலும் பதில் கூறுவது என்பது இதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அவர்களுக்கு தெரியாமல் எழுதினால் பரவாயில்லை என்ற கருத்தின் மூலம் - கருத்தாடலின் போக்கையே அன்ரி மாத்திப்போட்டா🤣.

ஆனால் ஒரு இலக்கிய படைப்பில் that black man helped me என்பதை ஒரு தமிழ் கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்திடம் “அந்த கறுப்பின இளைஞன் எனக்கு உதவினான்” என்று சொல்வதாக எழுதினால் அது எவ்வளவு செயற்கைத்தனமாக இருக்கும்?

இதில் எனக்கு நிலைப்பாடு என்று இல்லை. கேள்விகள் மட்டுமே.

ஆதாரம்?

ஏன் கேட்கிறேன் என்றால் எனது யூகேயில் பிறந்த நண்பி ஒருவர் ஒரு முறை “that black bag” என்பதை “அந்த காப்பிலி பாக்” என சொல்லி - எல்லாரும் சிரித்தோம்.

உண்மையில் பெரும்பாலானா தமிழர்கள் இதை ஒரு இழிசொல்லாக கருதி பாவித்தால் - அது தவறான சொல்தான்.

ஆனால் இப்படி கருத ஆதாரம் ஏதும் இருக்க வேண்டும்.

நான் எழுதியதில் அவனைத் தரகுறைவாகக் கூறவில்லையே. எளிய காப்பிலி என்றோ மொக்குக் காப்பிலி என்றோ எழுதி இருந்தால் தவறு என்று கூறலாம்.  என்னை விழாமல் நிறுத்தினான் என்று கூறும்போது அது ஏயன் இழிசொல்லாக்கப் பார்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

எனது நினைவு சரியானால், களஉறவு ராசவன்னியன் இதன் அர்த்தம் என்ன என்று கேட்க, யாரோ, 'நானா' என்று பொருள்படும், சகோதரத்தினை குறிக்கும் அரபு சொல் என்று சொன்னதாக நினைவு.   

ஐ….உங்களுக்குத் தெரியாதாக்கும்🤣

என்ன நானா இதெல்லாம்? (நானா என்பது மூத்த அண்ணன் - வசவு அல்ல).

22 minutes ago, island said:

ஒரு சொல் காரணப்பெயரையோ வரலாற்று ரீதியான பின்னணியையோ கொண்டிருந்தாலும், அந்த சொல் நடைமுறையில்  மற்றயவரை தாழ்த்தி சொல்ல அவரை மனம்  நோகும்படி செய்ய நடைமுறையில்  பாவிக்கப்பட்டால் அது வசவு சொல் தான்.

நிச்சயமாக

23 minutes ago, island said:

நடை முறை அர்ததம் தான் அது வசவு சொல்லா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது. 

காப்பிலி என்ற சொல் நடைமுறையில் வசவுதான் என எப்படி தீர்மானித்தீர்கள் என்பதே என் கேள்வி.

24 minutes ago, island said:

அடுத்தவரை வசவு சொற்களால் அழைப்பது தான் நகைச்சுவை என்ற மனநிலை எம்மை அறியாமல் எமக்குள் உள்ளது.  நல்ல சொல்லாடல்களை கூட வசவு சொற்களாக மாற்றியவர்கள் நாம்.  உதாரணமாக அவய குறைபாடு உள்ளவர்களை குறிப்பிட  குருடு, செவிடு, நொண்டி, ஊமை போன்ற சொற்களை  வசவு சொற்களாக நமது முன்னோர்கள்  மாற்றிய பின்னர் அவர்களை மரியாதையாக அழைப்பதற்கு,  “ வலது குறைந்தவர்கள்” என்ற பதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அந்த சொல்லை “ வலசு” என்று கொச்சையாக வசவு சொல்லாக மாற்றப்பட்டது. பின்னர்,  “மாற்று திறனாளிகள்” என்ற புதிய பதத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. 

இதே போல “பஜனை” “மாமூல்” “பலானது” இப்படி பல சொற்கள் அதன் அர்த்தம் அல்லாதா வேறு அர்தத்தில் பயன்படுவது உண்மைதான்.

ஆனால் “காப்பிலி” என்ற சொல் இப்படி ஒரு பிறழ் அர்த நிலையை அடைந்து விட்டதா?

அல்லது நாமகவே நல்ல சொல் ஒன்றை வசவு என்று ஆக்குகிறோமா?

24 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஏன் காப்பிலி என்று தான் சொல்ல வேண்டும் என்ற பிடிவாதம் 😟

பிடிவாதம் இல்லை, இயல்பில் விகல்ப அர்த்தம் இல்லாத ஒரு சொல்லை அநியாயமாக வசவு சொல்லாக்க கூடாது என்ற ஆதங்கம் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நாங்கள் கறுப்பினத்தவர் என்று தான் சொல்கிறது அண்ணா...அவர்களுக்கு நாங்கள் கதைப்பது தெரியாது என்பதற்காக அவர்களை பற்றி பிழையாய் கதைக்க கூடாது அல்லவா! 
 

இது கதைப்பது பற்றியது இல்லை ரதி. உங்கள் வீட்டிலிருந்து மூன்றாம் வீட்டில் ஒரு கறுப்பு இனத்தவர் இருந்தால் அவர்கள் பற்றிய விபரம் ஒன்றுமே தெரியாது ஒரு விடயத்தை உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் எப்படிக் கூறுவீர்கள் ???? அவர்கள் வீடுக்குச் சென்று பெயரை விசாரித்துவிட்டா விடயத்தைக் கூறுவீர்கள் ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் எழுதியதில் அவனைத் தரகுறைவாகக் கூறவில்லையே. எளிய காப்பிலி என்றோ மொக்குக் காப்பிலி என்றோ எழுதி இருந்தால் தவறு என்று கூறலாம்.  என்னை விழாமல் நிறுத்தினான் என்று கூறும்போது அது ஏயன் இழிசொல்லாக்கப் பார்க்கவேண்டும்.

இந்த வாதம் சரியே.

ஆனால் அதன் பின் நீங்கள் சொன்ன “அவர்கள் பார்க்கும்/ கேட்கும் போது சொல்வதில்லை” என்ற கருத்து - இந்த வாதத்தை (அதாவது இது இழி சொல் இல்லை) சுக்கலாக்கி விட்டதே அன்ரி? அதைதான் சுட்டினேன்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தென் ஆபிரிக்கா அல்ல‌து இந்தியா இந்த‌ இர‌ண்டு அணிக‌ளுக்கு ந‌ல்ல‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம்   தென் ஆபிரிக்கா கோப்பை தூக்கினால் இர‌ட்டை ம‌கிழ்ச்சி   இந்தியாவை பிடிக்காது புள்ளிக்காக‌ இந்திய‌ அணிய‌ தெரிவு செய்தேன்   அவுஸ்ரேலியா இன்று இந்தியாவிட‌ம் தோக்க‌ கூடும்   மிஸ்சில் ஸ்ராக் இர‌ண்டு விளையாட்டில் விளையாட‌ வில்லை காய‌ம் போல‌............................
    • வணக்கம் சுண்டல், வாங்கோ, மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி👍
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • "திருந்தாத உள்ளம்"     "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!"   எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர்.   நான் சமயத்தில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் என் ஆசிரியரின் ஒழுங்கு முறை கடைப்பிடிப்பதை கண்டு ஆச்சரியப் பட்டுள்ளேன். நான் பல்கலைக்கழகம் போனபின், ஒரு முறை என் நண்பனுடன் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா ஒன்றுக்கு சென்ற பொழுது, என் ஆசிரியரை அங்கு தம்பதியர்களாக ஒரு பெண் குழந்தையுடன், கிருஸ்தவ மத கோலத்தில் கண்டு திடுக்கிட்டேன். அதை அவரும் உணர்ந்திருக்கவேண்டும். என்றாலும் அதை சமாளித்தபடி. ' என் கணவர் பிரான்சிஸ், மத்திய கிழக்கில் வேலைசெய்கிறார்' என அறிமுகப் படுத்தினார். நான் அதன் பின் என் கொழும்பு நண்பரிடம் விசாரித்ததில், பிரான்சிஸ் என்பவர் பெரிதாகப் படிக்கவில்லை என்றும், ஆனால் வசதியான குடும்பத்தில் கொஞ்சம் துடி துடிப்பான இளைஞராக, மும்மொழியும் தாராளமாக பேசுவதால், பெண்களுடன் இலகுவில் பழகக் கூடியவர் என்றும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், ஆசிரியைக்கும் இவருக்கும் எதிர்பாராதவிதமாக தொடர்பு வந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணத்தில் முடிந்ததாக கேள்விப்பட்டேன். அதில் எந்த தவறும் இல்லை. தன் நிலைக்கு தக்கதாக, கணவருடன் விட்டுக்கொடுத்து வாழ்வதையிட்டு, நான் உண்மையில், என் ஆசிரியர் பற்றி பெருமை கொண்டேன்!   அதன் பின் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவரை லண்டனில் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுடன், ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையுமாக லண்டன் ஈலிங் துர்க்கை அம்மன் இந்து ஆலயத்தில் நெற்றியில் திருநீறுடன், சந்தனப் பொட்டு பளபளக்க கண்டேன். அப்பொழுது அங்கு கணவரைக் காணவில்லை. பிரான்ஸிஸை நான் ஒரு முறைதான் கண்டாலும், அவர் இலகுவில் மனதில் பதிந்துவிட்டார். கலகலப்பாய் அன்னியோன்னியமாக அந்த கொஞ்ச நேரத்துக்குள் கதைத்தது இன்னும் நினைவில் உண்டு. அவ்வளவு விரைவாக அடுத்தவர்களை கவர்ந்து விடுகிறார். ஆகவே ஆசிரியையை கவர்ந்தது அன்று எனக்கு அதிசயமாக இருக்கவில்லை.   பிள்ளைகள் இருவரும் தங்கள் மற்ற நண்பர்களுடன் ஆங்கில மொழியில் கதைத்த படி, வெளியில் ஒரு இடத்தில் போய் அமர்ந்து விட்டார்கள். ஆசிரியை இன்னும் அதே முன்னைய பார்வையிலேயே, அழகாக, அதே மற்றவர்களை கவரும் சிரிப்புடன் காணப்பட்டார். அவர் என்னை விட ஏழு, எட்டு வயது கூடவென்றாலும், தோற்றத்துக்கு அப்படி இல்லை! ஒருவேளை அவரை முன்பின் தெரியாது என்றால், நானே சிலவேளை பெண் நண்பி அழைப்பு கேட்டிருக்கலாம்?   ஆசிரியை ' நீங்க பிஸியா?' என்று கேட்டார். நான் இல்லை என்றதும், 'நான் இன்று 12 மணிக்குள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யம் படைக்க வேண்டும். இன்று வெள்ளிக்கு கிழமை தானே , அதுதான்!, கொஞ்சம் நில்லுங்கள், நான் வந்து கதைக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஆனால் இரு கண்களிலும் கண்ணீர் மெல்ல சுரக்க விடை பெற்று சென்றார்.   நான் உண்மையில் லண்டன் வந்தது இடம் சுற்றி பார்க்கவும், தமிழர்களின் வாழ்வு அங்கு எப்படி என பொதுவாக அறியவே. ஆகவே அவர் ஆலயம் சுற்றி கும்பிட்டு வரும் வரை, நான் ஆலயத்தின் முக்கிய இடங்களை படம் பிடிப்பதுடன், அங்கு வந்திருந்த சில அடியார்களுடன் கதைப்பதிலும் பொழுது போக்கினேன். அப்படி சந்தர்ப்பத்தில் நான் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாய் படித்த குமரநாயகம், அவரின் குடும்பம், அதே போல யாழ் மத்திய கல்லூரியில் என்னுடன் படித்த வாமதேவ அவரின் குடும்பம் இப்படி சில முன்னைய நண்பர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அங்கு மாலை கட்டி தொண்டுகள் செய்துகொண்டு இருந்த ஒரு அம்மாவுடன் கதைத்தபொழுது தான் எனக்கு புரிந்தது, தீர்க்க முடியாத துன்பங்கள் தீரவும் மற்றும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கவுமே இன்றைய காலை வழிபாடு முக்கியமாக கருதப் படுகிறது என்று. இது மற்றும் ஆசிரியரின் கண்ணீரும், அவர் திருமண உறவில் குழம்பி இருக்கிறார் என மேலோட்டமாக எனக்கு கூறியது!   'என்ன செய்கிறாயடா?, இப்ப எந்த நாடு?. தனியவா வந்தது ? மனைவி பிள்ளைகள்?' ஆசிரியை என்ற அதிகாரம் அப்படியே இருந்தது. அதில் மாற்றம் இல்லை. ஆனால் ... அந்தக் கண்ணீர் ? நான் ' பிரான்சிஸ் சார் எங்கே?, வரவில்லையா மேடம் ?' கதையை ஆரம்பித்தேன். அவர் கண்கள் மீண்டும் மழை பொழியத் தொடங்கியது. தன் கதையை ஒவ்வொன்றாக பிரான்ஸிஸை சந்தித்ததில் இருந்து சொல்லத் தொடங்கினார்.   தான் முதல் ஆசிரியர் உத்தியோகமாக யாழ் மத்திய கல்லூரியில் நகரில் ஆரம்பித்தாலும், ஓர் சில ஆண்டுகளின் பின் 4000 மாணவர்களும் 300 ஆசிரியர்களும் கொண்ட, ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையான. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றதாகவும், அப்பொழுது தான் தற்காலிகமாக இருந்த வீட்டுக்காரியுடன், சிலவேளை காலிமுக திடலுக்கு அல்லது மவுண்ட் லாவினியா [கல்கிசை] கடற்கரைக்கு போவதாகவும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே பிரான்ஸிஸை சந்தித்ததாக கூறினார்.   'அதைப்பற்றி இனி பேசிப் பிரயோசனம் இல்லை, உண்மையில் காதலோ காமமோ வரவில்லை. பிரான்சிஸ், எதிர்பாராத நேரத்தில் உடலை தீண்டியதால், அந்த வீட்டுக்கார அம்மா இவன் சரி இல்லாதவன் எனக் எடுத்துக்கூறியும், இவன் இனி என் கணவன் என்று - கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர பாத்திரங்களை விரும்பியவள், நானும் என்னை அவர்களைப் போல் எண்ணியவள் என்பதால் - பட்டிக்காட்டாய் முடிவெடுத்தேன். இவனை, இவன் உள்ளத்தை என்னால், என் உண்மையான அன்பால், என் இளமை அழகால், கவர்ச்சியால் என்னுடனே அவன் வாழ்வு இனி தொடரத் செய்ய முடியும் என்று எண்ணினேன்' என்று கண்ணை துடைத்துக்கொண்டு கூறி ' கடுமையான சட்டங்கள் பிரான்ஸிஸால் போடப்பட்டு, கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்தேன்' என்றார்.   'இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் பிரான்சிஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வை பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் சிங்கள, பரங்கி பெண்களாக இருந்ததால், அது, அந்த செய்திகள் எம் சமூகத்துக்குள், பரவவும் இல்லை. நானும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் இருந்துவிட்டேன்' என்று தொடர்ந்தவர்,   'ஆனால் லண்டனுக்கு வந்தபின், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினார். இது அவருக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு வழிவகுத்தது' என்று அழுது கொண்டு சொன்னார்.   'அவரை மட்டும் பிழை சொல்ல முடியாது - திருந்தாத உள்ளம் என்று எதுவும் இல்லை மாறாக திருந்தவிடாமல் அழுத்தும் அழுக்கு உள்ளங்களே அதிகம்' என்று தன் கதையை முடித்தார்.   'அவர் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், நானும் விடாமல் அவரை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக போய்விட்டது' பெருமூச்சுக்கு இடையில் தொடர்ந்தார். 'நான் இதற்கிடையில், மனநிலை பாதிப்பு அடைந்து ஒரு மனநல மருத்துவமனையில் நீண்ட பல பரிசோதனைகள் செய்து, இறுதியாக அங்கு மூன்று மாதம் தங்கி சிகிச்சையும் செய்தேன்.   அப்பொழுது, அதை கேள்விப்பட்டு பிரான்சிஸ் என்னைப் பார்க்க அங்கு வந்தார். தான் இனி பிரியமாடேன் என்று சபதமும் செய்தார். ஆனால் பிள்ளைகளுக்கு அவரின் போக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே மகனுக்கும் பிரான்ஸிஸுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதைதான்.   யாரோ ஒரு பெண்ணுடன் குடும்ப வாழ்வு நடத்த தொடங்கினார். ஆனால் 2 வருடத்தில் பிரிந்து இருக்க இடம் இல்லாமல் அலைந்தார். அதைக் கேள்விப்பட்ட நான் திருந்துவார் என்று மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்து, பிள்ளைகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், என்னுடன் சேர்த்துக்கொண்டேன். எவ்வளவு நான் முட்டாள் என்பதை பின்பு தான் அறிந்தேன்' என்று ஆசிரியர் என் முகத்தை பார்க்க முடியாமல், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் அமர்ந்து இருந்த அம்மனை பார்த்து சொன்னார்.   இதற்கு மேல் அவரின் கதையை நான் கேட்கவில்லை.     "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?"   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்வதை உறுதிப்படுத்துங்கள் - அமைச்சர் விதுரவிடம் நல்லை ஆதீனம் கோரிக்கை Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 04:01 PM (எம்.நியூட்டன்) நல்லை ஆதீனத்துக்கு வருகை தந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிடம் சைவமக்கள் சுதந்திரமாக குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டுதல் விடப்பட்டதுடன், திருக்கோணேமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே பாதை இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகளை அப்புறப்படுத்தி புனித தலத்தின் மேன்மையைப் பேண வழிசெய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. காங்கேசன்துறையில் தல்செவன ஹோட்டல் அமைந்துள்ள பகுதியானது சைவமக்களின் பாவனையில் உள்ள சத்திரம் இருந்த நிலம். அது இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. அதனை உடன் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இவற்றுக்கு பதில் கூறிய அமைச்சர் குருந்தூர்மலை வெடுக்கு நாறி பகுதியில் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் என்றும் அப்பகுதி தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது என்றும் திருக்கோணேஸ்வர பெட்டிக்கடை அகற்றுவது தொடர்பாக மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் காணி விடயமாக நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்த  சந்திப்பில் ஆதீன சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், இந்துகலாசார திணக்களப் பணிப்பாளர் அநுருத்தன்  கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/186825
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.