Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1987: பிரபாகரன் வன்னிகாட்டில் கொல்லப்பட்டார். (ஹிந்தியா)

1988: பிரபாகரன் செத்துப்போட்டார். (அநேக ஈழத்தமிழர்கள்.)

1989: தமிழக தலைவர்கள்  ஊடகவியலாளர்கள்.. சிலர் பிரபாகரனை சந்திப்பு (டூப்பா இருக்கும்.. நம்மவர்கள்)

1990: மாத்தையா தான் இயக்கத்தை வழிநடத்திறார். பிரபாகரன் கதை முடிஞ்சுது. (நம்மவர்களும்.. எதிரிகளும் கிசு கிசு)

1992: மாவீரர் நாள் உரையோடு தலைவர் சாவகச்சேரியில் பிரச்சன்னம். (இது உண்மையான பிரபாகரனா இருக்குமா.. அப்பவும் நம்மவர்கள் பொய்யை விட்டுவிடாமல்.. விரட்டிக்கொண்டிருந்தனர்.)

ஆனால்.. இலட்சிய வேங்கைகளும் இலட்சிய வேட்கை கொண்ட மக்களும்.. இதில் காலத்தைக் கழிக்கவில்லை. பெரும் புலிப்படையை உருவாக்கி வரியுடையோடு களமிறக்கினார்கள். தமிழீழ தேசம் எங்கும் புலிக்கொடி பறந்த காலம் அதுவானது. 

Edited by nedukkalapoovan

  • Replies 300
  • Views 38.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

    விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ? வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ? மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே! அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    "தங்கை துவாரகா இந்தியாவின் உறுதுணையுடன்  களத்தில் நிற்பாள்"           -காசியானத்தன்   “இந்தியாவின் உறுதுணையுடன்”’ இந்த ஒற்றை சொல்லிலேயே காசி உண்மையை கக்கிவிட்டார்..  இந்தியாவும் புல

  • * Making of the "Thuvaraka"? உண்மையாக அவரின் மகளா ? அவர்கள் சொன்னது உண்மை தானா? நீங்கள் நம்புகிறீர்களா ? இவை தான் இன்று என்னிடம் பலரும் முன்வைத்த கேள்விகள். இதுவே, இன்று தாயகத்திலும், தமிழர்

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nedukkalapoovan said:

ஒரு சாதாரண கேள்வி.. 

இம்முறை.. தலைவருக்கு ஏன் யாழ் களம் அஞ்சலி செய்யவில்லை. கடந்த காலங்களில் முரண்பாடுகளுக்கு மத்தியிலும்.. செய்யதே..???!

அதேவேளை

எனக்கும் ஒரு கேள்வி இருக்கிறது

தலைவர் இருக்கிறார் அவரது பிள்ளைகள் மனைவி இருக்கிறார்கள் என்றவுடன் அதை மறுத்து ஆயிரம் வீடியோக்களும்  ஆய்வுகளும் அறிக்கைகளும் சாட்சிகளும் காசுக்கொடுக்கல் வாங்கல்களும் கணக்கறிக்கைகளும் கூட வருகின்றன. ஆனால் இத்தனை நேரங்களையும் ரகசிய புலநாய்வு ஜேம்ஸ் பாண்ட் களையும் பயன்படுத்தி இதுவரை (இந்த 14 வருடங்களில்) ஏன் தலைவர் அவரது குடும்பத்தினர் மற்றும் பொட்டம்மான் எப்படி எங்கே எவ்வாறு இறந்தனர் என்று இவர்களால் நிறுவ முடியவில்லை அல்லது முயலவில்லை. 

இவ்வாறு செய்தால் அத்தனை பிரச்சினைகளுக்கும் முடிச்சுக்களுக்கும் முடிவு வருமே.? ஆக இவர்களும் அதனை விரும்பவில்லை. அல்லது ஊக்குவிக்கிறார்கள். 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

DWARAKA-2023-11-f0548236f08eb74586153bae

 நெடுக்கர்! அதை நீங்களும் செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை?

நாங்கள் தலைவரை சாகடிச்சு அவர் முன்னெடுத்த மக்களுக்கான இலட்சியங்களை கொன்றொழித்து எதிரிகளுக்கு துணை போக..  எப்போதும் விரும்பியதில்லை. 

சாத்திரியார் தலைவருக்கு படையல் வைச்ச போது.. அதை எதிர்த்ததில் தாங்களும் அடக்கம்.. நாங்களும் அடக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

1987: பிரபாகரன் வன்னிகாட்டில் கொல்லப்பட்டார். (ஹிந்தியா)

1988: பிரபாகரன் செத்துப்போட்டார். (அநேக ஈழத்தமிழர்கள்.)

1989: தமிழக தலைவர்கள்  ஊடகவியலாளர்கள்.. சிலர் பிரபாகரனை சந்திப்பு (டூப்பா இருக்கும்.. நம்மவர்கள்)

1990: மாத்தையா தான் இயக்கத்தை வழிநடத்திறார். பிரபாகரன் கதை முடிஞ்சுது. (நம்மவர்களும்.. எதிரிகளும் கிசு கிசு)

1992: மாவீரர் நாள் உரையோடு தலைவர் சாவகச்சேரியில் பிரச்சன்னம். (இது உண்மையான பிரபாகரனா இருக்குமா.. அப்பவும் நம்மவர்கள் பொய்யை விட்டுவிடாமல்.. விரட்டிக்கொண்டிருந்தனர்.)

ஆனால்.. இலட்சிய வேங்கைகளும் இலட்சிய வேட்கை கொண்ட மக்களும்.. இதில் காலத்தைக் கழிக்கவில்லை. பெரும் புலிப்படையை உருவாக்கி வரியுடையோடு களமிறக்கினார்கள். தமிழீழ தேசம் எங்கும் புலிக்கொடி பறந்த காலம் அதுவானது. 

உந்த‌ ப‌ழைய‌ ப‌ல்ல‌வியை இன்னும் எத்த‌னை வ‌ருட‌ம் தொட‌ர்ந்து ஊத‌ போறீங்க‌ள்............அது போன‌ நூற்றாண்டு க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ இந்த‌ நூற்றாண்டு எப்ப‌டி இய‌ங்குது உல‌க‌ம் ............அந்த‌க் கால‌ம் வேறு தொழிநுட்ப்ப‌ம் சுத்த‌மாய் இல்லை..........அவ‌ங்க‌ள் புர‌ளிய‌ கில‌ப்பி விட்டாலும் த‌லைவ‌ர் அமைப்பை த‌ன் க‌ட்டு பாட்டில் வைத்து இருந்து ம‌றைமுக‌மாய் போராளிக‌ளை வ‌ழி ந‌ட‌த்தின‌வ‌ர் அதில் வெற்றியும் அடைந்த‌வ‌ர்🥰🙏........சில‌ வ‌ருட‌ம் க‌ழித்து யார் எல்லாம் புர‌ளிய‌ கில‌ப்பி விட்டின‌மோ த‌லைவ‌ர் இல்லை என்று அவ‌ர்க‌ளுக்கு தான் யார் என்று மீண்டும் நிறுபித்த‌வ‌ர்.........அந்த‌க் கால‌ம் ம‌லை ஏறி போய் விட்ட‌து............நாம் விவாதிப்ப‌து எம் க‌ண் முன்னே ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌க்க‌ளை ப‌ற்றி..............

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பையன்26 said:

ச‌ரி உங்க‌ளிட‌ம் கேட்க்கிறேன் த‌லைவ‌ர் பொறுமையை க‌டைபிடிப்ப‌வ‌ரா..............த‌லைவ‌ரை நேசித்த‌ அத்த‌னை பேருக்கும் தெரியும் த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று............. நான் கற்பூரம் மேல் அடிச்சு சொல்லுறேன் த‌லைவ‌ர் வீர‌ச்சாவு அடைந்து விட்டார் என்று😥🙏🙏🙏.........அதே ச‌த்திய‌த்தை க‌ற்பூர‌ம் மேல் அடிச்சு நீங்க‌ள் சொல்லுவிங்ளா த‌லைவ‌ர் இருக்கிறார் என்று😡.............

தனிமனித மரணங்கள்.. ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் என்றால்.. பல தேசிய இனங்கள் இன்று விடுதலை அடைந்திருக்க  முடியாது.

இதே துவாரகாவும் சாள்ஸ் அன்ரனியும்.. 1987 இல் யாழில் ஹிந்திய சுற்றிவளைப்புக்குள் வந்த போதே.. இறக்க வேண்டியவர்கள். அதே தான் தலைவருக்கும்.

தலைவர் சாகடிக்கவும் பட்டார். நீங்கள் அப்போது இருந்திருந்தால்.. அப்பவே தலைவரை சாகடித்தவர்கள் அணியில் இருந்து கொண்டிருப்பீர்கள்.

எங்களைப் பொறுத்தவரை.. தேசிய தலைவர் கொல்லப்பட முடியாதவர். அவர் கொள்கைகள்.. இலட்சியங்கள்.. எப்போதும்.. வழிகாட்டியாக இருக்கும். 

நேற்றுக் கூட ஒரு சிங்களவர் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வில்.. தலைவரின் கொள்கைகள் தனக்குப் பிடிக்கும் என்று சொல்கிறார்.. ரோகண விஜயவீர தமக்குப்போராடியது போல என்று ஒப்பிடுகிறார். 

ஆனால்.. நாம்.. தலைவரின் பெளதீக இருப்பை எதிர்பார்த்து அவரின் இலட்சியங்களை குழிதோண்டிப் புதைக்க முனையும் கூட்டங்களின் எதிரிகளின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறோம். இது தான் தலைவரை சாகடிப்பதற்கு நிகர். 

28 minutes ago, பையன்26 said:

உந்த‌ ப‌ழைய‌ ப‌ல்ல‌வியை இன்னும் எத்த‌னை வ‌ருட‌ம் தொட‌ர்ந்து ஊத‌ போறீங்க‌ள்............அது போன‌ நூற்றாண்டு க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ இந்த‌ நூற்றாண்டு எப்ப‌டி இய‌ங்குது உல‌க‌ம் ............அந்த‌க் கால‌ம் வேறு தொழிநுட்ப்ப‌ம் சுத்த‌மாய் இல்லை..........அவ‌ங்க‌ள் புர‌ளிய‌ கில‌ப்பி விட்டாலும் த‌லைவ‌ர் அமைப்பை த‌ன் க‌ட்டு பாட்டில் வைத்து இருந்து ம‌றைமுக‌மாய் போராளிக‌ளை வ‌ழி ந‌ட‌த்தின‌வ‌ர் அதில் வெற்றியும் அடைந்த‌வ‌ர்🥰🙏........சில‌ வ‌ருட‌ம் க‌ழித்து யார் எல்லாம் புர‌ளிய‌ கில‌ப்பி விட்டின‌மோ த‌லைவ‌ர் இல்லை என்று அவ‌ர்க‌ளுக்கு தான் யார் என்று மீண்டும் நிறுபித்த‌வ‌ர்.........அந்த‌க் கால‌ம் ம‌லை ஏறி போய் விட்ட‌து............நாம் விவாதிப்ப‌து எம் க‌ண் முன்னே ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌க்க‌ளை ப‌ற்றி..............

இது பழைய பல்லவி அல்ல. கடந்து வந்த வரலாறு.

இப்பவும் சீமான் அண்ணாவை முன்னால் தள்ளி விட்டிட்டு தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். துவாரகா நகலா.. நிஜமா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

இது.. தமிழீழத்துக்கு எந்த வகையில்.. உதவும்.. என்று சொன்னால் உங்கள்.. புதிய.. புரட்சிகர வழியை நல்வழி என்று இனங்காட்ட உதவியாக இருக்கும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அன்ன நடை நடக்க வெளிக்கிட்டு தன்னடையும் கெட்ட கதையாக இது நடந்திருக்கிறது. சரி 14 வருடங்களின் பின் ஒரு மாவீரர் உரை என்றால் அது எப்படி இருந்திருக்கும். உப்புச்சப்பற்ற உரையாக இருக்கின்றது. உரையில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் எல்லோரும் அறிந்த விடயங்கள். புதிதாக தமிழ்மக்களுக்கும் உலகத்திற்கும் என்ன செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது?வாரிசு அரசியல் என்ற கோணத்தில் இதை வடிவமைத்ததில் இருந்து இந்திய உளவுத்துறையின் பங்கு இதில் இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. தற்போதைய சீனாவின் ஆதிக்கத்தை  தவிர்ப்பதற்கு இந்தியாவுக்கு புலிகள் தேவைப்படுகிறார்கள். அதற்காக தமிழ் உணர்வாளர்களைசாம பேத தான தண்டம் என்ற முறையில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.தலைவரின் பெயரைக் கெடுப்பதற்கு தங்களை அறியாமலே பல தமிழ் உணர்வாளர்கள் பலியாகி இருக்கின்றார்கள். நம்பிக்கெட்டுள்ளார்கள். இந்தியாவில் உள்ள உணர்வாளர்கள் ஒத்துக்கொள்ளாத சந்தர்பங்கில் ஆசைகாட்டி அதற்கும் ஒத்துவராதவர்களை மிரட்டி இந்த விடயங்களைுக்குப் பாவிக்கப்பட்டிருக்கிறார்க். இன்னும் சில உணர்வாளர்கள் அதீத நம்பிக்கையில் இது  உண்மையாக இருக்கலாம் என்று நம்பிக் கெட்டிருக்கலாம். விசுகர் போன்ற தமிழ் உணர்வாளர்கள்  அதீத நம்பிகiகயில் செயற்பட்டிருக்கலாம் . அதற்காக அப்படியான நிலையில் இருப்பவர்களை தாங்களாகத் தெளிவடையும்வரை அவர்களுக்கு நேரம் கொடுக்காது போட்டுத்தாக்குவது நல்லதல்ல. நெடுமாறன் ஐயா போன்றவர்கள் எல்லாம் தெரிந்துகொண்டு இப்படியான முயற்சிகளுக்குத்துணைபோயிருக்க மாட்டார்கள். நம்பிக்கெட்டிருக்கலாம் அல்லது மிரட்டபட்டிருக்கலாம்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புலவர் said:

உண்மையில் அன்ன நடை நடக்க வெளிக்கிட்டு தன்னடையும் கெட்ட கதையாக இது நடந்திருக்கிறது. சரி 14 வருடங்களின் பின் ஒரு மாவீரர் உரை என்றால் அது எப்படி இருந்திருக்கும். உப்புச்சப்ற்ற உரையாக இருக்கின்றது. உரையில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் எல்லோரும் அறிந்த விடயங்கள். புதிதாக தமிழ்மக்களுக்கும் உலகத்திற்கும் என்ன செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது?வாரிசு அரசியல் என்ற கோணத்தில் இதை வடிவமைத்ததில் இருந்து இந்திய உளவுத்துறையின் பங்கு இதில் இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. தற்போதைய சீனாவின் ஆதிக்கத்தை  தவிர்ப்பதற்கு இந்தியாவுக்கு புலிகள் தேவைப்படுகிறார்கள். அதற்காக தமிழ் உணர்வாளகைளை நாம பேத தான தண்டம் என்ற முறையில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.தலைவரின் பெயரைக் கெடுப்பதற்கு தங்களை அறியாமலே பல தமிழ் உணர்வாளர்கள் பலியாகி இருக்கின்றார்கள். நம்பிக்கெட்டுள்ளார்கள். இந்தியாவில் உள்ள உணர்வாளர்கள் ஒத்துக்கொள்ளாத சந்தர்பங்கில் ஆசைகாட்டி அதற்கும் ஒத்துவராதவர்களை மிரட்டி இந்த விடயங்களைுக்குப் பாவிக்கப்பட்டிருக்கிறார்க். இன்னும் சில உணர்வாளர்கள் அதீத நம்பிக்கையில் இது  உண்மையாக இருக்கலாம் என்று நம்பிக் கெட்டிருக்கலாம். சிசுகர் போன்ற தமிழ் உணர்வாளர்கள்  அதீத நம்பிகi;கயில் செயற்பட்டிருக்கலாம் . அதற்காக அப்படியான நிலையில் இருப்பவர்களை தாங்களாகத் தெளிவடையும்வரை அவர்களுக்கு நேரம் கொடுக்காது போட்டுத்தாக்குவது நல்லதல்ல. நெடுமாறன் ஐயா போன்றவர்கள் எல்லாம் தெரிந்துகொண்டு இப்படியான மயற்சிகளுக்குத்துணைபோயிருக்க மாட்டார்கள். நம்பிக்கெட்டிருக்கலாம் அல்லது மிரட்டபட்டிருக்கலாம்.

ஹிந்தியாவின்.. சீனாவின்.. மேற்குலகின்.. ரஷ்சியாவின் தேவைகளோடு சேர்ந்து நாம் ஓடாவிட்டால்.. இலக்கை அடைவது இலகு அல்ல. எமது பூகோள அரசியல் ராஜதந்திரப் பலவீனமே.. முள்ளிவாய்க்கால் மெளனம். இதனை தெளிவாகச் சொல்கிறது பேச்சு.

அதனை இன்னும் இனம்காணாமல்.. ஒட்டினால்.. ஒன்றில் ஹிந்தியா.. இல்ல சிங்களம் என்று காலம் கடத்துவோமாக இருந்தால்.. எம் மாவீரர்களின் கனவு நனவாக இன்னும் பல சதாப்தங்கள் தேவைப்படும். 

43 minutes ago, nedukkalapoovan said:

ஒரு சாதாரண கேள்வி.. 

இம்முறை.. தலைவருக்கு ஏன் யாழ் களம் அஞ்சலி செய்யவில்லை. கடந்த காலங்களில் முரண்பாடுகளுக்கு மத்தியிலும்.. செய்யதே..???!

 

யாழ் களம் மே மாதத்தில் 17 , 18 திகதிகள் வரும் வாரத்தில் தான்  தலைவருக்கு படத்துடன் கூடிய அஞ்சலியை செலுத்துவது. 

இந்த வருடமும் அதனையே செய்தோம்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை இந்தியாவையும் சீனாவையும் சமாந்தரமாக கையாள வேண்டும். தற்போதைய நிலையில் கொஞ்சம் சீனாப் பக்கம் சாய வேண்டும். அப்பதான் இந்தியா வழிக்கு வரும்.

Edited by புலவர்

பல மணி நேரத்தின் பின் YouTube நிர்வாகம், இந்த போலி காணொளியை நீக்கியுள்ளது. 

தமது இலக்கு நிறைவேறாதது மட்டுமன்றி, கேலிக்கிடமாக போனதால் இவ் காணொளியை தயாரித்தவர்களே நீக்கச் சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புலவர் said:

தமிழர்களை இந்தியாவையும் சீனாவையும் சமாந்தரமாக கையாள வேண்டும். தற்போதைய நிலையில் கொஞ்சம் சீனாப் பக்கம் சாய வேண்டும். அப்பதான் இந்தியா வழிக்கு வரும்.

அது நடக்காது சீனாப்பக்கமா சாய்ப்பவன் மேல் பத்து மடங்கு பெட்டி சீனா கொடுக்குமா ?

இந்தியஆ  கொடுக்குது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, nedukkalapoovan said:

நாங்கள் தலைவரை சாகடிச்சு அவர் முன்னெடுத்த மக்களுக்கான இலட்சியங்களை கொன்றொழித்து எதிரிகளுக்கு துணை போக..  எப்போதும் விரும்பியதில்லை. 

சாத்திரியார் தலைவருக்கு படையல் வைச்ச போது.. அதை எதிர்த்ததில் தாங்களும் அடக்கம்.. நாங்களும் அடக்கம். 

எல்லாவற்றையும் சந்தேகிக்கச் சொல்லி சிறுவயதிலிருந்தே எங்களுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள், ஆனால் சிலவற்றை சந்தேகிக்கவே தேவையில்லை தூக்கி போட்டிட்டு மற்ற வேலையைப் பார்க்கலாம்... 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nedukkalapoovan said:

தனிமனித மரணங்கள்.. ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் என்றால்.. பல தேசிய இனங்கள் இன்று விடுதலை அடைந்திருக்க  முடியாது.

இதே துவாரகாவும் சாளஸ் அன்ரனியும்.. 1987 இல் யாழில் ஹிந்திய சுற்றிவளைப்புக்குள் வந்த போதே.. இறக்க வேண்டியவர்கள். அதே தான் தலைவருக்கும்.

தலைவர் சாகடிக்கவும் பட்டார். நீங்கள் அப்போது இருந்திருந்தால்.. அப்பவே தலைவரை சாகடித்தவர்கள் அணியில் இருந்து கொண்டிருப்பீர்கள்.

எங்களைப் பொறுத்தவரை.. தேசிய தலைவர் கொல்லப்பட முடியாதவர். அவர் கொள்கைகள்.. இலட்சியங்கள்.. எப்போதும்.. வழிகாட்டியாக இருக்கும். 

நேற்றுக் கூட ஒரு சிங்களவர் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வில்.. தலைவரின் கொள்கைகள் தனக்குப் பிடிக்கும் என்று சொல்கிறார்.. ரோகண விஜவீர தமக்குப்போராடியது போல என்று ஒப்பிடுகிறார். 

ஆனால்.. நாம்.. தலைவரின் பெளதீக இருப்பை எதிர்பார்த்து அவரின் இலட்சியங்களை குழிதோண்டிப் புதைக்க முனையும் கூட்டங்களின் எதிரிகளின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறோம். இது தான் தலைவரை சாகடிப்பதற்கு நிகர். 

இது பழைய பல்லவி அல்ல. கடந்து வந்த வரலாறு.

இப்பவும் சீமானை அண்ணாவை முன்னாள் விட்டிட்டு தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். துவாரகா நகலா.. நிஜமா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

இது.. தமிழீழத்துக்கு எந்த வகையில்.. உதவும்.. என்று சொன்னால் உங்கள்.. புதிய வழியை நல்வழி என்று இனங்காட்ட உதவியாக இருக்கும். 

நீங்க‌ள் எழுதும் ஆண்டில் என‌க்கு த‌லைவ‌ரையும் தெரியாது எம் போராட்ட‌த்தையும் தெரியாது இது தான் நித‌ர்ச‌ன‌ உண்னை...........இந்த‌ திரியில் எழுதும் குசா தாத்தாவுக்கு என்னை ப‌ற்றி முழுதாக‌ தெரியும்........ம‌ற்ற‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ளுட‌ன் ஒப்பிட்டால் நான் 31.35 வ‌ய‌தில் சிறிய‌வ‌ன்........என‌க்கு எங்க‌ட‌ போராட்ட‌ம் ப‌ற்றிய‌ புரித‌ல் 1991க்கு பிற‌க்கு தான் கொஞ்ச‌ம் தெரிய‌ வ‌ந்த‌து.............உங்க‌ட‌ நினைப்பு நான் வ‌ய‌தில் பழம் தின்று கொட்டையும் போட்ட ஆள் போல‌...........பின்னைய‌ கால‌ங்க‌ளில் தான் வ‌ர‌லாற்றை ப‌டிக்க‌ தொட‌ங்கி நான்..............இந்திய‌ன் ஆமி பிர‌ச்ச‌னையின் போது த‌லைவ‌ர் கிண‌ற்றுக்குள் இற‌ங்க‌ இன‌ துரோகி க‌ருணா காப்பாற்றின‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் எல்லாம் புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ பிற‌க்கு ப‌டிச்சு தெரிந்து கொண்ட‌ விடைய‌ம்...............சிறுவ‌ய‌திலே இது தான் கொள்கை என்றால் ம‌ர‌ணிக்கும் வ‌ரை அதே கொள்கையுட‌ன் தான் இருப்பேன்...........த‌லைவ‌ரை அந்த‌க் கால‌த்தில் இந்தியாவும் ச‌தி மூல‌ம் கொல்ல‌ முய‌ன்று அதில் இருந்தும் த‌ப்பின‌ வ‌ர‌லாறுக‌ள் தெரியும்..........தெரிய‌ வேண்டிய‌துக‌ளை எப்ப‌வும் நினைவுல் இருக்கும்............. அடுத்த‌வைய‌ பார்த்து இந்த‌ 14ஆண்டில் என்ன‌த்தை கிழிச்சிங்க‌ள் என்று கேக்கிறீங்க‌ள்""""நீங்க‌ள் இந்த‌ 14 ஆண்டுக‌ளில்  கிழிச்ச‌தை எழுதினால் வாசிக்க‌ ஆர்வ‌மாய் இருக்கு நீங்க‌ள் கிழிச்ச‌தை முத‌ல் எழுதுங்கோ......................இந்த‌ 14ஆண்டில் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கிழிச்ச‌தை ஒவ்வொன்டாய் எழுதுவின‌ம்..........நான் கிழிச்ச‌தையும் பிற‌க்கு எழுதுறேன் ...............என் விவாத‌ம் த‌லைவ‌ருக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் செய்து விட்டு த‌லைவ‌ர் மாவீர‌ர் க‌ண்ட‌ க‌ன‌வை நிறைவேற்றுவ‌து..............அண்ண‌ன் சீமான் த‌மிழீழ‌த்தை மீட்டு த‌ருவார் அது தான் அவ‌ருக்கு பின்னால் நான் போகிறேன் என்ர‌ ரேஞ்சில் எழுதி இருக்கிறீங்க‌ள்.............நான் 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு க‌ற்றுக் கொண்ட‌ பாட‌ம் த‌மிழ் நாட்டில் எம‌க்காக‌ ஒரு க‌ட்சி வ‌லுவாய் இருக்க‌னும்............பின்னைய‌ கால‌ங்க‌ளில் அர‌சிய‌ல் ரீதியா எம‌க்காக‌ குர‌ல் கொடுப்பின‌ம்.........வைக்கோ திருமாள‌வ‌ன் இவ‌ர்க‌ளை ந‌ம்பி ஏம‌ந்த‌ன் விலைவு தான் ப‌ல‌ர் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ கார‌ண‌ம்.............

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

பல மணி நேரத்தின் பின் YouTube நிர்வாகம், இந்த போலி காணொளியை நீக்கியுள்ளது. 

தமது இலக்கு நிறைவேறாதது மட்டுமன்றி, கேலிக்கிடமாக போனதால் இவ் காணொளியை தயாரித்தவர்களே நீக்கச் சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன்.

சொறீலங்கா.. ஹிந்தியா கேட்டிருக்கலாம்.

உள்ள உதவாக்கரை வீடியோக்கள் எல்லாம் யு ரி யுப்பில் அதன் சொற்படிக்கு கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் போது.. இது மட்டும் இவ்வளவு விரைவாக காணாமல் போயிருக்கு என்றால்.. கூகிள் ஆண்டவருக்கே வெளிச்சம். 

2 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் எழுதும் ஆண்டில் என‌க்கு த‌லைவ‌ரையும் தெரியாது எம் போராட்ட‌த்தையும் தெரியாது இது தான் நித‌ர்ச‌ன‌ உண்னை...........இந்த‌ திரியில் எழுதும் குசா தாத்தாவுக்கு என்னை ப‌ற்றி முழுதாக‌ தெரியும்........ம‌ற்ற‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ளுட‌ன் ஒப்பிட்டால் நான் 31.35 வ‌ய‌தில் சிறிய‌வ‌ன்........என‌க்கு எங்க‌ட‌ போராட்ட‌ம் ப‌ற்றிய‌ புரித‌ல் 1991க்கு பிற‌க்கு தான் கொஞ்ச‌ம் தெரிய‌ வ‌ந்த‌து.............உங்க‌ட‌ நினைப்பு நான் வ‌ய‌தில் பழம் தின்று கொட்டையும் போட்ட ஆள் போல‌...........பின்னைய‌ கால‌ங்க‌ளில் தான் வ‌ர‌லாற்றை ப‌டிக்க‌ தொட‌ங்கி நான்..............இந்திய‌ன் ஆமி பிர‌ச்ச‌னையின் போது த‌லைவ‌ர் கிண‌ற்றுக்குள் இற‌ங்க‌ இன‌ துரோகி க‌ருணா காப்பாற்றின‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் எல்லாம் புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ பிற‌க்கு ப‌டிச்சு தெரிந்து கொண்ட‌ விடைய‌ம்...............சிறுவ‌ய‌திலே இது தான் கொள்கை என்றால் ம‌ர‌ணிக்கும் வ‌ரை அதே கொள்கையுட‌ன் தான் இருப்பேன்...........த‌லைவ‌ரை அந்த‌க் கால‌த்தில் இந்தியாவும் ச‌தி மூல‌ம் கொல்ல‌ முய‌ன்று அதில் இருந்தும் த‌ப்பின‌ வ‌ர‌லாறுக‌ள் தெரியும்..........தெரிய‌ வேண்டிய‌துக‌ளை எப்ப‌வும் நினைவுல் இருக்கும்............. அடுத்த‌வைய‌ பார்த்து இந்த‌ 14ஆண்டில் என்ன‌த்தை கிழிச்சிங்க‌ள் என்று கேக்கிறீங்க‌ள்""""நீங்க‌ள் இந்த‌ 14 ஆண்டுக‌ளில்  கிழிச்ச‌தை எழுதினால் வாசிக்க‌ ஆர்வ‌மாய் இருக்கு நீங்க‌ள் கிழிச்ச‌தை முத‌ல் எழுதுங்கோ......................இந்த‌ 14ஆண்டில் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கிழிச்ச‌தை ஒவ்வொன்டாய் எழுதுவின‌ம்..........நான் கிழிச்ச‌தையும் பிற‌க்கு எழுதுறேன் ...............என் விவாத‌ம் த‌லைவ‌ருக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் செய்து விட்டு த‌லைவ‌ர் மாவீர‌ர் க‌ண்ட‌ க‌ன‌வை நிறைவேற்றுவ‌து..............அண்ண‌ன் சீமான் த‌மிழீழ‌த்தை மீட்டு த‌ருவார் அது தான் அவ‌ருக்கு பின்னால் நான் போகிறேன் என்ர‌ ரேஞ்சில் எழுதி இருக்கிறீங்க‌ள்.............நான் 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு க‌ற்றுக் கொண்ட‌ பாட‌ம் த‌மிழ் நாட்டில் எம‌க்காக‌ ஒரு க‌ட்சி வ‌லுவாய் இருக்க‌னும்............பின்னைய‌ கால‌ங்க‌ளில் அர‌சிய‌ல் ரீதியா எம‌க்காக‌ குர‌ல் கொடுப்பின‌ம்.........வைக்கோ திருமாள‌வ‌ன் இவ‌ர்க‌ளை ந‌ம்பி ஏம‌ந்த‌ன் விலைவு தான் ப‌ல‌ர் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ கார‌ண‌ம்.............

உங்கடை கதையப் பார்த்தால்.. நாங்கள் எல்லாம்.. லெனின்.. சேகுவரா காலத்து ஆக்கள் போலவும்.. அவர்கள் காலத்தில் கூட வாழ்ந்த ஆக்கள் போலவும் எல்லோ இருக்கு.

வரலாறை உள்ளபடி அறியும் ஆர்வம் ஒன்றே எம்மை இயக்கிக் கொண்டிருக்குது. வயதோ.. வசதியோ.. தனிப்பட்ட தேவைகளோ அல்ல. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nedukkalapoovan said:

நிறுவத் துடிப்பவர்கள்.. கடந்த 14 ஆண்டுகளாக என்னத்தை வெட்டிக்கிழிச்சிச்சினம்..??!

பொய்களை புரட்டுகளை தாண்டி வந்த நாமே பொய்க்காக.. மெய்யை மறப்பது மழுங்கடிப்பது நியாயமில்லை.

1987 இல் கொல்லப்பட்ட பிரபாகரன்.. இன்னும் பல பேருக்கு.. கொல்லப்பட்டவராகவே தான் இருக்கிறார்.

ஏன் புட்டினை கூட கொன்று.. இப்போ.. நிழலை உலாவிட்டிருக்காங்களாம்.. இப்படி ஒரு கதை மேற்குலகிடம் இருக்குது.

பொய்யை பொய்யென நிறுவ முனைந்து காலத்தை வீணடிப்பதிலும் மெய்யின் பால்.. நிஜத் தேவைகளை நிறைவு செய்ய அந்தக் காலத்தைப் பாவிப்பதே புத்திசாலித்தனம்.

செயற்கை நுண்ணறிவையும் எமது விடுதலைக்காகப் பயன்படுத்த முடியும் என்றால் அதைச் செய்ய தயங்கத் தேவையில்லை. ஏனெனில்.. உலக வல்லரசுகளே அதை செய்ய எப்பவோ ஆரம்பித்துவிட்டன. 

தலைவர் பிரபாகரனும் குடும்பத்தினரும் நிஜ வாழ்க்கை வாழ்ந்தால் மிக்க சந்தோசம்.எங்கிருந்தாலும்  சந்தோசமாக வாழ்க.
ஆனால் இவர்கள் திரும்பி அரசியல் அல்லது ஆயுத போராட்டத்திற்கு வந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என நினைக்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

பல மணி நேரத்தின் பின் YouTube நிர்வாகம், இந்த போலி காணொளியை நீக்கியுள்ளது. 

தமது இலக்கு நிறைவேறாதது மட்டுமன்றி, கேலிக்கிடமாக போனதால் இவ் காணொளியை தயாரித்தவர்களே நீக்கச் சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன்.

எதற்கும் ஊடக அடியாள் சேரமானின் துணையுடன் வந்த கொள்ளை பரப்புரையை யாழை வாசிப்பவர்கள் பாருங்கள். இதில் உள்ளவை எந்த எந்த ஆண்டு மாவீரர் உரைகளில் இருந்து உருவியதென்று கண்டுபிடித்துப் போட்டாலும் நல்லது..

:::::::::::::::::::

 

எனது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, 

 
இன்று மாவீரர் நாள். 
 
தமிழீழம் என்ற அதியுன்னத இலட்சியத்திற்காகத் தமதுஇன்னுயிரை ஈகம் செய்த எமது காவல் தெய்வங்களை எமதுஇதயக் கோவில்களில் நாம் பூசிக்கும் இத் திருநாளில்உங்கள் முன் வெளிப்படுவதற்குக் காலம் எனக்கு வாய்ப்புஅளித்திருப்பதை மிகப்பெரும் பேறாகவே கருதுகின்றேன்.
 
இப்படி ஒரு சந்தர்ப்பம் எனது வாழ்நாளில் ஏற்படும் என்று நான் நினைத்திருக்கவில்லை. எத்தனையே ஆபத்துகள், நெருக்கடிகள், சவால்கள், துரோகங்களைக் கடந்தே இன்று உங்கள் முன் நான் வெளிப்படுகின்றேன். அதே போல்என்றோ ஒரு நாள் தமிழீழத் தாயகம் திரும்பி, அங்கு எமதுமக்களோடு கூட இருந்து அவர்களுக்காகப் பணிசெய்வதற்குக் காலம் வாய்ப்பளிக்கும் என்ற அசையாதநம்பிக்கை எனக்கு உண்டு.
 
எனது அன்பார்ந்த மக்களே, 
 
முழு உலகமுமே வியப்படையும் வகையில் களமுனைகளில்சாதனை படைத்தவர்கள் எமது மாவீரர்கள். தனித்து நின்றுஎம்மோடு போர்புரியத் திராணியற்ற சிங்கள அரசு, சக்திவாய்ந்த நாடுகளைத் தன் பக்கம் வளைத்தது. தோல்வியின்விளிம்பில் நின்ற தருணங்களில் எல்லாம் அந்நியசக்திகளிடமும், சக்திவாய்ந்த நாடுகளிடமும் மண்டியிட்டுயாசகம் புரிந்தது. எமது தேச சுதந்திர இயக்கத்தின் மீதுஉலகின் பல நாடுகளில் தடைகள் விதிக்கப்பட்டு எமதுவளங்கள் முடக்கப்பட்டன. தமிழீழ தாயகத்திற்கானவிநியோகப் பாதைகள் மூடப்பட்டன. சிங்களப் படைஇயந்திரத்தை எமது தேச சுதந்திர இயக்கம்பலவீனப்படுத்திய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்சக்திவாய்ந்த நாடுகள் தலையிட்டு சிங்களப் படைஇயந்திரத்திற்கு உயிர்ப்பூட்டின. உலகின் ஒரு மூலையில்தனித்து நின்று, எமது மக்களின் ஆதரவில் மட்டும் தங்கிநின்று போராடிய எமது தேச விடுதலை இயக்கத்தின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனித்துப் போனதற்குஇதுவே காரணமாகும்.
 
ஆனாலும் அரசியல் சுதந்திரத்திற்கான எமது போராட்டம்முற்றுப் பெறவில்லை. தமிழீழம் என்ற அரசியல் வேணவாகருக் கொள்வதற்குக் காரணமாக இருந்த புறநிலைசூழல்கள் இன்றும் கூட அப்படியே தான் இருக்கின்றன. தமது தாயக பூமியில் தமது கலாச்சார பண்பாட்டுவிழுமியங்களையோ, தத்தமது சமய வாழ்வையோ, மொழிப் பாதுகாப்பையோ பேணிப் பாதுகாக்க முடியாத அளவிற்குப்பண்பாட்டுச் சீர்கேடுகளை ஊக்குவித்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் பாகுபாடுகளை மேற்கொள்வதோடு, சிங்கள-பௌத்த மயப்படுத்தல் நடவடிக்கைகளை சிங்களஅரசு முழு மூச்சுடன் முன்னெடுத்து வருகிறது. 
 
இவை போதாதென்று ஈழத்தீவில் முற்று முழுதாகச் சிங்களப்படையாட்சிக்கு உட்பட்ட ஒரேயொரு மாநிலமாகத் தமிழீழதாயகத்தைச் சிங்களம் மாற்றியமைத்துள்ளது. அனைத்துசுதந்திரங்களும், மனித உரிமைகளும் மறுக்கப்பட்டதேசமாகத் தமிழீழத் தேசம் திகழ்கின்றது. சட்ட ஆட்சிமறுக்கப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச்சட்டம் என எந்நேரமும் இராணுவப் பேயாட்சியைச் சிங்களம் திணித்துள்ளது. குரல்வளை நசுக்கப்பட்ட ஒரு மக்களாகவேஈழத்தீவில் எமது மக்கள் வாழ்கிறார்கள்.
 
மறுபுறத்தில் எமது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தால், அரசியல் வழிகளில் எமது மக்களின் அபிலாசைகளைநிறைவேற்றலாம் எனப் போர் நிகழ்ந்த காலப்பகுதியில்ஆசைவார்த்தை கூறி, நம்பிக்கையூட்டிய
உலகின் சக்திவாய்ந்த நாடுகள் இற்றை வரைக்கும் எமதுமக்களுக்கு ஒரு காத்திரமான அரசியல் தீர்வைத் தானும்வழங்கவில்லை. ஈழத்தீவில் தமிழ் மக்களுக்குஇழைக்கப்பட்டது போர்க் குற்றம் என்றும், மானிடத்திற்குஎதிரான குற்றச்செயல் என்றும் கடந்த பதினான்குஆண்டுகளில் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்ட ஐ.நா. மன்றமும், இவை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றிய சக்தி வாய்ந்தநாடுகளும், இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட தமிழீழத்தேசத்திற்கு இற்றை வரைக்கும் ஒரு பரிகார நீதியைத்தானும் பெற்றுத் தரவில்லை.
 
இவை தான் அரசியல் சுதந்திரத்திற்கான எமது போராட்டம்தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணிகளாகும். சமஸ்டி அரசு கோரி 1950களில் எழுச்சி கொண்ட எமதுதேசத்தின் அகிம்சைப் போராட்டம், 1960களில் ஆயுத வலுக்கொண்டு சிங்கள அரசால் நசுக்கப்பட்டது. இதன் விளைவாகவே 1970களில் போர்க்குணம் கொண்ட இளையதலைமுறை தோற்றம் பெற்றது. சிங்கள ஆயுதப்படைகளையும், அதன் ஒடுக்குமுறை அரச இயந்திரத்தையும்எதிர்த்து வீரம்செறிந்த ஆயுதப் போராட்டத்தை எமதுஇளைஞர்கள் நிகழ்த்தினார்கள். எமது தேசியத் தலைவரும்எனது தந்தையுமாகிய மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்அவர்களின் வழிநடத்தலில் ஆயிரமாயிரமாய் அணிதிரண்டஎமது இளைஞர்களும், யுவதிகளும் ஈழத்தமிழினம் ஓர்வீறுகொண்ட, மண்டியிடாத வேங்கையினம் என்பதைநிறுவினார்கள். இந்த நிலையை உருவாக்கித் தந்தவர்கள்தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை ஈகம்செய்தமாவீரர்களே. மாவீரர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள்.அந்த மகத்தான, உன்னதமானவர்களை என்றும் எம்மனக்கோவிலில் வைத்துப் பூசிப்போம்.
 
எமது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், எமதுசுதந்திரத்திற்கான, எமது அரசியல் அபிலாசைகளைவென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்போடுஇருப்பதற்கு, எமது தாயகத்திலும், புலம்பெயர்தேசங்களிலும் எமது மக்களும், அரசியல் தலைவர்களும், எமது தேச விடுதலை இயக்கத்தில் பணிபுரிந்தபோராளிகளும், செயற்பாட்டாளர்களுமே காரணம் என்பேன். சுதந்திரத்திற்கான போராட்டம் முனைப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான யதார்த்தசூழமைவில் மக்கள் என்றும், புலிகள் என்றும்ஈழத்தமிழர்களை வேறுபடுத்திப் பார்ப்பது அர்த்தமற்றது. மக்களே புலிகளாகவும், புலிகளே மக்களாகவும் விளங்கும்யதார்த்தம் எமது போராட்டத்தின் பரிமாணமாகும்.
 
ஆனாலும் எமது அரசியல் போராட்டத்தை மேலும்வினைத்திறனுடன் முன்னெடுத்து, எமது அரசியல்உரிமைகளை வென்றெடுக்க வேண்டியவர்களாக நாங்கள்இருக்கின்றோம். கட்சி பேதங்கள், அமைப்புகளுக்கிடையேநிலவும் வேறுபாடுகளைக் கடந்து தமிழீழ தேசத்தின்அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காகவும், இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதிகிட்டுவதற்காகவும் ஒற்றுமையோடும், வினைத்திறனோடும்பயணிக்க வேண்டிய கடப்பாடு தாயகத்திலும், புலம்பெயர்தேசங்களிலும் வாழும் ஒவ்வொரு ஈழத்தமிழர்களுக்கும்உண்டு. கருத்து வேறுபாடுகள் எமக்கிடையே நிலவலாம். ஆனாலும் வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதே தேசத்தின்
அரசியல் உரிமைகள் என்று வரும் போது ஒரே கோட்டின் கீழ்பயணிக்க வேண்டியவர்களாக நாம் எல்லோரும்இருக்கின்றோம். 
 
அதே நேரத்தில் தாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும்எமது மக்களினதும், கடந்த காலங்களில் தம்மையேஅர்ப்பணித்துப் போராடிய முன்னாள் போராளிகளினதும்வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி, அவர்களின் பொருண்மியவாழ்வை மேம்படுத்த வேண்டிய கடப்பாட்டைக்கொண்டவர்களாக எமது தேசத்தின் வளம்கொண்டதரப்பினர் இருக்கின்றார்கள். குறிப்பாக இதற்கானபொறுப்பு புலம்பெயர் தேசங்களில் வாழும்ஈழத்தமிழர்களுக்கு உண்டு. வறுமைக் கோட்டின் கீழ் வாழும்எம் இன உறவுகள் அனைவரையும் பொறுப்பேற்று உதவி புரிந்தால் அந்நியர்களிடம் எமது தேசம் கையேந்தி நிற்கும்நிலை ஏற்படாது.
 
இத்தனை ஆண்டுகளாக எமக்காகத் தொடர்ச்சியாகக்குரலெழுப்பி, பக்கபலமாகத் திகழும் தாய்த் தமிழகஉறவுகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், உலகத் தமிழ்மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எமது இனம் கடந்து இந்தியாவிலும் மற்றும்உலகநாடுகள் எங்கும் எமக்காகக் குரல் கொடுத்துதுணைநிற்கும் உறவுகளின் கரங்களையும் வாஞ்சையோடுபற்றிக்கொள்கிறேன். தமிழீழ தேசத்திற்குப் பக்கபலமாகத்திகழும் தாய்த் தமிழக உறவுகளும், உலகத் தமிழர்களும்எமது மக்களுக்கு உறுதுணையாக நின்று, எமது மக்கள்தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தொடர்ந்தும்நீங்கள் குரல் கொடுப்பீர்கள் என்று எனக்கு அசையாதநம்பிக்கை உண்டு.
 
எனது அன்பார்ந்த மக்களே, 
 
நாம் வரித்துக் கொண்ட இலட்சியமும், இதற்காக எமதுமாவீரர்கள் கொடுத்த விலையும், எமது தேசம் புரிந்தஈகங்களும், சந்தித்த இழப்புகளும் அளப்பரியவை. இவைஒரு நாளும் வீண்போகாது. நெருக்கடி மிகுந்த காலங்களில்எல்லாம் எமக்குத் தூண்களாக நின்றவர்கள் எமதுமக்களாகிய நீங்களே. இலட்சியத்தால் ஒன்றுபட்டமக்களாக எமது விடுதலையை வென்றெடுக்க ஒன்றுசேரவேண்டுமென்று அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றேன். 
 
மாற்றம் கண்டுள்ள உலக ஒழுங்கிற்கு ஏற்ப, அரசியல்வழியில், அறநெறி நின்று நாம் தொடர்ந்தும் போராடுவோம். எல்லா வகையான போராட்டங்களிலும் அரசியல்போராட்டம் மிகவும் கடினமானது. இவ் வகையானபோராட்டத்திற்குப் பொறுமையும், நம்பிக்கையும், இலட்சியஉறுதியும் அடிப்படையானது. இதனை நான் புரிந்துகொள்ளாமல் இல்லை. 
 
தமிழீழத் தனியரசே எமது தேசத்தின் இறைமையையும், தன்னாட்சி உரிமையையும் உறுதி செய்யும் என்பது எனதுஅசையாத நம்பிக்கை. இதுவே எமது தேசியத் தலைவரின்நிலைப்பாடும் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். எமதுமக்கள் தமது தாயக பூமியில் அவர்களது மொழியையும், பண்பாட்டையும், தத்தமது சமய வாழ்வையும், பொருண்மியவளங்களையும் பேணிப் பாதுகாத்து, மேம்படுத்தக் கூடியவகையிலும், சனநாயக விழுமியங்களுக்கு இசைவாகவும், தனிமனித சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும்பேணக் கூடிய விதத்திலும், சட்ட ஆட்சி கொண்டமக்களாட்சியாகத் "தமிழீழம்" என்ற தனியரசுஅமைவதற்கான புறச்சூழலை காலம் ஒரு நாள்கட்டவிழ்க்கும் என்ற திடமான நம்பிக்கை எனக்கு உண்டு. 
 
அதேநேரத்தில் தமிழீழ தாயகத்தில், தன்னாட்சி உரிமையின்அடிப்படையில் ஒரு தேசமாகத் தமிழீழ மக்கள் வாழ்வதற்குவழிசமைக்கக் கூடிய வகையில் உலகம் முன்வைக்கக்கூடியஅரசியல் தீர்வுகளைப் பரிசீலித்துப் பார்ப்பதற்கு எமது தேசம்தயாராக இருக்க வேண்டும் என்பதை நான் உணராமல்இல்லை.
 
சிங்கள மக்களுக்கும் இந்நேரத்தில் ஒரு விடயத்தைக்கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாம் சிங்கள மக்களுக்குஎன்றுமே எதிரானவர்கள் அல்ல. நீங்கள் எங்களுக்குஎதிரிகளும் அல்ல. சிங்கள மக்களுக்கு எதிராக நாம்செயற்பட்டதுமில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். சிங்களஇனவெறிகொண்ட அரசு இயந்திரத்தாலும் சுயநலம்கொண்ட சிங்கள அரசியல்வாதிகளினாலும் திட்டமிட்டவகையில் பொய்யான கருத்துக்கள் விதைக்கப்பட்டுஅப்பாவிச் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்குஎதிரானவர்களாகத் தூண்டிவிடப்பட்டார்கள் என்பதையும்நான் அறிவேன். எனவே எம்மினத்தின் தார்மீகஉரிமைகளையும் எமது மக்களின் உணர்வுகளையும், எமதுஅறத்தின்பாற்பட்ட போராட்டத்தையும் ஏற்றுக்கொள்வீர்கள்என்று நம்புகிறேன்.
 
எனது அன்பார்ந்த மக்களே, 
 
எமது தேசியத் தலைவர் குறிப்பிட்டது போன்று “எமதுபாதைகள் மாறலாம், ஆனால் ஒரு போதும் எமது இலட்சியம்மாறப் போவதில்லை.” சத்தியத்தின் சாட்சியாக நின்று எமதுமாவீரர்களின் தியாகமும், மாண்டு போன மக்களின்ஈகங்களும் எமது தேசத்திற்கு வழிகாட்டும். அந்தச்சத்தியத்தின் வழியில் சென்று, என்றோ ஒரு நாள் நாம் எமதுஇலட்சியத்தை அடைந்தே தீருவோம். 

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

பல மணி நேரத்தின் பின் YouTube நிர்வாகம், இந்த போலி காணொளியை நீக்கியுள்ளது. 

தமது இலக்கு நிறைவேறாதது மட்டுமன்றி, கேலிக்கிடமாக போனதால் இவ் காணொளியை தயாரித்தவர்களே நீக்கச் சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன்.

எருமை கூட்டம் இவ்வளவு நேரத்துக்கு பிறகுதான் நடவடிக்கை .

எங்களின் நியாயமான காணொளியை நீக்குக்குபவர்கள் என்று நடு நிலைமை என்றால் தூக்குங்கள்  இல்லை என்றால் உங்கள் காணொளி அனத்துமே சந்தேகமானவை என்ற மெயில் வேலை செய்கிறது போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

தலைவர் பிரபாகரனும் குடும்பத்தினரும் நிஜ வாழ்க்கை வாழ்ந்தால் மிக்க சந்தோசம்.எங்கிருந்தாலும்  சந்தோசமாக வாழ்க.
ஆனால் இவர்கள் திரும்பி அரசியல் அல்லது ஆயுத போராட்டத்திற்கு வந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என நினைக்கின்றீர்களா?

நிச்சமாக.. அவர்கள் உயிரோடு இருந்தாலோ இல்லையோ.. மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு வரமாட்டார்கள். ஊக்குவிக்கவும் மாட்டார்கள். அதற்கான பூகோள ஏதுநிலைகளும் இல்லை. அரசியலில் குதிக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில்.. தலைவர் போராட்ட களத்தில் இருந்த போதே தேடி வந்த பதவிகளை உதறித்தள்ளிவிட்டு கொண்ட இலட்சியத்துகாக போராடிக் கொண்டிருந்தவர். 

தலைவர் இருக்கிறாரோ இல்லையோ.. அவர் சுமந்த இலட்சியம் வாழ்ந்து கொண்டு தான் இருக்குது. அது.. தலைவரின் அயலவரான..தாயகத்தில் வாழும்.. மாவீரர் ஒருவரின் அம்மாவின் கருத்தில் கூட தொனித்தது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்+
25 minutes ago, குமாரசாமி said:

எல்லாவற்றையும் சந்தேகிக்கச் சொல்லி சிறுவயதிலிருந்தே எங்களுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள், ஆனால் சிலவற்றை சந்தேகிக்கவே தேவையில்லை தூக்கி போட்டிட்டு மற்ற வேலையைப் பார்க்கலாம்... 

தலைவர் மாமா சொன்னவர், தேசியத்தின்ர விடையத்திலை நிறையவே எல்லோரையும் சந்தேகியுங்கள் என்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

"தங்கை துவாரகா இந்தியாவின் உறுதுணையுடன்  களத்தில் நிற்பாள்"
     
    -காசியானத்தன்

 

“இந்தியாவின் உறுதுணையுடன்”’ இந்த ஒற்றை சொல்லிலேயே காசி உண்மையை கக்கிவிட்டார்..

 இந்தியாவும் புலம் பெயர் தீய சக்திகளும் சேர்ந்து தமிழர்களையும் மாவீரத்தையும் களங்கப்படுத்த உதயமானதுதான் இந்த துவாராக ஒப்பிறேசன…  ஆனால் அது தமிழ்நாடு ஈழம் புலம்பெயர் தேசம் என்று ஒட்டு மொத்த தமிழ் மக்களாலும் யாரும் எதிர்பாராத அளவுக்கு எதிர்ப்புடனும் கேலி கிண்டலாகவும் கடந்து செல்கிறது..

அதேவேளை மறுவளத்தில் மாவீரர்களையும் போராட்டத்தையும் மனதில் சுமக்கும் லட்சோப லட்சம் சாதாரண பொதுமக்கள் இம்முறை வழமைக்கு மாறாக தாமாக தமிழர் தேசமெங்கும் அதிகளவாக கூடி மாவீரத்தை போற்றி உள்ளனர்…

இது தமிழர்களின் தணியாத வேட்கையினை உலகுக்கு பறை சாற்றுவதாக உள்ளது.. இவளவு உயிர் போயும் விடுதலை இல்லையே என சில வேடீக்கை மனிதருள்ள பூமியின் நூறு வருடங்களைக் கடந்து விடுதலை அடைந்த அடையப் போராடும் மனித குலம் பற்றிய சரிதத்தை எடுத்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது… அந்தத் தேவையின் ஆணிவேரில் தழைத்த பூஞ்செடிகளே இன்று துயிலுமில்லம் தோறும் ஏற்றப்பட்ட பல்லாயிரம் அக்னிச் சுடர்கள் என்பதை உலகறியும்..

இத்தகு தருணத்தில் எம்மைக் கொன்றொழித்த இந்திய மத்திய அரசும் அதன் ஒத்தோடிகள் செய்யும் துரோகமும் இனியும் எடுபடாது என்பதை இம் மாவீரர்தினம் உணர்த்தியுள்ளது இன்னும் உணர்த்தும்…

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

நாங்கள் தலைவரை சாகடிச்சு அவர் முன்னெடுத்த மக்களுக்கான இலட்சியங்களை கொன்றொழித்து எதிரிகளுக்கு துணை போக..  எப்போதும் விரும்பியதில்லை. 

சாத்திரியார் தலைவருக்கு படையல் வைச்ச போது.. அதை எதிர்த்ததில் தாங்களும் அடக்கம்.. நாங்களும் அடக்கம். 

சரி இப்ப உங்களுக்கு தலைவரும் குடும்பமும் வீரச்சாவடையவில்லை என்பதுதான் உண்மை.. அதன் மூலம்தான் மக்களுக்கான இலட்சியங்களை கொன்றொழிக்க முடியாது.. இல்லையா..

அப்படி என்றால் நீங்களும் உங்களைபோன்ற சிந்தனையில் இருப்பவர்களும் என்ன செய்திருக்கவேண்டும்..?

துவாரக இருக்கிறார் ஆனால் இந்த பவுடர் டப்பா துவாரகா இல்லை என்று சொல்லி இருக்கவேண்டும்..

ஒரு பவுடர் டப்பாவை வைத்து ஒரு குழு செய்யும் பித்தலாட்டத்தை எதிர்த்து நிஜமான துவாரக வருவார் என்று எழுதி இருக்கவேண்டும்..

ஆனால் இந்த கூட்டம் துவாரகா என்ற அடையாளத்தையே காமடி ஆக்குவதை மெளனமாக கடந்து சென்றுகொண்டு துவாராக இருக்கிறார் அவர்தான் இவர் என்பது இந்த வீடியோ தயாரித்த போட்டோ சொப் குரூப்புக்கு ஆதரவு கொடுப்பதுதான..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சரி இப்ப உங்களுக்கு தலைவரும் குடும்பமும் வீரச்சாவடையவில்லை என்பதுதான் உண்மை.. அதன் மூலம்தான் மக்களுக்கான இலட்சியங்களை கொன்றொழிக்க முடியாது.. இல்லையா..

அப்படி என்றால் நீங்களும் உங்களைபோன்ற சிந்தனையில் இருப்பவர்களும் என்ன செய்திருக்கவேண்டும்..?

துவாரக இருக்கிறார் ஆனால் இந்த பவுடர் டப்பா துவாரகா இல்லை என்று சொல்லி இருக்கவேண்டும்..

ஒரு பவுடர் டப்பாவை வைத்து ஒரு குழு செய்யும் பித்தலாட்டத்தை எதிர்த்து நிஜமான துவாரக வருவார் என்று எழுதி இருக்கவேண்டும்..

ஆனால் இந்த கூட்டம் துவாரகா என்ற அடையாளத்தையே காமடி ஆக்குவதை மெளனமாக கடந்து சென்றுகொண்டு துவாராக இருக்கிறார் அவர்தான் இவர் என்பது இந்த வீடியோ தயாரித்த போட்டோ சொப் குரூப்புக்கு ஆதரவு கொடுப்பதுதான..

காட்டுக்குள்ள‌ ப‌டுத்து இருந்த‌ வீர‌ப்ப‌னுக்கு ஈழ‌ ந‌ட‌ப்பு உல‌க‌ ந‌ட‌ப்பு அதிக‌ம் தெரியும் அதை வீர‌ப்ப‌ன் ந‌க்கீர‌ன் கோபாலு மூலம் உல‌கிற்க்கு காட்டினார்...........இணைய‌த‌ள‌த்தில் கிறுக்கி விளையாடுவ‌தையே தொழிலா கொண்ட‌ ஒருவ‌ருக்கு மேக்க‌ப் மாமியின் விவ‌கார‌ம்............உத‌வி செய்யாட்டியும் உவ‌த்திர‌ம் செய்ய‌க் கூடாது😡...............

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

பல மணி நேரத்தின் பின் YouTube நிர்வாகம், இந்த போலி காணொளியை நீக்கியுள்ளது. 

தமது இலக்கு நிறைவேறாதது மட்டுமன்றி, கேலிக்கிடமாக போனதால் இவ் காணொளியை தயாரித்தவர்களே நீக்கச் சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன்.

YouTube நிர்வாகம்...அவனே ஒத்துக்கிட்டான்...போலி என்கிறவிடயத்துக்கு நாம் ஏன் குத்தி முறிவான்...வாருங்கள் நம்மினமே ...ஒற்றுமையாய் எமது விடுதலைப் பயணத்தை தொடர்வோம்...எல்லா நாட்டிலுமே மாவீரர்நாள் நிறைவுக்கு வருகிறது....நாம் என்னவென்றால் பொய்யான ஒன்றுக்கு  விவாதம் செய்கின்றோம்....வாருங்கள் ஓன்றாய் பயணிப்போம்..

Edited by alvayan
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

அடேய் RAW அப்பிரெசெண்டுகளா,

என்னடா இப்படி பண்ணி வச்சிருக்கீங்க?

சரி சரி…

போய் அடுத்த படத்தையாவது ஒழுங்கா, லைட்டிங், லொக்கேசன், கேமரா ஆங்கிள் எல்லாம் சரியா பண்ணி எடுங்கடா முட்டா பசங்களா.

அதிலும் மேக்கப், வசன உச்சரிப்பு ரொம்ப முக்கியம். சரியா?

அடுத்து என்ன வா?

இனி இதை சனம் நம்பாது….

அடுத்த கரும்புலிகள் நாளுக்கு பொட்டம்மான் வாறார் எண்டு ஏதாவதை உருட்டிப்பாருங்க.

ஸ்கோர் விபரம். 

ஈழத்தமிழர் 5 : RAW 0

பிகு

இந்த உணர்வு பூர்வமான நாளில் இலங்கையில் கைவிட்டுப்போகும் தனது கேந்திர நலனை தக்க வைக்க, யாரோ ஒரு பெண்ணை டி சேர்ட்டுக்கு மேல் சேலையை சுற்றி - இதுதான் எமது தலைவரின் வளர்ப்பு என சொன்னால் நம்பும் அளவில் நாம் இல்லை. ஆனால் இதையிட்டு சண்டை பிடித்து, மாவீரராய், தியாகிகளாய் போய் விட்ட எமது இனதின் முதல் குடும்பத்தை நாமே சிலாகிக்கத்தேவையில்லை.

வட்டா

🔐 ஐ பிடித்து ஆட்ட வேண்டாம்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

அடுத்த கரும்புலிகள் நாளுக்கு பொட்டம்மான் வாறார் எண்டு ஏதாவதை உருட்டிப்பாருங்க.

 

பொட்டம்மான் இல்லை.. இயேசு கிறிஸ்த்துவாம்…

சண்டை இஸ்ரேலுக்கும் பாலஸ்த்தினுக்கும் நடக்குரதால இண்டர் நாசனல் லெவல்ல பிளான் போட்டிருக்கிறாங்கள்.. 

வாற கிறிஸ்மஸ் ஓட காசி லோக்கல் பிரச்சினைக்கு எல்லாம் தலையிடாது.. ஒன்லி இண்டெர்ன்நெஷனல் ப்ராப்ளம்ஸ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.