Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, இசைக்கலைஞன் said:

துவாரகா திரைப்படத்துக்கு blue சட்டை மாறனின் review வந்துவிட்டதா?! 😂

இங்க பாருங்கோவன், துவாரகா, கண பழைய உறவுகளை இறக்கி விட்டுட்டா... 🤣🤣
 

அப்ப, ஆள் வந்தது நல்லதுதானே 🥰 😍

Edited by Nathamuni

  • Replies 300
  • Views 38.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

    விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ? வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ? மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே! அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    "தங்கை துவாரகா இந்தியாவின் உறுதுணையுடன்  களத்தில் நிற்பாள்"           -காசியானத்தன்   “இந்தியாவின் உறுதுணையுடன்”’ இந்த ஒற்றை சொல்லிலேயே காசி உண்மையை கக்கிவிட்டார்..  இந்தியாவும் புல

  • * Making of the "Thuvaraka"? உண்மையாக அவரின் மகளா ? அவர்கள் சொன்னது உண்மை தானா? நீங்கள் நம்புகிறீர்களா ? இவை தான் இன்று என்னிடம் பலரும் முன்வைத்த கேள்விகள். இதுவே, இன்று தாயகத்திலும், தமிழர்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

இங்க பாருங்கோவன், துவாரகா, கண பழைய உறவுகளை இறக்கி விட்டுட்டா... 🤣🤣
 

அப்ப, ஆள் வந்தது நல்லதுதானே 🥰 😍

இந்த‌ வ‌ருட‌ம் த‌னி ம‌ட‌ல் போட்டேன் ட‌ங்கு அண்ணாக்கு ப‌தில‌ காணும்......... இப்ப‌ வ‌ந்து விட்டார்..........தொட‌ர்ந்து இணைந்து இருந்தால் ம‌கிழ்ச்சி 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

துவாரகா திரைப்படத்துக்கு blue சட்டை மாறனின் review வந்துவிட்டதா?! 😂

இசையண்ணா😆👋

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இசைக்கலைஞன் said:

துவாரகா திரைப்படத்துக்கு blue சட்டை மாறனின் review வந்துவிட்டதா?! 😂

அது வருதோ வருகிறது இல்லையோ உங்களை கண்டதில் சந்தோசம் .

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கண்ட மாவீரர் தின உரையை நானும் கேட்டேன். நீங்கள் விசயம் அறிந்தவர்கள் தான் எனக்கு அறிவூட்ட வேண்டும். 

நேற்று ஓர் பாடல் கேட்டேன். பாடுபவரும் ஒரு தலைவரின் புதல்விதான். இவர் ஏதாவது திட்டங்கள் முன்னெடுத்தால் பங்களிப்பது பற்றி பரிசீலிக்கலாம்.

https://youtu.be/r-Nw7HbaeWY?si=GJOVTNgjYzdhDaHD

தலைவர் தமையன் புதல்வனின் பேட்டி அவர் கதைத்த விதம் மனதை ஈர்த்துள்ளது. எவ்வளவு பொறுப்பாக, பணிவுடன், அழகு தமிழில் பேசுகின்றார்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

* Making of the "Thuvaraka"?

உண்மையாக அவரின் மகளா ? அவர்கள் சொன்னது உண்மை தானா? நீங்கள் நம்புகிறீர்களா ? இவை தான் இன்று என்னிடம் பலரும் முன்வைத்த கேள்விகள்.

இதுவே, இன்று தாயகத்திலும், தமிழர்கள் வாழும் நாடுகளிலும் பிரதான பேசுபொருள். தமிழர்கள் மத்தியில் சமூகவலைத்தளப் பதிவுகளையும் இன்று ஆக்கிரமித்த பேசுபொருளும் இதுவே.

என்னைப் பொறுத்தவரையில், இவ்வாறான கேள்விகள் மக்களிடம் உலாவருவதே நம் சமூகத்தில் அரசியல் தெளிவின்மையின் வெளிப்பாடே. யாரும் எப்பொழுதும் நம்மை இலகுவில் இயக்கிவிடலாம் அல்லது குழப்பிவிடலாம் என்பதற்கான சான்றுகளே இவை.

இன்னொருவிதத்தில் கூறுவதானால், முள்ளிவாய்க்களுக்குப் பின்னர் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு சார்ந்த விடயங்களில் நாம் மிகவும் பலவீனப்பட்ட சமூகமாக உருவெடுத்துள்ளோம் என்பது நம்மைக்  குழப்பிவிட நினைப்பவர்களுக்குக் கிடைத்த பெரு வெற்றி என்றே கூறலாம்.

ஆனால், வேடிக்கை என்னவெனில், ஈழத்தமிழர்களின் அரசியலைக் கையாள நினைக்கும் சக்திகள், தாமும் குழம்பி, நம்மையும் குழப்புகிறார்கள் என்பதே. ஆனால், இது  இன்று நேற்றல்ல, ஈழத்தைக் கையாள முற்பட்ட காலம் முதல் இவ்வாறுதான் தீர்க்கதரிசனம் அற்றவகையில் Trial and Error போன்று பரீட்சார்த்த முனைப்புகளையே முன்னெடுக்கிறது அத்தரப்பு.

ஈற்றில் 2009 இல் ஒரு தலைமைத்துவத்தை, பூண்டோடு அழிப்பதன் ஊடாக அனைத்தையும் மீளச்சரிசெய்துவிடலாம் (RESET) என்று கணக்குப்போட்டது. ஆனால், 14 ஆண்டுகள் கடந்தும் அந்த சக்தி,  தான் விரும்பிய இலக்கை அடையவில்லை என்பதை இன்று சிறுபிள்ளைத்தனமாக ஆடிய வாரிசு உருவாக்க விளையாட்டு அமைந்துவிட்டது.

ஆனால், ஒன்றை அவர்கள் புரிந்துகொண்டார்கள், அழிக்கப்பட்ட தலைமையின் வழிவந்தவர்கள் அல்லது வாரிசுகளைத் தவிர ஈழத்தமிழர்கள் எந்தத் தலைமைகளையும்  நம்பமாட்டார்கள் என்பதே. இந்நிலை, கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் போன்றது.

அதன் விளைவுதான், தம்மிடம் இருந்த அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்தி, தலைவர் வருகிறார்....அவரின் மகள் வருகிறார்....என்ற நம்பிக்கையூட்டல்களை தமிழர்களிடம் விதைக்க முற்பட்டமை. இதற்காக தமது மேற்பார்வையில் இருந்த, தமிழ்த் தேசியவாதிகளைப் பேசவைத்து அவர்களின் தனிமனித நம்பகத்தன்மைகளை தனக்கான ஆயுதமாகப் பயன்படுத்தினர்.

எனினும், அவ்வாறான முயற்சிகள் சலசலப்புகளைக் கடந்து போதிய பெறுபேறுகளை அறுவடைசெய்யாத நிலையில், இன்று தாம் விதைத்த பொய்கள் உண்மை என்று நிரூபிக்க ஒரு 'பொய்மானை' மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளனர்.

உண்மையில் இது மிகப்பெரிய International Operation. தமிழ்த்தேசிய வாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட அல்லது தம்மை அவ்வாறு இனம்காட்டிக்கொண்ட பலர், குறித்த செயற்திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிநபர்கள், செயற்பாட்டுத்தளத்தில் பயணிப்போர், ஊடகங்கள் என்று பல தளங்களில் உள்ளவர்களும் உள்வாங்கப்பட்டு, நம்பிக்கையூட்டல்கள் விதைக்கப்பட்டு, இறுதியில் திரையில் உரை வெளியாகியுள்ளது.

ஆனால், என்ன? Very Low Budget திரைப்படம். Hollywood க்கு நிகராக திரைப்படங்களை வசூல் வேட்டைக்கு விடுகிற தேசம்,  தமது  கதையின்  நாயகிக்கு ஒப்பனை செய்வதற்குக்கூட முறையான ஒப்பனைக் கலைஞரை அமர்த்த முடியாமற்போனமை  வியப்புக்குரியதே.

அளவுக்கு மீறிய முகப்பூச்சு, கீறி விளையாடிய புருவ அலங்காரம், கருவளையத்தை மேவிநிற்கும் கருமை, இமைகளை மினுங்கவைக்கும் வெளிர்வர்ணம், பொருந்தாத உதட்டுச்சாயம் என்று சிறுபிள்ளைகள் Powder அலகாரம் செய்ததுபோல் தமது கதையின் நாயகியை மேடையேற்றியுள்ளனர்.

இங்குதான் மீளவும் மீளவும் Research & Analysis இல் பிழைவிடுகின்றனர் ஈழத்தமிழரை ஆட்டிவைக்க நினைப்பவர்கள். ஈழத்தின் போராட்ட மரபில் வந்த பெண்கள்  எவ்வாறு உடை உடுத்துவார்கள்? எவ்வாறு தலைமுடியை வாருவார்கள்?  எந்த அளவுக்கு அலங்காரம் செய்வார்கள்? என்பதைக்கூடப் புரிந்துகொள்ளவில்லை. குறிப்பாக தலைவிரிகோலமாக முடி அலங்காரம் செய்து  தமது கதாநாயகியை அறிமுகம் செய்தமை,  குறுதிப்படிந்த ஈழத்து மரபை சம்பந்தப்பட்டவர்கள் பூரணமாகப்படிக்கவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது.

மேலும் தொழில்நுட்ப ரீதியாகக்கூட புலமைத்துவம் இல்லாத சொதப்பல். பின்னணித் திரை (Chroma Key) அமைப்பு மற்றும்  ஒளியமைப்பிலும் கூட நேர்த்தியில்லை. தரம் குறைந்த ஒளிப்பதிவுக் Camera. ஒலிவாங்கி அற்ற செயற்கையான Podium. ஆடையிற் பொருத்தும் ஒலிவாங்கியைக் கூடக் காணவில்லை. ஒளிப்பதிவில் தேர்ச்சியற்றவர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஒரு காணொளி.

ஆக, ஒன்றை மட்டும் ஊகிக்க முடிகிறது. ...அன்னை இந்திராவின் பாணியில் ஆடை உடுத்தி, தங்கை துவா_ கா... என்று ஒருவரை  தமிழ் மக்களிடம் அரசியல் வாரிசாக அறிமுகம் செய்துவிடலாம் என்று எண்ணியுள்ளனர். இவ்வாறான வாரிசு அரசியல்

விளையாட்டு ஈழத்தமிழருக்குப் பரீட்சயம் இல்லாத ஒன்று என்பதைக்கூடக் கணிக்கமுடியாத புலனாய்வு. தமது தேசத்தின் வாரிசு அரசியல் சமன்பாட்டை (Formula) கண்ணைமூடிக்கொண்டு ஈழத்தமிழர்களிடம் பிரயோகித்துள்ளனர்.

மேலும், பல கணக்குகள் இதிலே பிழைக்கின்றன. முதலில் தந்தை வருகிறார்.. மக்கள் முன் தோன்றுவார்..  என்று அறிவித்துவிட்டு, இப்போது மகள் என்று ஒருவரை அறிமுகம் செய்யும் அளவுக்குக்  கதையில் மாற்றம் செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன? உங்கள் கதையின் பிரகாரம் தந்தை உள்ள நிலையில், மகள் திரையில்  தோன்றக் காரணம் என்ன? நீங்கள் எதிர்பார்த்த தந்தைக்குப் பொருத்தமான கதாபாத்திரம் இன்னமும் கிடைக்கவில்லையோ? அப்படியாயின், தந்தை உள்ளார் என்று தம்மவர் மூலம் சொல்லவைத்தது பொய் என்றுதானே எடுத்துக்கொள்ளவேண்டும்.

கடைசியாக யாரோ ஒரு அப்பாவிப்பெண்ணை சம்பந்தம் இல்லாமல் சோடித்து, வேடிக்கை காட்டியுள்ளனர் சம்பந்தப்பட்ட தரப்பினர்.

இந்நிலையில், தமிழ் மக்கள்- ஏகோபித்த அளவில் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைமையை தமது சுயலாப அரசியலுக்காக அந்த தேசம் ஈழத்தில் உருவாக்க முனைகிறது. என்னவிதப்பட்டேனும், வேலுப்பிள்ளை குடும்பத்தில் இருந்து ஒருவரை முடிசூடிவிடப் படாதபாடு படுகிறது என்றால், வேலுப்பிள்ளையின் மகன் விட்டுச்சென்ற வெற்றிடம், இட்டு நிரப்பமுடியாத ஒன்று என்ற கசப்பான உண்மையை அத்தேசக்  கொள்கை வகுப்பாளர்கள் உணரத்தலைபட்டுள்ளனரோ? என்று எண்ணத்  தோன்றுகிறது.

ஆனால், எல்லாம் காலம் கடந்த ஞானம். நிமிரவே முடியாவண்ணம் ஈழத்தமிழினத்தின் அரசியற்தளம் உங்களால் சிதைக்கப்பட்டுவிட்டது. இப்போதைக்கு ஒரு ஆளுமை மிக்க தலைமை உருவாக்கம் என்பது கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. அதுவரைக்கும், உங்களுக்கான தெரிவுகள் குறுக்குவழிகள் தான்.

எது எவ்வாறு இருப்பினும், சீனாவையும் சிங்களத்தையும் கையாள, வேலுப்பிள்ளையின் மகன்தான்  வேண்டும் என்று அடம்பிடிக்கும் அந்த தேசம், முடிந்தால் ஒருமுறையேனும் ஈழத்தமிழருக்குப் பரிகாரம் செய்யட்டும். ஒருவேளை, அண்டத்தில் இருந்து மண்ணுக்காக மாண்டவர்கள் உங்களை ஆசீர்வதிப்பார்கள்.

ஆக, அன்னை இந்திராவின் ஆடை அலங்காரத்துடன், 'Making Of துவா_கா' படுமோசம்.

Copied:

Thanks, Uthayan S Pillai

இந்த துவராக sai நன்ன்னியின் ஸ்டைலில் மாப்பனைக்குள் புரண்டு எழும்பிய எலிக்குட்டி போல் வந்த வேடதாரியால் நம்ம பழைய ஆட்கள் எல்லாம் கானகிடைக்குது. வாங்கோ அகஸ்தியன் சந்தோசம் கண்டதில் .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நியாயம் said:

மேற்கண்ட மாவீரர் தின உரையை நானும் கேட்டேன். நீங்கள் விசயம் அறிந்தவர்கள் தான் எனக்கு அறிவூட்ட வேண்டும். 

நேற்று ஓர் பாடல் கேட்டேன். பாடுபவரும் ஒரு தலைவரின் புதல்விதான். இவர் ஏதாவது திட்டங்கள் முன்னெடுத்தால் பங்களிப்பது பற்றி பரிசீலிக்கலாம்.

https://youtu.be/r-Nw7HbaeWY?si=GJOVTNgjYzdhDaHD

ஈரோஸ் அருளரின் மகள் மாயா.

இப்ப இந்தியாவுக்கு அவசரம் இலங்கையின் வடகிழக்கு பகுதியில் இலங்கை அரசை எதிர்த்து போராட ஒரு தலைவர் தலைவி அவசர  தேவையாம் அங்கிருக்கும் மிஞ்சிய தமிழர்களையும் சாவடிகனுமாம் .

12 minutes ago, நியாயம் said:

தலைவர் தமையன் புதல்வனின் பேட்டி அவர் கதைத்த விதம் மனதை ஈர்த்துள்ளது. எவ்வளவு பொறுப்பாக, பணிவுடன், அழகு தமிழில் பேசுகின்றார்!

 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நியாயம் said:

 

தலைவர் தமையன் புதல்வனின் பேட்டி அவர் கதைத்த விதம் மனதை ஈர்த்துள்ளது. எவ்வளவு பொறுப்பாக, பணிவுடன், அழகு தமிழில் பேசுகின்றார்!

அவ‌ரின் வ‌ய‌து என‌க்கு சரியா தெரியாது அவ‌ரிட‌ம் ப‌ல‌ திற‌மைக‌ள் இருக்கு.........அவ‌ரும் நானும் முத‌ல் முறை போனில் க‌தைச்ச‌து 2004அத‌ற்கு பிற‌க்கு க‌தைக்க‌ வில்லை MSNனில் தொட‌ர்வில் இருந்த‌வ‌ர் இருந்துட்டு எப்ப‌வாவ‌து எழுதுவோம் 2009க்கு பிற‌க்கு நான் MSN பாவிக்க‌ வில்லை .........அன்மையில் அவ‌ரின் முக‌ நூலை பார்க்க‌ தான் தெரிஞ்ச‌து என்ர‌ அக்காட‌ ம‌க‌ளுக்கும் ப‌டிப்பித்து இருக்கிறார் என்று...........அவ‌ர் த‌ன்னை பெரிய‌ ஆள் போல் காட்டி கொள்வ‌து கிடையாது..........

  • கருத்துக்கள உறவுகள்

விசில் அடித்தான் குஞ்சுகள்...

k3.jpg

பழ.கருப்ஸ்க்கு நாலு பச்ச மட்டை அடி கொடுத்து விடுக...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

அவ‌ரின் வ‌ய‌து என‌க்கு சரியா தெரியாது அவ‌ரிட‌ம் ப‌ல‌ திற‌மைக‌ள் இருக்கு.........அவ‌ரும் நானும் முத‌ல் முறை போனில் க‌தைச்ச‌து 2004அத‌ற்கு பிற‌க்கு க‌தைக்க‌ வில்லை MSNனில் தொட‌ர்வில் இருந்த‌வ‌ர் இருந்துட்டு எப்ப‌வாவ‌து எழுதுவோம் 2009க்கு பிற‌க்கு நான் MSN பாவிக்க‌ வில்லை .........அன்மையில் அவ‌ரின் முக‌ நூலை பார்க்க‌ தான் தெரிஞ்ச‌து என்ர‌ அக்காட‌ ம‌க‌ளுக்கும் ப‌டிப்பித்து இருக்கிறார் என்று...........அவ‌ர் த‌ன்னை பெரிய‌ ஆள் போல் காட்டி கொள்வ‌து கிடையாது..........

நியாத்துக்கு ஊரில் போய் அடிபட இவர் அல்லது மியா வேணுமாம் 😀

@நியாயம்

Edited by பெருமாள்
நியாயம் எழுது பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

* Making of the "Thuvaraka"?

உண்மையாக அவரின் மகளா ? அவர்கள் சொன்னது உண்மை தானா? நீங்கள் நம்புகிறீர்களா ? இவை தான் இன்று என்னிடம் பலரும் முன்வைத்த கேள்விகள்.

இதுவே, இன்று தாயகத்திலும், தமிழர்கள் வாழும் நாடுகளிலும் பிரதான பேசுபொருள். தமிழர்கள் மத்தியில் சமூகவலைத்தளப் பதிவுகளையும் இன்று ஆக்கிரமித்த பேசுபொருளும் இதுவே.

என்னைப் பொறுத்தவரையில், இவ்வாறான கேள்விகள் மக்களிடம் உலாவருவதே நம் சமூகத்தில் அரசியல் தெளிவின்மையின் வெளிப்பாடே. யாரும் எப்பொழுதும் நம்மை இலகுவில் இயக்கிவிடலாம் அல்லது குழப்பிவிடலாம் என்பதற்கான சான்றுகளே இவை.

இன்னொருவிதத்தில் கூறுவதானால், முள்ளிவாய்க்களுக்குப் பின்னர் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு சார்ந்த விடயங்களில் நாம் மிகவும் பலவீனப்பட்ட சமூகமாக உருவெடுத்துள்ளோம் என்பது நம்மைக்  குழப்பிவிட நினைப்பவர்களுக்குக் கிடைத்த பெரு வெற்றி என்றே கூறலாம்.

ஆனால், வேடிக்கை என்னவெனில், ஈழத்தமிழர்களின் அரசியலைக் கையாள நினைக்கும் சக்திகள், தாமும் குழம்பி, நம்மையும் குழப்புகிறார்கள் என்பதே. ஆனால், இது  இன்று நேற்றல்ல, ஈழத்தைக் கையாள முற்பட்ட காலம் முதல் இவ்வாறுதான் தீர்க்கதரிசனம் அற்றவகையில் Trial and Error போன்று பரீட்சார்த்த முனைப்புகளையே முன்னெடுக்கிறது அத்தரப்பு.

ஈற்றில் 2009 இல் ஒரு தலைமைத்துவத்தை, பூண்டோடு அழிப்பதன் ஊடாக அனைத்தையும் மீளச்சரிசெய்துவிடலாம் (RESET) என்று கணக்குப்போட்டது. ஆனால், 14 ஆண்டுகள் கடந்தும் அந்த சக்தி,  தான் விரும்பிய இலக்கை அடையவில்லை என்பதை இன்று சிறுபிள்ளைத்தனமாக ஆடிய வாரிசு உருவாக்க விளையாட்டு அமைந்துவிட்டது.

ஆனால், ஒன்றை அவர்கள் புரிந்துகொண்டார்கள், அழிக்கப்பட்ட தலைமையின் வழிவந்தவர்கள் அல்லது வாரிசுகளைத் தவிர ஈழத்தமிழர்கள் எந்தத் தலைமைகளையும்  நம்பமாட்டார்கள் என்பதே. இந்நிலை, கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் போன்றது.

அதன் விளைவுதான், தம்மிடம் இருந்த அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்தி, தலைவர் வருகிறார்....அவரின் மகள் வருகிறார்....என்ற நம்பிக்கையூட்டல்களை தமிழர்களிடம் விதைக்க முற்பட்டமை. இதற்காக தமது மேற்பார்வையில் இருந்த, தமிழ்த் தேசியவாதிகளைப் பேசவைத்து அவர்களின் தனிமனித நம்பகத்தன்மைகளை தனக்கான ஆயுதமாகப் பயன்படுத்தினர்.

எனினும், அவ்வாறான முயற்சிகள் சலசலப்புகளைக் கடந்து போதிய பெறுபேறுகளை அறுவடைசெய்யாத நிலையில், இன்று தாம் விதைத்த பொய்கள் உண்மை என்று நிரூபிக்க ஒரு 'பொய்மானை' மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளனர்.

உண்மையில் இது மிகப்பெரிய International Operation. தமிழ்த்தேசிய வாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட அல்லது தம்மை அவ்வாறு இனம்காட்டிக்கொண்ட பலர், குறித்த செயற்திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிநபர்கள், செயற்பாட்டுத்தளத்தில் பயணிப்போர், ஊடகங்கள் என்று பல தளங்களில் உள்ளவர்களும் உள்வாங்கப்பட்டு, நம்பிக்கையூட்டல்கள் விதைக்கப்பட்டு, இறுதியில் திரையில் உரை வெளியாகியுள்ளது.

ஆனால், என்ன? Very Low Budget திரைப்படம். Hollywood க்கு நிகராக திரைப்படங்களை வசூல் வேட்டைக்கு விடுகிற தேசம்,  தமது  கதையின்  நாயகிக்கு ஒப்பனை செய்வதற்குக்கூட முறையான ஒப்பனைக் கலைஞரை அமர்த்த முடியாமற்போனமை  வியப்புக்குரியதே.

அளவுக்கு மீறிய முகப்பூச்சு, கீறி விளையாடிய புருவ அலங்காரம், கருவளையத்தை மேவிநிற்கும் கருமை, இமைகளை மினுங்கவைக்கும் வெளிர்வர்ணம், பொருந்தாத உதட்டுச்சாயம் என்று சிறுபிள்ளைகள் Powder அலகாரம் செய்ததுபோல் தமது கதையின் நாயகியை மேடையேற்றியுள்ளனர்.

இங்குதான் மீளவும் மீளவும் Research & Analysis இல் பிழைவிடுகின்றனர் ஈழத்தமிழரை ஆட்டிவைக்க நினைப்பவர்கள். ஈழத்தின் போராட்ட மரபில் வந்த பெண்கள்  எவ்வாறு உடை உடுத்துவார்கள்? எவ்வாறு தலைமுடியை வாருவார்கள்?  எந்த அளவுக்கு அலங்காரம் செய்வார்கள்? என்பதைக்கூடப் புரிந்துகொள்ளவில்லை. குறிப்பாக தலைவிரிகோலமாக முடி அலங்காரம் செய்து  தமது கதாநாயகியை அறிமுகம் செய்தமை,  குறுதிப்படிந்த ஈழத்து மரபை சம்பந்தப்பட்டவர்கள் பூரணமாகப்படிக்கவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது.

மேலும் தொழில்நுட்ப ரீதியாகக்கூட புலமைத்துவம் இல்லாத சொதப்பல். பின்னணித் திரை (Chroma Key) அமைப்பு மற்றும்  ஒளியமைப்பிலும் கூட நேர்த்தியில்லை. தரம் குறைந்த ஒளிப்பதிவுக் Camera. ஒலிவாங்கி அற்ற செயற்கையான Podium. ஆடையிற் பொருத்தும் ஒலிவாங்கியைக் கூடக் காணவில்லை. ஒளிப்பதிவில் தேர்ச்சியற்றவர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஒரு காணொளி.

ஆக, ஒன்றை மட்டும் ஊகிக்க முடிகிறது. ...அன்னை இந்திராவின் பாணியில் ஆடை உடுத்தி, தங்கை துவா_ கா... என்று ஒருவரை  தமிழ் மக்களிடம் அரசியல் வாரிசாக அறிமுகம் செய்துவிடலாம் என்று எண்ணியுள்ளனர். இவ்வாறான வாரிசு அரசியல்

விளையாட்டு ஈழத்தமிழருக்குப் பரீட்சயம் இல்லாத ஒன்று என்பதைக்கூடக் கணிக்கமுடியாத புலனாய்வு. தமது தேசத்தின் வாரிசு அரசியல் சமன்பாட்டை (Formula) கண்ணைமூடிக்கொண்டு ஈழத்தமிழர்களிடம் பிரயோகித்துள்ளனர்.

மேலும், பல கணக்குகள் இதிலே பிழைக்கின்றன. முதலில் தந்தை வருகிறார்.. மக்கள் முன் தோன்றுவார்..  என்று அறிவித்துவிட்டு, இப்போது மகள் என்று ஒருவரை அறிமுகம் செய்யும் அளவுக்குக்  கதையில் மாற்றம் செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன? உங்கள் கதையின் பிரகாரம் தந்தை உள்ள நிலையில், மகள் திரையில்  தோன்றக் காரணம் என்ன? நீங்கள் எதிர்பார்த்த தந்தைக்குப் பொருத்தமான கதாபாத்திரம் இன்னமும் கிடைக்கவில்லையோ? அப்படியாயின், தந்தை உள்ளார் என்று தம்மவர் மூலம் சொல்லவைத்தது பொய் என்றுதானே எடுத்துக்கொள்ளவேண்டும்.

கடைசியாக யாரோ ஒரு அப்பாவிப்பெண்ணை சம்பந்தம் இல்லாமல் சோடித்து, வேடிக்கை காட்டியுள்ளனர் சம்பந்தப்பட்ட தரப்பினர்.

இந்நிலையில், தமிழ் மக்கள்- ஏகோபித்த அளவில் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைமையை தமது சுயலாப அரசியலுக்காக அந்த தேசம் ஈழத்தில் உருவாக்க முனைகிறது. என்னவிதப்பட்டேனும், வேலுப்பிள்ளை குடும்பத்தில் இருந்து ஒருவரை முடிசூடிவிடப் படாதபாடு படுகிறது என்றால், வேலுப்பிள்ளையின் மகன் விட்டுச்சென்ற வெற்றிடம், இட்டு நிரப்பமுடியாத ஒன்று என்ற கசப்பான உண்மையை அத்தேசக்  கொள்கை வகுப்பாளர்கள் உணரத்தலைபட்டுள்ளனரோ? என்று எண்ணத்  தோன்றுகிறது.

ஆனால், எல்லாம் காலம் கடந்த ஞானம். நிமிரவே முடியாவண்ணம் ஈழத்தமிழினத்தின் அரசியற்தளம் உங்களால் சிதைக்கப்பட்டுவிட்டது. இப்போதைக்கு ஒரு ஆளுமை மிக்க தலைமை உருவாக்கம் என்பது கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. அதுவரைக்கும், உங்களுக்கான தெரிவுகள் குறுக்குவழிகள் தான்.

எது எவ்வாறு இருப்பினும், சீனாவையும் சிங்களத்தையும் கையாள, வேலுப்பிள்ளையின் மகன்தான்  வேண்டும் என்று அடம்பிடிக்கும் அந்த தேசம், முடிந்தால் ஒருமுறையேனும் ஈழத்தமிழருக்குப் பரிகாரம் செய்யட்டும். ஒருவேளை, அண்டத்தில் இருந்து மண்ணுக்காக மாண்டவர்கள் உங்களை ஆசீர்வதிப்பார்கள்.

ஆக, அன்னை இந்திராவின் ஆடை அலங்காரத்துடன், 'Making Of துவா_கா' படுமோசம்.

Copied:

Thanks, Uthayan S Pillai

எஸ் பிள்ளை மிகவும் காத்திரமாக அலசியுள்ளார்.

ஆனால் ஒரு விடயம் - இப்படி டி சேர்ட்டுக்கு மேலாக சேலை அணிந்தது, மிக(த) மிஞ்சிய முகப்பூச்சு, மஞ்சள்/சிவப்பை தவிர்த்தது எல்லாம் வேணும் என்றே செய்யப்பட்டவை.

RAW வுக்கு இன்னமும் புலி, மஞ்சள்-சிவப்பு என்றால் அலர்ஜிதான். 

தமக்கு இலங்கையில் ஒரு பிடி கிடைக்க இந்த நாடகத்தை ஆடினாலும், எமது அடையாளங்களை வலுவாக்க அவர்கள் விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

Technical details

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

துவாரகா வருவா என நம்பியவர்கள், நம்பி அதனை வெளியே காவித்திரிந்தவர்கள் அனைவரும் கபட நோக்கில்தான் செய்தனர் என்று கூற முடியாது. பலர், உண்மை என நம்பி இருந்தனர். விடுதலைப் புலிகள் மீதும், தலைவர் மீதும் கட்டமைக்கப்பட்டு இருக்கும் அதீத நம்பிக்கை அவர்கள் ஒரு போதும் இறந்து போக மாட்டார்கள் என்று நம்பும் அளவுக்கு சிலருக்கு இருந்ததை அவதானித்துள்ளேன். அந்த அதீத நம்பிக்கை, சரி பிழைகளை சீர் தூக்கிப் பார்க்கும் அறிவை மேவி இருந்தது.

ஆனால், இந்த காணோளி வந்த பின்பும், அப்பட்டமாக அது துவாரகா இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிந்த பின்னும் கூட, தம் தவறை ஒத்துக்கொள்ள மறுத்தும், சாக்கு போக்கு சொல்லி தம் நம்பிக்கையை நியாயப்படுத்தியும், நேரடியாக மன்னிப்பு கேட்காமல் சமாளிக்கின்றவர்களையும், "இல்லை அது துவாரகா தான்" என்று இன்னும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களையும் இனி ஒரு போதும் தமிழ் இனம் நம்பக் கூடாது. இப்படியானவர்களுக்கு தலைவர் பெயர் சொல்வதற்கும், புலிகளின், மக்களின் தியாயங்களைப் பற்றி கதைப்பதற்கும் கூட அருகதை அற்றவர்கள். இவர்களுக்கு தமிழ் தேசியம் பற்றி இனி வாயைத் திறப்பதற்கு கூட தார்மீக உரிமை இல்லை.

இந்த போலி நாடகம், பலரை எமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. எனவே இந்த நாடகத்தை நடாத்தியவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டு, எம்மைச் சுற்றி இருந்த போலித் தமிழ் தேசிய வியாதிகளுக்கு ஒரே அடியாக நன்றி வணக்கம் சொல்வோம்.

யாழில் சிலரை பார்க்க பரிதாபமாக உள்ளது. இதை விட சொல்ல ஏதும் இல்லை.

ஒரு விடயத்தை திறந்த மனதோடு அணுகலாம், ஆனால் மலை போல் ஆதாரம் இருந்த பின்னும், கற்பனையில் உழல்கிறார்கள்.

@பாலபத்ர ஓணாண்டி நேற்று காசி ஆனந்தன் முதல் சேரமான் வரை ஒரு லிஸ்டை திண்ணையில் வெளியிட்டு இருந்தார். 

இந்த லிஸ்டில் உள்ளோர் மீது மிக அவதானமாக இருக்க வேண்டும்.

இந்த விடயத்தில் யாழில் ஆரம்பம் முதலே தெளிவை உருவாக்கி, நான் உட்பட பலரை உரை வர முன்னமே சரியான பாதையில் வழி நடத்திய, @வைரவன், @MEERA @நன்னிச் சோழன். @நந்தன் ஆகியோருக்கு நன்றி🙏.

பதினான்காவது வருட கார்த்திகை மாத தலைவன் இருப்பின் தொடர் கதையில் இம்முறை சிறிய மாற்றம் துவாரகா உள்வாங்கப்பட்டுள்ளாரே தவிர கதையின் சாராம்சம் ஒன்றே.  

இருந்தால் தலைவன் இறந்தால் தெய்வம்.

Edited by கிளியவன்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

யாழில் சிலரை பார்க்க பரிதாபமாக உள்ளது. இதை விட சொல்ல ஏதும் இல்லை.

ஒரு விடயத்தை திறந்த மனதோடு அணுகலாம், ஆனால் மலை போல் ஆதாரம் இருந்த பின்னும், கற்பனையில் உழல்கிறார்கள்.

@பாலபத்ர ஓணாண்டி நேற்று காசி ஆனந்தன் முதல் சேரமான் வரை ஒரு லிஸ்டை திண்ணையில் வெளியிட்டு இருந்தார். 

இந்த லிஸ்டில் உள்ளோர் மீது மிக அவதானமாக இருக்க வேண்டும்.

இந்த விடயத்தில் யாழில் ஆரம்பம் முதலே தெளிவை உருவாக்கி, நான் உட்பட பலரை உரை வர முன்னமே சரியான பாதையில் வழி நடத்திய, @வைரவன், @MEERA @நன்னிச் சோழன். @நந்தன் ஆகியோருக்கு நன்றி🙏.

இதை மூன்று மாத‌த்துக்கு முத‌லே நானும் எதிர்க்க‌ தொட்ங்கிட்டேன்............நெடுக‌ரும் 
விசுகு அண்ணையும் தான் தாங்க‌ள் பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிச்ச‌வை..............எம் போராட்ட‌ம் ப‌ற்றிய‌ புரித‌ல் உள்ள‌ சின்ன‌ பிள்ளைக‌ளுக்கே தெரியும் இது வெறும் ச‌தி அல்ல‌து கேலி கூத்து என்று.............யாழில் இர‌ண்டு பேரை த‌விற‌ மிச்ச‌ எல்லாரும் க‌டுமையா எதிர்த்த‌வ‌ர்க‌ள் அருணா சொன்ன‌ போது...................

2 minutes ago, கிளியவன் said:

 இறந்தால் தெய்வம்.

நான் த‌லைவ‌ரை தெய்வ‌மாய் தான் பார்க்கிறேன்.............

  • கருத்துக்கள உறவுகள்+
54 minutes ago, goshan_che said:

யாழில் சிலரை பார்க்க பரிதாபமாக உள்ளது. இதை விட சொல்ல ஏதும் இல்லை.

ஒரு விடயத்தை திறந்த மனதோடு அணுகலாம், ஆனால் மலை போல் ஆதாரம் இருந்த பின்னும், கற்பனையில் உழல்கிறார்கள்.

@பாலபத்ர ஓணாண்டி நேற்று காசி ஆனந்தன் முதல் சேரமான் வரை ஒரு லிஸ்டை திண்ணையில் வெளியிட்டு இருந்தார். 

இந்த லிஸ்டில் உள்ளோர் மீது மிக அவதானமாக இருக்க வேண்டும்.

இந்த விடயத்தில் யாழில் ஆரம்பம் முதலே தெளிவை உருவாக்கி, நான் உட்பட பலரை உரை வர முன்னமே சரியான பாதையில் வழி நடத்திய, @வைரவன், @MEERA @நன்னிச் சோழன். @நந்தன் ஆகியோருக்கு நன்றி🙏.

 நன்றி🙏

  • கருத்துக்கள உறவுகள்+

GAA3zMpWcAAxJPr?format=jpg&name=900x900

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நன்னிச் சோழன் said:

GAA3zMpWcAAxJPr?format=jpg&name=900x900

இந்த‌ மூதாட்டி இப்ப‌வும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ம‌ன‌ங்க‌ளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறா............ஏதும் வேறு ப‌ட‌த்தை தெரிவு செய்து இருக்க‌லாம்............ஒரு சொல்லில் சிங்க‌ள‌வ‌னின் த‌மிழ‌ர்க‌ள் மீதான‌  அட்டூழிய‌த்தை நிப்பாட்டின‌வா..................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இதை மூன்று மாத‌த்துக்கு முத‌லே நானும் எதிர்க்க‌ தொட்ங்கிட்டேன்............

நீங்கள் எதிர்த்ததை மறுக்கவில்லை.

ஆனால் நான் தெளிவடைய உங்கள் கருத்து உதவவில்லை.

ஏன் என்றால் - இதில் மாற்று நிலைப்பாட்டை சீமான் எடுத்திருந்தால்…தோன்றிய போலி-க்கா, தான் துவாரகா என நீங்கள் வாதாடி இருப்பீர்கள் என்பது என் அபிப்பிராயம்.

 

52 minutes ago, நன்னிச் சோழன் said:

GAA3zMpWcAAxJPr?format=jpg&name=900x900

ரஜீவின் தாயின் வடிவில், தலைவரின் மகள்…..

Can you see what they are trying to do subliminally?

Dear RAW,

We know you.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நீங்கள் எதிர்த்ததை மறுக்கவில்லை.

ஆனால் நான் தெளிவடைய உங்கள் கருத்து உதவவில்லை.

ஏன் என்றால் - இதில் மாற்று நிலைப்பாட்டை சீமான் எடுத்திருந்தால்…தோன்றிய போலி-க்கா, தான் துவாரகா என நீங்கள் வாதாடி இருப்பீர்கள் என்பது என் அபிப்பிராயம்.

 

ரஜீவின் தாயின் வடிவில், தலைவரின் மகள்…..

Can you see what they are trying to do subliminally?

Dear RAW,

We know you.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ச‌கோ...........அண்ண‌ன் சீமான் இந்த‌ விடைய‌த்தில் மூக்கை நுழைத்து இருந்தால் அவ‌ர் ம‌ன்னிப்பு கேக்க்க‌ வைச்சு இருப்போம் அவ‌ர் இதுவ‌ரை துவார‌கா ப‌ற்றி வாய் திற‌க்க‌ல‌........துவார‌கா பெய‌ரில் இய‌ங்கும் இந்த‌ போலி பெண் அண்ண‌ன் சீமானுட‌னும் க‌தைச்ச‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருது பாப்போம் அவ‌ரின் முடிவு............க‌ட்சி பெடிய‌ங்ளே இதை போலி என்று அவ‌ர்க‌ளின் யூடுப்பில் ப‌ர‌ப்ப‌ தொட‌ங்கிட்டின‌ம் ஆன‌ ப‌டியால் உண்மைய‌ அறிந்த‌ பின்பு தான் அண்ண‌ன் சீமான் அறிக்கை விடுவார்..............

 

I know she is Rajiv Gandhi s mother.......Indira Gandhi Ammaiyar much better in Rajiv Gandthi.........Rajiv Gandthi very Stupid😏.............

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ச‌கோ...........அண்ண‌ன் சீமான் இந்த‌ விடைய‌த்தில் மூக்கை நுழைத்து இருந்தால் அவ‌ர் ம‌ன்னிப்பு கேக்க்க‌ வைச்சு இருப்போம் அவ‌ர் இதுவ‌ரை துவார‌கா ப‌ற்றி வாய் திற‌க்க‌ல‌........துவார‌கா பெய‌ரில் இய‌ங்கும் இந்த‌ போலி பெண் அண்ண‌ன் சீமானுட‌னும் க‌தைச்ச‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருது பாப்போம் அவ‌ரின் முடிவு............க‌ட்சி பெடிய‌ங்ளே இதை போலி என்று அவ‌ர்க‌ளின் யூடுப்பில் ப‌ர‌ப்ப‌ தொட‌ங்கிட்டின‌ம் ஆன‌ ப‌டியால் உண்மைய‌ அறிந்த‌ பின்பு தான் அண்ண‌ன் சீமான் அறிக்கை விடுவார்..............

 

I know she is Rajiv Gandhi s mother.......Indira Gandhi Ammaiyar much better in Rajiv Gandthi.........Rajiv Gandthi very Stupid😏.............

மகிழ்ச்சி ❤️

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

மகிழ்ச்சி ❤️

இந்த‌ மூதாட்டி அந்த‌க் கால‌த்தில் உயிருட‌ன் இருந்து இருக்க‌னும் எங்க‌ட‌ போராட்ட‌ பிர‌ச்ச‌னை எல்லை மீறி போய் இருக்காது பேசி தீர்த்து ந‌ல்ல‌ முடிவு எடுத்து இருப்பா என்ப‌து என்ர‌ ந‌ம்பிக்கை...............

  • கருத்துக்கள உறவுகள்+
58 minutes ago, goshan_che said:

 

 

ரஜீவின் தாயின் வடிவில், தலைவரின் மகள்…..

Can you see what they are trying to do subliminally?

Dear RAW,

We know you.8

குறிப்பாலை இந்தியன் பொருள் உணர்த்த முற்பட்டிருக்கிறான், எங்கட கோடாரிக்காம்புகளுடன் சேர்ந்து/ வைத்து.

1 hour ago, பையன்26 said:

இந்த‌ மூதாட்டி இப்ப‌வும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ம‌ன‌ங்க‌ளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறா............ஏதும் வேறு ப‌ட‌த்தை தெரிவு செய்து இருக்க‌லாம்............ஒரு சொல்லில் சிங்க‌ள‌வ‌னின் த‌மிழ‌ர்க‌ள் மீதான‌  அட்டூழிய‌த்தை நிப்பாட்டின‌வா..................

எலேய், படம் ஒரு விளக்கத்திற்குத் தாம்லே. 😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Better luck next time 🤣

F__dpr0bAAAkcLg?format=jpg&name=small

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Ahasthiyan said:

இவ்வாறான கேள்விகள் மக்களிடம் உலாவருவதே நம் சமூகத்தில் அரசியல் தெளிவின்மையின் வெளிப்பாடே. யாரும் எப்பொழுதும் நம்மை இலகுவில் இயக்கிவிடலாம் அல்லது குழப்பிவிடலாம் என்பதற்கான சான்றுகளே இவை.

உதயன் s பிள்ளை சொன்னது 100 % உண்மை.

42 minutes ago, நன்னிச் சோழன் said:

எலேய், படம் ஒரு விளக்கத்திற்குத் தாம்லே

விளக்கத்திற்குத் தாம்லே என்றால் விளக்கத்திற்கு தான் என்பது தானே 🙄 அந்த அம்மையாரும் இந்திய நலனுக்காக தானே பயன்படுத்தினா.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.