Jump to content

இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

4c57ba6a96567d99979c9491eea1041f1f0696b5-1024x1087.jpg?w=1000&h=1062&fm=webp&q=70

President Ebrahim Raisi, Foreign Minister Hossein Amir-Abdollahian, Tabriz Friday Prayers imam Ayatollah Al-e Hashem, East Azarbaijan governor general Malek Rahmati, Raisi's bodyguard and the pilot have all been killed in the chopper crash in northwestern Iran, semi-official Mehr News reported.

Link to comment
Share on other sites

மகிழ்ச்சி!

ஈரானில் இனியாவது முல்லாக்களின் அராஜகம் ஒழிந்து மக்கள் முக்கியமாக பெண்கள் அடிப்படை சுதந்திரத்தையாவது அனுபவிக்கும் வாய்ப்புகள் கிடைத்தால் இந்த மகிழ்ச்சி நீடிக்கும்.

ரணிலின் கல்லோயா திட்டம் இதனால் பாதிக்கப்பட்டால் இன்னும் அதிக மகிழ்ச்சி!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தனது ஜனாதிப‌தியின் பாதுகாப்பான பயணத்திற்கு இன்னமும் 60 வருடப் பழமையான அமெரிக்க உலங்குவானூர்தியைப் பாவித்தது ஏன்? 

மனுசனுக்கு 72 கன்னிகை ஆசை வந்திட்டுதோ..அதுதான் எட்றா  அமெரிக்கன் கெலியை என்றுவிட்டு... போயிருப்பார்..

 

Edited by alvayan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹெலிகாப்டர் விபத்தில் இரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் இருவரும் உயிரிழப்பு

இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

19 மே 2024

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக அரசு ஊடகம் கூறுகிறது.

அந்த ஹெலிகாப்டரில் இருந்த இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்பட மேலும் பலர் உயிரிழந்துவிட்டனர்.

முன்னதாக, இரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டரைத் தேடுவதற்கு உதவ துருக்கி அனுப்பிய ஆளில்லா விமானம் ஒன்று முக்கிய தடயம் ஒன்றை கண்டுபிடித்தது. அடுத்தபடியாக, அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்ட வெளியான நிலையில், தற்போது இரான் அதிபர் ரைசி உயிரிழந்ததை அந்நாட்டின் அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடும் பனிமூட்டம் - மீட்புப் பணியில் சிரமம்

கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டதாக மீட்புக் குழுவினருடன் இருந்த ஃபார்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, மலை மற்றும் மரங்கள் நிறைந்த அந்த பகுதியில் 5 மீட்டர் தொலைவு வரை மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடிகிறது.

விபத்து நடந்தது எங்கே?

இரான் - அஜர்பைஜான் எல்லையில் கிஸ் கலாசி மற்றும் கோடாஃபரின் அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவுடன் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பங்கேற்று விட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இரானின் வடகிழக்கு நகரான தப்ரிஸுக்குச் சென்று கொண்டிருந்த போது 50 கி.மீ. முன்னதாக வர்செகான் நகருக்கு அருகே அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையில் மோதியுள்ளது.

இரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம்,IRAN PRESIDENTIAL WEBSITE

படக்குறிப்பு,இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவ்
இரான் ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம்,TASNEEM

படக்குறிப்பு,தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள்
இரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹெலிகாப்டர் விழுந்த இடம் அடையாளம் காணப்பட்டது

இரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டரைத் தேடுவதற்கு உதவ துருக்கி அனுப்பிய ஆளில்லா விமானம் முக்கிய தடயம் ஒன்றை கண்டுபிடித்தது.

வெப்பத்தின் மூலம் ஹெலிகாப்டரின் இருப்பிடத்தை கண்டறியும் துருக்கியின் பேரெக்டர் அகின்ஸி (Bayraktar Akinci) என்ற ஆளில்லா விமானம் வெப்பத்தின் மூலத்தை அடையாளம் கண்டுள்ளதாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட நீண்ட தூர ட்ரோனின் காட்சிகள், இரவில் ஒரு நிலப்பரப்பின் கழுகு பார்வை காட்சியையும், ஒரு மலைப்பகுதியில் தோன்றும் ஒரு இருண்ட புள்ளியையும் காட்டியது.

இதுகுறித்த விவரம் இரானிய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக அந்த செய்தி நிறுவனம் கூறியது.

இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிப்பு

இரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இரான் அரசு ஊடகம் தெரிவித்தது.

பல மணி நேர தேடுதலின் முடிவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்த இடத்தை தேடுதல் குழுக்கள் கண்டுபிடித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

இரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தலைவர் பிர்ஹோசைன் கோலிவாண்ட், 'நிலைமை நல்லவிதமாக தோன்றவில்லை என்று அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் இடத்தை "சில நிமிடங்களில்" அடைவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

ஹெலிகாப்டர் விழுந்து கிடப்பதாக கருதப்படும் இடத்திலிருந்து அவர்கள் தோராயமாக 2 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

"யாரும் உயிருடன் இருக்கும் அறிகுறி இல்லை"

அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டரில் இருந்த யாரும் உயிருடன் இருப்பதற்கான "அறிகுறி எதுவும் இல்லை" என்று அரசு தொலைக்காட்சி கூறுகிறது.

இரானிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, விபத்தில் ஹெலிகாப்டர் "முற்றிலும் எரிந்துவிட்டது" என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"விபத்தில் அதிபர் ரைசியின் ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து விட்டது. துரதிர்ஷ்டவசமாக, அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது," என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

ஹெலிகாப்டரின் சிதைவு புகைப்படம்

ஈரானிய அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏவின் சமூக ஊடக சேனல்களில் ட்ரோன் காட்சிகள் பகிரப்பட்டுள்ளன. இது அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் சிதைவைக் காட்டுகிறது என்று நிறுவனம் கூறுகிறது.

ரெட் கிரசன்ட் படமெடுத்த அந்த காட்சிகள், மலைப்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது போல் காட்சியளிக்கும் தரைப் பரப்புக்கு அருகே ஹெலிகாப்டரின் வால் பகுதி தெரிகிறது.

அந்த இடத்தில் யாரும் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்து?

பட மூலாதாரம்,AFP

வடமேற்கு இரானில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும், வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் பலர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இரானிய மக்கள் பிரார்த்தனை

இரானின் அரசு தொடர்பு செய்தி நிறுவனமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம், அதிபர் இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்தனை செய்யுமாறு இரானியர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

மஷாத் என்ற நகரில் அதிபர் ரைசி நலமாக இருக்க வேண்டி பலரும் பிரார்த்தனை செய்வதைக் காட்டும் காட்சிகளும் அரசு தொலைக்காட்சியில் வெளியாயின.

இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அஜர்பைஜான் 'ஆழ்ந்த' கவலை

இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்து பற்றிய செய்திகளைக் கேட்டதும், தான் "ஆழ்ந்த கவலை" அடைந்ததாக அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவ் கூறியுள்ளார்.

இரான்-அஜர்பைஜான் எல்லையில் இரண்டு அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் இப்ராஹிம் ரைசியுடன் அலியேவும் உடனிருந்தார்.

"இரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்ராஹிம் ரைசிக்கு நட்பு ரீதியில் விடை கொடுத்தேன். அதன் பிறகு இரான் உயர்மட்டக் குழுவை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் தரையில் மோதியது என்ற செய்தியால் நாங்கள் மிகவும் கவலையடைந்தோம்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்தின் பின்னணியில் சதியா?

இரானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர் சக் ஷுமர், "அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுடனான தனது உரையாடல்கள் இந்த கட்டத்தில் தவறான விளையாட்டுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகின்றன. ஆனால் நிலைமையை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பேன்" என்றார்.

"ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வடமேற்கு இரானில் மிகவும் மோசமான பனிமூட்டம் நிலவியது. இது ஒரு விபத்து போல் தெரிகிறது. எனினும் அதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்படுகிறது," என்று அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற அவையின் ஆயுதப்படை சேவை கமிட்டிக்கான குடியரசுக் கட்சி தலைவரான மைக்கேல் வால்ட்ஸ் "இது நல்லதே" என்று கூறியுள்ளார்.

"ரைசி அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்னும் பின்னும் மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்தவர்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார்.

"ரைசி இறந்துவிட்டால், உலகம் பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாக திகழும்" என்று புளோரிடாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர் ரிக் ஸ்காட் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.

"அவர் மறைந்து விட்டால், கொலைகார சர்வாதிகாரிகளிடமிருந்து தங்கள் நாட்டை மீட்டெடுக்க இரானிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

விபத்து குறித்து அதிபர் ஜோ பிடனுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்து?

பட மூலாதாரம்,GETTY IMAGES

யார் இந்த இப்ராஹிம் ரைசி?

  • இரான் இப்ராஹிம் ரைசி தீவிர பழமைவாத அரசியல் கருத்துகளைக் கொண்ட கடுமையான மத குருவாகக் கருதப்படுகிறார்.
  • 63 வயதான ரைசி, 25 வயதில் இரான் தலைநகர் தெஹ்ரானில் துணை வழக்கறிஞரானார்.
  • 2014ம் ஆண்டில் இரானின் வழக்கறிஞர் ஜெனரலாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் அரசு வழக்கறிஞராகவும், பின்னர் மாநில இன்ஸ்பெக்டரேட் அமைப்பின் தலைவராகவும், நீதித்துறையின் முதல் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
  • ரைசி 2017ம் ஆண்டில் முதல் முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டு அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். அந்த தேர்தலில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
  • 2019 ஆம் ஆண்டில், ஆயதுல்லா காமனெயி அவரை நீதித்துறையின் சக்தி வாய்ந்த பதவிக்கு நியமித்தார்.
  • அவர் ஜூன் 2021 இல் இரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு

Published By: DIGITAL DESK 3

20 MAY, 2024 | 10:52 AM
image
 

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமான மெஹர் செய்திச் சேவை இன்று திங்கட்கிழமை (20) உறுதிப்படுத்தியுள்ளது.

அசர்பைஜானில் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் மூலம் ஈரான் புறப்பட்டார்.

இந்நிலையில், கடுமையான பனிமூட்டத்தில் மலைப்பகுதியை கடக்கும்போது நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) ஹெலிகொப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானது.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகொப்டரில் பயணித்த வெளிவிவகார அமைச்சர் உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

441064051_1560368327856441_2518658397608

441010377_763001795649237_57627958426549

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

மகிழ்ச்சி!

ஈரானில் இனியாவது முல்லாக்களின் அராஜகம் ஒழிந்து மக்கள் முக்கியமாக பெண்கள் அடிப்படை சுதந்திரத்தையாவது அனுபவிக்கும் வாய்ப்புகள் கிடைத்தால் இந்த மகிழ்ச்சி நீடிக்கும்.

ரணிலின் கல்லோயா திட்டம் இதனால் பாதிக்கப்பட்டால் இன்னும் அதிக மகிழ்ச்சி!

இவ‌ரின் இழ‌ப்புக்கு ப‌ல‌ நாட்டு ஜ‌னாதிப‌திக‌ள் இர‌ங்லைத் தெரிவிக்கின‌ம்

 

இவ‌ருக்கு ஒரு ப‌க்க‌ம் கெட்ட‌ பெய‌ர் இருந்தாலும் ம‌று ப‌க்க‌ம் ந‌ல்ல‌ பெய‌ரும் இருக்கு................................த‌ன்னை பெரிய‌ ஆள் போல் காட்டி கொள்ளும் ப‌ழ‌க்க‌ம் இவ‌ரிட‌ம் இல்லை......................ம‌ற்ற‌ நாட்டு ஜ‌னாதிப‌திக‌ளின் ம‌ன‌ங்க‌ளில் நீங்கா இட‌ம் பிடிச்சு இருக்கிறார் என்று இப்ப‌ தான் தெரியுது...............................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

 

ஈரான் அதிப‌ர் அங்கு செல்வ‌தை த‌விர்த்து இருக்க‌னும் இவ‌ரின் எதிரிக‌ள் அங்கு ம‌றைமுக‌மாய் இருப்ப‌து தெரியாம‌ வெளிக்கிட்டு க‌ட‌சியில் இந்த‌ அவ‌ல‌ நிலை அவ‌ருக்கு நேர்ந்து விட்ட‌து................................இர‌ண்டாம் க‌ட்ட‌ அமைப்பை அங்கு அனுப்பி ச‌ரி செய்து இருக்க‌லாம்

எல்லாம் ந‌ட‌ந்து முடிந்து விட்ட‌து இனி புல‌ம்பி என்ன‌ செய்வ‌து😥..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ரின் இழ‌ப்புக்கு ப‌ல‌ நாட்டு ஜ‌னாதிப‌திக‌ள் இர‌ங்லைத் தெரிவிக்கின‌ம்

 

இவ‌ருக்கு ஒரு ப‌க்க‌ம் கெட்ட‌ பெய‌ர் இருந்தாலும் ம‌று ப‌க்க‌ம் ந‌ல்ல‌ பெய‌ரும் இருக்கு................................த‌ன்னை பெரிய‌ ஆள் போல் காட்டி கொள்ளும் ப‌ழ‌க்க‌ம் இவ‌ரிட‌ம் இல்லை......................ம‌ற்ற‌ நாட்டு ஜ‌னாதிப‌திக‌ளின் ம‌ன‌ங்க‌ளில் நீங்கா இட‌ம் பிடிச்சு இருக்கிறார் என்று இப்ப‌ தான் தெரியுது...............................

 

 

மரண வீட்டிலும் உங்களுக்கு ஜோக் கூடிப் போய்ச்சுது😂!

வெனிசுவெலாவைக் கொள்ளையடிச்சு தன் சட்டைப் பைக்குள் போட்ட நிக்கலஸ் மதுரோ, ஆப்கானின் தலிபான் (பெண்களை பள்ளிக் கூடம் போனால் கொல்கிற கூட்டத்தின்) அமைச்சர், இவை போன்றவை மனதில் நிச்சயம் நீங்கா இடம் பிடித்திருப்பார். அப்படி பிடிக்கா விட்டால் தான் அது செய்தி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
29 minutes ago, Justin said:

மரண வீட்டிலும் உங்களுக்கு ஜோக் கூடிப் போய்ச்சுது😂!

வெனிசுவெலாவைக் கொள்ளையடிச்சு தன் சட்டைப் பைக்குள் போட்ட நிக்கலஸ் மதுரோ, ஆப்கானின் தலிபான் (பெண்களை பள்ளிக் கூடம் போனால் கொல்கிற கூட்டத்தின்) அமைச்சர், இவை போன்றவை மனதில் நிச்சயம் நீங்கா இடம் பிடித்திருப்பார். அப்படி பிடிக்கா விட்டால் தான் அது செய்தி!

என்ன‌ அண்ணா இது ஜோக் அடிக்கும் நேர‌மா.........................இந்தியா தொட்டு ப‌ல‌ நாடுக‌ள் ஈரான் அதிப‌ரின் இழ‌ப்புக்கு இர‌ங்க‌ல் தெரிவிப்ப‌தோடு இவ‌ர் எப்ப‌டி ம‌ற்ற‌ நாடுக‌ளுட‌ன் ந‌ல்ல‌ ந‌ட்பை பேனினார் என்று ஒவ்வொரு த‌ள‌த்திலும் கேட்க்க‌ கூடிய‌ மாதிரி இருக்கு..........................................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

1 hour ago, வீரப் பையன்26 said:

இவ‌ரின் இழ‌ப்புக்கு ப‌ல‌ நாட்டு ஜ‌னாதிப‌திக‌ள் இர‌ங்லைத் தெரிவிக்கின‌ம்

 

இவ‌ருக்கு ஒரு ப‌க்க‌ம் கெட்ட‌ பெய‌ர் இருந்தாலும் ம‌று ப‌க்க‌ம் ந‌ல்ல‌ பெய‌ரும் இருக்கு................................த‌ன்னை பெரிய‌ ஆள் போல் காட்டி கொள்ளும் ப‌ழ‌க்க‌ம் இவ‌ரிட‌ம் இல்லை......................ம‌ற்ற‌ நாட்டு ஜ‌னாதிப‌திக‌ளின் ம‌ன‌ங்க‌ளில் நீங்கா இட‌ம் பிடிச்சு இருக்கிறார் என்று இப்ப‌ தான் தெரியுது...............................

 

 

கோத்தா, மகிந்த ஆகியோர் பதவியில் இருக்கும் போது இறப்பு ஏற்பட்டிருந்தாலும் உலக நாடுகளின் தலைவர்கள் இரஙகலைத் தெரிவித்து இருப்பர்.

கிளாலி படுகொலைகள், ஜேவிபி காலத்தில் சிங்களவர்கள் மீது செய்த படுகொலைகள் எல்லாவற்றையும் தெரிந்தும் பிரேமதாசா கொல்லப்பட்ட போது உலக தலைவர்கள் இப்படித் தான் நடந்து கொண்டனர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, வீரப் பையன்26 said:

என்ன‌ அண்ணா இது ஜோக் அடிக்கும் நேர‌மா.........................இந்தியா தொட்டு ப‌ல‌ நாடுக‌ள் ஈரான் அதிப‌ரின் இழ‌ப்புக்கு இர‌ங்க‌ல் தெரிவிப்ப‌தோடு இவ‌ர் எப்ப‌டி ம‌ற்ற‌ நாடுக‌ளுட‌ன் ந‌ல்ல‌ ந‌ட்பை பேனினார் என்று ஒவ்வொரு த‌ள‌த்திலும் கேட்க்க‌ கூடிய‌ மாதிரி இருக்கு..........................................

நீங்கள் எந்தத் தளத்தில் "ஏனைய நாடுகளோடு நல்ல நட்பைப் பேணினார்.." என்று கேட்கிறீர்களோ பார்க்கிறீர்களோ தெரியாது. இது வரை கருத்து வெளிப்படுத்திய எல்லா நாடுகளும் "ஈரானுக்கு அனுதாபங்கள்" என்று தான் சொல்லியிருக்கின்றன - இது ஒரு நாகரீகமான செயல்முறை, அவ்வளவு தான்.

ஆனால், ஈரான் போலவே இருக்கும் காட்டுச் சட்ட நாடுகள் (இதில் இந்தியாவும் கூட வரலாம், மலிவு எண்ணை வாங்கியதால்😎!) மட்டும் தான் "நல்லவர் வல்லவர், உலகத் தலீவரை இழந்தோம்" என்று புலம்பியிருக்கின்றன. இவை எந்த நாடுகள் என்று தேடி, ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று புரிந்து கொள்ளும் இயலுமை உங்களுக்கு இருக்கிறதென நம்புகிறேன். 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Justin said:

நீங்கள் எந்தத் தளத்தில் "ஏனைய நாடுகளோடு நல்ல நட்பைப் பேணினார்.." என்று கேட்கிறீர்களோ பார்க்கிறீர்களோ தெரியாது. இது வரை கருத்து வெளிப்படுத்திய எல்லா நாடுகளும் "ஈரானுக்கு அனுதாபங்கள்" என்று தான் சொல்லியிருக்கின்றன - இது ஒரு நாகரீகமான செயல்முறை, அவ்வளவு தான்.

ஆனால், ஈரான் போலவே இருக்கும் காட்டுச் சட்ட நாடுகள் (இதில் இந்தியாவும் கூட வரலாம், மலிவு எண்ணை வாங்கியதால்😎!) மட்டும் தான் "நல்லவர் வல்லவர், உலகத் தலீவரை இழந்தோம்" என்று புலம்பியிருக்கின்றன. இவை எந்த நாடுகள் என்று தேடி, ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று புரிந்து கொள்ளும் இயலுமை உங்களுக்கு இருக்கிறதென நம்புகிறேன். 

இரங்கல் என்பது அந்த நாட்டுக்கு, அந்த நாட்டு மக்களுக்கு கொடுக்கப்படும் கௌரவம். 

ஒரு கெட்ட தகப்பன் என்றாலும் அவரது இழப்பிற்கு பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்வது போல....

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ஈரான் போலவே இருக்கும் காட்டுச் சட்ட நாடுகள்

ஈரான் காட்டு சட்ட நாடு எனின்......?
தேன் கூடுகள் போல வாழ்ந்த......
ஈராக் மீதான இரண்டாம் போர் அண்ணர் நடத்தியது ஏன்?
தன் மக்களையும் தன் நாட்டையும் செழிப்பாக வைத்திருந்த கடாபி மேல் போர் தொடுத்து நாட்டையே அழித்து நாசமாக்கியது ஏன்?

அறப்படித்த  காட்டு மூளைச்சட்டாம்பிகள். 
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

ஈரான் காட்டு சட்ட நாடு எனின்......?
தேன் கூடுகள் போல வாழ்ந்த......
ஈராக் மீதான இரண்டாம் போர் அண்ணர் நடத்தியது ஏன்?
தன் மக்களையும் தன் நாட்டையும் செழிப்பாக வைத்திருந்த கடாபி மேல் போர் தொடுத்து நாட்டையே அழித்து நாசமாக்கியது ஏன்?

அறப்படித்த  காட்டு மூளைச்சட்டாம்பிகள். 
 

ஓம், சதாமும் அவர் மச்சான் "கெமிக்கல் அலியும்" சேர்ந்து தேன் கூடு தான் வளர்த்தாய்ங்க😎! அதே போல கடாபி "நீங்கள் வந்து அடைக்கலம் புகுந்த ஜேர்மனியில்" ஒரு குண்டு வைத்து ஆட்களைக் கொன்றது அவர்களை மேலே 72 கன்னியருடன் அனுப்பி வைக்க மட்டும் தான், கெட்ட எண்ணமெல்லாம் கிடையாது அவருக்கு!

சீரியசாக மேலும் சொல்லலாம், ஆனால் உங்கள்  மெமறி பிரச்சினை சரிவரும் வரை நான் நேரம் விரயம் செய்யத் தயாரில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

ஓம், சதாமும் அவர் மச்சான் "கெமிக்கல் அலியும்" சேர்ந்து தேன் கூடு தான் வளர்த்தாய்ங்க😎! அதே போல கடாபி "நீங்கள் வந்து அடைக்கலம் புகுந்த ஜேர்மனியில்" ஒரு குண்டு வைத்து ஆட்களைக் கொன்றது அவர்களை மேலே 72 கன்னியருடன் அனுப்பி வைக்க மட்டும் தான், கெட்ட எண்ணமெல்லாம் கிடையாது அவருக்கு!

சீரியசாக மேலும் சொல்லலாம், ஆனால் உங்கள்  மெமறி பிரச்சினை சரிவரும் வரை நான் நேரம் விரயம் செய்யத் தயாரில்லை!

கூட்டி க‌ழிச்சு பார்த்தால் உந்த‌ உல‌கில் நூற்றுக்கு நூறு நேர்மையான‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் யாரும் கிடையாது....................இது அமெரிக்கா அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கும் ந‌ல்லாவே பொருந்தும்.........................

ப‌ல‌ ஆபிரிக்கா நாட்டை நாச‌ம் செய்த‌ ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ளை என்ன‌ என்று சொல்லுவ‌து

 

எல்லாம் அள‌வுக்கு அதிக‌மாய் ஆசைப் ப‌ட்டு பொய் செய்தியை ப‌ர‌ப்பி ம‌ற்ற‌ நாட்டு இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளை சுர‌ன்டி கொழுத்த‌ நாடுக‌ள் தான் அதிக‌ம்...............................ஈராக்கில் ச‌தாம் ம‌க்க‌ளை கொன்ற‌தை விட‌ அமெரிக்க‌ ப‌டைக‌ள் கொன்று குவிச்ச‌ ம‌க்க‌ள் தான் அதிக‌ம்

இன்று வ‌ரை ச‌தாம் அணுகுண்டு த‌யாரிக்க‌ தொட‌ங்கின‌ ஒரு ஆதார‌த்தையும் அமெரிக்கா ச‌ர்வ‌தேச‌த்துக்கு காட்ட‌ வில்லை......................இது தான் ஜ‌ன‌நாய‌க‌ வாதிக‌ளின் பெரிய‌ உருட்டு..........................................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

ஓம், சதாமும் அவர் மச்சான் "கெமிக்கல் அலியும்" சேர்ந்து தேன் கூடு தான் வளர்த்தாய்ங்க😎!

உலகில் பல்வேறு இனங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றும் மாறுபட்ட குணாதியங்கள் கொண்டவை. ஈராக்/ லிபியாவை பொறுத்தவரை தடியுடன் ஆட்சி செய்ய வேண்டிய இனம். அதை சரியாகவே செய்தார்கள். ஜனநாய்கத்தை மேற்குலகு திணித்தின் மூலம் அந்த நாடுகளில் தினசரி இரத்தக்களரி.
அதை விட அதே நாட்டவர்கள் நாகரீக மேற்குலகிற்கு அகதிகளாக படையெடுத்த பின்னரும் திருந்திய பாடில்லை....சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம்.....கத்திக்குத்துகள் இன்னும் பல.....

குற்றம் செய்தவன் மன்னிப்பு கேட்டாலும் நம்ம இனத்தில் உள்ளவர்கள் தம் கருத்து வெற்றிக்காக வாதாடிக்கொண்டே இருப்பார்கள். இதனால் தான் இன்று கஞ்சி குடித்துக்கொண்டிருக்கின்றோம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வீரப் பையன்26 said:

கூட்டி க‌ழிச்சு பார்த்தால் உந்த‌ உல‌கில் நூற்றுக்கு நூறு நேர்மையான‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் யாரும் கிடையாது....................இது அமெரிக்கா அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கும் ந‌ல்லாவே பொருந்தும்.........................

ப‌ல‌ ஆபிரிக்கா நாட்டை நாச‌ம் செய்த‌ ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ளை என்ன‌ என்று சொல்லுவ‌து

 

எல்லாம் அள‌வுக்கு அதிக‌மாய் ஆசைப் ப‌ட்டு பொய் செய்தியை ப‌ர‌ப்பி ம‌ற்ற‌ நாட்டு இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளை சுர‌ன்டி கொழுத்த‌ நாடுக‌ள் தான் அதிக‌ம்...............................ஈராக்கில் ச‌தாம் ம‌க்க‌ளை கொன்ற‌தை விட‌ அமெரிக்க‌ ப‌டைக‌ள் கொன்று குவிச்ச‌ ம‌க்க‌ள் தான் அதிக‌ம்

இன்று வ‌ரை ச‌தாம் அணுகுண்டு த‌யாரிக்க‌ தொட‌ங்கின‌ ஒரு ஆதார‌த்தையும் அமெரிக்கா ச‌ர்வ‌தேச‌த்துக்கு காட்ட‌ வில்லை......................இது தான் ஜ‌ன‌நாய‌க‌ வாதிக‌ளின் பெரிய‌ உருட்டு..........................................

 

 

அமெரிக்கன் வியற்நாமில் கொன்றான், ஐரோப்பியன் அதற்கு முன் அவுசிலும், அமெரிக்காவிலும் கொன்றான், எனவே  நாம் சதாமையும், கடாபியையும், இப்ப றைசியையும் மனிதாபிகள் றேஞ்சுக்கு வைத்துக் கும்பிட வேண்டுமென்ற புளித்துப் போன வாதம் பல காலமாய் பரவி வருவது தான். இரண்டு தரப்பையும் நேர்மையாகச் சுட்டிக் காட்டுவதில், கண்டிப்பதில் என்ன பிரச்சினை ஒரு மனிதனுக்கு இருக்க முடியும் என்கிறீர்கள்? இதை நான் செய்திருக்கிறேன் (நீங்கள் வாசித்தே இருக்க மாட்டீர்கள்), ஆனால் நீங்கள் செய்திருக்கிறீர்களா?

ஆயிரக் கணக்கில் தம் மக்களையே கொன்று குவிக்கும் சர்வாதிரிகளைக் குறை சொன்னால்  உங்களுக்கும், தாத்தாவுக்கும் ஏன்  உங்களையே குற்றம் சொன்னது போன்ற ஆத்திரம் வருகிறதென யோசிக்கிறேன்! ஒரு பதில் தான் கிடைக்கிறது😎.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


 மேற்குலகில் வாழ்கின்ற ஈழதமிழர்களின்  போர் நுட்ப ஆய்வாளர்கள் அருஸ் உட்பட எதிர்பார்த்தேன்🤣

________________________

ஜனநாயக சுதந்திரத்தை வளர்த்து எடுக்க பாடுபடும் இரு நாடுகளான ஈரானும் ஈராக்கும் தங்களுக்கிடையில் கடந்தகாலங்களில் பல வருடங்களாக போர் செய்தார்களாமே

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
38 minutes ago, Justin said:

ஆயிரக் கணக்கில் தம் மக்களையே கொன்று குவிக்கும் சர்வாதிரிகளைக் குறை சொன்னால்  உங்களுக்கும், தாத்தாவுக்கும் ஏன்  உங்களையே குற்றம் சொன்னது போன்ற ஆத்திரம் வருகிறதென யோசிக்கிறேன்! ஒரு பதில் தான் கிடைக்கிறது😎.

இஞ்சை பாரடா கூத்தை....
தன்ரை நாடு பவுத்திரமாம்
ஆனால் மற்றைவன்ரை நாடுகளிலை ஒரே குண்டு மழை பொழியலாமாம்..........👈🏽😎

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்த நால்வர் கைது! நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் தம்பதியினர் உட்பட நால்வரை பிலியந்தலை, படகெத்தர பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸாரின்  விசாரணையில் ” குறித்த சீன நிறுவனத்திற்கு தரம் மற்றும் செயல்திறனைப் பொறுத்து ஒரு வீடியோவிற்கு 50,000 முதல் 100,000  ரூபாய்  வரையில்  சந்தேக நபர்கள் விற்பனை செய்து வந்துள்ளமை” தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388415
    • Published By: DIGITAL DESK 7 17 JUN, 2024 | 02:46 PM   முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4238 சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 3389 தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்றையதினம் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வடமாகாணத்திலே 2415 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம். கிட்டத்தட்ட 5 இலட்சத்தி தொண்ணூறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு காணி இல்லை. ஏற்கனவே விடுதலைபுலிகள் மௌனிக்கப்பட்ட காலங்களிற்கு பின்னர் பூர்விகமான மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்து. 4238 சிங்கள  குடும்பங்களுக்கு காணிகள் வழங்கி வீட்டு வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அரசாங்கம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்தே வழங்கியிருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் 47455 மொத்த குடும்பங்களும், 140931 மக்கள் தொகையாக காணப்படுகின்றது. இதில் தமிழர்களுடைய பூர்வீக இடங்களில் 4557 குடியமர்த்தப்பட்ட சிங்கள குடும்பங்களை சேர்ந்த 12545 பேரும், முஸ்லீம் மக்களாக 1675 குடும்பங்களை சேர்ந்த 6382 பேரும் தமிழ் மக்களாக 41210 குடும்பங்களை சேர்ந்த 121799 பேருமாக காணப்படுகிறார்கள்.  குறிப்பிட்டு கூறக்கூடிய விடயம் என்னவெனில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசன குளங்கள் அதனோடு சேர்ந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு 4557 குடும்பங்களில் பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் ஆமையன்குளம், முந்திரிகைகுளம், மறிச்சுக்கட்டி குளம் ஆகிய குளங்களையும் அதனோடு இணைந்த நிலப்பரப்புகளையும் அபகரித்தே சிங்கள மக்களுக்கு வழங்கி தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களையும், குளங்களையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கும் நிலமையை ஆட்சியாளர்கள் கொக்குத்தொடுவாய் , கொக்குளாய், கருநாட்டுக்கேணி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்கள். இது தவிர 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 28676 இளைஞர், யுவதிகள் தமக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் தருமாறு விண்ணப்பித்த ஒரு நடவடிக்கை இருக்கின்றது. அரசாங்கமே விண்ணப்பிக்குமாறு அறிவித்தல் வழங்கியிருந்தார்கள். ஆனால் இன்றுவரைக்கும் அவர்களுக்கான எதுவித காணிகளும் வழங்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/186265
    • 17 JUN, 2024 | 02:28 PM ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிப்பதன் மூலமே வெற்றிக்கான வாய்ப்பாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாவில் புனரமைக்கப்பட்ட வீதி திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் தாளங்குடா கடற்கரை வீதி சுமார் 92இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.   கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.   இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்சணாகௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.      இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர், இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இன்று எந்த கட்சியுமே பலமான நிலையில் இல்லை. ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும்போது சக்திவாய்ந்த தலைவர் ஒருவரை இந்த நாட்டில் தேர்வுசெய்யமுடியும். யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்கு 51வீதமான வாக்குகள் தேவையாகவுள்ளது. அவ்வாறான வாக்குகளைப்பெறும் நிலையானது இன்றைய நிலையில் எந்த கட்சியனாலும் கடுமையான போட்டியாகவே இருக்கும். அதனால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைவரும் இன்றிணையும்போது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/186267
    • ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மொத்த மதிப்பெண்ணை இனிமேல் பரீட்சையின் வினாத்தாள்களில் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (ஜூன் 16) தெரிவித்தார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 2025ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், 1-6-10 முன்னோடித் திட்டங்களின் கீழ் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையில் 30% புள்ளிகள் தரம் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் பெற்ற கல்வியின் மூலம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இதை முறையாக மதிப்பிடுவது ஆசிரியரின் பொறுப்பு என்றும், பாடசாலை நிர்வாகத்தினர் ஆசிரியர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். புதிய உலகின் கல்விப் போக்குகளை மனதில் கொண்டு இந்தக் கல்வி முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார். நாத்தாண்டிய தம்மிஸ்ஸர வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடி தொழில்நுட்ப கட்டிடத்தை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு 2500 அதிநவீன ‘ஸ்மார்ட் போர்டுகள்’ வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடசாகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, நட்பு ரீதியான கல்வி வாய்ப்புகளை வழங்கும் வகையில் ஒரே வலையமைப்பில் இணைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடர்பான ஆசிரியர் கையேடு பாட நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப சுற்றில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கணிதம், இரசாயனவியல், பௌதீகம், உயிரியல், சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஊடகம் மற்றும் தொழிநுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/303970
    • உலகம் முழுவதும் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை ஹஜ் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் பரந்து விரிந்த அதிக மக்களைக் கொண்ட இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம் (முதலாவது கிறிஸ்துவம்) ஆகும் . இந்நிலையில் இன்று ஹஜ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தேசியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது உள்ள உலக நடப்பின்படி இஸ்லாமிய மக்களைக்கொண்ட பாலஸ்தீன நாட்டின்மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் இதுவரை சுமார் 37,000 மக்கள் பலியாகியுள்ளனர். வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட மசூதிகளே காஸாவில் மிஞ்சுகின்றன. முகாம்களில் தங்களின் துயர நிலையிலும் இறுக்கமான மனதுடன் பாலஸ்தீன மக்கள் கொண்டாடும் பண்டிகையாக இது அமைகிறது . தற்காலிகமாக தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திவைத்துள்ளதால் சற்று ஆசுவாசப்பட அவர்களுக்கு கிடைத்துள்ள நேரம் இது. அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் வர உள்ள நிலையில் காஸா போர் நிறுத்தத்துக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். இன்று ஹஜ் பண்டிகையை முன்னிட்டு முக்கியத்துவம் வாய்ந்த வாழ்த்துச் செய்தி ஒன்றை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்த போரின் கொடூரங்களை நிறுத்துவதற்கான சரியான மற்றும் சிறந்த வழி இதுதான். ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அப்பாவி மக்களும் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். தங்களின் வீடுகளையும் சொந்தங்களையும் இழந்து நிற்கும் அம்மக்களின் வலி மிகவும் ஆழமானது. 3 கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். இதற்கு ஹமாஸும், இஸ்ரேல் அரசும் உடன்பட்டு இந்த வன்முறை வெறியாட்டங்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். இறைத்தூதர் இப்ராஹிம் கடவுளுக்காக தனது மகனையே தியாகம் செய்ய முன்வந்த இந்த ஹஜ் திருநாளில் காஸாவில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/303943
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.