-
Tell a friend
-
Topics
-
Posts
-
1 பிரபாகரன் ஜாதியை ஒழித்தார் 2 தமிழர்களை ஒரு கோட்டுக்குள் ஒற்றுமையாய் வைத்து இருந்தார் 3 கொண்ட கொள்கையில் உறுதியாய் நின்றவர் 4 ஈழ தமிழர்களுக்கு நாடு வேணும் என்று போராடி தன் குடும்பத்தையே இழந்தவர் 5 இந்த நூற்றாண்டில் தமிழ் இனம் என்ர ஒன்று இருக்கு என்று உலகத்துக்கு உணர்த்தியவர் 6 வாழ்வா சாவா என்ர போராட்டத்தில் 2009களில் பல நாடுகளை எதிர்த்து போர் செய்தவர் 7 காசுக்கு ஆசைப் படாம சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப் படாம எளிமையாய் வாழ்ந்த தலைவர் 8 கருப்பு யூலை கலவரத்தின் போது தமிழர்களுக்காக போராடினவர் 9 தமிழர்களின் போராட்ட மீட்ப்புக்காக பசித்த போது அவியாத மரவள்ளி கிழங்கு சாப்பிட்டவர் 10 சொல்லுக்கு முன் செயல் இருக்கனும் என்றுசொன்னவர் . அதை செயலிலும் செய்து காட்டினவர் 11 நான் பெரிது நீ பெரிது என்று வாழாம நாடு பெரிது என்று வாழனும் என்று உரக்க சொன்னவர் /கபோதி சம்பந்தர் தமிழர்களுக்கு செய்த வேதனையை நீங்கள் எழுதுங்கோ நான் வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன்😉....................... இதில் எது பலன்? 👆
-
By ஏராளன் · பதியப்பட்டது
08 JUL, 2024 | 04:43 PM மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவதியின் காதலனான பிரதான சந்தேக நபர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று (8) மூதூர் நீதிமன்றின் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நாளை வரை (9) பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படுகொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (5) ஆறு சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, கடந்த சனிக்கிழமை (6) மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது எதிர்வரும் 19ஆம் திகதி வரை அந்த ஆறு பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே பிரதான சந்தேக நபரான படுகொலை செய்யப்பட்ட யுவதியின் காதலன் நேற்றைய தினம் (7) மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை யுவதியின் காதலன், காதலனின் தந்தை, சகோதரி, அவரது வீட்டில் வேலை செய்தவர், ஜேசிபி வாகன சாரதிகள் இருவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி (வயது 25) என்ற யுவதி காணாமல் போயிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (5) பாழடைந்த கிணறு ஒன்றில் கல்லோடு கட்டி போடப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இதன்போது அவருடைய ஆவணங்கள் அடங்கிய கைப்பை, உடைந்த தலைக்கவசம் என்பனவும் மீட்கப்பட்டிருந்தன. இந்த சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோது தலைப்பகுதி தாக்கப்பட்டு மண்டையோடு உடைந்திருந்ததாகவும், தலையின் பின்பகுதியில் பாரிய துளை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தீவிர விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார், காதலனின் வீட்டில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரும்புக்குழாய் உட்பட சில சான்றுப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். https://www.virakesari.lk/article/187972 -
By ஏராளன் · பதியப்பட்டது
பிரித்தானிய தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக எண் 10 டவுனிங் தெருவுக்கு குடிபெயர்கிறார் . இங்கு பல ஆண்டுகளாக, பிரதம மந்திரிகள் வந்து போயிருக்கிறார்கள், ஆனால் டவுனிங் தெருவில் எப்போதும் குடியிருப்பாளராக இருக்கிறார் லெரி. அதாவது லெரி என்ற செல்லப் பூனை. ஐந்து பிரிட்டிஷ் பிரதமர்களுடன் வாழ லெரிக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. லெரி சந்திக்கும் ஆறாவது பிரதமர் ஸ்டார்மர் ஆவார். கடந்த 14 ஆண்டுகால அரசியல் எழுச்சியின் போது உறுதியாக இருந்த ஒரே ஒருவராக லெரியை பிரிட்டிஷ் ஊடகங்கள் சித்தரித்துள்ளன. லெரி ஜனவரி 13, 2007 இல் பிறந்தது. லெரிக்கு 17 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. லெரி தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பிரதம மந்திரியுடன் பழகப் போவது இதுவே முதல் முறை. ரிஷி சுனக் பிரதமர் பதவியை விட்டு வெளியேறிய பிறகு அவரது அதிகாரபூர்வ செல்லப்பிராணியும் இல்லத்தை விட்டு வெளியேறிது , அச் செல்லப்பிராணி அவரது செல்ல நாய் நோவா, இல்லத்தை விட்டு நோவா வெளியேறியது. லெரிக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும். ஏனெனில் நோவாவுக்கும் லெரிக்கும் ஒத்துப் போவதில்லை . இருப்பினும்,லெரிக்கு தற்போது ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. புதிய பிரதமருடன் புதிய செல்லப்பிராணியும் வருகிறது. பிரிட்டிஷ் ஊடகங்கள், லெரிக்கு செல்லப்பிராணியால் சவால் விடப்படும் என்றும், லெரியின் போட்டியாளராக மாறக்கூடும் என்றும் குறிப்பிடுகின்றன. இந்த செல்லப் பிராணி ஜோ ஜோ. ஜோ ஜோ லெரியைப் போலவே கொழுத்த பூனை. லெரிக்கும் ஜோ ஜோவுக்கும் சண்டை வரலாம் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன . அதற்குக் காரணம், வேறு எந்தப் பூனையும் நம்பர் 10 டவுனிங் தெருவுக்கு அருகில் நடமாடுவதை லெரி விரும்புவதில்லை. ஜோ ஜோ லெரியால் தொந்தரவு செய்யப்பட்டால், ரிஷி போல லெரியும் நம்பர் 10 டவுனிங் தெருவை இழப்பது உறுதி என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/305457 -
By ஏராளன் · பதியப்பட்டது
இலங்கையிலுள்ள மத்திய கல்லூரிகள் மற்றும் தேசியப் பாடசாலைகள் செயற்கை நுண்ணறிவு பாடசாலைகளாக மேம்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி ஹால் டி கோல் விடுதியில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். தற்போது உலகம் நவீனத் தொழில்நுட்பத்துடன் முன்னேறி வருகிறது அதற்கமைய, இலங்கையின் கல்வி முறையும் நவீனத் தொழில்நுட்பத்துடன் நடத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் அமைச்சினால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பாடசாலைகளில், செயற்கை நுண்ணறிவுக் கழகங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப கல்வியை தொடங்கி சில வருடங்கள் ஆகிறது. இந்த ஆண்டு நாம் ஆரம்பித்திருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஆசிரியர்களுக்குச் சிறந்த பயிற்சி தேவைப்படும் அதற்குத் தேவையான பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்தும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/305476
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 0 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts