Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

தமிழர் வரலாற்றில் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக  உலக ஜதார்த்தத்தை புறந்தள்ளி தனி ஆவர்தன வீர அரசியல் செய்து, உள்ளதும் போச்சையா நொள்ளைக்கண்ணா  என்ற  கதையாய் தமிழர் அரசியல் தொடர்கிறது.  

படிப்படியாக அங்குலம் அங்குலமாக  தமது அரசியல் தந்திரோயபம்  மூலம் பெரிய கட்சிகளுக்குள் ஊடுருவி தமது சமுதாயத்தை ஶ்ரீலங்காவில் பலப்படுத்திய  முஸலீம் அரசியல்வாதிகளின் தந்திரோபங்களைக் கூட தமிழ் அரசியலில் ஈடுபடும் தாயக/  புலம் பெயர் தமிழ் தேசிய  அரசியல்வாதிகளால் செய்ய முடியவில்லை.  இன்றைய நிலையில் தமிழரின் பொருளாதார சமூக கட்டமைப்புகளை வட கிழக்கில்  பலப்படுத்த தேவையான கோரிக்கைகளை வைத்து பேரம் பேசி அதை நிறைவேற்றி தமது அரசியலைத் தொடர்ந்திருக்கலாம்.   அதை விடுத்து பொது வேட்பாளர் என று ஒரு கோமாளிக்கூட்டம் கூத்தாட  இப்போது எந்த பயனும் அற்ற முடிவையே தமிழரசுக் கட்சியும் எடுத்துள்ளது என்றே நினைக்கிறேன்.  தமது வெற்று கோஷங்களை வைத்து தமிழ் தேசிய வெறித்தன அரசியலை செய்து மிக விரைவில் இரண்டாவது பெரும்பான்மை என்ற நிலையில் இருந்து மூன் றாவது சிறுபான்மை இனம் என்ற நிலைக்கு தமிழரை கொண்டுவந்துவிட்டே புலம் பெயர் / தாயக தமிழ் தேசிய வெறியர்கள் தமது கண்களை மூடுவார்கள். 

 

1 hour ago, nunavilan said:

தமிழரசு கட்சியில் இருந்து பொது வேட்பாளராக  அரியநேந்திரன் போட்டியிட்டது கட்சிக்கு விரோதமானது என்றனர். இப்போ சஜித்துக்கு ஆதரவு என்று ஒரு சிலர் அக்கட்சியில் இருந்து  அறிவித்து இருப்பது கட்சிக்கு விரோதமானதில்லையா??
முஸ்லிம்களும்  ஜனாதிபதி வேட்பாளர்களாக உள்ளனர்? எம்மை மாதிரி குடும்பி பிடி சண்டை இல்லையே? ஏன்? அவர்களும் சிறுபான்மையினர். அதே போல் மலையகத்தின் இருந்தும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் உள்ளார். யாரும் அவருக்கு சேறடித்ததாக தெரியவில்லை.

 

முன்னெப்போதோ நடைபெற்ற பேட்டி ஒன்றில் ரவூப் ஹக்கீம் "சிறுபான்மையினர் என்பது தேசியக் கட்சிகளின் செல்லப்  பிள்ளை"" என்று கூறியது முஸ்லிம்களின் ராசதந்திரத்தை அச்சொட்டாகக் காட்டுகிறது. 

தமிழ்க் கட்சிகளை சிங்களத்திற்கெதிராக இந்தியா உசுப்பேற்றி விடுவது சிங்களத்தை தனது கட்டுக்குள் வைத்திருப்பதற்காக என்பதுகூட உந்த முட்டாள் டமில் கட்சிகளுக்கு இன்னும் புரியாததுதான் ஆச்சரியமாய் இருக்கிறது. 

1 hour ago, Paanch said:

 

நிலத்தையும் புலத்தையும் சேர்த்துக் குழைத்து முறுக்குச் சுட தமிழரசுக் கட்சியின் சில தலைகள் முயல்வது தெரிகிறது. புலத்திற்கு பணத்தால் சுடும் தகுதி இருந்தாலும்… நிலம் மானத்தால் சுடும் என்று நம்பலாம். சிங்களத்துடன் பேரம்பேச ஒரு தன்மானத் தமிழனை உருவாக்குவது அவசியம்.🤔

 

தன்மானத் தமிழனாய் மட்டும் இருப்பது போதாது. அந்தத் தமிழனுக்குப் புத்தியும் நரித்தனமும், தன் இனத்தின் மீதான உண்மையான பக்தியும்  அவசியம். 

1 hour ago, புலவர் said:

சுமத்திரனும் சாணக்கியனும் சஜஸத்தை ஆதரித்து சஜித்தின் வெற்றிவாய்ப்பைதட்டிப் பறித்து ரணிலிடம் கொடுக்கப் டபோகிறார்கள் போல் தெரிகிறது. அது சரி கஜித் சுயாட்சித் துpர்வுக்கு எழுத்து மூல உத்திரவாதம் அளித்து விட்டாரா?. சிறிதரன் தெரிஞ்சு கொண்டுதான் வெளிநாட்டுக்குப் போய் விட்டார். நான் இல்லாத சநரமாய் பார்த்து இந்த விசயம் நடந்திட்டுது. நான் இருந்திருந்தால் நிலைமைமே தலகீழாக மாறியிருக்கும். என்று தேர்தல் முடிந்த பின்னர் விளக்கம் கொடுப்பார். கழுவுற மீனில நழுவுற மீன் அவர்.

இதுவும் சாத்தியம்தான். ஒருவரையும் நம்ப முடியாது என்பதுதான் உண்மை. 

  • Replies 165
  • Views 10.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இந்தக் கூட்டத்திற்கு மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன் போன்றவர்கள் சமூகமளிக்கவில்லை.  இது... சுமந்திரன் குரூப்பின், மற்றுமொரு  தில்லாலங்கடி வேலை. 😎 கட்சியை நடுத் தெருவில் வைத்து,  நாறப் பண்ணிக் கொண்டு இரு

  • சாணக்கியனும் சுமந்திரனும் சஜித்துக்கு வாக்கை போட சொன்ன படியால் தமிழ் மக்கள் நான் முந்தி  நீ முந்தி என வாக்களிக்க போகிறார்கள்.  மிக முக்கியமாக தமிழருக்கு தீர்வொன்று வர போகிறது. மேற்கு நாடுகளுக்க

  • நிழலி
    நிழலி

    சஜித்தின் தோல்வியை இனி எவராலும் தடுக்க முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

இந்தியன் நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமே சுமந்திரனும் அவர் சார்ந்த தமிழரசு கட்சியின் சஜித்துக்கு ஆதரவு நிலைப்பாடு ஆகும். ரணிலை விலக்கி அனுரவிக்கு எதிராக சஜித்தை தனிப்பெரும் வேட்பளராக்குவது என்பது தற்பொழுது ராஜதந்திர/அரசியல் வடடாரங்களின் பேசுபொருளாக உள்ளது. அனுராவுக்கு இருப்பது மக்கள் அலை அல்ல அது சுனாமியாகும்.

உங்களுக்கு இதை எழுதும்போது சிரிப்பு வரவில்லை என்றால் நீங்கள் வேறிடத்தில் இருக்க வேண்டிய ஆள் .

8 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6968.jpeg.ef0f543f11835ee4f8ff

முக்கியமானவர்களுக்கு அழைப்பே போகவில்லையாம் இது சுமட்😀டிரனின்  அறிக்கையாம் .

9 hours ago, நிழலி said:

சஜித்தின் தோல்வியை இனி எவராலும் தடுக்க முடியாது!

நீங்க தீர்க்க தரிசி .

சிலவேளை ரணிலே பெட்டியை கொடுத்து அவசர அவசரமாய் சஜித்துக்கு ஆதரவு சொல்லும் படி ஏவியிருக்கலாம் காரணம் அனுராவின் எழுச்சி இரண்டு கிழமைக்கு முன் யார்க்கு ஆதரவு சன்று கூறிய கூட்டம் இப்ப ஏன் அவசர அவசரமாய் இந்த அறிக்கை ?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

“இலங்கை தமிழரசுக் கட்சிக்கு நன்றி” - சஜித்

01 SEP, 2024 | 07:00 PM
image
 

ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி தனக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நன்றியை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகத்தில்  இதனை பதிவு செய்துள்ள அவர், நாங்கள் இணைந்து அனைவரும் வெற்றிபெறும், இனவெறியில்லாத  பாரபட்சம் இல்லாத எதிர்காலத்தை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார்.

ஐக்கியம் வலு பகிர்ந்துகொள்ளப்பட்ட நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்காலத்தை உருவாக்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/192590

 

9 hours ago, விசுகு said:

https://www.facebook.com/share/v/z8B8KtB8jSchn6UW/

வெளியான சுமந்திரனின் தில்லுமுல்லு விளையாட்டு! 

கட்சி உறுப்பினர்களுக்கு முறையாக அறிவிக்காமல் திட்டமிட்டு சுமந்திரன் எடுத்த தீர்மானம் என யோகேஸ்வரன் ஐயா வெளிப்படுத்தியிருக்கிறார். 

இன்று 1ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில் நடைபெறும் என்று 28/08/2024 திகதியிடப்பட்ட கடிதம் 29 ஆம் திகதி அன்று அனைத்து மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் கிடைக்கப்பெற்றது. கட்சியின் யாப்பின் படி மத்தியகுழு கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன் எழுத்துமூல அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது யாப்பு விதி. 

1) யாப்பு விதியை மீறி நடாத்தப்பட்ட கூட்டம் செல்லுபடியற்றது. அதுமட்டுமின்றி அங்கு எடுத்த தீர்மானமும் செல்லுபடியற்றது. 

2) 26 ஆம் திகதி கட்சி தலைவர் மாவை ஐயாவை சந்தித்த சிறீதரன் எம்பி “நான் 29 ஆம் திகதி இங்கிலாந்து செல்கிறேன், 6ஆம் திகதி தான் திரும்ப வருவேன். அதற்கிடையில் முக்கிய கூட்டங்களை தவிர்க்குமாறு” கேட்டிருந்தார்.

3) சிறீதரன் எம்பியின் கோரிக்கையை ஏற்ற மாவை ஐயா 8ஆம் திகதியில் இருந்து 10ஆம் திகதிக்கிடையில் தான் கூட்டம் போடுவம் சிறீ என்று உறுதியளித்திருந்தார். 

இன்று நடந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரன் MP, வன்னி MP சார்ள்ஸ், யோகேஸ்வரன், ஶ்ரீநேசன், சரவணபவன், ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா போன்ற முக்கிய தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்குபற்றவில்லை. 

46 மத்திய குழு உறுப்பினர்களில் 25 பேர் தான் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அதில் 6 பேர் தமிழ் பொது வேட்பாளருக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். ஆக சுமந்திரன் அணியின் 19 பேர் எடுத்த தனித்தீர்மானம் தான் சஜித்தை ஆதரவளிப்பது என்பது. 

மட்டக்களப்பை சேர்ந்த சிறீநேசன், யோகேஸ்வரன் ஆகியோருக்கு இன்றைய கூட்டம் தொடர்பில் இதுவரை எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை. 

இந்த நிலையில் தான் பலமான தரப்பை உள்ளீர்க்காமல் சுமந்திரன் அணியால் திட்டமிட்டு தனித்து சஜித்திற்கு ஆதரவு என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிவில் மக்கள் பதில் சொல்வார்கள். 

இந்த முடிவு தமிழரசுக்கட்சியின் முடிவு இல்லை என்பதை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அவசரப் படாதீங்க சஜித் பிரேமதாச.
சுமந்திரன்தான்   உங்களை ஆதரித்துள்ளார்.  

தலைவர்கள் எவருமே இல்லாமல்...  தமிழரசு கட்சி மத்தியகுழுக் கூட்டம் என்ற பெயரில்  ஒன்றை சுமந்திரன்  கூட்டி  உங்களை ஆதரிப்பதாக கேலிக்கூத்து ஆடியிருக்கின்றார்.  

இந்த முடிவு தமிழரசுக்கட்சியின் முடிவு இல்லை என்பதை... 
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உறுதிப்படுத்தியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

457747323_915176983980608_53406318581052

சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சஜித்திற்கு ஆதரவு – தமிழரசுக் கட்சியின் முடிவு செல்லுபடியற்றதா?

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அறிவித்துள்ள போதும், அந்தக் கட்சியின் பலரும் அந்தத் தீர்மானத்தை எதிர்க்கின்றனர்.

கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டபோது மத்திய குழுவில் 18 பேர் மாத்திரமே சமூகளமளித்திருந்ததாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையும் செல்லுபடியற்றது எனவும் மாவை சேனாதிராஜா கூறியிருக்கிறார்.

தேர்தலில் போட்டியிட தமிழ் பொது வேட்பாளரை நியமிக்க சில தமிழ் அரசியல் கட்சிகளும், குழுக்களும் எடுத்த தீர்மானத்திற்கு தமிழரசுக் கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவருக்கு ஆதரவான சில உறுப்பினர் எதிர்ப்பு வெளியிட்டிருக்கின்றனர்.

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க முடிவெடுப்பதற்கு முன்னர் இலங்கை தமிழரசு கட்சி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேறு சில முக்கிய வேட்பாளர்களை சந்தித்திருந்தது.

நேற்றைய கூட்டத்தில் தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், சார்லஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

இதனிடையே, நேற்று இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தனக்கு அழைப்பு விடுக்கப்படாமை குறித்து கட்சியின் செயலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சியின் தலைமை இன்றி எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் கண்டிக்கத்தக்கது என அந்த கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், கொழும்பு கிளை தலைவருமான சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தமிழரசு கட்சியில் சுமந்திரனை மையப்படுத்திய சில உறுப்பினர்கள் எடுத்த தீர்மானத்திற்கு சஜித் பிரேமதாச நன்றி கூறியதுடன், “நாம் அனைவரும் ஒன்றாக, வெற்றிபெறும் எதிர்காலத்தை உருவாக்குவோம்” எனவும் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

http://www.samakalam.com/சஜித்திற்கு-ஆதரவு-தமிழர/

சஜித் மேடையில் ஏறமாட்டேன் என்கிறார் சி.வி.கே.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்திருந்தாலும், சஜித்தை ஆதரித்து எந்த பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லையென அந்த கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இதனை அவர் அறிவித்திருந்தார்.

நேற்றைய மத்தியகுழு கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் அந்த தீர்மானத்தை ஆதரித்தனர்.

இதேபோல, பொதுவேட்பாளர் ஆதரவு நிலைப்பாட்டை கிளிநொச்சி கிளை சார்பில் த.குருகுலராஜா சமர்ப்பித்தார்.

என்றாலும், கூட்டத்தில் கலந்து கொண்ட 26 பேரில் பலர் சஜித்தை ஆதரித்தனர்.

ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடு தொடர்பில் கட்சிக்குள் நடந்த கலந்துரையாடல்களில், யாரையும் ஆதரிக்காமல் மக்கள் விருப்பமானவர்களுக்கு வாக்களிக்கலாமென அறிவிக்கலாமென சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார்.

அதுவே அவரது நிலைப்பாடாகவும் இருந்தது. எனினும், நேற்றைய கூட்டத்தில் சஜித் ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்திற்கு சீ.வீ.கே.சிவஞானமே தலைமைதாங்கினார்.

உடல்நல குறைவினால் மாவை கலந்துகொள்ளாத நிலையில், சீ.வீ.கே தலைமைதாங்கினார். கூட்டத்தின் போது தனது நிலைப்பாட்டை அவர் அறிவித்தார்.

சஜித்தை ஆதரிப்பதாக கட்சி அறிவித்தாலும், நான் சஜித் ஆதரவு பிரச்சாரங்களில் ஈடுபடமாட்டேன். சஜித்தை ஆதரித்து மேடைகளில் பேசமாட்டேன் என்றார்.
 

https://thinakkural.lk/article/308748

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

தமிழர் வரலாற்றில் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக  உலக ஜதார்த்தத்தை புறந்தள்ளி தனி ஆவர்தன வீர அரசியல் செய்து, உள்ளதும் போச்சையா நொள்ளைக்கண்ணா  என்ற  கதையாய் தமிழர் அரசியல் தொடர்கிறது.  

படிப்படியாக அங்குலம் அங்குலமாக  தமது அரசியல் தந்திரோயபம்  மூலம் பெரிய கட்சிகளுக்குள் ஊடுருவி தமது சமுதாயத்தை ஶ்ரீலங்காவில் பலப்படுத்திய  முஸலீம் அரசியல்வாதிகளின் தந்திரோபங்களைக் கூட தமிழ் அரசியலில் ஈடுபடும் தாயக/  புலம் பெயர் தமிழ் தேசிய  அரசியல்வாதிகளால் செய்ய முடியவில்லை.  இன்றைய நிலையில் தமிழரின் பொருளாதார சமூக கட்டமைப்புகளை வட கிழக்கில்  பலப்படுத்த தேவையான கோரிக்கைகளை வைத்து பேரம் பேசி அதை நிறைவேற்றி தமது அரசியலைத் தொடர்ந்திருக்கலாம்.   அதை விடுத்து பொது வேட்பாளர் என று ஒரு கோமாளிக்கூட்டம் கூத்தாட  இப்போது எந்த பயனும் அற்ற முடிவையே தமிழரசுக் கட்சியும் எடுத்துள்ளது என்றே நினைக்கிறேன்.  தமது வெற்று கோஷங்களை வைத்து தமிழ் தேசிய வெறித்தன அரசியலை செய்து மிக விரைவில் இரண்டாவது பெரும்பான்மை என்ற நிலையில் இருந்து மூன் றாவது சிறுபான்மை இனம் என்ற நிலைக்கு தமிழரை கொண்டுவந்துவிட்டே புலம் பெயர் / தாயக தமிழ் தேசிய வெறியர்கள் தமது கண்களை மூடுவார்கள். 

 

9 hours ago, Kapithan said:

 

முன்னெப்போதோ நடைபெற்ற பேட்டி ஒன்றில் ரவூப் ஹக்கீம் "சிறுபான்மையினர் என்பது தேசியக் கட்சிகளின் செல்லப்  பிள்ளை"" என்று கூறியது முஸ்லிம்களின் ராசதந்திரத்தை அச்சொட்டாகக் காட்டுகிறது. 

தமிழ்க் கட்சிகளை சிங்களத்திற்கெதிராக இந்தியா உசுப்பேற்றி விடுவது சிங்களத்தை தனது கட்டுக்குள் வைத்திருப்பதற்காக என்பதுகூட உந்த முட்டாள் டமில் கட்சிகளுக்கு இன்னும் புரியாததுதான் ஆச்சரியமாய் இருக்கிறது. 

தன்மானத் தமிழனாய் மட்டும் இருப்பது போதாது. அந்தத் தமிழனுக்குப் புத்தியும் நரித்தனமும், தன் இனத்தின் மீதான உண்மையான பக்தியும்  அவசியம். 

இதுவும் சாத்தியம்தான். ஒருவரையும் நம்ப முடியாது என்பதுதான் உண்மை. 

இஸ்லாமியர்களி இந்த தந்திரோபாயம் இலங்கை உள்நாட்டு போர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டது என்பது உண்மைதான், ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் எக்காலத்திற்கும் பொருந்தும், சிங்கள கட்சிகளை நேரடியாக ஆதரிக்காமல் அவர்க்ளை கையாளும் இந்தியாவினை கொள்கைகளை செய்வதுதான் தமிழ் அரசியல்வாதிகளின் மாஸ்ர பிளான்😁.

சாமியினை (இந்தியா) நேரடியாக கும்பிடாமல் எதுக்கு ஆசாமியினை(தனித்தனி கட்சிகளை) கும்பிட வேண்டும்?😁

இந்தியா; சஜித்திற்கு ஆதரவு கொடுக்கச்சொன்னால், சஜித்திற்கு ஆதரவு கொடுப்பதை விட்டு விட்டு அஜித்திற்கு (தமிழ் பொது வேட்பாளர்/ அனுர குமார?) ஆதரவு கொடுப்பதை பற்றி தமிழ் அரசியல்வாதிகள் பேசக்கூடாது. 😁

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, vasee said:

 

இஸ்லாமியர்களி இந்த தந்திரோபாயம் இலங்கை உள்நாட்டு போர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டது என்பது உண்மைதான், ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் எக்காலத்திற்கும் பொருந்தும், சிங்கள கட்சிகளை நேரடியாக ஆதரிக்காமல் அவர்க்ளை கையாளும் இந்தியாவினை கொள்கைகளை செய்வதுதான் தமிழ் அரசியல்வாதிகளின் மாஸ்ர பிளான்😁.

சாமியினை (இந்தியா) நேரடியாக கும்பிடாமல் எதுக்கு ஆசாமியினை(தனித்தனி கட்சிகளை) கும்பிட வேண்டும்?😁

இந்தியா; சஜித்திற்கு ஆதரவு கொடுக்கச்சொன்னால், சஜித்திற்கு ஆதரவு கொடுப்பதை விட்டு விட்டு அஜித்திற்கு (தமிழ் பொது வேட்பாளர்/ அனுர குமார?) ஆதரவு கொடுப்பதை பற்றி தமிழ் அரசியல்வாதிகள் பேசக்கூடாது. 😁

நாம் இப்படி தான் 

எல்லோரையும் தூற்றுவோம் தாக்குவோம் நாத்துவோம் 

ஆனால் நீங்கள் சொல்லுங்கள் என்ன செய்யலாம் என்றால் பதில் வராது. ஏனெனில் சொல்வதற்கு செய்வதற்கு எதுவும் இல்லை அத்தனையும் செய்து பார்த்தாச்சு. சட்டியில் எதுவும் இல்லை என்பதுவும் நிரூபிக்கப்பட்டாச்சு. 

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவருக்கு விழுந்த விருப்பு வாக்குகளை சிங்கள ஆமியின் உதவியுடன் தனக்கு மாற்றித்தான் இந்த சுத்துமாத்து திருட்டு தனமாக வெல்ல வைக்கப்பட்டார் , இந்த லச்சனத்தில் இவரின் கதையை கேட்டு மக்கள் வாக்கு போடுவார்கள் ....அப்ப சஜித்க்கு இப்பவே அல்வாதான் ....ரணிலின் தந்திரம் வேலை செய்கின்றது .
சிங்கள மக்களின் வாக்கினை கவரும் ரணிலின் காய் நகர்த்தல் ......

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, vasee said:

உள்ளதும் போச்சையா நொள்ளைக்கண்ணா  என்ற  கதையாய் தமிழர் அரசியல் தொடர்கிறது.  

முன்பு ஒரு கல்லைவைத்து இதுதான் தமிழரசுக் கட்சி என்றால் ஒருசிலரைத் தவிர மற்ற அனைவரும் தங்கள் வாக்குகளை அதற்குப் போடுவார்கள். இன்று பெரும் மலையைவைத்து இதுதான் தமிழரசுக் கட்சி என்றாலும் அதனை உரசிச் சுரண்டிப் பார்க்கும் அளவிற்குத் தமிழ்மக்கள் வளர்ந்துவிட்டதாக யாழ்களமும் தெரியத் தருகிறது.🧐

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

https://www.facebook.com/share/v/z8B8KtB8jSchn6UW/

வெளியான சுமந்திரனின் தில்லுமுல்லு விளையாட்டு! 

கட்சி உறுப்பினர்களுக்கு முறையாக அறிவிக்காமல் திட்டமிட்டு சுமந்திரன் எடுத்த தீர்மானம் என யோகேஸ்வரன் ஐயா வெளிப்படுத்தியிருக்கிறார். 

இன்று 1ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில் நடைபெறும் என்று 28/08/2024 திகதியிடப்பட்ட கடிதம் 29 ஆம் திகதி அன்று அனைத்து மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் கிடைக்கப்பெற்றது. கட்சியின் யாப்பின் படி மத்தியகுழு கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன் எழுத்துமூல அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது யாப்பு விதி. 

1) யாப்பு விதியை மீறி நடாத்தப்பட்ட கூட்டம் செல்லுபடியற்றது. அதுமட்டுமின்றி அங்கு எடுத்த தீர்மானமும் செல்லுபடியற்றது. 

2) 26 ஆம் திகதி கட்சி தலைவர் மாவை ஐயாவை சந்தித்த சிறீதரன் எம்பி “நான் 29 ஆம் திகதி இங்கிலாந்து செல்கிறேன், 6ஆம் திகதி தான் திரும்ப வருவேன். அதற்கிடையில் முக்கிய கூட்டங்களை தவிர்க்குமாறு” கேட்டிருந்தார்.

3) சிறீதரன் எம்பியின் கோரிக்கையை ஏற்ற மாவை ஐயா 8ஆம் திகதியில் இருந்து 10ஆம் திகதிக்கிடையில் தான் கூட்டம் போடுவம் சிறீ என்று உறுதியளித்திருந்தார். 

இன்று நடந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறீதரன் MP, வன்னி MP சார்ள்ஸ், யோகேஸ்வரன், ஶ்ரீநேசன், சரவணபவன், ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா போன்ற முக்கிய தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்குபற்றவில்லை. 

46 மத்திய குழு உறுப்பினர்களில் 25 பேர் தான் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அதில் 6 பேர் தமிழ் பொது வேட்பாளருக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். ஆக சுமந்திரன் அணியின் 19 பேர் எடுத்த தனித்தீர்மானம் தான் சஜித்தை ஆதரவளிப்பது என்பது. 

மட்டக்களப்பை சேர்ந்த சிறீநேசன், யோகேஸ்வரன் ஆகியோருக்கு இன்றைய கூட்டம் தொடர்பில் இதுவரை எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை. 

இந்த நிலையில் தான் பலமான தரப்பை உள்ளீர்க்காமல் சுமந்திரன் அணியால் திட்டமிட்டு தனித்து சஜித்திற்கு ஆதரவு என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிவில் மக்கள் பதில் சொல்வார்கள். 

இந்த முடிவு தமிழரசுக்கட்சியின் முடிவு இல்லை என்பதை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உறுதிப்படுத்தியிருக்கிறார்.

23ஆம் புலிகேசி பார்த்த மாதிரி இருக்குது 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

இஸ்லாமியர்களி இந்த தந்திரோபாயம் இலங்கை உள்நாட்டு போர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டது என்பது உண்மைதான், ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் எக்காலத்திற்கும் பொருந்தும், சிங்கள கட்சிகளை நேரடியாக ஆதரிக்காமல் அவர்க்ளை கையாளும் இந்தியாவினை கொள்கைகளை செய்வதுதான் தமிழ் அரசியல்வாதிகளின் மாஸ்ர பிளான்😁

தற்போதைய நிலையில் ஒரு ஜனாதிபதி தேர்தலில் பேரம் பேசுவதன் மூலம் ஒரு  சமஷ்டி தீர்வு என்பதெல்லாம் நடக்காது என்பது சாதாரண மக்களாகிய எமக்கே தெரிந்த உண்மை.  இனரீதியாக பிளவுபட்டு ஒருவர் மீது ஒருவர் பாரிய சந்தேக பார்வையுடன் இருக்கும் இரு இனங்கள் ஒரு சமஷடி தீர்வை நோக்கி செல்வது சுலபமல்ல. அதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். பரஸ்பரம் நம்பிக்கைகளை கட்டி எழுப்பாமல் இது சாத்தியமே இல்லை.  அதற்கான சாத்தியங்களை உருவாக்கும் அரசியலை செய்யாமல் வெற்று கோஷங்களுடனும் வீர வசனங்கள், வெறுப்பு பேச்சுகள் எதையும் சாதிக்கப்போவதில்லை.  நாம் உலகிற்கு என்ன செய்தியை சொன்னாலும் உலகம் இருவரும் பரஸ்பரம் பேசி இதை தீர்குமாறே வற்புறுத்தும். இதுவே உலக நடைமுறை. 

இன்றைய நிலையில் நடைமுறை பிரச்சனைகள், மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடிய பிரச்சனைகள் பலவற்றை வைத்து  பேரம் பேசி வட கிழக்கில் எமது இனத்தின் இருப்பை வலுப்படுத்த வேண்டியதே இன்றைய அவசர தேவை.  அதை விடுத்து  சுய நலத்துக்காக  வெறித்தனமான தேசியவாதம் பேசுவது, அப்பி பேசி தேர்தல் அரசியலில் எம்மால் தீர்வு பெற்று விட முடியும் என்று பம்மாத்து  காட்டுவது  எமது இருப்பை தமிழ் பிரதேசங்களில் இன்னும் பலவீனப்படுத்தும்.  அவ்வாறு பலவீனப்பட்ட பின்னர் உலகில் எவரும் எம்மை திரும்பி கூட பார்கக போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, island said:

தற்போதைய நிலையில் ஒரு ஜனாதிபதி தேர்தலில் பேரம் பேசுவதன் மூலம் ஒரு  சமஷ்டி தீர்வு என்பதெல்லாம் நடக்காது என்பது சாதாரண மக்களாகிய எமக்கே தெரிந்த உண்மை.  இனரீதியாக பிளவுபட்டு ஒருவர் மீது ஒருவர் பாரிய சந்தேக பார்வையுடன் இருக்கும் இரு இனங்கள் ஒரு சமஷடி தீர்வை நோக்கி செல்வது சுலபமல்ல. அதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். பரஸ்பரம் நம்பிக்கைகளை கட்டி எழுப்பாமல் இது சாத்தியமே இல்லை.  அதற்கான சாத்தியங்களை உருவாக்கும் அரசியலை செய்யாமல் வெற்று கோஷங்களுடனும் வீர வசனங்கள், வெறுப்பு பேச்சுகள் எதையும் சாதிக்கப்போவதில்லை.  நாம் உலகிற்கு என்ன செய்தியை சொன்னாலும் உலகம் இருவரும் பரஸ்பரம் பேசி இதை தீர்குமாறே வற்புறுத்தும். இதுவே உலக நடைமுறை. 

இன்றைய நிலையில் நடைமுறை பிரச்சனைகள், மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடிய பிரச்சனைகள் பலவற்றை வைத்து  பேரம் பேசி வட கிழக்கில் எமது இனத்தின் இருப்பை வலுப்படுத்த வேண்டியதே இன்றைய அவசர தேவை.  அதை விடுத்து  சுய நலத்துக்காக  வெறித்தனமான தேசியவாதம் பேசுவது, அப்பி பேசி தேர்தல் அரசியலில் எம்மால் தீர்வு பெற்று விட முடியும் என்று பம்மாத்து  காட்டுவது  எமது இருப்பை தமிழ் பிரதேசங்களில் இன்னும் பலவீனப்படுத்தும்.  அவ்வாறு பலவீனப்பட்ட பின்னர் உலகில் எவரும் எம்மை திரும்பி கூட பார்கக போவதில்லை. 

சும்மா கதை விடக்கூடாது.

எல்லோருடனும் பேசியாச்சு. இந்தியில் இருந்தும் ஆள் வந்து போயாச்சு. 

எவரிடமும் எதுவும் இல்லை.  என்னை ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் உன்னை நான் கணக்கில் எடுத்துக்கொள்ள போவதில்லை என்று நேராகவே சொல்லியாச்சு. 

இனி ஆதரவு எல்லாம் வெண்டாப் பெண்டாட்டி கதை தான்.  எப்படியும் தனிய தான் படுக்க வேண்டும்..

அணைச்சு கொண்டு படு என்று சொல்வது சுலபம். ஆனால்.....???

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய குழு தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவோம்; பல்டியடித்த மாவை

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தை எவ்வாறு இணைந்து நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி அடுத்த கூட்டத்தில் தீர்மானிப்போம் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழில் இன்று நடைபெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சுகவீனம் காரணமாக நேற்றைய இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை.

ஆனாலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் என்று அவர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/308865

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

சும்மா கதை விடக்கூடாது.

எல்லோருடனும் பேசியாச்சு. இந்தியில் இருந்தும் ஆள் வந்து போயாச்சு. 

எவரிடமும் எதுவும் இல்லை.  என்னை ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் உன்னை நான் கணக்கில் எடுத்துக்கொள்ள போவதில்லை என்று நேராகவே சொல்லியாச்சு. 

இனி ஆதரவு எல்லாம் வெண்டாப் பெண்டாட்டி கதை தான்.  எப்படியும் தனிய தான் படுக்க வேண்டும்..

அணைச்சு கொண்டு படு என்று சொல்வது சுலபம். ஆனால்.....???

நீங்கள் தீர்ககதரிசி விசுகு.  ஆயுத போராட்டம் தொடங்கிய உடனேயே எப்படியும் இவனுகள் போராட்டம் எப்படியும் சரிவரப்போவதுல்லை இனி என்னை தூங்க விடமாட்டாங்கள் இவங்கள் என்பதை துல்லியமாக கணித்து  பெட்டி படுக்கைகளுடன் லாச்சப்பலுக்கு வந்து விட்டீர்கள் தனியே படுக்க. 😂 குட் நைற. மிஸ்ரர் விசுகு. 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஏராளன் said:

மத்திய குழு தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவோம்; பல்டியடித்த மாவை

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தை எவ்வாறு இணைந்து நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி அடுத்த கூட்டத்தில் தீர்மானிப்போம் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழில் இன்று நடைபெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சுகவீனம் காரணமாக நேற்றைய இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை.

ஆனாலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் என்று அவர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/308865

 

சுமந்திரன் பெட்டி வாங்கிவிட்டார், தன்னிச்சையாக முடிவு எடுத்தது விடடார், தேர்தலில் மோசடி செய்து வென்று விட்டார்  என்று செல்லும்  ஒரு சில புலம்பெயர்ந்தவர்கள், உசுப்பேத்தும் தமிழ் ஊடகங்களின் செய்திகள்  மற்றும் தமது குறுகிய வட்டத்துக்குள் உள்ள சமூக ஊடக தகவல்களை வைத்துக்கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரையோடிக் கொண்டு, சமாந்திர உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கின்றார்கள், அது அவர்களின் சனநாயக உரிமையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த உளவாளிகளால் ஏற்பட்ட பெரும் ஆபத்து

 

  • கருத்துக்கள உறவுகள்

1000278635.jpg?resize=750,375

தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்படும் சுமந்திரன்?

சுமந்திரன் எப்படி TNA இற்குள் தெரியாமல் வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உறுப்பினருமான சண்முகம் ஜீவராஜ் தொிவித்தாா்.

கிளிநொச்சியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இவ்வாறு குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் புதிதாக தெரிவான தலைவர் உள்ளிட்ட பலர் இல்லாத கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும்.

கிளிநொச்சி, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக் கட்சிக் கிளைகள் பொது வேட்பாளரை ஆதரிப்பது என தீர்மானித்துள்ள நிலையில், நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது.

2010ம் ஆண்டு எவ்வாறு சுமந்திரன் எப்படி TNA க்குள் தெரியாமல் வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார்” என அவா் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1397836

  • கருத்துக்கள உறவுகள்

458173129_990560183081725_54323971588236

இலங்கை தமிழரசு கட்சி, சஜித்திற்கு ஆதரவு என்ற தீர்மானம் என்பது ஏகமனதான தீர்மானம் இல்லை.
- கட்சியின்  சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராசா. -

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

தற்போதைய நிலையில் ஒரு ஜனாதிபதி தேர்தலில் பேரம் பேசுவதன் மூலம் ஒரு  சமஷ்டி தீர்வு என்பதெல்லாம் நடக்காது என்பது சாதாரண மக்களாகிய எமக்கே தெரிந்த உண்மை.  இனரீதியாக பிளவுபட்டு ஒருவர் மீது ஒருவர் பாரிய சந்தேக பார்வையுடன் இருக்கும் இரு இனங்கள் ஒரு சமஷடி தீர்வை நோக்கி செல்வது சுலபமல்ல. அதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். பரஸ்பரம் நம்பிக்கைகளை கட்டி எழுப்பாமல் இது சாத்தியமே இல்லை.  அதற்கான சாத்தியங்களை உருவாக்கும் அரசியலை செய்யாமல் வெற்று கோஷங்களுடனும் வீர வசனங்கள், வெறுப்பு பேச்சுகள் எதையும் சாதிக்கப்போவதில்லை.  நாம் உலகிற்கு என்ன செய்தியை சொன்னாலும் உலகம் இருவரும் பரஸ்பரம் பேசி இதை தீர்குமாறே வற்புறுத்தும். இதுவே உலக நடைமுறை. 

இன்றைய நிலையில் நடைமுறை பிரச்சனைகள், மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடிய பிரச்சனைகள் பலவற்றை வைத்து  பேரம் பேசி வட கிழக்கில் எமது இனத்தின் இருப்பை வலுப்படுத்த வேண்டியதே இன்றைய அவசர தேவை.  அதை விடுத்து  சுய நலத்துக்காக  வெறித்தனமான தேசியவாதம் பேசுவது, அப்பி பேசி தேர்தல் அரசியலில் எம்மால் தீர்வு பெற்று விட முடியும் என்று பம்மாத்து  காட்டுவது  எமது இருப்பை தமிழ் பிரதேசங்களில் இன்னும் பலவீனப்படுத்தும்.  அவ்வாறு பலவீனப்பட்ட பின்னர் உலகில் எவரும் எம்மை திரும்பி கூட பார்கக போவதில்லை. 

பெரும்பாலும் இந்த பெயரளவு சமஸ்டி என்பதால் இலங்கை அரசிற்கு பாதகத்தினை விட சாதகமே அதிகம் என நினைக்கிறேன், உதாரனமாக வட கிழக்கு சிறுபான்மை மக்களிடம் வித்க்கப்படும் வரியில் வரும் வருமானத்தினை அப்பகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு மத்திய அரசிடமே கையேந்த வேண்டியிருக்கும் (பொதுவாக) கிட்டதட்ட இப்போதுள்ள நிலமைதான் ஆனால் பெயரளவில் சமஸ்டி என்றிருக்கும்.

இங்கு இலங்கையிலுள்ள பிரச்சினை என்னவென்றால் என்னதான் அபிவிருத்தியினை பெரும்பான்மை பிபுலம் கொண்ட அரசின் மூலமாக பெற்றாலும் அதே அரசினால் ஒரே இரவில் நடுத்தெருவிற்கு வரவேண்டிய் நிலை ஏற்படும், உதாரணமாக 83 இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜே ஆரின் ஆசியுடன்  தமிழர்கள் மேல் மேற்கொண்ட கலவரத்தில் 600 மில்லியன் அமெரிக்க டொலர் (மில்லியனா பில்லியனா என சரியாக நினைவில்லை) தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டது, இவ்வாறு அரசினால் நிகழ்த்தப்படும் வன்முறைக்கு சட்ட ரீதியான பாதுகாப்பினை பெறமுடியாத நிலை காணப்படுகிறது.

என்னைப்பொருத்தவரை இப்படி  மீனை பெறுவதனை விட தூண்டிலை பெற அனைத்து பாதுகாப்பற்ற சிறுபான்மையின மக்களும் முயற்சிக்க வேண்டும், அத்துடன் உரிமைகளை (பாதுகாப்பும் சம உரிமையும்) மக்கள் இரந்து பெறும் நிலையில் ஒரு நாடு கீழிறங்குவது மிகவும் ஆபத்தான நிலைக்கு ஜனநாயகத்தினை தள்ளுகின்ற நிலையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, vasee said:

பெரும்பாலும் இந்த பெயரளவு சமஸ்டி என்பதால் இலங்கை அரசிற்கு பாதகத்தினை விட சாதகமே அதிகம் என நினைக்கிறேன், உதாரனமாக வட கிழக்கு சிறுபான்மை மக்களிடம் வித்க்கப்படும் வரியில் வரும் வருமானத்தினை அப்பகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு மத்திய அரசிடமே கையேந்த வேண்டியிருக்கும் (பொதுவாக) கிட்டதட்ட இப்போதுள்ள நிலமைதான் ஆனால் பெயரளவில் சமஸ்டி என்றிருக்கும்.

இங்கு இலங்கையிலுள்ள பிரச்சினை என்னவென்றால் என்னதான் அபிவிருத்தியினை பெரும்பான்மை பிபுலம் கொண்ட அரசின் மூலமாக பெற்றாலும் அதே அரசினால் ஒரே இரவில் நடுத்தெருவிற்கு வரவேண்டிய் நிலை ஏற்படும், உதாரணமாக 83 இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜே ஆரின் ஆசியுடன்  தமிழர்கள் மேல் மேற்கொண்ட கலவரத்தில் 600 மில்லியன் அமெரிக்க டொலர் (மில்லியனா பில்லியனா என சரியாக நினைவில்லை) தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டது, இவ்வாறு அரசினால் நிகழ்த்தப்படும் வன்முறைக்கு சட்ட ரீதியான பாதுகாப்பினை பெறமுடியாத நிலை காணப்படுகிறது.

என்னைப்பொருத்தவரை இப்படி  மீனை பெறுவதனை விட தூண்டிலை பெற அனைத்து பாதுகாப்பற்ற சிறுபான்மையின மக்களும் முயற்சிக்க வேண்டும், அத்துடன் உரிமைகளை (பாதுகாப்பும் சம உரிமையும்) மக்கள் இரந்து பெறும் நிலையில் ஒரு நாடு கீழிறங்குவது மிகவும் ஆபத்தான நிலைக்கு ஜனநாயகத்தினை தள்ளுகின்ற நிலையாகும்.

நீங்கள் உங்களது வழமையான காணியான சுற்றிவளைத்து பேசும் முறையை கைவிட்டு நேரடியாக பேச வேண்டும் நேரடியாக பேசுவதே முறையானது. இப்போதுள்ள நிலையில் தூண்டிலை பெறுவது என்று நீங்கள்  குறிப்பிட்டது தமிழீழத்தை பெற முயற்சிக்க வேண்டும் என்பதையே.  அதை நீங்கள் வெளிப்படையாக கூறினால் நாங்கள் உங்களுடன் வாதாடாமல் எங்களுடைய வேலைகளை பார்கக போவமில்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, island said:

நீங்கள் உங்களது வழமையான காணியான சுற்றிவளைத்து பேசும் முறையை கைவிட்டு நேரடியாக பேச வேண்டும் நேரடியாக பேசுவதே முறையானது. இப்போதுள்ள நிலையில் தூண்டிலை பெறுவது என்று நீங்கள்  குறிப்பிட்டது தமிழீழத்தை பெற முயற்சிக்க வேண்டும் என்பதையே.  அதை நீங்கள் வெளிப்படையாக கூறினால் நாங்கள் உங்களுடன் வாதாடாமல் எங்களுடைய வேலைகளை பார்கக போவமில்ல. 

இல்லை சட்ட ரீதியான பாதுகாப்பினை!

நான்நினைக்கிறேன் நீங்கள் தனிப்பட்ட ரீதியில் எனது கருத்தினை எடுத்துக்கொண்டுவிட்டீர்கள் என, உங்கள் கருத்தும் நல்ல கருத்துத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, vasee said:

இல்லை சட்ட ரீதியான பாதுகாப்பினை!

இரு இனங்கள் வாழும் ஒரு நாட்டில் அரசியல் ஜனநாயக வழி முறையிலான ரீதியில் ஒரு வழி முறையில்  சமஷ்டி அரசியலமைப்பு உருவாக வேண்டுமென்றால் அந்த இரு இனங்களுக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கையும் ஒரளவாவது நல்லுறவு  அவசியம். அது இல்லாமல்  சமஷ்டி அரசியலமைப்பு உருவாகுவது சாத்தியமா?   அப்படி சாத்தியம் என்றால் அதன் வழிமுறை என்ன?

இன்றைய நிலையில் ஜனாதிபதியாக தேர்வு செய்யபடுபவர் நினைத்தாலும் சமஷடி அரசியலமைப்பை உருவாக்க முடியாது என்பது எனது கருத்து. 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, island said:

நீங்கள் தீர்ககதரிசி விசுகு.  ஆயுத போராட்டம் தொடங்கிய உடனேயே எப்படியும் இவனுகள் போராட்டம் எப்படியும் சரிவரப்போவதுல்லை இனி என்னை தூங்க விடமாட்டாங்கள் இவங்கள் என்பதை துல்லியமாக கணித்து  பெட்டி படுக்கைகளுடன் லாச்சப்பலுக்கு வந்து விட்டீர்கள் தனியே படுக்க. 😂 குட் நைற. மிஸ்ரர் விசுகு. 

தனிப்பட்ட ஒருவரின் பின் பக்கத்தை முகர்ந்து இங்கே எழுதக் கூடாது என்பது அதி உயர் விதி யாழ் களத்தில்.

அவ்வாறு தொடர்ந்தால் என்னால் உங்கள் படுக்கையறை வரை வரமுடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் அறிவிப்பு தென்னிலங்கை மக்களுக்கு சிறந்த செய்தி - அமைச்சர் சுசில்

ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மக்களை குழப்பும் தீர்மானங்களையே எடுப்பார். அவர் தற்போது அறிவித்துள்ள தீர்மானம் தெற்கு மக்களுக்கு சிறந்த செய்தியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

பம்பலப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்தமை தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுமந்திரன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனது நிலைப்பாட்டுடன் வேறு குழுவுடனேயே செயற்பட்டு வந்தார். எனவே சுமந்திரன் ஏதேனுமொரு குழுவைத் தெரிவு செய்கின்றார் எனில், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெற்கு மக்கள் சிந்திக்க வேண்டும். சுமந்திரனின் தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏற்றுக் கொள்ளவில்லை.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அதற்கு எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். இது மக்களை குழப்பும் செயற்பாடாகும். ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சுமந்திரமே மக்களை குழப்பிக் கொண்டிருந்தார்.

எனவே அவரது தீர்மானங்கள் தொடர்பில் வடக்கு மக்கள் மாத்திரமல்ல, தெற்கு மக்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும். சுமந்திரன் ஏதேனுமொரு தீர்மானத்தை எடுப்பாரானால் அது தெற்கு மக்களுக்கு சிறந்த செய்தியாகும் என்றாr

https://www.virakesari.lk/article/192641

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

இரு இனங்கள் வாழும் ஒரு நாட்டில் அரசியல் ஜனநாயக வழி முறையிலான ரீதியில் ஒரு வழி முறையில்  சமஷ்டி அரசியலமைப்பு உருவாக வேண்டுமென்றால் அந்த இரு இனங்களுக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கையும் ஒரளவாவது நல்லுறவு  அவசியம். அது இல்லாமல்  சமஷ்டி அரசியலமைப்பு உருவாகுவது சாத்தியமா?   அப்படி சாத்தியம் என்றால் அதன் வழிமுறை என்ன?

இன்றைய நிலையில் ஜனாதிபதியாக தேர்வு செய்யபடுபவர் நினைத்தாலும் சமஷடி அரசியலமைப்பை உருவாக்க முடியாது என்பது எனது கருத்து. 

 

 

2 hours ago, vasee said:

இல்லை சட்ட ரீதியான பாதுகாப்பினை!

நான்நினைக்கிறேன் நீங்கள் தனிப்பட்ட ரீதியில் எனது கருத்தினை எடுத்துக்கொண்டுவிட்டீர்கள் என, உங்கள் கருத்தும் நல்ல கருத்துத்தான்.

நாம் எம்மை இலங்கையராக உணராதவரைக்கும் இது சாத்தியமில்லை என்பது என் கருத்து. 

நாங்கள் தொழுவதற்கு இந்தியக் கடவுள்கள் வேண்டும், உடுப்பதற்கு இந்திய உடைகள் வேண்டும், பொழுதுபோக்கிற்கு இந்திய சினிமாவும் பாடல்களும் வேண்டும், உணவும் இந்திய உணவுகள், ப,.......தற்கு இந்திய  நடிகைகள் வேண்டும்,  எங்கள் தலைவர்களாகக் கொள்வதற்கு நேருவும் காந்தியும் இந்திராவும் MGR ம் கலைஞரும் வேண்டும்.  (திருமணம் செய்வதற்கு மட்டும் இலங்கைத் தமிழ் வேண்டும்😁)

முக்கியமாக எங்கள் அரசியலுக்கு இந்தியாவிடமிருந்துதான் ஆலோசனை கேட்போம். 

ஆனால் நாம் இலங்கையர்களும் இல்லை, இந்தியர்களும் இல்லை. 

😏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.