Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் தனது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; 53 வயதான குறித்த தந்தை தனது மகளான 23 வயதுடைய யுவதியை பல தடவைகள் பாலியல் வன்புணர்வு செய்துள்ள நிலையில் குறித்த யுவதியும் கர்ப்பமடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பொலிஸார் தந்தையை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவமானது இணுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்பதுடன், குறித்த யுவதி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளார்.

மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்! (newuthayan.com)

Edited by பிழம்பு
தலைப்பில் மாற்றம் செய்ய

  • பிழம்பு changed the title to மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானுக்கு ஒரு விமானப் பயணச் சீட்டு  பிளீஸ் 

😡

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

ஆப்கானிஸ்தானுக்கு ஒரு விமானப் பயணச் சீட்டு  பிளீஸ் 

😡

இருவழி  பயணச்சீட்டுகள். இல்லை    ஒருவழி. பயணச்சீட்டுகள். மட்டுமே உண்டு   🤣😂  வேண்டுமா??    போனால். திரும்பி வர முடியாது     ஆனால் அங்கே வாழலாம்” 😂🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kandiah57 said:

இருவழி  பயணச்சீட்டுகள். இல்லை    ஒருவழி. பயணச்சீட்டுகள். மட்டுமே உண்டு   🤣😂  வேண்டுமா??    போனால். திரும்பி வர முடியாது     ஆனால் அங்கே வாழலாம்” 😂🙏

மிக மோசமான ஒரு வல்லுறவுச் செய்தியில் கூட, சிரிப்புக் குறி போட்டு பதில் வழங்கும் உங்கள் மனநிலையை எண்ணிப் பார்க்கின்றேன். 

தனக்கு எந்த தீமை வரினும், தன் அப்பாதான் முதன் முதலில் முன்னுக்கு வந்து தன்னை பாதுகாப்பார் என நம்பிக்கையில் தான் பெண் பிள்ளைகள் இருப்பர். அந்த தந்தையே அந்த மகளுக்கு மோசமான பாதிப்பை. வல்லுறவை புரியும் போது, அதை ஒரு மனுசராக கண்டிப்பதை விட்டுவிட்டு, அதனையும் பகிடியாக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

ஆப்கானிஸ்தானுக்கு ஒரு விமானப் பயணச் சீட்டு  பிளீஸ் 

😡

இல்லை 

கொலை இவருக்கு விடுதலை.

வைச்சு செய்ய வேண்டும். 😡

ஒரு பெண் பிள்ளைக்கு அப்பன் தான் முதல் பாதுகாப்பு, நண்பன், தோழன் எல்லாமே. 

நல்ல தொடுகைக்கும் தப்பான தொடுகைக்குமான வித்தியாசத்தை பெண் பிள்ளைகள் பெறுவது அப்பனிடமிருந்தே. 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இல்லை 

கொலை இவருக்கு விடுதலை.

வைச்சு செய்ய வேண்டும். 😡

ஒரு பெண் பிள்ளைக்கு அப்பன் தான் முதல் பாதுகாப்பு, நண்பன், தோழன் எல்லாமே. 

நல்ல தொடுகைக்கும் தப்பான தொடுகைக்குமான வித்தியாசத்தை பெண் பிள்ளைகள் பெறுவது அப்பனிடமிருந்தே. 

 

உதயன் செய்தியை நம்பி கருத்து போடலாமா?

குற்றவாளியை குற்றம் செய்ய தூண்டியது எது? ஆள் குடிகார சாமியோ?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நியாயம் said:

குற்றவாளியை குற்றம் செய்ய தூண்டியது எது? ஆள் குடிகார சாமியோ?

இதெற்கெல்லாம் அடி நுனி தேடுவீர்களா? 

🥺

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kandiah57 said:

இருவழி  பயணச்சீட்டுகள். இல்லை    ஒருவழி. பயணச்சீட்டுகள். மட்டுமே உண்டு   🤣😂  வேண்டுமா??    போனால். திரும்பி வர முடியாது     ஆனால் அங்கே வாழலாம்” 😂🙏

எனக்கு இப்படியான இடங்களில் எழுதுவதற்கு அறவே பிடிப்பதில்லை..ஆனாலும் நீங்களும் ஒரு தந்தையாக இருந்து கொண்டு இப்படி எல்லாம் எழுதுவதை நினைக்கும் போது வெறுப்பாக இருக்கிறது.கருத்துக்களத்தில் இது எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்று மட்டும் யாரும் சொல்லாதீர்கள்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

மிக மோசமான ஒரு வல்லுறவுச் செய்தியில் கூட, சிரிப்புக் குறி போட்டு பதில் வழங்கும் உங்கள் மனநிலையை எண்ணிப் பார்க்கின்றேன். 

தனக்கு எந்த தீமை வரினும், தன் அப்பாதான் முதன் முதலில் முன்னுக்கு வந்து தன்னை பாதுகாப்பார் என நம்பிக்கையில் தான் பெண் பிள்ளைகள் இருப்பர். அந்த தந்தையே அந்த மகளுக்கு மோசமான பாதிப்பை. வல்லுறவை புரியும் போது, அதை ஒரு மனுசராக கண்டிப்பதை விட்டுவிட்டு, அதனையும் பகிடியாக்கின்றீர்கள்.

நான் எழுதிய பதில் பயணச்சீட்டு அனுப்பும்படி  கேட்டதுக்கு   

மாறாக  உங்கள் இணைப்புக்கு   இல்லை மேலும்  எவர் செய்தாலும் கண்டிக்கிறேன்    .......அதேவேளை  

இப்படியான செய்திகளை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து  அடிக்கடி கேள்விப்பட்டிருக்கேன் அதில் ஒன்று 

சொந்த பெரிய தகப்பனின்  மகளை    அதாவது தங்கச்சி முறையான பெண்ணை   பெரிய பெண்  தான்  பொலிஸ் கன்டபிளாக  வேலை செய்யும் அண்ணன்   உடலுறவு கொண்டு கர்ப்பமாக்கி விட்டான்.   விசயம் தெரிந்து பெரிய கொந்தளிப்பாக. மாறி விட்டது 

அவன் சொன்னான்” நான் தான்   பிரச்சனை   இல்லை 

காலியணம் செய்து கொள்கிறேன் என்று   அவர்கள் உடன்பாடவில்லை  பிள்ளையை அளித்து விட்டு வேறு ஒருவனுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டார்கள்  

அடுத்த அதிசயம்  அந்த பொலிஸ்காரனுக்கு  பெண் கொடுக்க. நிறைய பேர்  போட்டி போட்டார்கள்  அவன் நல்ல வீடு தோட்டம் காணி பணமும் வேண்டி திருமணம் செய்தான் 

இப்படிச் செயல்களை நான் ஆதரிப்பது இல்லை 

இப்போது இவற்றை பெரிசாக. எடுப்பதும் இல்லை 

நன்றி வணக்கம்…  🙏 மீண்டும்  சொந்த மகளுடன். உடலுறவு கொண்டவனை கண்டிக்கிறேன 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

 

இப்படியான செய்திகளை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து  அடிக்கடி கேள்விப்பட்டிருக்கேன் அதில் ஒன்று 

சொந்த பெரிய தகப்பனின்  மகளை    அதாவது தங்கச்சி முறையான பெண்ணை   பெரிய பெண்  தான்  பொலிஸ் கன்டபிளாக  வேலை செய்யும் அண்ணன்   உடலுறவு கொண்டு கர்ப்பமாக்கி விட்டான்.   விசயம் தெரிந்து பெரிய கொந்தளிப்பாக. மாறி விட்டது 

அவன் சொன்னான்” நான் தான்   பிரச்சனை   இல்லை 

காலியணம் செய்து கொள்கிறேன் என்று   அவர்கள் உடன்பாடவில்லை  பிள்ளையை அளித்து விட்டு வேறு ஒருவனுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டார்கள்  

அடுத்த அதிசயம்  அந்த பொலிஸ்காரனுக்கு  பெண் கொடுக்க. நிறைய பேர்  போட்டி போட்டார்கள்  அவன் நல்ல வீடு தோட்டம் காணி பணமும் வேண்டி திருமணம் செய்தான் 

 

இப்ப என்ன சொல்லவாறியள் இதை இதில எழுதி..? இதெல்லாம் எங்கட சமூகத்தில நோர்மலைஸ் பண்ணியாச்சு அதான் நான் கெக்கபிக்க எண்டு சிரிச்சன் எண்டு பெருமையா சொல்ல வாறியளா..?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

 

உதயன் செய்தியை நம்பி கருத்து போடலாமா?

குற்றவாளியை குற்றம் செய்ய தூண்டியது எது? ஆள் குடிகார சாமியோ?

நல்ல கேள்விகள்,......அதுவும் 23 வயது பெண்பிள்ளை   முதல் தடவை கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது   எங்கே கலைத்தார்கள் ?? வைத்தியசாலையிலேயே   தகப்பன்.  யார் என்று கேட்கவில்லையா ?? வைத்தியசாலை  இந்த விடயத்தை  உடனும். பொலிஸாருக்கு அறிவித்து இருக்க  வேண்டும்  

இணுவிலில். இப்படி நடந்ததை நம்ப முடியவில்லை   

8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்ப என்ன சொல்லவாறியள் இதை இதில எழுதி..? இதெல்லாம் எங்கட சமூகத்தில நோர்மலைஸ் பண்ணியாச்சு அதான் நான் கெக்கபிக்க எண்டு சிரிச்சன் எண்டு பெருமையா சொல்ல வாறியளா..?

பதில் மேலே உண்டு வாசிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

   

பதில் மேலே உண்டு வாசிக்கவும்

என்ன கெக்கபிக்கன்னு விவஸ்த்தை இல்லாமல் சிரிச்சு வச்சதோ..?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன கெக்கபிக்கன்னு விவஸ்த்தை இல்லாமல் சிரிச்சு வச்சதோ..?

உங்களுக்கு அறிவு இல்லை     எனவே… விளக்கம் தரப்படவில்லை  

எனக்கும்  குறிப்பிட்ட தந்தை மகள் உடலுறவுக்கும்.   எந்தவொரு தொடர்புகளுகளும் இல்லை   அது அவர்கள் இருவரதும்.  தனிப்பட்ட விடயம்.   கருத்துகள் எழுதும் போது மரியாதையாக எழுதவும் 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kandiah57 said:

நல்ல கேள்விகள்,......அதுவும் 23 வயது பெண்பிள்ளை   முதல் தடவை கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது   எங்கே கலைத்தார்கள் ?? வைத்தியசாலையிலேயே   தகப்பன்.  யார் என்று கேட்கவில்லையா ?? வைத்தியசாலை  இந்த விடயத்தை  உடனும். பொலிஸாருக்கு அறிவித்து இருக்க  வேண்டும்  

இணுவிலில். இப்படி நடந்ததை நம்ப முடியவில்லை   

பதில் மேலே உண்டு வாசிக்கவும்

கந்தையர், ஒரு பிழையை மறைக்க அவசியமில்லாத விடயங்களை இழுத்து "குற்றம் நடக்கவில்லை" என்பது போல எழுதுகிறீர்கள். 23 வயது என்பது குழந்தை (minor) அல்ல, தந்தை யார் என்று வளர்ந்த பெண்ணிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை - "பாலியல் வல்லுறவு" என்று வளர்ந்த பெண் மருத்துவரிடம் சொல்லியிருந்தால் மட்டும் தான் மருத்துமனை காவல் துறையை அழைத்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

AK47  இல்லாதது தெரியுது , பத்து கூடி நிண்டு கேவலம் கதைக்குது ...😡

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Justin said:

கந்தையர், ஒரு பிழையை மறைக்க அவசியமில்லாத விடயங்களை இழுத்து "குற்றம் நடக்கவில்லை" என்பது போல எழுதுகிறீர்கள். 23 வயது என்பது குழந்தை (minor) அல்ல, தந்தை யார் என்று வளர்ந்த பெண்ணிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை - "பாலியல் வல்லுறவு" என்று வளர்ந்த பெண் மருத்துவரிடம் சொல்லியிருந்தால் மட்டும் தான் மருத்துமனை காவல் துறையை அழைத்திருக்கும்.

குற்றம் நடக்கவில்லை என்று சொல்ல வேண்டி அவசியம் எனக்கு இல்லை   நான் சிரிப்பு குறி  போட்டது  பயணச்சீட்டு கேட்டதற்கு தான்  மற்றும்படி   தந்தை மகளுடன். உடலுறவு கொண்டதற்க்கு இல்லை   சரியா??   

உங்கள் வாதப்படி   பொலிஸ் அழைக்கவில்லை என்றால் பாலியல் வல்லுறவு  என்று மகள் சொல்லவில்லை  என்பது புலனகிறது   அப்படி என்றால் இருவரது சம்மதத்துடன். நடந்த உடலுறவா??  

இங்கே பலரும் கருத்து எழுதி உள்ளார்கள்  எவருமே கண்டிக்கவில்லை     ஆனால் நான் இரு தடவையாக கண்டித்து உள்ளேன்    

நான் இந்த உடலுறவை எங்கும் வரவேற்கவில்லை     ஆதரித்து கருத்துகள் பதியவில்லை    

யாழ்ப்பாணத்தில். நடந்த உடலுறவுக்காக ஆப்கானிஸ்தான்க்கு பயணச்சீட்டு கேட்டதற்கு தான் சிரித்தேன் 

இதை வாசித்து விளங்காதவர்கள். பற்றி என்ன சொல்ல?? 

நீங்கள் மகள் 

தந்தை 

 

என்ன சொன்னார்கள். என்பதை அறிந்து பதிவிடுங்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kandiah57 said:

உங்களுக்கு அறிவு இல்லை     எனவே… விளக்கம் தரப்படவில்லை  

எனக்கும்  குறிப்பிட்ட தந்தை மகள் உடலுறவுக்கும்.   எந்தவொரு தொடர்புகளுகளும் இல்லை   அது அவர்கள் இருவரதும்.  தனிப்பட்ட விடயம்.   கருத்துகள் எழுதும் போது மரியாதையாக எழுதவும் 

என்ன மரியாதை வேண்டி கிடக்கு உங்களுக்கு...ஆ..உங்களை எல்லாம் எப்படி வீட்டு வாசலில் வைத்து பார்க்கிறார்களோ கணவர், தகப்பன் என்று பார்க்கிறார்களோ தெரியவில்லை.. தப்பு செய்யிறவர்களுக்கு எதற்காக வக்காலத்து வாங்கிறீர்கள்..ஒவ்வொன்றுக்கும் வேறை ஒன்றை சொல்லி வியாக்கியானம் எழுதாதீர்கள்..பிழை என்றால் பிழை என்பதை ஒத்ததுக் கொள்ளுங்கள்..

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, யாயினி said:

என்ன மரியாதை வேண்டி கிடக்கு உங்களுக்கு...ஆ..உங்களை எல்லாம் எப்படி வீட்டு வாசலில் வைத்து பார்க்கிறார்களோ கணவர், தகப்பன் என்று பார்க்கிறார்களோ தெரியவில்லை.. தப்பு செய்யிறவர்களுக்கு எதற்காக வக்காலத்து வாங்கிறீர்கள்..ஒவ்வொன்றுக்கும் வேறை ஒன்றை சொல்லி வியாக்கியானம் எழுதாதீர்கள்..பிழை என்றால் பிழை என்பதை ஒத்ததுக் கொள்ளுங்கள்..

 

ஆமாம் பிழை தான்  ஆனால்   சிரிப்பு குறி. போட்டது பிழை இல்லை 

எம் சமூகத்தில் பாலியல் வல்லுறவு க்குள்ளான ஒரு பெண் துணிந்து தனக்கு நிகழ்ந்ததை சொல்லத் தயங்கும், பயப்படும் சூழல் தான் இன்னும் தொடர்கிறது.

தகுந்த சட்ட மற்றும் சமூகப் பாதுகாப்பு இருக்கும் மேலைத்தேய நாடுகளிலேயே பாலியல் வன்முறை க்குள்ளான பெண்கள் தமக்கு நடந்ததை வெளியில் சொல்ல ஆண்டுக்கணக்கில் தயங்கும் போது எம் தாயகத்தில் அவ்வாறு சொல்ல தயங்கும் ஒருவரை அவரது இணக்கத்துடன் தான் உடலுறவு நிகழ்ந்து இருக்கும் என சுட்ட முற்படுவது மிகவும் தவறானது. Victim blaming வகையானது.

என்றுமே பாதிக்கப்பட்டவரின் சார்பாக நிற்பதே அறமாகும், அதுவும் பாலியல் வல்லுறவுக்குள்ளான ஒருவரை கண்ணியத்துடன் அணுகி அவருக்காக ஆதரவு கொடுப்பது எம் தார்மீக கடமையாக இருக்க வேண்டும். 

அதை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவரையே குற்றத்திற்கு உடந்தை என்று எவராவது நியாயப்படுத்தினால், அவர் அந்த குற்றம் புரிந்தவரை விட ஆபத்தானவர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் சொந்த தந்தையே மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது பல இடங்களில் நடந்திருக்கிறது, அவற்றில் எல்லாம் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது பதின்ம வயதும் விபரம் அறியாத பெண் குழந்தைகளுமே அதிகம்

ஆனால் இங்கே 23 வயது பெண்ணை தந்தை பல தடவை வல்லுறவுக்குட்படுத்தினார் என்பதும் கர்ப்பமாக்கினார் என்பதும் இப்போதுதான் அவர்கள் காவல்துறையில் முறையீடு செய்திருக்கிறார்கள் என்பதும் என்னவென்றே சொல்ல தெரியாத  மர்மம்.

23 வயது என்பது  கல்யாணமாகி ஓரிரு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கவேண்டிய வயது, அந்த வயதில் பல தடவைகள் தந்தை வல்லுறவு செய்யும்போது இந்த பெண் எதற்கு மெளனம் காத்தார் என்பதும் முதல் தடவையிலேயே இதனை ஏன் வெளிபடுத்தவில்லையென்பதும் மில்லியன் டாலர் பெறுமதிமிக்க சந்தேகங்கள்.

ஒன்று தந்தையை வீட்டை விட்டு துரத்தியிருக்க வேண்டும், அல்லது இவர் விலகி எங்காவது போய் இருந்திருக்கவேண்டும்

ஒருவேளை குடும்ப கெளரவத்தை காப்பாற்றுவதற்கு அமைதியாக இருந்தார் என்று யாரும் வாதிட்டாலும் இப்போ இலங்கை முழுவதுக்குமே தெரிந்த செய்தியாகிவிட்டபோது கெளரவம் பாதிக்கப்படவில்லையா?

பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உடனடி எதிர்வினையாற்றாத செயல்கள் அது மீண்டும் மீண்டும் அதிகரிக்கவே வழி செய்யும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2024 at 22:47, Kandiah57 said:

இருவழி  பயணச்சீட்டுகள். இல்லை    ஒருவழி. பயணச்சீட்டுகள். மட்டுமே உண்டு   🤣😂  வேண்டுமா??    போனால். திரும்பி வர முடியாது     ஆனால் அங்கே வாழலாம்” 😂🙏

இது தான்  பிரச்சனையான கருத்துகள்  மற்றும் சிரிப்பு குறிகள்   இதில்  எங்கே  பாலியல் வல்லுறவு  ஆதரிக்கப்பட்டுள்ளது  ???????????????????????????????என்பதை  மேலே   கருத்துகள் எழுதியவர்கள். விளக்குங்கள்.  பார்ப்போம்     

ஒழுங்காக வாசிக்கமால். 

அரைகுறையாக. வாசித்து  

உங்கள் மனங்களில் 

உள்ள வக்கிரங்களைக்  வைத்து என் மீது   குற்றம் சாட்டுவதை 

தயவுசெய்து தவிர்த்து கொள்ளவும்  

நன்றி வணக்கம்…      இனிமேல் உந்த.  குறிகள். பாவிக்க விரும்பவில்லை    

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருத்தம் மன்னிப்புடன் முடிய வேண்டியது கந்தையர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2024 at 22:10, Kapithan said:

ஆப்கானிஸ்தானுக்கு ஒரு விமானப் பயணச் சீட்டு  பிளீஸ் 

😡

 

On 12/9/2024 at 22:47, Kandiah57 said:

இருவழி  பயணச்சீட்டுகள். இல்லை    ஒருவழி. பயணச்சீட்டுகள். மட்டுமே உண்டு   🤣😂  வேண்டுமா??    போனால். திரும்பி வர முடியாது     ஆனால் அங்கே வாழலாம்” 😂🙏

 

6 hours ago, Kandiah57 said:

இது தான்  பிரச்சனையான கருத்துகள்  மற்றும் சிரிப்பு குறிகள்   இதில்  எங்கே  பாலியல் வல்லுறவு  ஆதரிக்கப்பட்டுள்ளது  ???????????????????????????????என்பதை  மேலே   கருத்துகள் எழுதியவர்கள். விளக்குங்கள்.  பார்ப்போம்     

ஒழுங்காக வாசிக்கமால். 

அரைகுறையாக. வாசித்து  

உங்கள் மனங்களில் 

உள்ள வக்கிரங்களைக்  வைத்து என் மீது   குற்றம் சாட்டுவதை 

தயவுசெய்து தவிர்த்து கொள்ளவும்  

நன்றி வணக்கம்…      இனிமேல் உந்த.  குறிகள். பாவிக்க விரும்பவில்லை    

தவறான புரிதலில்... கந்தையா அண்ணைக்கு பலர் கருத்து எழுதியுள்ளார்கள்.

அவர் ஆப்கானிஸ்தானுக்கு அந்தத் தந்தையை ஒருவழிப் பயணச்சீட்டுடன் அனுப்பி வைக்க வேண்டு என்று கூறியே... சிரிப்புக் குறியை போட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு ஒருத்தனை திரும்பி வரமுடியாதபடி அனுப்பி வைத்தால்.... தலிபான்களே தகுந்த தணடனையை கொடுப்பார்கள் என்று கருதித்தான் அந்தக் கருத்துக்கு சிரிப்பு குறி போட்டார். தலிபான்ளின் தண்டனை எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டியது இல்லை. அது உங்களுக்கே நன்கு தெரியும்.

அத்துடன் அவர் அந்தக் காமுகனின் செயலை வர் ங்கும் நியாயப் படுத்தவில்லை என்பதை பலர் கவனிக்கத் தவறி விட்டார்கள்.

giphy.gif?cid=6c09b952l6cw7emsruegvohna0

நேற்று வெள்ளிக்கிழமை 13´ம் திகதி எல்லோரையும் போட்டு சிப்பிலி ஆட்டிப் போட்டுது😲

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

இது தான்  பிரச்சனையான கருத்துகள்  மற்றும் சிரிப்பு குறிகள்   இதில்  எங்கே  பாலியல் வல்லுறவு  ஆதரிக்கப்பட்டுள்ளது  ???????????????????????????????என்பதை  மேலே   கருத்துகள் எழுதியவர்கள். விளக்குங்கள்.  பார்ப்போம்     

ஒழுங்காக வாசிக்கமால். 

அரைகுறையாக. வாசித்து  

உங்கள் மனங்களில் 

உள்ள வக்கிரங்களைக்  வைத்து என் மீது   குற்றம் சாட்டுவதை 

தயவுசெய்து தவிர்த்து கொள்ளவும்  

நன்றி வணக்கம்…      இனிமேல் உந்த.  குறிகள். பாவிக்க விரும்பவில்லை    

 

கூல் டவுண் கந்தையர். குறியை பாவியுங்கள். 😁

  • கருத்துக்கள உறவுகள்

ம் ....  யானை பாத்த குருடரின் கதையாயிற்று! யாரோ செய்த தவறுக்கு கந்தையரை தண்டிக்க வேண்டுமாம். சிரிப்பு குறி போட பயமாக இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.