Jump to content

மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
27 SEP, 2024 | 06:22 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை (24) நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அதனையடுத்து, சகல அரசியல் கட்சிகளும் இம்முறை பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கான வியூகங்களை அமைத்துவருகின்றன. இந்நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி இப்பொதுத்தேர்தலை அணுகவிருக்கும் விதம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன் மேலும் கூறியிருப்பதாவது:

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சி போட்டியிடும்போது, நாடளாவிய ரீதியில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் எமது பிரதேசங்களிலும் நிகழுமா என்ற கேள்வி பலரால் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, இளையவர்கள், பெண்கள், ஆற்றல் உடையவர்கள், அனுபவசாலிகள் எனப் பொருத்தமான தரப்பினரை அரசியல் கட்சிகள் முன்னிறுத்துமா என்ற அங்கலாய்ப்பு நம் மக்கள் மத்தியில் உள்ளது.

அதனைப் புரிந்துகொண்டு இம்முறை பொதுத்தேர்தலில் ஆற்றல்மிக்க முதிய முகங்களைக் களமிறக்கவேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாகும். எமது கட்சி உறுப்பினர்கள் பலரும் அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். அதற்கமைய கட்சியின் மத்திய செயற்குழுவே இதுகுறித்துத் தீர்மானிக்கும். இருப்பினும் அந்தத் தீர்மானம் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் அமையவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/194947

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சி போட்டியிடும்போது, நாடளாவிய ரீதியில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் எமது பிரதேசங்களிலும் நிகழுமா என்ற கேள்வி பலரால் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, இளையவர்கள், பெண்கள், ஆற்றல் உடையவர்கள், அனுபவசாலிகள் எனப் பொருத்தமான தரப்பினரை அரசியல் கட்சிகள் முன்னிறுத்துமா என்ற அங்கலாய்ப்பு நம் மக்கள் மத்தியில் உள்ளது.

 

வெளிநாட்டில் உள்ள தமிழ்த்தேசியவாதிகளிடம் அவர்கள் பரிந்துரை செய்யும் ஒரு வேட்பாளர் பட்டியலை கேட்கலாம். தேடலை அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சுமந்திரன் தனது விசுவாசியை கொண்டு வருகின்றார் என போர்க்கொடி தூக்குவார்கள். 😁

இளையவர்கள், ஆற்றல் உள்ளவர்கள், அனுபவசாலிகள் பெண்கள்?..

ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் பல வித்துவான்கள் உள்ளார்கள். ஆனால், இவர்களால் மேசை/சோபாவை விட்டு எழும்பி இறங்கி களத்தில் பணியாற்ற முடியுமா என்பது சந்தேகமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கிராமத்தில் தேசிய மக்கள் சக்தியில் 2 இளையோர் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக விரும்புகிறார்கள். ஒருவர் பல்கலைக் கழக மாணவர்!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நியாயம் said:

 

வெளிநாட்டில் உள்ள தமிழ்த்தேசியவாதிகளிடம் அவர்கள் பரிந்துரை செய்யும் ஒரு வேட்பாளர் பட்டியலை கேட்கலாம். தேடலை அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சுமந்திரன் தனது விசுவாசியை கொண்டு வருகின்றார் என போர்க்கொடி தூக்குவார்கள். 😁

இளையவர்கள், ஆற்றல் உள்ளவர்கள், அனுபவசாலிகள் பெண்கள்?..

ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் பல வித்துவான்கள் உள்ளார்கள். ஆனால், இவர்களால் மேசை/சோபாவை விட்டு எழும்பி இறங்கி களத்தில் பணியாற்ற முடியுமா என்பது சந்தேகமே.

தமிழரசு   என்று ஒரு கட்சி இப்போது இருக்கிறதா  ??? உண்மையில் இல்லை    அந்த கட்சிக்கு இந்த சுமத்திரன்  மரணச்சடங்கு நடத்திவிட்டார்.    

ஆசிரியர்கள் இடமாற்றம் 

அரசாங்க அதிபர் இடமாற்றம்   இவற்றை அமைச்சர்கள் மூலம் பெற்றுக் கொண்டார்கள் இப்போது   தன்னிச்சையாக அரசாங்கம்   தருமாயின்    இவர்கள் தேவையில்லை   முதலில் இவர் விலகட்டும் 

இப்போது உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருப்பது அல்லது வேறு தொழில் செய்வது நன்று    

புதிய அரசாங்கம் செய்வதை பொறுத்து இருந்து பார்ப்போம்   🙏🙏

12 minutes ago, ஏராளன் said:

எனது கிராமத்தில் தேசிய மக்கள் சக்தியில் 2 இளையோர் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக விரும்புகிறார்கள். ஒருவர் பல்கலைக் கழக மாணவர்!

நல்லது வரவேற்க வேண்டிய விடயம்.    சேவை செய்யும் ஆர்வம்  மனப்பான்மை உள்ளவர்கள் தான் பாராளுமன்றம் செல்ல வேண்டும்   வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம். வாழ்த்துக்கள். 

மாற்றம் ஒன்றே மாறாதது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:
27 SEP, 2024 | 06:22 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

2 late.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

எனது கிராமத்தில் தேசிய மக்கள் சக்தியில் 2 இளையோர் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக விரும்புகிறார்கள். ஒருவர் பல்கலைக் கழக மாணவர்!

 

பல்கலைக்கழக மாணவர் என்பது ஒரு தகுதியா?

உங்களுக்கு ஆர்வம் என்றால் நீங்களும் வேட்பாளர் ஆகலாம் @ஏராளன் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நியாயம் said:

 

பல்கலைக்கழக மாணவர் என்பது ஒரு தகுதியா?

அப்படியானால் இளைஞர்கள் படித்தவர்கள் வரணும் என்பது?????

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அப்படியானால் இளைஞர்கள் படித்தவர்கள் வரணும் என்பது?????

ஜனாதிபதி தேர்தலில் நிற்பதற்கு கட்டுப்பணம் ஆக இலங்கை ரூபாய்கள் 18,000 என ஒரு தகவல் பார்த்தேன்.

சுயேட்சையாக யாரும் கேட்கலாம். இது சமூக ஊடக யுகம். தமிழரசு கட்சி மூலம்தான் வேட்பாளராகி வெற்றிபெறலாம் என நியதி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤪ஆடு தானாகத் தலையை நீட்டுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நியாயம் said:

ஜனாதிபதி தேர்தலில் நிற்பதற்கு கட்டுப்பணம் ஆக இலங்கை ரூபாய்கள் 18,000 என ஒரு தகவல் பார்த்தேன்.

சுயேட்சையாக யாரும் கேட்கலாம். இது சமூக ஊடக யுகம். தமிழரசு கட்சி மூலம்தான் வேட்பாளராகி வெற்றிபெறலாம் என நியதி இல்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தேர்தல் மாவட்டத்தில் ஒரு சுயேட்சைக்குழுவாகப் போட்டியிடவேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து இம்முறை 6 உறுப்பினர் தெரிவுசெய்யப்பட இருப்பதால் 9 பேர் ஒரு சுயேட்சைக் குழுவில் போட்டியிட வேண்டும். எனவே ஒருவருக்கு தலா 2000 ரூபாய் வீதம் 9 பேருக்கும் 18000 ரூபாய் கட்டுப்பணம் செலுத்தப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்.... இதனை   "இதய சுத்தியுடன்"  சொல்லி இருந்தால்.... வரவேற்கத் தக்கது. 👍
ஆனால்.... இவரை, முழுக்க நம்புவது ஆபத்தானது.

முதலில்... சுமந்திரன் வெளியே போய், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
அதை செய்யாமல்...
"வாயால் வடை சுடும் வேலை" ஒன்றும் நடைமுறைக்கு சரிவராது. 😂

சுமந்திரன்  வெளியேறி  போட்டியிடாமல் விட்டால்,  மற்றவர்களும் தாமாக வெளியேறுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 👍

சுமந்திரன் இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று சொல்லி விட்டு...
அவர்,
கடைசி நேரத்தில் பின்கதவால் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய ஆள்.  animiertes-gefuehl-smilies-bild-0374.gif

அவர்  கடந்த காலத்தில் செய்த "தில்லு முல்லுகள்".... 
இவரின்
நேர்மையை கேள்விக்குறி ஆக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

 

பல்கலைக்கழக மாணவர் என்பது ஒரு தகுதியா?

உங்களுக்கு ஆர்வம் என்றால் நீங்களும் வேட்பாளர் ஆகலாம் @ஏராளன் 

அவர்களுடைய ஆர்வத்தைச் சொன்னேன் அண்ணை.
எனக்கு ஆர்வமில்லை.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரச நிறுவனங்களுக்கு சொந்தமான 4000 வாகனங்கள் மாயம் – விசேட ஆய்வு ஆரம்பம். சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம் ஆகிய ஜனாதிபதி செயலகம் உட்பட பல அரச நிறுவனங்களில் சுமார் 4000 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் படி, அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசேட கணக்காய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்தக் கணக்காய்வின் பின்னர், காணாமல் போன அல்லது இடம்பெயர்ந்த அரச வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதான கணக்காய்வாளர்டபிள்யூ.பி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். காலி முகத்திடலத்தில் ஒப்படைக்கப்பட்ட 110 சொகுசு வாகனங்கள் தொடர்பிலான தகவல்களை ஆராய விசேட கணக்காய்வு குழுவொன்று அங்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்துடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், வாகனங்களை  பயன்படுத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் உரிய தகவல்களைச் சரிபார்க்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அல்லது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் 679 கார்கள் மற்றும் 1115 மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. மேலும், கல்வி அமைச்சுக்குச் சொந்தமான 212 வாகனங்களும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 880 வாகனங்களும், தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான 45 வாகனங்களும் காணமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1401553
    • அநாவசியமான இடங்களில் காணப்படும் மதுபானசாலைகளை அகற்ற நடவடிக்கை. மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு இடம்பெற்ற வர்த்தகம் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு முழுமையான தரவுகளுடன் வெளிப்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்து தேர்தல் பிரசார செயற்பாடுகளுக்கான பணம் பெறப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. அதேபோன்று அநாவசியமான இடங்களில் காணப்படும் மதுபானசாலைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கொள்ளையர்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். கொள்ளையர்களை அடையாளம் காணும் செயற்பாடு கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. அவ்வாறான பலர் தற்போது வாகனங்களை விட்டுச் சென்றுள்ளனர். பலர் வாகனங்களை வீதியில் பயன்படுத்தாமல் மறைத்து வைத்துள்ளமை தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1401514
    • தமிழரசு கட்சியின் மத்திய குழுக்கூட்டம்.   தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்றைய தினம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது. மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில்  நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், க.குகதாசன், ஈ.சரவணபவன்,இரா.சாணக்கியன்,   கலையரசன்,சாந்தி சிறீஸ்கந்தராஜா, சி.சிவமோகன்,அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சட்டத்தரணி கே.வி  தவராசா கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், உட்பட கட்சியின் பெரும்பாலான மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். https://athavannews.com/2024/1401538
    • சேர்ந்து இருந்து, குழி பறிக்கும்  சகுனி  இந்தியாவை விட...  சீனா பத்தாயிரம் மடங்கு திறம். 👍 நீங்கள், தொடருங்கள் அனுர. 🙂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 2 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.