Jump to content

தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!

SelvamSep 28, 2024 22:20PM
tamil-nadu-minister-udhayanidhi-stalin-1

தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் இன்று (செப்டம்பர் 28) நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  மேலும், ஆறு அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது.

GYk3ArIWYAAeU1o-768x1031.jpeg

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜூக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனுக்கு பால் வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுவுக்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

GYk3H5iWEAILxtI-768x986.jpeg

புதிதாக பொறுப்பேற்கவுள்ள அமைச்சர்களுக்கு நாளை மாலை 3.30 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

 

 

https://minnambalam.com/political-news/tamilnadu-cabinet-reshuffle-udhayanidhi-will-become-deputy-cm/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேவலங்கெட்ட குடும்ப அரசியல்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு மக்களும் தங்களுக்கு ஒரு அநுரகுமார வேண்டும் என்று விரும்பினார்களாமே............ இதோ உங்களுக்காக ஒரு உதயகுமார...........🤣.

ராஜராஜ சோழன் பரம்பரை ஆட்சியை விட இது நீளப் போகுது போல...........

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தக்க நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் மிகவும் சரியான முடிவு. 

(ஸ்ராலின் நோய்வாய்ப்பட்டுருக்கிறார் எனும் வசந்தி உண்மையாக இருக்குமோ  🤨)

👍

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்திமுக்கா(😄) போல் சிதறுண்டு போகாமல் கட்சி காப்பாற்றப் பட வேண்டும் என்றால் இதைத் தவிர கட்சித் தலைமைக்கு வேறு வழி இல்லை. சில வேளைகளில் கட்சி ஆட்சிக்கு வர முடியாமல் போகலாம் ஆனால் கட்சி ஓரளவுக்கு உயிப்புடன் இருக்கும். குறிப்பிடத்தக்க அளவுக்கு தொண்டர்கள் விலக நேரலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

தமிழ்நாட்டு மக்களும் தங்களுக்கு ஒரு அநுரகுமார வேண்டும் என்று விரும்பினார்களாமே............ இதோ உங்களுக்காக ஒரு உதயகுமார...........🤣.

ராஜராஜ சோழன் பரம்பரை ஆட்சியை விட இது நீளப் போகுது போல...........

வெட்கமே இல்லாமல் இந்த வயதில், அனுபவங்கள் இன்றி வந்திருக்கிறார். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.