Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!

Vhg நவம்பர் 19, 2024
1000379163.jpg

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்தார் அவர் ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார்.

இனிவரும் காலங்களில் தரம் 8 வரை மாணவர்களுக்கு போட்டி பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது. முன்பள்ளி கல்வி திட்டம் முழுமையாக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும் அத்துடன் இப் பிரிவு உட்பட ஆரம்பக்கல்வி கட்டமைப்பு முன்பள்ளி அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன்கீழ் வழி நடத்தப்படவுள்ளது.

இப்பிரிவுக்கான ஆசிரியர்கள் அரசாங்க நியமனங்களாக வழங்கப்படும் அதே வேளை இவர்கள் பட்டதாரிகளாக ஆரம்பத் கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம் எனவும் தெரிவித்த பிரதமர் மேற்படி மாற்றங்கள் உடனடியாக அன்றி படிப்படியாக சீரான திட்டமிடலுக்கு அமைய இடம் பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

https://www.battinatham.com/2024/11/blog-post_873.html

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2024 at 00:15, கிருபன் said:

இனிவரும் காலங்களில் தரம் 8 வரை மாணவர்களுக்கு போட்டி பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது

சிறப்பு! 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் . ......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

சிறப்பு! 

முற்றிலும் மாறுபடுகிறேன்.

புலமை பரிட்சை என்பது பல பின் தங்கிய மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறிப்பாய உதவும் ஏணி.

பல கிராமபுற மாணவர்கள் கனவில் கூட நினைக்க முடியாத கொழும்பு பாடசாலைகளில் கல்வியும் விடுதி வசதியும் பெற்றுக்கொடுக்கும் திறவுகோல்.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

முற்றிலும் மாறுபடுகிறேன்.

புலமை பரிட்சை என்பது பல பின் தங்கிய மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறிப்பாய உதவும் ஏணி.

பல கிராமபுற மாணவர்கள் கனவில் கூட நினைக்க முடியாத கொழும்பு பாடசாலைகளில் கல்வியும் விடுதி வசதியும் பெற்றுக்கொடுக்கும் திறவுகோல்.

 

நீங்கள் சொல்வது உண்மை தான் அண்ணா! ஆனால் நடைமுறையில் போட்டிப் பரீட்சையாக பிள்ளைகளுக்கு மோசமான உளவியல் அழுத்தத்தை தானே வழங்குகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2024 at 08:15, கிருபன் said:

இனிவரும் காலங்களில் தரம் 8 வரை மாணவர்களுக்கு போட்டி பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது. முன்பள்ளி கல்வி திட்டம் முழுமையாக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும் அத்துடன் இப் பிரிவு உட்பட ஆரம்பக்கல்வி கட்டமைப்பு முன்பள்ளி அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன்கீழ் வழி நடத்தப்படவுள்ளது.

சோதனைகளுக்காகவே... மாணவர்களை தயார் படுத்தும்,
"ரியூசன்"  வகுப்புகளுக்கு "மூடுவிழா" நடக்கும்  போலுள்ளது. 🙃

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் போஸ்ரர் அடித்து வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம் என்கிற மாய்மாலங்கள் எல்லாம் ஒழிந்து போகும். 👏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சோதனைகளுக்காகவே... மாணவர்களை தயார் படுத்தும்,
"ரியூசன்"  வகுப்புகளுக்கு "மூடுவிழா" நடக்கும்  போலுள்ளது. 🙃

என்னுடைய தந்தையார் தனியார் கல்வி, மருத்துவ துறைகளை கடுமையாக எதிர்க்கிறார்! ஆனால் நான் கேட்பேன் ஒரு சிறந்த ஆசிரியரிடம் கல்வி கற்கும் வாய்ப்பு, சிறந்த மருத்துவரிடம் மருத்துவம் செய்யும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்க என்ன வழி என்று கேட்பேன்? அதற்கு பாடசாலையிலும் மருத்துவமனையிலும் சரியாக பணிபுரிந்தால் வேற இடம் போகத்தேவையில்லை என்பார்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:
On 19/11/2024 at 02:15, கிருபன் said:

இனிவரும் காலங்களில் தரம் 8 வரை மாணவர்களுக்கு போட்டி பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது. முன்பள்ளி கல்வி திட்டம் முழுமையாக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும் அத்துடன் இப் பிரிவு உட்பட ஆரம்பக்கல்வி கட்டமைப்பு முன்பள்ளி அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன்கீழ் வழி நடத்தப்படவுள்ளது.

சோதனைகளுக்காகவே... மாணவர்களை தயார் படுத்தும்,
"ரியூசன்"  வகுப்புகளுக்கு "மூடுவிழா" நடக்கும்  போலுள்ளது.

இப்போது படித்து பட்டதாரியாகும் மாணவ மாணவியர்கள்களுக்கு படிப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது.

விளையாட்டுக்களில் இருந்து பேச்சுப்போட்டி கவிதை பாடல் என்று சிறிய வயதிலிருந்தே வெற்றி தோல்விகளையும் அடுத்தவருடன் பழகும் சந்தர்ப்பங்களையும் இழந்துவிடுகின்றனர்.

இதனால் படித்து பட்டங்களெடுத்தாலும் எதிர்காலத்தில் வாழ முடியாமல் உள்ளனர்.

திடீரென தோல்விகள் வரும்போது தாங்க முடியாமல் தற்கொலை செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முன் பள்ளிகள் சார்ந்த பெரிய அனுபவம் உண்டு. டக்லஸ் எங்கள் ஊரில் இதை தேர்தல் காலத்தில் மட்டும் பயன்படுத்திக் கொண்டார். 

இது நிரந்தரம் என்றால் வரவேற்கத்தக்கது. ஆனால் அதிலும் பட்டதாரிகளாக இருக்கவேண்டும் என்பது நன்றன்று. முன் பள்ளிகளுக்கு எதுக்கு பட்டதாரிகள்????

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விசுகு said:

இந்த முன் பள்ளிகள் சார்ந்த பெரிய அனுபவம் உண்டு. டக்லஸ் எங்கள் ஊரில் இதை தேர்தல் காலத்தில் மட்டும் பயன்படுத்திக் கொண்டார். 

இது நிரந்தரம் என்றால் வரவேற்கத்தக்கது. ஆனால் அதிலும் பட்டதாரிகளாக இருக்கவேண்டும் என்பது நன்றன்று. முன் பள்ளிகளுக்கு எதுக்கு பட்டதாரிகள்????

முன்பள்ளிகள் என்றல்ல, கல்வித்துறைக்குள் புகுவதென்றாலே ஆகக் குறைந்த தகமை பட்டதாரியாக இருக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. அல்வித்துறையில் இருப்பவர்களுக்கு வேறெந்தத் துறைகளையும் விட அதிக சம்பளமும் அதிக தகமையும் இருக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் அவர்களுக்கு அதிக மரியாதையும் கிடைக்கும்,  அவர்களுக்கு அதிக பொறுப்பும் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

முன்பள்ளிகள் என்றல்ல, கல்வித்துறைக்குள் புகுவதென்றாலே ஆகக் குறைந்த தகமை பட்டதாரியாக இருக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. அல்வித்துறையில் இருப்பவர்களுக்கு வேறெந்தத் துறைகளையும் விட அதிக சம்பளமும் அதிக தகமையும் இருக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் அவர்களுக்கு அதிக மரியாதையும் கிடைக்கும்,  அவர்களுக்கு அதிக பொறுப்பும் இருக்கும். 

பட்டதாரியாக இருந்து படிப்பிக்க தெரியாத ஆக்களும் இருக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாதவூரான் said:

பட்டதாரியாக இருந்து படிப்பிக்க தெரியாத ஆக்களும் இருக்கினம்

களையெடுக்க வேண்டியது அவர்களின் மேலதிகாரிகளே. இந்தத் தகுதியின்மைப் பிரச்சனை எல்லத் துறைகளிலும் இருக்கிறது. 

(உ+ம்: MP  Dr. அர்ச்சுனா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டு எழும்பமாட்டேன் என்று அடம்பிடித்த சம்பவம். )

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விசுகு said:

இது நிரந்தரம் என்றால் வரவேற்கத்தக்கது. ஆனால் அதிலும் பட்டதாரிகளாக இருக்கவேண்டும் என்பது நன்றன்று. முன் பள்ளிகளுக்கு எதுக்கு பட்டதாரிகள்????

இதுவரை சாதரண/உயரதரம் கற்ற பெண்பிள்ளைகள் தான் முன்பள்ளி ஆசிரியர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு அரசு உதவிப்பணமாக 6000ரூபா வழங்குகிறது. பெற்றோரிடம் இருந்து ஒரு பிள்ளைகளுக்கு 1000ரூபா பெறுகிறார்கள்!

அரசு முன்பள்ளிகளை உள்வாங்கினால் பட்டதாரிகளுக்கு(உலக அளவில் முன்பள்ளிக் கல்வி கற்பிக்க சிறப்பு பட்டதாரிகளையே அனுமதிக்கிறார்கள்) வேலைவாய்ப்பும் ஏற்கனவே இருந்தவர்களுக்கு உதவி ஆசிரியர் பணியும் கொடுக்கலாம் என எண்ணுகிறேன் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

முன்பள்ளிகள் என்றல்ல, கல்வித்துறைக்குள் புகுவதென்றாலே ஆகக் குறைந்த தகமை பட்டதாரியாக இருக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. அல்வித்துறையில் இருப்பவர்களுக்கு வேறெந்தத் துறைகளையும் விட அதிக சம்பளமும் அதிக தகமையும் இருக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் அவர்களுக்கு அதிக மரியாதையும் கிடைக்கும்,  அவர்களுக்கு அதிக பொறுப்பும் இருக்கும். 

என்னைப் பொறுத்தவரை முன் பள்ளிகளில் படிப்பிக்க சமுக அக்கறையுடைய சாதாரண தரத்தில் சித்தியடைந்த பிள்ளைகளே நன்று. இது அநேகமான வெளிநாடுகளில் அடுத்த கட்டங்களுக்கு சாதாரண தரத்தில் மட்டுமே சித்தியடைந்த பிள்ளைகளையும் நகர்த்துவதற்கும் உதவும்

எனது ஊரில் போர்க் காலத்தில் சாதாரண தரத்திற்கு மேல் செல்லமுடியாத பல பிள்ளைகள் உள்வாங்கப்பட்டு பின்னர் பாடசாலைகளுக்கு மாற்றமாகிச்சென்றதும் நடந்தது. 

கிட்டத்தட்ட 15 முன் பள்ளிகளில் 18 க்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்வாங்கப்பட்டு ஆறு வருடங்களாக எமது ஊர் ஒன்றியம் மூலம் கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் சம்பளம் மட்டும் வழங்கப்பட்டது. பின்னர் டக்லஸ் மற்றும் அரச குளறுபடிகளால் நிறுத்திக்கொண்டோம். 

பட்டப்படிப்பை தொடரமுடியாத பிள்ளைகளுக்கு தான் இது ஒரு வரப்பிரசாதம். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

எனது ஊரில் போர்க் காலத்தில் சாதாரண தரத்திற்கு மேல் செல்லமுடியாத பல பிள்ளைகள் உள்வாங்கப்பட்டு பின்னர் பாடசாலைகளுக்கு மாற்றமாகிச்சென்றதும் நடந்தது. 

கிட்டத்தட்ட 15 முன் பள்ளிகளில் 18 க்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்வாங்கப்பட்டு ஆறு வருடங்களாக எமது ஊர் ஒன்றியம் மூலம் கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் சம்பளம் மட்டும் வழங்கப்பட்டது.

பட்டப்படிப்பை தொடரமுடியாத பிள்ளைகளுக்கு தான் இது ஒரு வரப்பிரசாதம். 

ஒரு வகையில் நல்லது என்றாலும் குழந்தைகளின் வாழ்க்கையை தீர்மானிக்கும் அடிப்படைக் கல்வி என்பதால் தகுதியானவர்கள் மூலம் சரியாக வழங்கப்படவேண்டும் என நினைக்கிறேன் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

சோதனைகளுக்காகவே... மாணவர்களை தயார் படுத்தும்,
"ரியூசன்"  வகுப்புகளுக்கு "மூடுவிழா" நடக்கும்  போலுள்ளது. 🙃

மக்களிடம் பணம் கொள்ளை அடிப்பதற்காக ரியூசனன் தான் அத்தியாவசியமானது பாடசாலை என்பது சும்மா சென்று வருவது  போன்ற நிலையை  தமிழர்களிடம்  புகுத்திய ரியூசன் வகுப்புகளுக்கு மூடுவிழா நடத்தபட வேண்டியது மிகவும் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த விடயம் ... சிறு பிள்ளைகளை வைத்து போட்டி போட்டு அவர்களை உளவியல் ரீதியாக கல்வியில் உள்ள ஆர்வத்தை சிதைக்காமல் வளர்ந்த பின்னர் தான் போட்டி பரிச்சை நல்லம் ....மனதளவில் அதனை எதிர்கொள்வார்கள் ....எனக்கு தெரிந்த நிறையபேர் புலமைப்பரிசிலில் நல்ல பெறுபேரை எடுத்து இறுதியில் பல்கலைக்கழகம் போகாதவர்கள் உண்டு ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.