Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்

8 டிசம்பர் 2024, 03:48 GMT
சிரியா

Getty Images

அதிபர் வெளியேறியதனை அடுத்து, டமாஸ்கஸில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்

'மோசமான ஆட்சியாளர்' அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் என கூறியுள்ள கிளர்ச்சி படைகள், நாடு 'விடுவிக்கப்பட்டது' எனவும் அறிவித்துள்ளன.

ஒரு இருண்ட சகாப்தத்தின் முடிவு மற்றும் புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்று டெலிகிராம் செயலியில் ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் கிளர்ச்சி குழு குறிப்பிட்டுள்ளது.

ஹயத் தஹ்ரிர் அல் ஷாம், அதன் தாக்குதலை ஒன்றரை வாரத்திற்கு முன்பு தொடங்கியதில் இருந்து, அவர்கள் சிரியாவின் முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்படும் தலைநகர் டமாஸ்கஸின் மையப் பகுதியில் உள்ள உமையாத் சதுக்கத்தில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

''ஆசாத்தின் அரை நூற்றாண்டு ஆட்சியில் சிரியாவில் இருந்து இடம்பெயர்ந்த அல்லது சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் இப்போது தாயகத்திற்கு மீண்டும் வரலாம். இது ஒரு புதிய சிரியாவாக இருக்கும், இங்கு அனைவருக்கும் அமைதி மற்றும் நீதியும் கிடைக்கப்பெறும்" என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1970களின் தொடக்கத்தில் இருந்து கடந்த 54 ஆண்டுகளாக அசாத் குடும்பம் சிரியாவில் ஆட்சி புரிந்து வந்தது.

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அபு முகமது அல்-ஜவ்லானி, ஆட்சி மாற்றம் நடைபெறும் வரை அனைத்து அரசு துறைகளும் பிரதமரின் மேற்பார்வையில் இருக்குமென தெரிவித்துள்ளார்.

மேலும் டமாஸ்கஸில் உள்ள அரசு துறைகளுக்கு ராணுவம் செல்ல தடை விதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

இதற்கிடையே சிரியாவின் பிரதமர் மொஹமத் காஸி அல்-ஜலாலி தான் டமாஸ்கஸில் இருப்பதாகவும், மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 

 

 

வெளியேறிய அதிபர்

 

முன்னதாக சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸுக்குள் நுழைவதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். 

"எங்கள் படைகள் டமாஸ்கஸுக்குள் நுழைய தொடங்கிவிட்டன", என்று தங்களின் டெலிகிராம் செயலி கணக்கில் கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.

"ஒவ்வொரு பகுதியாக டமாஸ்கஸ் நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிக்கொண்டு வருகின்றனர்", என்று பிபிசியின் அமெரிக்கக் கூட்டு நிறுவனமாக சிபிஎஸ்ஸிடம் அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார். 

ஹோம்ஸ் நகரை "முழுமையாக விடுவித்த" பிறகு டமாஸ்கஸ் நகரை நோக்கி கிளர்ச்சியாளர்கள் வந்தனர். 

இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுவான ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் இதனை ஒரு "வரலாற்று சிறப்பு மிக்க தருணம்" என்று விவரித்துள்ளது.

இதனையடுத்து, சிரிய அதிபர் பஷார் அல் அசாத் டமாஸ்கஸ் நகரை விட்டு விமானத்தின் மூலம் புறப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இரண்டு சிரிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. 

டமாஸ்கஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு தனியார் விமானத்தில் அதிபர் அசாத் ஏறி சென்றிருக்கலாம் என்றும் விமானம் புறப்பட்ட பின்னர், விமான நிலையத்தில் இருந்த சிரிய அரசின் பாதுகாப்புப் படைகள் வெளியேறினர் என்றும் தி சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ் தெரிவித்தது.
 

 

சிரியா: டாமஸ்கஸ்

Getty Images

சிரிய அதிபர் பஷர் அல் அசாத் டமாஸ்கஸ் நகரை விட்டு புறப்பட்டுவிட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது 

மேலும் டமாஸ்கஸ் நகரின் மையப்பகுதியில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. 

கிளர்ச்சியாளர்களின் படைகள், பார்சேவுக்கு அருகே இருப்பதாகவும், அங்கு மோதல்கள் நடைபெறுவதாகவும் அந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். 

"மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, இணைய சேவை மிகவும் குறைவாக உள்ளது, மக்கள் தங்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்", என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.

"மிகவும் சத்தமாக துப்பாக்கிச் சூடு நடந்தது அது எங்கிருந்து வருகிறது என்பது உடனடியாகத் தெரியவில்லை", என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அப்பகுதியில் வசிக்கும் இருவரை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.

சிரியா: டமாஸ்கஸ்

Getty Images

 

சிரியாவில் என்ன நடக்கிறது?

 

சிரியா அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக இல்லாத அளவிலான மிகப்பெரிய தாக்குதலை கிளர்ச்சிக்குழுக்கள் ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கின.

சிரியாவில் நடக்கும் மோதலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும், இஸ்லாமிய ஆயுதக் குழுவான 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (Hayat Tahrir al-Sham- HTS)' தலைமையில் இந்த திடீர் தாக்குதல் நடந்துள்ளது.

ஏற்கனவே கடும் பதற்றம் நிலவி வந்த சூழலில், கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் அலெப்போ மற்றும் இட்லிப் பகுதிகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அலெப்போ மற்றும் தலைநகர் டமாஸ்கஸுக்கும் நடுவே ஹமா நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியினை டிசம்பர் 5-ஆம் தேதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.

இது அதிபர் அசாத்திற்கு இரண்டாவது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டது.

மேலும் கிளர்ச்சிபடைகள் ஹோம்ஸ் நகரையும், தெற்கு சிரியாவின் டெரா பிராந்தியத்தில் உள்ள பெரும்பான்மை பகுதிகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து அவர்கள் இன்று (டிசம்பர் 😎 தலைநகர் டாமஸ்கஸையும் கைப்பற்றியுள்ளனர்.

2011 இல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக தெற்கில் புரட்சி தொடங்கியது. அதைத் தொடந்து, அங்கு அமைதியின்மை நிலவத் தொடங்கியது.

சிரியா: டாமஸ்கஸ்

Getty Images

ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் இரண்டு வாரங்களுக்கு முன்பு தாக்குதலை தொடங்கியதில் இருந்து, சிரியாவின் முக்கிய நகரங்களை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

 

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழு யார்?

 

2011 இல் அல் கொய்தாவின் நேரடி இணைப்பாக 'ஜபத் அல்-நுஸ்ரா' (Jabhat al-Nusra) என்ற வேறு பெயரில் 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' அமைக்கப்பட்டது.

இஸ்லாமிய அரசு (IS) என தன்னை தானே அழைத்துக்கொள்ளும் குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியும் ஜபத் அல்-நுஸ்ராவின் உருவாக்கத்தில் ஈடுபட்டார்.

சிரியா அதிபர் அசாத்துக்கு எதிரான குழுக்களில், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கொடிய குழுவாக இது கருதப்பட்டது.

ஆனால் அதன் புரட்சிகரக் கொள்கையை விட, 'ஜிஹாதி சித்தாந்தம்' அக்குழுவின் உந்து சக்தியாக கருதப்படுகிறது.

2016-ஆம் ஆண்டில், இக்குழுவின் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானி, அல் கொய்தாவுடன் உள்ள தொடர்பைப் பகிரங்கமாகப் பிரிந்து, ஜபத் அல்-நுஸ்ராவை கலைத்தார். பின்னர் ஒரு புதிய அமைப்பை நிறுவினார்.

ஒரு வருடம் கழித்து, இதே போன்ற பிற குழுக்களுடன் இணைந்தபோது 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' என்ற பெயரை இக்குழுப் பெற்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

 



https://www.bbc.com/tamil/articles/c5y88ez95e8o

 

  • Replies 60
  • Views 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    ஈராக் லிபியா போல் வரும்.இதே போல் சவூதியிலும் ஜோர்தானிலும் புரட்சிகள் ஏற்பட வேண்டும். அப்போதுதான் தங்களுக்குள் அடிபட்டு சாவார்கள்.

  • குமாரசாமி
    குமாரசாமி

    என்ன விசுகர்? பொசுக்கெண்டு உப்பிடி சொல்லிப்போட்டியள்? நீங்கள் சொல்லுற மாதிரி எல்லா நாடுகளும் சண்டை சச்சரவில்லாமல் சந்தோசமாக வாழ வெளிக்கிட்டால் உங்கடை ஆக்கள்(அமெரிக்கா,பிரான்ஸ்,ஜேர்மனி,பெரீய பிரித்தானி

  • குமாரசாமி
    குமாரசாமி

    👍🏼👍🏼👍🏼 என் மண்ணும் என் இனமும் என் மதமும் என் பெற்றோரும் என் ஆசான்களும் என் உடன் பிறப்புகளும் என் கல்விகளும் என் சூழலும் என் சுற்றாடலும் என் நண்பர்களும் நீங்கள் சொன்னதையே அறிவு

  • கருத்துக்கள உறவுகள்

சிரிய அதிபர் அசாத், சிரியாவை… விட்டு வெளியேறியதுடன் 
சிரியாவில் அமைதி திரும்புமா. 
அல்லது சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சிக்காரர்களின் மூலம், “தலிபான்கள்” போல கெடுபிடிகள் தொடருமா?

  • கருத்துக்கள உறவுகள்

டமாஸ்கஸை கட்டுப்படுத்தியதாக சிரியா கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

டமாஸ்கஸை கட்டுப்படுத்தியதாக சிரியா கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

பஷர் அல்-அசாத்தின் 24 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததாக சிரிய கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மின்னல் தாக்குதலைத் தொடர்ந்து அரசு தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை (07) வெளியிட்ட முதல் அறிவிப்பில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர்.

சிரியாவின் ஆயுதமேந்திய எதிர்க்கட்சி, அதன் போராளிகள் தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியதாகவும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

டமாஸ்கஸ் “இப்போது அசாத்திடமிருந்து விடுபட்டுள்ளது” என்று கிளர்ச்சியாளர்கள் சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டனர்.

ஜனாதிபதி பஷர் அல்-அசாத் எங்கிருக்கிறார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

எனினும், பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு, அசாத் டமாஸ்கஸில் இருந்து டிசம்பர் 8 அன்று அதிகாலையில் விமான மூலமாக புறப்பட்டுச் சென்றதாகக் கூறியது.

A portrait of Syrian President Bashar al-Assad is pictured with its frame broken, in a Syrian regime's Political Security Branch facility on the outskirts of the central city of Hama, following the capture of the area by anti-government forces.

அந்த அறிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆனால் சிரிய பிரதமர் மொஹமட் காசி அல்-ஜலாலி ஒரு வீடியோவில், “மக்கள் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு தலைமைக்கும் அரசாங்கம் ஒத்துழைக்க தயாராக உள்ளது” என்று கூறினார்.

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) கிளர்ச்சிக் குழுவின் தலைவரான அபு மொஹமட் அல்-கோலானி, 775,000 மக்கள் வசிக்கும் ஹோம்ஸை கிளர்ச்சிப் போராளிகள் “விடுவிப்பதற்கான இறுதி தருணங்களில்” இருப்பதாக டிசம்பர் 7 ஆம் திகதி பிற்பகுதியில் கூறியிருந்தார்.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் HTS ஒரு பயங்கரவாதக் குழுவாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், அசாத் ஆட்சியின் வீழ்ச்சி ரஷ்யாவுக்கு‍ ஒரு பெரிய புவிசார் அரசியல் பின்னடைவை பிரதிநிதித்துவப்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இது தெஹ்ரானுடன் சேர்ந்து பல ஆண்டுகால உள்நாட்டுப் போரின் மூலம் சிரிய அரசாங்கத்தை ஆதரித்துள்ளது.

சிரியாவில் ரஷ்யா பல இராணுவ தளங்களைக் கொண்டுள்ளது.

இதில் ஹெமிமிமில் ஒரு விமானத் தளம் மற்றும் டார்டஸில் உள்ள மூலோபாய கடற்படை வசதிகளும் அடங்கும்.

இவை ஆப்பிரிக்காவில் மொஸ்கோவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

Umayyad Square in Damascus

https://athavannews.com/2024/1411444

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரிய ஜனாதிபதி பஷார் அல் – ஆசாத் தலைநகரை விட்டு தப்பியோட்டம்!

adminDecember 8, 2024
damas.jpg

சிரிய ஜனாதிபதி பஷார் அல் – ஆசாத் தலைநகரை விட்டு விமானத்தில் தப்பியோடியிருக்கும் நிலையில், டாமஸ்கஸைக் கைப்பற்றி விட்டதாக கிளர்ச்சிப் படையினர் ஞாயிற்றுக்கிழமை (08.12.24) அறிவித்துள்ளனர். தலைநகரை விட்டு அரசுப்படைகள் வெளியேறி விட்டதால், டமாஸ்கஸ் நீண்டகால ஆட்சியாளரான ஆசாத்தின் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக கிளர்ச்சி படையினர் தெரிவித்தனர்.

பஷார் அல் ஆசாத் தப்பியோடிவிட்டார். ஆசாத்தின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து டமாஸ்கஸ் விடுவிக்கப்பட்டது என்று நாங்கள் அறிவிக்கிறோம் என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதனிடையே, கடந்த 24 வருடங்களாக சிரியாவை ஆட்சி செய்த அதிபர் பஷார் அல் ஆசாத், விமானத்தில் ஏறி அடையாளம் தெரியாத இடத்துக்கு சென்று விட்டதாக சர்வதேச செய்தி நிறுவனத்திடம் மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்து விட்டதாக ராணுவத் தளபதி அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இருண்ட சகாப்தம் முடிவடைந்தது: ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிப் படை அதன் அறிக்கையொன்றில், “இருண்ட காலத்தின் இந்த சகாப்தம் முடிவடைந்து, புதியதொரு சகாப்தம் தொடங்குவதாக இன்று டிசம்பர் 8, 2024ல் நாங்கள் அறிவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

டமாஸ்கஸின் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து சிரியாவின் பாதுகாப்பு படையினர் பின்வாங்கி விட்டதாகவும், கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்கள் காரணமாக ராணுவத்தினரும், அதிகாரிகளும் விமானநிலையத்தை கைவிட்டு விட்டு வெறியேறி விட்டதாகவும், பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு டமாஸ்கஸில் உள்ள சைட்னாயா ராணுவச் சிறைகக்குள் நுழைந்து கைதிகளை விடுவித்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், “எங்களின் கைதிகளை சிறைகளில் இருந்து விடுவித்து, அவர்களின் கைவிலங்குகளை விடுவித்து, அநீதியின் சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது என்ற செய்தியினை அறிவிக்கும் சந்தோஷத்தை நாங்கள் எங்கள் சிரிய மக்களுடன் இணைந்து கொண்டாடுகிறோம்” என்று தெரிவித்தனர்.

படிப்படியாக முன்னேறிய கிளர்ச்சி படை: கடந்த நவம்பர் 27-ம் திகதி, சிரியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான அலெப்போவில் இருந்து அரசுப் படைகள் விரைவாக வெளியேறியதால், அந்த நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதைடுத்து, கடந்த வியாழக்கிழமை ஹோமா நகரையும், வெள்ளிக்கிழமை சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் கைப்பற்றினர். ஒருவாரகாலத்தில் கிளர்ச்சிப் படைகளின் கை வேகமாக ஓங்கி இன்று தலைநகர் டாமஸ்கஸும் கிளர்ச்சியாளர்கள் வசமாகியுள்ளது.

முன்னதாக,கிளர்ச்சிப் படையினர் சனிக்கிழமை கடந்த 2000 ஆண்டு முதல் ஆசாத் ஆட்சி செய்து வரும் டமாஸ்கஸை சுற்றிவளைத்திருப்பதாக அறிவித்தனர். “நாங்கள், தலைநகர் மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிக்கு இடையில் இருக்கும் ஹோம்ஸ் நகரின் விளிம்பில் நிற்கிறோம். ஹோம்ஸ் கைப்பற்றப்பட்டவுடன் ஆசாத்தின் படை வலிமையாக இருக்கும் கடற்கரை பகுதியில் இருந்து டமாஸ்கஸ் துண்டிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தனர். அன்று இரவு அவர்கள் ஹோம்ஸை கைப்பற்றியதாக அறிவித்தனர்.

தற்போது தலைநகர் டாமஸ்கஸும் கிளர்ச்சியாளக்கள் வசமாகியிருக்கும் நிலையில், 14 மாகாண தலைநகரங்களில், லடாகிய மற்றும் டார்டஸ் ஆகிய நகரங்கள் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

50 ஆண்டு கால ஆசாத் குடும்ப ஆட்சி: சிரியா கடந்த 5 தசாப்தங்களுக்கும் மேலாக ஆசாத்தின் குடும்பத்தால் ஆளப்பட்டு வருகிறது. தனது தந்தை ஹஃபிஸ் ஆசாத்தின் மரணத்தை தொடர்ந்து, பஷார் அல் ஆசாத் சிரியாவின் அதிகாரத்துக்கு வந்தார். மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட அரபு வசந்தங்களால் ஈர்க்கப்பட்டநிலையில் சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஆசாத்துக்கு எதிரான எதிர்ப்பு நிலவி வருகிறது. அதிபரின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த அந்த அலை உள்நாட்டுப்போராக விரிவடைந்தது.

இதனிடையே, கடந்த 2015-ம் ஆண்டு வாக்கில், சிரியாவின் பெரும்பாலான பகுதிகள் கிளர்ச்சி படை மற்றும் முஸ்லிம் அரசுகளின் போராளிகள் குழுக்களுக்களின் கட்டுப்பாட்டில் வந்தன. என்றாலும் ரஷ்யாவின் ராணுவத் தலையீட்டினால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி, ஆசாத்தின் அதிகாரத்தினை மீண்டும் உறுதி செய்தது.

தீவிரமாக நோக்கும் அமெரிக்கா: இதனிடையே சிரியாவில் நடந்துவரும் மாற்றங்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அந்தப் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
 

https://globaltamilnews.net/2024/209091/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

சிரிய அதிபர் அசாத், சிரியாவை… விட்டு வெளியேறியதுடன் 
சிரியாவில் அமைதி திரும்புமா. 
அல்லது சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சிக்காரர்களின் மூலம், “தலிபான்கள்” போல கெடுபிடிகள் தொடருமா?

ஈராக் லிபியா போல் வரும்.இதே போல் சவூதியிலும் ஜோர்தானிலும் புரட்சிகள் ஏற்பட வேண்டும். அப்போதுதான் தங்களுக்குள் அடிபட்டு சாவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஈராக் லிபியா போல் வரும்.இதே போல் சவூதியிலும் ஜோர்தானிலும் புரட்சிகள் ஏற்பட வேண்டும். அப்போதுதான் தங்களுக்குள் அடிபட்டு சாவார்கள்.

ஜோர்தானில் புரட்சி ஏற்பட்டாலும்... சவூதி கொஞ்சம்  கஸ்ரம் என நினைக்கின்றேன். 😂
நம்ம அமெரிக்க Cow Boy அண்ணர் மனது வைத்தால் எதுவும் சாத்தியமே. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Der Flugverlauf der syrischen Iljuschin Il-76endet in der Nähe von Homs

Die Flugdaten zeigen den Höhenverlust (blau) und die zuletzt ansteigende Geschwindigkeit (gelb)

Mit dieser Iljuschin Il-76 der sysrischen Armee soll Bashar al-Assad geflohen sein. Gerüchten zufolge wurde die Maschine abgeschossen

அசாத் சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஊடகச்செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

அசாத் சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஊடகச்செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

நாங்கள் பி.பி.சி.யில் வந்தால்தான் நம்புவம். 😜

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினின் தோல்வி இது?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

புட்டினின் தோல்வி இது?

 உலக வல்லாதிக்கங்கள் தாம் நினைத்தவாறு நீண்டகாலம் ஆடமுடியாதென்றும் கூறலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nochchi said:

 உலக வல்லாதிக்கங்கள் தாம் நினைத்தவாறு நீண்டகாலம் ஆடமுடியாதென்றும் கூறலாம் அல்லவா?

நாளடைவில் ஒரு குவைத் ஆகவோ சவூதி ஆகவோ மாறத் தான் வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகள் என மேற்குல்கால் அறிவிக்கப்பட்டவர்களைக்  கொண்டே  ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் காலப்பகுதியில் வாழ்கிறோம். 

44 minutes ago, விசுகு said:

புட்டினின் தோல்வி இது?

Trump ன் வெற்றி என்பது புடினின் வெற்றி  அல்லவா? 

🤣

46 minutes ago, விசுகு said:

புட்டினின் தோல்வி இது?

Trump ன் வெற்றி என்பது புடினின் வெற்றி  அல்லவா? 

 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விசுகு said:

நாளடைவில் ஒரு குவைத் ஆகவோ சவூதி ஆகவோ மாறத் தான் வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம். 

 

1 hour ago, தமிழ் சிறி said:

ஜோர்தானில் புரட்சி ஏற்பட்டாலும்... சவூதி கொஞ்சம்  கஸ்ரம் என நினைக்கின்றேன். 😂
நம்ம அமெரிக்க Cow Boy அண்ணர் மனது வைத்தால் எதுவும் சாத்தியமே. 🤣

தமிழ்சிறியவர்களது கருத்தே இதற்கான பதிலாகப் பொருந்திப்போகிறது. 
உலகவல்லாதிக்க சக்திகள் தமது இருப்பிற்காக மக்களைக்கொன்றொழித்து, வளங்களை சுரண்டிப்பெருத்துவருகின்றன. அணுஆயுதம் வைத்திருப்பதாகக் கூறி ஈராக்கினுள் புகுந்து எதைச்செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். குர்துகளைக் கொன்றதாக சதாமைத் தூக்கில்போட்ட இவர்களால், மகிந்தவையோ மற்றும் நெத்ன்யாகுவையோ அப்படிச் செய்ய முடியுமா? சீனாவில் சிறுபான்மைகள் நசுக்கப்படுவதாகக் கூப்பாடு. ஏன் காஸா அழிவைத் தடுக்காது பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பல தொடர்கள் உள்ளன. இதுவரை ஆதிக்கசக்திகளுக்குப் பயங்கரவாதிகளாகத் தெரிந்தோரை வைத்து மற்றொரு ஆதிக்கசக்தியை வீழ்த்தியுள்ளனர். இதிலே நாடு எப்படியாக வேண்டும் என்பது மக்களின் முடிவு.  

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

ருசியாவோ (அல்லது அமெரிக்காவோ) ஆட்சியாளரை பற்றி ஒரு எல்லை வரைக்கும் தான் கவனம் - அவர்களின் நலன் பாதுகாக்கப்படும்  வரை.

இந்த அசாத் எதிர்ப்பு (உண்மையில் பயங்கரவாத) பகுதி, ருஷ்யாவின் முக்கிய தரை, கடல் படை தளங்களுக்கு உத்தரவாதம் கொடுத்தாளர்கள் போல  இருக்கிறது.


அனால் அசத்துக்கு, ருசியாவின் ஒரு கடப்பாடு உள்ளது.


சிரிய யுத்தம் தொடங்கியது, சிறியவை மேற்கு திட்டமிட்டு சின்னாபின்னமாகியது, 9  பில்லியன் டாலர் பணத்தை 2 மணி நேரத்தில் cia அசாத் இடம் இருந்து கைப்பற்ற முடியததால்.

அந்த பணத்தை ஸத் ரஷ்யாவுக்கு மாற்றி விட்டார் அந்த குறுகிய காலத்த்தில்.


ஆசாத்தின் குடும்பம் ரஷ்யாவுக்கே சென்றுள்ளது என்பதும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kadancha said:

ருசியாவோ (அல்லது அமெரிக்காவோ) ஆட்சியாளரை பற்றி ஒரு எல்லை வரைக்கும் தான் கவனம் - அவர்களின் நலன் பாதுகாக்கப்படும்  வரை.

இந்த அசாத் எதிர்ப்பு (உண்மையில் பயங்கரவாத) பகுதி, ருஷ்யாவின் முக்கிய தரை, கடல் படை தளங்களுக்கு உத்தரவாதம் கொடுத்தாளர்கள் போல  இருக்கிறது.


அனால் அசத்துக்கு, ருசியாவின் ஒரு கடப்பாடு உள்ளது.


சிரிய யுத்தம் தொடங்கியது, சிறியவை மேற்கு திட்டமிட்டு சின்னாபின்னமாகியது, 9  பில்லியன் டாலர் பணத்தை 2 மணி நேரத்தில் cia அசாத் இடம் இருந்து கைப்பற்ற முடியததால்.

அந்த பணத்தை ஸத் ரஷ்யாவுக்கு மாற்றி விட்டார் அந்த குறுகிய காலத்த்தில்.


ஆசாத்தின் குடும்பம் ரஷ்யாவுக்கே சென்றுள்ளது என்பதும்.

மேலதிக தகவல் ஏதேனும் உள்ளதா? 

கிளர்ச்சியாளர்கள்+பயங்கரவாதிகளின் நகர்வு முன்கூட்டியே பல தரப்பினராலும்  பேசி முடிக்கப்பட்டதாதத் தெரிகிறது. 

ஈரான, ஹிஸ்புல்லா,? ரஸ்யா உட்பட எந்த நாடும் அமைப்பும் குறிப்பிடத்தக்க எதிர்வினையாற்றவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரியா இன்னொரு லிபியாவாக மாறவே வாய்ப்புக்கள் உள்ளன. ஏனெனில் சிரியாவில் பல தரப்புக்கள் பங்குபிரித்து வைத்துள்ளன. குர்திஸ் படைகள் மீது இஸ்லாமியப் படைகள் தாக்குதலைத் தொடுத்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. 

ஐ.நா. அல்லது அரபுநாடுகளின் அமைதிப்படை போய் உள்நாட்டு யுத்தம் வராமல் பார்க்கவேண்டும்.

ஆசாத் நாட்டைவிட்டு ஓடியதில் மிக்க சந்தோஷம். அப்படியே ரஷ்யாவின் கடற்படை, விமானப்படைத் தளங்களும் நீக்கப்பட்டால் இரட்டிப்பு சந்தோஷம் கிட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kapithan said:

மேலதிக தகவல் ஏதேனும் உள்ளதா? 

கிளர்ச்சியாளர்கள்+பயங்கரவாதிகளின் நகர்வு முன்கூட்டியே பல தரப்பினராலும்  பேசி முடிக்கப்பட்டதாதத் தெரிகிறது. 

ஈரான, ஹிஸ்புல்லா,? ரஸ்யா உட்பட எந்த நாடும் அமைப்பும் குறிப்பிடத்தக்க எதிர்வினையாற்றவில்லை. 

இது நான் எதிர்பார்த்தது, சிறிய ராணுவம் டமாஸ்கஸ் ஐ சுற்றி ராணுவ இரும்பு கூட்டை இருக்கிறது 
என்று  சொல்லும் போது, ஆனால் எதிர்ப்பு டமாஸ்கஸ் இந்த அயலில் வந்த போது.

மருவளமாக அலப்போ, ஹோமோஸ் என்று விழுந்தபோது, அப்படியே அந்த முன்னேற்றம் டாம்ஸக்ஸ் ஐ நோக்கியே, அசாத் எதிர்ப்பு மேற்கு பக்கமாக செல்லவில்லை , இங்கேயே ருசியா இராணுவ, கடல் படை தளங்கள் உள்ளது.

ருசியா தளங்கள் அப்படியே இருக்கிறது. அதை நோக்கியே அசாத்தின் flight உம் சென்றதாக பிபிசி 
சொல்கிறது. 

நிச்சயமாக பேசித் தான் முடிக்கப்பட்டு இருக்கிறது - ரசிய விட்டுக்கொடுத்த தோற்றம், அதன் நலன்கள் பாதிப்பு இல்லை என்பதால்.  

ருசியா இநக்கிய பின், ஈரானுக்கு தெரிவு இல்லை.

bbc:

https://www.bbc.co.uk/news/articles/cqx89reeevgo

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கிருபன் said:

ஆசாத் நாட்டைவிட்டு ஓடியதில் மிக்க சந்தோஷம். அப்படியே ரஷ்யாவின் கடற்படை, விமானப்படைத் தளங்களும் நீக்கப்பட்டால் இரட்டிப்பு சந்தோஷம் கிட்டும்.

 

2 hours ago, nochchi said:

உலக வல்லாதிக்கங்கள் தாம் நினைத்தவாறு நீண்டகாலம் ஆடமுடியாதென்றும் கூறலாம் அல்லவா?

 

அமெரிக்காஇந்த தளம் கண்ணுக்கு படவில்லையோ?

ரஷ்யா தளம் வைத்து இருந்தாலும், எண்ணையை  சிரியவே  எடுக்கிறது, விற்கிறது 

அமெரிக்கா தளம் (சிறிது என்பது அமெரிக்கா சொல்வது), என்னை எடுப்பது, விற்றது, முழுமையாக அமெரிக்கா கம்பனிகள்.

ஆட்சி அசாத்தோ அல்லது சமய, இன பயங்கரவாதிகளோ, ஒற்றுமை என்னவென்றால், வெளிநாட்டு படைகள் சிரியாவில் தொடர்ந்து  இருப்பது.

அரசன் ஆண்டால் என்ன ஆண்டி ஆண்டால்  என்ன, வலாதிக்கங்கள் அவர்களின் நலன், வேலை ஆக வேண்டும்.

உக்ரைனிலும் இதுவே (அனால் சேலன்ஸ்கியின் மடைத்தனம், ஏன் சொறி சிங்களம் செய்யவில்லை,  மேற்றுகின் அறிவுரை சொறி சிங்களத்துக்கு, கிநதியாவுடன் எபோதும் இணங்கி போகவேண்டும், ஏன்  அப்போது உக்கிரனுக்கு ருசியாய் எதிர்க்குமாறு அறிவுரை?) 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

செத்தகிளியின் நிலைதான் பரிதாபம். செத்தகிளி, இரானின் பயங்கரவாத இஸ்லாமிய புரட்சிப் படை, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் எவராலும் பஸிர் அல் அசாத்தைக் காப்பாற்றமுடியவில்லை!😂

  • கருத்துக்கள உறவுகள்

இனி அசாத்தும் "சிரியாவை வளர்த்த முன்னுதாரண ஆட்சியாளர்" என்று மேற்கு நாடுகளில் "கஷ்டப் பட்டு, இஷ்டமில்லாமல்" வாழும் எங்கள் தமிழ் குடிகளால் புகழப் படுவார் என நினைக்கிறேன்😎.

சீரியசாகப் பார்த்தால்: அப்பன் அசாத்தின் மேற்குலகோடு இருந்த தொடர்பால், பிரிட்டனில் மேற்படிப்புப் படித்து கண் மருத்துவரான ஒருவர் சின்ன அசாத். பிரிட்டன் பிரஜையான மனைவி அஸ்மா 2011 இன் பின்னரும் கூட இங்கிலாந்தில் தான் வசித்தாரென நினைக்கிறேன். உள்நாட்டு யுத்த ஆரம்பத்தில், இந்த "கண் மருத்துவரின்" கட்டளையின் படி குளோரின் வாயுத் தாக்குதல் எதிர் தரப்பின் கட்டுப் பாட்டில் இருந்த மக்கள் மீது நடத்தப் பட்டது. குளோரின் வாயுவின் விளைவினால் மூச்சுத் திணறும் குழந்தைகளை மக்கள் தண்ணீரினால் கழுவும் காட்சிகள் வெளிவந்தன. "Do no harm" என்ற அடிப்படை மருத்துவ அறத்தினையே பின்பற்ற இயலாத இந்த இழிபிறவியை, கடாபியைப் போலவே தெருவில் இழுத்து வந்து சுட்டிருக்க வேண்டுமென்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.    

 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kadancha said:

இது நான் எதிர்பார்த்தது, சிறிய ராணுவம் டமாஸ்கஸ் ஐ சுற்றி ராணுவ இரும்பு கூட்டை இருக்கிறது 
என்று  சொல்லும் போது, ஆனால் எதிர்ப்பு டமாஸ்கஸ் இந்த அயலில் வந்த போது.

மருவளமாக அலப்போ, ஹோமோஸ் என்று விழுந்தபோது, அப்படியே அந்த முன்னேற்றம் டாம்ஸக்ஸ் ஐ நோக்கியே, அசாத் எதிர்ப்பு மேற்கு பக்கமாக செல்லவில்லை , இங்கேயே ருசியா இராணுவ, கடல் படை தளங்கள் உள்ளது.

ருசியா தளங்கள் அப்படியே இருக்கிறது. அதை நோக்கியே அசாத்தின் flight உம் சென்றதாக பிபிசி 
சொல்கிறது. 

நிச்சயமாக பேசித் தான் முடிக்கப்பட்டு இருக்கிறது - ரசிய விட்டுக்கொடுத்த தோற்றம், அதன் நலன்கள் பாதிப்பு இல்லை என்பதால்.  

ருசியா இநக்கிய பின், ஈரானுக்கு தெரிவு இல்லை.

bbc:

https://www.bbc.co.uk/news/articles/cqx89reeevgo

குர்திஸ் கிளர்ச்சியாளர்களதும் சிறுபான்மையினரது  நிலைமைதான் தர்மசங்கடமானது. 

கிளர்ச்சியாளர்கள் + பயங்கரவாதிகளுக்கு US + Israel + Turkey  ஆதரவு. 

குஸ்திஸ் கிளர்ச்சியாளர்களுக்கு + US + Israel  ஆதரவு. ஆனால் Turkey,   சிரிய சுனி கிளர்ச்சியாளர்கள் + பங்கரவாதிகளுக்கு ஆதரவு  ஆனால் குர்திஸ் கிளர்ச்சியாளர்களுக்கு இவர்கள் எல்லோரும் எதிரானவர்கள். 

இப்போது களையெடுக்கும் படலம் ஆரம்பமாகியிருக்கும். மேற்கூடகங்கள் அமெரிக்காவால் தலைக்கு $10 Million  அறிவிக்கப்பட்ட பயங்கரவாதியை இப்போதே  சுதந்திரப் போராட்ட வீரராகச் சித்தரிக்கத் தொடங்கிவிட்டார்கள். 

நாங்கள் எல்லோரும் வழமை போன்று பாதிக்கப்படும் தரப்புக்கள் தொடர்பாக  கிஞ்சித்தும் அக்கறை காட்டப்போவதில்லை. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

இப்போது களையெடுக்கும் படலம் ஆரம்பமாகியிருக்கும். மேற்கூடகங்கள் அமெரிக்காவால் தலைக்கு $10 Million  அறிவிக்கப்பட்ட பயங்கரவாதியை இப்போதே  சுதந்திரப் போராட்ட வீரராகச் சித்தரிக்கத் தொடங்கிவிட்டார்கள்

Abu Mohammed al-Julani
 

 

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிபீடியாவில் இவர் தொடர்பான தகவல்கள் 

👇

Ahmed Hussein al-Shar’a[a] (born 1982) known by his nom de guerre as Abu Mohammad al-Julani,[b] is a Syrian militant serving as the second emir of Tahrir al-Sham since 2017.[8]Before cutting ties with Al-Qaeda in 2016,[9]Julani had served as the emir of the now-defunct al-Nusra Front, the former Syrian branch of Al-Qaeda.[10] The US State Department listed Al-Julani as a "Specially Designated Global Terrorist" in May 2013,[11] and four years later announced a $10 million reward for information leading to his capture.[12][13][14]

Abu Mohammad al-Julani
أبو محمد الجولاني
220px-Muhammad_al-Jawlani.png
 
2nd Emir of Tahrir al-Sham
Assumed office
1 October 2017
Preceded by Abu Jaber Shaykh
Emir of the Jabhat Fateh al-Sham
In office
28 July 2016 – 28 January 2017
Emir of the Al-Nusra Front
In office
23 January 2012 – 28 July 2016
Personal details
Born 1982 (age 41–42)[1]
Riyadh, Saudi Arabia[1][2]
Nickname 'The Conqueror Sheikh'[3]
 
Military career
Allegiance Current:
23px-Flag_of_the_Syrian_Salvation_Govern Syrian Salvation Government (2017–present)
23px-InfoboxHTS.svg.png Tahrir al-Sham (2017–present)
Former:
25px-Flag_of_Jihad.svg.png Al-Qaeda (2003–2016)[4] 23px-Flag_of_Jabhat_Fatah_al-Sham.svg.pn Jabhat Fateh al-Sham (2016–2017)
Years of service 2003–present
Rank Commander-in-chief(Tahrir al-Sham)
Battles / wars
 

The nisba "Al-Julani" in his nom de guerre is a reference to Syria's Golan Heights, mostly occupied and annexed by Israel during the Six-Day War in 1967.[15] Al-Julani released an audio statement on 28 September 2014, in which he stated he would fight the "United States and its allies" and urged his fighters not to accept help from the West in their battle against the Islamic State.[16] In recent years however, he has presented a more moderate view of himself, suggesting he has no urge to wage war against Western nations, and has vowed to protect minorities.[17][18]

Iraq War

170px-Mugshot_of_Abu_Mohammad_al-Jolani. Mugshot of al-Julani after his 2006 capture by U.S. forces in Iraq

According to an interview with Frontline in 2021, al-Julani stated he was radicalized by the Palestinian Second Intifada in 2000 when he was 17 or 18 years old. "I started thinking about how I could fulfil my duties, defending a people who are oppressed by occupiers and invaders," he said.[22][23]

Appreciative of the 9/11 attacks,[21] al-Julani traveled from Damascus to Baghdad by bus just weeks before the 2003 invasion of Iraq, where he quickly rose through the ranks of Al-Qaeda in Iraq(AQI).[22] The Times of Israel newspaper claimed that al-Julani was a close associate of AQI leader, Abu Musab al-Zarqawi.[6]

However, in his 2021 interview with Frontline, al-Julani denied ever meeting al-Zarqawi and claimed he served only as a regular foot-soldier under al-Qaeda in Iraq against American occupation. Before the eruption of the Iraqi civil war in 2006, al-Julani was arrested by American forces and imprisoned for over five years in various facilities, including Abu Ghraib, Camp Bucca, Camp Cropper and al-Tajji prison.[24]

Syrian civil war

Syrian uprising and foundation of al-Nusra

Upon his release from prison coinciding with the Syrian revolution in 2011, al-Julani crossed into Syria with significant funding and a mandate to expand al-Qaeda's presence. Despite tensions with al-Qaeda's leadership in Iraq, who were content with his departure, al-Julani proceeded to orchestrate an agreement with Abu Bakr al-Baghdadi to establish al-Qaeda's Syrian branch, Jabhat al-Nusra. The group maintained an alliance with the Islamic State of Iraq until 2013, with an arrangement between al-Julani and al-Baghdadi to resolve disputes through mediation by al-Qaeda Emir Ayman al-Zawahiri. Over time, al-Julani began distancing himself from transnational jihadist ideology, increasingly framing his faction within the context of a nationalist Syrian struggle.[22]

The Islamic State of Iraq initially provided al-Julani with fighters, weapons, and funding to establish the al-Qaeda affiliate in Syria. Al-Julani implemented these plans alongside Islamic State of Iraq insurgent leaders after his release from prison.[25]

Al-Julani became the "general emir" of al-Nusra when it was officially announced in January 2012. By December of that year, the US Department of State designated Jabhat al-Nusra as a terrorist organization, identifying it as an alias for Al-Qaeda in Iraq (also known as the Islamic State of Iraq).[26] Under al-Julani's leadership, Al-Nusraemerged as one of Syria's most powerful groups.[6]

Conflict with ISIL

Al-Julani came to prominence in April 2013 when he rejected al-Baghdadi's attempt to merge Al-Nusra into ISI under the new name Islamic State of Iraq and the Levant (ISIL). The proposed merger would have eliminated Al-Nusra's autonomy by placing all its leaders, decisions, and operations under Abu Bakr al-Baghdadi's direct control. To preserve Al-Nusra's independence, al-Julani pledged allegiance directly to al-Qaeda's leader Ayman al-Zawahiri, who supported al-Julani's bid for independence.

While Al-Nusra had previously been connected to al-Qaeda through its allegiance to the Islamic State of Iraq, this new pledge bypassed ISI entirely, making Al-Nusra the official Syrian branch of al-Qaeda.[27][28] Despite his own oath of allegiance to Ayman al-Zawahiri, al-Baghdadi rejected this ruling and proceeded with the merger, leading to armed clashes between al-Nusra Front and ISIL over Syrian territory.[29][6]

Resurgence of al-Nusra

In late May 2015, during the Syrian civil war, al-Julani was interviewed by Ahmed Mansour on Qatari news broadcaster Al Jazeera, hiding his face. He described the Geneva peace conferenceas a farce and claimed that the Western-backed Syrian National Coalition did not represent the Syrian people and had no ground presence in Syria. Al-Julani mentioned that al-Nusra have no plans for attacking Western targets, and that their priority is focused on fighting the al-Assad Syrian government, Hezbollah, and the Islamic State of Iraq and the Levant. Al-Julani is credited with saying that the "Nusra Front doesn't have any plans or directives to target the West. We received clear orders from Ayman al-Zawahiri not to use Syria as a launching pad to attack the U.S. or Europe in order to not sabotage the true mission against the regime. Maybe Al-Qaeda does that but not here in Syria. Assad forces are fighting us on one end, Hezbollah on another and ISIL on a third front. It is all about their mutual interests".[30]

When asked about al-Nusra's plans for a post-war Syria, al-Julani stated that after the war ended, all factions in the country would be consulted before anyone considered "establishing an Islamic state". He also mentioned that al-Nusra would not target the country's Alawite minority, despite their support for the Assad regime. "Our war is not a matter of revenge against the Alawites despite the fact that in Islam, they are considered to be heretics".[30] A commentary on this interview however states that al-Julani also added that Alawites would be left alone as long as they abandon elements of their faith which contradict Islam.[31]

In October 2015, Russian intervention in the Syrian civil war prompts al-Julani to call for increased attacks on Assad's Alawite strongholds in retaliation for Russian airstrikes on Sunni areas.[32] al-Julani also called for Russian civilians to be attacked by former Soviet Muslims.[33][34]

Jabhat Fateh al-Sham

On 28 July 2016, al-Julani announced in a recorded message that Jabhat al-Nusra would be renamed Jabhat Fateh al-Sham (Front for the Conquest of Syria).[35] In his announcement, al-Julani declared that the rebranded group had "no affiliation to any external entity." While some analysts interpreted this as a break from Al-Qaeda, al-Julani did not explicitly mention the organization or renounce his oath of allegiance to Ayman al-Zawahiri.[36]

Formation of Tahrir al-Sham (HTS)

On 28 January 2017, al-Julani announced the dissolution of Jabhat al-Fath al-Sham and its merger into a larger Syrian Islamist organization, Hayat Tahrir Al Sham ("Assembly for the Liberation of the Levant" or HTS). Under HTS, the group prioritized combating Al-Qaeda and ISIS in an effort to improve its standing with Western nations. HTS successfully defeated ISIS, Al-Qaeda, and most opposing forces in its territory, establishing control over most of Idlib Governorate, which it administers through the HTS-aligned Syrian Salvation Government.[37]

In mid-2020, al-Julani increased his public presence in Idlib to build popular support. HTS-affiliated media significantly expanded its output during this period, releasing multiple daily videos showcasing governance activities, tax distribution in rural areas, frontline operations, and al-Julani's meetings with local militia groups.[citation needed]

Idlib governance

In March 2024, widespread protests erupted in Idlib Governorate against al-Julani's rule, with demonstrators adopting the slogan "Isqat al-Jolani" ("Down with Jolani"), reminiscent of earlier protests against the Assad regime. For over a month, hundreds and sometimes thousands of protesters marched through Idlib's cities and towns. The protests were triggered by multiple factors, including allegations of brutality, with reports of thousands of critics held in prisons, and economic grievances related to high taxes.[38]

Under al-Julani's administration, Idlib had experienced significant development, becoming Syria's fastest-growing region despite being historically its poorest province. The area featured new luxury shopping malls, housing estates, and round-the-clock electricity supply surpassing that of Damascus. Educational facilities included a university with 18,000 segregated students. However, his administration faced criticism for its taxation policies, including customs taxes on goods from Turkey and checkpoint fees on smuggled goods, as well as the economic impact of the Turkish lira's depreciation, which was the main currency in the region.[38]

In response to the unrest, al-Julani made several concessions. He released hundreds of detainees from a previous summer's security operation, including his former deputy Abu Maria al-Qahtani, who had been arrested along with 300 others in a purge of his movement. He also promised local elections and increased employment opportunities for displaced persons, while warning protesters against what he termed treachery. [38]

Turkey, which had previously helped stabilize the province by connecting it to its electricity grid and allowing building materials to enter freely, had grown concerned about al-Julani's expanding influence. In response, it reduced trade through its border crossings with Idlib, affecting HTS's revenue. Reports indicated that al-Julani had twice attempted to take over other Turkish-administered areas in northern Syria.[38]

Rebel takeover (November – December 2024)

On 1 December 2024, The Week magazine reported unconfirmed claims circulating in Arab media outlets and social media that Al-Julani had been killed in a Russian airstrike.[39] These claims were disproven when al-Julani visited the Citadel of Aleppo on 4 December 2024, following its capture by his forces earlier that month.[40][41]

During the capture of Aleppo, al-Julani instructed his forces not to "scare children" and HTS channels broadcast footage of Christians in the city continuing their normal activities. Archbishop Afram Ma'lui stated that services would not be affected by the change in control. After regime forces were expelled from the city, al-Julani declared "diversity is a strength." HTS quickly established administrative bodies to restore basic services, including garbage collection, electricity, and water. The group's General Zakat Commission began distributing emergency bread supplies, while its General Organization for Grain Trade and Processing provided fuel to local bakeries. The Ministry of Development and Humanitarian Affairs reported delivering 65,000 loaves of bread under a campaign called "Together We Return."[42]

On 6 December, in a face-to-face interview with CNN, al-Julani declared that the offensive's goal was to remove Assad from power. Using his real name, Ahmed al-Sharaa, he explicitly pledged to protect minority groups.[17] According to Dareen Khalifa of the International Crisis Group, al-Julani has considered dissolving HTS to strengthen civilian and military governance structures.[43] He also expressed his intention to facilitate the return of Syrian refugees to their homes.[44]

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

செத்தகிளியின் நிலைதான் பரிதாபம். செத்தகிளி, இரானின் பயங்கரவாத இஸ்லாமிய புரட்சிப் படை, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் எவராலும் பஸிர் அல் அசாத்தைக் காப்பாற்றமுடியவில்லை!😂

இந்த ஜோ பைடன் ஏன் ஆற்றில கொட்டுகின்றது போல ஒரு அளவேயில்லாமல் உக்ரேனுக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார் என்று நானும் வெளி உலகம் போலவே யோசித்தன்................... கடைசியில் அது அசாத்துக்கு கொடுத்த விலை போல.............. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரியா: அதிபர் அசாத் ஆட்சியை கிளர்ச்சியாளர்கள் கவிழ்த்தது எப்படி? - விரிவான விளக்கம்

சிரியா: அதிபர் அசாத் ஆட்சியை கிளர்ச்சியாளர்கள் கவிழ்த்தது எப்படி? - முழு விவரம்

Getty Images

  • டேவிட் கிரிட்டன்
  • பிபிசி செய்தி
  •  

சிரியாவில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக் குழு டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளது. அதிபர் அசாத் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதிபர் அசாத்திற்கு ஆதரவளித்த ரஷ்யா அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாகக் கூறியுள்ளது.

இதற்கிடையே சிரியாவில் இப்போது என்ன நடக்கிறது? உள்நாட்டுப் போர் முதல் தற்போது வரை அங்கு என்ன நடந்தது? முழு விவரங்களையும் இங்கு தெரிந்துகொள்வோம்.

 

சிரியாவில் என்ன நடந்தது?

 

பஷார் அல் அசாத் குடும்பம் சிரியாவை இரும்புக்கரம் கொண்டு 53 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இப்போது அது முடிவுக்கு வந்துவிட்டது.

அதிபர் பஷார் அல்-அசாத் 2000ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார். அதற்கு முன்னதாக அவரின் தந்தை ஏறக்குறைய 30 ஆண்டுகள் சிரியாவை ஆட்சி செய்தார்.

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவர் நாட்டின் அமைதியான, ஜனநாயக சார்பு எழுச்சியைக் குலைத்தார். அது பேரழிவு தரும் உள்நாட்டுப் போராக மாறியது. 

 

இதில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 12 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால் கடந்த புதன் கிழமை, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் எனப்படும் இஸ்லாமியவாத அரசாங்க எதிர்ப்புக் குழு வடமேற்கில் ஒரு பெரிய தாக்குதலை வெற்றிகரமாக வழிநடத்தியது.

கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கைப்பற்றினர். பின்னர் சிரிய ராணுவம் வீழ்ச்சி அடைந்ததால், தலைநகர் டமாஸ்கஸுக்கு கிளர்ச்சிப் படை முன்னேறியது.

பல சிரியர்கள் தாங்கள் ஒரு புதிய சுதந்திர உணர்வை உணர்வதாகக் கூறுகிறார்கள். சிலர் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்.

 

சிரியா யார் கட்டுப்பாட்டில் இருந்தது?

 

கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவைக் கைப்பற்றினர்

AFP

கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவைக் கைப்பற்றினர்

ரஷ்யா, இரான் மற்றும் இரானிய ஆதரவு ஆயுதக்குழுவின் உதவியுடன் அதிபர் அசாத் தலைமையிலான அரசு நாட்டின் பெரும்பாலான நகரங்களின் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுத்த பிறகு, சிரியாவில் நீண்டகாலமாக நடந்து வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக உணரப்பட்டது.

உள்நாட்டுப் போரின் மையமாக இருந்த பகுதிகள் பெரும்பாலும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. 

ஆனால், அமெரிக்கா மற்றும் சிரிய ஜனநாயகப் படையின் ஆதரவு பெற்ற குர்திஷ் இனக்குழு தலைமையிலான கூட்டணியால் கட்டுப்படுத்தப்பட்ட வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் உள்பட நாட்டின் பல பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.

அலெப்போ, இட்லிப் ஆகியவையே, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பகுதிகளாக இருந்தன. இவை, துருக்கி எல்லையில் அமைந்துள்ளன. அங்கு வசித்து வந்த 40 லட்சம் மக்களில் பலரும் இடம்பெயர்ந்தனர்.

இந்தப் பகுதிகள் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) ஆயுதக்குழுவின் படைகளின் ஆதிக்கத்தில் இருந்தன. ஆனால் பிற கிளர்ச்சிப் பிரிவுகளும் ஜிஹாதி குழுக்களும் அங்கு செயல்பட்டன. சிரிய தேசிய ராணுவம் (SNA) என அறியப்படும் துருக்கிய ஆதரவு கிளர்ச்சிப் பிரிவுகளும், அங்குள்ள சில பகுதிகளை துருக்கிய படைகளின் ஆதரவுடன் கட்டுப்படுத்தியது.

 

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் யார் ?

 

p0k9q1bm.jpg.webp
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்: யார் இவர்கள்? பின்னணி என்ன?

கடந்த 2011இல் அல் கொய்தாவின் நேரடி இணைப்பாக 'ஜபத் அல்-நுஸ்ரா' (Jabhat al-Nusra) என்ற வேறொரு பெயரில் 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' அமைக்கப்பட்டது.

இஸ்லாமிய அரசு (IS) எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியும் ஜபத் அல்-நுஸ்ரா குழுவின் உருவாக்கத்தில் ஈடுபட்டார்.

சிரியா அதிபர் அசாத்துக்கு எதிரான குழுக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குழுவாக இது கருதப்பட்டது. ஆனால் அதன் புரட்சிகர கொள்கையைவிட, 'ஜிஹாதி சித்தாந்தம்' அக்குழுவின் உந்து சக்தியாகக் கருதப்படுகிறது.

மேலும் அந்த நேரத்தில், "சுதந்திர சிரியா" எனும் பெயரில் இயங்கும் முக்கிய கிளர்ச்சிக் கூட்டணியுடன் இந்தக் குழு முரண்படுவதாகவும் அறியப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டில், இக்குழுவின் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானி, அல் கொய்தாவுடன் உள்ள தொடர்பை பகிரங்கமாகப் பிரித்து, ஜபத் அல்-நுஸ்ராவை கலைத்தார். பின்னர் ஒரு புதிய அமைப்பை நிறுவினார்.

சிரியா: அதிபர் அசாத் ஆட்சியை கிளர்ச்சியாளர்கள் கவிழ்த்தது எப்படி? - முழு விவரம்

Getty Images

ஓராண்டு கழித்து, இதேபோன்ற பிற குழுக்களுடன் இணைந்தபோது 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' என்ற பெயரை இந்தக் குழு பெற்றது.

இருப்பினும், ஐ.நா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல நாடுகள் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பை அல்-கொய்தாவின் துணை அமைப்பாகக் கருதி, அல்-நுஸ்ரா முன்னணி என்று அடிக்கடி குறிப்பிடுகின்றன.

இதன் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானியை, பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்தது. அதோடு அவரைப் பிடிக்க வழிவகுக்கும் தகவல்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

அல்-கொய்தா, ஐஎஸ் அமைப்பு உள்பட அதன் எதிராளிகளை நசுக்குவதன் மூலம் இட்லிப் மற்றும் அலெப்போ மாகாணங்களில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தனது அதிகாரத்தைப் பலப்படுத்தியது. 

இது இஸ்லாமிய சட்டத்தின்படி பிரதேசத்தை நிர்வகிப்பதற்கு `சிரிய இரட்சிப்பு அரசாங்கத்தை' அமைத்தது.

ஜவ்லானி வெள்ளிக்கிழமை சிஎன்என் நேர்காணலில், "புரட்சியின் இலக்கு அசாத் ஆட்சியை அகற்றுவதே" என்றும், "அரசு நிறுவனங்கள் மற்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சில்" அடிப்படையிலான ஓர் அரசாங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.

 

கிளர்ச்சியாளர்கள் ஏன் தாக்குதல் நடத்தினர்?

 

p0k9q1vh.jpg.webp
சிரியா: தலைநகர் டமாஸ்கஸ் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்தது எப்படி?

பல ஆண்டுகளாக, சிரிய அரசாங்கப் படைகள் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயன்றதால், இட்லிப் போர்க்களமாகவே இருந்தது.

ஆனால் 2020இல், இட்லிப் நகரத்தை மீட்பதற்கான அரசின் உந்துதலை நிறுத்துவதற்காக துருக்கியும் ரஷ்யாவும் மத்தியஸ்தம் செய்து போர்நிறுத்தம் கொண்டு வந்தன. ஆங்காங்கே சண்டைகள் நடந்தாலும் போர்நிறுத்தம் பெரும்பாலும் நீடித்தது.

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் மற்றும் அதன் ஆதரவுக் குழுக்கள் நவம்பர் 27ஆம் தேதியன்று "ஆக்கிரமிப்பைத் தடுக்க" ஒரு தாக்குதலைத் தொடங்கியதாகக் கூறினர். அரசாங்கமும், அதன் நட்பு நாடான இரான் ஆதரவு ஆயுதப் படைகளும் வடமேற்கில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டினர்.

ஆனால், பல வருடகால யுத்தம், பொருளாதாரத் தடைகள் மற்றும் ஊழலால் அரசாங்கம் பலவீனமடைந்து, அதன் ஆதரவாளர்கள் மற்ற மோதல்களில் ஈடுபட்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இரான் ஆதரவு பெற்ற லெபனான் குழுவான ஹெஸ்பொலா, போரின் ஆரம்ப ஆண்டுகளில் கிளர்ச்சியாளர்களை பின்னுக்குத் தள்ளுவதில் முக்கியப் பங்கு வகித்தது. ஆனால், சமீபத்தில் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதலால் ஹெஸ்பொலா பாதிக்கப்பட்டது. 

இஸ்ரேலிய தாக்குதல்கள் சிரியாவில் இரானிய ராணுவ தளபதிகளை அகற்றியது மட்டுமின்றி அங்குள்ள அரசாங்க சார்பு ஆயுதக்குழுவினரின் விநியோக வழிகளைச் சிதைத்தது. யுக்ரேனில் நடந்த போரால் ரஷ்யாவும் திசைதிருப்பப்பட்டது. அவர்கள் இல்லாமல், அசாத்தின் படைகள் பலவீனமடைந்தன.

 

கிளர்ச்சிக் குழுக்கள் அதிபர் அசாத்தை வீழ்த்தியது எப்படி?

 

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்

Reuters

அலெப்போ நகரை நோக்கி முன்னேறிய ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆயுதக்குழுவினர்

சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவின் பெரும்பகுதியை ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் நவம்பர் 30 அன்று கைப்பற்றினர். தங்களது முழு அளவிலான தாக்குதலைத் தொடங்கிய மூன்று நாட்களில் இது நடந்தது.

அரசாங்கம் தனது துருப்புகள் மற்றும் பாதுகாப்புப் படைகளை விரைவாகத் திரும்பப் பெற்ற பின்னர் அவர்கள் அங்கு சிறியளவிலான எதிர்ப்பை மட்டுமே எதிர்கொண்டதாக அவர்கள் கூறினர்.

அசாத் தனது ஆதரவாளர்களின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களை "நசுக்க" சபதம் செய்தார். ரஷ்ய போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின.

இரான் ஆதரவு ஆயுதக்குழுவினர் அலெப்போ-டமாஸ்கஸ் நெடுஞ்சாலையில் தெற்கே உள்ள அடுத்த நகரமான ஹமாவை சுற்றி ராணுவத்தின் தற்காப்புக் கோடுகளை வலுப்படுத்த படைகளை அனுப்பியது. இருப்பினும், ஹமா வியாழக்கிழமை அன்று கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.

சிரியா: அதிபர் அசாத் ஆட்சியை கிளர்ச்சியாளர்கள் கவிழ்த்தது எப்படி? - முழு விவரம்

Getty Images

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸை கைப்பற்றுவதே தங்களது அடுத்த இலக்கு என்று கிளர்ச்சியாளர்கள் உடனடியாக அறிவித்தனர். மேலும் ஒருநாள் மோதலுக்குப் பிறகு சனிக்கிழமை இரவு அதைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர்.

அதேநேரத்தில், சிரியாவின் தென்மேற்கில், ஜோர்டான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் மற்ற கிளர்ச்சிப் பிரிவுகள், 24 மணிநேரத்திற்குள் டெரா, சுவைடா நகரங்களைக் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை அவர்கள் அடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸுக்குள் நுழைந்து, நாட்டின் மிகவும் மோசமான ராணுவ சிறை என்று கூறப்படும் சைட்னாயாவில் இருந்த கைதிகளை விடுவித்ததாக அறிவித்தனர்.

இரண்டு மணிநேரத்திற்குள், அவர்கள்: "கொடுங்கோல் ஆட்சியாளர் பஷார் அல்-அசாத் தப்பி ஓடிவிட்டார்" என்று அறிவித்தனர்.

 
சிரியா: அதிபர் அசாத் ஆட்சியை கிளர்ச்சியாளர்கள் கவிழ்த்தது எப்படி? - முழு விவரம்

Getty Images

"அவர் ஆட்சியின் கீழ் 50 வருட அடக்குமுறை, 13 வருட குற்றங்கள், கொடுங்கோன்மை மற்றும் கட்டாய இடப்பெயர்வுக்குப் பிறகு, இருண்ட காலத்தின் முடிவையும் சிரியாவின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தையும் நாங்கள் இன்று அறிவிக்கிறோம்," என்று அவர்கள் கூறினர்.

கிளர்ச்சியாளர்கள் வருவதற்கு சற்று முன்னர் அதிபர் தலைநகரில் இருந்து விமானம் மூலம் எங்கோ ரகசிய இடத்திற்குச் சென்றதாக மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

அசாத்தின் பிரதமர் முகமது அல்-ஜலாலி, "சிரிய மக்களால் தேர்வு செய்யப்பட்ட "எந்தவொரு தலைமையுடனும் ஒத்துழைக்கத் தயார்" என்று ஒரு வீடியோவில் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து சிரியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கும் சிரிய குடிமக்கள், அதிபர் அசாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்ததைக் கொண்டாடி வருகின்றனர். சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள உமையாத் சதுக்கம் அப்பகுதி மக்களின் கொண்டாட்டத்திற்கான மையமாக இருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
 

 

https://www.bbc.com/tamil/articles/cyv343mrzm0o?at_campaign=ws_whatsapp

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.