Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஆவணமும் பல கட்டங்களாக பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே அவை ஆவனப்பிரிவிற்கு மாற்றப்படும், அவற்றில் பல பல வகை பரிசோதனை தரவுகள் இயந்திர செயற்பாடு என பல்லாயிரக்கணக்கான நடவடிக்கைகள் மீளாய்வுக்குள்ளாக்கப்படுகிறது.

4 minutes ago, ரசோதரன் said:

அனுபவத்தில் வேலை பழகலாம் என்பதற்கு சில உதாரணங்கள்:

சமீபத்தில் இரண்டு தடவைகள் இது செய்திகளில் வந்து இருந்தது. தமிழ்நாட்டில் மருத்துவமனை துப்பரவு பணியாளர்கள் நோயாளிகளுக்கு ஊசி குத்து ஐவியினூடாக திரவங்கள் ஏற்றியிருந்தார்கள். இப்பொழுது விசாரணை போய்க் கொண்டிருக்கின்றது.

இன்னொரு நிகழ்வில், மருத்துவரும் தாதிகளும் இல்லாமல், இவர்களே ஒரு பிரசவம் பார்த்தது. இங்கேயும் விசாரணை போய்க் கொண்டிருக்கின்றது.

நான் சிறுவயதில் இருந்த போது எங்களூரில் மிகக் கைராசியான 'பரியாரி' ஒரு மருத்துவரே அல்ல. அவர் ஒரு மருத்துவமனை ஊழியர். வீட்டில் வைத்து மருந்து கொடுத்தார், கட்டுப் போட்டர்,................ நானும் போயிருக்கின்றேன்.

நான் மருத்துவமனையில் வேலை செய்யவும் இல்லை, உயிரியல் படிக்கவும் இல்லை......... ஆனால், கிட்டத்தட்ட எந்த நோய்க்கும் மருந்து சொல்லும் அளவிற்கு தகவல்களை, புத்தகங்களை வாசித்து வைத்திருக்கின்றேன். முதற்கட்டமாக சிலரை தேடிக் கொண்டிருக்கின்றேன்................🤣🤣

 

 

ஒரு வைத்தியரின் வேலையினை வைத்தியர்தான் செய்யமுடியும் இங்கு கூறப்படுவது அவர்கள் ஏற்கனவே செய்த தற்காலிக வேலைகளை தொடர்வதற்கு நிரந்தர வேலை ஆக்குவதற்கு ஆதரவு வழ்ங்குதல் மட்டுமே.

  • Replies 106
  • Views 5.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    சிறி அண்ணா, நீங்கள் கபிதனையும், கந்தையா அண்ணாவையும் ஒன்றாக்கிவிட்டீர்கள்................. இருவரும் களத்திற்கு தனித்தனியே வேண்டும்....................🤣.

  • ஏராளன்
    ஏராளன்

    யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்களை காதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட

  • எனக்கொரு டவுட்டு சிறியர்...கபிதனும் ,கந்தையாவும் ஒரே ஆளோ... ஆளுக்காள்  புடுங்குப்படுவது..நாடகமா ....

  • கருத்துக்கள உறவுகள்
புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட சுகாதார தொழிலாளர்களுக்கு இன்னும் மூன்று மாதத்தில் 30,000 மாதாந்த சம்பளத்துடன் நான் வேலை தருகிறேன்!
இது அரசியலுக்கான பதிவு அல்ல..
ஏழைகளுக்கான எனது முதலாவது திட்டம்!
பல பேருடன் கதைத்து இருக்கிறேன்..
இந்த மாதம் முடிவில் அதற்குரிய முதற்கட்ட வேலைகளை ஆரம்பிக்கிறேன்..
இந்தத் திட்டத்தால் வருகின்ற ஒரு ரூபாய் வருமானம் கூட என் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கோ அல்லது எனது அரசியல் பயணத்துக்கோ பாவிக்கப்பட மாட்டாது!
சற்று பொறுமையாக காத்திருக்கவும்! ❤️🙏
 
All r

வைத்தியர் அர்ச்சுணா இன்று காலையில் பதிந்த பதிவு இது..இன்னும் 3 மாத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு புலம் பெயர் உறவுகளின் உதவியோடு சம்பளம் குடுப்பதாக சொல்கிறார்..இது எவ்வளவு காவத்திற்கு நடக்கும் சொல்ல முடியுமா...?எல்லாவ்ற்றுக்கும் புலம் பெயர்ந்தவர்களை இழுத்தால் அங்குள்ள அரசாங்கம் என்ன செய்ய இருக்கிறது...இவரது இந்த விழையாட்டால் எதிர்காலத்தில் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை திட்டங்களை கூட புலம் பெயர் சமுகம் செய்யட்டும் என்று சொல்லும் நிலையும் ஏற்படலாம்.இவர் பத்து இடத்தாலும் ஓடித் திரிகிறார் தான் இல்லை என்று இல்லை..ஆனாலும் சில கட்டுரை எழுதுபவர்களைப் போல் 'புலம் பெயர் மக்கள் மேல் மிகுந்த பாரத்தை போடுகிறார்.பிழையாக இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vasee said:

நான் மருத்துவமனையில் வேலை செய்யவும் இல்லை, உயிரியல் படிக்கவும் இல்லை......... ஆனால், கிட்டத்தட்ட எந்த நோய்க்கும் மருந்து சொல்லும் அளவிற்கு தகவல்களை, புத்தகங்களை வாசித்து வைத்திருக்கின்றேன். முதற்கட்டமாக சிலரை தேடிக் கொண்டிருக்கின்றேன்................🤣🤣

கவலைப்படாதீர்கள் பெட்டியினை கட்டி தயாரக வைக்கவும், தற்காலிக ஊழியர்கலை பதவி நீக்கம் செய்தபின்னர் அவர்களின் வேலை கிடைக்க வாய்ப்புண்டு ஆனால் வைத்டியர் வேலை கிடைக்காது.😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

ஒரு வைத்தியரின் வேலையினை வைத்தியர்தான் செய்யமுடியும் இங்கு கூறப்படுவது அவர்கள் ஏற்கனவே செய்த தற்காலிக வேலைகளை தொடர்வதற்கு நிரந்தர வேலை ஆக்குவதற்கு ஆதரவு வழ்ங்குதல் மட்டுமே.

தற்காலிக வேலைகளை நிரந்தரம் ஆக்குவதற்கு நானும் ஆதரவே, வசீ...........

ஆனால், இவர்கள் தற்காலிக வேலையில் இருக்கவில்லை. தொண்டர் ஊழியர்களாகவே, பலர் சம்பளம் இல்லாமல் கூட இருந்திருக்கின்றார்கள். அதனாலேயே நான் Volunteer Job பற்றியும், தொண்டர் ஆசிரியர்கள் பற்றியும் இங்கே எழுதியிருந்தேன். தொண்டர் ஆசிரியர் பிரச்சனை நான் பாடசாலையில் மாணவனாக இருந்த காலத்தில் கூட அங்கே இருந்தது.

இவர்களுக்கு கூட பயிற்சிகள் வழங்கி, பணி வழங்கி, அதை நிரந்தரமாக்கலாம் என்று தான் நானும் சொல்கின்றேன். ஆனால் இதை ஒரு அரசியல் விவாதம் ஆக்குவது முறையல்ல என்றும் சொல்கின்றேன்.

அனுபவத்தில் சில வேலைகளை மட்டுமே கற்றுக் கொள்ளலாம். பல வேலைகளுக்கு வேறு விதமான அடிப்படைகளும் தேவை என்பதை சொல்லவே அந்த உதாரணங்களைச் சொல்லியிருந்தேன்.................👍

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, யாயினி said:
புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட சுகாதார தொழிலாளர்களுக்கு இன்னும் மூன்று மாதத்தில் 30,000 மாதாந்த சம்பளத்துடன் நான் வேலை தருகிறேன்!
இது அரசியலுக்கான பதிவு அல்ல..
ஏழைகளுக்கான எனது முதலாவது திட்டம்!
பல பேருடன் கதைத்து இருக்கிறேன்..
இந்த மாதம் முடிவில் அதற்குரிய முதற்கட்ட வேலைகளை ஆரம்பிக்கிறேன்..
இந்தத் திட்டத்தால் வருகின்ற ஒரு ரூபாய் வருமானம் கூட என் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கோ அல்லது எனது அரசியல் பயணத்துக்கோ பாவிக்கப்பட மாட்டாது!
சற்று பொறுமையாக காத்திருக்கவும்! ❤️🙏
 
All r

வைத்தியர் அர்ச்சுணா இன்று காலையில் பதிந்த பதிவு இது..இன்னும் 3 மாத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு புலம் பெயர் உறவுகளின் உதவியோடு சம்பளம் குடுப்பதாக சொல்கிறார்..இது எவ்வளவு காவத்திற்கு நடக்கும் சொல்ல முடியுமா...?

மிகவும் முட்டாள்தனமான ஆரம்பம். தனது இருப்புக்குத் தானே குழிதோண்டுகிறார். 

மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டிய விடயங்களில் அவசரக் குடுக்கைத்தனமான வேலைகள் எங்கே கொண்டுபோய் விடும் என்பதை இப்போதே யூகிக்க முடியும். 

Good Luck Dr. அர்ச்சுனா 

🥺

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஆரம்பத்தை பார்த்ததில் நல்ல தொரு காணெளி. தமிழில் காணொளி என்றால் ஜேவிபியை கண்மூடிதனமாக புகழ்வது என்ற நிலையில் பேட்டி காண்பவர் சரியான கேள்விகள் கேட்கின்றாரே. மிகுதியை பின்பு பார்க்கின்றேன்
தமிழ் இன அழிப்புக்கான நீதி தமிழர்களின் தன்மானத்தில் தான் தங்கி இருக்கின்றது என்று சில மாதங்கள் முன்பு வரை முழக்கமிட்ட கனடா  ஒன்றாறியோ மாகாண பாராளுமன்ற தமிழ் உறுப்பினர் ஒருவர்  இப்போது அணுரா பிரிகேட்டில் சேர்ந்து  அநுரகுமார திசாநாயக்கவின் புகழ் முழக்கமாம்🤣

தோழர் தம்பியும் உணர்ச்சிவசப்படுகின்றார் அவ்வளவு  மக்கள் விசுவாசம்   ....யாழ் தோழர் தம்பியும் புலம் பெயர் தமிழ் தேசியவாதிகளிடம் கை ஏந்துவது போல தெரிகிறது...காசு வேணுமாம் முதலீடு செய்ய ...
டக்கியரின் பிரிகேட் யாழ் வைத்திய சாலையில் அட்டகாசம் செய்ய 
ஜெ.வி.பி பிரிகேட் இந்த தம்பி ஊடாக புகுந்து டக்கிக்கே ஆப்பு வைத்திருக்கினம் ....வைத்திய சாலையில் ..அதை  இடதுசாரி தவ்வல் சொல்லுகின்றார் இந்த வீடியோவில்

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரசோதரன் said:

அனுபவத்தில் வேலை பழகலாம் என்பதற்கு சில உதாரணங்கள்:

உதாரணமாக, அன்று மட்டக்கிளப்பில் கொளுத்தும் வெயிலில் ஓட்டப்போட்டி ஓடி ..வயிறு கொழுவி, மயக்கமுறும் தறுவாயில் வைத்தியசாலை சென்று...

இவருக்கு, அப்படி படிப்பு, பயிற்சி இல்லாதவர் பார்த்து இருந்தால் என்ன செய்து இருப்பார் என்று நினைக்கிறீர்கள்?

(அந்த பையனை 2-3 மணித்தியாலம் கவனிக்காதது மாத்திரம் அல்ல, பார்த்த போது சும்மா தண்ணீரை  கொடுத்தார்கள் என்றே செய்தி  வந்தது. பார்த்தது வைத்தியர் அல்ல என்றும் ...) 

இது எப்படி நடைபெற்றது?

நன் அன்றே யோசித்தது இது போன்றது நடந்து இருக்கலாம் - அதாவது படிப்பு, பயிற்சி இன்றி, வேளையில் கட்டமைக்கப்பட்ட வேலையில்-பயிற்சி இல்லாது  வேலை பழக்க எத்தனிப்போர்.

சொன்னது நடைபெற்று இருக்கிறது 

1. பணிகள் சுமத்தப்பட்டது.

2. விடயத்தை அறியாது, தண்ணி விடாய் என்று விளங்கி ...

நான் நினைக்கிறன், அப்படி பார்த்த போது  கூட உப்பு நீரை கொடுத்து இருந்தால் அந்த பையன் பாதிப்புகளுடன் தப்பி இருக்கலாம்.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

தற்காலிக வேலைகளை நிரந்தரம் ஆக்குவதற்கு நானும் ஆதரவே, வசீ...........

ஆனால், இவர்கள் தற்காலிக வேலையில் இருக்கவில்லை. தொண்டர் ஊழியர்களாகவே, பலர் சம்பளம் இல்லாமல் கூட இருந்திருக்கின்றார்கள். அதனாலேயே நான் Volunteer Job பற்றியும், தொண்டர் ஆசிரியர்கள் பற்றியும் இங்கே எழுதியிருந்தேன். தொண்டர் ஆசிரியர் பிரச்சனை நான் பாடசாலையில் மாணவனாக இருந்த காலத்தில் கூட அங்கே இருந்தது.

இவர்களுக்கு கூட பயிற்சிகள் வழங்கி, பணி வழங்கி, அதை நிரந்தரமாக்கலாம் என்று தான் நானும் சொல்கின்றேன். ஆனால் இதை ஒரு அரசியல் விவாதம் ஆக்குவது முறையல்ல என்றும் சொல்கின்றேன்.

அனுபவத்தில் சில வேலைகளை மட்டுமே கற்றுக் கொள்ளலாம். பல வேலைகளுக்கு வேறு விதமான அடிப்படைகளும் தேவை என்பதை சொல்லவே அந்த உதாரணங்களைச் சொல்லியிருந்தேன்.................👍

நான் உங்களை தவறாக புரிந்து கொள்ளவில்லை, மிக நேர்மையான ஒரு கருத்தாளர் மற்றவரின் மனம் நோகாமல் அதே நேரம் நகைசுவையாக பதிலளிப்பவர்.

3 minutes ago, vasee said:

இதை ஒரு அரசியல் விவாதம் ஆக்குவது முறையல்ல என்றும் சொல்கின்றேன்.

இது முக்கியமான விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, vasee said:

நான் உங்களை தவறாக புரிந்து கொள்ளவில்லை, மிக நேர்மையான ஒரு கருத்தாளர் மற்றவரின் மனம் நோகாமல் அதே நேரம் நகைசுவையாக பதிலளிப்பவர்.

👍............

இங்கு எல்லோரையும் எனக்கு பிடித்திருக்கின்றது என்று முன்னரும் சொல்லியிருக்கின்றேன்............ நம்புங்கள்..............🤣.

47 minutes ago, யாயினி said:
புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட சுகாதார தொழிலாளர்களுக்கு இன்னும் மூன்று மாதத்தில் 30,000 மாதாந்த சம்பளத்துடன் நான் வேலை தருகிறேன்!
இது அரசியலுக்கான பதிவு அல்ல..
ஏழைகளுக்கான எனது முதலாவது திட்டம்!
 

இது தான் என்னைப் போன்றவர்களுக்கு அர்ச்சுனா மீது இருக்கும் பயம்....................😌.

அமைச்சருடன் சந்திப்பு, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை என்று சொல்லி இவ்வளவு விளமபரப்படுத்தி விட்டு, தொண்டர் ஊழியர்களின் செய்து கொண்டிருக்கும் வேலையை நிரந்தரமாக ஆக்குகின்றேன் என்று சொல்லிவிட்டு.................... இப்பொழுது புது வேலை கொடுக்கப் போகின்றாராம்...............🫣.

'ஏழைகளுக்கான எனது முதலாவது திட்டம்..................' இது என்ன கொடுமை........

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kadancha said:

நான் நினைக்கிறன், அப்படி பார்த்த போது  கூட உப்பு நீரை கொடுத்து இருந்தால் அந்த பையன் பாதிப்புகளுடன் தப்பி இருக்கலாம்.

எனது இளம்பிராயத்தில் வைத்தியரிடம் போக பயம், ஒரு தடவை வயிற்றில் உள்ள பூச்சிக்காக வைத்தியசாலை மருந்து கொடுத்தார்கள் அதனால் பக்க விளைவு ஏற்பட்டு மீண்டும் வைத்தியசாலைக்கு எடுத்து சென்றார்கள், வைத்டியர் ஊசி குத்த போகிறார் என்ற பயத்தில் ஏற்கனவே பல்கீனமாக இருந்த நான் மயக்கமாகிவிட்டேன், அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்து ஊசி மூலம் ஏற்றும் சேலைனை குத்திவிட்டார்கள்.😁

4 minutes ago, ரசோதரன் said:

இது தான் என்னைப் போன்றவர்களுக்கு அர்ச்சுனா மீது இருக்கும் பயம்....................😌.

அமைச்சருடன் சந்திப்பு, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை என்று சொல்லி இவ்வளவு விளமபரப்படுத்தி விட்டு, தொண்டர் ஊழியர்களின் செய்து கொண்டிருக்கும் வேலையை நிரந்தரமாக ஆக்குகின்றேன் என்று சொல்லிவிட்டு.................... இப்பொழுது புது வேலை கொடுக்கப் போகின்றாராம்...............🫣.

'ஏழைகளுக்கான எனது முதலாவது திட்டம்..................' இது என்ன கொடுமை..,,,,,,,

சில சமயம் சரியாக கதைப்பது போல இருக்கும் ஆனால் அப்படியே அதற்கு எதிர்மாறாக பின்னர் நிகழ்கிறது, இவரை யாராலும் வெல்ல முடியாது.😁

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

இவர்கள் தாதிகளாக (nurse) இருக்க வாய்ப்புக் குறைவு.நேரடியாக நோயாளிகளின் மருத்துவக் கவனிப்பைக் கையாளாமல் உதவும் தாதிய உதவியாளர்களாக (nurse assistants/auxiliary staff)

நீங்கள் ஊகித்ததுதான் சரி.

முதலில் இந்த Auxiliary என்பதை தொண்டர் என மொழிபெயர்ப்பவர்களை பிடித்து உதைக்க வேண்டும்.

எல்லா Auxiliary யும் volunteer Auxiliary இல்லை. இங்கே இவர்களுக்கு வேதனம் கொடுக்கப்படுகிறது என நினைக்கிறேன்.

ஆகவே இவர்களை துணை-ஊழியர் என அழைப்பதே பொருத்தமாய் இருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:
புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட சுகாதார தொழிலாளர்களுக்கு இன்னும் மூன்று மாதத்தில் 30,000 மாதாந்த சம்பளத்துடன் நான் வேலை தருகிறேன்!
இது அரசியலுக்கான பதிவு அல்ல..
ஏழைகளுக்கான எனது முதலாவது திட்டம்!
பல பேருடன் கதைத்து இருக்கிறேன்..
இந்த மாதம் முடிவில் அதற்குரிய முதற்கட்ட வேலைகளை ஆரம்பிக்கிறேன்..
இந்தத் திட்டத்தால் வருகின்ற ஒரு ரூபாய் வருமானம் கூட என் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கோ அல்லது எனது அரசியல் பயணத்துக்கோ பாவிக்கப்பட மாட்டாது!
சற்று பொறுமையாக காத்திருக்கவும்! ❤️🙏
 
All r

வைத்தியர் அர்ச்சுணா இன்று காலையில் பதிந்த பதிவு இது..இன்னும் 3 மாத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு புலம் பெயர் உறவுகளின் உதவியோடு சம்பளம் குடுப்பதாக சொல்கிறார்..இது எவ்வளவு காவத்திற்கு நடக்கும் சொல்ல முடியுமா...?எல்லாவ்ற்றுக்கும் புலம் பெயர்ந்தவர்களை இழுத்தால் அங்குள்ள அரசாங்கம் என்ன செய்ய இருக்கிறது...இவரது இந்த விழையாட்டால் எதிர்காலத்தில் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை திட்டங்களை கூட புலம் பெயர் சமுகம் செய்யட்டும் என்று சொல்லும் நிலையும் ஏற்படலாம்.இவர் பத்து இடத்தாலும் ஓடித் திரிகிறார் தான் இல்லை என்று இல்லை..ஆனாலும் சில கட்டுரை எழுதுபவர்களைப் போல் 'புலம் பெயர் மக்கள் மேல் மிகுந்த பாரத்தை போடுகிறார்.பிழையாக இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.

வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகள் நெறிமுறைப் படுத்தப் பட்டு, அரசாங்கத்தின் ஊடாக நடைபெற வேண்டும் என்று ஒரு செய்தி சிலகாலத்திற்கு   முன்பு வந்திருந்தது. 
அப்படி இருக்க… புலம் பெயர்ந்தவர்கள் தொடர்ந்து அர்ச்சுனாவிற்கு பணம் அனுப்ப அரசு சம்மதிக்குமா? 
அர்ச்சுனா… ஆழம் தெரியாமல் காலை விட்டு, மீண்டு “நோஸ் கட்” வாங்கப் போகிறார் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகள் நெறிமுறைப் படுத்தப் பட்டு, அரசாங்கத்தின் ஊடாக நடைபெற வேண்டும் என்று ஒரு செய்தி சிலகாலத்திற்கு   முன்பு வந்திருந்தது. 
அப்படி இருக்க… புலம் பெயர்ந்தவர்கள் தொடர்ந்து அர்ச்சுனாவிற்கு பணம் அனுப்ப அரசு சம்மதிக்குமா? 
அர்ச்சுனா… ஆழம் தெரியாமல் காலை விட்டு, மீண்டு “நோஸ் கட்” வாங்கப் போகிறார் போலுள்ளது.

அடுத்த எலச்சனில் பெரிய முட்டை வாங்க இப்பவே அச்சாரம் போடுகின்றார்..

  • கருத்துக்கள உறவுகள்

சொன்ன வார்த்தையை காப்பாற்றியுள்ளார் Dr. இராமநாதன் அர்ச்சுனா.☝️

அர்ச்சுனாவின் வேண்டுகோளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்த அநுர அரசு..... 👏

மக்கள் பிரச்சனைகளை துரிதமாக துணிவாக அலுப்புச் சலிப்புப் பாராமல் முன்னெடுப்பதில் முனைப்பாக நிற்கிறார் என்பதுதான் அவரது சிறப்பே....!💕

கடந்த பா.மன்ற அமர்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் 170 தொண்டர் கனிஷ்ட ஊழியர் வேலை சம்பந்தமாக காரசாரமாக சபையில் தெரிவித்து, அவர்களுக்கு நியாயம் கோரி சபையில் MP அர்ச்சுனா அவர்கள் குரல் எழுப்பியது யாவரும் அறிந்ததே....!☝

அதற்குரிய முதற்கட்ட தீர்வை நேற்று 23/12/2024 அன்று அவ்வூழியர்க்கு எடுத்துக் கொடுத்துள்ளார்.🙏

யாழ்ப்பாணத்தில் இருந்து  அவர்களில் 28 பிரதிநிதிகளை கொழும்புக்கு வரவழைத்து சுகாதார அமைச்சர்,பிரதி அமைச்சருடன் நேரடியாகவே அவர்கள் குறைகளைப் பேச வைத்திருக்கிறார்.😘

இத்தனை காலத்தில் இப்படியான நிகழ்வு இதுதான் முதல்தடவை என நினைக்கிறேன்.😊

மேலும் Dr. அர்ச்சுனா கூறியதாவது👇

நான் கடந்த அரசுகளில் சுகாதார அமைச்சில் பணிபுரிந்திருக்கிறேன். அப்போது ஒரு அமைச்சரை சந்திக்க வேண்டுமென்றால்,  consultants உட்பட எல்லோருமே பல மணிநேரம் காத்திருக்க வேண்டும்.
ஆனால் இந்த NPP அரசில் (ஜனாதிபதி அநுரவின் ஆட்சியில்).....

இவ்வாறான ஒரு சுமூகமான பொதுமக்கள் அமைச்சர் சந்திப்பை எனது மருத்துவ நிர்வாக காலத்திலோ அல்லது மருத்துவனாக வேலை செய்யும் காலத்திலோ நான் கண்டதில்லை. 🥰

இதன் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் உண்மையிலேயே என்னை மதித்து என்னுடைய குரலுக்கு மதிப்பளித்து என்னை வரவேற்று எங்களுடைய சகல சுகாதார ஊழியர்களையும் சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை நேரடியாக கேட்டு அறிந்து அவர்களுக்கு உரிய பதிலை வழங்கியதற்கு தேசிய அரசாங்கத்திற்கும் மதிப்பிற்குரிய சுகாதார அமைச்சருக்கும் அது தவிர பிரதி அமைச்சர் மற்றும் சுகாதார செயலாளர் அவர்களுக்கும் யாழ்ப்பாணத்தின் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் மனமார்ந்த நன்றிகள்.🙏💕

சந்தர்ப்ப சூழ்ச்சிகளால் நலிந்து போனாலும், உண்மைகளுக்குத் துணை போகிறவர்கள் ஒரு போதும் வீழ்ந்து விடுவதில்லை .💕

முகப் புத்தகம்.

10 hours ago, alvayan said:
10 hours ago, தமிழ் சிறி said:

வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகள் நெறிமுறைப் படுத்தப் பட்டு, அரசாங்கத்தின் ஊடாக நடைபெற வேண்டும் என்று ஒரு செய்தி சிலகாலத்திற்கு   முன்பு வந்திருந்தது. 
அப்படி இருக்க… புலம் பெயர்ந்தவர்கள் தொடர்ந்து அர்ச்சுனாவிற்கு பணம் அனுப்ப அரசு சம்மதிக்குமா? 
அர்ச்சுனா… ஆழம் தெரியாமல் காலை விட்டு, மீண்டு “நோஸ் கட்” வாங்கப் போகிறார் போலுள்ளது.

Expand  

அடுத்த எலச்சனில் பெரிய முட்டை வாங்க இப்பவே அச்சாரம் போடுகின்றார்

இப்ப ஒரு தேர்தல் நடந்தால் முன்னர் எடுத்த வாக்குகளை விட கூடுதலான வாக்குகள் எடுப்பார் போல உள்ளதே களநிலவரம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப ஒரு தேர்தல் நடந்தால் முன்னர் எடுத்த வாக்குகளை விட கூடுதலான வாக்குகள் எடுப்பார் போல உள்ளதே களநிலவரம்.

மற்றவர்களின்... கும்பகர்ண தூக்கத்தை பார்க்க அப்படித்தான் தெரிகின்றது. 🙂
அவர்களுக்கு... அங்கை, மிளாகாய்த்தூள் தடவி விட்டால்  உசாராக இருப்பார்கள். 
😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

மற்றவர்களின்... கும்பகர்ண தூக்கத்தை பார்க்க அப்படித்தான் தெரிகின்றது. 🙂
அவர்களுக்கு... அங்கை, மிளாகாய்த்தூள் தடவி விட்டால்  உசாராக இருப்பார்கள். 
😂 🤣

மற்றவர்கள் வம்பு தும்புக்குப் போறதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் மூன்று வருடங்களுக்கு மேலாக தொண்டர் சேவையில் வேலை ஆற்றிய 170க்கும் மேற்பட்ட, 300 பேர் வரை வேலை செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது, தொண்டர் கனிஷ்ட ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது சம்பந்தமாக எனக்கு எழுத்து மூலம் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளை முறையான விதத்தில் சுகாதார அமைச்சருடனும் பிரதி சுகாதார அமைச்சருடனும் சுகாதாரத்துறை செயலாளர் அவர்களுடனும் இன்றைய தினம் நேரடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து அவர்களுடைய பிரதிநிதிகள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு வந்திருந்து தங்களுடைய பிரச்சனைகளை நேரடியாக சுகாதார அமைச்சரிடமே சொல்லும் அளவுக்கு தேசிய அரசாங்க சக்தி மக்கள் மத்தியில் இதயத்தை வென்றுள்ளதை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. 

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்கின்ற அடிப்படையிலும் ஒரு வைத்தியர் என்ற அடிப்படையில் ஒரு வைத்திய நிர்வாகி என்ற அடிப்படையிலும் ஒரு மக்களின் சேவகன் என்ற அடிப்படையிலும் ஒரு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆதரவாளன் என்ற அடிப்படையிலும் அது தவிர தமிழ் மக்களின் அன்புக்குரியவன் என்ற அடிப்படையிலும் அவர்கள் என்னை பிரதிநிதித்துவப்படுத்தி சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியிருந்தார்கள். 

இது எட்டபட்ட முடிவுகள் பின்வருமாறு..
1. சுகாதார அமைச்சர் மேற்படி கனிஸ்ட தர சேவை அடிப்படையில் தொண்டராக கடமை ஆற்றிய இளைஞர் யுவதிகளிடம் அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டு அறிந்து கொண்டார். 

2. சுகாதார அமைச்சர் நேரடியாகவும் மற்றும் பிரதி அமைச்சரும் கலந்து கொண்டது தேசிய மக்கள் சக்தி மக்களின் நலன் கருதி எவ்வாறு செயல்படுகின்றது என்பதை இன்று நேரடியாக  தெரிந்து கொண்டார்கள்.

3. அப்போது யாழ் போதனா வைத்திய சாலையில் மொத்தம் 170 தொண்டர் ஊழியர்களில் 84 பேருக்கு மட்டும் சிறப்பாக பட்டி ஒன்று அணிவிக்கப்பட்டு சுகாதார உத்தியோர்களை இரண்டு பாகங்களாக பிரித்து அவர்களுக்கு இடையே பிரச்சனைகளை ஏற்படுத்தப்பட்டிருப்பது மற்றும் ஏற்கனவே வேலை செய்து சுகாதார அமைச்சரை சந்தித்த ஊழியர்களை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றி இருப்பதை சுகாதார அமைச்சர் தெரிந்து கொண்டார். 

4. கனிஷ்டா ஊழியர்கள் மட்டுமல்ல தாதிய ஊழியர்கள் அது தவிரவும் வைத்தியர்களுக்கான கார்டர் கிரியேஷன் இனிவரும் காலங்களில் நடக்க இருப்பதால் சுகாதார அமைச்சர் அவ்வாறான அரசாங்க வேலைகள் கூறும் பட்சத்தில் முதலில் வேலை செய்த 170 பேருக்கும் யாழ் போதனா வைத்திய சாலையில் இப்போது வேலை செய்து கொண்டிருக்கின்ற 84 பெயருக்குமோ அல்லது வேலை செய்யாமல் இருக்கின்ற மிகுதி ஊழியர்களுக்கோ எந்த முன்னுரிமை அடிப்படையும் வழங்கப்படாது என்பதை உறுதி செய்தார். 
170 பேரையும் சமமாக பாவித்து 170 பேருக்கும் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படுகின்ற வேலை வாய்ப்பின் போது சுகாதார அமைச்சரை சந்தித்தார்கள் என்ற அடிப்படையில் பழிவாங்கவோ அல்லது இப்போதும் வேலை செய்கிறோம் என்ற அடிப்படையில் அந்த 84 பேருக்குமோ தனித்தனியாக முன்னுரிமை கிடைக்காது என்பதை தெளிவாக சொல்லியிருந்தார். 

5. ஆதலால் எந்த வாக்குறுதிகளையும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வழங்கக்கூடாது மற்றும் 170 சுகாதார கணித்த ஊழியர்களையும் கொழும்புக்கு போனார்கள் இங்கே நின்றார்கள் என்ற அடிப்படையில் தனித்தனியாக பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதை செயலாளர் ஊடாக கடிதம் மூலம் தெரிவிப்பதாக ஒத்துக் கொண்டிருக்கிறார். 

6. அதற்கான கடிதத்தையும் வெகுவிரைவில் போதன வைத்தியசாலை நிர்வாகத்திடம் அனுப்பி வைப்பதாக மதிப்புக்குரிய சுகாதாரச் செயலாளர் வைத்தியர் அணில் ஜெயசிங்க அவர்கள் உறுதியளித்திருக்கிறார். 

இவ்வாறான ஒரு சமூகமான பொதுமக்கள் அமைச்சர் சந்திப்பை எனது மருத்துவ நிர்வாகி காலத்திலோ அல்லது மருத்துவனாக வேலை செய்யும் காலத்திலோ நான் கண்டதில்லை. 

இதன் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் உண்மையிலேயே என்னை மதித்து என்னுடைய குரலுக்கு மதிப்பளித்து என்னை வரவேற்று எங்களுடைய சகல சுகாதார ஊழியர்களையும் சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை நேரடியாக கேட்டு அறிந்து அவர்களுக்கு உரிய பதிலை வழங்கியதற்கு தேசிய அரசாங்கத்திற்கும் மதிப்பிற்குரிய சுகாதார அமைச்சருக்கும் அது தவிர பிரதி அமைச்சர் மற்றும் சுகாதார செயலாளர் அவர்களுக்கும் யாழ்ப்பாணத்தின் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் மனமார்ந்த நன்றிகள். 

உங்களில் ஒருவன்

❤️
முகப் புத்தகம்.

15 hours ago, ரசோதரன் said:

 

நான் மருத்துவமனையில் வேலை செய்யவும் இல்லை, உயிரியல் படிக்கவும் இல்லை......... ஆனால், கிட்டத்தட்ட எந்த நோய்க்கும் மருந்து சொல்லும் அளவிற்கு தகவல்களை, புத்தகங்களை வாசித்து வைத்திருக்கின்றேன். முதற்கட்டமாக சிலரை தேடிக் கொண்டிருக்கின்றேன்................🤣🤣

 

 

டாக்டர்,

50 வயசு பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போதும், கிறிஸ்மஸ் விடுமுறை வார கொண்டாட்டங்களின் போதும், நிறையப் பேரை கட்டிப்பிடிச்சு, உருண்டு, பிரண்டு பார்ட்டி செய்ததில், எவரிடமோ இருந்து எனக்கு காச்சல் தொற்றி 5 நாட்களாக கடும் காச்சல்... இதுக்கு ஏதாவது மருந்து கிருந்து சொல்ல முடியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

டாக்டர்,

50 வயசு பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போதும், கிறிஸ்மஸ் விடுமுறை வார கொண்டாட்டங்களின் போதும், நிறையப் பேரை கட்டிப்பிடிச்சு, உருண்டு, பிரண்டு பார்ட்டி செய்ததில், எவரிடமோ இருந்து எனக்கு காச்சல் தொற்றி 5 நாட்களாக கடும் காச்சல்... இதுக்கு ஏதாவது மருந்து கிருந்து சொல்ல முடியுமோ?

இதுக்கு மட்டும் மருத்துவம் சொல்லாதீர்கள் @ரசோதரன்

அடுத்த செங்கன்களில் அது உங்களுக்கும் கொத்தி விடும் 😋

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

டாக்டர்,

50 வயசு பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போதும், கிறிஸ்மஸ் விடுமுறை வார கொண்டாட்டங்களின் போதும், நிறையப் பேரை கட்டிப்பிடிச்சு, உருண்டு, பிரண்டு பார்ட்டி செய்ததில், எவரிடமோ இருந்து எனக்கு காச்சல் தொற்றி 5 நாட்களாக கடும் காச்சல்... இதுக்கு ஏதாவது மருந்து கிருந்து சொல்ல முடியுமோ?

குறைந்தபட்ச இடைவெளி பேணப்படாமையால் வந்தநிலை இது!!

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

டாக்டர்,

50 வயசு பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போதும், கிறிஸ்மஸ் விடுமுறை வார கொண்டாட்டங்களின் போதும், நிறையப் பேரை கட்டிப்பிடிச்சு, உருண்டு, பிரண்டு பார்ட்டி செய்ததில், எவரிடமோ இருந்து எனக்கு காச்சல் தொற்றி 5 நாட்களாக கடும் காச்சல்... இதுக்கு ஏதாவது மருந்து கிருந்து சொல்ல முடியுமோ?

🤣...................

காய்ச்சல் போல தெரியும், ஆனால் இது காய்ச்சல் இல்லை, நிழலி...................

இது உடம்புச் சூடு............. நீங்கள் கொஞ்சம் சூட்டு உடம்புக்காரர் போல................ மருந்து மாத்திரை தேவையில்லை.............. அதுவா அடங்கும்...............😜.

** டாக்டரா, இல்லையா என்று என்ற பிரச்சனை இன்னமும் முடியவில்லை. நீங்கள் வேற புதிதாக ஒரு டாக்டரை இறக்கி விட்டிருக்கிறீர்கள்...............

12 minutes ago, விசுகு said:

இதுக்கு மட்டும் மருத்துவம் சொல்லாதீர்கள் @ரசோதரன்

அடுத்த செங்கன்களில் அது உங்களுக்கும் கொத்தி விடும் 😋

🤣.................

நிழலி இந்தக் கதவால் வந்தால், நான் அந்தக் கதவால் ஓடி விடுவேன், விசுகு ஐயா............

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

டாக்டர்,

50 வயசு பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போதும், கிறிஸ்மஸ் விடுமுறை வார கொண்டாட்டங்களின் போதும், நிறையப் பேரை கட்டிப்பிடிச்சு, உருண்டு, பிரண்டு பார்ட்டி செய்ததில், எவரிடமோ இருந்து எனக்கு காச்சல் தொற்றி 5 நாட்களாக கடும் காச்சல்... இதுக்கு ஏதாவது மருந்து கிருந்து சொல்ல முடியுமோ?

எனக்கு flu jab வேலையிடம் மூலமாகக் கிடைத்த தைரியத்தில் பல பார்ட்டிகளைக் கொண்டாடி, பப்ளிக் ட்றான்ஸ்போர்ட் எல்லாம் ஏறி இறங்கி 8 நாள் விடுமுறையை சந்தோஷமாகக் கழிக்கலாம் என்றால், தடிமன், இருமல், காய்ச்சல் எல்லாம் வந்து நிற்கின்றது!  ஆனால் நிழலிக்கு வந்ததுபோல கடுமையாக இல்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

டாக்டர்,

50 வயசு பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போதும், கிறிஸ்மஸ் விடுமுறை வார கொண்டாட்டங்களின் போதும், நிறையப் பேரை கட்டிப்பிடிச்சு, உருண்டு, பிரண்டு பார்ட்டி செய்ததில், எவரிடமோ இருந்து எனக்கு காச்சல் தொற்றி 5 நாட்களாக கடும் காச்சல்... இதுக்கு ஏதாவது மருந்து கிருந்து சொல்ல முடியுமோ?

 

தொடர்ந்து கட்டிப் பிடித்து உருண்டு பிரண்டால் விரைவில் குணமாகும்.

ரசோதரன் இல்லாத நேரம் நான்தான் டாக்ரர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

எனக்கு flu jab வேலையிடம் மூலமாகக் கிடைத்த தைரியத்தில் பல பார்ட்டிகளைக் கொண்டாடி, பப்ளிக் ட்றான்ஸ்போர்ட் எல்லாம் ஏறி இறங்கி 8 நாள் விடுமுறையை சந்தோஷமாகக் கழிக்கலாம் என்றால், தடிமன், இருமல், காய்ச்சல் எல்லாம் வந்து நிற்கின்றது!  ஆனால் நிழலிக்கு வந்ததுபோல கடுமையாக இல்லை! 

வடக்கு கோளம் முழுக்க இது வைரஸ் காலம் போல, கிருபன்.

இங்கும் எல்லோரும் சீறிச்சீறிக் கொண்டே வருகின்றார்கள், போகின்றார்கள், விளையாடுகின்றார்கள்.......... (நிழலி செய்வதையும் செய்கின்றார்கள்.................🤣)

எவரையும் விடாது இது............. ஆனால் இதை விட்டால் எங்களுக்கு விடுமுறையும் கிடையாதே.......

44 minutes ago, கிருபன் said:

எனக்கு flu jab வேலையிடம் மூலமாகக் கிடைத்த தைரியத்தில் பல பார்ட்டிகளைக் கொண்டாடி, பப்ளிக் ட்றான்ஸ்போர்ட் எல்லாம் ஏறி இறங்கி 8 நாள் விடுமுறையை சந்தோஷமாகக் கழிக்கலாம் என்றால், தடிமன், இருமல், காய்ச்சல் எல்லாம் வந்து நிற்கின்றது!  ஆனால் நிழலிக்கு வந்ததுபோல கடுமையாக இல்லை! 

வருத்தம் என்று குடும்ப வைத்தியரிடம் போனால் (தமிழ் மருத்துவர், பரியோவான் கல்லூரி பழைய மாணவர்). 

டொக்டர்: "Flue shot ஷொட் எடுத்ததோ"

நான்: "இல்லை டொக்டர்...நான் ஒரு நாளும் எடுப்பதில்லை"

டொக்டர்: "உமக்கு 50 வயசாச்சு என்று நினைவில்லையோ.. இந்த பழைய வீரம் எல்லாம் இனி இல்லை...  அதுவும் உமக்கு இந்த வருடம் நிமோனியா வந்து போனது... இனி இப்படி எடுக்காட்டி அடிக்கடி அதுவும் வரும்.  இனிமேல் அது எடுக்காமல் இந்தப் பக்கம் வரக் கூடாது"

என்று மனிசன் பேசிப் போட்டுது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.