Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேலி போடலையோ வேலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

photo16.jpg

சீமைக் கிளுவைக்குள்

சீவியம் செய்தவள்

சீமைக்குப் புறப்பட்டாள்

சீறி எழுந்த

சிறீலங்கன் எயார் லைன்ஸில்..!

கூலி கொடுத்து

தாலி வாங்கி

வேலி போட்டனள்

நாணி நின்றவள்

கூனி நிற்பாள் என்று..!

மாதம் பத்து

சும்மா இருந்தவள்

சுமந்தனள்

சுமைகளோடு

சுதந்திரக் கனவு..!

தாலி பிரித்து

வேலி தாண்டி

நடப்பது பகற் கனவு

கண்டனள் ஏங்கினள்..

படிதாண்டிப் பத்தினியும்

பரத்தையானதில்..!

சீமையில்

சீதனம்

சீர் தனம்

சீ சீ.. என்பதில்

சிந்திக்க இருக்கு

சில சுயநலம்..

அதில்

அடங்கி இருக்கு

பலவீனம்..

பண வீக்கம்..!

சீமைச் சிறப்புக்குள்

சீரழியும் இயற்கைக்குள்

சீமைக்கிளுவைகள்

சீர் பெறுமா..??!

விடை தேட

ஆணும் பெண்ணும் எங்கே..??!

கலந்தடிக்கிறார்

போதையில் இங்கே..! :)

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் தாத்தாவின் "வேலி போடலையோ வேலி" என்ற கவிதை வழமை போலவே வித்தியாசமான சிந்தனையுடனான கவிதை :) அதனுள் புதைந்துள்ளது ஆயிரம் வேலிகள் வாழ்த்துகள் நெடுக்ஸ் தாத்தா.... :unsure:

விடை தேட

ஆணும் பெண்ணும் எங்கே..??!

கலந்தடிக்கிறார்

போதையில் இங்கே..!

விடை தேடாம போதையில இருந்துவிட்டா ஒரு பிரச்சினையும் இல்லை டிஸ்சர்ப் பண்ணாதையுங்கோ நெடுக்ஸ் தாத்தா!! <_<

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

சீமையில்

சீதனம்

சீர் தனம்

சீ சீ.. என்பதில்

சிந்திக்க இருக்கு

சில சுயநலம்..

அதில்

அடங்கி இருக்கு

பலவீனம்..

பண வீக்கம்..!

ஆழமான வரிகள். திருந்துமா எமது சமூகம்?

நல்லதொரு கவிதை நெடுக்ஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேராண்டி... நுண்ஸ்.. நுணுக்கமா வரிகளை அணுக முற்பட்டிருக்கிறீங்க. நன்றிகள்..! வரிகளைப் படைப்பவனை விட வரிகளை ரசிப்பவன் தான் படைப்புக்கே அர்த்தம் கொடுப்பவன்..! :)

Edited by nedukkalapoovan

சிந்திக்க வைக்கும் கவிதை

வாழ்த்துக்கள்

ஒரு சிறிய சந்தேகம்

இந்த கிளுவை மரம் என்பது இரண்டு இருக்கிறதா ? ஏனென்றால் நான் ஊரில் பார்த்திருக்கின்றேன். முள்ளுடன் கூடிய கடும் பச்சை நிற இலையை கொண்ட மரத்தைத்தான் கிளுவை என்று சொல்லுவார்கள். இது வேறு மரமாக இருக்கின்றது அதுதான் கேட்டேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு சாமியோவ்! கிளுவையிலை மூண்டு விதம் இருக்கு சாமியோவ் நீங்க படத்திலை போட்டது சீமைகிளுவையில்லையுங்க சாமி :)

என்னப்பா குழப்புறீங்கள்

3 வகையா ? படத்துடன் விளக்கம் தாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்க கவிதை அழகு.

இந்த சீமைக்கிளுவை எல்லாம நமக்கு தெரியாதுங்க. ஆனா உங்க கவிதை வாசிச்சவுடனே கிளுவையில இருந்த குருவிவந்துவிட்டதோ எண்டு நினைச்சுட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு சாமியோவ்! கிளுவையிலை மூண்டு விதம் இருக்கு சாமியோவ் நீங்க படத்திலை போட்டது சீமைகிளுவையில்லையுங்க சாமி :D

பரணி சொன்னது போல நானும் இரண்டு வகைகளைக் கண்டிருக்கிறேன். முட்கிளுவை.. சீமைக்கிளுவை என்று. முள்ளால்லாததை சீமைக்கிளுவை என்பார்கள். இது குறித்து மேலதிக விபரங்கள் எனக்குத் தெரியாது. இருப்பின் செப்புங்கள் அறிந்து கொள்கிறோம் கு.சா.

வரிகளை ரசித்த பரணி கறுப்பி கு சா எல்லோருக்கும் நன்றிகள். :lol:

ஆழமான சிந்திக்க வைக்குது கவிதை. ஆனல் இக்கவிதையை வாசித்தவுடன் என் அண்ணா குருவிகள் எழுதும் கவிதைகள் நினைவுக்கு வந்துவிட்டன.

நெடுக் அண்ணா நல்லாகவே எழுதுறியள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆழமான சிந்திக்க வைக்குது கவிதை. ஆனல் இக்கவிதையை வாசித்தவுடன் என் அண்ணா குருவிகள் எழுதும் கவிதைகள் நினைவுக்கு வந்துவிட்டன.

நெடுக் அண்ணா நல்லாகவே எழுதுறியள்.

இது நெடுக்ஸ் ஆகிய நான் சொந்தமா எனது சிற்றறிவு கொண்டு எழுதினது. யாரிடமும் கடன் வாங்கல்ல..!

நன்றி உங்கள் சிறிய விமர்சனத்துக்கு..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரணி சொன்னது போல நானும் இரண்டு வகைகளைக் கண்டிருக்கிறேன். முட்கிளுவை.. சீமைக்கிளுவை என்று. முள்ளால்லாததை சீமைக்கிளுவை என்பார்கள். இது குறித்து மேலதிக விபரங்கள் எனக்குத் தெரியாது. இருப்பின் செப்புங்கள் அறிந்து கொள்கிறோம் கு.சா.

வரிகளை ரசித்த பரணி கறுப்பி கு சா எல்லோருக்கும் நன்றிகள். :lol:

முதலாவது சோத்திக்கிளுவை இது ஒரு பலமில்லாத மரம். தொடப்பட முறியக்கூடியது.வேலிகள், எல்லை போடுவதற்கு பயன்படுவது.

இரண்டாவது சீமைக்கிளுவை(கிளிசறியா) இந்தமரம் வேலிகளிலும் இருக்கும் தனி மரமாகவும் பல இடங்களில் உண்டு.இதன் பூக்கள் மிகவும் அழகானவை.

மூன்றாவது முட்கிளுவை இது கொஞ்சம் பலம் கூடிய மரம்.இந்த மரமும் வேலி அடைப்பதற்கே பயன்படும்.இதன் இலை வில்வம் இலையைப்போன்றிருக்கும்.

மேலே நான் எழுதிய தகவல் அதாவது மரங்களின் பெயர்கள் ஊருக்கு ஊர் வித்தியாசப்படலாம்

முதலாவது சோத்திக்கிளுவை இது ஒரு பலமில்லாத மரம். தொடப்பட முறியக்கூடியது.வேலிகள், எல்லை போடுவதற்கு பயன்படுவது.

இரண்டாவது சீமைக்கிளுவை(கிளிசறியா) இந்தமரம் வேலிகளிலும் இருக்கும் தனி மரமாகவும் பல இடங்களில் உண்டு.இதன் பூக்கள் மிகவும் அழகானவை.

மூன்றாவது முட்கிளுவை இது கொஞ்சம் பலம் கூடிய மரம்.இந்த மரமும் வேலி அடைப்பதற்கே பயன்படும்.இதன் இலை வில்வம் இலையைப்போன்றிருக்கும்.

மேலே நான் எழுதிய தகவல் அதாவது மரங்களின் பெயர்கள் ஊருக்கு ஊர் வித்தியாசப்படலாம்

சொன்னது சரி குமாரசாமி.

சீமை கிளுவை/ கிளிரிசீடிய

Gliricidia_sepium_lv.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மரம் செடியை பற்றி கதைக்கே;குள்ளையே நினைச்சனான் என்னடா குளைக்காட்டானை இன்னமும் காணெல்லையெ எண்டு வந்திட்டார். இனி சந்தேகங்களை கேக்கலாம். :lol::lol:

கவிதை அருமை தொடருங்கள்.... சீமைக் கிளுவைக்குள் சீவியம் செய்தது பெண்கள் மட்டும் இல்லை ஆண்களும்தான் . சீமைச் சிறப்புக்குள் சீரழியும் இயற்கைக்குள் சீர்பெறவேண்டும் சீமைக் கிளுவைகள்.......... சீர்பெற வாழ்த்துக்கள் :lol::lol:

சோத்திக் கிளுவையா? சத்தியமா இப்போதுதான் கேள்விப்படுறேன்!!

கவிதை ஏதோ பிரமாதமாகத்தான் வசன அமைப்பைப் பொறுத்தளவில இருக்கு.. ஆனால் சீமைக்கிளுவைகளுக்க இருந்தவ சீமைக்கு வநந்து போதையில கலக்கிறாவாம்.. நம்பும்படியாகவா இருக்கு.. அரிசீல கல்லிருக்கிற மாதிரி ஏதோ ஒன்றிரண்டு பேர் அப்படி என்றால்.. இவரு கல்லிலை அரிசி என்று கதையையே கவிதைல கந்தலாக்குறாரு... என்னால நிச்சயமா இதை கவிதைன்னு பாராட்டவே முடியாது!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சோழி இது கவிதை அல்ல க.விதை . இதில் க விற்கு உங்கள் தெரிவு கள்ள. கற்பனை.கனவு. கண்டதும்.கண்டஇடமெல்லாம்.இப்ப

ிடி ஏதாவது :lol:

வழக்கம் போல மண்டை காய்ஞ்சது தான் மிச்சம்...

ஒன்டுமே விளங்கேல்லை :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோத்திக் கிளுவையா? சத்தியமா இப்போதுதான் கேள்விப்படுறேன்!!

கவிதை ஏதோ பிரமாதமாகத்தான் வசன அமைப்பைப் பொறுத்தளவில இருக்கு.. ஆனால் சீமைக்கிளுவைகளுக்க இருந்தவ சீமைக்கு வநந்து போதையில கலக்கிறாவாம்.. நம்பும்படியாகவா இருக்கு.. அரிசீல கல்லிருக்கிற மாதிரி ஏதோ ஒன்றிரண்டு பேர் அப்படி என்றால்.. இவரு கல்லிலை அரிசி என்று கதையையே கவிதைல கந்தலாக்குறாரு... என்னால நிச்சயமா இதை கவிதைன்னு பாராட்டவே முடியாது!! :lol:

சார்.. அரிசிக்க கல்லு என்று சொன்னாத்தான் அடுத்த தடவைக்கு கடைக்காரனே கல்லில்லாத அரசியை விற்பான் அல்லது குறைஞ்சது கல்லில்லாத அரிசி என்று போட் மாட்டி வைப்பான்..! அதுக்க கல்லிருக்கோ இல்லையோ என்றது அடுத்த பிரச்சனை..! சொல்லாமல் விட்டால்.. கல்லே அரிசியா கடையில தாராளமா இருக்கும். பல்லு நொருங்கேக்க இல்ல குடல்வளரி நோய் வரேக்கதான் அதன் பாதிப்பு தெரியும்..! :D:)

சீமைக்கிளுவைக்கில்ல இருந்து வந்து சீமைப் பசுக்களா ஆனவை.. செய்யுற.. கூத்துகள் கொஞ்ச நெஞ்சமோ...???! வெள்ளைக்காரச் சீமாட்டிகள் தோத்திடுவினம்..! :lol:

சோழி இது கவிதை அல்ல க.விதை . இதில் க விற்கு உங்கள் தெரிவு கள்ள. கற்பனை.கனவு. கண்டதும்.கண்டஇடமெல்லாம்.இப்ப

ிடி ஏதாவது :lol:

சாத்திரியார்.. "க"க்கு கலையாடு(தல்) கவிதை என்று போட்டிருந்தா உங்களுக்கு விளங்கி இருக்குமோ என்னமோ..??! ஏன்னா குறி சொல்லுதலும் உங்க சாத்திரமும் கிட்டமுட்ட ஒரே வகைதானே கூட விளக்கமா அமைஞ்சிருக்கும்..! :lol:

வழக்கம் போல மண்டை காய்ஞ்சது தான் மிச்சம்...

ஒன்டுமே விளங்கேல்லை :lol:

சம்பூவும் கெண்டிசனரும் வைச்சு முழுகிட்டு ஜெல்லில அப்புங்கோ கூல் ஆகிடும்..! :D:D

சம்பூவும் கெண்டிசனரும் வைச்சு முழுகிட்டு ஜெல்லில அப்புங்கோ கூல் ஆகிடும்..! :):lol:

முழுகலாம்.. அது ஓகே.. அப்புறது.. எங்கை கொண்டு போய் அப்புறது? சும்மா வயித்தெரிச்சலைக் கிளப்பாதைங்கப்பா. :lol:

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

முழுகலாம்.. அது ஓகே.. அப்புறது.. எங்கை கொண்டு போய் அப்புறது? சும்மா வயித்தெரிச்சலைக் கிளப்பாதைங்கப்பா. :lol:

பொய்முடி வைக்கின்றதில்லையோ.

அதை விட இப்போது தானே கிளுவை மாதிரி வரிசைக்கு முடி நடுகின்றார்கள். நட்டுப் பார்க்கின்றது. :lol:

சீமைக் கிளுவையை எங்கட ஊரில நிழல்வாகை என்று சொல்லுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கால போவான் பெண்களைச் சாடுவதில் அப்படி என்ன இன்பம் காணுகிறீர்கள்? எனக்குத் தெரிந்து, பல பெண்களின் வாழ்வு கேள்விக்குறியாகி நிற்பதற்கு பெண்கள் என்றும,; ஆண்கள் என்றும் ஒரு தரப்பைக் குற்றஞ்சாட்ட முடியாது. புலம் பெயர் வாழ்வும், ஆதரவின்றி நிர்க்கதியாக நிற்கும் தனித்த போக்குமே பல சீரழிவுகளுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. ஒத்துக் கொள்வீர்களோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.