Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினசரி தூறல்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே விகடகவியை காணவில்லையே!

  • Replies 513
  • Views 102k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நானும்தான் தேடுறன், தல்லாத வயதில் யாரும் தடியை பிடிங்கிவிட்டார்களா

  • தொடங்கியவர்

தள்ளாத வயதில்

தடியை தவறவிட்டதால்

தேடல் தொடங்கியது...

அப்போதுதான்

கண்டுபிடித்தேன்...

தவளும் வயதில்

தவறவிட்ட அரிச்சுவடி

அழகோவியத்தை

அழகோவியம்

நீதான்

வரைந்தவன்

பிரம்மன்

வர்ணிப்பவன்

கவிஞன்

வாழப்போவனோ

அடிமை

அடிமை விலங்கை

விடுதலை உடைக்கும்

வீரம் விலை போனால்

உன் நிழலும் உன்னை

இருட்டுக்குள் துரத்தும்

துரத்தும் உன்

நினைவுகளைக்கூட

தூரம் வைப்பேன்

அண்ணா என்றழைக்காமல்

நண்பா என்றழைத்து விட்டுப்போ

  • கருத்துக்கள உறவுகள்

சபாஸ் விகடகவி நீங்கள் தான் உண்மையான கவிஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அடிமை விலங்கை

விடுதலை உடைக்கும்

வீரம் விலை போனால்

உன் நிழலும் உன்னை

இருட்டுக்குள் துரத்தும்

விகடகவி அருமை வசனங்கள், ஏன் நித்திரை கூட நிம்மதியாக கொள்ள முடியா, கனவுகள் துரத்திக்கொண்டே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சபாஸ் கவிஞரே! தூறலின் சாரலில் துளித் துளியாய் நனைகிறோம்! தொடருங்கள் வாழ்த்துகள்! :D

  • 9 months later...
  • தொடங்கியவர்

தாலாட்டும் தாய்பாட்டை...

தமிழ் ஏட்டை தொலைக்க..

முடியாமல்

தூக்கமிழந்த இரவில்

தூரிகையோடு...குருட்டு

ஓவியன்...

நட்பு நாடி

நான் பார்த்த

முற்றம் பழையது

முகங்கள் புதியது..

இரவு வணக்கங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

நட்பு நாடி

நான் பார்த்த

முற்றம் பழையது

முகங்கள் புதியது..

இரவு வணக்கங்கள்..

அது தானே வாழ்க்கை, விகடகவி!

முற்றம் பழையது!

முகங்கள் புதியது!

நடுவில் ஓடுகின்ற,

நட்பென்னும் கோடு மட்டும்,

நித்தியமானது! :D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தாமரைக்குளத்தில்..தாங்கள் குதித்ததும்

மாங்காய் அடித்ததும்..உப்போடு கடித்ததும்

உயரச்சுவரில் ஓங்கிக்கல்லெறிந்ததும்

பள்ளி வரும் சின்னசின்ன சவால்களை

நாள் முழுதும் நயம் பிடித்துதும்

தேங்கிக்கிடக்கும் நீரில் தொட்டும் தொடாமலும்

நீர் சிந்தும் பூமரங்களில் பட்டும் படாமலும்

மழையில் நனைந்த இனிய நினைவுமீட்டல்கள்

இளமை அழகு இசை அழகு

அழகுக்கு அழகு சேர்க்கும்

எம் தமிழோ பேரழகு..

அருமையான பாடல்

அழகான ஒளிப்பதிவு

http://www.youtube.com/watch?v=aB-03axwQZ8&feature=related

  • தொடங்கியவர்

http://www.youtube.com/watch?v=aSadfMd1m-M

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் சுடர்தந்த தேன்

  • 1 year later...
  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால் கள் அறுத்தபோதெல்லாம்... கண் மூடிக்கிடந்தவனோ...காலணியாய் கலையுளிகள் செதுக்கியதைச் சிதைப்பதை சினங்கொண்டு தடுப்பான்...தமிழ் உணர்வுகள் காயப்படல்...புதிதல்ல..கொடுங்கோலர் கொக்கரித்தல் முதலுமல்ல.. நீதியின் பயணம் முடங்காது முடியாது... உள்ளுக்குள் அழுதாலும் உன்னுரம் ஏற்று சிந்தித்தாற்று உன்பணி..கயவர் சிதைத்தாலும்..நெஞ்சிலுண்டு.. வானுயர...நினைவுத்தூபி.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அவலம் நீந்திவிளையாடும்.. மீனின் வாயில் கொழுக்கியேத்தி இழுத்தெடுத்து பெரிதாய்ச்சிரித்து.. மீண்டும் மீனை ஏரிக்குள் எறியும்.. பணக்கார விளையாட்டில் சிறு மீன் படும் அவலம் போல் நாமும் நம் வாழ்வும்.. .......................................................................................................................................................................................................................................................................................................

கசக்கிய காகிதத்தைப் பார்த்து பேனா சிரிக்கிறது.. அதன்..மை முடிவது தெரியாமல். ....................................................................................................................................................................................................................................................................................................... பசி பசி என்றே அழுகின்ற குழந்தையை பார்த்திட மறுத்தே.. உயிரைத்துறக்கிறான் ஒரு தந்தை.. பசியில்லை என்றே.. மறுக்கின்ற குழந்தைக்கு பலவித உணவாய்ப் படைக்கின்றான் ஒரு தந்தை................................................................................................................................................................................................................................................................................................ தமிழ்த்தாய் செத்துக்கொண்டிருக்கிறாள்.. அவளுக்கென இல்லையாம் ஊர் சுற்றும்.. உல்லாசப்பிறவிகளுக்கு ஊரெல்லாம் மன்றம்.

Edited by விகடகவி

  • 4 months later...
  • தொடங்கியவர்

காதலி காணாமல் போவாள்... காதல் ... ஆமையாய் நாட்கள் போனாலும் உள்ளே ஊமையாய் ஒளிந்திருக்கும்...

நேரம் தேவையான நேரங்களில் முயலாகவும் .... காத்திருக்கும் நேரங்களில் ஆமையாகவும்... ஆமைதான் இதிலும் வெல்கிறது

எல்லோரும் சேர்ந்து என் காதலை புதைத்துவிட்டதாய் மகிழ்ந்தார்கள் பாவம்...ஓட்டுக்குள் புகுந்த ஆமையின் தலையாய் அது எட்டிப் பார்த்தபடி...அவ்வப்போது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் விகடகவி! மீண்டும் கண்டதில் சந்தோசம். :)

  • தொடங்கியவர்

வணக்கம் குமாரசாமி எனக்கும்தான்.. மிகவும் சந்தோசம்..

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி ..சித்திரைப் புதுவருட  வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

நன்றி நிலாமதி உங்களுக்கும் என்னினிய வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

நீல வானம் திறந்து கிடக்கிறது நெஞ்சம் அலைவதில்லை கொஞ்சமும் நீ மூடி வைக்கிறாய் முகம்தனை கண்கள் மட்டும் கண்டே தவித்துத்துப்போனேன் என்னை மதம் கொள்ள வைப்பது மதம்தான் அதை மாற்றுமொரு வார்த்தை உன் சம்மதம்தான்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விகடகவி !

 

எவ்வளவு ஏர்கள் மையிட்டு வயல் உழுதாலும்  உங்களின் வயலில் நெல்மணிகள் மட்டும் தனித்துவமானவை...!

 

மீன்டும் காண்பது சந்தோசம்...!! :D :D

  • தொடங்கியவர்

நன்றி சுவி

  • தொடங்கியவர்

மேகமூட்டங்களில் மறைந்து மறைந்து பார்க்கும்....நிலவை .....சாய்நாட்காலியில் ஓய்ந்திருந்து இரசிக்க...கூதலோடு கலந்த வேப்பமரக்காற்றில்..தேகம் சுகப்பட... மெல்லனக்கேட்கும் இனிய தமிழ்ப்பாடல் சுகம் மழை வரக் கலைவது போல்..வாழ்வின் சுகங்கள் யாவும்...சுயத்தை தொலைத்தபோதே மறைந்து போகிறதே மெல்ல மெல்ல..பிறர்க்காக

  • கருத்துக்கள உறவுகள்

 காணாமல்போன கவிஞன் மீள வந்ததில் மகிழ்ச்சியே...மறுபடியும் காணாமல் போகாமல் தொடர்ந்திருங்கள் விகடகவி :)

  • தொடங்கியவர்

நன்றி வல்வை சகாறா...காணாமல் போகவில்லை கல்யாணமாகிப்போனேன்...என் பொண்டாட்டி ஊருக்கு போயட்டா :-)

  • கருத்துக்கள உறவுகள்

காதலி காணாமல் போவாள்... காதல் ... ஆமையாய் நாட்கள் போனாலும் உள்ளே ஊமையாய் ஒளிந்திருக்கும்...

நேரம் தேவையான நேரங்களில் முயலாகவும் .... காத்திருக்கும் நேரங்களில் ஆமையாகவும்... ஆமைதான் இதிலும் வெல்கிறது

எல்லோரும் சேர்ந்து என் காதலை புதைத்துவிட்டதாய் மகிழ்ந்தார்கள் பாவம்...ஓட்டுக்குள் புகுந்த ஆமையின் தலையாய் அது எட்டிப் பார்த்தபடி...அவ்வப்போது

 

விகடகவி வித்தியாசமாவே சிந்திக்கிறீங்கள்.
ஒரு சின்ன வேண்டுகோள் கவிதையை பந்தி பிரித்து போடுங்கள் இன்னும் அழகு சேரும்.வாழ்த்துக்கள்.
  • தொடங்கியவர்

பந்தியாய்தான் போடறேன்..ஒண்ணா வருது...ஒண்ணுமே புரியலை...நன்றி சகோதரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.