Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தை உருவாக்குவோம்: இராமேஸ்வரத்தில் தமிழ்த் திரையுலகம் பிரம்மாண்டமான பேரணி- பொதுகூட்டம்

Featured Replies

  • Replies 50
  • Views 8k
  • Created
  • Last Reply

வீடியோவை பார்ப்பதில் ஏதேனும் சிரமம் இருந்தால் தெரிவிக்கவும்......இதில் விடுபட்ட சிலரின் பேச்சுகளை விரைவில் இணைக்கிறேன்....நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

1400 பேர் தான் கலந்து கொண்டதாக தினமலர் கதை விடுகிறது.... ஒரு வேளை திரைப்படத்துறையினரை மட்டும் சொல்கிறதோ ???!!!

உண்மையில் பேரணியில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம் .......

பொதுக்கூட்டத்திற்கும் கூட்டம் அலைமோதியது!!!

பொறுங்கோ வெறும் பதின்நாலு பேர் கலந்து கொண்டதாக இந்து எழுதும் :) :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள்

உணர்வு கலந்த உங்கள் அன்பிற்கு எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்....

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் சுதேசிகன்

Edited by கந்தப்பு

இணைப்பிற்கும், கலந்து கொண்ட தமிழக கலையுறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

திரையுலகினருக்கு மிக்க நன்றி :)

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வு பூர்மாக கலந்து கொண்டது தமிழ் திரையுலகம். கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல.

  • கருத்துக்கள உறவுகள்

தமது மண்ணுக்காக போராடும் பிரபாகரனை ஏன் தீவிரவாதியாக பார்க்கவேண்டும்;சீமான் கேள்வி!

சீனாவிற்கு மாவோ சேதுங் போன்ற தலைவர் என்றால் ஏன் இலங்கையில் தமிழர்களுக்காக போராடும் இந்தியாவிற்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்குமோ எதிராக போராடாமல் தமது மண்ணுக்கு பிரபாகரனை ஏன் தீவிரவாதியாக பார்க்கவேண்டும் என தமிழக திரைப்பட இயக்குநர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் ராமேஸ்வரம் கடற்கரையில் தென்னிந்திய திரையுலகத்தினர் இன்று கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தனர். இயக்குநர் பாரதிராஜாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திரையுலகத்தினர் பெருமளவில் பங்கேற்றனர். நிகழ்வில் பங்கேற்ற சீமான் இலங்கையின் தமிழர் பகுதியில் 1000 கிலோ நிறையைக்கொண்ட குண்டுகளை ஆறாயிரம் தடவைகளாக இலங்கை அரசாங்கம் போட்டுள்ளது. இந்த குண்டுகள் வீசப்படும் போது சுமார் 5 கிலோ மீற்றர் பகுதியில் ஒட்சிசனின் அளவு குறைந்துபோகிறது. இந்தநிலையில் தமது மண்ணுக்காக கடந்த இருபதாண்டு காலமாக போராடும் பிரபாகரனை இந்தியா ஏன் தீவிரவாதியாக பார்க்கவேண்டும். அவ்வாறெனின் மக்கள் மீது போடுவதற்கான 1000 கிலோ குண்டுகளை இலங்கைக்கு வழங்குகின்றவர்கள் தீவிரவாதிகள் இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இலங்கை இறைமையுள்ள நாடு எனக்கூறப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு எவ்வாறு ஏற்றுக்கொள்வது? இந்தியாவில் எந்த ஒருவர் பொதுமகனும் ஜனாதிபதியாகலாம். புப்ரதமராகலாம். ஆனால் இலங்கையில் ஒரு தமிழர் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ முடியாதபடி அரசியலமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனை வைத்துக்கொண்டு எவ்வாறு இலங்கை இறைமையுள்ள நாடு என எவ்வாறு கூறுவது என சீமான் வினவினார்.

இலங்கை தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்தியாவில் இருந்து எந்த ஒரு முகர்ஜியும் இலங்கைக்கு செல்ல தேவையில்லை என தமிழக நடிகர் மன்சூர் அலிக்கான் இந்தநிகழ்வின் போது தெரிவித்தார். இலங்கையின் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியா இலங்கைக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியை அனுப்பவுள்ளதாக வெளியான தகவலையே மையமாக வைத்தே நடிகர் மன்சூர் அலிக்கான் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.இதில் உரையாற்றிய மன்சூர் அலிக்கான் இலங்கை என்பது இராவணன் எனும் தமிழ் அரசன் ஆண்ட பூமியாகும். எனவே சிங்கள உறவை துண்டித்து தமிழருக்கு ஈழத்தை இந்தியா பெற்றுக்கொடுக்கும் வரை தமிழக திரையுலகம் போராடும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்காக உலக தமிழர்கள் ஒன்று சேரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்இந்தியாவில

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றியுங்கோ....".கோசிப்" மன்றம்சார்பாக

வாழத்துக்களுடன் கூடிய நன்றிகள் எம்மவர்களே ! முயற்சிகள் வெற்றியடைந்து எமக்கான விடியலின் பெரும் நெருப்பாற்று நீச்சலில் கலந்து அடியெடுத்து வைத்தமைக்கு !

ஈழத்தை உருவாக்குவோம்: சீமானின் எழிச்சி உரை

http://seemaan.wordpress.com/2008/10/19/rameshwaram-speech/

உறவுகளுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தை உருவாக்குவோம்: சீமானின் எழிச்சி உரை

http://seemaan.wordpress.com/2008/10/19/rameshwaram-speech/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்கான ஒவ்வொரு போராட்டத்திலும் சீமான் பங்கு கொள்கின்றார். இங்கு நாம் நினைத்துப்பார்க்க வேண்டியது என்னவென்றால் எவ்வளவு தூரம் தன் சொந்த வேலைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு எமக்காக போராடுகின்றார் என்று.

இந்த இடத்தில் எனது நண்பர்களை நினைத்து நான் வெட்கப்படுகின்றேன். வேதனைப் படுகின்றேன். இங்கு கனடாவில் பொங்குதமிழ் நடந்தபோது வேலை காரணமாக பல நணபர்கள் வராமல் விட்டிருந்தார்கள்.

ஒரு 3 மணி நேரம் கூட ஒதுக்கமுடியாத தமிழீழத்திலே பிறந்து வளர்ந்த என் நண்பர்கள் எங்கே? சீமான் எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேலுவின் உருக்கமான உரை இப்படிப்பட்ட இந்திய தமிழனும் எங்களுக்காக

பங்கு கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் நன்றிகள் முக்கியமாக எனது அன்பு நடிகர் வடிவேலுக்கும் நன்றி நான் நினைக்கவில்லை இவரிடம் இப்படி ,,,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேரன் செல்வமணி ஆகியோரின் உரைக்கு

http://blog.sajeek.com/?p=422

சீமானின் உரைக்கு

http://blog.sajeek.com/?p=421

விஜய டி ராஜேந்தரின் உரைக்கு

http://blog.sajeek.com/?p=419

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழின உணர்வோடு ஒன்றுகூடிய திரையுலக கலைஞர்கள் அனைவருக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றி..

இணைப்புகள் சுட்டிகள் தந்தவர்களுக்கும் நன்றி.

அமீர் உரையையும் இணைத்துவிடுங்கள் அன்பான நண்பர்களே. நிச்சயமாகிவிட்டது தமிழீழம் கிடைப்பது. நன்றி அனைவருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இணைக்காத மற்றைய பேச்சாளர்களின் உரையையும் இணையுங்கள்.

இயக்குனர்களில் சீமானை தவிர பலருக்கு இலங்கை பிரச்சனையில் போதிய அறிவின்மையை அண்மையில் காணக்கூடியதாக இருந்தது. எனவே நடிகர்கள் நிலை சொல்லத் தேவையில்லை! புலம்பெயர்ந்த எம்மவர்களில் பலர் நடிகர்களின் தீவிர விசிரிகளாக உள்ளனர். அந்த நாடுகளுக்கு சென்றால் அவர்களின் வீடுகளிலேயே இவர்கள் தங்குவது வழக்கம். எனவே அவர்களுக்கு போதுமான தரவுகளை அனுப்பி உண்ணாவிரதத்தில் அவர்கள் பேசவிருக்கும் விடையங்களை நெறிப்படுத்தப்பட வேண்டும். பிறகு அவர் இப்படிச் சொன்னார் என்று வருத்தப்படுவதில் பயனில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.