Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தம் செய்யவில்லை; அரசாங்கம்தான் யுத்தம் புரிகிறது: " லக்பிம" வுக்கு இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரகேசரி இணையம் 1/25/2009 11:38:59 AM -

"எமக்குப் பிரபாகரனோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ முக்கியமல்ல. எம்மைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியவர்கள் தமிழ் மக்கள். நாம் அவர்களின் நலனுக்காவே குரல் கொடுக்கிறோம்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் ஞாயிறு லங்கா தீப பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் ஓர் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள். தமிழ் மக்களுக்காகவே நாம் செயற்படுகிறோம். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் இங்கும் அரசியல் சுதந்திரம் இருக்க வேண்டும். நாங்கள் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் என யாராவது நினைத்தால் அது தவறானது.

தமிழர் தொடர்பான நலன்களை நாம் பேணுவதன் காரணமாக மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தோம். இந்தத் தொடர்பு கூடத் தமிழ் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டதாகவே இருந்தது. இது தவிர நாம் பயணிப்பது ஜனநாயக வழியிலேயே.

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தம் செய்யவில்லை. அரசாங்கம்தான் யுத்தம் புரிகிறது. யுத்தம் செய்யும் தேவை புலிகளுக்கு இல்லை. தமிழ் மக்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண புலிகள் தயாராகவிருந்தார்கள். ஆனால் அவர்களை யுத்தத்துக்கு வலிந்து அழைத்தது இன்றைய அரசாங்கமே. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

என்ன சம்பந்தர் சுதி மாறுது...

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒரு பத்திரிகையின் யாரோ ஒரு மொழிபெயர்பை மட்டும் வைத்துக் கொண்டு யாரையும் திட்டித் தீர்க்காதீர்கள். ஒரு தனிநபர் விமர்சனம் என்பது ஆதாரமில்லாமல் அமையக்கூடாது,

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒரு பத்திரிகையின் யாரோ ஒரு மொழிபெயர்பை மட்டும் வைத்துக் கொண்டு யாரையும் திட்டித் தீர்க்காதீர்கள். ஒரு தனிநபர் விமர்சனம் என்பது ஆதாரமில்லாமல் அமையக்கூடாது,

அவர்களது தியாகங்களை முதலில் நினையுங்கள்

தயவுசெய்து செய்தியாளர் யார் என்பதையும் பாருங்கள்

இந்தச்செய்தியாளரில் இருக்கும் நம்பிக்கையை

எம் சம்பந்தன் ஐயாமீது வைக்கமுடியவில்லையா உங்களால்.............????

தலையங்கத்தை பார்த்த உடன எனக்கு மயக்கமே வந்துட்டுது....

இன்னும் வேற என்ன மிச்சமிருக்கு?

அவர் எதற்காக அதை சொன்னார் என்பது கவனிக்கப்பட வேண்டும்

வீண் சந்தேகம் வேண்டாம்.அவரது கொள்கையில் மாற்றமில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

மக்கள் பிரதி நிதியாக அவர் முன் இருக்கும் சவால்களை தெளிவாக்கி உள்ளார்.

TNA விடுதலைப்புலிகளின் துணை அமைப்பு அல்ல. ஆனால் புலிகளின் நடவடிக்கையை ஆதரிக்கிறார்கள்.

மக்கள் பிரதி நிதியாக அவர் முன் இருக்கும் சவால்களை தெளிவாக்கி உள்ளார்.

TNA விடுதலைப்புலிகளின் துணை அமைப்பு அல்ல. ஆனால் புலிகளின் நடவடிக்கையை ஆதரிக்கிறார்கள்.

:wub::wub::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரா சம்பந்தன் யாதார்த்தமானவர், சங்கரி ஐயா போல தடம்புரண்டு தாவித்திரபவர் அல்ல. பழம்பெரும் அரசியல்வாதி, தந்தை செல்வாவின் வழி அவர் வழி, தமிழரசுக்கட்சி, தமிழர்விடுதலைக்கூட்டணி, தமிழ்தேசியகூட்டமைப்பு முறையாக தமிழர் நலனுக்காக பாரளுமன்றத்திலும், வெளியிலும் உழைத்தவர். திருகோணமலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி. இலகுவான மாவட்டம் அல்ல, சிங்கள அரசியல்வாதிகள் முதல் சிற்றூழியர் வரை சிங்களவர்களுக்கு மத்தியில் பணியாற்றுவதும் சொல்லித்தெரியவேண்டியதில்லை. பாராளுமன்றத்தில் அதிகாலம் பிரதிநிதித்துவம் செய்துள்ளார். வயதில் யாவரிலும் மூத்தவர்.

விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

தவறான தலையங்களைக் கொடுத்து அவதூறு செய்ய வேண்டாம். வேற்று மொழிப் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டி அவர்கள் தவறான அர்த்தம் தொனிக்கும் வகையில் தலைப்புக் கொடுத்தால் நீங்களுமா? யாழ்கள நிர்வாகம் இதைக் கவனிக்காமல் விட்டு விட்டதா?;

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பிலையே பிரச்சினை இருக்கின்றது.

அவசரப்பட்டு விமர்சனங்களை பதிவுசெய்து சிங்களவனுக்கு உதவாதீர்கள்.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி இணையம் 1/25/2009 11:38:59 AM -

"எமக்குப் பிரபாகரனோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ முக்கியமல்ல. எம்மைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியவர்கள் தமிழ் மக்கள். நாம் அவர்களின் நலனுக்காவே குரல் கொடுக்கிறோம்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் ஞாயிறு லங்கா தீப பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் ஓர் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள். தமிழ் மக்களுக்காகவே நாம் செயற்படுகிறோம். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் இங்கும் அரசியல் சுதந்திரம் இருக்க வேண்டும். நாங்கள் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் என யாராவது நினைத்தால் அது தவறானது.

தமிழர் தொடர்பான நலன்களை நாம் பேணுவதன் காரணமாக மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தோம். இந்தத் தொடர்பு கூடத் தமிழ் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டதாகவே இருந்தது. இது தவிர நாம் பயணிப்பது ஜனநாயக வழியிலேயே.

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தம் செய்யவில்லை. அரசாங்கம்தான் யுத்தம் புரிகிறது. யுத்தம் செய்யும் தேவை புலிகளுக்கு இல்லை. தமிழ் மக்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண புலிகள் தயாராகவிருந்தார்கள். ஆனால் அவர்களை யுத்தத்துக்கு வலிந்து அழைத்தது இன்றைய அரசாங்கமே. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

தமிழர்களிடையே நிதானம் குறைந்துவிட்டதா? அல்லது பொறுமை இழந்துவிட்டார்களா? அவரரவர் தமது சக்திக்குட்பட்ட வகையிலே தமது நகர்வுகளைச் செய்கிறார்கள். ஆனால் எமது சக்திக்கேற்வாறு நிறைவாக ஏதாவது செய்தோமா என்றும், எம்மை நாம் கேட்க வேண்டும். ஒரு விடயத்தை நாம் மறந்துவிடுகிறோம்.

இறுதியாக காஸாவிலே நடைபெற்ற தேர்தலில், கமாஸ் அமைப்பு வெற்றிபெற்ற போதும் உலகு அதனை ஏற்க மறுத்தது. ஆனால் அண்மையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கெதிராகப் போரிட்டு நெருக்கடி என்று வந்தபோது அவர்களுடன் பேசியது. ஆனால் எமது நிலை என்ன? தமிழகத்தால் முடியுமா எமது அரசியல்துறைப் பொறுப்பாளரை அழைத்துப் பாதுகாத்து, தமிழினத்தினது கருத்தை உலகுக்குச் சொல்ல ஒருகளவமைவை ஏற்படுத்த. சிந்திப்போம். வளங்களை வழங்கிப் பலப்படுத்தவோம். வார்த்தைகளுக்கப்பால் செயல்களால் செழுமையடைவோம்.

" அரசியல் என்பதோ இரத்தம் சிந்தாப் போர். போர் என்பதோ இரத்தம் சிந்தும் அரசியல் " மாவோ சேதுங் -

Edited by nochchi

திட்டமிட்ட ரீதியில் இலங்கை ஊடகத்துறையினரால் திரிபு செய்ய பட்ட செய்திகள் பிரசுரிக்க பட்டு வருகிண்றன... தமிழ் மக்களின் பரந்த அளவிலான போராட்டங்களை செய்து வரும் வேளையில், சோர்வடையும் வண்ணமான செய்திகளை பிரசுரித்தோ இல்லை வதந்தியாக்கி மக்களின் செயாற்பாடுகளில் இருந்து சோர்ந்து அகல வேண்டும் எண்று நினைத்து இது திட்ட மிட்ட ரீதியில் பரப்ப படுகிறது.... நாளாந்தம் இப்படி பல செய்திகள்...

ஊடக சுதந்திரம் ஒடுக்க பட்ட நாட்டி உண்மை அற்ற செய்திகளை தவிர வேறை எதையும் எதிர்பார்க்க முடியாதுதானே...

இப்படியான திரிபு பட்ட செய்திகளின் உண்மைதன்மையை உணர எல்லாரும் பொறுமை காக்க வேண்டும்... தேடி பிடித்து தெளிவு பெற வேண்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒரு பத்திரிகையின் யாரோ ஒரு மொழிபெயர்பை மட்டும் வைத்துக் கொண்டு யாரையும் திட்டித் தீர்க்காதீர்கள். ஒரு தனிநபர் விமர்சனம் என்பது ஆதாரமில்லாமல் அமையக்கூடாது,

இதை யார் கேட்க போகிறார்கள் தூயவன். ஏதொ தங்களால் முடிந்ததை வந்து எழுதிவிட்டு போகிறார்களே தவிர. என்ன எழுதி இருக்கிறார்கள் என்று கூட நின்று வாசிக்கிறார்கள் இல்லையே?

தமிழ்வின் பார்த்த போது வேறதலைப்போடு இருந்திச்சு யாழுக்கு வரும் போது தலைப்பு மாறிவிட்டது.

தமிழ்வின் பார்த்த போது வேறதலைப்போடு இருந்திச்சு யாழுக்கு வரும் போது தலைப்பு மாறிவிட்டது.

:wub: அப்ப யாழில செய்திகளை சிலர் திட்டமிட்டே பிரசுரிகிறார்கள். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சொன்ன கருத்துக்களில் எனக்கு உடன்பாடற்றவை இவை.

1. சிறீலங்கா ஜனநாயகத்தை கொண்ட நாடு என்று சொன்னது ஏற்புடைய ஒன்றல்ல. அதுவும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிறீலங்கா சுதந்திரம் அடைந்தது முதல் சிறீலங்கா சிங்களா பேரினவாத அரசுகள் முற்று முழுதாக ஜனநாயக வழியில் தமிழர்களை அணுகவில்லை..!

2. தலைவரையும் விடுதலைப்புலிகளையும் சம்பந்தப்படுத்தி கருத்துச் சொல்லாமலே.. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கொள்கையை சிங்கள மக்களுக்கு விளக்க முடியும்.

3. பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருத்தல் என்று கூறுதல்.. விடுதலைப்புலிகளை அரசு சொல்வது போன்று பயங்கரவாத இயக்கமாக ஏற்றுக் கொள்வதாகவே காட்டப்படும் என்பதால் அவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களை தவிர்த்திருக்கலாம்.

4. தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்டது.. சிறீலங்காவின் சன நாய் அக நீரோட்டத்தில் நீச்சலடிக்க அல்ல. மாறாக சிறீலங்காவிற்கும்.. சர்வதேசத்திற்கும் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை தெளிவுறுத்தவே ஆகும்..!

மற்றும்படி.. ஐயாவின் முக்கிய நிலைப்படான.. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதுடன்.. தமது செயற்பாடுகள் விடுதலைப்புலிகள் சார்ப்பானவை அன்று என்று சொல்லிக் கொள்வதில் தவறில்லை. ஏனெனில்.. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு என்று தனியான கொள்கைகளும்.. யாப்புக்களும் உள்ளன. அவை விடுதலைப்புலிகளினதை ஒத்தவையல்ல..!

அதுமட்டுமன்றி சிறீலங்கா அரசின்.. இந்திய அரசின்.. அமெரிக்க சி ஐ ஏயின் பணத்துக்கான.. கைக்கூலிகளாக... உள்ளவர்கள் தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு.. மாகாண சபைகளிலும்.. உள்ளூராட்சி சபைகளிலும்.. நாடாளுமன்றிலும்.. கள்ள வாக்குகளைப் போட்டிட்டு குந்திக் கொண்டிருப்பது போன்ற நிலையல்ல.. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலை. எனவே அவர்கள் தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெளிவாக இனங்காட்டிக் கொள்வது.. கைக்கூலிகளிடம்.. தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும் கையளிக்கப்பட்டு.. ஒடுக்குமுறைக்கு உள்ளாவதில் இருந்து பாதுகாப்பைப் பெற உதவும்.

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை... அவர்கள் சிறீலங்காவின் பேரினவாத அரசியல் கட்டமைப்பை ஏற்றுக் கொண்டவர்களும் அல்ல. அதை ஜனநாயகம் என்று போற்றக் கூடிய முட்டாள்களும் அல்ல..! அதற்குள் தமிழ் மக்களை அடகு வைக்கக் கூடியவர்களும் அல்ல..! அவர்கள் சுதந்திர தமிழர் தேசத்துக்கான விடுதலைப் போராளிகள். அவர்கள் அவர்களின் கொள்கையில் இருந்து தவறியவர்கள் அன்று. அவர்களைப் பயங்கரவாதிகளாக உச்சரிக்க உலகில் எவருக்கும் அதிகாரமோ.. நேர்மையோ இல்லை.

அமெரிக்கா செய்கின்ற பயங்கரவாதச் செயலை விட.. சிறீலங்கா இழைக்கின்ற பயங்கரவாதச் செயலை விட.. இந்தியா செய்கின்ற பயங்கரவாதச் செயலை விட புலிகள் ஒன்றும்.. பெரிதாகச் செய்துவிடவில்லை. வன்முறை வழிமுறையை.. கையாளும் அரசுகளுக்கு எதிராக வன்முறை ரீதியாக பதிலளிப்பது.. ஒன்றும் பயங்கரவாதம் ஆகாது. அதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். உலகம் பயங்கரவாதம் என்று சொல்கிறது என்பதற்காக நாம் சொல்ல முடியாது.

ஏனெனில் அன்று சமாதான வழியில் நடந்த தமிழர்கள் மீது.. யாழ்ப்பாண தமிழாராட்சி மகாநாட்டில்.. படைப்பலத்தை ஏவி.. தமிழர்களை சுட்டுக் கொன்றதும்.. முறைக்கு முறை தமிழர்கள் மீது இனக்கலவரங்களை கட்டவிழ்த்து.. வன்முறைகளால் தமிழர்களை அடக்க நினைத்ததும்... இதே சிங்களப் பேரினவாத அரசுகள் தான். அவை அவற்றில் இருந்து இன்று வரை தமது பேரினவாதக் கொள்கைகளில் இருந்து விலகிக் கொண்டதே இல்லை. எனும் போது.. புலிகள் மட்டும் எப்படி.. பயங்கரவாதிகள் ஆவார்கள்..??!

பலஸ்தீனர்கள்.. கமாஸை.. விடுதலை இயக்கமாகவே எப்போதும் பார்க்கின்றனர். கருத்துரைக்கின்றனர். உலகம் அதை பயங்கரவாதிகள் என்று கூறினும். அதேபோன்றுதான் ஈராக் குர்திஸ் மக்கள் இயக்கமும்..! நாம் எமது அரசியலில் தெளிவாக இருப்பின்.. இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்கள் கள நிலைமைக்கு ஏற்பக் கூட மாறாது..! :wub:

சிறீலங்காவில் பிரஜையாக இருந்தும்.. அதன் ஜனநாயகக் கட்டமைப்பை நான் எப்போதும் அங்கீகரித்து.. தேர்தல்களில் வாக்களித்ததில்லை. அப்படி இருக்கும் போது.. அதை எவ்வாறு மக்கள் ஜன நாயகம் உள்ள நாடாகக் கருதுவதாக சம்பந்தன் ஐயா சொல்லிக் கொள்ளலாம்..! :wub:

என்னைப் பொறுத்தவரை இன்று உலகில் ஆயுத முனையில்.. இராணுவ தொழில்நுட்ப படைப்பல ரீதியில்.. அமெரிக்காவால் சன நாய் அகம் என்பது மக்களிடம் திணிக்கப்படும் ஒரு விடயமாகவே மாறி விட்டிருக்கிறது. இது அல்ல உண்மையில் லிங்கன் பரிந்துரைத்த ஜனநாயகம். அது எப்பவோ செத்து சுடலையில் சாம்பலாகிவிட்டது. இன்றிருப்பது.. அமெரிக்க ஆயுத சன நாய் அகமே..! அதை மக்கள் ஏற்க வேண்டிய அவசியமில்லை. அதன் அம்சங்களை நாம் மதிக்க வேண்டிய தேவையும் இல்லை..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ்!

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

:wub: அப்ப யாழில செய்திகளை சிலர் திட்டமிட்டே பிரசுரிகிறார்கள். :wub:

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=10622

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தம் செய்யவில்லை; அரசாங்கம்தான் யுத்தம் புரிகிறது: " லக்பிம" வுக்கு இரா.சம்பந்தன்

[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2009, 07:53.20 AM GMT +05:30 ]

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தம் செய்யவில்லை. அரசாங்கம்தான் யுத்தம் புரிகிறது. யுத்தம் செய்யும் தேவை புலிகளுக்கு இல்லை. தமிழ் மக்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண புலிகள் தயாராகவிருந்தார்கள். ஆனால் அவர்களை யுத்தத்துக்கு வலிந்து அழைத்தது இன்றைய அரசாங்கமே. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் ஞாயிறு லங்கா தீப பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் ஓர் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள். தமிழ் மக்களுக்காகவே நாம் செயற்படுகிறோம். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் இங்கும் அரசியல் சுதந்திரம் இருக்க வேண்டும். நாங்கள் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் என யாராவது நினைத்தால் அது தவறானது.

எமக்குப் பிரபாகரனோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ முக்கியமல்ல. எம்மைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியவர்கள் தமிழ் மக்கள். நாம் அவர்களின் நலனுக்காவே குரல் கொடுக்கிறோம்" தமிழர் தொடர்பான நலன்களை நாம் பேணுவதன் காரணமாக மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தோம். இந்தத் தொடர்பு கூடத் தமிழ் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டதாகவே இருந்தது. இது தவிர நாம் பயணிப்பது ஜனநாயக வழியிலேயே.

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தம் செய்யவில்லை. அரசாங்கம்தான் யுத்தம் புரிகிறது. யுத்தம் செய்யும் தேவை புலிகளுக்கு இல்லை. தமிழ் மக்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண புலிகள் தயாராகவிருந்தார்கள். ஆனால் அவர்களை யுத்தத்துக்கு வலிந்து அழைத்தது இன்றைய அரசாங்கமே. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

http://tamilwin.com/view.php?2aIWnJe0dlj0A...d436QV3b02ZLu3e

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதுள்ள சூழ்நிலையில் மக்களின் அவலங்களை முதலில் வெளிக்கொணரவேண்டும் என்பதுதான் முக்கியம் அதைத்தான் நம் அண்ணைமாரும்சொல்லுகினம்.

இலங்கையில் எம் இயக்கம் தடைசெய்யப்பட்ட பிறகு வி.புலிகள் என்று எப்ப இவர் வாய் திறப்பார் கொண்டு போய் சிறையில் போடலாம் என்று காத்திருப்பவர்களுக்கு நாமே வாய்ப்பை வழங்க வேண்டுமா?!!

மக்களே புலிகள் என்று நினைத்துக்கொள்ளுங்கள் அதன் பிறகு பிரச்சனையோ பிரிவினையோ வராது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.