Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜதந்திரம்

Featured Replies

பேய்கள் கூட்டத்தில்

இரண்டு பெரிய பேய்கள்

சுடுகாட்டை ஆழ்வதற்கு

அதில் ஒரு பேயை தெரிவு செய்ய வேண்டும்

ஒரு பேய்க்கு நல்லூர் கந்தன் துணை

மற்றப் பேய்க்கு கதிர்காமக் கந்தன் துணை

இரண்டு பேய்களின் வாய்களிலும்

குருதியும் சதையும் பிரண்டுபோயுள்ளது

இன்னும் வாயை கழுவக்கூட இல்லை

சும்மா சொல்லக் கூடாது

எங்கள் சனத்தை இரண்டுபேரும்

நல்லாத் தின்றவங்கள்

ஏவறை விட்டபடி

வலம்வரும் பேய்களில்

எமக்குப் பிடித்த பேய் எது?

பேய்களில் என்னய்யா பிடிப்பும் வெறுப்பும்?

இல்லை

தமக்குப் பிடித்த பேய்களை சுட்டிக்காட்டுவது

அவரவர் ஜனநாயக உரிமை தானே?

நிச்சயமாக

எங்கள் விருப்பப் படிதான் எங்களை தின்னவேண்டும்

இந்த உரிமையை யாருக்காகவேனும் விட்டுக்கொடுக்க முடியாது.

நாம் விபரமானவர்கள்.

ராஜதந்திர நகர்வுகள் ஆரம்பமாகிவிட்டது

ஒரு பேய்க்கு

முள்ளிவாய்க்காலில் பொறுக்கிய எலும்புகளால்

மாலைகள் கட்டினால் பிடிக்கும்

மற்ப்பேய்க்கு செம்மணியில் பொறுக்கிய எலும்புகளால்

மாலைகட்டினால் பிடிக்கும்

இவ்வாறு பல்வேறு விதமான மாலைகள் கட்டுவதினூடாக

பேய்களை எமது வளிக்கு கொண்டுவரும் ராஜதந்திரம்

ஆனாலும் என்ன

காக்காவைப் போல் பிணம் தின்பதில் பேய்கள்

ஒற்றுமையாகவே இருக்கின்றது.

பேய்களில் என்னய்யா பிடிப்பும் வெறுப்பும்?

இல்லை

தமக்குப் பிடித்த பேய்களை சுட்டிக்காட்டுவது

அவரவர் ஜனநாயக உரிமை தானே?

நிச்சயமாக

எங்கள் விருப்பப் படிதான் எங்களை தின்னவேண்டும்

இந்த உரிமையை யாருக்காகவேனும் விட்டுக்கொடுக்க முடியாது.

நாம் விபரமானவர்கள்.

பேய்க்கு வாக்களிக்காமல் விடுவது பெரும் வரலாற்றுத் தவறு என்றும், பேய்களிற்கு முன்னம் வாக்களிக்காமையால் தான் இன்று இப்படி ஒரு நிலைமை என்றும், அப்படி வாக்களித்தால் நாளை என்னவாகும் என்று கேள்வி கேட்டால் பேய் முழி முழிக்கும் பேயர்கள் அதிகம் கொண்ட எம் இனத்தினை சரியாகத்தான் கவிதையில் காட்டியுள்ளீர்கள் சுகன்

நல்ல பேய்க்கவிதை.

காக்காவைப் போல் ஒற்றுமையாக இருக்கும் பேய்களை கொழுவி விடுவதே ராஜதந்திரம். அதைவிட்டு பேய்க்கும் அடிப்பம் பிசாசுக்கும் அடிப்பம் பூதத்திற்கும் அடிப்பம் முனிக்கும் அடிப்பம் ஏனேனில் நாங்கள் பேயாதிபேயர்கள்.

இந்த நினைப்புத்தான் பிழைப்பை கெடுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பேய்க்கவிதை.

காக்காவைப் போல் ஒற்றுமையாக இருக்கும் பேய்களை கொழுவி விடுவதே ராஜதந்திரம். அதைவிட்டு பேய்க்கும் அடிப்பம் பிசாசுக்கும் அடிப்பம் பூதத்திற்கும் அடிப்பம் முனிக்கும் அடிப்பம் ஏனேனில் நாங்கள் பேயாதிபேயர்கள்.

இந்த நினைப்புத்தான் பிழைப்பை கெடுத்தது.

உங்கள் கற்பனை கவிதையையும் மிஞ்சி விட்டது.. பேய் ஒன்றும் பேயால் தின்னப் பட்ட ஜீவராசிகளுமே இன்று ஒட்டி உறவாட முடியுமானால் ஒரே ருசி கொண்ட பேய்கள் இரண்டு ஒன்று சேர்ந்து வேட்டையைத் தொடர்வதற்கான நிகழ்தகவு எப்படி இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

பேய்களில் என்னய்யா பிடிப்பும் வெறுப்பும்?

இல்லை

தமக்குப் பிடித்த பேய்களை சுட்டிக்காட்டுவது

அவரவர் ஜனநாயக உரிமை தானே?

நிச்சயமாக

எங்கள் விருப்பப் படிதான் எங்களை தின்னவேண்டும்

இந்த உரிமையை யாருக்காகவேனும் விட்டுக்கொடுக்க முடியாது.

நாம் விபரமானவர்கள்.

பேயோட்டிகளுக்குப்பின் ஒற்றுமையாக அணிதிரளாமல், பேயர்களாக பேக்குகளாக இன்னமும் 'பே' என விழித்தபடி, எந்தப் பேய் நல்ல பேய் என அமுங்கியிருந்தால் பேயென்ன, அண்டை சொ* நா* ஈழத்தை சுடுகாடாக்கிவிடும்.கவனம்.

எமது தெரிந்த ஆகப் பெரிய இறந்துபோன கிழட்டுப்பேயுடன் இருந்துதானும் நாம் ராஜதந்திரம் கற்றுக்கொள்ளாதது பெரிய துரதிஸ்டமே.

இந்த கிழட்டுப் பேய் இந்திராகாந்தி பார்த்தசாரதியை பேச்சு வார்த்தைக்கு அனுப்ப பார்த்தசாரதியையே அங்கும் இங்கும் அலைக்கழித்தது.பின் ராஜிவ் பதவிக்கு வந்து ஜீ.பீ இயை திரும்பவும் அனுப்ப இவர் தமிழர் வேண்டாம் என்று முரண்டு பிடிக்க இந்தியா பண்டாரியை அனுப்ப பண்டாரியை அப்படியே கையுக்க போட்டுக்கொண்டது.பின்னர் இந்து ராமைக் கூப்பிட்டு எனக்குஇருக்கும் அரசியல் அனுபவத்தை விட ரஜீவிற்கு வயசே குறைவு என்று ஒரு அடி.

பின்னர் ஒப்பந்தம் வேண்டா விருப்பதுடன் சைன் பண்ணி பின்னர் துவக்குப்பிடியால் ஒரு அடி.

பின்னர் புலிகளையும் இந்திய ஆமியையும் கொழுவவிட்டு சிரித்துக் கொண்டு கூத்துப் பார்த்தது.அதனால் பின் ரஜீவும் சரி,தலைவரும் சரி அந்தப் பொறியில் இருந்து மீளமுடியவில்லை.

(அந்த நேரம் உண்மையாக நடந்த நிகழ்வுகள் பற்றி ஒரு கட்டுரையே எழுதலாம்)

  • கருத்துக்கள உறவுகள்

(அந்த நேரம் உண்மையாக நடந்த நிகழ்வுகள் பற்றி ஒரு கட்டுரையே எழுதலாம்)

எழுதுங்களேன்...ஆனால், சிங்கள காரோட்டி கதிர்காமர் சாவுக்காக உங்களுக்கு இரண்டு வெளுவை வெளுக்கவில்லை என்பதனால் சிங்களவருக்கு இனவாதம் இல்லை என்று சொன்ன அரசியல் தத்துபித்து தனம் அதில் இருக்காட்டிச் சரி....

இன்னும் சரத் வந்தால் இந்தியா பயப்படும் என்றோ, சரத் வந்தால் அப்படியே மகிந்தவை தூக்கி யுத்தக் குற்ற விசாரணைக்காக கொடுப்பாரொன்றோ கனவு காணும் உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை எந்தப் பேயும் எம்மை எவ்வளவு கொன்று விட்டும் எம்மிடமே வேதம் ஓத வரும்

சிந்திக்க வைக்கும் கவிதை.

சுகன், எல்லாரும் கவிதை எழுதுறம். சிலவற்றை மட்டுமே இது கவிதை என்று உணரக்கூடியதாய் இருக்கும். உங்கள் இந்தக்கவிதை இது கவிதை என்று வாய்திறந்து சொல்லவைக்கிறது. கவிதையில் சொல்லப்படுகின்ற விடயங்களிற்கு அப்பால்.. கவிதை என்றளவில் பார்க்கும்போது.. அருமையாக வடித்து இருக்கிறீங்கள், பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பேய்கள் திரிவதும் உண்மைதான்

அவை இரத்தம் தேடுவதும் நிஐம்தான்

அந்த ரத்தப்பாண்டம் நாமென்பதும் சரிதான்

உதைக்கிறது

எங்கோ படித்தது

முயலின் ராஐதந்திரம்

முற்றிலும் அழிவோமா

முயற்சித்து மிகுதியை என்றாலும்........

ரண்டத்தா ஒரு பேய்தான் வரப்போது.. வாற பேய் எல்லாம் தமிழனோடைதான் தங்கட வீராப்புகள காட்டும்.. சரி.. புதுப் பேயை கொண்டந்து என்னமாரி வீராப்புக் காட்டுதெண்டுதான் பாப்பமே.. !!

  • கருத்துக்கள உறவுகள்

பேய்கள் கூட்டத்தில்

இரண்டு பெரிய பேய்கள்

சுடுகாட்டை ஆழ்வதற்கு

அதில் ஒரு பேயை தெரிவு செய்ய வேண்டும்

ஒரு பேய்க்கு நல்லூர் கந்தன் துணை

மற்றப் பேய்க்கு கதிர்காமக் கந்தன் துணை

இரண்டு பேய்களின் வாய்களிலும்

குருதியும் சதையும் பிரண்டுபோயுள்ளது

இன்னும் வாயை கழுவக்கூட இல்லை

சும்மா சொல்லக் கூடாது

எங்கள் சனத்தை இரண்டுபேரும்

நல்லாத் தின்றவங்கள்

ஏவறை விட்டபடி

வலம்வரும் பேய்களில்

எமக்குப் பிடித்த பேய் எது?

பேய்களில் என்னய்யா பிடிப்பும் வெறுப்பும்?

இல்லை

தமக்குப் பிடித்த பேய்களை சுட்டிக்காட்டுவது

அவரவர் ஜனநாயக உரிமை தானே?

நிச்சயமாக

எங்கள் விருப்பப் படிதான் எங்களை தின்னவேண்டும்

இந்த உரிமையை யாருக்காகவேனும் விட்டுக்கொடுக்க முடியாது.

நாம் விபரமானவர்கள்.

ராஜதந்திர நகர்வுகள் ஆரம்பமாகிவிட்டது

ஒரு பேய்க்கு

முள்ளிவாய்க்காலில் பொறுக்கிய எலும்புகளால்

மாலைகள் கட்டினால் பிடிக்கும்

மற்ப்பேய்க்கு செம்மணியில் பொறுக்கிய எலும்புகளால்

மாலைகட்டினால் பிடிக்கும்

இவ்வாறு பல்வேறு விதமான மாலைகள் கட்டுவதினூடாக

பேய்களை எமது வளிக்கு கொண்டுவரும் ராஜதந்திரம்

ஆனாலும் என்ன

காக்காவைப் போல் பிணம் தின்பதில் பேய்கள்

ஒற்றுமையாகவே இருக்கின்றது.

சரியாகச் சொன்னீர்கள் சுகன். பேய்களின் இயல்பில் இருந்து எந்தப் பேயும் வெளிவருவதாக இல்லை. என்னதான் ராசதந்திரத்தை கையாண்டாலும் வெற்றி என்னவோ பேய்களின் இனத்திற்குத்தான் அதுவரைக்கும் பலிக்கடாக்களையும் பந்தியில் இருத்தி பாயசத்தை பேய்களே ஊற்றும். இனிவரும் காலத்தில் எந்தக் கத்தி தன்னை வெட்டவேண்டும் என்று பலியாடுகள் தீர்மானிக்க சனநாயக வழியில் ஒரு சந்தர்ப்பமாம். நிறைய எழுதத் தோன்றுகிறது வேண்டாம் மெளனத்தை கடைப்பிடிக்கும்படி மூளை எச்சரிக்கிறது. பாராட்டு, வாழ்த்து என்று எழுதுவதற்கு முன்னால் எதிர்கால இருள் மனதிற்குள் குமைகிறது. வெளிப்படையான கவிதை சுகன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.