Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் கோபத்திலிருந்து தப்ப,கூட்டமைப்பு என்ன செய்யலாம்?

கூட்டமைப்பை காப்பாற்ற என்ன வழி? 25 members have voted

  1. 1. கூட்டமைப்பை காப்பாற்ற என்ன வழி?

    • மகிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியை நாடுவது.
    • சிவாஜிலிங்கத்தை மீண்டும் கட்சியில்(ரெலொ) இணைப்பது.
    • நேரடியாகவே மகிந்தவின் காலில் விழுவது.
    • இந்தியாவின் துணையை நாடுவது.
    • சம்பந்தர் ஐயா ஓய்வு பெறுவது.
    • ஒட்டுக் குழுக்களின் உதவியை நாடுவது.
    • ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.
    • மேற் குறிப்பிட்ட எதுவும் இல்லை.

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

ஜனாதிபதி தேர்தலில் சரத்துக்கு ஆதரவு கொடுத்ததன் மூலம், தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயம் மகிந்தவின் கோபத்துக்கு ஆளாகி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் மகிந்த, கோத்தபாயவின் கோபத்திலிருந்து தப்ப.... கூட்டமைப்பு இனி என்ன செய்யலாம்?

ஒருவர் மூன்று வாக்குகள் போடலாம்.

1) மகிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், ஸ்ரீகாந்தா மூலம் தூது விட்டு பார்ப்பது.

2) சிவாஜிலிங்கத்தை மீண்டும் கூட்டமைப்பில்(ரெலொ) இணைத்து..... அவரின் துணையை நாடுவது.

3) நேரடியாகவே மகிந்தவின் காலில் விழுவது.

4) இந்தியாவின் ஆலோசனைப்படி நடப்பது.

5) சம்பந்தர் ஐயா ஓய்வு பெற்று, புதிய இளைய தலைமை மூலம் அடுத்த கட்டத்தை தொடர்ந்து செல்வது.

6) ஒட்டுக் குழுக்களின் உதவியை நாடுவது.

இதனை விட கூட்டமைப்பை காப்பாற்ற வேறு வழிகள் தெரிந்தால் , உங்களின் கருத்தை கூறவும்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தற்கொலை செய்து கொண்ட ததேகூட்டமைப்பைக் காப்பாற்ற முடியாது. எனது தெரிவு மேலே தரப்படவில்லை.உறுதியும் விவேகமும் கொண்ட இந்தியாவின் சொல்லுக்கு ஆடாத இளைஞர்களைக் கொண்ட புதிய அரசியல் கட்சி உதயமாவதே நல்லது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சரத்திற்கு ஆதரவு தெரிவித்தமை. தமிழர் அளிக்கும் வாக்குகளால் சிங்களவன் சரத்தை வெற்றியடையச் செய்யவேண்டும் என்ற கூட்டமைப்பினர் சிலர் போட்ட கோசம், சிங்களவரை மகிந்தனுக்கு வாக்களிக்கத் தூண்டியது.

இந்தியாவின் பின்கதவு அரசியல், (இராசதந்திரம்) தொடர்கின்றது. எல்லோருக்கும் உச்சந்தலையில் ஆப்பு அடிப்பதற்கு மகிந்தன் குழுமம் மீண்டும் தயராகிவிட்டது.

இப்ப கடவுள் இருந்தா நல்லா இருக்கும்... இல்லை எண்டா முள்ளி வாய்க்கால் நிலைதான்...

ஒருவகையிலை மகிந்த வெல்வதுக்கு சிங்கள மக்களுக்கான தூண்டு கோலாக தாங்கள் இருந்ததாக சொல்லி மகிந்தவுக்கு தூது விடலாம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பு இன்றி தமிழருக்கு மீட்பு இல்லை என்பது யதார்த்தம்

மானம் கெட்டு போய் மகிந்தாவை நக்க வேண்டிய தேள்வை இல்லை, மகிந்தாவை நக்கினாலும் அவன் அவர்களுக்கு எழும்புதுண்டுதான் போடுவானே ஒழிய, ஒரு பருக்கை தன்னும் தமிழனுக்கு தரப்போவதில்லை, இந்த கொடுமை எட்டு வருடத்துக்கு இன்னமும் தொடரப்போகிறது.

பாரளு மண்றத்தில் தனித்து போட்டி யிட்டு வெண்றாலும் அதை வைத்து இப்போது மாதிரி ஊளயிடத்தான் முடியும் ஒரு பிரயோசனமும் இல்லை , இதற்க்காகத்தானே இங்கே இருக்கும் பலர் மகிந்தா வரவேண்டும் என்று ஆசை பட்டார்கள், அத்தோடு சர்வதேசம் வந்து வாய்ப்பன் தீத்தும் என்று வாய்பார்த்து கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்க வேண்டியதுதான்.

இவ்வளவு ஆயுத பலம் ஆட்பலம் இருந்தும் டக்கி,கருணா,பிள்ளையான் போறவரால் வடகிழக்கில் மகிந்தனை வெல்ல வைக்க முடியாமல் போய்விட்டது என்று மகிந்தனுக்கு இவர்கள் மீது இருக்கும் கோபத்தில் இருந்து தப்ப இந்த ஒட்டுண்ணிகள் என்ன செய்யலாம் எண்டதையும் ஆராய்ந்தால் இதுகளுக்கு உதவியாக இருக்கும் :lol::lol::lol:

Edited by சித்தன்

மகிந்தவின் வெற்றிக்குமுக்கிய காரணம் த தே கூ தான்.

அதனால் தான் சிங்களமக்கள் மஹிந்தவுக்கு வாக்களித்துள்ளனர்.

ஆகவே மஹிந்த பொது மன்னிப்பு வழங்குவார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி அண்ணா MCQ பதில் தான் சொல்லுவேன்.

மஹிந்த காலில் விழுவது தான் நல்லம்...அரசியல்லை இதெல்லாம் சகஜம்.

.

ஜனாதிபதி தேர்தலில் சரத்துக்கு ஆதரவு கொடுத்ததன் மூலம், தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயம் மகிந்தவின் கோபத்துக்கு ஆளாகி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை..

மகிந்தவின் கோபத்துக்கு ஆளாக மாட்டார்கள் ... கூட்டமைப்பு காப்பாற்றப் படும் ... !!

∵ ஏற்கனவே சத்தியம் செய்துள்ளார்கள் ...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை இந்தியாவிற்கு தெளிவுபடுத்தும் முகமாக, இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்திய அதிகாரிகளுடன் பேச்சவார்தைகளை நடத்தியுள்ளது.

இந்த சந்திப்புகளின் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு மேற்கொண்ட தீர்மான் குறித்து இந்திய அரசாங்க தரப்பிற்கு தெளிவு படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர்களின் விருப்பங்களுக்கு அமைவாகவே தாங்கள் ஆட்சி மாற்றத்திற்காக கரத் பொன்சேகாவை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாகவும் கூட்டமைப்பினர் சார்பில் இந்திய அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவா கூறினார்.

...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா பல்வேறுபட்ட உத்தரவுகள்

- தேர்தல் பரப்புரைகளின் போது இந்தியாவிற்கோ தமிழக அரசிற்கோ நெருக்கடி ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை கூட்டமைப்பு வெளியிடக் கூடாது என்றம்

- நடைபெற்று முடிந்த யுத்தத்தின் பின்னணியில் இந்தியா இருந்துள்ளமை குறித்தோ தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை இந்தியா பெற்று தர தவறியுள்ளதாகவோ கூட்டமைப்பினர் பரப்புரைக்கக் கூடாது என்றும்

-
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் அவருடன் இணைந்து தாங்கள் முன்வைக்கும் தீர்விற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டும் என்றும்

இந்தியா வலியுறுத்தியதாகவும் ...

இவர் சொல்வது உண்மையானால் (சுனாமி: 16 January 2010 - 11:27 PM) ... இங்கே பர்கவும்

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

சரத் தமிழ் மக்களிடம் வாக்குப்பெற்று தேர்தலில் தனது பெரும்பான்மையை அதிகரிக்கலாம் என்று நினைத்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார். இதனால் அதே எண்ணிக்கையிலும் அதிகமான வாக்குகளை சிங்கள மக்களிடையே இழந்தார்.

தமிழருக்கு உறுதிமொழிகளை, பேச்சளவில்கூட அள்ளி வீசிய எந்த சிங்கள அரசியல்வாதியையும் சிங்களமக்கள் அன்றுதொட்டு

இன்றுவரை நிராகரித்தே வந்துள்ளனர். இதன் உள்ளார்ந்தம் தெரிந்துதான் மகிந்த தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதுவித தேர்தல் சமரசங்களையும் செய்துகொள்ள முன்வரவில்லை என்பது கண்கூடு. எனவே பொன்னர்-சம்பந்தர் கூட்டு மகிந்தவிற்கு மிகப்பெரிய

தேர்தல் முதலீடாக அமைந்தது.

.

ஜனாதிபதி தேர்தலில் சரத்துக்கு ஆதரவு கொடுத்ததன் மூலம், தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயம் மகிந்தவின் கோபத்துக்கு ஆளாகி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் மகிந்த, கோத்தபாயவின் கோபத்திலிருந்து தப்ப.... கூட்டமைப்பு இனி என்ன செய்யலாம்?

ஒருவர் மூன்று வாக்குகள் போடலாம்.

1) மகிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், ஸ்ரீகாந்தா மூலம் தூது விட்டு பார்ப்பது.

2) சிவாஜிலிங்கத்தை மீண்டும் கூட்டமைப்பில்(ரெலொ) இணைத்து..... அவரின் துணையை நாடுவது.

3) நேரடியாகவே மகிந்தவின் காலில் விழுவது.

4) இந்தியாவின் ஆலோசனைப்படி நடப்பது.

5) சம்பந்தர் ஐயா ஓய்வு பெற்று, புதிய இளைய தலைமை மூலம் அடுத்த கட்டத்தை தொடர்ந்து செல்வது.

6) ஒட்டுக் குழுக்களின் உதவியை நாடுவது.

இதனை விட கூட்டமைப்பை காப்பாற்ற வேறு வழிகள் தெரிந்தால் , உங்களின் கருத்தை கூறவும்.

.

இந்தியாவை பகிரங்கமாக எதிர்கும் முடிவு எடுக்க வேண்டும்.அத்துடன் புலம் பெயர் சமூகத்துடன் இருக்கமான உறவுகளை பேணி மேற்குலகின் ஆதரவோடுதான் இனிமேல் காய்களை நகர்த்த முடியும்.மகிந்த இனி நேரடியாகவே மேற்குலகுடன் மோதப் போறான்.பொன் சேகாவும் வெளிநாடு ஒன்றில் தஞ்சமடையப்போவதாக கேள்வி. இல்லையேல் இந்தியா மகிந்தவுக்கு குண்டி கழுவுவதைப் போல கூட்டமைப்பும் கழுவ வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எதுவுமே இல்லை

அடுத்த தேர்தலில் மீண்டும் உற்சாகத்தோடு தமிழர்களுடன் இணைந்து போட்டியிட்டு...

தமிழர்களுடைய அபிலாசைகளை உலகத்துக்கு எடுத்துக்காட்டும்படியாக வென்று காட்டவேண்டும்

இதையே தமிழ்மக்கள் வரவேற்பர்

வரவேற்றுள்ளனர்

தமிழர்தேசியக் கூட்டமைப்பு செய்ய வேண்டியது அதில உள்ள சிலரை வெளியில் விட்டு புதிதாக தெளிவான சிலரை அடுத்த தேர்தலுக்கு கொண்டுவருவது அவசியம்.

இங்கிருந்து நாங்கள் செய்ய வேண்டிய அலுவல்கள் பல இருக்கு, அதை விட்டு அவர்கள் அங்கு என்ன செய்ய வேண்டும் என்று இங்கிருந்து வாக்கெடுப்பு.என்னதான் அவர்க செய்தாலும் நாட்டை விட்டு ஓடிவந்த நாம் அதை பார்த்துக்கொண்டு இருப்பதை தவிர வேறு வழியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்தேசியக் கூட்டமைப்பு செய்ய வேண்டியது அதில உள்ள சிலரை வெளியில் விட்டு புதிதாக தெளிவான சிலரை அடுத்த தேர்தலுக்கு கொண்டுவருவது அவசியம்.

இங்கிருந்து நாங்கள் செய்ய வேண்டிய அலுவல்கள் பல இருக்கு, அதை விட்டு அவர்கள் அங்கு என்ன செய்ய வேண்டும் என்று இங்கிருந்து வாக்கெடுப்பு.என்னதான் அவர்க செய்தாலும் நாட்டை விட்டு ஓடிவந்த நாம் அதை பார்த்துக்கொண்டு இருப்பதை தவிர வேறு வழியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதை தற்போதைய தேர்தலின் பின் ஏற்கக்கூடியதாக இல்லை

இந்த தேர்தலில்

தமிழர்களின் நோக்கு ஒன்றுதான் என்பது தெளிவடைந்துள்ளது

இனி

தாயகம்

புலம்....

என்ற பிரிவினைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது

எல்லோரும் ஒன்றையே சிந்திப்போம்

சிந்திக்கின்றோம்

மக்களின் தீர்ப்பும் அதுவே..

அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று நாமும் சொல்லலாம்

நாம் என்ன செய்யவேண்டும் என்று அவர்களும் சொல்லலாம்

இனி எமக்கான பாலம் அமைக்கப்படவேண்டும்

அதற்கு கூட்டமைப்பு கயிறாக இருக்கமுடியும்

தங்கள் கருத்துக்கு எதிர்கருத்து எழுதவில்லை

இந்த பக்கமாக சிந்தித்தாலலென்ன என்பதே என் கருத்து..

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் முடிவுகள் சொன்ன, சொல்லவந்த உண்மை...

1 . தமிழர்கள் இன்னும் கொஞ்சம் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து முன்னுக்கு போயிருக்கிறார்கள்...கடந்த மாநகர தேர்தலை விட கூடியளவு வாக்கு பதிவு யாழில்..கூடிய அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில்..குழப்பமான பிரச்சாரங்கள்...குழப்பமான அரசியல் கூட்டணிகளுக்கும் மத்தியில்..

2 . தெளிவான முடிவுகள்...தமிழர் தேசம், கூடுதாலா தமிழரை கொண்ட பிரதேசங்களில் எல்லாம் எதிர்கட்சிகளில் கூட்டமைப்பு வென்றுள்ளது...உண்மையில் எதிர்கட்சிகளின் கூடமைப்பில் உள்ள வெற்றிக்கட்சிகள் தமிழ் கட்சிகளே...UNP , JVP ஒறிடத்தைதானும் வெல்லவில்லை..இதைவிட தமிழரின் ஒற்றுமையை சொல்லமுடியாது...UNP தனது கோட்டையான கொழும்பிலும் தோல்வி..

3 . தமிழர் ஒன்றாயிருக்கிறார்கள்...முஸ்லீம், மலையகம், மற்றைய தமிழர்கள் எல்லோரும் ஒன்றாய் இருக்கிறார்கள்...

4 . இந்த ஒற்றுமையை பலப்படுத்த நாங்கள் உதவ வேண்டும்...இந்த நிலை தொடர்ந்தால் ஏப்ரல் அல்லது அதற்கு முந்தய பாராளுமன்ற தேர்தல் தமிழருடையதே/ சிறுபான்மை இன்னங்களுடையதே...

5 . இதை உருவாக்கிய மனோகணேசன், கக்கீம், சம்பந்தன் மற்றும் ஏனையயோரும் வாழ்த்தப்படவேண்டியவர்கள்...வாழ்த்துவோம் நாங்களும்...அவர்களின் ஒற்றுமையை குலைக்க வேண்டாம்...

6 . இறுதியாக சரத் தோத்தது பற்றி... வந்திருந்தால் நல்லம்...ஆனாலும் இன்று வராமல் சொன்ன செய்தி மிகவலியது...எங்களுடன் மலையகத்தையும் இணைத்து தந்துள்ளார்...முக்கியமாக...நன்றாக வேறுபடுத்தி காட்டியுள்ளார் எங்கெல்லாம் தமிழ் உண்டோ அங்கெல்லாம் பச்சை நிறமென...(UNP ) இன் கலர்தான் ஆனால் நாங்கள் வெற்றி பெற்ற நீல சிங்களம் அல்ல..

7. 2005 தேர்தலை புறக்கணித்தது தவறு என்று சொன்னது பற்றி...இப்பவும் சொல்லுகிறேன் புறக்கணித்தது தவறு..அப்படி சொன்ன சம்பந்தர் அதைவிட மிகத்திருத்தமாக சொல்லவேண்டிய எல்லாருக்கும் சொல்லியிருக்கிறார்..நிச்சயமாக..எங்களின் அடுத்த தலைவர் சம்பந்தர் தான்...தளபதிகள் கக்கீமும், மனோகணேசனும் ஏனைய மலையாக தலைவர்களும் தான்...

  • கருத்துக்கள உறவுகள்

நான் எதிர்பாhத்;ததும் திரும்ப திரும்ப எழுதியதும்தான் நடந்துள்ளது.

த.தே.கூ தேர்தலில் தோற்றுபோயுள்ளது தவிர அரசியலில் நல்லதொரு வெற்றியை ஈட்டியதாகவே எனக்கு படுகின்றது.

மகிந்தவிற்கு வேறுவழியில்லை இருட்டுக்குள் இந்தியாவுடன் குலாவுவதும் விடிந்தால் சீனாவை கூட்டிகொண்டு திரிவதும்தான் அவருக்குள்ள ஒரே தேர்வு. புலிகளை அழிப்பதற்கு என்று கங்கணம் கட்டிகொண்டு இந்தியா இலங்கைக்கு இதுவரையிலும் மடியை விரித்துகொண்டு நின்றது. இனிமேற்காலத்தில் உறவு என்பது பிராந்திய அரசியலுடன் கூடியதாக இருக்க வேண்டும். ஆக இலங்கை இந்தியாவிற்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும் அல்லது இந்தியாவை எதிர்த்து இருக்க வேண்டும். ஆக சீனாவுடனான உறவுக்கும் அதே நிலை வரும் என்பது................... சீனா காரனுக்கு எப்போதே தெரிந்துதான். இந்தியாபோல் நாங்கள் பாகிஸ்தானுடன் போகபோகிறோம் என்றுவுடன் வேண்டாம் வேண்டாம் என்னுடன் வந்து படுங்கள் என்று மடிவிரிக்காது. எல்லாவற்றையும் எழுத்து மூலம் உடன்படிக்கையாக்கி கைச்சாத்திட்டே எல்லாவற்றையும் செய்துள்ளான். ஆக சீனாவை எளிதாக விட்டுவிட முடியாது. ஆக மேற்குலகுடன் ஒரு முறுகல் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மகிந்த உருவாக்கிகொள்வார். அப்போது இவர்கள் தமிழருக்கு கொடுமை செய்தார்கள் என்று ஓநாய் போல ஒப்பாரி வைக்கும்போது ஆதரவுக்கு த.தே.கூ தேவைபடும். அதை அவர்கள் திறமையாக கையாண்டு தமிழருக்கு சாதகமான ஒரு அரசியல் அரங்கத்தை சர்வதேசத்தில் புத்திசாலிதனமாக அரங்கேற்ற வேண்டும். அதற்கு இலங்கையின் எதிர்கட்சியையும் மகந்தவிற்கு எதிரான பாடல் என்ற போர்வையில் எதிர்பாட்டுபாட அழைக்க வேண்டும். இதெல்லாம் சாத்;தியபட ஒற்றுமை என்பதும் ஊடக ஆதரவு என்பதும் தேவையானதும்.............. தமிழருக்கு கசப்பானதும் ஆகும். ஆக த.தே.கூவை மட்டும் தோல்விகளுக்கு சாடது உண்மைகளை உணர்ந்து ஊடகங்களும் உழைத்தால். எல்லா தோல்விகளையும் வெற்றிகள் ஆக்கலாம்.

மகிந்தவுக்கு ஏன் கோபம் வரவேண்டும். பழிவாங்குவதென்றால் கூட கோபித்துக் கொண்டு பழிவாங்க வேண்டுமென்பதில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு ஏன் கோபம் வரவேண்டும். பழிவாங்குவதென்றால் கூட கோபித்துக் கொண்டு பழிவாங்க வேண்டுமென்பதில்லையே.

அதுதானே

இப்ப மட்டும் என்ன செய்கின்றாராம்...?

சிங்களத் தேசிய கூட்டமைப்பு என்று பெயர் மாற்றம் செய்தால் ஒரு பிரச்சனையும் இல்லை தானே?கருணா டக்கிளஸ் போன்றவர்கள் தமிழ் மக்கள் கட்சி நடத்திக் கொண்டு சிங்களவனுக்கு சேவகம் செய்யும் போது இவர்கள் சிங்களா கட்சியை நடந்திக் கொண்டு தமிழருக்கு நல்லது செய்யலாம் தானே?

நான் எதிர்பாhத்;ததும் திரும்ப திரும்ப எழுதியதும்தான் நடந்துள்ளது.

த.தே.கூ தேர்தலில் தோற்றுபோயுள்ளது தவிர அரசியலில் நல்லதொரு வெற்றியை ஈட்டியதாகவே எனக்கு படுகின்றது.

மகிந்தவிற்கு வேறுவழியில்லை இருட்டுக்குள் இந்தியாவுடன் குலாவுவதும் விடிந்தால் சீனாவை கூட்டிகொண்டு திரிவதும்தான் அவருக்குள்ள ஒரே தேர்வு. புலிகளை அழிப்பதற்கு என்று கங்கணம் கட்டிகொண்டு இந்தியா இலங்கைக்கு இதுவரையிலும் மடியை விரித்துகொண்டு நின்றது. இனிமேற்காலத்தில் உறவு என்பது பிராந்திய அரசியலுடன் கூடியதாக இருக்க வேண்டும். ஆக இலங்கை இந்தியாவிற்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும் அல்லது இந்தியாவை எதிர்த்து இருக்க வேண்டும். ஆக சீனாவுடனான உறவுக்கும் அதே நிலை வரும் என்பது................... சீனா காரனுக்கு எப்போதே தெரிந்துதான். இந்தியாபோல் நாங்கள் பாகிஸ்தானுடன் போகபோகிறோம் என்றுவுடன் வேண்டாம் வேண்டாம் என்னுடன் வந்து படுங்கள் என்று மடிவிரிக்காது. எல்லாவற்றையும் எழுத்து மூலம் உடன்படிக்கையாக்கி கைச்சாத்திட்டே எல்லாவற்றையும் செய்துள்ளான். ஆக சீனாவை எளிதாக விட்டுவிட முடியாது. ஆக மேற்குலகுடன் ஒரு முறுகல் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மகிந்த உருவாக்கிகொள்வார். அப்போது இவர்கள் தமிழருக்கு கொடுமை செய்தார்கள் என்று ஓநாய் போல ஒப்பாரி வைக்கும்போது ஆதரவுக்கு த.தே.கூ தேவைபடும். அதை அவர்கள் திறமையாக கையாண்டு தமிழருக்கு சாதகமான ஒரு அரசியல் அரங்கத்தை சர்வதேசத்தில் புத்திசாலிதனமாக அரங்கேற்ற வேண்டும். அதற்கு இலங்கையின் எதிர்கட்சியையும் மகந்தவிற்கு எதிரான பாடல் என்ற போர்வையில் எதிர்பாட்டுபாட அழைக்க வேண்டும். இதெல்லாம் சாத்;தியபட ஒற்றுமை என்பதும் ஊடக ஆதரவு என்பதும் தேவையானதும்.............. தமிழருக்கு கசப்பானதும் ஆகும். ஆக த.தே.கூவை மட்டும் தோல்விகளுக்கு சாடது உண்மைகளை உணர்ந்து ஊடகங்களும் உழைத்தால். எல்லா தோல்விகளையும் வெற்றிகள் ஆக்கலாம்.

உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.