Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் ஐயராத்து அம்மணி....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் ஐயராத்து அம்மணி

கவிதை - இளங்கவி...

என் ஐயராத்து அம்மணி

நீ அழகான என் கண்மணி....

உன் ஒற்றை மூக்குத்தியால்

என்னை கொழுவி இழுத்தவள் நீ....

உன் தெத்திப் பல் சிரிப்பில்

என்னை சிக்கவைத்தாய் நீயடி...

உன் ஆளுயரக் கூந்தலில்

என்னை அசரவைத்தாய் நீயடி....

உன்னை வீதியெங்க்கும் துரத்தி

நம் வீதியெல்லாம் உடைஞ்சு போச்சு....

அதனாலே நம் வீ.சி க்கு

அதைத் திருத்துவதே வேலையாச்சு....

உன் கன்னக்குளி பார்க்க

'சுண்டுக்குளி' வரை வருவேன்; அதனால்

தெருவில் இருந்த குளி விழுந்து

என் காலெலும்பபு உடைஞ்சிருந்தேன்...

வீட்டில் மீன் பொரியல்

விடலைக் கோழிக்கறி

விரும்பிய நேரம் உண்ண

பூநகரி மொட்டைகறுப்பன் சோறு...

அத்தனையும் சமைத்துவைத்து

அம்மா காத்திருக்க

அத்தனையும் வேண்டாமென்று

உன் தயிர்ச் சாதம் வேண்டி நின்றேன்....

சக்கரைப் பொங்கல் தின்றா

உன்பார்வை சக்கரைபோல் இனிக்கிறது....

பால் குடித்து வளர்ந்ததாலா

உன் உடம்பு பால்நிலவாய் ஜொலிக்கிறது....

சிலவருடம் காத்துவிட்டேன்

இன்னும் சிரிப்புடனே நிற்கின்றாய்....

சில சில்மிசங்கள் செய்வதற்கு

எப்போ என்னருகில் நீ வருவாய்.....

காதலர் தினத்தன்று

உனைப் பார்க்க நான் வருவேன்....

கண்கவரும் ரோஜாவுடன்

என் காதலையும் சொல்லிடுவேன்...

என்னை காதலனாய் ஏற்றுக்கொள்

என் காதலையும் புரிந்துகொள்.....

ரோஜாவின் காம்பாய் நானிருந்து

உன்னைப் பூவாய் தாங்கிடுவேன்.....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

என் ஐயராத்து அம்மணி

கவிதை - இளங்கவி...

என் ஐயராத்து அம்மணி

நீ அழகான என் கண்மணி....

உன் ஒற்றை மூக்குத்தியால்

என்னை கொழுவி இழுத்தவள் நீ....

உன் தெத்திப் பல் சிரிப்பில்

என்னை சிக்கவைத்தாய் நீயடி...

உன் ஆளுயரக் கூந்தலில்

என்னை அசரவைத்தாய் நீயடி....

உன்னை வீதியெங்க்கும் துரத்தி

நம் வீதியெல்லாம் உடைஞ்சு போச்சு....

அதனாலே நம் வீ.சி க்கு

அதைத் திருத்துவதே வேலையாச்சு....

உன் கன்னக்குளி பார்க்க

'சுண்டுக்குளி' வரை வருவேன்; அதனால்

தெருவில் இருந்த குளி விழுந்து

என் காலெலும்பபு உடைஞ்சிருந்தேன்...

வீட்டில் மீன் பொரியல்

விடலைக் கோழிக்கறி

விரும்பிய நேரம் உண்ண

பூநகரி மொட்டைகறுப்பன் சோறு...

அத்தனையும் சமைத்துவைத்து

அம்மா காத்திருக்க

அத்தனையும் வேண்டாமென்று

உன் தயிர்ச் சாதம் வேண்டி நின்றேன்....

சக்கரைப் பொங்கல் தின்றா

உன்பார்வை சக்கரைபோல் இனிக்கிறது....

பால் குடித்து வளர்ந்ததாலா

உன் உடம்பு பால்நிலவாய் ஜொலிக்கிறது....

சிலவருடம் காத்துவிட்டேன்

இன்னும் சிரிப்புடனே நிற்கின்றாய்....

சில சில்மிசங்கள் செய்வதற்கு

எப்போ என்னருகில் நீ வருவாய்.....

காதலர் தினத்தன்று

உனைப் பார்க்க நான் வருவேன்....

கண்கவரும் ரோஜாவுடன்

என் காதலையும் சொல்லிடுவேன்...

என்னை காதலனாய் ஏற்றுக்கொள்

என் காதலையும் புரிந்துகொள்.....

ரோஜாவின் காம்பாய் நானிருந்து

உன்னைப் பூவாய் தாங்கிடுவேன்.....

இளங்கவி

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி

மிக்க நன்றி....

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் மீன் பொரியல்

விடலைக் கோழிக்கறி

விரும்பிய நேரம் உண்ண

பூநகரி மொட்டைகறுப்பன் சோறு...

அத்தனையும் சமைத்துவைத்து

அம்மா காத்திருக்க

அத்தனையும் வேண்டாமென்று

உன் தயிர்ச் சாதம் வேண்டி நின்றேன்....

இளங்கவி உங்கட அம்மா பாவம் போல கிடக்கிது, பாவம் மகன் நாலைஞ்சு கறியோட வடிவாச் சாப்பிடட்டும் எண்டு சமைச்சு வைக்க நீங்கள் அதை வேண்டாம் எண்டிட்டு தயிர்சாதம் வேணுமெண்டெல்லே அடம்பிடிக்கிறியள். தயிர்ச் சாதத்தோட கூடவே அலுவாத் துண்டு ஒண்டும் ரெடியா இருக்கிது. அலுவா சாப்பிடேணும் எண்டு நீங்கள் ஒத்தக் காலில நிக்கேக்க நாங்கள் என்னேய்யிறது. :lol:

நல்லதொரு காதலர் தினக் கவிதையை யாத்த இளங்கவிக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ஆத்துக்க கவுன்தாச்சு.இனி சுழி ஓடத்தானே வேனும். :D

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாய் தானிருக்கு...மீன் பொரியல் கோழிக்கறி.(மச்சம்)...சக்கரை பொங்கல் தயிர் சாதத்துடன்....(மரக்கறி)...எதோ ஒன்று குறுக்கே நிற்கிறது. :D ஒன்றிணைய வாழ்த்துக்கள்.

கவிதைக்கு பொய் அழகு .......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவாலிக்கு

இல்லாததைத்தானே மனம் நாடுவது இயற்கை..... அதுதான் கோழிக்கறி இருக்க மனம் தயிர்ச்சாதம் கேட்குது...

சரி அதை விடுங்கோ... அல்வா இருக்கென்றியள்.... எனக்கு அல்வா பெரிசா விருப்பமில்லை.. வாங்கி யாருக்கும் கொடுத்தாப் போச்சு.... :D

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sagevan

இதென்ன.. சுழி ஓடினாப் போச்சு..... :D

sagevan உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி அண்ணா கவிதை நன்று.

தயிர்சாதம் சாப்பிடப்போய் களி சாப்பிடாமல் விட்டாலே போதும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்கா

கவிதையென்றால் பொய் இருந்தால் தான் மிக அழகு...

கருத்துக்கு மிக்க நன்றி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா

எங்க வீட்டில செய்யிற தயிர்ச்சாதம் அவுங்க ஆத்தில செய்யிறமாதிரி வராதல்லா... அதுதான் ஆசையாய் இருக்கு சாப்பிட்டுப் பார்க்க....

கருத்துக்கு மிக்க நன்றி ஜீவா....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி அண்ணா கவிதை நன்று.

தயிர்சாதம் சாப்பிடப்போய் களி சாப்பிடாமல் விட்டாலே போதும்.

post-7066-12662019269676_thumb.jpgpost-7066-12662019465825_thumb.jpg

Edited by jhansirany

  • கருத்துக்கள உறவுகள்

post-7066-12662019269676_thumb.jpgpost-7066-12662019465825_thumb.jpg

ஐயராத்திலை 17 கறியோடை சோறா.....?

அது சரி, ஐயரும் என்ன செய்வார்...... திவசம், அந்திரட்டி, குடிபூரல், சாமத்தியச் சடங்கு, கலியாணவீட்டுக்கு போனால் கொடுக்கிற மரக்கறியை சமைச்சு முடிக்க வேணுமே. :)

  • கருத்துக்கள உறவுகள்

என் ஐயராத்து அம்மணி

கவிதை - இளங்கவி...

வீட்டில் மீன் பொரியல்

விடலைக் கோழிக்கறி

விரும்பிய நேரம் உண்ண

பூநகரி மொட்டைகறுப்பன் சோறு...

அத்தனையும் சமைத்துவைத்து

அம்மா காத்திருக்க

அத்தனையும் வேண்டாமென்று

உன் தயிர்ச் சாதம் வேண்டி நின்றேன்....

இளங்கவி

ஐயராத்து அம்மணியூடாக , அந்த மண்வாசச் சமையல் மீண்டும் எப்போது என்ற ஏக்கத்தை விதைத்து நிற்கிறது.

எலும்பிலே வைக்கின்ற ரசத்தையும் இணைத்திருந்தால்..........

கன்னக்குளி ரசித்து

வீதிக்குழி மறந்து

காலை உடைத்துக் கொண்ட கவியே

இளங்கவியே பாராட்டுகள்! கவிதைக்கு....

பாராட்டுகள். உங்கள் ஐயராத்து அம்மணியாள் கைசேர வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

jhansirany

ஐயையோ...ஐயராத்தில இம்புட்டு சாப்பாடுங்களா....? அசத்துறாங்களே.....!

மனிசன் சாப்பிட்டே செத்திடுவான் போல கிடக்கு....ஆனாலும் மடிசார் புடவைக்கட்டைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போலக்கிடக்கு...

உங்கள் கருத்துக்கு நன்றி....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சிறி

நான் இலையைப் பார்த்தவுடனேயே பயந்திட்டன்... நீங்களோ ஆறுதலாக இருந்து எத்தனை கறியென்று வேற எண்ணியிருக்கிறியள்...

ஒரு கரண்டி இறைச்சிக் கறி சாப்பிடுறதிலும் பார்க்க பத்து மடங்கு சத்து அந்த இலையில இருக்கும் போலக் கிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

//உன் கன்னக்குளி பார்க்க

'சுண்டுக்குளி' வரை வருவேன்; அதனால்

தெருவில் இருந்த குளி விழுந்து

என் காலெலும்பபு உடைஞ்சிருந்தேன்...//

சுண்டுக்குளி எல்லாம் சுத்தி இருக்கிறீங்கள் போல :o ...நல்லதொரு கவிதை...வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் இப்படி பூவை தாங்குவேன், சோறா பிசைஞ்சு தின்னுவன் எண்டுறியள் ஆனால் இன்னொருத்தரோ பெண்களையே நம்ப கூடாதெண்டு கவிதை எழுதிறார். உங்களில ஆரை நம்புறது? :) ஆனா கவிதையை பார்த்தால் இளங்கவி தம்பி கலியாணம் கட்டலை போல இருக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nochchi

எலும்பு போட்டு வைக்கும் ரசம் வைத்திருந்தால் எலும்புக் கொழுப்பெல்லாம் சேர்ந்து அம்மணி வெயிற் போட்டுடுவா, அம்மணிக்கு அழகே அளவாய் இருக்கிறதிலனால தானே......

நெய்யும் தயிரும் சேர்ந்த கொழுப்பாலேயே அம்மணி இந்தப்பாடு படுத்திறா... அதில எலும்புக்கொழுப்பு சேர்கணுமாக்கும்...!

சரி சரி அதை விடுங்கோ... என்ன சொன்னாலும் நீங்கள் சொன்னமாதிரி அந்த மண்வாசனையை நினைக்க ஒரு மாதிரியாத்தான் இருக்கு....

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....

அழகான கவிதை ................. வாழ்த்துக்கள் இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி

//உன் கன்னக்குளி பார்க்க

'சுண்டுக்குளி' வரை வருவேன்; அதனால்

தெருவில் இருந்த குளி விழுந்து

என் காலெலும்பபு உடைஞ்சிருந்தேன்...//

சுண்டுக்குளி எல்லாம் சுத்தி இருக்கிறீங்கள் போல :D ...நல்லதொரு கவிதை...வாழ்த்துகள்.

வேம்படி, யாழ் இந்துமகளிர் கல்லூரி மற்றும் உள்ளூரில் இருக்கும் கல்லூரிகள் என்று இன்னும் எத்தனையோ.... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்...

இதெல்லாம் மாணவப் பருவத்தின் மறக்காத நினைவுகளாய் பெரும்பாலானோருக்கு வாழ் நாள் முழுவதும் தொடருமென்பது மறுக்கமுடியாத நிஜம்.....

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ரதி.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kuLavi

காதல் என்பது ஓர் மென்மையான உணர்வு.... அதில் சந்தர்ப்பவசத்தால் தோற்றவர்கள் சில வேளைகளில் உயிர்விடுமளவுக்கு மனதைப் பாதிக்கும் உணர்வும் கூட....

காதலால் மிகவும் பாதிக்கப்பட்டு அதனால் அந்தப் பெண்குலத்தை அடியோடு வெறுத்து அதன் வெளிப்பாடாய் எழுதப்படும் வரிகளுக்கும் காதலில் வெற்றியோ தோல்வியோ அதனை அணுஅணுவாக அனுபவித்து எழுதுவோரின் வரிகளுக்கும் இருக்கும் வேறுபாட்டால் குழப்பமடையாமல், அனுபவித்தால் மட்டுமே புரியக்கூடிய காதலை அனுபவியுங்கள்.... :wub: , வலிகளோ/இன்பப்பரவசமோ உணருங்கள் :D / :) , பின்பு அந்த உணர்வுகளை வரிகளில் எழுதுங்கள் :blink: , உங்கள் வரிகளுக்காக நான் காத்திருக்கிறேன்.... :)

கருத்துக்கு மிக்க நன்றி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான கவிதை ................. வாழ்த்துக்கள் இளங்கவி

ஈழமகள்

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.....

Edited by ilankavi

உன்னை வீதியெங்க்கும் துரத்தி

நம் வீதியெல்லாம் உடைஞ்சு போச்சு....

அதனாலே நம் வீ.சி க்கு

அதைத் திருத்துவதே வேலையாச்சு....

அழகான வரிகள் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sitpi

உன்னை வீதியெங்க்கும் துரத்தி

நம் வீதியெல்லாம் உடைஞ்சு போச்சு....

அதனாலே நம் வீ.சி க்கு

அதைத் திருத்துவதே வேலையாச்சு....

அழகான வரிகள் வாழ்த்துக்கள்.

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிகள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.