Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகநூல் நட்பும் விசித்திர நண்பரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் நிழல் ரயில் பாதையினூடாக பயணம் செய்து மான்சி தான் வர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தாள்...அங்கு தான் அவர் வரச் சொல்லி இருக்கிறார்...அவர் ஒரு மனநல வைத்தியர்..அந்த இடத்திலில் இருந்து பத்து நிமிடம் நடந்தால் அவர் வேலை செய்யும் ஆஸ்பத்திரி இருக்கிறதாகவும் ரயிலை விட்டு வெளியில் வந்தால் தான் வந்து கூட்டி செல்வதாகவும் சொல்லி இருக்கிறார்...தனக்கு எப்படி அவனோடு தொடர்பு ஏற்பட்டது கடந்த காலத்தை அசை போட்டவாறே மான்சி ரயிலை விட்டு இறங்குறாள்.

மான்சிக்கு அதிகம் நண்பிகள் இல்லை ஒரு சிலரே உள்ளனர்...அப்படி அவவோடு நெருங்கிப் பழகிய நண்பி ஒருத்தி லண்டனின் தூரப் பகுதிக்கு இடம் பெயர்ந்தார்...அவ் நண்பியோடு முதலில் தொலைபேசியில் உரையாடிக் கொள்வாள் மான்சி...காலப் போக்கில் இருவரும் பிசியாக தொலைபேசி பேச்சு குறைந்து முக நூல் மூலம் உரையாடுக் கொள்வார்கள்...அப்படி உரையாடும் போது அவரது நண்பிக்கு அறிமுகமான ரிசாப் மான்சிக்கும் அறிமுகமாகுறார்...ஆனால் மான்சி நண்பர்கள் விடயத்தில் மிகவும் கவனமாக இருப்பாள்...அவள் தன்னுடைய போட்டோவை ஒருத்தருக்கும் காட்டியதில்லை...முதலில் ரிசாப்போட கதைக்க மறுத்தவள் பிறகு அவரது வற்புறுத்தல் தாங்காது அவரோடு கதைக்கத் தொடங்கிறாள்...முகநூலில் அறிமுகமாகிய அவர்கள் பிறகு தொலைபேசியில் கதைக்க தொடங்குகிறார்கள்...ரிசாப்போடு கதைக்க தொடங்கிய பின்பு தன் கதையை சொல்லத் தொடங்குறாள் மான்சி...மான்சி விவாகரத்து ஆனவள் அவளது முன்னால் கணவன் அவரது பெற்றோரில் வற்புறுத்தலுக்காகவே அவளை திருமணம் செய்கிறார்...கல்யாணம் செய்தாலும் அவளோடு வாழப் பிடிக்காமல் அவளை விவாகரத்து செய்கிறார் இவ்வாறு தனது கதையினை ரிசாப்பிற்கு தொலைபேசி மூலம் சொல்கிறார்...இதை கேட்ட ரிசாப்பிற்கு தனக்கு அவளது பழைய வாழ்க்கை பற்றி அக்கறை இல்லை என்றும் அவளோடு தொடர்ந்து பழக விரும்புவதாகவும் சொல்கிறார் அதற்கு அவளோ எந்த விதத்திலும் தான் உங்களுக்கு பொருத்தமில்லை எனச் சொல்கிறாள்...தனக்கு வயது அதிகமாய் இருக்கும் எனவும்,படிப்பிலையோ,வசதியிலையோ அல்லது சாதியிலையோ உங்களுக்கு நான் பொருத்தமில்லை எனச் சொல்கிறாள் அது மட்டும் இல்லாமல் தான் ஏற்கனவே மணம் முடித்தவள் நீங்களோ மணம் முடிக்கவிலை எனச் சொல்லி வேண்டுமானால் நண்பர்களாக பழகுவோம் எனச் சொல்கிறாள் ஆனால் அவரோ நாங்கள் நேரில் சந்திப்போம் பிடித்திருந்தால் திருமணம் செய்வோம் என சொல்கிறார்...அதுக்கு மான்சியும் சரி எனச் சொல்கிறாள் ஆனால் அவள் இரு நிபந்தனை விதிக்கிறாள் ஓன்று இருவருக்குமே பிடிக்கா விட்டால் விலகிப் போய் நண்பர்களாகவே இருப்போம் எண்டும் இரண்டாவது மான்சிக்கு ரிசாப்பிற்கு வயது குறைவாக இருக்கும் என்ட எண்ணம் மனதில் இருந்ததால் வரும் போது கடவுச்சீட்டையோ அல்லது வாகன சாரதிப் பத்திரத்தையோ கொண்டு வரும்படி சொல்கிறாள் அதற்கு ரிசாப்பும் சரி என சொல்கிறார்...இவ்வாறு நடந்தவற்றை அசை போட்டவாறு வெளியில் வருகிறாள்.

அங்கு அவள் எப்படி இருப்பாள் என எதிர் பார்த்த படி ரிசாப் நின்றிருந்தார்...அவளைக் கண்டதும் இவளாக இருக்குமோ என ரிசாப் யோசித்துக் கொண்டு இருக்கையில் இவள் ரிசாப்பிடம் போய் நீங்கள் தானா ரிசாப் எனக் கேட்க அவருக்கும் இது தான் மான்சி என தெரிய உடனே அவர் தான் இத்தனையாம் ஆண்டு தான் பிறந்தேன் என உண்மையான வயதைப் போட்டு உடைத்து விடுகிறார் அதாவது அவருக்கு மான்சியிலும் பார்க்க இரண்டு வயது குறைவு ஆனால் இவளுக்கு முதலே அவருக்கு தன்னிலும் பார்க்க வயது குறைவு என்ட எண்ணம் மனதில் இருந்தபடியால் சமாளித்து கதைக்கிறாள்...அவர்கள் பொதுவாக அவரது வேலையைப் பற்றி கதைத்த படியே அவர் வேலை செய்யும் இடத்தை வெளியாலே சுற்றிப் பார்த்து விட்டு அவள் திரும்புகிறாள்.

வீடு வந்த அவள் தான் தன்னைப் பற்றிய எல்லா உண்மைகளை சொல்லியும் அவர் தனது வயதை குறைத்து சொல்லி ஏமாற்றிப் போட்டார் என்ட ஆத்திரத்தில் ஏசி மெசேஜ் அனுப்புகிறாள்...அதற்கு அவரிடம் இருந்து வந்த மெசெயில் தான் ஒரு மன நல வைத்தியர் என்டபடியால் எனக்கு என்ன பிரச்சனை எனத் தெரிந்து கொள்ளத் தான் பழகியதாக சொல்கிறார்...அதன் பின்னர் அவள் அனுப்பிய மெசேயிற்கும் பதில் இல்லை...தொலைபேசி அழைப்பிற்கும் பதில் இல்லை.

இது நான் எழுதிய முதல் கதை...ஏதோ என்ட மனதில பட்டதை எழுதியிருக்கேன்...தயது செய்து உண்மையான விமர்சனங்களை எழுதுங்கள்...நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை ரதி அவர்களே..! மேலும் மெருகேறட்டும் உங்கள் எழுத்தாற்றல்..! :rolleyes:

அதுசரி.. இதுவும் உண்மைகலந்த கற்பனைக் கதைதானே..! :rolleyes:happy0043.gif

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ரிசாப் மன நல வைத்தியராக இருந்து மான்சிக்கு ஒரு வழிகாட்டுதலுக்காக பழகி இருந்திருந்தால்.. மான்சியின் பிரச்சனைகளில் இருந்து வெளிவர ஆலோசனைகளும் தந்திருப்பார். அதைப்பற்றி நீங்க எதுவும் சொல்லேல்லையே அக்கா..??!

இது என்னவோ மான்சி அவரோடு முகநூலில் பகிர்ந்து கொண்ட விடயங்களின் அடிப்படையில்.. மான்சியை நேரில் சந்திச்சு உண்மை நிலையை அறியவும்.. ஆலோசனை வழங்கவும் பழகின மாதிரித்தான் தெரியுது. அதுவரை கண்டிராத மான்சியை சந்தித்ததும் அவர் உண்மையைச் சொல்லி பழகினது.. மான்சியின் மன நிலையை அறிவதோடு அமைந்திருக்கிறது. திருமணம் செய்யுற ஐடியாவில வந்திருந்தா ஏன் அவர் உடனவே உண்மைச் சொல்லிறார்.. அதுமட்டுமன்றி மான்சியை வேற நோக்கங்களுக்காக அணுகி இருந்தால் எதற்காக அவளை தனது வேலையிடம் வரை கூட்டி வந்து கதைக்கிறார். அவளை மனம் விட்டு கதைக்க வைக்கிறதும் அவளின் பிரச்சனைகளை இனங்காண்பதும் அவரின் நோக்கமா இருந்திருக்கலாம்

இது மருத்துவர்கள் செய்யும் காரியம் தானே அக்கா.

எதுஎப்படியோ முதல் சந்திப்போடு.. ஆள் மான்சியை விட்டு போயிட்டார் எல்லோ தொல்லை தீந்திச்சு என்று விட்டுத்தள்ளுவதுதான் மான்சிக்கு நல்லது..! ஒரு பொய் சொல்லுறவர் இன்னும் எத்தனை பொய்களைச் சொல்லுவாரோ. அது டாக்டரா இருந்தாலும். மான்சிக்கு பெரிய பிரச்சனைகள் இல்லை என்று கண்டதாலோ என்னவோ.. அவரே மான்சியோடு தொடர்ந்து தொடர்புகளை பேணுவதை தவிர்த்திருக்கலாம். ஏனெனில் அது தவறான நிலைக்கு அவரின் நிலைப்பாட்டை கொண்டு போய் விடும் என்று அவர் நினைத்திருக்கலாம். எனவே மான்சி.. அவரை முகநூலோடு நண்பராக வைச்சிருக்கிறதோட விடுறதுதான் நல்லது.

இந்த முகநூல் இப்படிப் பல பிரச்சனைகளுக்கு காரணமாகவும் இருக்குது அக்கா. அந்த வகையில் இது நல்லதொரு கதை அக்கா. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் கரு நன்றாக உள்ளது.

எதற்கும் முதலில் முகத்தை அறிந்து கொண்டு பின்னர் மனதை அறிய முற்பட்டால் நல்லது.

எப்படியென்றாலும் மன நல மருத்துவர் இப்படி இம்சை கொடுக்கக் கூடாது.

ஆராய்ச்சி என்ற பெயரில் ஒரு மனதைப் புண்படுத்தி விட்டார் இந்தக் கதையில்

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

ஓரிரு வயது குறைவாயிருப்பது ஒன்றும் உலக மகா குற்றமல்ல! சமூகத்தில் அப்படிப் பலர் மனமுடித்திருக்கின்றனர் ! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் நண்பர்களாகி வல்லுறவு வரை சென்ற பல சம்பவங்கள் உண்டு. இந்த டாக்டர் தனது வயதை கூட்டி சொல்லியுள்ளார்.பொதுவாக குறைத்து தானே சொல்வார்கள்??

நல்ல கரு.கொஞ்சம் எழுத்தால் சோடனை செய்தால் சரி.அடுத்த கதையில் மேலும் மெருகூட்டுங்கள்,ரதி.

மேலும் நிசவாழ்வில் பொய்யே சொல்லாத ஆணை கண்டு பிடிப்பாரோ இந்த பெண். சான்ஸே இல்லை. :rolleyes:

ஓரிரு வயது குறைவாயிருப்பது ஒன்றும் உலக மகா குற்றமல்ல! சமூகத்தில் அப்படிப் பலர் மனமுடித்திருக்கின்றனர் ! :rolleyes:

இப்போதைய ஆண்கள் தங்களிலும் விட வயது கூடிய பெண்ணை திருமணம் செய்ய விரும்பினாலும்..இப்போதய பெண்கள்..வயது குறைந்தவரை மனம் புரிய விரும்புவதில்லை..இது என் அனுபவம்..மட்டுமே.. :rolleyes:

Edited by வீணா

அவர் மன நல மருத்துவராக இருக்கலாம்..நேரில் சந்திப்போம் பிடித்திருந்தால் மணம் புரிவோம்..என்று..ஏன் பொய் சொல்லி அழைக்க வேண்டும்.....இதன் மூலம் அந்த பெண்ணின் மனம் பாதிக்கபடாதா.. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எல்லாம் ஒன்டும் இல்லை இ.கலைஞன்...தற்போது முகநூல் பாவனையால் பலர் கெட்டுப் போகிறார்கள் அதை வைத்து என் கற்பனையில் உதித்த ஆக்கம் தான் இது.

உண்மையில் ரிசாப் மன நல வைத்தியராக இருந்து மான்சிக்கு ஒரு வழிகாட்டுதலுக்காக பழகி இருந்திருந்தால்.. மான்சியின் பிரச்சனைகளில் இருந்து வெளிவர ஆலோசனைகளும் தந்திருப்பார். அதைப்பற்றி நீங்க எதுவும் சொல்லேல்லையே அக்கா..??!

இது என்னவோ மான்சி அவரோடு முகநூலில் பகிர்ந்து கொண்ட விடயங்களின் அடிப்படையில்.. மான்சியை நேரில் சந்திச்சு உண்மை நிலையை அறியவும்.. ஆலோசனை வழங்கவும் பழகின மாதிரித்தான் தெரியுது. அதுவரை கண்டிராத மான்சியை சந்தித்ததும் அவர் உண்மையைச் சொல்லி பழகினது.. மான்சியின் மன நிலையை அறிவதோடு அமைந்திருக்கிறது. திருமணம் செய்யுற ஐடியாவில வந்திருந்தா ஏன் அவர் உடனவே உண்மைச் சொல்லிறார்.. அதுமட்டுமன்றி மான்சியை வேற நோக்கங்களுக்காக அணுகி இருந்தால் எதற்காக அவளை தனது வேலையிடம் வரை கூட்டி வந்து கதைக்கிறார். அவளை மனம் விட்டு கதைக்க வைக்கிறதும் அவளின் பிரச்சனைகளை இனங்காண்பதும் அவரின் நோக்கமா இருந்திருக்கலாம்

இது மருத்துவர்கள் செய்யும் காரியம் தானே அக்கா.

எதுஎப்படியோ முதல் சந்திப்போடு.. ஆள் மான்சியை விட்டு போயிட்டார் எல்லோ தொல்லை தீந்திச்சு என்று விட்டுத்தள்ளுவதுதான் மான்சிக்கு நல்லது..! ஒரு பொய் சொல்லுறவர் இன்னும் எத்தனை பொய்களைச் சொல்லுவாரோ. அது டாக்டரா இருந்தாலும். மான்சிக்கு பெரிய பிரச்சனைகள் இல்லை என்று கண்டதாலோ என்னவோ.. அவரே மான்சியோடு தொடர்ந்து தொடர்புகளை பேணுவதை தவிர்த்திருக்கலாம். ஏனெனில் அது தவறான நிலைக்கு அவரின் நிலைப்பாட்டை கொண்டு போய் விடும் என்று அவர் நினைத்திருக்கலாம். எனவே மான்சி.. அவரை முகநூலோடு நண்பராக வைச்சிருக்கிறதோட விடுறதுதான் நல்லது.

இந்த முகநூல் இப்படிப் பல பிரச்சனைகளுக்கு காரணமாகவும் இருக்குது அக்கா. அந்த வகையில் இது நல்லதொரு கதை அக்கா. :rolleyes:

தம்பி அவர் மான்சியின் மன நிலையை அறியும் நோக்கத்தோடு பழகி இருந்தால் ஒரு நாள் சந்தித்ததோடு நிறுத்தி இருக்க மாட்டார்...தொடர்ந்தும் நாம் நட்பாக இருப்போம் என பழகி இருக்க வேண்டும் என நினைக்கிறேன் அவ ஒரு நல்ல நிலைக்கு வரும் வரை...தன் வயதை உடனே மறைக்காமல் சொன்னதன் காரணம் மான்சி கடவுச்சீட்டையோ அல்லது வாகன அனுமதி பத்திரத்தை கொண்டு வரச் சொன்ன தன் காரணமாய் இருக்கலாம்...நான் நினைக்கிறேன் சில வேளை மான்சியைப் பார்த்ததும் ரிசாப்பிற்கு பிடிக்கவில்லையோ தெரியாது...என்ன காரணமோ தெரியவில்லை... இப்படி கதையை முடிக்க வேண்டும் என நினைத்து முடித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் மன நல மருத்துவராக இருக்கலாம்..நேரில் சந்திப்போம் பிடித்திருந்தால் மணம் புரிவோம்..என்று..ஏன் பொய் சொல்லி அழைக்க வேண்டும்.....இதன் மூலம் அந்த பெண்ணின் மனம் பாதிக்கபடாதா.. :rolleyes:

அக்காவின் கதையே சொல்கிறது.. சந்தித்து பிடித்திருந்தால்.. திருமணம் செய்வது பற்றியே... அல்லது நண்பர்களாகவே இருப்போம் என்று அவரும் சொல்லி இருக்கிறார்.

கதையின் படி இந்தப் பெண்ணோ.. படம் கூட காட்டாமல் தன்னை மறைத்தே முக நூலில் பழக விரும்பி இருக்கிறார். அதனால்.. மருத்துவருக்கு இந்தப் பெண்ணின் பிரச்சனை மட்டுமே முகநூல் வழி தெரிய வந்திருக்கலாம்.

நான் மன நல மருத்துவன்.. உன் பிரச்சனைக்கு.. உளவியல் ஆலோசனை தாறன் வா.. என்றால் எந்தப் பெண் தான் பார்க்கப் போவாள்..??!

அதுதான் மருத்துவர் தன்னை முதலில் மன நல மருத்துவர் என்றே அடையாளம் காட்டிக் கொள்ளாமல்.. சாதாரண ஆளைப் போல சொல்லி இருக்கிறார்.. உன்னை சந்தித்து பிடிச்சிருந்தா என்று.. ஆனால் அந்தப் பெண்ணோ இந்தச் சந்திப்போடேயே அவருக்கு தன்னைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பில் போயிருக்கிறா போல.. அக்காவின் கதை அப்படித்தான் சாரப்படுகுது.! அதுவே அவளின் தவறும் கூட. எப்படி ஒரு முன்பின் அறியாதவரை எடுத்த எடுப்பில் நம்புவாள். இதுவே அவளின் முன்னைய வாழ்க்கைக்கும் பிரச்சனையாக இருந்திருக்கலாம் இல்லையா..??!

ஆனால் மருத்துவரின் நோக்கம் திருமணம் அல்ல.. அந்தப் பெண்ணை நேரில் சந்தித்து.. அவள் எப்படியாவது இருந்திட்டுப் போகட்டும்... நல்ல ஆலோசனை வழங்கி அவளை பிரச்சனைகளில் இருந்து விடுவிக்க.. அவள் முகநூலில் சொல்வது உண்மையா.. உண்மையில் பிரச்சனை இருக்கா என்று கண்டறிவதற்காகக் கூட இருந்திருக்கலாம்.

ஏனெனில் அவள் முகநூலில் பகிர்ந்து கொண்டவை உண்மையா என்பதைக் கண்டறிய வேண்டுமே... அது பொய்யாகக் கூட இருக்கலாம் இல்லையா.

மருத்துவ அணுகுமுறைகளில் இப்படித் தானே அதிகம் அமைந்திருக்கிறது. நேரிடையாக.. சொல்லமாட்டார்கள் என்று நினைக்கிறன். :wub::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி அவர் மான்சியின் மன நிலையை அறியும் நோக்கத்தோடு பழகி இருந்தால் ஒரு நாள் சந்தித்ததோடு நிறுத்தி இருக்க மாட்டார்...தொடர்ந்தும் நாம் நட்பாக இருப்போம் என பழகி இருக்க வேண்டும் என நினைக்கிறேன் அவ ஒரு நல்ல நிலைக்கு வரும் வரை...தன் வயதை உடனே மறைக்காமல் சொன்னதன் காரணம் மான்சி கடவுச்சீட்டையோ அல்லது வாகன அனுமதி பத்திரத்தை கொண்டு வரச் சொன்ன தன் காரணமாய் இருக்கலாம்...நான் நினைக்கிறேன் சில வேளை மான்சியைப் பார்த்ததும் ரிசாப்பிற்கு பிடிக்கவில்லையோ தெரியாது...என்ன காரணமோ தெரியவில்லை... இப்படி கதையை முடிக்க வேண்டும் என நினைத்து முடித்தேன்.

அப்படியும் இருக்கலாம். ஆனால் பிடிக்கவில்லை என்றால் அவர் ஏன் தான் மன நல மருத்துவன்.. இங்க தான் வேலை செய்யுறன்.. தன்ர வயதை குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறார். எனக்கு அலுவல் இருக்கு போயிட்டு வாறன் என்றெல்லோ போயிருப்பார்.

உங்கள் கதையின் படி மருத்துவர்.. தான் மன நல மருத்துவன்.. என்ற உண்மையைக் கூட சொல்லி இருக்கிறார். அப்போ அவர் மான்சியின் பிரச்சனை தொடர்பாகத்தான் அவள் மீது மனிதாபிமான அக்கறை கொண்டு சந்தித்து ஆலோசனை சொல்ல முனைந்திருக்கிறார் என்று தான் எனக்கு படுகுது.

ஆனால் ஆலோசனைக்கு வா என்றால் மான்சி வரமாட்டாள் என்று அவர் கருதி இருக்கலாம் இல்லையா. சந்தித்த பின் அவளிடம் பெரிய பிரச்சனை இல்லை என்று கண்டதும் அவர் விலகி இருந்து கொண்டிருப்பார். அதுவும் விவாகரத்தான ஒரு பெண்ணிடம்.. தொடர்ந்து தொடர்புகளை பேண அவர் விரும்பி இருக்கமாட்டார் இல்லையா.

ஒரு உண்மையான மருத்துவன் இப்படித்தான் நடந்து கொள்வான். பிரச்சனை இல்லை என்று கண்ட பின்னும் தொடர்ந்து தொடர்புகளை பேணுவது அந்தப் பெண்ணை அவர் விரும்புவதாக அந்தப் பெண் நினைக்கவே வழிவகுக்கும் அல்லவா. அதுதான் அவர் அவளிடம் பெரிய பிரச்சனைகள் இல்லை என்று கண்டதும்.. அத்தோடு விலகி இருக்கக் கூடும். அது அவசியமும் கூட ஒரு நல்ல மருத்துவருக்கு.

என்னைப் பொறுத்தவரை ராசிப் மான்சிக்கு அவள் முகநூலில் பகிர்ந்து கொண்ட விடயங்கள் உண்மையாக இருந்தால்.. தன்னால் நல்லது செய்ய முடியும் என்றால் செய்வதோடு ஒதுங்கி விட வேண்டும் என்பதையே நோக்காகக் கொண்டு செயற்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

ஒருவேளை வந்தவர்.. ஒன்றும் சொல்லாமல் மான்சியை பார்த்துப் பிடிக்கல்லை என்றதும்.. ஏதாவது சொல்லி கழன்று போயிருந்தால் கூட மான்சி அவர் மீது குற்றம் சொல்ல முடியாது தானே, ஏனெனில் அவர் சொல்லி இருக்கிறார்.. பார்த்துப் பிடிச்சிருந்தால் என்று. மான்சியும் அதற்கு ஒப்புக்கொண்டே போயிருக்கிறாள். இந்த விடயத்தில் தப்பு என்று அந்த டாக்டரில் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.. என்பதையே சொல்ல வருகிறேன் அக்கா.

மற்றும்படி உங்கள் கற்பனைக் கதைக்கு நான் அதிகம் விளக்கம் கொடுக்க முற்படுகிறனோ என்று தென்படுகிறது.

நன்றி அக்கா உங்கள் கன்னிக் கதைக்கு விமர்சனம் செய்ய அனுமதித்தற்கு. :rolleyes: :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் முதல் கதைக்கு ஒரு பச்சை குத்தியாச்சு ரதி அக்கா...அத்தோடு மேலும்,மேலும் பல ஆக்கங்களை கொண்டு வர என்னுடைய வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறன்.நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இதைத் தான் சொல்வது மேல் சாடிஸம் என்டு...நீங்கள் கதையை வடிவாய் வாசிக்கவில்லை போல கிடக்குது...மான்சிக்கு தெரியும் இந்த நட்பு திருமணத்தில் முடியாது என நான் ஏற்கனவே என் கதையில் எழுதியிருக்கேன் மான்சிக்கும் ரிசாப்பிற்கும் ஒரு விதத்தில் கூட பொருத்தம் இல்லை என்டு மான்சியே ரிசாப்பிடம் சொல்லி இருக்கிறாள் பிறகு எப்படி அது திருமணத்தில் போய் முடியும் என அவள் நம்புவாள்...இங்கே நான் எழுத வந்த கருப்பொருள் அவர்களின் நட்பு கைகூடவில்லை என்டே தவிர அவர்களின் நட்பு காதலில் முடிய வேண்டும் என்டு சொல்லவில்லை...உங்களின் இந்த வரிகளிலே தெரிகிறது நீங்கள் ஒரு சாதரண ஆனிலும் கீழ் என்டு

//அவளின் தவறும் கூட. எப்படி ஒரு முன்பின் அறியாதவரை எடுத்த எடுப்பில் நம்புவாள். இதுவே அவளின் முன்னைய வாழ்க்கைக்கும் பிரச்சனையாக இருந்திருக்கலாம் இல்லையா..??!//

நீங்கள் இப்படி சொல்வதன் மூலம் அவளை கீழான,கேவலமான ஒரு பெண்ணாகவே நீங்கள் அடையாளம் காணுகிறீர்கள்...ஏனென்டால் ரிசாப் கூப்பிட்டவுடன் அவள் போனதால் அவள் கெட்டவளாகிப் போனால்...உங்களைப் பொறுத்த வரை கூப்பிட்டவனின் மேல் பிழை இல்லை போனவளில் தான் பிழை... இந்த கதையின் மூலமாகவது உங்கள் உண்மையான சுயரூபத்தை காட்டியதிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படி சொல்வதன் மூலம் அவளை கீழான,கேவலமான ஒரு பெண்ணாகவே நீங்கள் அடையாளம் காணுகிறீர்கள்...ஏனென்டால் ரிசாப் கூப்பிட்டவுடன் அவள் போனதால் அவள் கெட்டவளாகிப் போனால்...உங்களைப் பொறுத்த வரை கூப்பிட்டவனின் மேல் பிழை இல்லை போனவளில் தான் பிழை... இந்த கதையின் மூலமாகவது உங்கள் உண்மையான சுயரூபத்தை காட்டியதிற்கு நன்றி.

பொதுவா நீங்கள் தானேக்கா சொல்லுவீங்க.. பாதிக்கப்படுவது பெண்.. பாதிக்கச் செய்வது ஆண் என்று. இப்படியான கருத்துக்கள் தான் சமூகத்திலும் அதிகம் இருக்குது. அப்படி இருக்கும் போது.. நட்பை தாண்டி.. வேறதை மான்சி எதிர்பார்த்துப் போயிருந்தால் அது தப்புன்னு தான் சொல்லி இருக்கிறேன் அக்கா. ஏன்னா ராசிப் கூட முகநூல் நட்புக்கு அப்பால் அவளை சந்திக்க வரேல்ல. அவனுக்கு அதற்கு அப்பால் அவளைப் பற்றியும் தெரிஞ்சிருக்கல்ல.. என்பதை கதையில சொல்லி இருக்கீங்க. அப்படி இருக்க எப்படி ராசிப்பை குற்றவாளி ஆக்க முடியும் அக்கா. :rolleyes: :rolleyes:

'முகநூல் நட்பும் விசித்திர நண்பரும்' கதை குறை சொல்லும் அளவுக்கு இல்லை. ஆனால் இந்த அக்கா, தம்பி பாச மலர்களின் அன்புத் தொல்லையைத் தான் தாங்க முடியலடா சாமிமிமி..... :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி...நூணாவிலான் சொன்ன மாதிரி பொய் சொல்லாத ஆண்களைக் கண்டுபிடிப்பது கஸ்டம் தான் நூற்றுக்கு தொன்னூறு வீதமான ஆண்கள் அப்படித் தான் இருக்கிறார்கள்...ஏன் வீணா உங்களுக்கு உங்கள் வயதிற்கேற்ற பெண்கள் கிடைக்கவில்லையா...நல்ல காலம் அவர்கள் உங்களை நிராகரித்தது இல்லா விட்டால் வாடா போடா எனச் சொல்லி உங்களை அடிமை மாதிரித் தான் வைத்திருப்பார்கள் :lol:

'முகநூல் நட்பும் விசித்திர நண்பரும்' கதை குறை சொல்லும் அளவுக்கு இல்லை. ஆனால் இந்த அக்கா, தம்பி பாச மலர்களின் அன்புத் தொல்லையைத் தான் தாங்க முடியலடா சாமிமிமி..... :lol: :lol:

குட்டி நெடுக்சைப் பொறுத்த வரையில் பெண்கள் எல்லாம் குற்றவாளிகள் ஆண்கள் எல்லாம் நிரபராதிகள் அது தான் அவரை இந்தக் கதை அதிகம் பாதித்திருக்கிறது என நினைக்கிறேன்...அது தான் கதையை வாசிக்காமல் அவசரப்பட்டு பதில் எழுதியிருக்கிறார்...நான் எழுதிய இக் கதையில் நான் நினைத்திருந்தால் அவ் ஆணை சும்மா ஒரு கடையில் வேலை செய்யும் ஒரு நபராகவோ அல்லது கணக்களாரவோ காட்டியிருக்கலாம் ஆனால் நான் அப்படி எழுதவில்லை...இக் கதையில் வரும் மான்சியை மனநிலை பாதிக்கப்பட்டவராக நான் காட்டவேயில்லை அப்படி இருந்தும் தம்பி மான்சியை குணமாக்கத் தான் ரிசாப் நெருங்கிப் பழகி இருப்பார் என சொல்வது வேடிக்கையானது...தம்பி சொல்வது போல மான்சி ரிசாப்பை திருமணம் செய்ய ஆசைப்பட்டிருந்தால் மான்சி ரிசாப்பை சந்தித்து வீடு போனதும் நீங்கள் ஏன் வயதை குறைத்து சொன்னீர்கள் என் பேசி மெயில் அனுப்பி இருக்க மாட்டாள் எப்படியாவது ரிசாப்பை மயக்கி திருமணம் செய்ய முயன்று இருப்பாள்...பெண்களை கேவலமாய் நினைக்கும் நெடுக்ஸ் தம்பி போன்றவர்களுக்கு நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் ஆக்கள் அது ஆணானோ பெண்ணோ வயசு என்று பெரிதாக பார்ப்பது இல்லை. அதைவிட உடல் வசிகரம் / அமைப்பு, மற்றும் இதரவிடயங்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது எனது கணிப்பு. நான் முன்பு வேலை செய்த இடங்களில் பல பொடிகளின் காதலிகள் அல்லது மனைவிமாரின் வயது மூன்று, ஆறு, ஒன்பது என்று அவர்களை விட அதிகம்.

அதற்கு அவரிடம் இருந்து வந்த மெசெயில் தான் ஒரு மன நல வைத்தியர் என்டபடியால் எனக்கு என்ன பிரச்சனை எனத் தெரிந்து கொள்ளத் தான் பழகியதாக சொல்கிறார்...

இதில் 'எனக்கு' என்று சொல்லப்படுவது எவரை? மனநல வைத்தியரையா அல்லது மற்றைய பெண்ணையா?

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பச்சை குத்தியாச்சு ரதி .அத்தோடு மேலும்,மேலும் பல ஆக்கங்களை கொண்டு வர என்னுடைய வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் ஆக்கள் அது ஆணானோ பெண்ணோ வயசு என்று பெரிதாக பார்ப்பது இல்லை. அதைவிட உடல் வசிகரம் / அமைப்பு, மற்றும் இதரவிடயங்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது எனது கணிப்பு. நான் முன்பு வேலை செய்த இடங்களில் பல பொடிகளின் காதலிகள் அல்லது மனைவிமாரின் வயது மூன்று, ஆறு, ஒன்பது என்று அவர்களை விட அதிகம்.

இதில் 'எனக்கு' என்று சொல்லப்படுவது எவரை? மனநல வைத்தியரையா அல்லது மற்றைய பெண்ணையா?

மான்சி என்னும் அந்தப் பெண்ணைத் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி

இன்றுதான் வாசித்தேன்

நல்லதொரு தலைப்பு

இன்றைய முக்கியவிடயம் இது

எனது மக்கள் எல்லோரும்வைத்திருக்கிறார்கள்

அவர்களுக்கு அடிப்படையை நான் சொல்லியிருக்கிறேன்

அவர்கள் அதிலிருந்து மிக நீண்ட தூரம்போய்விட்டார்கள் என்று தெரியும்

ஆனால் நான் சொல்லிய அடிப்படையை மீறவில்லை

அதுவே அவர்களுக்கான பாதுகாப்பு

அந்த பாதுகாப்பு வலையம்

தெரியாதவர்களுடன் தொடர்பு வைக்கக்கூடாது என்பதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி உங்கள் கன்னிப்படைப்புக்கு வாழ்த்துக்கள்.இந்தக்கதையில் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக கலியானம் கட்டுதல் மற்றும் சாதி என்பவை வருவதைப்பாக்கும் போது இது எங்கட சனம் போல இருக்கு. :D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.