Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கலைமாமணி" முகத்தார் யேசுரட்ணம், காலமானார்

Featured Replies

சினிமா, தொலைக்காட்சி, வானொலி, மேடை, என கலைத்துறையின் அனைத்துத் துறைகளிலும் சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக புகழோடு விழங்கிய "கலைமாமணி" இளவாலை, முகத்தார் யேசுரட்ணம் அவர்கள் 27-11-10 அதிகாலையில் பாரிஸில் காலமானார்.

இலங்கை வானொலியில் இவரது எழுத்து, நடிப்பு, இயக்கத்தில் ஒலிபரப்பான 'முகத்தார் வீடு" நாடகம் சுமார் ஜந்து வருடங்களாக (268 வாரங்கள்) ஒலிபரப்பாகி சாதனை படைத்ததால் இவருடைய பெயருக்கு முன்னால் "முகத்தார்" என்னும் பெயர் இணைந்துகொண்டது. இந் நாடகம் பின்னர் பாரிஸில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.

1979ல் வெளியான "வாடைக்காற்று" திரைப்படத்தில் பொன்னுக்கிழவன் என்னும் பாத்திரத்தில் திறம்பட நடித்திருந்ததால் அன்றைய ஜனாதிபதி திரு.ஜே.ஆர். ஜயவர்த்தனா அவர்களினால் இவருக்கு ஜனாதிபதி விருதும் பின்னர் 1982ல் "விவசாய மன்னர்" என்னும் கௌரவ விருதும் கிடைத்திருந்தது.

மேலும் இலங்கையில் தயாரான "கோமாளிகள்" "ஏமாளிகள்" போன்ற திரைப்படங்களிலும், பாரிஸில் தயாரான சத்தியகீதை, இன்னுமொரு பெண், முகத்தார் வீடு, ராஜாவின் ராகங்கள், போன்ற திரைப்படங்களிலும், நூற்றுக்கும் மேற்பட்ட மேடை, வானொலி நாடகங்களிலும் நடித்து "கலைமுரசு" "கலைப்பணிச் செல்வர்" "கலைவேள்" "கலைப்பூபதி" "ஈழவிழி" "கலைமாமணி" போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்

அன்னாரின் பூதவுடல் பிரான்ஸில் 2- rue de l Egallte 95500 Gonesseல் உள்ள அவரது மகளின் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கிப்பட்டிருக்கின்றது. இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

சினிமா, தொலைக்காட்சி, வானொலி, மேடை, என கலைத்துறையின் அனைத்துத் துறைகளிலும் சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக புகழோடு விழங்கிய "கலைமாமணி" இளவாலை, முகத்தார் யேசுரட்ணம் அவர்கள் 27-11-10 அதிகாலையில் பாரிஸில் காலமானார்.

எனது துயர பகிர்வினை தெரிவிக்கின்றேன். சின்ன வயசில் பெரிய வானொலி பெட்டியல இவரது நாடகம் வெள்ளிக்கிழமை தோறும் மாலை 7.30 என நினைக்கின்றேன் கேட்ட ஞாபகம். என் அம்மம்மா எங்கிருந்தாலும் முகத்தாரின்ர நாடகம் கேளாது இருக்க மாட்டா..

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அன்னாரது குடும்பத்தவருக்கு ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன், அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்!!

ஆழ்ந்த அனுதாபங்கள்.

எனது பெற்றோர்கள் 'முகத்தார் வீடு' நாடகத்தை விரும்பி கேட்பார்கள். சிறிய வயதில் கேட்ட இவரது குரல் எனக்கு இன்னும் ஞாபகம்.

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சிறந்த கலையார்வம் உள்ள ஒருவர். அவை இழந்து தவிக்கும் நாடக உலகுக்கும்

மக்கள் உற்றார் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தாருக்கு என் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார் ஜேசுரட்ணம் அவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தின் மூத்த நாடக, திரைக் கலைஞன் 'முகத்தார்' யேசுரட்ணம் காலம் ஆகினார்

ஈழத்தின் தமிழ்க் கலைப் பதிவேட்டில் தனக்கானதொரு தனியான பதிவினை தொடர்ந்து வைத்திருந்த 'முகத்தார் யேசுரட்ணம்' அவர்களின் பதிவு முற்றுப்பெற்றள்ளது. அவரின் படத்தின் கீழ் திரு சந்தியாப்பிள்ளை யேசுரட்ணம் - முகத்தார் யேசுரட்ணம் (26.12.1931 - 27.11.2010) எனக் குறிப்பிட்டாயிற்று. 04.12.2010 அன்று பாரிசின் வடக்கே அமைந்த கார்ஜ் லே கோணேஸ் என்ற கிராமத்தில் இவரது மண்ணுடல் மண்ணில் சங்கமிக்கும் நாளாகவும் குறிப்பிடப்பட்டாயிற்று.

இப்போது நினைவுத் தடங்களில் மட்டும் தொடர்ந்த பயணத்தைக் கொள்ளும் முகத்தார் யேசுரட்ணம், ஈழத்தின் திரை, நாடக வரலாற்றில் தனக்கானதொரு தனி முத்திரை பதித்தவர். 1970களில் இலங்கை வானொலியில் இவரது எழுத்து, நடிப்பு, இயக்கத்தில் ஒலிபரப்பான பெரும் புகழ்பெற்றிருந்த 'முகத்தார் வீடு' நாடகத்தால் இவருடன் 'முகத்தார்' இறுக்கமாக ஒட்டிக் கொண்டது. இவர் காலம் ஆகிய பின்னரும் இந்த அழகிய 'முகத்தார்' யேசுரட்ணமாக தொடர வைத்திருக்கிறது. யாழ்ப்பாணப் பேச்சு வழக்கின் ஒலிக் குரலாக வானலையில் தவழ்ந்து வந்து காது குளிர அள்ளிச் சென்ற கலைப் படைப்பு முகத்தார் வீடு. 1990களில் தனது புலப் பெயர்வின் பின்பும் அவரது கலைப் பயணம் புதிய தளத்தில் தொடர்ந்தது. இதனால் முகத்தார் வீடு பிரான்சில் திரைச் சித்திரமாகவும் தயாரிக்கப்பட்டது.

1979ல் வெளியான "வாடைக்காற்று" திரைப்படத்தில் பொன்னுக்கிழவன் என்னும் பாத்திரத்தில் திறம்பட நடித்திருந்ததால் அன்றைய ஜனாதிபதி திரு.ஜே.ஆர். ஜயவர்த்தனா அவர்களினால் இவருக்கு ஜனாதிபதி விருதுகிடைத்தது. மேலும் இலங்கையில் தயாரான "கோமாளிகள்" "ஏமாளிகள்" போன்ற திரைப்படங்களிலும், பாரிஸில் தயாரான சத்தியகீதை, இன்னுமொரு பெண், முகத்தார் வீடு, ராஜாவின் ராகங்கள், போன்ற திரைப்படங்களிலும், நூற்றுக்கும் மேற்பட்ட மேடை, வானொலி நாடகங்களிலும் நடித்தவர். குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் அதிக அக்கறையுடன் கவனம் பெற்றுள்ள குறும்ட முயற்சிகளிலும் இவரால் தடமிடப்பட்டது. ஓசை மனோவின் நெறியாள்கையில் வெளிவந்த 'தாகம்' குறும்படத்தில் இவரது பாத்திரம் மொழி பேசாது திரை மொழியாக படையலிட்டது. புலம் பெயர் சூழலில் தனிக் கவனம் பெற்ற இன்னுமொரு குறும்படமான இயக்குநர் பராவின் நெறியாள்கையில் வெளியிட்ப்பட்ட 'பேரன் பேத்தி' அறிமுக விழாவில் 'முகத்தார் யேசுரட்ணம்' சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு மூத்த கலைஞர் கெளரவிப்பைப் பெற்றிருந்தார். இவ்வாறாக பல கலையுலக ஆர்வலர்களின் பாராட்டுதல்களையும் நேசிப்பையும் பெரிதும் பெற்றிருந்தார் முகத்தார் யேசுரட்ணம்.

தனது வாழ்வுப் பயணத்தில், ஈழத் தமிழ் கலைத் தடையத்தை பதிந்து சென்றுள்ளார் 'முகத்தார் யேசுரட்ணம்'. விடைபெற்றுச் சென்று்ள்ள முகத்தாரின் கலைத் தடங்களில் எமது குவிந்த கைகளால் மலிரிடுகிறோம்.

முகத்தாருக்கு என் அஞ்சலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.