Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தற்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரியவேண்டியது என்னவென்றால்.... :unsure:

ஒருவேளை ரதி தற்கொலை செய்துகொண்டால் :( லண்டன் பொலிஸ் நெடுக்கரை விசாரிக்குமா? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ரதி தற்கொலை செய்யப் போறேன் என்று எங்க சொல்கிறா? செத்தபின்னும் அழகாய் இருக்கவேண்டும் என்றுதான் சொல்கிறா! தாமரை நெஞ்சம்! :lol: அவ ஒன்றும் கோழையில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரியவேண்டியது என்னவென்றால்.... :unsure:

ஒருவேளை ரதி தற்கொலை செய்துகொண்டால் :( லண்டன் பொலிஸ் நெடுக்கரை விசாரிக்குமா? :wub:

நோ சான்ஸே இல்ல. உங்கள தான் முதல் விசாரிக்கும்.

.என்னைப் பொறுத்த வரை தற்கொலை செய்ய சிறந்த வழி நஞ்சு குடிக்கிறது தான்.என்ன குடிக்கும் போது கொஞ்சம் நேரம் கச‌க்கும் ஆனால் பிறகு ஓகேயாகி விடும்[செத்தாலும் வடிவாயிருப்பன் அது தான் ரொம்ப முக்கியம்.]

ரதி, நஞ்சை விட்டு தமக்கு பிடித்த உணவை செய்து சாப்பிட்டு விட்டு (மறக்காமல் பாத்திரங்களை கழுவி வைக்கவும் - வேறு ஆட்களை போட்டுத்தள்ள வேண்டாம்) ஆறுதலாக படுத்து தற்கொலை செய்வது இலகுவாக இருக்கும். - இது ரதிக்கு சொல்லப்பட்டதல்ல. ஏனென்றால் அவர் தற்கொலை செய்யப்போவதில்லையே!

நோ சான்ஸே இல்ல. உங்கள தான் முதல் விசாரிக்கும்.

உண்மைதான். இசைக்கலைஞன் தான் கிட்டடியில்(!) ரதியை கனடாவிலிருந்து வந்து சந்தித்ததாக கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி இறந்த பிறகு அழகாய் இருந்து யாருக்கும் பிரயோசனம் இல்லை. உயிருடன் உள்ள போது உள்ளும் , புறமும் அழகாக வைத்திருந்தாலே எல்லாம் தானாக வரும்.

பி.குறிப்பு: அடுத்த முறை இசை லண்டன் வரும் போது நிச்சயமாக உங்களை சந்திக்க ஆவன செய்கிறோம். :D

http://www.tamilmp3tube.com/tamilmp3/music/2005-1/Anbe Sivam/Anbe_Sivam.mp3

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரியவேண்டியது என்னவென்றால்.... :unsure:

ஒருவேளை ரதி தற்கொலை செய்துகொண்டால் :( லண்டன் பொலிஸ் நெடுக்கரை விசாரிக்குமா? :wub:

ரதி அக்கா தற்கொலை செய்யுறதிற்கு நாங்க என்ன செய்யுறது. ஆனால் யாரும் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு தற்கொலையை நாடக் கூடாது என்பது பொதுவான விருப்பம்.

ஏலவே முன்னர் ஒருமுறையும் இவ்வாறான ஒரு பதிவை ரதி அக்கா விட்டிருந்தா என்று நினைக்கிறேன். அந்த வகையில் அவர் வாழ்க்கையில் ஏதோ சிக்கலை உணர்கிறார் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு தீர்வையும் அவரே தற்கொலைக்கு அப்பால் தேடிக் கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி எவருக்கும்.. தற்கொலைகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கமாட்டம். அதை ஊக்குவிக்கும் வகையில் கருத்தெழுதவும் மாட்டம். :)

Edited by nedukkalapoovan

-------------------

இதில் பொறுப்பாக பதில் எழுதிய நெடுக்கு பாராடுக்குரியவர்....பெண்களை வெறுப்பவர் என்று அடையாளம் காணப்பட்ட ஒருவர் தான் ஒரு பெண்ணின் தற்கொலை தொடர்பான திரிக்கு பொறுப்புடன் பதில் சொல்கின்றார் !!

நெடுக்கு ஜயா அவர்கள் பல பெண்களின் தற்கொலைக்கு காரனமாக இருந்து இருக்கலாம்,. அதனால் சரியான காரணங்கள் தெரிகிறது.

எனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வந்தால் நான் வந்து தூக்கில் தொங்க மாட்டேன்[கண்,முழி எல்லாம் பிதுங்கி அழகில்லாமல் போய் விடுவேன்.]..

ரதி....முதலில் அந்த எண்ணம் வராமல் பாத்துக்கொள்ளுக்கோ.

இப்படியான எண்ணம் வருபவர்களுக்காக............ஒரு பாடல்:

வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாகும்

ஆசையிருந்தால் நீந்திவா

(வாழ)

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்

கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்

காட்சி கிடைத்தால் கவலை தீரும்

கவலை தீர்ந்தால் வாழலாம்

(வாழ)

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை

கையில் கிடைத்தால் வாழலாம்

கருத்தில் வளரும் காதல் எண்ணம்

கனிந்து வந்தால் வாழலாம்

கன்னி இளமை என்னை அணைத்தால்

தன்னை மறந்தே வாழலாம்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு ஜயா அவர்கள் பல பெண்களின் தற்கொலைக்கு காரனமாக இருந்து இருக்கலாம்,. அதனால் சரியான காரணங்கள் தெரிகிறது.

அப்படி என்றால் மிக சந்தோசப்பட்டிருப்பன். ஏனென்றால் என்னால ஒரு சில ஆம்பிளைக்கலாவது தப்பிட்டாங்களே என்று. :D

எனக்கு தெரிஞ்சு இன்னும் யாரும் அப்படிப் பண்ணல்ல. பண்ணிக்கிற அளவுக்கு யாரோடும் நான் நெருங்கிப் பழகிறதும் இல்ல. :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள்...தற்கொலை செய்யக் கூடாது என எழுதிய அனைவருக்கும்,ரதி தற்கொலை செய்ய மாட்டாள் என எழுதியவர்களுக்கும் எனது நன்றிகள்...நிழலி சகாரா அக்காவுக்கு பெண்களைத் தெரியும் நான் தற்கொலை செய்ய மாட்டேன் ஏதோ மன உளைச்சலில்எழுதி இருப்பேன் என்ட‌ நம்பிக்கையில் எழுதி இருப்பார்...சகாரா அக்கா உங்கள் மகளா இது? அழகான பொண்ணு

எனக்குத் தெரியவேண்டியது என்னவென்றால்.... :unsure:

ஒருவேளை ரதி தற்கொலை செய்துகொண்டால் :( லண்டன் பொலிஸ் நெடுக்கரை விசாரிக்குமா? :wub:

நான் இசைக் கலைஞனின் இந்த கருத்துக்கு கடுமையான என் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்...இதில் நெடுக்ஸ்சை நக்கலடிக்கிற மாதிரி என்னைத் தான் நக்கல் அடித்து இருக்கிறீங்கள்...இன்னுமொரு தரம் இப்படி கற்பனை செய்து எழுதினீங்கள் என்டால் நான் யாழ் களேபரம் 3 எழுத வேண்டி வரும் அதற்குப் பிறகு என்னோடு கோபிக்க கூடாது சொல்லிப் போட்டன்...அத்தோடு நான் உண்மையாகவே தற்கொலை செய்து கொண்டால் கூட‌ கறுப்பி சொன்ன மாதிரி உங்களைத் தான் மாட்டி விடுவன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ..................ரதியை கண்டாச்சு ...............நான் பயந்துட்டேன் ......பிள்ளை .பிறகு புலி புலி என்று புலி ....(மிருகம்)

வந்த ...........க தை யாய் போக கூடாது ..........சொல்லிபோட்டன்..........

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுதான் இதைப்பார்த்தேன்

( உளவியல் படித்தனீர்களே இதை கண்டு பிடிக்க என்று கேட்பவர்கள் இதை வாசிக்கவேண்டாம்)

நான்இது போன்ற சில தற்கொலைகளை நேரில் கண்டுள்ளேன். அதற்குள் நான் கண்டது

தான் இறப்பதைவிட எவருக்கோ பாடம் படிப்பிக்கவேணும் அல்லது இன்னொருவரை மாட்டிவிட்டு அவர் இதனால் வாழ்க்கை பூராகவும் அவமாகப்படணும் என்பதுதான் இவர்களை தற்கொலையைச்செய்ய தூண்டுகின்றன. அதனாலேயே கோரமான முடிவுகளைக்கூட மிகத்துணிவாகவும் திட்டம்போட்டும் செய்யமுடிகிறது.

ரதிக்கு அப்படி எவர் மீதாவது வெறுப்பிருந்தால் மறந்து மன்னித்துவிடவும்.

எவர் என்ன பாடுபட்டாலென்ன நாம் எமக்கு கிடைத்த ஒரே ஒரு சந்தர்ப்பத்தை அதற்காக எதற்கு வீணாக்குவான்.????? :(

  • கருத்துக்கள உறவுகள்

ரதியிடம் இருந்து இப்படியான ஒரு திரியை எதிர்பார்க்கவில்லை

அழகுக்கும் வாழ்வுக்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ அதே போலத்தான் சாகும் காரணத்துக்கும்....

யாழில் துணிச்சலான ஒரு பெண்ணிடம் இருந்தே இப்படியான திரி வருகுதென்றால், மற்ற பெண்களின் நிலை

---------------------

@வல்வைசாகரா,

ஒரு பெண் தற்கொலை பற்றி எழுதி நன்றி வணக்கம் போடுகின்றார்...அது பற்றி ஒன்றும் எழுத மனம் வரவில்லையா? ஆறுதலாக நாலு வார்த்தை? சும்மா கவிதைகளில் மட்டும் பெண்ணியம், வாழ்வு என்று பேசினால் சரியாக இருக்காது சாகரா.....

இதில் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள்...தற்கொலை செய்யக் கூடாது என எழுதிய அனைவருக்கும்,ரதி தற்கொலை செய்ய மாட்டாள் என எழுதியவர்களுக்கும் எனது நன்றிகள்...நிழலி சகாரா அக்காவுக்கு பெண்களைத் தெரியும் நான் தற்கொலை செய்ய மாட்டேன் ஏதோ மன உளைச்சலில்எழுதி இருப்பேன் என்ட‌ நம்பிக்கையில் எழுதி இருப்பார்...சகாரா அக்கா உங்கள் மகளா இது? அழகான பொண்ணு

எப்படியாவது ஏதாவது பிரச்சனைகளில் மாட்டிவிட்டுவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கும் நிழலிக்கு நன்றிகள். நிழலி நான் எங்கும் பெண்ணியம் பேசியதாக நினைவில்லை. அப்படியே பெண்கள் சார்பாக நான் எங்கேனும் அழுத்தமாக பேசியிருப்பின் பெண்ணியம் என்பதற்குள் போட்டு குழம்பிக் கொள்ளாதீர்கள். பெண்ணின் அடிப்படையில் மிக்க வேண்டுதலுக்கு உரியதாக இருக்கக்கூடிய விடயங்களை எப்படி பெண்ணியம் என்று வகைப்படுத்தப்படுகிறது? சத்தியமாக இதுதான் பெண்ணியம் என்று தெரியாது ஆனால் மனித நேயம் என்பது எது என்று உணரப்படுவதாலேயே எங்கும் ஏதாவது எழுதித்தள்ளியிருப்பேன். என்னை ஆணியவாதி, பெண்ணியவாதி என்று பிரிவுகளுக்கு உட்படுத்தாமல் மனித நேயவாதியாக எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி அடைவேன். அதே நேரம் சாதுரியமாக என்னை நியாயப்படுத்தும் ரதிக்கும் பல நன்றிகள். என் வீட்டுக் குட்டித் தேவதையின் சார்பிலும் ரதிக்கு ஒரு நன்றி.

சரி விடயத்திற்கு வருவோம்.

தற்கொலை என்பது இயலாமையில் அதிகூடிய விரக்தி நிலையாகும். இந்த விரக்தி நிலையை வென்ற மனிதர்களை அணுகிப்பார்த்தால் பெருமை கொள்ளத் தோன்றும். படிப்படியாகத் துன்பநிலையை அடைந்தவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது மிகவும் குறைவு. திடுதிப்பென துன்பங்களைச்சந்திப்பவர்களுக்கு அதிலிருந்து மீளக்கூடிய மனவலிமை மிகக்குறைவானதே. இவர்களே எதிலும் தெளிவில்லாமல் மனக்குழப்பங்கள் நிறைந்தவர்களாக இருப்பார்கள். தற்கொலை மனநிலை என்பது ஆண்பெண் என இருபாலருக்கும் இருக்கும். எங்கள் சமூகத்தில் பெண்களே அதிகமாக இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது அதிகம். அதற்கு பலவகைக் காரணங்கள் உண்டு. குறிப்பாக இன்னதால், இதற்காக என்ற காரணங்களுக்கு அப்பால் நெடுக்காலபோவான் கூறியதைப் போன்று பிரச்சனைகளில் இருந்து வெளியே வரும் வழிகள் அறியப்படாமையே பிரதான காரணியாக இருக்கிறது. இங்குதான் எங்கள் சமூகவாழ்வியல் பெண்களை அதீதமாக பாதிக்கிறது. குடும்ப கௌரவம், தங்களின் பிரச்சனைகளை மனந்திறந்து பேச முற்படும் பெண்கள்மீதான எள்ளி நகையாடல், போன்ற காரணிகள் மேலும் அவர்களை மனவுடைவிற்கு ஆளாக்கிவிடுகிற அபாயத்தை சமூகம் தன்னை அறியாமலே செய்து கொண்டிருக்கிறது. ஏன் இந்தக் களத்தில்கூட பெண்கள் சம்பந்தமான செய்திகள் என்ன பாடுபடுகின்றன என்பதை எத்தனை பேர் உணர்கிறார்களோ தெரியவில்லை. அண்மையில் யாழில் ஒரு பெண்பிள்ளைக்கு எயிட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தியின் பின்னால் எழுதப்பட்ட கருத்துகளை அந்தப்பெண்பிள்ளையின் முகத்தை அறியாதவர்களாகிய நாம் எப்படியெல்லாம் எழுதினோம். உண்மையிலேயே அந்தப் பெண்பிள்ளை இந்நிலைக்கு ஏன் தள்ளப்பட்டாள்? யாராவது அதைத் தெரிந்து கொள்ள எத்தனித்து அறிந்தீர்களா? அவளைப்பற்றி அசிங்கமாக எழுதும் வக்கிரமிக்க பேனாக்கள் அவளுக்கான எதிர்காலத்தைபற்றிய தீர்வை முன்வைத்தனவா? சந்திக்கு வந்த சாட்சிகள் சில அவற்றையே மனிதாபிமானமாக கையாளத்தெரியாமல் சீரழிப்பதைப் பார்க்கும்போது சந்தர்ப்பவசத்தால் ஏற்படுத்தப்பட்ட துன்பங்களுக்கு விடுதலையை எப்படி இந்தச் சமூகத்திடம் எதிர்பார்க்கமுடியும்? இது ஒரு சின்ன உதாரணமே. வெளியே சொல்ல முடியாமல் எத்தனையோ விடயங்கள் சொன்னால் வெந்து சாவதைத் தவிர வேறெதுவும் ஆகாது.

அடுத்து தற்கொலையை எவரும் திட்டமிட்டுச் செய்வதில்லை அப்படிச் செய்தால் அது தற்கொலை இல்லை கொலை. இயலாமை நிலைதான் தற்கொலைகளைத் தோற்றுவிக்கும்போது திட்டமிட்டுச் செய்வது என்பது இயலுமான காரியம் அல்லவா! தற்கொலை என்ற சிந்தனை வந்துவிட்டால் வெறிநிலைக்குக் கொண்டு சென்றுவிடும் அது புறச்சூழல் எதையும் சிந்திக்காது.

எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. அது முட்டாள்களின் வேலை. நான் செத்தால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இருக்காது என்று எவரேனும் தற்கொலை செய்வார்களானால் அதுவே அவர்கள் மற்றவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துன்பம் என்பதை அவர்கள் உணரவேண்டும் அல்லது உணர்த்தப்படவேண்டும். தற்கொலை என்ற எண்ணத்திற்குள் உட்பட்டவர் பேதலித்த நிலையிலேயே இருப்பார். அவருக்கு தன்னைத்தானே தெளிவித்துக்கொள்ள முடியாது. ஆயிரத்தில் ஒருவர், இருவர் மாத்திரமே அப்படித் தெளிவடையக்கூடியவர்கள் அப்படி தற்தெளிவை அடைந்தவர்கள் மகான்களாக மாறுவது உறுதி. என்னவோ எழுத வெளிக்கிட்டு எங்கேயோ வந்து நிற்கிறேன்போல் இருக்கிறது.

நெடுக்காலபோவான் பல இடங்களில் பெண்களைச் சீண்டி எழுதுவதை நான் கண்டிருக்கின்றேன். அவை எதிரித்தனத்துடன் எழுதப்படுபவை அல்ல என்பதை உணர்ந்திருக்கின்றேன். ஏதோ வகையில் பெண்களை முன்நகர்த்துவதற்கு அவர் எழுதும் எதிரிடையான எழுத்துக்களாகவே அவற்றை என்னால் பார்க்க முடிகிறது. அவருடைய முயற்சிகள் இதுவரையும் எத்தகைய நற்பலன்களையும் கொடுத்ததாகத் தெரியவில்லை. இருப்பினும் இந்தத் திரியில் நெடுக்காலபோவான் எழுதிய விடயம் தற்கொலை மனநிலையில் இருப்பவர்களை எப்படி சமநிலைக்குக் கொண்டுவரலாம் என்பதை அழகாக எழுதி இருக்கிறார். இதில் படித்த விடயம் என்பதற்கு அப்பால் பல விடயங்களை கையாண்டிருக்கக்கூடிய அனுபவத்தைக் காணமுடிகிறது. பாராட்டுக்கள் நெடுக்குத் தம்பி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா தற்கொலையைப் பற்றி நீங்கள் எழுதியது உண்மை தான் ...நன்றி உங்கள் கருத்திற்கு அதே நேரம் சில நேரங்களில் பிரச்சனைகளில் தப்புவதற்காகவும் தற்கொலை செய்வார்கள் அல்லவா?...தற்கொலை செய்வது கோழைத்தனம் எனத் தெரிந்தாலும் தற்கொலை செய்து கொண்டால் வாழ்க்கை முடிந்து போய் விடும் என்ட நம்பிக்கையிலும் அதன் பிறகு வாழ்க்கையில் பிரச்சனையே இருக்காது[வாழ்க்கையே இருக்காது] என்ட எண்ணத்திலும் தற்கொலை செய்வார்கள்.

தற்போதுதான் இதைப்பார்த்தேன்

( உளவியல் படித்தனீர்களே இதை கண்டு பிடிக்க என்று கேட்பவர்கள் இதை வாசிக்கவேண்டாம்)

நான்இது போன்ற சில தற்கொலைகளை நேரில் கண்டுள்ளேன். அதற்குள் நான் கண்டது

தான் இறப்பதைவிட எவருக்கோ பாடம் படிப்பிக்கவேணும் அல்லது இன்னொருவரை மாட்டிவிட்டு அவர் இதனால் வாழ்க்கை பூராகவும் அவமாகப்படணும் என்பதுதான் இவர்களை தற்கொலையைச்செய்ய தூண்டுகின்றன. அதனாலேயே கோரமான முடிவுகளைக்கூட மிகத்துணிவாகவும் திட்டம்போட்டும் செய்யமுடிகிறது.

ரதிக்கு அப்படி எவர் மீதாவது வெறுப்பிருந்தால் மறந்து மன்னித்துவிடவும்.

எவர் என்ன பாடுபட்டாலென்ன நாம் எமக்கு கிடைத்த ஒரே ஒரு சந்தர்ப்பத்தை அதற்காக எதற்கு வீணாக்குவான்.????? :(

நான் யாரையாவது பழி வாங்க வேண்டும்,பாடம் படிப்பிக்க வேண்டும் என தற்கொலை செய்ய நினைத்தால் அது என்னைப் படைத்த கடவுளாய் தான் இருக்கும்.அதுவும் நான் போய் கும்பிடுகிற அம்மன் கோயிலில் தான் போய் சாவேன்

எப்படியாவது ஏதாவது பிரச்சனைகளில் மாட்டிவிட்டுவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கும் நிழலிக்கு நன்றிகள். நிழலி நான் எங்கும் பெண்ணியம் பேசியதாக நினைவில்லை. அப்படியே பெண்கள் சார்பாக நான் எங்கேனும் அழுத்தமாக பேசியிருப்பின் பெண்ணியம் என்பதற்குள் போட்டு குழம்பிக் கொள்ளாதீர்கள். பெண்ணின் அடிப்படையில் மிக்க வேண்டுதலுக்கு உரியதாக இருக்கக்கூடிய விடயங்களை எப்படி பெண்ணியம் என்று வகைப்படுத்தப்படுகிறது? சத்தியமாக இதுதான் பெண்ணியம் என்று தெரியாது ஆனால் மனித நேயம் என்பது எது என்று உணரப்படுவதாலேயே எங்கும் ஏதாவது எழுதித்தள்ளியிருப்பேன். என்னை ஆணியவாதி, பெண்ணியவாதி என்று பிரிவுகளுக்கு உட்படுத்தாமல் மனித நேயவாதியாக எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி அடைவேன். அதே நேரம் சாதுரியமாக என்னை நியாயப்படுத்தும் ரதிக்கும் பல நன்றிகள். என் வீட்டுக் குட்டித் தேவதையின் சார்பிலும் ரதிக்கு ஒரு நன்றி.

என் திட்டம் தோல்வியில் முடிந்து விட்டது

சரி விடயத்திற்கு வருவோம்.

தற்கொலை என்பது இயலாமையில் அதிகூடிய விரக்தி நிலையாகும். இந்த விரக்தி நிலையை வென்ற மனிதர்களை அணுகிப்பார்த்தால் பெருமை கொள்ளத் தோன்றும். படிப்படியாகத் துன்பநிலையை அடைந்தவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது மிகவும் குறைவு. திடுதிப்பென துன்பங்களைச்சந்திப்பவர்களுக்கு அதிலிருந்து மீளக்கூடிய மனவலிமை மிகக்குறைவானதே. இவர்களே எதிலும் தெளிவில்லாமல் மனக்குழப்பங்கள் நிறைந்தவர்களாக இருப்பார்கள். தற்கொலை மனநிலை என்பது ஆண்பெண் என இருபாலருக்கும் இருக்கும். எங்கள் சமூகத்தில் பெண்களே அதிகமாக இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது அதிகம். அதற்கு பலவகைக் காரணங்கள் உண்டு. குறிப்பாக இன்னதால், இதற்காக என்ற காரணங்களுக்கு அப்பால் நெடுக்காலபோவான் கூறியதைப் போன்று பிரச்சனைகளில் இருந்து வெளியே வரும் வழிகள் அறியப்படாமையே பிரதான காரணியாக இருக்கிறது. இங்குதான் எங்கள் சமூகவாழ்வியல் பெண்களை அதீதமாக பாதிக்கிறது. குடும்ப கௌரவம், தங்களின் பிரச்சனைகளை மனந்திறந்து பேச முற்படும் பெண்கள்மீதான எள்ளி நகையாடல், போன்ற காரணிகள் மேலும் அவர்களை மனவுடைவிற்கு ஆளாக்கிவிடுகிற அபாயத்தை சமூகம் தன்னை அறியாமலே செய்து கொண்டிருக்கிறது. ஏன் இந்தக் களத்தில்கூட பெண்கள் சம்பந்தமான செய்திகள் என்ன பாடுபடுகின்றன என்பதை எத்தனை பேர் உணர்கிறார்களோ தெரியவில்லை. அண்மையில் யாழில் ஒரு பெண்பிள்ளைக்கு எயிட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தியின் பின்னால் எழுதப்பட்ட கருத்துகளை அந்தப்பெண்பிள்ளையின் முகத்தை அறியாதவர்களாகிய நாம் எப்படியெல்லாம் எழுதினோம். உண்மையிலேயே அந்தப் பெண்பிள்ளை இந்நிலைக்கு ஏன் தள்ளப்பட்டாள்? யாராவது அதைத் தெரிந்து கொள்ள எத்தனித்து அறிந்தீர்களா? அவளைப்பற்றி அசிங்கமாக எழுதும் வக்கிரமிக்க பேனாக்கள் அவளுக்கான எதிர்காலத்தைபற்றிய தீர்வை முன்வைத்தனவா? சந்திக்கு வந்த சாட்சிகள் சில அவற்றையே மனிதாபிமானமாக கையாளத்தெரியாமல் சீரழிப்பதைப் பார்க்கும்போது சந்தர்ப்பவசத்தால் ஏற்படுத்தப்பட்ட துன்பங்களுக்கு விடுதலையை எப்படி இந்தச் சமூகத்திடம் எதிர்பார்க்கமுடியும்? இது ஒரு சின்ன உதாரணமே. வெளியே சொல்ல முடியாமல் எத்தனையோ விடயங்கள் சொன்னால் வெந்து சாவதைத் தவிர வேறெதுவும் ஆகாது.

அடுத்து தற்கொலையை எவரும் திட்டமிட்டுச் செய்வதில்லை அப்படிச் செய்தால் அது தற்கொலை இல்லை கொலை. இயலாமை நிலைதான் தற்கொலைகளைத் தோற்றுவிக்கும்போது திட்டமிட்டுச் செய்வது என்பது இயலுமான காரியம் அல்லவா! தற்கொலை என்ற சிந்தனை வந்துவிட்டால் வெறிநிலைக்குக் கொண்டு சென்றுவிடும் அது புறச்சூழல் எதையும் சிந்திக்காது.

எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. அது முட்டாள்களின் வேலை. நான் செத்தால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இருக்காது என்று எவரேனும் தற்கொலை செய்வார்களானால் அதுவே அவர்கள் மற்றவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துன்பம் என்பதை அவர்கள் உணரவேண்டும் அல்லது உணர்த்தப்படவேண்டும். தற்கொலை என்ற எண்ணத்திற்குள் உட்பட்டவர் பேதலித்த நிலையிலேயே இருப்பார். அவருக்கு தன்னைத்தானே தெளிவித்துக்கொள்ள முடியாது. ஆயிரத்தில் ஒருவர், இருவர் மாத்திரமே அப்படித் தெளிவடையக்கூடியவர்கள் அப்படி தற்தெளிவை அடைந்தவர்கள் மகான்களாக மாறுவது உறுதி. என்னவோ எழுத வெளிக்கிட்டு எங்கேயோ வந்து நிற்கிறேன்போல் இருக்கிறது.

நெடுக்காலபோவான் பல இடங்களில் பெண்களைச் சீண்டி எழுதுவதை நான் கண்டிருக்கின்றேன். அவை எதிரித்தனத்துடன் எழுதப்படுபவை அல்ல என்பதை உணர்ந்திருக்கின்றேன். ஏதோ வகையில் பெண்களை முன்நகர்த்துவதற்கு அவர் எழுதும் எதிரிடையான எழுத்துக்களாகவே அவற்றை என்னால் பார்க்க முடிகிறது. அவருடைய முயற்சிகள் இதுவரையும் எத்தகைய நற்பலன்களையும் கொடுத்ததாகத் தெரியவில்லை. இருப்பினும் இந்தத் திரியில் நெடுக்காலபோவான் எழுதிய விடயம் தற்கொலை மனநிலையில் இருப்பவர்களை எப்படி சமநிலைக்குக் கொண்டுவரலாம் என்பதை அழகாக எழுதி இருக்கிறார். இதில் படித்த விடயம் என்பதற்கு அப்பால் பல விடயங்களை கையாண்டிருக்கக்கூடிய அனுபவத்தைக் காணமுடிகிறது. பாராட்டுக்கள் நெடுக்குத் தம்பி.

என் எண்ணம் நிறைவேறி விட்டது...சாகராவுக்கு ஒரு பச்சை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.