Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மக்கள் சேவல்களாம் எருமை மாடுகளாம் - டக்கிளஸ் தேவனந்தா என்பவர் சொல்கிறார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சேவல் மற்றும் எருமை மாடுகளின் கதைகளை 196 பக்க அறிக்கையாக எழுதியுள்ளனராம்! அறிக்கையை நிராகரிக்கிறார் டக்ளஸ்

ஐ.நா பொதுச் செயலாளர் நியமித்திருக்கும் தருஸ்மன் குழுவினர் தமது கற்பனையில் சேவல் மற்றும் எருமை மாடுகளின் கதைகளை 196 பக்க அறிக்கையாக எழுதியுள்ளனர் என்று ஈபிடிபியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையை எழுதியிருப்பவர்கள் ஐ.நாவின் எந்தவொரு அமைப்புக்கும் உரித்தானவர்களல்லர். இவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்ட எழுத்தாளர்கள் ஆகும்.

பான் கீ மூன் கூலிக்கு அமர்த்தப்பட்ட இந்த எழுத்தாளர்களை நியமித்ததன் மூலம் ஐ.நாவின் வளங்களையும் நிதியையும் வீணடித்துள்ளார்.

பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக அவர், சுயஇலாப நோக்கத்துடன் சில நாடுகளினதும் அமைப்புக்களினதும் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதிக்கும், இராணுவ அதிகாரிகளுக்கும் அவதூறு ஏற்படுத்துவதற்காக இந்த எழுத்தாளர்களை நியமித்துள்ளார்.

தருஸ்மன் அறிக்கையில் எமது மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை.

இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக கதைக்கும் அதிகாரம் எனக்குண்டு. மக்களால் தெரிவுசெய்யப்பட்டு 1994 ஆம் ஆண்டு தொடக்கம் சேவையாற்றி வருகின்றேன்.

வடக்கு கிழக்கில் கடந்த 30 வருடகாலப்பகுதியில் கொல்லப்பட்ட 70 ஆயிரம் அப்பாவி மக்களின் மரணங்களுக்கு பிரபாகரனே பொறுப்பாவார். மேற்கு நாடுகளில் புலிகள் தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். நியூயோர்க்கிலுள்ள புலிகள் ஐ.நா செயலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எப்போதும் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நியூயோர்க்கில் வசிக்கும் சிலர் ஐ.நா செயலகத்திற்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் சுமுகமாக பழகுவதன் மூலம் அரசாங்கத்தைக் குற்றம் சுமத்தும் இந்த அறிக்கையை வெளியிடச் செய்வதற்கு தம்மாலான முயற்சிகளை எடுத்துள்ளனர்.

அவர்கள் நினைத்ததை நடத்தியுள்ளார்கள். இதற்காக ஆயிரக்கணக்கான டொலர்கள் கைமாறியிருப்பதாக நாம் அறிந்தோம்.

மோதலின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்கள் மிகவும் துன்பகரமான மற்றும் பயங்கரமான சம்பவங்களுக்கு முகம் கொடுத்ததாக தருஸ்மன் குழுவினர் சித்தரித்துள்ளனர். அவர்கள் தமது கற்பனையில் சேவல் மற்றும் எருமை மாடுகளின் கதைகளை 196 பக்க அறிக்கையாக எழுதியுள்ளனர்.

நான் ஒரு இலங்கைத் தமிழன். என்னை தமிழ் மக்களே வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தனர். என்னை 13 தடவைக்கும் மேல் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படைப் போராளிகள் கொல்ல முயற்சி செய்தனர். ஆயிரக்கணக்கான ஈபிடிபி ஆதரவாளர்களும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டனர்.

எவ்வித சட்ட ஆதாரமும் இல்லாமல் பொறுப்பற்ற முறையில் குறைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த தருஸ்மன் அறிக்கையை நான் நிராகரிக்கிறேன்.

ஐ.நாவோ அல்லது ஏதேனும் நாடோ அப்பாவித் தமிழர்களுக்கு நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கும், அழிவுகளுக்கும் தமது இரக்கத்தைக் காட்ட நினைத்தால் அவர்கள் இழப்புகளுக்கான நட்டஈடுகளை வழங்க முன்வர வேண்டும். பான் கீ மூன் இலங்கையின் முதல்தர எதிரியாவார்.

தருஸ்மன் அறிக்கைக்கு எதிராக ஜனாதிபதியுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போம் என்று டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ஐ. நா. நிபுணர்குழு அறிக்கையினை தருஸ்மன் குழு அறிக்கை எனக் குறிப்பிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=21321&Itemid=410

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு சார்பாகவோ புலிகள் நல்லவர்கள் என்றோ அறிக்கை சொல்லவில்லையே?ஒரு அரசாங்கம் தனது குடிமக்களை அழித்தது குற்றம் என்றும் புலிகளுக்கும் அதில் பங்கு உண்டு என்றும் தானே அறிக்கை வெளிவந்துள்ளது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபை புலிகளை ஒழுக்கம் நிறைந்த விடுதலைப் போராளிகள் என்று சொல்லிப்போட்டுதே என்று சிங்களவன் கவலைப்படுறான்.. இவர் தன்னை அப்படி சொல்லேல்லையே என்று சிங்களவனோட சேர்ந்து கவலைப்படுறார் போல.

ஐநா சபை விடுதலைப்புலிகள் போர்க்களத்திற்கு வெளியே நடத்திய தாக்குதல்கள் பற்றி கதைத்திருக்குது. அந்த அறிக்கையில் போர் நடந்த காலத்தில் தென் தமிழீழத்தில்.. வாகரையில் நடந்த படுகொலைகள் பற்றியோ.. யாழ்ப்பாணத்தில் 2006 இல் இருந்து ஐநா இருக்க நடந்த படுகொலைகள் பற்றியோ அதில் இவரின் குழு உட்பட பலர் சிறீலங்கா சிங்கள அரசு ஆதரவு புலனாய்வுக் குழுக்கள்.. தமிழ் குழுக்கள் செய்த கொலைகள் பற்றியோ குறிப்பிட்டிருக்கா..??!

இவங்கள் எல்லாம் எவ்வளவு காலமா கொலை செய்யிற அரசியலைச் செய்திக்கிட்டு.. 1994 இல் இருந்து "மக்கள்" கள்ள வாக்குப் போட்டு தெரிவு செய்ய தான் சேவை செய்யுறாங்களாம் என்றெல்லோ அறிக்கை கொடுக்கிறாங்க.

இவர் தானே இந்தியாவில் ஒரு தேடப்படும் குற்றவாளி என்பதை மறந்து 1986 இல் இருந்து தமிழ் மக்களுக்கு எதிராக பல கொலைகள்.. கடத்தல்கள்.. ஊழல்கள் செய்துள்ளதை மறந்து சிங்களவனுக்கு துதிபாடி தன்னை காத்துக் கொண்டு ஆயுத அரசியல் செய்து வருகிறார். இவற்றை எல்லாம் ஐநா கவனிக்காது. விடுதலைப்புலிகளை மட்டும் கவனிக்கும்.. கடாபியை கவனிக்கும்..! :unsure::o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மோதலின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்கள் மிகவும் துன்பகரமான மற்றும் பயங்கரமான சம்பவங்களுக்கு முகம் கொடுத்ததாக தருஸ்மன் குழுவினர் சித்தரித்துள்ளனர். அவர்கள் தமது கற்பனையில் சேவல் மற்றும் எருமை மாடுகளின் கதைகளை 196 பக்க அறிக்கையாக எழுதியுள்ளனர்.

இந்த 196 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் ஜனாதிபதி உட்பட அவரது அமைச்சர்கள் அவரது நிர்வாக உத்தியோகத்தர்கள்,அவர்களது இராணுவத்தினர் பற்றியும் கூறப் பட்டு இருக்கிறது,

அப்படியானால் உங்கள் கருத்துப் படி அவர்களும் எருமை மாடுகள் தானா?

அறிக்கையை முதலில் ஆர அமர வாசியுங்கள்.அதன் பின்பு தங்கள் கருத்துக்களை அவிழ்த்து விடுங்கள்!

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு, கல் எறியாதீர்கள்!!!

இந்த 196 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் ஜனாதிபதி உட்பட அவரது அமைச்சர்கள் அவரது நிர்வாக உத்தியோகத்தர்கள்,அவர்களது இராணுவத்தினர் பற்றியும் கூறப் பட்டு இருக்கிறது,

அப்படியானால் உங்கள் கருத்துப் படி அவர்களும் எருமை மாடுகள் தானா?

அறிக்கையை முதலில் ஆர அமர வாசியுங்கள்.அதன் பின்பு தங்கள் கருத்துக்களை அவிழ்த்து விடுங்கள்!

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு, கல் எறியாதீர்கள்!!!

கள்ளரோடு இருக்கும் ஒரு கள்ளனிடம் எப்படி உண்மை வரும். அதை எதிர்பார்ப்பது நாம் முட்டாள்கள்.

இப்படி எல்லாம் இன்னும் நிறைய கருத்துக்கள் வரும்.

புலம் பெயர் பலத்தின் உதவியால் தான் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு போக முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாளும் பாவம்

கனகாலமாக தமிழ் மக்களுக்கு கதை விட்டும் ஒருவரும் கேட்காததால் அந்த கோபத்தை இப்படி எருமை மாடுகளுக்கும் சொன்னால் காது கேட்காது என்ற அடை மொழியை வைத்து திட்டுது. பாவம். ஆனால் இதிலும் ஒரு சந்தோசம். இன்னும் ஒருத்தரும் இவரின் சொல்லைக்கேட்கவில்லை என்ற உண்மை இந்த கத்தலில் தெரிகிறது

விசுகு அண்ணா நல்லா சொன்னீங்கள்... :):D

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. வின் அறிக்கை வெளிவந்த நேரம் ஒட்டுக்குழுக்கள் மௌனமாக இருந்ததை பார்த்து......

தானாடாவிட்டாலும்.... தசையாடும் என்பதற்கேற்ப, இவர்களின் மௌனத்தின் மூலம், தமிழ்மக்களுக்கு கிடைத்த விடிவை வரவேற்கிறார்கள் என்று, சந்தோசப் பட்டேன். ஆனால்... இந்த, ஒட்டுக்குழுக்கள் என்றுமே... திருந்தாத அறிவு கெட்ட... ஞானசூனியங்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள்.

Edited by தமிழ் சிறி

உந்த டக்லஸ் ஒரு வடித்தெடுத்த பூசை!!! அது எதுவும் செய்யும் ... எது என்றால் எதுவும்தான்!!!!

... உதன் கதைகளை தொடர்ந்து கதைப்பதானால் ... ஏதாவது??????? .... எம்மவர்களும் ... எம் பிரதிநிதிகளாம் புலத்தில் ... உப்படியானவற்றில் தம் பணிகளை/செய்ய வேண்டியவைகளை/இயலாத்தன்மைகளை மறைக்க/மறைய முற்படுகிறார்கள்!!!

... உதுகளை விட்டுட்டு புலத்தில் ... கொடுக்கக்கூடிய அழுத்தங்களை கொடுக்க ... ஏதாவது ....

  • கருத்துக்கள உறவுகள்
bouglas_ban.jpg
  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்கள் சேவல்களாம் எருமை மாடுகளாம் - டக்கிளஸ் தேவனந்தா என்பவர் சொல்கிறார்

அலம்பல்

மமதை பிடித்தவர்களும், ஆணவம் கொண்டவர்களும் தமக்கு வரும் அழிவினை முன்கூட்டியே அறிவார்களாம்.

அதனால் தானோ மனுசன் பிதட்ட ஆரம்பிச்சிட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழ் மக்களுக்கு நல்லது செய்கிறார் என்று சொல்பவகள் யாழ் களத்தில் இன்றும் உள்ளார்கள் என்பதை நினைக்கும் போது ...................

ஒரு பன்றிக்கு டக்ளஸ் தேவானந்தா என்று பெரிட்டுள்ளனர். :lol::lol: உண்மையைச் சொன்னாலும் சிரிப்புத்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.