Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சமூக சீர்கேடுகள் ?அதிர்ச்சித் தகவலும் அம்பலமாகும் உண்மைகளும் (Photo in)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jafnna20082011-300-150x140.jpg

முப்பது வருடகால யுத்தம், அழுகை, கதறல், ஓலம், ஒப்பாரி என துன்பியல் வாழ்க்கையைக் கடந்து மற்றுமொரு பரிமாணத்தில் குடாநாடு காலடி எடுத்துவைத்திருக்கும் காலம் இது. எதிர்காலத்தை ஏக்கத்தோடு பார்த்த காலம் தள்ளிப்போய் எதிர்பார்ப்புகளை மனதில் விதைத்து நாளைய பொழுதுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ளத் தயாராகியிருக்கிறது நம் தமிழச் சமூகம்.

042.jpg

இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் முளைவிட்டு எமது சமூகத்தின் ஆணிவேரையே அசைக்க முற்பட்டுக்கொண்டிருக்கும் புதியதொரு பிரச்சினையாக கலாசார சீர்கேடு மாறியுள்ளது.

ஆங்காங்கே நடக்கும் விபச்சாரம், பள்ளிக்குச் செல்லும் இளம் பெண்களின் கர்ப்பம் தரிப்பு வீதம் அதிகரிப்பு, சூறையாடப்படும் சிறுவர் வாழ்க்கை, கயவர்களின் கையில் சிக்கித் தவிக்கும் திருமணமாகாத பெண்கள், தென்னிலங்கை மக்களின் வருகை மற்றும் வெளிநாட்டு மோகம் ஏற்படுத்தியுள்ள நாகரிகத் தாக்கம் என இதனை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.

இப்போது அடிக்கடி சூடாகப் பேசப்படும் விடயம்தான் யாழில் கலாசார சீர்கேடு. இதன் உண்மை நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள நாம் அங்குசென்றபோது எமக்குக் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

ஆம்..! யாழ் மாவட்டத்தில் பதின்மூன்று வயது முதல் பத்தொன்பது வயது வரையான (பதின்ம வயது) பள்ளிப்பருவ இளம் பெண்கள் 211 பேர் கடந்த ஐந்து மாதங்களில் கர்ப்பமாகியுள்ளனர். இவர்களில் 90 வீதமானோர் பாடசாலைக்குச் செல்லும் மாணவியர். இதே காலப்பகுதியில் திருமணமாகாத 69 பேர் கர்ப்பம் தரித்துள்ளனர். அது தவிர 242 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 61 வீத அதிகரிப்பினை இந்தப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம் என அறிந்துகொள்ள நாம் முயற்சித்ததுடன் இது குறித்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தாய் சேய் நல வைத்திய அதிகாரி சிவசங்கர் திருமகள், வழக்கறிஞர் பொன். பூலோகசிங்கம் ஆகியோருடனும் யாழ். மாநகர முதல்வர் யோ.பற்குணராசாவுடனும் கலந்துரையாடினோம்.

032.jpgசிவசங்கர் திருமகள்.

தாய் சேய் நல வைத்திய அதிகாரி – யாழ். மாவட்ட சுகாதாரப் பணிமனை

“யாழ்ப்பாணத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பாலியல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக பாடசாலை மாணவர்களிடத்தே நன்னடத்தை பேணப்படுவதற்கான ஒழுங்குகளை செய்துவருகிறோம். ஆயினும் பாடசாலை மாணவர்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சிலர் கர்ப்பம் தரிப்பதும் மிகவும் கவலைக்குரிய விடயம். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

1. மேலதிக வகுப்புகள் எனக் கூறி இளவயதுப் பெண்கள் தவறான இடங்களுக்குச் செல்லுதல் கண்காணிக்கப்படுதல்

2. அளவுக்கதிகமான சுதந்திரம் மட்டுப்படுத்தப்படல்.

3. பிள்ளைகளின் நண்பர்களுடைய பெற்றோருடன் உறவினைப் பேணுதல்.

4. ஆசிரியர் – மாணவர் உறவில் நீண்ட விரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படுதல் (ஒவ்வொரு ஆசிரியரும் மாணவரை தன்னுடைய பிள்ளை என நினைத்தல் அவசியம்)

5. வேலையின்றித் திரியும் இளைஞர்களின் அடாவடித்தனங்களை மட்டுப்படுத்துதல்

6. லொட்ஜ் உரிமையாளர்களுக்குரிய சட்டதிட்டங்கள் வகுக்கப்படுதல்

7. பொதுக் கட்டிடங்களுக்கு அண்மித்ததாக மதுபானசாலைகள், விடுதிகள் அமைக்கப்படுவது தொடர்பான சட்டம் முன்மொழியப்படுதல்

8. பெண்கள் பாதுகாப்புக்கென பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்புப் பிரிவு உருவாக்கப்படுதல்

9. வாழ்க்கைத் தேர்ச்சி பாடசாலைகளில் உரிய முறையில் போதிக்கப்படுதல்

10. பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நடைமுறையிலிருந்து சமுதாயம் விடுபடுதல்

ஆகியவை அத்தியாவசியமானவையாகும். மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது. அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் மாற்றத்தை நினைக்கையில் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சமே மேலிடுகிறது. கர்ப்பம் தரித்துள்ள பள்ளி மாணவர்களை பார்த்து நான் பலதடவை கண்ணீர் வடித்திருக்கிறேன். இதனால் சட்டவிரோத கருத்தரிப்புகளும் அதிகரிக்கின்றன. திருமணம் முடித்தோரும் சட்டவிரோத கருத்தரிப்புகளை செய்துகொள்கின்றனர். இதன் பின்விளைவுகள் குறித்துத் தெரியாததால் நாளடைவில் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவருகிறது. எது எவ்வாறாயினும் எங்களால் (பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை) இயன்றளவான செயற்திட்டங்களை முன்னெடுத்துவருகிறோம்”

022.jpgவழக்கறிஞர் பொன்.பூலோகசிங்கம்

“இன்று யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் இருக்கின்ற நீதிமன்றங்களுக்கு வருகின்ற வழக்குகள் எங்களுக்கு யாழ்ப்பாண சமூகத்தினுடைய தற்போதையை நிலையை வெளிச்சமிட்டுக்காட்டுவதாக இருக்கின்றது. நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதைப் போல நாங்கள் வெளிப்படையாகக் காண்கின்ற யாழ்ப்பாணத்து கட்டமைப்பு பெருமளவில் இன்று சீர்குலைந்துவிட்டது. அதற்கு ஆதாரமாக யாழ்ப்பாண குடாநாட்டில் இருக்கின்ற நீதிமன்றங்களுக்கு வருகின்ற குற்றவியல் வழக்குகள் பெரும்பாலும் சீர்குலைந்துபோயிருக்கின்ற யாழ் சமூகத்தின் கட்டமைப்பின் மறுபக்கத்தை எங்களுக்கு காட்டுகின்றன. வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தின் மத்தியில் நீண்டகாலமாக பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்த கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள், வாழ்வியல் அம்சங்சங்கள், வாழ்க்கையின் தேவைப்பாடுகள், இவை எல்லாமே ஏதோ ஒருவகையில் வித்தியாசமான தடத்தில் செல்வதாகப் பார்க்கிறேன். யாழ்.மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகளும் பாலியல் ரீதியிலான வழக்குகளுமே முன்னிலை வகிக்கின்றன.

பாலியல் சம்பந்தமான பிரச்சினைகள் எமக்கு அனுகூலமான விடயம் அல்ல. ஏனைய மாவட்டங்களை விட பாலியல் பிரச்சினைகளில் யாழ் மாவட்டம் குறைவான புள்ளிவிபரங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் கடந்த காலங்களை விட தற்போது அதிகரித்து வருகின்றமையை நாம் சிந்திக்க வேண்டும். மிகச்சிறந்த கலாசாரப் பண்பாடுடைய தமிழ்ச் சமூகம் எனப்போற்றப்படும் எமது கலாசாரத்துக்கு இது ஆரோக்கியமாக அமையாது என்பதே எனது கருத்து”

011.jpgஒட்டுக்குழு யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோ. பற்குணராசா

“பரப்பரப்பாக பேசப்படும் விடயமாக கலாசார சீரழிவு காணப்படுகின்றது என்பதை இணையத்தளங்களினூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். முப்பது வருடகால போரின் பின்னர் அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்ற இளைஞர்கள் இன்று சரி பிழைக்கு அப்பால் வேலைவாய்ப்பின்மையினூடாக பொருளாதார பிரச்சினையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் குறிப்பிடும் இந்நிலைக்கு இது முக்கியமான காரணம். போர்க்காலச் சூழல் முழுமையான கல்வியை வழங்கத் தவறியது. இளைஞர்களின் நிலை கட்டுங்கடங்காத வகையில் உள்ளது. இவர்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்கி சரியான முறையில் வழிநடத்துவதன் மூலம் நல்ல வகையில் திசை திருப்பலாம். தவறுகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டு விஷமத்தனமான பிரசாரங்களில் ஈடுபடாமல் கூட்டு முயற்சியில் பொறுப்புணர்வுடன் இவர்கள் வழிநடத்தப்பட வேண்டும்.

யாழில் இடம்பெறும் சமூக சீர்கேடுகள் மூடிமறைக்கப்படுகின்றனவா?

ஏன் மூடி மறைக்க வேண்டும்? இதனை நீங்கள் வெளிப்படையாகக் கண்டுகொண்டிருக்கிறீர்கள். இவ்வாறான சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் நடைபெறுவதில்லை. கொழும்பில் இதனை விட சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஏன் உலகளாவிய ரீதியில் இப்பிரச்சினை தலைதூக்கி நிற்கிறது. ஆனால் யாழில் ஒரு சிறு விடயம் ஏற்படுகின்ற போது அதனை விசுவரூபமாக பிரசாரப்படுத்தப்படுவது ஏன் என்று தெரியவில்லை.

இங்கு உள்ள லொட்ஜ்களில் பாடசாலை மாணவர்களின் வருகை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அது எந்த வகையில் உண்மை? இந்த லொட்ஜ்கள் மாநகர சபை அனுமதியுடன்தான் நடத்தப்படுகின்றனவா? எனக் கேட்டபோது…

லொட்ஜ்கள் உண்மையிலேயே எமது அனுமதியின்றித் தான் நடத்தப்படுகின்றன. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரின் வீடுகளே இன்று லொட்ஜ்களாக உபயோகிக்கப்படுகின்றன. அவற்றை உண்மையான சட்ட வரைவுக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்றால் உரிமையாளர்கள் அவ்விடத்தில் இருக்க வேண்டும். அதே நேரதத்தில் அந்த லொட்ஜ்கள் விடுதிகளாக்கப்படுவதற்குரிய அனுமதியை சுற்றுலாத்துறையினர் வழங்க வேண்டும். ஆனால் அவ்வாறு இங்கு செயற்படுத்தப்படவில்லை. அவ்வாறான சட்டதிட்டங்களை நாம் செயற்படுத்தும்போது வேலைவாய்ப்பு குறித்து லொட்ஜ் நடத்துநர்கள் கவலை கொள்கிறார்கள். ஆயினும் உரிய வகையில் அவற்றைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளோம்

மற்றும் ஒருசில மாணவர்கள் லொட்ஜ்களுக்கு சென்று வருவதால் ஒட்டுமொத்த பாடசாலையின் நன்மதிப்பும் கெடுகிறது. ஒருசிலர் விடும் தவறால் ஒட்டுமொத்த யாழ்ப்பாணக் கலாசாரமும் சீர்கெடுகிறது எனக் கூற முடியாது. இதனைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்” என்றார்.

தமிழ்ச் சமூகத்தை பின்னடையச் செய்வதற்கு சில சக்திகளால் திட்டமிட்டுப்; பரப்பப்படும் விடயம் தான் இந்த சமுதாயச் சீர்கேடு குறித்த வதந்தி என சமுதாயத்தின் ஒரு தரப்பு கூறுகிறது. யாழில் மட்டுந்தான் பாலியல் பிரச்சினைகள் நடக்கின்றனவா? எனக் கேட்கிறது மற்றுமொரு தரப்பு. இது மூடி மறைக்கப்படுமானால் நமக்குத் தெரியாமல் வளர்க்கப்பட்டுவிடும். ஆதலால் உண்மையை வெளிப்படையாகக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறது இன்னொரு தரப்பு.

இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினையும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வின்மையுமே அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இந்த இழி நிலைக்குக் காரணம் என்பதே பொதுவான கருத்தாக நிலவுகிறது.

தென்னிலங்கையர்களின் வருகையோடு விபச்சாரத்தை தொழிலாக செய்யும் பாலியல் தொழிலாளர்களின் வருகை யாழில் அதிகரித்துள்ளமையை நாம் வெளிப்படையாகக் காணக்கூடியதாக உள்ளது. அவர்கள் பாதுகாப்பான உறவினை மேற்கொள்கிறார்களா என்பதே இங்கு கேள்விக்குறியாகும். அதனை விட யுவதிகளும் பாடசாலை மாணவர்களும் இந்த வட்டத்துக்குள் உள்வாங்கப்படுவது கவலைக்குரியதே. இவர்கள் மூன்றாவது சக்தியினூடாக பலவந்தமாக இதற்கு ஆளாக்கப்படுகிறார்களா அல்லது தாமாகவே விரும்பி ஈடுபடுகிறார்களா என்பதை அறிந்துகொள்ள யாழிலுள்ள சகோதர மொழி பேசும் லொட்ஜ் உரிமையாளருடன் உரையாடினோம்.

“யாழ்ப்பாண நகரத்தில் இரவு ஏழு மணியானால் போதும் எனது கைத்தொலைபேசி அலறிக்கொண்டுதான் இருக்கும். அண்ணா ரூம் இருக்கிறதா? வரலாமா? என்று அடிக்கடி கேட்பார்கள். பாடசாலை மாணவர்கள் வருகிறார்கள். நான் இல்லை என்று சொல்லவில்லை. பல சந்தர்ப்பங்களில் நான் அவர்களை ஏசி அனுப்பியிருக்கிறேன். மிக இளவயதுப் பெண்கள் இங்கு வந்து தாமாகவே முன்வந்து தமது அடையாள அட்டையைக் கொடுத்து பதிவுசெய்யச் சொல்வதும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழ் இளைஞர்கள் இங்கு சிங்களப் பெண்களை அழைத்து வருவார்கள். பணம் படைத்த பலர் அறையின் வாடகையை விட மேலதிகமாக கொடுப்பதும் உண்டு” என்றார் அவர்.

இவ்வாறு நாம் உரையாடிய லொட்ஜ்கள் பலவற்றின் உரிமையாளர்களும் இதேபோன்ற பதிலையே எமக்கு அளித்தனர்.

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக இணையத்தளங்கள், இணைய அரட்டை, சமூக வலையமைப்புகள் உட்பட ஏனைய இணைய வசதிகளை பயன்படுத்திக்கொள்ளும் இளைஞர்கள் தவறான கட்டமைப்புக்குள் தாமாகவே உள்வாங்கப்படுகின்றனர். இதனால் அவர்களுடைய சிந்தனையோட்டம் மாறுபடுகின்றது. அதன் பின்விளைவாக பாலியல் ரீதியிpலான இயல்பான தூண்டுதலுக்கு உள்ளாகி குற்றம் புரிகின்றனர். இதற்கு உதாரணமாக தாவடிப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற சம்பவத்தினைக் குறிப்பிடலாம்.

தமது சொந்த கிராமத்திலிருந்து சுமார் 32 கிலோ மீற்றர் தூரம் வந்த 16 வயதான யுவதிகள் இருவர் 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களுடன் பாலியல் உறவுகொண்டுள்ளனர். இவ்விடயம் பெற்றோரினூடாக வழக்கு விசாரணைக்கென நீதிமன்றுக்கு வந்துள்ளது. பாலியல் துன்புறுத்தலின் 1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் 16 வயது அல்லது அதற்குக் கீழ்ப்பட்ட பெண்களுடன் விரும்பியோ விரும்பாமலோ பாலியல் ரீதியிலாக தொடர்புகொண்டால் சட்டப்படி குற்றமாகும். ஆதலால் அந்த இளைஞர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. எனினும் இதன் பின்புலத்தில் நவீன தொடர்பாடல் முறைகளே காரணமாக அமைந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். இவ்வாறு அடிக்கடி பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றவண்ணமே உள்ளன.

அத்துடன் யுத்தத்தின் பின்னர் புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட பாழடைந்த வீடுகளை இளைஞர்கள் தமது சட்டவிரோத தேவைகளுக்கென பயன்படுத்திக்கொள்கின்றனர். இவ்வாறான இளைஞர்களால் அப்பாவி யுவதிகள் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டியமை அவசியமாகும். 2010 ஆம் ஆண்டு திருமணமாகாத கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 98 ஆக இருந்துள்ளது. இவ்வருடம்; ஐந்து மாதங்களில் மாத்திரம் 69 பேர் கர்ப்பம் தரித்துள்ளனர். அதேபோன்று 2010 இல் சிறுவர் துஷ்பிரயோகங்கள் 175 ஆக பதிவாகியுள்ளது. இவ்வாண்டு ஐந்து மாதங்களில் இது 242 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலை தொடருமானால் மிகப்பெரிய சமூகச் சீர்கேட்டினை எதிர்நோக்க வேண்டிய அபாயம் உள்ளதை யாரும் மறுப்பதற்கில்லை. அகன்று பரந்து விரிந்த அழகான மரம்போல் நமது சமுதாயம் காட்சியளித்தாலும் இவ்வாறான சமூகச் சீர்கேடுகள் எங்கோ ஒரு மூலையில் எமது ஆணிவேரை அரித்துக்கொண்டுதான் இருக்கும் என்பது நிதர்சனம்.

நடைமுறையைக் கவனமாக நோக்குகையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், சமூக அக்கறையாளர்கள், அரச தரப்பினர் உட்பட அனைவருமே பேதங்களின்றி இவ்விடயத்தில் ஒருமித்த மனதுடன் கைகோர்ப்பதே இன்றைய தேவையாக உள்ளது.

யாழிலிருந்து எம்.ப்ரியந்தி

படங்கள்: ஜே.எஸ்.கே

http://www.tamilthai.com/?p=24663

இது கசப்பான உண்மைதான்.

எமது இனத்தில் உண்மையான அக்கறை உள்ள அனைவரும் இதைத் தடுக்க முன்வரவேண்டும். கடுமையாக உழைக்கவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுவருடங்களுக்குள் ஏற்பட்ட மாற்றம் இரண்டுவருடங்களிற்கு முன்பு எவ்வளவு கட்டுக்கோப்புடன் இருந்த ஈழ தமிழ் இனம் இன்று இந்தநிலையை பார்க்கும் போது இவர்களின் நிலை எங்கு செல்லப்போகின்றது என அச்சமாகவுள்ளது.

இது ஒரு சமூக பிரச்சனை. இதை தீர்க்க சமூக நலன் விரும்பிகள், சமய நலன்விரும்பிகள் முன்வரவேண்டும். அவர்கள் விருப்பங்களை செவிமடுக்க அங்குள்ள அரசியல்வாதிகள் முன்வரவேண்டும். ஆனால் அங்கு நிலவும் இராணுவ ஆட்சி எங்கள் சமூக அழிவை விரும்புவதால் அவர்களிடம் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது.

எனவே பெற்றோர், ஆசிரியர்கள் என அடிப்படையில் பொறுப்பில் உள்ளவர்கள் பிள்ளைகள், மாணவர்கள் என முறையே அக்கறை எடுக்கவேண்டும். இந்த சீரழிவால் வரக்கூடிய தீமைகள் பற்றி பருவம் வந்தவர்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவருதல் வேண்டும்.

யாரைக்குறை சொன்னாலும் பாதிக்கப்படுவார்கள் தம்மையே காப்பாற்றுவது, காப்பாற்ற முயற்சிப்பதே தகுந்த பாதுகாப்பு.

Edited by akootha

அறிவார்ந்த செயற்பாடுகளின்றி வேறு எவற்றாலும் இதனை சீர்படுத்த முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாற்றம் யாரலும் திணிக்கப்பட்ட ஒன்று அல்ல, கட்டு பாட & நல்ல ஓழக்க குடும்பத்தில் பிறந்த எவரும் பாதை மாறி போக மாட்டார்கள், இப்படி போறவர்கள் எங்கு இருந்தலும் கட்டுபடுத்த முடியாது, இயக்கம் இருக்கும் போது கட்டுபாட்டுடன் கொஞ்சம் தெரியாமல் உள்ளுக்குள் செய்தார்கள், இப்ப தெரிய செய்கின்றார்கள் அவ்வளவுதான்

அறிவார்ந்த செயற்பாடுகளின்றி வேறு எவற்றாலும் இதனை சீர்படுத்த முடியாது.

உண்மை தான் இறைவன்

இதை புலிகள் பாலியல் தொலிலார்களை மண்டையில் போட்டு கொல்லும் போது(ம்) கருதி இருந்தால் இன்று யாழ்பாணம் இப்படியாகி இருக்காது

துப்பாக்கியால் நிலை நிறுத்தப்படும் சமூக அநீதியின் ஆயுட்காலம் துப்பாக்கியின் ரவை தீரும் மட்டுமே

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் இறைவன்.

இதை புலிகள் பாலியல் தொழிலாளர்களை மண்டையில் போட்டு கொல்லும் போது(ம்) கருதி இருந்தால் இன்று யாழ்பாணம் இப்படியாகி இருக்காது

துப்பாக்கியால் நிலை நிறுத்தப்படும் சமூக அநீதியின் ஆயுட்காலம் துப்பாக்கியின் ரவை தீரும் மட்டுமே

என்னுடைய கேள்வி.. பாலியல் சமூகச் சீர்கேடு கருதி புலிகள் கடந்த 35 ஆண்டுகளில்.. மண்டையில் போட்டது ஒரு 50 பேர் இருக்குமா..????! அதே நேரம்.. சிறீலங்காவில் நிகழும் பாலியல் குற்றம் சார்ந்த மொத்தக் கொலைகள்... எத்தனை..??! பல நூறு..! ஏன் லண்டனில் மட்டும் பாலியல் சார்ந்த குற்றங்கள் அவை சார்ந்த கொலைகள்.. ஆண்டுக்கு நூற்றுக் கணக்கில் நிகழ்கின்றன.. அங்கும் மண்டையில் போட்டு துப்பாக்கி ரவைகள் ஓய்ந்ததால் தான் அவை நிகழ்கின்றனவோ..??!

120 பல்கலைக்கழகங்கள்.. புகழ் பூத்த சமூக ஆய்வாளர்கள்.. சமூக விஞ்ஞானிகள்.. உள்ள ஒரு நாட்டில் கூட.. சமூகச் சீரழிவை கட்டுப்படுத்த முடியவில்லை. இளைய சமூகத்தினரை.. வன்முறைப் பாதையிலின்றும்.. பாலியல் சீர்கேடுகளில் இன்றும் பாதுகாக்க முடியவில்லை....! எத்தனையோ சட்டங்கள்.. சமூகச் சீர்த்திருத்த நலத்திட்டங்கள்.. அவற்றிற்கு இறைக்கப்படும் மக்களின் வரிப்பணம்.. என்று அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும்.. பள்ளிகளில் பாலியல் கல்வி.. பல்கலைக்கழகங்களில் பாலியல் வழிகாட்டல்கள்... என்று எல்லாம் வழங்கியும்.. பாலியல் சார்ந்த குற்றங்கள் ஆண்டாண்டுக்கு அதிகரிப்பதே நிகழ்கிறது.

ஆனால் மட்டுப்படுத்திய வளம்.. போர்... பொருண்மிய நெருக்கடிகள்.. பஞ்சம்.. உணவுக்கு தட்டுப்பாடு.. எதிரியின் தடைகள்.. என்று எத்தனையோ பாதகமான காரணிகள் இருந்த இடத்திலும்.. புலிகள் 50 பேருக்கு வழங்கிய தண்டனைகள்.. 500 பேரின் உயிரைக் காத்ததோடு.. பல நூற்றுக்கணக்கானோர்.. சமூகப் பிறழ்வின்றி வாழவும்.. இன்று அதை உதாரணம் காட்டி சமூகத்தை வழி நடத்தவும் முடிகிறது என்றால்.. எந்த வழிமுறை மக்களை துரிதமாகவும்.. பயனுள்ள வகைக்கும் சீர்செய்கிறது என்பதை தான் நாம் நோக்க வேண்டும்.

அன்றைய பொழுதுகளில் விடுதலைப்புலிகள் புத்தகமும் கையுமாக.. வீட்டுக்கு வீடு போய்.. பாலியல் கல்வி புகட்டி.. அதனை மக்கள் புரிந்து கொண்டு.. சமூகச் சீர்திருத்தத்தை மூளையில் பதித்துக் கொண்டு.. திருந்தி நடப்பார்கள் என்பதை செய்ய முனைந்திருந்தால்.. விடுதலைப்புலிகள் அந்த விடயத்தில் தோல்வியையே சந்தித்திருப்பர். அதுமட்டுமன்றி 50 பேருக்கு மண்டையில் போட்டது பல தடவைகள் அவர்களுக்கு திருந்த சந்தர்ப்பம் அளிக்கப்பட்டும்.. அவர்கள் அதை கவனத்தில் எடுக்காமல் மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்து சமூகத்தை தவறாக வழிநடத்திக் கொண்டிருந்ததால் தான் ஆகும். புலிகள் போய் சும்மா ஒருவரை பிடிச்சு மண்டையில் போடவில்லை. சரியான காரணங்களை மக்களிடம் சொல்லித் தான் போட்டார்கள். அதனால் தான் மக்கள் உணர்ந்தனர்.. நாங்கள் இந்த தவறை செய்தால்... தண்டனை பலமாக இருக்கும். எனவே அதைச் செய்யக் கூடாது என்று உணர்ந்தனர்.

இன்று அமெரிக்காவில் பாலியல் சார்ந்த குற்றங்கள்.. கொலைகளுக்காக.. எத்தனை பேர் மரண தண்டனையை அனுபவிக்கிறார்கள். உலகில் அனைத்து வளங்களையும்.. உயர் பொருண்மிய நிலையையும்.. உயர் சமூக சீர்திருத்தக் கட்டமைப்புக்களையும்.. சமூக வழிகாட்டல் திட்டங்களையும் கொண்ட ஒரு நாட்டில் ஏன்.. இத்தனை மரண தண்டனைகள்..?????!

வெறுமனவே புலிகள் மண்டையில் போட்டார்கள் என்பதாகவே சிலர் அதைப் பார்க்கினம்.. ஆனால் புலிகளிடம் தேசம் கையளிக்கப்பட்ட நிலை... காலம்.. தேவை.. என்பவற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தால்.. விடுதலைப்புலிகள் மக்களை வழிநடத்திய விதம்.. உண்மையில் பெரிய பெரிய சமூக ஆய்வாளர்களால் கூட சாதிக்க முடியாத ஒன்றை சாதித்திருப்பதைக் காணலாம்.

இன்றைய யாழ்ப்பாணத்தின் நிலை.. கொழும்பின் நிலையை ஒத்தது. நாங்கள் யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகளின் காலத்தோடு ஒப்பிட்டு நோக்குகின்றோம்.. அதனாலேயே அங்கு பெரிய சீர்கேடு நிகழ்வதை நாம் காணக் கூடியதாக உள்ளது. அதேவேளை சிங்கள அரசும் சிங்கள மக்களும் இதனை கொழும்போடு.. தென்பகுதியோடு ஒப்பிட்டு பார்க்கின்றனர். அப்படிப் பார்க்கையில் யாழ்ப்பாணம்.. சமூகச் சீர்திருத்தத்தில்.. மிக உயர்ந்து நிற்கும். கொழும்பில் விபச்சாரம்.. பள்ளி மாணவிகள்.. கர்ப்பம் தரிப்பது.. பல்கலைக்கழக மாணவிகள்.. கர்ப்பமாவது.. கருக்கலைப்புக்கள்.. சிறுவர் துஸ்பிரயோகம்.. சர்வ சாதாரணம். அதேபோல.. தென்னிலங்கையில் சிங்களவர்கள் மத்தியில் கள்ளத் தொடர்பு.. கள்ளக் காதல்.. அவை சார்ந்த கொலைகள்... எல்லாம் நாளாந்த நிகழ்வுகள். இந்தச் சமூகத்தில் இருந்து எழுந்த ஒரு இராணுவம்.. இன்று யாழ்ப்பாணம் உட்பட தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில்.. எப்படி யாழ்ப்பாணமோ.. தமிழர் தாயகமோ.. சமூக ரீதியில்.. நன்னடைத்தையை உச்ச அளவில் காண்பிக்க முடியும்..???! இன்றைய நிலையில் விடுதலைப்புலிகள் கால.. நன்னடைத்தை உள்ள ஒரு சமூகத்தை தாயகத்தில்... எதிர்பார்ப்பதே தவறு.

பிரச்சனை.. கடந்த 35 ஆண்டுகளாக கண்டிராத சமூகச் சீர்கேடுகளை இன்று மக்கள்.. காண்பது தான். புலம்பெயர் நாடுகளில்.. எம்மவர்களின் பள்ளிச் சிறுமிகள்.. கர்ப்பம் தரிக்கவில்லையா... விபச்சாரம் செய்யவில்லையா..???! எனக்கு தெரிய 13 வயது தமிழ் பள்ளிச் சிறுமி விபச்சாரத்தில் நண்பிகளோடு சேர்ந்து.. ஈடுபட்டு.. கருக்கலைப்பு செய்து கொண்டு.. பின்னர்..காவல்துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய சீர்திருத்த திட்டத்தின் கீழ் சமூகக் கண்காணிப்பு பிரிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டமை நிகழ்ந்துள்ளது. இப்படிப் பல தமிழ் சிறுமிகள்.. இங்கிலாந்தில் மட்டும். இப்படி பிற நாடுகளிலும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கும் புலிகள் மண்டையில் போட்டது தான் காரணமோ..?????????????!

இன்றைய கேள்வி.. சமூகச் சீரழிவுக்கான தற்போதைய தாயகச் சூழலில் எப்படி இந்தப் பிரச்சனைகளை எதிர்கொண்டு விடுதலைப்புலிகள் கால..சமூக ஒழுக்கப்பாட்டை நிறுவிக் கொள்வது என்பதே ஆகும். அதற்கு.. உள்ளூர் சமூகவியலாளர்கள்.. மாணவர்கள்.. பல்கலைக்கழகங்கள்.. அரசியல்வாதிகள்.. சமூக.. மத ஆர்வலர்கள்.. ஒருங்கிணைந்து விளிப்புணர்வூட்டும்.. சமூகத்திட்டங்களை அமுல்படுத்துவதோடு.. மக்கள் தவறான பாதையில் செல்ல தூண்டும் காரணிகளை அகற்றவும் முயல வேண்டும்.

சிங்களப் படைகளின் இருப்பை படை முகாம்களுக்கு வெளியில் வைக்க முதலில் அனுமதிக்கக் கூடாது. போர் ஓய்ந்த பின்னும் இராணுவம் மக்கள் குடியிருப்புக்களில் மக்களின் அன்றாட விடயங்களில் தலையிடுவது.. உண்மையில் சிவில் நிர்வாகத்தின் கீழ் மக்கள் இருப்பதை உறுதி செய்யவில்லை. இந்தப் பிரச்சனைகளை நாம் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சர்வதேசத்தை எமக்கு உதவக் கோருவதில்லை... இது விடயத்தில் சர்வதேசத்தின் கண்காணிப்பையும் பங்களிப்பையும் உதவியையும் நாம் நாட வேண்டும்.

வட ஐயர்லாந்துப் பிரச்சனையில்.. பிரிட்டன் துருப்புக்கள்.. மக்கள் வாழிடங்களில் இருப்பதை மக்கள் விரும்பவில்லை. அதன் பொருட்டு.. அவர்களை முகாம்களுக்குள் அடக்கினர். அமைதி தீர்வு வந்ததும்.. பிரிட்டன் படைமுகாம்களையும் வெகுவாக குறைக்கக் கோரப்பட்டது. இன்று மக்கள் மிகவும் அமைதியாக வாழ்கின்றனர். இராணுவத் தலையீடு அங்கு இல்லை. ஆனால்.. எமது மண்ணில் போர் ஓய்ந்து ஆண்டு இரண்டு கடந்த நிலையிலும்.. இராணுவ நிர்வாகமும்.. இராணுவத் தலையீடுகளும்.. பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமே.. நாட்டை நிர்வகிக்கின்றனர். இது ஒரு இராணுவ ஆட்சியின் கீழ் மக்களை கொண்டு வந்திருப்பதையே காட்டுகிறது.

வடக்குக் கிழக்கில்.. ஆளுநரில் இருந்து.. புனரமைப்பு கட்டமைப்புக்களின் தலைமைகள்.. சமூகக் கட்டமைப்புக்களின் தலைமைகள் வரை.. இராணுவமும்.. மாநகர சபைகள் எங்கனும்.. இராணுவத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் ஒட்டுக்குழு ஆயுததாரிகளுமே மக்களை வழி நடத்துகின்றனர். இது ஒரு சிவில் நிர்வாக முறைமை அல்ல. ஆனால் இதனை எம்மவர்களில் எத்தனை பேர் உணர்ந்து உலகிற்கு சொல்லினம். எல்லோரும் கொலிடே போய் வந்து.. அங்கு வசந்தம் வீசுகிறது.. என்கிறார்களே தவிர.. சிங்கள அரசின்.. தமிழர் பிரதேசத்தை நோக்கிய இராணுவ ஆட்சியைப் பற்றி யாரும் உலகிற்கு சொல்வதும் இல்லை.. கண்டிப்பதும் இல்லை.

ஆனால்.. அந்த இராணுவ ஆட்சியில் சமூகச் சீரழிவுகள் கட்டவிழ்த்து விடப்பட்டதும்.. உடனே விடுதலைப்புலிகளை நோக்கியே குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றனர். இது எந்த முகாந்தரமும் இன்றி எழும் குற்றச்சாட்டு மட்டுமன்றி... எதிரிக்கு மேலும் மேலும் சமூகச் சீரழிவைச் செய்ய வழங்கும் அங்கீகாரமாக அமைகின்றதே தவிர.. நாம் விரும்பும் வடிவில் எமது சமூகம் வாழ நிச்சயம் உதவாது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் இறைவன்

இதை புலிகள் பாலியல் தொலிலார்களை மண்டையில் போட்டு கொல்லும் போது(ம்) கருதி இருந்தால் இன்று யாழ்பாணம் இப்படியாகி இருக்காது

துப்பாக்கியால் நிலை நிறுத்தப்படும் சமூக அநீதியின் ஆயுட்காலம் துப்பாக்கியின் ரவை தீரும் மட்டுமே

நிழலி நீங்கள் கூறுவதைப்பார்த்தால் புலிகள் பொறுப்பு என்கின்றீர்களா ........? உங்களின் இப்படியான கருத்துக்கள் வாசகர்கள் மத்தியில் குழப்பத்தையே ஏற்படுத்தும்.

எந்த மனிதரும் சட்டங்கள், தண்டனைகள் சரியாக இல்லை என்றால் தங்கள் பாட்டில் எதைதையோ எல்லாம் செய்வார்கள்.

அதுதான் யாழ் நிலையும் எதிரி இனத்தின் கையில்நிர்வாகம் எது நடந்தாலும் கேட்பதில்லை. எதிரிஅந்த இனத்தை பல்வீனப்படுத்த விரும்புவானே தவிர வளர்க்க விரும்பமாட்டான்.

இப்போ தெரியும் விடுதலையின் தேவை என்ன என்பது. எங்களை நாங்களே ஆளக்கூடிய நிலை வரும் வரை அந்த இனம் சீரழியும் என்பது உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் தொழிலை புலிகள் கட்டுப்படுத்த நினைத்ததற்குச் சில முக்கிய காரணிகள் உள்ளன. போராட்ட உணர்விலிருந்து மக்களைத் திசைதிருப்ப மிக இலகுவாக பாலியல், சினிமா போன்றவற்றை உபயோகிக்கலாம். தமிழகத்துக்கு சினிமா; ஈழத்துக்கு தற்போது பாலியல்.

அதுமட்டுமல்லாது ஒரு பாலியல் தொழிலாளி மாணவச் சிறார்கள் குறைந்ததி 15 பேரையாவது சீரழிக்கலாம். வெளிநாடுகளில் உள்ளதுபோல சமூக உதவித்திட்டங்கள் இலங்கையில் இல்லை என்பதையும் இங்கே கோடிட்டுக் காட்டவேண்டியது அவசியம். பதினைந்து பேரா இல்லை ஒருத்தியா எனும் கேள்வி எழும்போது... :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணக் கலாச்சாரம் கடந்த ரெண்டு வருடங்களில் மட்டுமே சீரழிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. புலிகள் யாழ்க்குடாவை விட்டு வெளியேறிய காலத்திலிருந்தே ( 1995 சூரியக்கதிர் நடவடிக்கைக்குப் பின்னர்) ய்ழஆழ்ப்பாணத்தின் ஒழுக்கம் என்பது வெகுவாக மாறிவிட்டது. 2002 இல் பல வருடங்களுக்குப் பின்னர் நான் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தேன். ஒரு மாலையில் யாழ்ப்பாணத்திலிருன்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் இ.போ.சா பேரூந்து ஒன்றில் நான், எனது மனைவி, மற்றும் இரு சகோதரர்கள் ஏறிக்கொண்டோம். எங்களுடன் யாழ்ப்பாணத்திலிருந்து நெல்லியடி நோக்கிச் செல்லும் சில உயர்தர வகுப்பு மாணவிகளும் பயணம் செய்துகொண்டிருந்தார்கள்.ஆவர்களுக்கருகில் மூன்று இளம் வயது ஆண்கள் நின்றுகொண்டிருந்தார்கள். 18 இற்கும் 20 இற்குமிடையேதான் அவர்களின் வயதிருக்கும். கிட்ட நிற்க முடியாத சாராய நெடி. நிற்கமுடியாமல் நின்று கொண்டிருந்தார்கள். பேரூந்து நல்லூர்க் கோயில்ப்பகுதியைத் தாண்டியவுடன் அவர்களின் சேட்டை ஆரம்பமாகியது. ஒவ்வொருத்தராக அன்தப் பெண்பிள்ளைகள் மீது வேண்டுமென்றே வந்து விழுந்தார்கள். சிலவேளகளில் வேண்டுமென்றே கை கால்களாலும் உரசிக்கொண்டிருந்தார்கள். பொறுமையிழனந்த நான், ஓரிருமுறை முறைத்துக்கொண்டேன். என்னைச் சிங்களவன் என்று நினைத்துக்கொண்ட அவர்கள், தங்களுக்குள்முணுமுணுப்பது தெரிந்தது. நான் வேன்டுமென்றே மனைவியுடன் சிங்களத்தில் பேசிக்கொண்டே வந்தேன். ஒருவாறு அவர்களின் அட்டகாசம் குறைந்தது. ஆனால், எனது தம்இகளில் ஒருவன் தவறித் தமிழில் கதைத்துவிட அவர்களின் அட்டகாசம் அதிகமாகியது. அதுவரையிலும் அன்தப் பெண்களுடன் சேஷ்ட்டை புரின்தவர்கள் மிகவும் கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே என்மேல் வந்து விழுவதும் உதைப்பதுமாக இருந்தார்கள். ஒருவன் ஊமை, பேச முடியாத அவனுக்கு போதை தலைக்கு மேல் ஏறி மற்றவர்கள் வேன்டுமென்றே தள்லிவிட இவன் எனக்குமேல் வந்து விழுவதும், தள்லுவதுமாக இருந்தான். ஓரிருமுறை அவனைத் தள்ளிவிட்ட நான் இருக்கை ஒன்றில் அமர்ந்ததும் எனது பிடரியில் வேன்டுமென்றே வந்து அடித்துக்கொண்டான் . சலசலப்பு முற்றி எனது தம்இகளும் வந்துவிடன, சன்மெல்லாம் சத்தம்போட்டு ஒருவாறு அவர்களை அமர்த்தியது." நீ கொ௳உம்உக்குப் போகிற கெட்டித்தனத்தையும் பாப்பம், உயிரோடு போக மாட்டாய்" என்று அந்த சிறியவர்கள் என்னை வெருட்டிக்கொண்டிருந்தார்கள்நன்தப் பெண்பிள்ளைகள் தங்களால் நாம் அடிபடுவது கண்டு, " அண்ணா, நீங்கள் எங்களுக்காகச் சண்டை போட வேண்டாம், இது தினமும் நடப்பதுதான், எங்களுக்குப் பழகி விட்டது. தனியார் பேரூந்தில் பணியாற்றும் இவர்கள், ஒவ்வொரு நாளும் மது அருந்திவிட்டு இப்படித்தான் நடக்கிறார்கள், இவர்களை யாரும் கேட்க முடியாது, கேட்டால் கத்திகள் பொள்ளுகள் என்று வருவார்கள்" என்று கூறிவிட்டு கோப்பாய்ப் பகுதியில் இறங்கிவிட்டார்கள். நெல்லியடி போகும்வரை அந்த நாய்களின் தொல்லை தொடர்ந்தது. இது நடந்தது 2002 இல். இப்போது 2011, புலிகள் வேறு அறவே இல்லை, இந்த நாய்களின் கொட்டம் தலைக்கு மேல் ஏறிவிட்டது. போராட்டத்திலிருன்து விலகி இருப்பதால் ஒரு சமூகம் செலுத்தும் விலைதான் இது. இதே நிலை வன்னியிலும் இப்போது இருக்கிறது. கேட்பார் யாருமில்லை.........

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அமெரிக்காவில் பாலியல் சார்ந்த குற்றங்கள்.. கொலைகளுக்காக.. எத்தனை பேர் மரண தண்டனையை அனுபவிக்கிறார்கள். உலகில் அனைத்து வளங்களையும்.. உயர் பொருண்மிய நிலையையும்.. உயர் சமூக சீர்திருத்தக் கட்டமைப்புக்களையும்.. சமூக வழிகாட்டல் திட்டங்களையும் கொண்ட ஒரு நாட்டில் ஏன்.. இத்தனை மரண தண்டனைகள்..?????!

http://www.disasterc...ime/uscrime.htm

உண்மை. ரெக்சஸ் மானிலத்தில் ஒரு மாதத்தில் மரண தண்டனை பெறுபவர்களின் எண்ணிக்கையை பார்த்தால் தெரியும் இது மேற்கு நாடா என்று.இவ்வளவு வளங்கள் இருந்தும் கொலை,களவு ,வல்லுறவு, ஆட்கடத்தல் இன்னும் பல குற்றங்களுக்காக தண்டனை பெற்றுக்கொண்டு இருக்கும் மக்களை இறுதியில் தூக்கு கயிறே தழுவி கொள்ளும் போது புலிகள் தற்காலிகாலிகமாகவேனும் நிறுத்தி இருந்தார்கள்.உலகத்தோடு ஒப்பிடாமல் பழிகளை போடுவதில் மட்டும் குறியாக இருப்பதால் என்ன பயன்??

There are many legal and cultural explanations for why Texas executes far more people than any other state and is doing so at a pace that has no parallel in the modern era of the death penalty in the U.S. What follows is a summary of the analyses.

Texas has become ground zero for capital punishment. Between 1976 (when the Supreme Court lifted its prohibition on the death penalty) and 1998 Texas executed 167 people. Next in rank was Virginia which executed 60 during the same period.

Why do capital murder cases proceed through the Texas state court system with a speed unimaginable in other parts of the country? Brent Newton, in an article entitled "Capital Punishment: Texas Could Learn a Lot from Florida,"[1] argues that there are three procedures unique to the state's judicial system that enable it to execute convicted murderers with astonishing frequency:

1. Texas' appellate judges are elected to office and hence serve according to the pleasure of the public. Not surprisingly, they require a record of toughness on criminals in order to win re-election. Also, there are many indications that elected appellate judges generally are of a lesser quality than their appointed counterparts in other states. Newton even claims that these elected judges do not carefully consider the complexities of each specific death penalty case. As evidence, Newton argues that "[e]specially during the past few years...the Texas Court of Criminal Appeals has refused to publish most of its decisions in death penalty cases, including many cases that discuss important issues of first impression. Often these opinions take positions entirely inconsistent with prior decisions by the court and fail to mention the conflict. Generally speaking, there is a hit-and-mostly-miss quality in the Court of Criminal Appeals' death penalty decisions. Only a few judges during the past decade have been capable of or willing to write thoughtful, scholarly decisions, whether granting or denying relief." Additionally, Newton notes that these judges tend to dismiss habeas corpus appeals even in cases where there appears to be glaring unanswered questions about the defendant's guilt.

2. Texas does not have a public defender system for indigent defendants, and instead relies upon court-appointed lawyers who likely do not have experience in capital murder defenses or appeals. Newton notes that incompetent defenses in capital murder cases are legion in Texas, and that, even in a death penalty appeal, bad lawyering is hard to prove. One decision, which turned down a defendant's habeas appeal due to bad lawyering, concluded that "[t]he Constitution does not say that the lawyer has to be awake" during trial proceedings. Furthermore, Texas was not obliged to provide lawyers free of charge to post-conviction habeas appeals until September 1, 1995, and the amount the state is willing to pay lawyers for these appeals is sufficiently low that most defendants still do not receive counsel for their appeals.

3. Until the early 1990s, Texas did not permit jurors to adequately consider mitigating evidence in the sentencing phase of a trial. Thus, there are a number of people currently on death row that may well not be there had information about their mental illness or youth been weighed.

In addition, some other features of the Texas judicial system streamline the process between conviction and execution for death row inmates.

Texas gives the bulk of clemency power to its Board of Pardons and Paroles and not to the governor. Indeed, the Board must vote to recommend commutation in order for the governor to grant clemency. Stephen E. Silverman examined the impact of this procedure on the frequency of executions. In a law review note, entitled "There is Nothing Certain Like Death in Texas: State Executive Clemency Boards Turn a Deaf Ear to Death Inmates' Last Appeals,"[2] Silverman argues that the Supreme Court appears to affirm the constitutionality of curtailing repeated habeas appeals in part because of the existence of executive clemency. However, the Governor of Texas' inability to grant clemency himself is an unconsidered loophole in the procedural safeguards that the Court cited in its argument. In other words, Texas--as well as eleven other states--can execute inmates who might have been granted executive clemency had the governor had the power to do so. Silverman thus concludes that "[t]he assertion by three Justices of the United States Supreme Court that state clemency procedures adequately protect against executing those later able to make convincing claims of innocence may not be accurate. Even though only twelve states that provide for the death penalty require some sort of panel decision to grant clemency, these tend to be states with the most aggressively enforced capital murder laws. The dilution of responsibility that operates as a consequence of giving no single person the power to commute a death sentence could tend to reduce the chances for the condemned to have an opportunity to have his clemency appeal receive meaningful consideration."

Moreover, Jordan Steiker, of the University of Texas Law School, notes that execution dates in Texas are set by the trial judge, not by the governor, thus removing an informal power of clemency. The governor is unable simply to not assign an execution date. Many governors in other states have that power.

More generally, Steiker points out that Texas, unlike many other states, has worked out the statutory and procedural "kinks" in death penalty cases and appeals. In particular, Texas' 1995 law expediting state appeals has successfully cut down the time between conviction and execution.[3] He argues that Texas doesn't sentence more people to death than a number of other states, but it executes a higher percentage because many other states' procedures have not been fully tested and affirmed. Steiker believes that other states will soon catch up with Texas' execution rate. Indeed, Virginia came relatively close to matching Texas' rate in 1998: Texas executed 20 individuals, and Virginia executed 13.

Finally, it bears noting that the 5th Circuit of the Federal Court of Appeals is strongly pro-death penalty, and hence places extremely few roadblocks to executions in the states over which it has jurisdiction. In comparing the Fifth Circuit with the neighboring Ninth Circuit (which has jurisdiction over California and other Western states), Michael Sharlot, dean of the University of Texas Law School, states that "The Fifth Circuit is a much more conservative circuit. It is more deferential to the popular will."[4]

Some have speculated that the Texas execution rate also reflects a heritage of frontier justice coupled with modern urban crime.

However, James W. Marquart, Sheldon Ekland-Olson, and Jonathan R. Sorensen offer a more complex thesis. In their book, The Rope, the Chair, and the Needle: Capital Punishment in Texas, 1923-1990,[5] they argue that Texas' execution rate reflects the Southern "cultural tradition of exclusion," and that "uch exclusion was a basic element of the legacy of slavery."

In other words, the South has a cultural tradition of dehumanizing certain groups of people, which has made it easier for Southerners to separate themselves from those who do not adhere to the normal social (and in this case, legal) code. The authors argue that this cultural tendency accounts for the fact that, in 1992, "the states in the former Confederacy accounted for approximately 90 percent of the total executions in the first two decades following Furman [v. Georgia]."[6] The authors argue that Texas provides the clearest case study to help explain this larger Southern phenomenon.

One way they show how Texas' current execution rate continues certain social norms of the former Confederacy is by exploring the historical relationship between state-sanctioned executions and illegal lynchings. Lynching, in their interpretation, did not represent justice but rather the clearest way to exclude someone (or, implicitly, a whole group) from society. A member of a society who breaks the law experiences the force of justice; the representative individual who is forcibly rejected by, or excluded from, society is lynched. Based on this understanding of lynching, their findings are compelling: there is a direct, inverse relationship between executions and lynchings over the course of the twentieth century. Executions simply replaced lynchings as the accepted way to sate the popular (white) need to "dehumanize" or "exclude" certain groups from normal society. If lynchings reminded white folk and black folk alike who was an "insider" and who was an "outsider"--who was "us" and who was "them"--then executions were implemented to serve the exact same purpose.

How could the coldly bureaucratic and legalistic execution serve the same socio-cultural purpose as the heated, violent and carnival-like lynching? The authors' argument is quite complex. The end of the Civil War undermined the disenfranchisement of blacks that had characterized the ante-bellum South. Lynchings had been a tool white Southerners used to combat their insecurity about the status of blacks. However, white insecurity diminished as the Southern states enforced segregation and so it was only natural that "local mobs gave way to centralized state-sanctioned executions." The authors thus claim that lynchings in Texas (and across the South) declined in the early twentieth century because "the enactment of Jim Crow and related disenfranchising legislation, buttressed by the Supreme Court's Plessy v. Ferguson decision in 1896," codified and enforced the social and cultural demands that had often culminated in lynchings.

Of course, Texas now executes a far wider racial and ethnic mix of individuals than African-Americans. How, then, could it be that Texans and Southerners in general continue to approach society in such a provincial and exclusivist way? Indeed, the authors recognize that we can no longer simply regard the Southern predisposition toward the death penalty as a continuation of the ideals of the Confederacy. The authors claim that the shift to state-sanctioned executions and away from lynchings now also reflect the success of the civil rights movement to "redefine the boundaries of 'place' in a more inclusive fashion." Thus, the authors conclude, Texas' support for state-sanctioned executions both reflects the continuing legacy of slavery on cultural beliefs, as well as the transformation of Southern cultural beliefs due to the civil rights movement. They portray this paradoxical development in the following way: Texas (and Southern states generally) still executes a lot of people, but there now is a greater regard for the defendant's rights. They argue that "this broader attention to the protection of rights, along with the associated hesitancy to exclude individuals from the life-protecting boundaries of the community, are specifically evidenced in the three trends [of] in the post-Furman years: decreased sentencing disparities, narrowed locus of discrimination, and lengthened time from conviction to execution."

Texas' current execution policy, then, reflects the continued struggle between the Old and New South. And, needless to say, that cultural struggle will continue for the foreseeable future.

Ned Walpin is research associate for FRONTLINE ONLINE.

கலாச்சாரச் சீரழிவுகளுக்கான ஆறு பிரதான காரணங்கள்,

(1) பெற்றோரின் பொறுப்பற்ற தன்மை, (மிக முக்கியமானது)

(2) ஆசிரியர், பெரியவர்களின் பொறுப்பற்ற தன்மை

(3) மாணவர்களின் கீழ்ப்படியாத தன்மை

(4) தமிழ் சினிமா, தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள், தமிழ் FM வானொலிச் சேவைகள்

(5) புலம்பெயர் சமூகத்தினர் தமது உறவுகளுக்கு வாரி வழங்கும் அளவுக்கதிகமான பணம்

(6) சிங்களப் பயங்கரவாதிகள், ஒட்டுக்குழுக்களின் பிரசன்னம்

புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் 1, 2, 3, 4, 6, ஆகிய குறைகளை கணிசமான அளவுக்கு நேரடியாகவோ, மறை முகமாகவோ நீக்கியிருந்தனர்.

இக் காலகட்டத்தில் இதில் முக்கியமாக 1 உம், 2 உம், 5 உம் தமது கடமைகளை சரிவரச் செய்தால், இள வயதினரின் சுய கட்டுப்பாட்டில் கூடிய அக்கறை செலுத்தினால், கலாச்சாரச் சீரழிவுகளை பெருமளவு கட்டுப்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.disasterc...ime/uscrime.htm

உண்மை. ரெக்சஸ் மானிலத்தில் ஒரு மாதத்தில் மரண தண்டனை பெறுபவர்களின் எண்ணிக்கையை பார்த்தால் தெரியும் இது மேற்கு நாடா என்று.இவ்வளவு வளங்கள் இருந்தும் கொலை,களவு ,வல்லுறவு, ஆட்கடத்தல் இன்னும் பல குற்றங்களுக்காக தண்டனை பெற்றுக்கொண்டு இருக்கும் மக்களை இறுதியில் தூக்கு கயிறே தழுவி கொள்ளும் போது புலிகள் தற்காலிகாலிகமாகவேனும் நிறுத்தி இருந்தார்கள்.உலகத்தோடு ஒப்பிடாமல் பழிகளை போடுவதில் மட்டும் குறியாக இருப்பதால் என்ன பயன்??

There are many legal and cultural explanations for why Texas executes far more people than any other state and is doing so at a pace that has no parallel in the modern era of the death penalty in the U.S. What follows is a summary of the analyses. .....

1. Texas' appellate judges are elected to office and hence serve according to the pleasure of the public.

2. Texas does not have a public defender system

3. Until the early 1990s, Texas did not permit jurors to adequately consider mitigating evidence i

நுணாவிலான்,

நீங்கள் இணைத்துள்ள ஆங்கில ஆக்கம் ரெக்சாஸ் மாநிலத்தில் மரணதண்டனைகள் ஏளைய அமெரிக்க மாநிலங்களிலும் பார்க்க ஏன் அதிகம் என்ற கேள்விக்கு விடைகளை தந்திருக்கிறது.

1. மற்ற மாநிலங்கள் பலவற்றை போலன்றி, ரெக்சாஸில் மேன்முறையீட்டு நீதிபதிகள் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுபவர்கள். ஆகவே அவர்கள் எவ்வளவுக்கு குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கிறார்களோ அவ்வளவுக்கு மக்கள் ஆதரவுடன் மீண்டும் பதவிக்கு வர முடிகிறது.

2. ரெக்ஸாஸ் மாநிலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் வாதிட அரச பணத்தில் செயற்படும் சுதந்திரமான வழக்கறிஞர்கள் இல்லை. நீதிமன்று வழங்கும் வழக்கறிஞர்கள் பெரும்பாலும் அனுபவமற்ற புதிய வழக்கறிஞர்கள்.

இவை தவிர மேலும் பல காரணங்களும் தரப்பட்டுள்ளன. ஆனால் எந்த இடத்திலும் மரணதண்டனைகளால் ரெக்ஸாஸ் மாநிலத்தில் குற்றங்கள் குறைந்து மாநிலம் இன்று மரண தண்டனைகள் இல்லாத மாநிலங்களிலும் பார்க்க சிறத்து விளங்குவதாக தெரிவிக்கப்படவில்லை. மாறாக, மரணதண்டனைகள் வழங்கப்படாத பல அமெரிக்க மாநிலங்களில் ரெக்ஸாஸிலும் பார்க்க குற்றங்கள் மிகவும் குறைவாக இடம்பெறுகின்றன.

விபச்சாரம் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ள சிங்கப்பூரில் பருவப்பெண்கள் கருத்தரிப்பது பற்றிய பிரச்சினைகள் குறைவாக உள்ளன.

  • பாலியல் கல்வியும், புதிய தொடர்புசாதன தொழில்நுட்பத்தை பயனுள்ள வகையிலும் பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது பற்றிய அறிவும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்டு அதன் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படுவது தேவையானது.

  • பருவ வயதினருக்கு பாலியல் தேவை உள்ளது. அதனை பண்பாட்டு மாற்றங்கள் உள்வாங்கி சரியான முறையில் அவற்றுக்கான வசதிகளை அமைக்க வேண்டும். குறிப்பாக, சுய இன்பம் பற்றிய அறிவு பருவ வயது மாணவர்களுக்கு தேவை. இதனை சரியாக அறியாத நிலையில், மாற்றீடாக பருவபெண்கள் உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பம் தரிப்பது பரிதாபத்துக்குரியது.
  • பாதுகாப்பான உடலுறவு பற்றிய அறிவு மாணவர்களுக்கும், பெரியவர்களுக்கும் தேவை. இது உடலுறவை விரும்புபவர்கள் கர்ப்பம் தரிக்காமலும் நோய்களை தேடிக்கொள்ளாமலும் இருக்க உதவும்.
  • உடலுறவு உறைகளை தேவையானவர்கள் அந்தரங்கமாக பெற்றுக்கொள்ள மருத்துவமனைகள், அஞ்சல் அலுவலகங்கள் போன்ற பாதுகாப்பான பொதுவிடங்களில் தானியங்கி வணிக இயந்திரங்கள் அமைக்கப்பட வேண்டும். பாதுகாப்பான உடலுறவு பற்றிய அறிவு இருந்தும் அதனை பயன்படுத்த வசதிகள் இல்லாவிட்டால் அந்த அறிவு பயனற்றது.
  • பாலியல் இன்பம் தவிர பருவவயதில் வாழ்க்கையில் அனுபவிக்க எவ்வளவோ இன்பங்கள் இருக்கின்றன. இவை குறைவாக இருந்தால் பருவ வயதினர் பாலியல் இன்பத்தில் கவனம் செலுத்துவது தவிர்க்க முடியாதது. குறிப்பாக இசைநிகழ்ச்சிகள், விளையாட்டு விழாக்கள், சுற்றுலாக்கள், குடும்ப இணைவுகள் ஆகியவற்றுக்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் பாலியில் உறவில் செலுத்தப்படும் கவனம் குறைவடையும் சாத்தியம் அதிகரிக்கும்.

Edited by Jude

தாயக உறவுகளை நோக்கி திறந்த பொருளாதாரம் வநதுள்ளது, அதில் முக்கிய பங்கை மின்வலை, மின்னஞ்சல் தொழில்நுட்பங்கள், குறிப்பிட்ட புலம்பெயர் மக்கள் தமது உறவுகளுக்கு அனுப்பும் தேவைக்கு கூடிய பண உதவி, ஆற்றுகின்றன. இவை பற்றி பெற்றோருக்கு போதிய அறிவுகள், நேரங்கள் இல்லை. இதை பிள்ளைகள் பலவீனமாக கருதி தமக்கு சாதகமாக எண்ணி ஏமாறுகின்றனர்.

அதேவேளை இவாறான பிரச்சனைக்குள் புலம்பெயர் தமிழர்களும் உள்ளனர். பெற்றோர் பிள்ளைகளுக்காக வேலையில் கவனம் எடுக்க, பிள்ளைகள் தவறான வழியில் செல்கின்றனர்.

மொத்தத்தில் முடிந்தளவுக்கு பெற்றோரே பிள்ளைகள் மீதாக அதிக கவனம் செலுத்த வேண்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கு ஒண்டு விளங்கனும் யாழ் பாணத்தில கலாச்சாரம் கெட்டுப்போச்சு கெட்டு போச்சுன்னு புலல்தில இருந்து கத்திறாக்களின்ட(பெரிய ஆக்கள்) எத்தனை பிள்ளையள் தமிழ்ழ கதைக்கினம் எத்தனை பிள்ளையள் கலாச்சாரத்தோட இருக்கினம்?

தங்கட பிள்ளையள் எல்லாம் கிழமைக்கு ஒன்டோட சுத்தி திரியலாம் யாழ்பாணத்தில சென்ஞா கலாச்சராம் போய்டுதாம் செம காமடி.....

  • கருத்துக்கள உறவுகள்

இவை தவிர மேலும் பல காரணங்களும் தரப்பட்டுள்ளன. ஆனால் எந்த இடத்திலும் மரணதண்டனைகளால் ரெக்ஸாஸ் மாநிலத்தில் குற்றங்கள் குறைந்து மாநிலம் இன்று மரண தண்டனைகள் இல்லாத மாநிலங்களிலும் பார்க்க சிறத்து விளங்குவதாக தெரிவிக்கப்படவில்லை. மாறாக, மரணதண்டனைகள் வழங்கப்படாத பல அமெரிக்க மாநிலங்களில் ரெக்ஸாஸிலும் பார்க்க குற்றங்கள் மிகவும் குறைவாக இடம்பெறுகின்றன.

நான் சொல்ல வந்தது ரெக்சசில் இவ்வளவு பேரை தூக்கில் ஏற்றியும் குற்றச்செயல்கள் குறையவில்லை என்பதையும் புலிகள் அதே தண்டனை வழங்கி குற்றச்செயல்களை குறைத்ததை கூட அவர்களின் பிழை என வாதிடுவோரையுமே.

மேலும் வளர்முக நாடுகளில் கூட மரணதண்டனையை நிறைவேற்றும் போது ஏன் புலிகள் குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் போது மட்டும் பிழை என வாதிடுகிறார்கள் என்று விளங்கவில்லை.

கட்டுரையின் ஏனைய தகவல்கள் கொசுறு என்பதும் எனக்கு தெரியும்.நான் சொல்ல வந்த செய்திக்கு சிறு உசாத்துணையாக மேற்படி கட்டுரையை இணைத்திருந்தேன்.ஜூட் உங்களின் மொழி பெயர்ப்புக்கு நன்றி.

இப்போல்லாம் சமூககட்டுப்பாடு எங்கிறது என்னமோ யாழ்ப்பாணத்துக்கு மட்டும் ,குத்தகைக்கு விட்டமாதிரி புலம்பி தள்ளுறது நம்மாளுங்களுக்கு ஃபாஷனாபோய்ச்சி!

புலமோ ,தாயகமோ ஒவ்வொருவீட்டிலும் ,சமூகசீரழிவு என்னு கருதப்படுற ஏதோ ஒரு விஷயம் கண்டிப்பா இருந்தே ஆகும்!

அது: செக்ஸ்டாச்சர்......, லோ லோன்னு அலையுறது,..அடுத்தவன் சொத்தை ஆட்டையபோடுறது, ..எப்போ பாரு ஒரு ”கட்டிங்”க போட்டுகிட்டு ஊர சுத்துறது, அடுத்தவ(ன்/ள்) புருஷன்/பொண்டாட்டிய தள்ளிகிட்டு ஓடுறது!...

கைகால் நல்லாயிருந்தும் உழைச்சிசாப்பிடாம, சமூக உதவிபணத்துல இருந்திகிட்டு, மானம் ரோசம் பத்தி மணிக்கணக்குல பேசுறது..........கல்யாணவயசுல வீட்டுல பொண்ணு இருக்கும்போதே ...அப்பன்காரன் திருட்டுத்தனமா இண்டர்நெட்டில ஆபாசபடம் பார்த்து ஜொள்ளுவிடுறது.....

இப்பிடின்னு யாரும் சொல்லிகிட்டேபோனா, தாங்கமாட்டோம் நொந்திடுவோம்!

வாய்ப்புக்கள் சரியா அமையாதவரை எல்லாருமே கற்புக்கு ..பென்னாம்பெரிய வல்லரசுகள்தான்!

வொக்காளி ...சந்தர்ப்பம் மட்டும் சரியா வாய்ச்சுது...நாற்சந்திய நாறடிச்சு....

கமலஹாசன் ரேஞ்சுக்கு பின்னி பெடலெடுத்துடுவாய்ங்க!

இந்தமேட்டரில்...யோகேஸ்வரி சித்தி சொல்றது ஓரளவுக்கு உண்மைதான்...புலம்பெயர்தமிழர்களும் இதற்கு ஒருகாரணம்!!...

(இதே தவறுகளில் குறைந்தபட்சம் ஒன்றையாவது ,அவர்களும் தாம்வாழும் நாடுகளில் செய்துகொண்டே யாழ்சமூக சீர்கேட்டைபத்தி குப்புறகிடந்து யோசிச்சு பீல்பண்ணுறாய்ங்க எங்கிறது வேறவிசயம்)

புலிகள்காலத்திலும் ..ஏடாகூடகாதல்... வன்னியில்கூட இருந்தது.!..ஆனா பேச்சு பேச்சோடயே இருந்தது...ஒதுங்கிபோய் தப்புபண்ண இப்டிலாட்ஜ் வசதிகளை அவர்கள் அனுமதிக்காதிருந்ததாலதான்... இந்த குழந்தைவயசுலயே அம்மா ஆவுற சிஸ்டம் அப்போது காலூன்றமுடியல,,!

மத்தும்படி இந்தவயசு ஆண்பெண் காதலை ..எந்த இடத்திலும் புலிகள் சமூகசீரழிவு என்று அறிவித்ததே இல்லை!

புலம்பெயர்நாடுகளில் கஷ்டப்பட்டு உழைக்கும் ஒருவனுக்கு ,ஒரு ஆயிரம் யூரோ..அல்லது டாலர் ..மிகப்பெரிய தொகை!

ஆனா ..யாழ்ப்பாணத்துல ஒண்ணு ,இரண்டு இலட்சம் எங்கிறதெல்லாம் சப்பை மேட்டரு!

டீன் ஏஜ்.& சிறுவயசு பசங்க கைய்யில இருக்கும் அளவுக்கு மீறிய பணப்புழக்கம் கூட இன்றைய நிலைக்கு காரணம்! அதுக்கு காரணம் ..பயபுள்ள கேகலிய ரம்புக்கல இல்ல,புலம்பெயர்ந்தவர்கள்தான்!

எதிர்காலம்,பொருளாதாரத்தில் தங்கியிருப்பு.,என்ற இரு விடயங்களே ..

அச்சுறுத்தலாகி , கல்வியிலும் ..சமூகம் மீதான ஒரு பயமும் இளையோருக்கு முன்பு ஏற்படுத்தியிருந்தது!

இன்று நிலமைவேறு:

இப்படித்தான் வாழ்வோம்னு நெனைக்குற டார்லிங்குகளுக்கு ...இப்போதுள்ள எமர்ஜென்சி தீர்வு&தேவை, .....

பாலியல்பற்றிய விழிப்புணர்வும்...பாதுக்காப்பான உடலுறவுபத்திய விளக்கங்களும்தான்!

அப்புறம் நிழலி என்னசொன்னீங்க..?

துப்பாக்கியால் நிலை நிறுத்தப்படும் சமூக அநீதியின் ஆயுட்காலம் துப்பாக்கியின் ரவை தீரும் மட்டுமே

அது சமூக நீதியா? அல்லது அநீதியா?

நிழலிங்க ஊடகப்பணி ஆரம்பித்ததே புலிகளின்குரல் அறிவிப்புபலகைல செய்தி எழுதின்னு பலதடவை சொல்லி இருக்கிங்க...

சரி...

அந்தப்பணி நீங்க விரும்பி செய்ததா? ..இல்ல...விரும்பாம செய்ததா?

விரும்பி செய்திருந்தா..........

சமூக நீதி/அநீதிகளையே துப்பாக்கிரவைமூலம் தீர்க்கமுடியாத..புலிகள் இயக்கம்...

இன விடுதலையை எப்படி..அதை வைச்சு சமாளிப்பாங்கன்னு நம்பினீங்க?

விரும்பாம செய்திருந்தா...

எந்த நிர்பந்ததில அதை செய்தீங்கன்னும் சொல்லியாகணும் இல்லியா?

சொல்லுவீங்களா?

அப்போதானே வாசிக்குறவங்க அறிவுவளரும்!!

Edited by arivili

இந்தமேட்டரில்...யோகேஸ்வரி சித்தி சொல்றது ஓரளவுக்கு உண்மைதான்...புலம்பெயர்தமிழர்களும் இதற்கு ஒருகாரணம்!!...

தமிழர் பலரும் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பதினாறு தொடக்கம் பதினெட்டு வயது எல்லை வரையறையுள்ளது.

அதாவது வயது கூடிய ஆண்கள் பதின்ம வயது பெண்களுடன் தொடர்பு வைப்பது சட்டவிரோதமானது. அதை மீறியவர்கள் கம்பி எண்ணவேண்டி வரும். அமெரிக்க மாதிரி நாடுகளின் சட்டப்படி வேறு நாடுகளில் கூட இந்த சட்டத்தை மீறினால் அதே தண்டனைக்கு ஆளாகலாம்.

தமிழர் பலரும் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பதினாறு தொடக்கம் பதினெட்டு வயது எல்லை வரையறையுள்ளது.

அதாவது வயது கூடிய ஆண்கள் பதின்ம வயது பெண்களுடன் தொடர்பு வைப்பது சட்டவிரோதமானது. அதை மீறியவர்கள் கம்பி எண்ணவேண்டி வரும். அமெரிக்க மாதிரி நாடுகளின் சட்டப்படி வேறு நாடுகளில் கூட இந்த சட்டத்தை மீறினால் அதே தண்டனைக்கு ஆளாகலாம்.

யோகேஸ்வரி சித்தி மேட்டர்ல நான் சொல்லவந்தது...

இந்த திடீர் லாட்ஜ் மேட்டர் பத்தி!

நீங்க , நானு எழுதினத முழுசா வாசிக்கலைன்னு நெனைக்கிறேன்! :)

யோகேஸ்வரி சித்தி மேட்டர்ல நான் சொல்லவந்தது...

இந்த திடீர் லாட்ஜ் மேட்டர் பத்தி!

நீங்க , நானு எழுதினத முழுசா வாசிக்கலைன்னு நெனைக்கிறேன்! :)

எமது புலம்பெயர் நாட்டுச்சட்டங்கள் பற்றி கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தினேன், அவ்வளவுதான் :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சமூகச் சீரழிவு அப்பன் முப்பாட்டன் ஆதாம் ஏவால் காலத்தில் இருந்தே இருக்கு, நல்ல முறை இவர்களுக்கு செக்ஸ் கல்வியை, பாடசாலையில் அறிமுகப் படுத்துவதே, தேவை என்றால் தொட்டுக்க ஊறுகாய் மாதிரி practical சேர்க்கலாம்

கிட்டடியில் நியுஸிலாந்தில் செக்ஸ் அறிவு போதது அங்கு வரும் மாணவர் ஆசிரியர்களுக்கு என்று சொல்லியிருக்கிறார்கள் (Google your sex knowledge)

விடலை பருவத்தில் குழந்தைகளுக்கே இருக்க கூடிய ஆர்வமும், புரிந்து கொள்ள நினைக்கும் ஆர்வத்துடிப்பும் அவர்களை தவறான பாதைக்கும் ஊடகங்களுக்கும் இட்டு செல்வதை தடுக்க பெற்றோரே இது பற்றி பேசுவது முக்கியமாகும். பெற்றோருக்கு இது பற்றி பேச க்கூச்சமாக இருந்தால், இதற்கான புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து வந்து குழந்தைகளிடம் கொடுத்து, படிக்க சொல்லவும். சந்தேகமிருப்பின் உங்களை கேட்க தயங்கவேண்டாம் என்பதை சொல்லுங்கள்.

உங்கள் குழந்தைகள் பாலியல் பற்றியோ, பல்வினை நோய்கள் பற்றியோ கேட்டால், அறிவியல் அளவில் தயங்காமல் விடைஅளிக்கவும்.

ஆண், பெண் இருவரிடமும் மாதவிலக்கு, STD, போன்றவற்றை பற்றி பேசவும். இதற்காக தனியாக நேரம் ஒதுக்கி உங்களையும் அவர்களையும் துன்பத்துக்குகுள்ளாக்க வேண்டாம். வேறு ஏதேனும் பேசும் போது சகஜமாக் இது பற்றி பேச வேண்டும்.

பயமுறுத்த கூடாது: இது குழந்தைகளை மறைமுகமாக படிக்கவும் தேடவும் தோண்டிவிடும்.

குழந்தைகளுக்கு விருப்பம் இல்லையெனில் விட்டுவிடுங்கள். அவர்களுக்கு இது சரியான தருணமாக இல்லாமல் இருக்கலாம்.

உங்களுக்கு அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க தயக்கம் இருப்பின் வெளிப்படையாக கூறிவிட்டு புத்தகங்கள் எடுத்து வந்து கொடுங்கள்.

கலசாரத்தையும் கல்வியறிவையும் சேர்த்து குழப்ப வேண்டாம்.புரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளும் அவர்களின் நண்பர்களும் பேசிக்கொள்வதை கேட்க நேர்ந்தால் உடனடியாக தலையிட்டு அவர்கள் கோபிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு, படங்களுடன் கூடிய கையேடுகளை கொண்டுவந்து படிக்க கொடுங்கள். உங்களுடைய நூலகம், பொதுநலத்துறையில் இதற்கான படங்களும் கிடக்கும் என்றும் அறிவுரை கூறலாம்.

நான் உன் வயதில் இருக்கும் போது இதை பற்றி அறிய ஆர்வம் காட்டவில்லை, வாயை மூடு, தெரியும் போது தெரிந்து கொல்ளலாம் என் கூறவேண்டாம். காலம் மாறிக்கொண்டே வருகிறது.

கொண்டு வருகின்ற புத்தகங்கள், விளக்க படங்கள் இவற்றை நீங்கள் முதலில் பார்க்க வேண்டியது அவசியம். உங்களைவிட உங்கள் குழந்தை பாலியல் முதிர்ச்சி சற்றே விரைவாக அடைவதை புரிந்துகொள்ளுங்கள்.

தந்தை தன் பிள்ளையிடமோ, தாய் தன் மகளுடனோ பேசுவது அவசியம்.

ஆண் குழந்தையிடம் கேட்கவேண்டிய சில கேள்விகள்:

1) தானாகவே வரும் விறப்புத்தன்மை

2) வெளியேறும் விந்தனுத்திரவம் (semen)

3) ஆணுறை அணியும் முறை

4) சுய இன்பம்

தாய் தன் மகளிடம் பேச வேண்டிய சில விஷயங்கள்

1) மாதவிலக்கு, சரியாக தூய்மை செய்து கொள்ளும் முறை, அதன் பயமும் உடல் பலவீனமும்

மார்பக வளர்ச்சி

2) கருத்தரிக்கும் முறை, பாதுகாப்பு

எல்லவற்றுக்கும் மேலாக இருபாலரும் தெரிந்து கொள்ளவேண்டியது: நம் அனுமதியின்றி யாரும் பாலியல் உறவில் கட்டாயப்படுத்தக் கூடாது. ஈடுபடவும் கூடாது. இது மிக தவறு

http://glory.mywebdunia.com

Sex & Knowledge

What Teens Really Need to Know About Sex

Besides physiological facts and pertinent warnings about sexually transmitted diseases, there are five important, and all too often overlooked, facts that teens need to know about sex. This is what you might tell your teenager:

1. Sex is an acquired skill. People expect miracles when they first have sex, not realizing that people need time and experience and patience to grow in their capacity to give and receive pleasure.

2. Sex is best enjoyed by those who are grown up, emotionally as well as physically.

3. Men and women have some important different physiological responses to sex and it's important to be aware of these to avoid misunderstandings.

4. The anxiety of a first time ever or with a new partner can create problems with one or both partners. Patience, understanding and gentle reassurance are vital.

5. Finally, mature love and commitment can make sexual experiences much more satisfying. Tell your teenager that sex is best when one truly trusts and can be completely one's self with another.

If Your Teen Is Having Sex

It is a definite shock to discover that your teen is having sex. You may feel anxious, angry, disappointed, and distressed, and wonder "What do I do now?" Here are some suggestions:

1. Take time to collect your thoughts. Calm down if at all possible before discussing the matter. Lashing out at your teen can only escalate the conflict between you.

2. Let your teen know how you feel in a caring way, and then listen to his or her feelings as well. You'll get through to him better with dialogue than with a ranting monologue.

3. Realize the limits of your power and set limits as you are able. Teens don't usually stop having sex just because a parent demands it. But you can let your teen know that you disapprove and will not permit his/her sexual activity in your own home.

There is a fine line to be sure between accepting the reality of your teen's sexual activity and condoning it. But you can let your teen know that you disagree with his sexual choice, while letting him know, too, you care enough to emphasize the importance of safe sex and consistent use of birth control if he or she doesn't choose to abstain.

http://www.teensadvisor.com/raising-teens/sex-knowledge.html

Edited by Udaiyar

இங்கு தரப்பட்ட தரவுகளில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் குடும்ப வருமானம் தரப்படவில்லை.

அனேகமாக இவர்கள் வருமானம் குறைந்த / கல்வியறிவு குறைந்த பெற்றோர்களைக் கொண்டவர்களாகத் தான் இருக்கும்.

இப்படியான குடும்பங்களில் தாய்மார்கள் தம் பெண்பிள்ளைகள் காதலித்துக் கரைசேர்வதை ஊக்குவிப்பார்கள் என்றே சொல்லலாம்.

இந்தக் காதல் விவகாரம் எல்லை தாண்டும் போது இளவயதுக் கர்ப்பங்கள் ஏற்படுகின்றது.

தாய் சேய் நல வைத்திய அதிகாரி சிவசங்கர் திருமகள் சொல்லும் 10 அவதானிப்புகளிற்குரிய ஆவன நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்கப்பட வேண்டும்.

* * * * * * * * * * * *

எம்முடைய கலாச்சாரத்தில் பெற்றோர் செக்ஸ் சம்பந்தப்பட்ட விடயங்களை பிள்ளைகளுடன் பேசுவது (கல்வியறிவிற்கேனும்) தவிர்க்கப் பட வேண்டியது.

திருமணத்திற்கு முன் செக்ஸ் மிகத் தவறான விடயம் என்பது அவர்கள் மனதில் ஆழமாகப் பதிய வேண்டிய விசயம். இந்த நிலையில் அவர்களுக்கு பெற்றோர் செக்ஸ் பற்றிய அறிவைத் தரவேண்டிய அவசியமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கு ஒண்டு விளங்கனும் யாழ் பாணத்தில கலாச்சாரம் கெட்டுப்போச்சு கெட்டு போச்சுன்னு புலல்தில இருந்து கத்திறாக்களின்ட(பெரிய ஆக்கள்) எத்தனை பிள்ளையள் தமிழ்ழ கதைக்கினம் எத்தனை பிள்ளையள் கலாச்சாரத்தோட இருக்கினம்?

தங்கட பிள்ளையள் எல்லாம் கிழமைக்கு ஒன்டோட சுத்தி திரியலாம் யாழ்பாணத்தில சென்ஞா கலாச்சராம் போய்டுதாம் செம காமடி.....

புலம் பெயர் தேசங்களில் பெரும்பாலான எமது பிள்ளைகள் தமிழ் கலாச்சாரத்தை பேணியும், ஒழுக்கத்துடனும், எமது தேசிய போராட்டங்களிலும், கலந்து பொறுப்புள்ள இளைஞர்களாகவும், யுவதிகளாகவும், இருக்கின்றனர் இதில் மிகவும் குறைந்தளவில் நீங்கள் குறிப்பிடுவதுபோல் உள்ளவர்களும் உண்டு நான் அதை மறுக்கவில்லை,அதேசமயம் தாயகத்தில் இவர்களுக்கு எந்தவித புறச்சூழலும் பதிப்பை ஏற்படுத்த ௬டியத இருக்கவில்லை அப்படியிருக்கையில் இவர்கள் பாரியளவில் பாதிப்பதே வியப்பான விடையம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.