Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள அமைச்சரின் காலில் விழ மறுத்த தமிழ்ப் புதல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிறுவன் தான் அகில இலங்கையில் இரண்டாம் இடத்தில் வந்தான் ஆனால் யாழில்[எமது இணையத்தில்] இச் சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்ததை விட யாழ் மாவட்டத்தில் முதலாவது வந்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தோரே அதிகம்...தற்போது சிறுவன் காலில் விழவில்லை என்டவுடன் அதை அரசியலாக்குகிறார்கள்...நிழலிக்கு ஒரு பச்சை

இந்த சிறுவன் தான் அகில இலங்கையில் இரண்டாம் இடத்தில் வந்தான் ஆனால் யாழில்[எமது இணையத்தில்] இச் சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்ததை விட யாழ் மாவட்டத்தில் முதலாவது வந்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தோரே அதிகம்...தற்போது சிறுவன் காலில் விழவில்லை என்டவுடன் அதை அரசியலாக்குகிறார்கள்...நிழலிக்கு ஒரு பச்சை

வட மாகாணத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களான ப.சேதுராகவன், மநிதுர்ஷிகா ரமேஷ், சர்மிகா சர்வானந்தன் ஆகியோரை கல்வியமைச்சர் கௌரவிக்க யாழ் வந்தமைதான் அரசியல்.

அதேவேளை இங்கே, யாழில், இந்த மாணவன் காலில் விழ மறுத்தமையை வெறுமனையே பாராட்டியவர்களை விட இதனால் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை பற்றியே அதிகமானோர் எழுதியுள்ளனர் என்பதும் இங்கே 'உசுப்பேத்தும்' தேவை இல்லை என்பதை அவர்கள் காட்டியும் உள்ளனர்.

குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு..

குடித்தாலும் உண்மையை சொல்லும் ஒரு நேர்மை இருக்கின்றது,அதைவிட்டு இப்பவும் ஒழித்துக்குடிக்கும் நல்லவனாக வேசம் போடும் போலி அல்ல,

இங்கு வந்து தேசியம் பேசும் பலர் பிரச்சனை என்றவுடன் நாட்டைவிட்டு ஓடிவந்ததுதான் அவர்கள் உண்மை முகம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாதா, பிதா, குரு, தெய்வம்

இந்நால்வரைத் தொழலாம். பகுத்தறிவு கொண்ட மனித இனம் காலில் விழுதல், தொழுதல் என்பதனை ஏன் எதற்காக என்று சிந்திக்கவேண்டும்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலில் வெற்றியீட்டிய மாணவன் தனது திறமையாலும், ஆசிரியர் , பெற்றோரின் வழிகாட்டலாலுமே இந்நிலையை அடைந்துள்ளான். சிந்திக்கும் திறமையை தன்னகத்தே கொண்ட அச்சிறுவனை சம்பந்தமே இல்லாத ஒரு வேற்று மனிதனின் காலில் விழுந்து வணங்கும்படி மற்றவர்கள் உந்தியது மிகவும் தவறானது. அவ்விடத்தில் பகுத்தறியும் திறனை மிகுதியாகப் பெற்ற சிறுவன் மாதா, பிதா, குரு, தெய்வத்தை மட்டுமே வணங்குவேன் என்றது அச்சிறுவனின் பயமில்லாத் தன்மையையும் தன்னம்பிக்கையையும் வெளிக்காட்டி நிற்கிறது. சிறுவன் காலில் விழ மறுத்தது சம்பந்தப்பட்டவர் சிங்களவர் என்பதற்காக என்று குறுகிய நோக்கில் தயவு செய்து சிந்திக்காதீர்கள். அவ்விடத்தில் ஒரு தமிழராக இருந்தால்கூட அச்சிறுவன் அப்படித்தான் செய்திருப்பான். எடுத்ததற்கெல்லாம் அதிகாரம் உள்ளவனின் காலில் விழும் கேடுகெட்ட கலாச்சாரத்தை சிதறடிக்கும் ஒரு திருப்புமுனையே இவ்விளையவனின் செயல். எதிர்காலத்தில் மனித குலத்தில் இத்தகைய தன்னம்பிக்கையும் துணிவும் கொண்ட ஒரு புதிய சமூகம் உருவாவதற்கு இச்சிறுவனே முதன்மையானவனாக இருக்கட்டும். வாழ்த்துக்கள்.

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனையவர்களின் காலில் வீழ்வது பற்றிய ஆராய்ச்சி இங்கே தேவையில்லாத விடயம்.

இலங்கை அரசியலை வைத்து ஒரு கணம் சிந்தியுங்கள்.அந்த சிறுவன் இனிவரும் நாட்களில் நிம்மதியாக படிக்கமுடியுமென நம்புகின்றீர்களா?சிறிலங்கா ஒரு கொடூரமான நாடு என நாங்களே விளம்பரம் செய்துவிட்டு.....அவனுக்கு வெற்றித்திலக வார்த்தைகளும்...வாழ்த்துமடல்களும்...??????தமிழ்ப்படங்கள்,சீரியல் பாத்தும் இன்னும் திருந்துதுகளில்லையப்பா! :(

ஏதோ ஜனநாயக நாட்டில் வாழும் ஒருவனுக்கு வாழ்த்துக்களும்...விதண்டாவாதங்களும்????

Edited by குமாரசாமி

சேதுராகவா: உனது தன்மானத்தை மெச்ச வரும்போது வேறு எதோவொன்று தடுத்துவிடுகிறது.

எப்போதுமே பாடத்தை கவனமாக செவிமடுக்கும் நீ, எப்படி அன்று பக்கத்தில் நின்ற பெற்றோரை தவறவிட்டாய்.

தந்தை இட்ட கட்டளையாக இளைய தாய் வந்து கூறியதை கேட்டுத்தான் ராகவன் தன் அரசுரிமையை தம்பிக்கு அளித்துவிட்டு இலங்கை வரை நடைப்பயணமாக வந்தான். அதனால்த்தான் அவன் "வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன் ராமன்" என்று பெயர் எடுத்தான். நீதான் பாப்பா பாட்டு படித்திருப்பாயே. பாரதி எதுவும் வேறுவிதமாகாக் கூறவில்லையே.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! - தாய்

சொன்ன சொல்லை தட்டாதே பாப்பா!

தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ

திடங்கொண்டு போராடு பாப்பா.

மேலைநாட்டு சரித்திரங்களில், சொலமன், சீசர், நெப்போலியன் என்று மூன்று வீரர்களைப்பற்றி கூறுவார்கள்.

சீசர் எதிரி பலவான் என்று தெரிந்தும் அவைக்களம் போனான். நெபோலியன் தனது பலத்தை ஒரு லட்சம் மடங்கு கூட கணக்கிட்டுவிட்டான். சொலமன் தோல்வி நிலையானது அல்ல என்று கூறி ஏழவது முறை போராடி வென்றான். அதனால் அவன் சாணக்கிய சொலமன் என்று அழைக்கப்பட்டான்.

நீ வீரானாக இரு. ஆனால் சீசராக வர விரும்பாதே. நீதான் படிப்பில் எற்கனவே சொலமன் ஆகிவிட்டாயே. ஆகவே வீரத்திலும் சொலமனாக இரு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அந்தச் சின்னப் பையனின் தன்மானத்தை மெச்சும் நேரம், அவனின் எதிர்காலத்தை நினைக்க பயமாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகமே ஸ்ரீலங்கா உன்னிப்பாக அவதானித்து கொண்டு இருப்பதால் சிங்களவனால் அந்த சிறுவனுக்கு ஏதாவது செய்ய நினைத்தாலும் செய்ய முடியாமல் உள்ளார்கள், இருப்பினும் கவனம் அவசியம் தம்பி.

சிறிய விடயம் ஒன்று மிகைப்படுத்தப்பட்டு அரசியலாக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

காலில் விழுபவனும் முட்டாள் காலை கொடுப்பவன் அதை விட முட்டாள்...அது சிங்கள்வன் என்றால் என்ன தமிழன் என்றால் என்ன...பெற்றோர்கள் குருமார் எல்லோரும் சிந்திக்க வேண்டும் ....

  • கருத்துக்கள உறவுகள்

தன் மகனின் குணநலன்களை அறியாது காலில் விழச்சொன்ன பெற்றோரே சிறுவனின் பாதுகாப்பைக் கேள்விக்குறி ஆக்கியவர்கள்..! :huh: இங்கு கருத்தெழுதுபவர்கள் அல்லர்..! :rolleyes:

இச் சிறுவன் தலைவர் பிரபாகரனின் காலிலும் விழுந்திருக்க மாட்டான்...

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தலியாறு தமிழ் மகா வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன், கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் காலில் விழுந்து வணங்குவதற்கு மறுப்பு தெரிவித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது

நாம் யாரின் காலிலும் (பெற்றோர் ,ஆசிரியர் தவிர)விழுவதில்லை.அதை அடியொற்றியே அச்சிறுவனும் செய்திருக்கலாம்.என்றாலும் அவரின் செயல் துணிகரமானதும்(ஏனையவர்கள் விழுந்து கும்பிடும் போது) பாராட்டத்தக்கதும் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறுவன் செய்த பாராட்டி ஊக்கப்படுத்தக்கூடிய விடயத்தைப்பார்த்தும் எம்மால் மௌனம் காக்கவேண்டிஉள்ளது என்றால் அந்த பையனை ஆள்பவர்கள் கொடுமையானவர்கள் என்பது வெளிப்படை. அப்படியாயின் அவர்களை வெளியேற்றி அவனை சுயமரியாதையுடன் வாழ வழி ஏற்படுத்த போகின்றோமா அல்லது அவனுக்குப்பிடிக்காத ஒன்றை பழகிக்கொள் என்று இங்கு சிலர் எழுதுவதுபோல் பரிந்துரைக்கப்போகின்றோமா???

குடிகாரன் பேச்சுக்கு 5 பச்சை விழுந்திருக்கு,

நாங்களாவது வீக்எண்டிலேயும் பாட்டிகளிலும் மாத்திரம்,தினசரி அடிக்கும் மெகா குடிகாரர் தலைவருக்கு 30 வருடமாக அரசியல் ஆலோசகர்,தமிழினத்திற்கு தத்துவ ஆசிரியர்,பேச்சுவார்த்தைக்கு தலைவர்.

குடிக்கும், அறிவிற்கும், செயற்பாட்டிற்கும் சம்பந்தம் இல்லை என உங்கள் தலைவருக்கே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

குடிகாரன் பேச்சுக்கு 5 பச்சை விழுந்திருக்கு,

நாங்களாவது வீக்எண்டிலேயும் பாட்டிகளிலும் மாத்திரம்,தினசரி அடிக்கும் மெகா குடிகாரர் தலைவருக்கு 30 வருடமாக அரசியல் ஆலோசகர்,தமிழினத்திற்கு தத்துவ ஆசிரியர்,பேச்சுவார்த்தைக்கு தலைவர்.

குடிக்கும், அறிவிற்கும், செயற்பாட்டிற்கும் சம்பந்தம் இல்லை என உங்கள் தலைவருக்கே தெரியும்.

முன்னுக்கு பின் முரணாக எழுதுவது.அன்ரனும் குடிக்கிறார் தானும் குடிக்கிறாராம்.ஆகவே இருவருக்கும் ஒரே அரசியல் அறிவு என்று நிறுவினாலும் நிறுவி விடுவார் போல இருக்கிறது. இப்போதே மலையையும் மடுவையும் ஒப்பிட்டு பார்க்கவும் அது தான் அரசியல் அறிவில். :icon_mrgreen::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.