Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"கருத்துக்காட்டான் " மருதங்கேணி

சகாரா அக்கா சிறிய எழுத்துப் பிழை இருக்கின்றது. தயவு செய்து பின்வருமாறு திருத்திவிடுங்கள்

"கருத்துக்கோட்டான் " மருதங்கேணி :icon_mrgreen:

  • Replies 1.3k
  • Views 97.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கட்சி + ஸ்தாபகர் + ஸ்தாபகர் அல்லாத உறுப்பினர் தொகை ( பதிவை உறுதி செய்ய வேண்டப்படும் குறைந்த தொகை 2)

2. படிக்காத மேதைகள் (வல்வை அக்கா.) (2 - சிறி அண்ணர், நீலப் பறவை)

வல்லை அக்காவின் கட்சி வேண்டப்பட்ட ஆகக்குறைந்த தகுதிகளைப் பெற்று முதல் நிரந்தரப் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனி அவர்கள் களமாளுமன்றிற்கான அவர்களின் கொள்கைகள்.. தேர்தல்களை சந்தித்ததல் குறித்தும்.. தமது கட்சி அமைப்பு.. விரிவாக்கம் குறித்தும் சிந்திக்கலாம். வாழ்த்துக்கள் சகாரா அக்கா. :):icon_idea:

நன்றி நெடுக்கர் :rolleyes:

இந்த அறிவிப்பின் ஊடாக 'படிக்காத மேதைகள் கழகத்தை" நிரந்தரப்பதிவு செய்யப்பட்ட கழகமாக அறிவித்திருக்கிறீர்கள்.... இந்தப்பொழுதில் ப.மே.க இல் எங்களுடன் தோழர் "கருத்துகாட்டான்" :wub: மருதங்கேணியும், தோழர் "புன்னகைத்தென்றல்" நிலாமதியும் :wub: இணைந்து தங்களின் உறுப்பினர் உரிமைகளைப் பெற்றுள்ளார்கள் என்பதை உங்களுக்கும் ஏனைய கழகங்களுக்கும் அறியத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

மேலதிக தகவல்களுடன் மீண்டும் இக்களத்திற்கு வருகை தருகிறோம்.

"அத்திவாரம் ஆழப்போடு.

அதிலும் வலிமை கோர்த்துப்போடு." :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஏகப்பிரதிநிதித்துவக் கட்சியான "யாழ் உயர் குழாம்" கட்சிக்கு இதுவரை பகிரங்கமாக யாரும் ஆதரவு தரவில்லை என்பது வியப்பைத் தரவில்லை. ஏனெனில் நமது ஆதரவாளர்கள் கட்சி அரசியலை விரும்பாதவர்கள். ஆனாலும் அதிக ஆதரவு எமது கட்சிக்குத்தான் என்பதும் சில்லறைக் கட்சிகளையும் மாற்றுக்கட்சிகளையும் யாரும் கணக்கிலெடுக்கமாட்டார்கள் என்பதும் மிகத் தெளிவாகவே நமக்குத் தெரியும்!

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா சிறிய எழுத்துப் பிழை இருக்கின்றது. தயவு செய்து பின்வருமாறு திருத்திவிடுங்கள்

"கருத்துக்கோட்டான் " மருதங்கேணி :icon_mrgreen:

எம்முடைய "ப.மே.க" தோழரை சக போட்டிக்கழகத்தைச் சார்ந்த தோழர் கிருபன் அவர்கள் இவ்வாறு அவருடைய பட்டத்தை மாற்றி ஏளனஞ்செய்வதை வன்மையாக, எங்கள் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

களமாளுமன்ற இயக்குனர் கவனத்தில் எடுக்கவேண்டும் என்பதை தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிவிப்பின் ஊடாக 'படிக்காத மேதைகள் கழகத்தை" நிரந்தரப்பதிவு செய்யப்பட்ட கழகமாக அறிவித்திருக்கிறீர்கள்....

படிப்பும் மேதமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது யாழ் கள களமாளுமன்றம் என்ற எண்ணக் கருவைக் கொண்டு வந்த நமது கட்சியின் கொள்கைகளை (விரும்பியோ, விரும்பாமலோ) கடைப்பிடிக்கும் நெடுக்ஸ்கூட அறிவார். இருந்தும் நெடுக்ஸ் வகுத்த விதிகளிலுள்ள வழுக்கள் காரணமாக படிக்காத மேதைகள் கழகம் நிரந்தரமாகப் பதிவு செய்யப்பட்டமை மனவருத்தத்தையும் சங்கடத்தையும் தருகின்றது. ஆயினும் தொழில்சார் நிபுணரான நெடுக்ஸ் படிக்காத மேதைகள் கழகம் பெரும்பான்மையினைப் பெறமாட்டாது என்பதில் அதீத நம்பிக்கை வைத்துள்ளதால் நிரந்தரப் பதிவை அனுமதித்தார் என்பதும் மிக நன்றாகவே புரிகின்றது..

எனவே தேர்தலில் வாக்களிப்போர் "படிக்காதவர்கள் எல்லாம் மேதைகள் ஆகலாம்" என்ற தவறான கருத்தியலை முறியடிக்கத் தமது ஏழாம் அறிவை (குறைந்தது ஆறாம் அறிவையாவது) பயன்படுத்துவார்கள் என்பது திண்ணமாக நமக்குத் தெரியும்!

எம்முடைய "ப.மே.க" தோழரை சக போட்டிக்கழகத்தைச் சார்ந்த தோழர் கிருபன் அவர்கள் இவ்வாறு அவருடைய பட்டத்தை மாற்றி ஏளனஞ்செய்வதை வன்மையாக, எங்கள் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

களமாளுமன்ற இயக்குனர் கவனத்தில் எடுக்கவேண்டும் என்பதை தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படியான இரந்துகொள்ளுதலும், இறைஞ்சுதலும், படிக்காமலே தாம் மேதைகள் என்று நினைத்துக் கொக்கரிப்பதும் படிக்காதவர்களின் அடிப்படைப் பண்புகள் என்பது களமாளுமன்ற இயக்குனர் நெடுக்ஸ் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

....தொப்புள் கொடி உறவுகளாகிய புரட்சி, ராஜவன்னியன் என அனைவரையும் எமது கட்சியில் சேர அன்பாக அழைக்கிறோம்.

தும்பளையான்

கொ.ப. செ

"வாழ்க்கை வாழ்வதற்கே"

ஏனையோர் மறந்த நிலையில், எங்களையும் நினைவுகூர்ந்து அழைத்தமைக்கு மிக்க நன்றி தும்பளையான்...!

நாம் உலகாண்ட பரம்பரை.. !

புறமுதுகிட்டு ஓடாமல் வாளை மார்பில் ஏந்தி வீரத்துடன் மாய்வோம்...!!

ஆனாலும் தமிழர்களின் குணங்களை நாம் நன்கு பிரதிபலிக்க வேண்டாமா?

இனமே அழிந்தொழியும் நிலை வந்தாலும் நாங்கள் எங்களுக்குள் அடிபட்டுச் சாவோமே தவிர ஒன்றுபடவே மாட்டோமே!

ஆகையால், இங்கே இருப்பது நாற்பது பேராயினும் நாற்பது லெட்டர் பேட் கட்சிகள் நமக்குள் இல்லையெனில் அது உலக அதிசயமாகிவிடும்.

ஆகவே தொப்புள் கொடி கட்சி என்றும், செ(வ)ஞ்சிக் கொடி கட்சி எனவும் இருவரும் தனித் தனியே இரு கட்சிகள் ஆரம்பிக்கலாமே என இப்பொழுது மல்லாந்து படுத்து யோசிக்கிறேன்.. ! :lol:

எதற்கும் .உங்கள் கட்சிகளைப் பற்றி புலனாய்வு, கள ஆய்வு மற்றும் இறுதியில் கிழனாய்வு செய்துவிட்டு, நாளை மறுபடியும் குப்புற படுத்து யோசித்துவிட்டு, முடிவு அறிவிக்கிறேன்...!! :o

மறவாதீர், ஒற்றுமையே மனிதனின் வலிமை...ஆனால் அதில்லாமல் அழிவதே தமிழனின் வழமை!

"வாழ்க்கை வாழ்வதற்கே" - ஆனால், த னி த் த னி யா க ! :icon_idea:

.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் அண்ணா..

உங்கள் அவதாரில் உள்ள ரங்கராவ் அவர்களைப் போல நீங்களும் ஒரு மன்னர்தான்..! :lol:

எம் தமிழினம் ஒரு ஆண்ட பரம்பரை..! :( அது மீண்டும் தரணியை ஆளவேண்டுமென்றால் நாமெல்லோரும் மன்னர்தான் என்கிற எண்ணம் வரவேண்டும்..! :rolleyes: உங்களிடம் அது நிறையவே உண்டு..! உங்களுக்கான கட்சி மன்னர்கள் சபைதான்..! :huh:

உரிமைக்குக் கைகொடுங்கள்..! எமது கட்சியில் இணையுங்கள்..! :wub:

பி.கு: விசுகு அண்ணா எங்கள் கட்சியில் இணைவார் என்கிற பெருத்த நம்பிக்கை எமக்குண்டு..! அவரின் சிறந்த நண்பராகிய நீங்கள் எமது கட்சியில் இணைவதே சாலப் பொருத்தம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பும் மேதமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது யாழ் கள களமாளுமன்றம் என்ற எண்ணக் கருவைக் கொண்டு வந்த நமது கட்சியின் கொள்கைகளை (விரும்பியோ, விரும்பாமலோ) கடைப்பிடிக்கும் நெடுக்ஸ்கூட அறிவார். இருந்தும் நெடுக்ஸ் வகுத்த விதிகளிலுள்ள வழுக்கள் காரணமாக படிக்காத மேதைகள் கழகம் நிரந்தரமாகப் பதிவு செய்யப்பட்டமை மனவருத்தத்தையும் சங்கடத்தையும் தருகின்றது. ஆயினும் தொழில்சார் நிபுணரான நெடுக்ஸ் படிக்காத மேதைகள் கழகம் பெரும்பான்மையினைப் பெறமாட்டாது என்பதில் அதீத நம்பிக்கை வைத்துள்ளதால் நிரந்தரப் பதிவை அனுமதித்தார் என்பதும் மிக நன்றாகவே புரிகின்றது..

எனவே தேர்தலில் வாக்களிப்போர் "படிக்காதவர்கள் எல்லாம் மேதைகள் ஆகலாம்" என்ற தவறான கருத்தியலை முறியடிக்கத் தமது ஏழாம் அறிவை (குறைந்தது ஆறாம் அறிவையாவது) பயன்படுத்துவார்கள் என்பது திண்ணமாக நமக்குத் தெரியும்!

இதிலிருக்கும் சூட்சமங்களை விளங்காத நிலையில் தோழர் கிருபன் இருப்பது வியப்பாகவும் அதே நேரம் மனவருத்தத்திற்கு உரியதாகவும் இருக்கிறது. இந்த களமாளுமன்றின் இயக்குனராக தன்னை இனங்காட்டிக்கொண்டுள்ள நெடுக்கர் ஒருபோதும் எந்தக்கழகத்திற்குள்ளும் நுழைய முடியாது :lol: என்பது பொதுவிதி அது தோழர் கிருபனுக்குத் தெரியாமல்போனதுதான் வேடிக்கை.

ஒன்றை தோழர் அவர்களுக்கு ஆழமாகவும் மிக அவசியம் கருதியும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். படிக்காதவர்களையும், மேதைகளையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக கொண்டதுதான் எமது கழகம் ஆதலால்தான் நாங்கள் படிக்காத மேதைகள் கழகம் :lol: :lol: :lol: என்று பெயர் சூட்டிக்கொண்டோம்.

இத்தோடு தோழர் அவர்களுக்கான நிரந்தர பதிவு கிடைத்தபின்னர் இந்தக் களமாளுமன்றத்தில் நாங்கள் பலதையும் பத்தையும் பற்றி வாதித்துக் கொள்வோம்.

உங்களுக்கான உரிமை கிடைப்பதற்கு வாழ்த்துக்கள் தோழர் கிருபன் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் கவிதை

நீ சொற்கள் நிறுத்தி

பார்வை தொடங்கியதும்

கவிதை களைந்து

நிர்வாணமாகிறது காதல்!

இரண்டு முத்தங்கள் கொடுத்து

இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்

இயலாத செயலென

இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்

யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்

எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள

என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன

எப்பொழுதும் அளந்தே பேசுபவன்

உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே

அளவின்றி பேசுகிறேன்

உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்

எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட

சிறகடித்து தவிக்கும் இமைகள்!

தனியே நீ முணுமுணுக்கும்

இனிய பாடல்கள்

இசைத்தட்டில் ஒலிக்கையில்

இனிமை இழப்பதேன்?

(

வைரமுத்து))

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

ஏனையோர் மறந்த நிலையில், எங்களையும் நினைவுகூர்ந்து அழைத்தமைக்கு மிக்க நன்றி தும்பளையான்...!

நாம் உலகாண்ட பரம்பரை.. !

புறமுதுகிட்டு ஓடாமல் வாளை மார்பில் ஏந்தி வீரத்துடன் மாய்வோம்...!!

ஆனாலும் தமிழர்களின் குணங்களை நாம் நன்கு பிரதிபலிக்க வேண்டாமா?

.

ராஜவன்னியன் ஐயா அவர்களுடைய இந்தக் கூற்றே

அவர் எந்தக் கட்சியில் சேருவார் என்பதைக் காட்டுகின்றது :wub: .

வீதியால் சென்றபோது ஒரு திண்ணையில் நமது கட்சி போர் அடிக்கும் கட்சி

என்று எதிர்க் கட்சியினர் போய்ப் பிரச்சாரம் செய்தனர் :D .

மக்களே நம் கட்சி அநீதிகளுக்கு எதிராகப் போர் செய்யும் கட்சி :lol: என்பதை

ஆணித்தரமாக சொல்லிக் கொள்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான இரந்துகொள்ளுதலும், இறைஞ்சுதலும், படிக்காமலே தாம் மேதைகள் என்று நினைத்துக் கொக்கரிப்பதும் படிக்காதவர்களின் அடிப்படைப் பண்புகள் என்பது களமாளுமன்ற இயக்குனர் நெடுக்ஸ் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். :icon_mrgreen:

களமாளுமன்ற இயக்குனர் நெடுக்கர் அவர்களே!, :rolleyes:

இப்படியான கருத்துக்களை இடுவதன் மூலம் தோழர் கிருபன் அவர்கள் வன்முறையைத் தூண்ட முயற்சி செய்கிறார். இவரின் நோக்கமானது பாமரர்களாக இருக்கும் எங்கள் கழக உறுப்பினர்களை வன்முறையாளர்களாக மாற்றி அவர்களின் களமாளுமன்றத்தின் உறுப்பினர் உரிமையை இழக்க செய்வதற்கானது ஆகவே இவரின் "யாழ் உயர் குழாம்" என்ற கழகத்தினை களமாளுமன்றில் இணைவதற்கான சகலவழிகளையும் தடை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வண்ணம்

ப.மே.க

தோழர்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருக்கும் சூட்சமங்களை விளங்காத நிலையில் தோழர் கிருபன் இருப்பது வியப்பாகவும் அதே நேரம் மனவருத்தத்திற்கு உரியதாகவும் இருக்கிறது.

எதிர்பார்த்த எதிர்வினைதான் வந்துள்ளது. நாம் மற்றவர்கள் எப்படிச் சிந்திப்பார்கள் என்று உய்த்தறியும் நுண்ணறிவையும் கொண்டுள்ளோம் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.

தமிழில் உள்ள ஒரு பழமொழி:

"உடல் முழுதும் எண்ணெயைப் பூசிக் கொண்டு எவ்வளதான் உருண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்".

இதை விளங்கிக்கொள்ள பள்ளிக்கூடப் பக்கம் குறைந்தபட்சம் மழைக்காவது ஒதுங்கியிருக்கவேண்டும்.

களமாளுமன்ற இயக்குனர் நெடுக்கர் அவர்களே!, :rolleyes:

இப்படியான கருத்துக்களை இடுவதன் மூலம் தோழர் கிருபன் அவர்கள் வன்முறையைத் தூண்ட முயற்சி செய்கிறார். இவரின் நோக்கமானது பாமரர்களாக இருக்கும் எங்கள் கழக உறுப்பினர்களை வன்முறையாளர்களாக மாற்றி அவர்களின் களமாளுமன்றத்தின் உறுப்பினர் உரிமையை இழக்க செய்வதற்கானது ஆகவே இவரின் "யாழ் உயர் குழாம்" என்ற கழகத்தினை களமாளுமன்றில் இணைவதற்கான சகலவழிகளையும் தடை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வண்ணம்

ப.மே.க

தோழர்கள். :lol:

வன்முறையும் பாமரத்தன்மையும் இரட்டைக் குழந்தைகள் என்பது புரியாதவரா நெடுக்ஸ்! எல்லோராலும் விரும்பப்படும் ஏகபிரதிநிதித்துவக் கொள்கையைக் கொண்ட "யாழ் உயர் குழாம்" அமைப்பை இழிவு செய்து தடை செய்யக் கோருவது பாமரர்களின் பாஸிசப் பண்பு என்பதை படிக்காத மேதைகள் (?) கழகம் நிரூபித்துள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

காதல‌ர் கட்ச்சில இணைய ஆசைப்படும் உறவுகளுக்காக்க இந்த வர வேற்பு பாடலும் கவிதையும்

jolluuuuuuuuuuuu.jpg

Edited by பையன்26

யாழ் கள நாட்டின் எதிர்கால நலன்கருதி முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதோடு , காலவரையற்ற ஊரடங்கு உத்தரவும் , அவசரகாலச்சட்டமும் இன்று மதியத்தில் இருந்து அமூலுக்கு வருகின்றது . படையனரின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டதோடு ஜனாதிபதியின் 600 சிறப்பு அதிரடிக் கமோண்டோக்கள் ( CADRE REPUBLICAN ) 5 அடுக்குப் பாதுகாப்புகளில் தயாராக உள்ளனர் . விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது <_< <_< <_< .

தலமைச் செயலாளர்

ஜனாதிபதி அலுவலகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் கட்சியினரின் அதிரடி அறிவிப்பு...

காதல் கட்சியில் இணையும் ஒவ்வொரு அங்கத்தவர்சார்பாகவும் நேசக்கரத்துக்கு 5€ வழங்கப்படும் என்பதை காதல் கட்சியினர் அறிவித்துக்கொள்கின்றனர்.

இச்சலுகை 20.11.2011 நள்ளிரவு 12மணிவரையும் தான் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். உடனடியாக வந்து இணையுங்கள் உறவுகளுக்கு உதவுங்கள்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்த எதிர்வினைதான் வந்துள்ளது. நாம் மற்றவர்கள் எப்படிச் சிந்திப்பார்கள் என்று உய்த்தறியும் நுண்ணறிவையும் கொண்டுள்ளோம் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.

தமிழில் உள்ள ஒரு பழமொழி:

"உடல் முழுதும் எண்ணெயைப் பூசிக் கொண்டு எவ்வளதான் உருண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்".

இதை விளங்கிக்கொள்ள பள்ளிக்கூடப் பக்கம் குறைந்தபட்சம் மழைக்காவது ஒதுங்கியிருக்கவேண்டும்.

வன்முறையும் பாமரத்தன்மையும் இரட்டைக் குழந்தைகள் என்பது புரியாதவரா நெடுக்ஸ்! எல்லோராலும் விரும்பப்படும் ஏகபிரதிநிதித்துவக் கொள்கையைக் கொண்ட "யாழ் உயர் குழாம்" அமைப்பை இழிவு செய்து தடை செய்யக் கோருவது பாமரர்களின் பாஸிசப் பண்பு என்பதை படிக்காத மேதைகள் (?) கழகம் நிரூபித்துள்ளது!

தோழர் கிருபன் அவர்களே எப்படி உங்களை நீங்கள் ஏக பிரதிநிதித்துவம் என்று சொல்லிக் கொள்ளலாம்? இதுவரை உங்களை அங்கீகரித்து ஒருவரும் உங்களுடைய அணியில் இணையவில்லை... இன்னும் உங்களுக்கான களமாளுமன்றின் உறுப்பினர் உரிமையைக்கூட நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை அப்படி இருக்கும்போது எங்கிருந்து வந்தது உங்களின் ஏகபிரதிநிதித்துவம்?

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் கச்சில இணைய முக்கிய ஆளை ஜமுனாவை வருக வருக என்று வர வேற்க்கிறோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலர் கச்சில இணைய முக்கிய ஆளை ஜமுனாவை வருக வருக என்று வர வேற்க்கிறோம்

அத்துடன் குட்டி அண்ணாவையும்,இளங்கவி அண்ணாவையும் வரவேற்கிறோம்.

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் கிருபன் அவர்களே எப்படி உங்களை நீங்கள் ஏக பிரதிநிதித்துவம் என்று சொல்லிக் கொள்ளலாம்? இதுவரை உங்களை அங்கீகரித்து ஒருவரும் உங்களுடைய அணியில் இணையவில்லை... இன்னும் உங்களுக்கான களமாளுமன்றின் உறுப்பினர் உரிமையைக்கூட நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை அப்படி இருக்கும்போது எங்கிருந்து வந்தது உங்களின் ஏகபிரதிநிதித்துவம்?

சிறுபிள்ளைத்தனமான கேள்வி என்றாலும் பதில் சொல்லவேண்டிய கடப்பாடு உள்ளதால்..

அங்கீகாரம் பெறுவதற்கு கட்சி அரசியல் நடாத்திப் பாராளுமன்றம் செல்லத்தேவையில்லை என்பது எமது கொள்கையைப் படித்த அனைவருக்கும் புரியும். ஏனெனில் மக்கள் (இங்கு கள உறவுகள் என்று கொள்க) என்ன விரும்புகின்றார்களோ அவற்றைப் பிரதிபலித்து இலட்சியத்தை வகுத்து களத்தை செம்மையான வழியில் இட்டுச் செல்வதே எமது நோக்கம். அந்த வகையில் நாம்தான் ஏகபிரதிநிதிகள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. எம்மை ஏகபிரதிநிதிகளாக்கிய மக்கள் பிற்காலத்தில் எமது கொள்கையில் இருந்து வழுவினாலும் நாம் எமது இலட்சியத்தை மாற்றமாட்டோம் என்பதையும் ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்கின்றேன்.

பதவிகள், உறுப்பினர் உரிமைகள் எல்லாம் நாம் தேடிப் பெறுவதில்லை. அவை தாமாகவே எம்மை நாடி வரும். வராவிட்டால் ஏகபிரதிநிதிக் கட்சி என்ற உரிமையில் நாமே எடுத்துக்கொள்வோம்!

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி அண்ணா ஜமுனாவுக்காக்க இந்த பாடல்

இந்த பாடலை கேட்டதும் காதலர் கட்ச்சில இணைவினம் :D:D

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபிள்ளைத்தனமான கேள்வி என்றாலும் பதில் சொல்லவேண்டிய கடப்பாடு உள்ளதால்..

அங்கீகாரம் பெறுவதற்கு கட்சி அரசியல் நடாத்திப் பாராளுமன்றம் செல்லத்தேவையில்லை என்பது எமது கொள்கையைப் படித்த அனைவருக்கும் புரியும். ஏனெனில் மக்கள் (இங்கு கள உறவுகள் என்று கொள்க) என்ன விரும்புகின்றார்களோ அவற்றைப் பிரதிபலித்து இலட்சியத்தை வகுத்து களத்தை செம்மையான வழியில் இட்டுச் செல்வதே எமது நோக்கம். அந்த வகையில் நாம்தான் ஏகபிரதிநிதிகள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. எம்மை ஏகபிரதிநிதிகளாக்கிய மக்கள் பிற்காலத்தில் எமது கொள்கையில் இருந்து வழுவினாலும் நாம் எமது இலட்சியத்தை மாற்றமாட்டோம் என்பதையும் ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்கின்றேன்.

பதவிகள், உறுப்பினர் உரிமைகள் எல்லாம் நாம் தேடிப் பெறுவதில்லை. அவை தாமாகவே எம்மை நாடி வரும். வராவிட்டால் ஏகபிரதிநிதிக் கட்சி என்ற உரிமையில் நாமே எடுத்துக்கொள்வோம்!

இது சர்வாதிகாரம் :( உங்கள் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு மக்கள்(இங்குள்ள கள உறவுகள்) உறுப்பினர்கள் இணைந்து இந்தக்களமாளுமன்றில் உங்கள் தரப்பை நியாயப்படுத்தும்போது உங்கள் தரப்பு நியாயங்கள் சபையால் ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் நாமும் ஏற்றுக் கொள்ளக்கடமைப்பட்டிருக்கிறோம் :icon_idea: அல்லாதவிடத்து உங்கள் கொள்கைகள் அராஜகமானவை :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இது சர்வாதிகாரம் :( உங்கள் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு மக்கள்(இங்குள்ள கள உறவுகள்) உறுப்பினர்கள் இணைந்து இந்தக்களமாளுமன்றில் உங்கள் தரப்பை நியாயப்படுத்தும்போது உங்கள் தரப்பு நியாயங்கள் சபையால் ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் நாமும் ஏற்றுக் கொள்ளக்கடமைப்பட்டிருக்கிறோம் :icon_idea: அல்லாதவிடத்து உங்கள் கொள்கைகள் அராஜகமானவை :icon_mrgreen:

ஆட்சியைக் கைப்பற்றி ஊழலையும் , பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டவர்களுக்கு எமது சீரிய கொள்கைகள் சர்வாதிகாரம், அராஜமாகத் தோன்றலாம்.

நாம் விரும்புவதெல்லாம் யாழ்களத்திற்கு ஒரு புதிய பாதையைச் சரியாகச் செப்பனிட்டு நெடுங்காலத்திற்கும் தளைத்தோங்கிச் செழித்து நிற்க தொழில்சார் நிபுணர்களைக் கொண்ட உயர் குழாம் ஒன்றை உருவாக்குவதே. வேறு ஒன்றுமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
14744_1161363673717_1216585513_30361217_5314378_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சியைக் கைப்பற்றி ஊழலையும் , பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டவர்களுக்கு எமது சீரிய கொள்கைகள் சர்வாதிகாரம், அராஜமாகத் தோன்றலாம்.

நாம் விரும்புவதெல்லாம் யாழ்களத்திற்கு ஒரு புதிய பாதையைச் சரியாகச் செப்பனிட்டு நெடுங்காலத்திற்கும் தளைத்தோங்கிச் செழித்து நிற்க தொழில்சார் நிபுணர்களைக் கொண்ட உயர் குழாம் ஒன்றை உருவாக்குவதே. வேறு ஒன்றுமில்லை!

எமக்குத் தெரிந்தவரை உங்களுடைய சிந்தனைகள் புதிய பாதையை குறுகிய காலத்தோடு முடங்கிப்போக வைக்கக்கூடியதாகவே இருக்கிறது. யாழ் உயர் குழாம் தொழில்சார் நிபுணர்களின் அறிவோ அறிவு பார்த்துப் பெருமைப்டத்தான் உங்களுடைய கழகத்திற்கு உறுப்பினர்கள் எவரும் சேரவில்லை... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.