Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பழைய கதைக்குள் புதிய கதை

Featured Replies

எல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு பழைய கதை தான் இது

ஒரு ஆற்றம் கரையோரமாக ஒரு விறகு வெட்டி மரம் ஒன்றை வெட்டி கொண்டிருந்தான் எதிர்பாராத விதமாக

அவனுடைய கோடாரி தவறி ஆற்றினுள் விழுந்து விட்டது தன்னுடைய கோடாரி விழுந்து விட்டதை நினைச்சு ஆற்றோரமாக இருந்து அழுது கொண்டிருந்தான் இவனை பார்த்து இரக்கப்பட்ட வனதேவதை ஒன்று அவனுக்கு உதவி செய்ய வந்தது அவனிடம்

ஏன் அழுகிறாய் என கேட்க அவனும் தான் அழும் காரணத்தை சொன்னான் உடனே ஆற்றில் மூழ்கிய தேவதை கையில் பொன்னாலான கோடரியுடன் வந்து

இதுவா உனது என்று கேட்டது விறகு வெட்டியும் இல்லை என்று தலை ஆட்டினான் பிறகு மூழ்கிய தேவதை வெள்ளி கோடரியுடன் வந்தது இதுவா என கேட்டிச்சு அவனும் இல்லை என தலை ஆட்டினான் பிறகு அவனின் இரும்பு கோடரியுடன் வந்த தேவதை அவனிடம் மூன்று கோடரிகளையும் கொடுத்து உன் நேர்மைக்கான பரிசு என்று சொல்லி அவனிடமிருந்து விடைபெற்றது

இது புதுசு...

காலம்கள் நகர்ந்தன விறகுவெட்டிக்கும் திருமணம் முடிந்து சந்தோசமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது ஒரு நாள் பழைய ஆற்றம் கரை வழியே மனைவியுடன் விறகு வெட்டி சென்று கொண்டிருந்தான் அப்போது அவன் மனைவி தவறி ஆற்றினுள் விழுந்து விட்டாள் பழைய மாதிரியே விறகு வெட்டி இருந்து அழுது கொண்டிருந்தான் இம்முறையும் அதே தேவதை அவனுக்கு உதவி செய்ய வந்திச்சு..

ஆற்றில் இருந்து முதலில் அது ஏஞ்செலினா ஜோலி (மாதிரி) ஒரு பெண்ணை கொண்டு வந்து இதுவா உன் மனைவி எண்டு கேட்டிச்சு விறகு வெட்டி என்ன சொல்லி இருப்பான்னு guess பண்ணுங்க பார்ப்பம்

.

....

....

விறகு வெட்டி இவள் தான் என் மனைவி என்று சொல்லினான் தேவதைக்கு கடும் கோபம் வந்திச்சு ஏன் பொய் சொல்றாய் இவள் உன் மனைவி இல்லை என்று எனக்கும் தெரியும் என்று சொல்லிச்சு விறகு வெட்டி

சொன்னான் ஆம் இவள் என் மனைவி இல்லை தான் நான் இவளை என் மனைவி இல்லை எண்டால் நீ மீண்டும் ஆறினுள் போய் ஐஸ்வர்யா ராய் மாதிரி பெண்ணை கொண்டு வருவாய் நானும் இல்லை எண்டு சொல்லுவன் இறுதியில் நீ என் மனைவியை கொண்டு வந்திட்டு சொல்லுவாய் உன் நேர்மைக்கு பரிசு எண்டு மூன்று பேரையும் என் தலையில் கட்டி விட்டு போயிடுவாய் அவனவன் ஒருத்தியுடனே காலம் தள்ள முடியல நீ மூன்றுபேரை என் தலையில் கட்டிவிட பார்க்கிறாய் போய்யா நீயும் உன் பரிசும்...என்றிட்டு போய்கொண்டே இருந்தான்

இதில இருந்து என்ன தெரிகிறது எண்டால் ஆண்கள் பொய் சொன்னால் அதற்கு ஒரு காரணம் கட்டாயம் இருக்கும் :P

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் சொல்லும் பொய்யும் புரட்டும்,செய்யும் செயல்களும் எல்லாருக்கும் எப்போதும் ஒத்துவராது.அந்த பொய் புரட்டுக்களை கேட்டுக் கொண்டு தங்களுக்குள்ளயே வேதனைப்பட்டுக் கொண்டு வாழ்பவர்கள் நாளடைவில் எப்படியான ஒரு நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று சொல்ல முடியாது இல்லையா...

  • கருத்துக்கள உறவுகள்

------

உன் நேர்மைக்கு பரிசு எண்டு மூன்று பேரையும் என் தலையில் கட்டி விட்டு போயிடுவாய் அவனவன் ஒருத்தியுடனே காலம் தள்ள முடியல நீ மூன்றுபேரை என் தலையில் கட்டிவிட பார்க்கிறாய் போய்யா நீயும் உன் பரிசும்...என்றிட்டு போய்கொண்டே இருந்தான்

விறகு வெட்டி, கோடாலி தொலைந்ததினால்... உண்மை பேசினான்.

இந்த, விஷயத்திலை... டக்கெண்டு, உசாராகி... ஏஞ்சலினா ஜோலியோடை தப்பிக்கப் பாத்தான்....

பாவம் விறகுவெட்டியை, வனதேவதை திரும்பவும் மாட்டி விட்டுட்டுது. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் விறகு வெட்டிக்கு ஒன்று கூட இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்களே இப்படித் தான் எதற்கெடுத்தாலும் பெண்களது உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது...கோடாலி தொலைந்தாலும் எடுத்துக் கொடுப்பதறகு பெண்[தேவதை]தேவை,மனைவி தொலைந்தாலும் எடுத்துக் கொடுப்பதற்கு பெண் தேவை...ஆண்கள் எதையுமே தனியாக,சுயமாக செய்ய மாட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்களே இப்படித் தான் எதற்கெடுத்தாலும் பெண்களது உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது...கோடாலி தொலைந்தாலும் எடுத்துக் கொடுப்பதறகு பெண்[தேவதை]தேவை,மனைவி தொலைந்தாலும் எடுத்துக் கொடுப்பதற்கு பெண் தேவை...ஆண்கள் எதையுமே தனியாக,சுயமாக செய்ய மாட்டார்களா?

இதைத்தான் சொல்வது கோடரிக்காம்பின் வேலை என்று. :lol::D :D :D

இந்த ஆண்களே இப்படித் தான் எதற்கெடுத்தாலும் பெண்களது உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது...கோடாலி தொலைந்தாலும் எடுத்துக் கொடுப்பதறகு பெண்[தேவதை]தேவை,மனைவி தொலைந்தாலும் எடுத்துக் கொடுப்பதற்கு பெண் தேவை...ஆண்கள் எதையுமே தனியாக,சுயமாக செய்ய மாட்டார்களா?

செய்யலாம் பாருன்கோ ஆனா பிறகு கே' என்டு என்களை சொல்லுவீன்களே :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆற்றம் கரையோரமாக ஒரு விறகு வெட்டி மரம் ஒன்றை வெட்டி கொண்டிருந்தான் எதிர்பாராத விதமாக

அவனுடைய கோடாரி தவறி ஆற்றினுள் விழுந்து விட்டது ஒன்று அவனுக்கு உதவி செய்ய வந்தது அவனிடம்தன்னுடைய கோடாரி விழுந்து விட்டதை நினைச்சு ஆற்றோரமாக இருந்து அழுது கொண்டிருந்தான் இவனை பார்த்து இரக்கப்பட்ட வனதேவதை

ஏன் அழுகிறாய் என கேட்க அவனும் தான் அழும் காரணத்தை சொன்னான் உடனே ஆற்றில் மூழ்கிய தேவதை கையில் பொன்னாலான கோடரியுடன் வந்து....

இந்த ஆண்களே இப்படித் தான் எதற்கெடுத்தாலும் பெண்களது உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது...கோடாலி தொலைந்தாலும் எடுத்துக் கொடுப்பதறகு பெண்[தேவதை]தேவை,மனைவி தொலைந்தாலும் எடுத்துக் கொடுப்பதற்கு பெண் தேவை...ஆண்கள் எதையுமே தனியாக,சுயமாக செய்ய மாட்டார்களா?

விறகு வெட்டிக்கு, வலிய வந்து உதவி செய்தது வனதேவதை தான்.

வன தேவவதை வந்திருக்காவிட்டால்..... அவன் இன்னும்... கொஞ்ச நேரம் அழுது போட்டு.. புதுக் கோடாலி வாங்கியிருப்பான்.

சும்மா... கிடக்கும் ஆண்களை, பழுதாக்குவதே... பெண்கள் தான். :D

  • கருத்துக்கள உறவுகள்

விறகுவெட்டி தான் உண்மையான புத்திசாலி!

தேவைதைக்கு ஏன் இந்தத் தேவையில்லாத வேலை!

விறகுவெட்டி மனைவியின் செத்த வீட்டிற்காக அழுதிருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலதான் கஸ்டம் மூன்று பேர் என்றால் வெளிநாட்டில இது எல்லாம் சகயமப்பா.......

  • கருத்துக்கள உறவுகள்

இக்கதையை நான் ஏற்கனவே பலவருடங்களுக்கு முன்னர் வாசித்தும் வானொலியில் கேட்டும் உள்ளேன் பழைய கதைக்குள் புதிய கதையை எழுதியவர் நீங்களா?

  • தொடங்கியவர்

இக்கதையை நான் ஏற்கனவே பலவருடங்களுக்கு முன்னர் வாசித்தும் வானொலியில் கேட்டும் உள்ளேன் பழைய கதைக்குள் புதிய கதையை எழுதியவர் நீங்களா?

இந்த நக்கல் தானே வேண்டாம்கிறது :lol:

இல்லை அக்கா எங்களுக்கு அந்தளவு தகுதி எல்லாம் இல்லை எங்கேயோ படிச்சது தான் but

படிச்ச இடம் நினைவில இல்லை நான் நினைக்கிறன் முக புத்தகத்தில் பகிரபட்டதாக இருக்கும்னு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.