Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.கூ. பக்குவமாக கருமங்களை முன்னெடுக்கும்: சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேல நான் இந்த கருத்தை எழுதும் போது உண்மையில் உங்களை நினைத்து தான் எழுதினேன்,,,,,,,,,,.

நான் கூட்டமைபில் இருப்பவர்களை விட உலகத்திலோ இல்லை ஈழத்தமிழர்களிளோ அதி புத்திசாலிகள் இல்லை என்று கூறவில்லை......

தமிழ்த்தேசியத்தையே உயிரா கொண்டு இருந்த சில அமைப்புகள் இருந்த இடம் இல்லாம போய்விட்டார்கள்.

அங்கு சரியான வழிகாட்டி இல்லை என்பதை அழிவின் முலம் கண்டுகொண்டோம்.......

புலிகள் இருந்தார்கள் அப்போதும் டக்கிளஸ் , சித்தார்த்தன், ஆனந்த சங்கரியும் இருந்தார்கள்

புலிகள் அழிந்தார்கள் அப்போதும் டக்கிளஸ் , சித்தார்தன், கருணா, பிள்ளையான் இருந்தார்கள்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வந்தார்கள் அப்போதும் டக்கிளஸ் , கருணா. பிள்ளையான், கனகரத்தினம். என்று இருக்கிறார்கள்.

கூட்டமைப்பு அழிந்தாலும் அப்போதும் டக்கிளஸ் , கருணா பிள்ளையான் ,கனகரத்தினம். என்னும் யார் யார் புதிதாக இருப்பார்களோ தெரியாது,...

ஆகமொத்தத்திலை நக்கிப்பிழைக்கோணுமெண்டுறியள் :D

  • Replies 81
  • Views 4.6k
  • Created
  • Last Reply

நேற்று இரவு ரிவிஐ தொலைக்காட்சியில் வெளிச்சம் நிகழ்ச்சி.. கனேடிய தமிழர் பேரவையின் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் கலந்துகொண்டிருந்தார்..! :rolleyes:

திரைமறைவில் சம்பந்தன் ஐயாவும் மற்ற உறுப்பினர்களும் எமது விடுதலைக்குச் செய்துவரும் சேவை தங்களுக்குத் தெரியும் எனவும் அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டார்..! அத்துடன் அமெரிக்க ராஜாங்க செயலகத்தின் அதிகாரிகள் தமிழர்களுக்கு நல்ல அனுபவமிக்க தலைவர் இருப்பதாகப் பாராட்டியதாகவும் சொன்னார்..! :rolleyes:

ஜெனிவா நிகழ்வில் கலந்துகொள்ளாததன் சரியான காரணத்தை அவர்கள்தான் விளக்கவேண்டும் எனவும் அதுவரை சேறடிக்காதிருப்பது நல்லது எனவும் தெரிவித்தார்..! :rolleyes:

அவர் சொல்வதில் உங்கள் எல்லோருக்கும் உடன்பாடு உள்ளதா? :rolleyes:

இல்லை, அடுத்த தேர்தலில் கூட்டமைப்பை( இருக்கிற கோவணத்தையும்) வீட்டுக்கு அனுப்புவது தான் ந்ல்லது

ஆகமொத்தத்திலை நக்கிப்பிழைக்கோணுமெண்டுறியள் :D

முதல வாசித்து விளங்கிக் கொள்ள பழகனும் அப்புறம் தான் கூட்டிக் கொடுத்து வாழனும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல வாசித்து விளங்கிக் கொள்ள பழகனும் அப்புறம் தான் கூட்டிக் கொடுத்து வாழனும்.

டக்ளஸ்,கருணா,ஆனந்தகச்சேரி பிள்ளையான் எல்லாம்.........சரிங்க ஓ :o

இந்தக்கருத்துக்களுக்கு என்ன பதில்கள் உள்ளன?

தனக்கு மிக நெருக்கமான தமிழரசுக்கட்சிப் பிரமுகர்கள் சிலரிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தக் காரணங்களை முன்வைத்திருக்கின்றார்

அந்த நெருக்கமானவர்கள் இதை சந்திக்குக் கொண்டு வந்தார்கள்.........

உண்மை கடவுளுக்குத்தான் தெரியும். யார் என்ன சொன்னரோ; யார் எதைக்கேட்டாரோ; யார் ஏன் இதை எழுதினாரோ?

நல்ல மனத்துடன் நாம் எடுக்ககூடிய கருத்து:

அவற்றில் முதலாவது

சத்தியபிரமாணத்தை மீறி ஜெனீவா செல்வோமாக இருந்தால் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் அபாயத்தினை எதிர்கொள்ள நேரிடும்

இலங்கையில் ஆபத்து இருக்கென்பதை ஆபத்து என்றசொல்லைப்பாவித்து புலம் பெயர் மக்களுக்கு விளக்க முடியாது. அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இலங்கையை வெளிநாடுகள்(இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவுமே) கையாளக் கஸ்டப்படுகொண்டிருக்கும் போது ஈழவேந்தனின் நிலையை தேடிக்கொள்ளவது ஒரு தீர்வைத்தேடுவதாகாது.(ஈழவேந்தன் செய்தது தவறு என்பதல்ல- ஒரு அனுபவம் போதும்)

இரண்டாவது,

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் புலிக்கொடிகளை ஏந்திக்கொண்டு வந்துவிடுவார்கள். அதனால் ஜெனீவா செல்வதன் நோக்கம் முற்றுமுழுதாக அடிபட்டுப்போய்விடும்

தாயகத்துப் போராடமும் புலத்துப்போராட்டமும் வேறு வேறு பரிமாணகளில் தான் இன்னமும் நிகழ்த்தப்படவேண்டும். ஒன்றாக இணைக்கப்பட இது தருணம் இல்லை. குறைந்த பட்டசம் கூட்டமைப்பு புலத்துப் போராட்ட முறைகளில் இருந்து விலகியிருக்க விரும்புகிறது. (பந்தி பண்பாக வார்த்தைகள் இடப்பட்டதல்ல, ஆனாலும் புலத்தாரும் கூட்டமைப்பை விளாசுவதில் கெலித்தவர்கள் அல்ல)

வெளியே புலிக்கொடி பிடித்து இலங்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வது வேறு. உள் சென்று இலங்கையை எதிர்ப்பது வேறு. இந்த பிரேரணை இலங்கைக்கு ஆதரவாக நடத்தி முடிக்கப்படும். எனவே, உள்ளே, அவதிப்பட்டு பிரேரணை விவாத நேரம் இலங்கையை எதிர்த்துப் பேசி பிரேரணையை எதிர்ப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முடியாது. எதிர்ப்புக்கள் கவனமாக கணைவிடப்படவேண்டும்.

மூன்றாவது,

ஒரு கட்சி உறுப்பினர் என்ற வகையிலே, கட்சியின் தலைவர் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டியது எமது பொறுப்பாகும்.

சிந்தித்து முடிவெடுப்பது தெருக்கூத்து முறையாக இருக்க முடியாது. அறிவு, ஆற்றல், அனுபவத்துடன் ஒத்துப்போக வேண்டும். எழுந்தமானத்தில் "துரோகி" என்று பொக்கெட்டுக்குள் தயாராக இருக்கும் சீட்டை இழுத்துவிடுவதால் தீர்வு வந்தாகாது. கட்சி என்பது ஒத்தகருத்தளார்களின் குழு. எதிர்த்துப் பேசலாம் ஒத்து மட்டுமே நடக்கவேண்டும். என்னைக்கிண்டி போகாததற்கான காரணத்தை வெளிப்படையாக சொல்ல வைத்துவிடலாம் என்று நினப்பது தவறு.

மொத்தத்தில்,

இதுவரையில் எந்தநாடாவது எமது தீர்ப்பு எப்படி இருக்கும் என்று எம்மிடம் இன்னும் கூறவில்லை. நாம் தொடர்ந்து பேசிப்பார்ப்பதற்கு இலங்கை தேதி குறிக்க காத்திருக்கிறோம். ஜெனிவாவில் அல்ல; பேச்சு வார்த்தை கொழும்புவில்த்தான் நடக்கும்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

நேற்று இரவு ரிவிஐ தொலைக்காட்சியில் வெளிச்சம் நிகழ்ச்சி.. கனேடிய தமிழர் பேரவையின் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் கலந்துகொண்டிருந்தார்..! :rolleyes:

திரைமறைவில் சம்பந்தன் ஐயாவும் மற்ற உறுப்பினர்களும் எமது விடுதலைக்குச் செய்துவரும் சேவை தங்களுக்குத் தெரியும் எனவும் அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டார்..! அத்துடன் அமெரிக்க ராஜாங்க செயலகத்தின் அதிகாரிகள் தமிழர்களுக்கு நல்ல அனுபவமிக்க தலைவர் இருப்பதாகப் பாராட்டியதாகவும் சொன்னார்..! :rolleyes:

ஜெனிவா நிகழ்வில் கலந்துகொள்ளாததன் சரியான காரணத்தை அவர்கள்தான் விளக்கவேண்டும் எனவும் அதுவரை சேறடிக்காதிருப்பது நல்லது எனவும் தெரிவித்தார்..! :rolleyes:

அவர் சொல்வதில் உங்கள் எல்லோருக்கும் உடன்பாடு உள்ளதா? :rolleyes:

உடன்பாடு உள்ளது. அடுத்த ஐ.நா. மனித உரிமை தொடர்வரை நம்பிக்கை கொள்வேன்.

இந்தக்கருத்துக்களுக்கு என்ன பதில்கள் உள்ளன?

கூட்டமைப்பு ஜெனீவா செல்லாமைக்கான காரணங்கள்!- சிறீதரனின்!

முதலாவது,

பாராளுமன்றச் சட்டக்கோவையின் அடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும்போது சத்தியப்பிரமாணம் செய்து கொள்கின்றனர். இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நடந்து கொள்வதில்லை என்றே சத்தியப்பிரமாணம் செய்திருக்கின்றோம். சத்தியபிரமாணத்தை மீறி ஜெனீவா செல்வோமாக இருந்தால் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் அபாயத்தினை எதிர்கொள்ள நேரிடும்.

இரண்டாவது,

ஜெனீவாவிற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக செல்கின்ற பொழுது, அங்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் புலிக்கொடிகளை ஏந்திக்கொண்டு வந்துவிடுவார்கள். அதனால் ஜெனீவா செல்வதன் நோக்கம் முற்றுமுழுதாக அடிபட்டுப்போய்விடும்.

மூன்றாவது,

ஒரு கட்சி உறுப்பினர் என்ற வகையிலே, கட்சியின் தலைவர் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டியது எமது பொறுப்பாகும்.

எனவே இவற்றின் அடிப்படையில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

http://www.thedipaar...ws.php?id=42070

ஜெனீவா சென்று தமிழ் ஈழம் கேட்டால்தான் இறையாண்மைக்கு குந்தகம் என்று சொல்லலாம். படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கேட்பது எப்படி இறையாண்மைக்கு குந்தகமாகும்?

இறையாமைக்கு குந்தகம் என்றல் முதலில் சிங்கள அரச பயங்கரவாதிகள் தான் ஐ. நா. சபையில் இருந்து வெளியேற வேண்டும்.

அடுத்தது, இவர்கள் குலைநடுக்கம் கொண்டவர்கள் என்றால், கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் இல்லை - சிற்றம்பலம், சிவாஜிலிங்கம், கஜேந்திரன் போன்றவர்களை அனுப்பியிருக்கலாம்.

மொத்தத்தில் பலர், பலரது குடும்ப உறுப்பினர்கள் சிங்கள அரச பயங்கரவாதிகளாலும், இந்திய காட்டுமிராண்டிப் பயங்கரவாதிகளாலும் மிரட்டப்பட்டுள்ளார்கள்????

மேலும் இந்த அறிக்கையின் உண்மைத் தன்மையை உடனடியாக சரிபார்க்க முடியவில்லை. இந்திய காட்டுமிராண்டிப் பயங்கரவாதிகளின் சதிவேலையாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

நேற்று இரவு ரிவிஐ தொலைக்காட்சியில் வெளிச்சம் நிகழ்ச்சி.. கனேடிய தமிழர் பேரவையின் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் கலந்துகொண்டிருந்தார்..! :rolleyes:

திரைமறைவில் சம்பந்தன் ஐயாவும் மற்ற உறுப்பினர்களும் எமது விடுதலைக்குச் செய்துவரும் சேவை தங்களுக்குத் தெரியும் எனவும் அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டார்..! அத்துடன் அமெரிக்க ராஜாங்க செயலகத்தின் அதிகாரிகள் தமிழர்களுக்கு நல்ல அனுபவமிக்க தலைவர் இருப்பதாகப் பாராட்டியதாகவும் சொன்னார்..! :rolleyes:

ஜெனிவா நிகழ்வில் கலந்துகொள்ளாததன் சரியான காரணத்தை அவர்கள்தான் விளக்கவேண்டும் எனவும் அதுவரை சேறடிக்காதிருப்பது நல்லது எனவும் தெரிவித்தார்..! :rolleyes:

அவர் சொல்வதில் உங்கள் எல்லோருக்கும் உடன்பாடு உள்ளதா? :rolleyes:

நானும் நேற்று பார்த்தேன் .குமார் கதைப்பது உண்மை .டேவிட் கதைப்பது அரசியல்.டேவிட் சும்மா பச்சை பொய்பேசும் ஒருவர்.இவர் காலம் காலமாக இப்படியேதான் கதைக்கின்றார்,அப்படித்தான் கதைக்க வேணுமாம் .வெளிநாடுகள் வந்தும் ஊர் அரசியல் தான் இவர்கள் செய்கின்றார்கள் .முள்ளிவாய்காலுக்கு முன் இவர் கதைத்ததை இப்ப பார்த்தால் இவர்கள் ஒட்டுமொத்த முகமும் தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கருத்துக்களுக்கு என்ன பதில்கள் உள்ளன?

மூன்றாவது: ஜனநாயக அமைப்புகளில் தலைமை என்பது எடுத்த முடிவு என்பதை விட, பொதுக்கருத்து (consensus) என்பதே சரி.

இரண்டாவது: கனடாவுக்கு த.தே.கூ வந்த போது யார் புலிக் கொடி ஏந்திப் போய் வரவேற்றார்கள் த.தே.கூவை? புலம் பெயர்ந்தவர்கள் ஒன்றும் தெரியாக பாப்பாக்கள் மாதிரி சிறிதரன் சித்திரிக்க முயல இதை வைத்துக் கொண்டு சிலர் இங்கே நியாயமும் கற்பிக்கின்றனர்.

முதலாவது: இரண்டு பதில்கள் உள்ளன

1. போகாமல் சம்பந்தர் கடிதம் எழுதியிருக்கிறார் சிறி லங்காவுக்கு பாதகமாக வாக்களிக்கும் படி. இப்ப மட்டும் பா. உ பதவிகள் பறி போகாதா?

2. ஜெனிவாவில் நடப்பது பொங்கு தமிழா? இல்லையே? மனித உரிமை மர்வு மட்டுமே. மேலும், த.தே.கூ வை பாராளுமன்றம் அனுப்பியது தமிழர் உரிமைகளுக்காகப் பாடுபடவே அன்றி, "பா.உ பதவி போகும் அதனால் சிறிதரனுக்குக் கிடைக்கும் இலவச விடுதியும், ஐந்து நட்சத்திர விடுதி தரத்திலான மதிய உணவும் பறி போகும்" என்று பொத்திக் கொண்டிருக்க அல்ல!

நேற்று இரவு ரிவிஐ தொலைக்காட்சியில் வெளிச்சம் நிகழ்ச்சி.. கனேடிய தமிழர் பேரவையின் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் கலந்துகொண்டிருந்தார்..! :rolleyes:

திரைமறைவில் சம்பந்தன் ஐயாவும் மற்ற உறுப்பினர்களும் எமது விடுதலைக்குச் செய்துவரும் சேவை தங்களுக்குத் தெரியும் எனவும் அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டார்..! அத்துடன் அமெரிக்க ராஜாங்க செயலகத்தின் அதிகாரிகள் தமிழர்களுக்கு நல்ல அனுபவமிக்க தலைவர் இருப்பதாகப் பாராட்டியதாகவும் சொன்னார்..! :rolleyes:

ஜெனிவா நிகழ்வில் கலந்துகொள்ளாததன் சரியான காரணத்தை அவர்கள்தான் விளக்கவேண்டும் எனவும் அதுவரை சேறடிக்காதிருப்பது நல்லது எனவும் தெரிவித்தார்..! :rolleyes:

அவர் சொல்வதில் உங்கள் எல்லோருக்கும் உடன்பாடு உள்ளதா? :rolleyes:

தனிப்பட்ட ரீதியில் எனக்கு உடன்பாடு இருக்கின்றது. இன்று த.தே.கூ இதை விட வேறு ஒன்றையும் செய்ய முடியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் த.தே.கூ ஜெனிவா செல்லாதது சரியே. புலிகளின் அரசியல் பிரதிநிதிகளாக த.தே,கூ அமைப்பு பார்க்கப்படும் வரைக்கும் அவர்கள் ஜெனிவா செல்லாமல் இருப்பதே சரி. சுமந்திரன். சிறிதரன் போன்றோர் இலங்கை அரசுக்கு காவடி எடுப்பதற்காக வேணும் என்றால் போகமாட்டம் என்று முடிவு எடுத்து இருக்கலாம்...ஆனால் இந்த முடிவு எமக்கு ஒப்பீட்டு அளவில் சரியாகவே அமையும்

இது என் தனிப்பட்ட கருத்து; யாழின் அரசியல் கருத்து அல்ல

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இரவு ரிவிஐ தொலைக்காட்சியில் வெளிச்சம் நிகழ்ச்சி.. கனேடிய தமிழர் பேரவையின் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் கலந்துகொண்டிருந்தார்..! :rolleyes:

திரைமறைவில் சம்பந்தன் ஐயாவும் மற்ற உறுப்பினர்களும் எமது விடுதலைக்குச் செய்துவரும் சேவை தங்களுக்குத் தெரியும் எனவும் அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டார்..! அத்துடன் அமெரிக்க ராஜாங்க செயலகத்தின் அதிகாரிகள் தமிழர்களுக்கு நல்ல அனுபவமிக்க தலைவர் இருப்பதாகப் பாராட்டியதாகவும் சொன்னார்..! :rolleyes:

ஜெனிவா நிகழ்வில் கலந்துகொள்ளாததன் சரியான காரணத்தை அவர்கள்தான் விளக்கவேண்டும் எனவும் அதுவரை சேறடிக்காதிருப்பது நல்லது எனவும் தெரிவித்தார்..! :rolleyes:

அவர் சொல்வதில் உங்கள் எல்லோருக்கும் உடன்பாடு உள்ளதா? :rolleyes:

சுருக்கமாய்ச் சொன்னால்...

கருணாநிதியின், மறு வடிவம் சம்பந்தன்.

அவன், ஆட்டையைப் போட்டால்...

இவன், ஓட்டையை போடுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஜெனிவாவுக்கு வந்தாலும் எங்களுக்கு பெரிதாக ஒன்றும் கிடைக்கப் போவதில்லை அது கூட்டமைப்புக்கு முன்னரே தெரியும் ஜெனிவாவுக்கு வந்து அவமானப்பட்டு,உங்களிடம் திட்டு வாங்குவதை விட வராமல் இருப்பதே நல்லது என யோசித்திருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஜெனிவாவுக்கு வந்தாலும் எங்களுக்கு பெரிதாக ஒன்றும் கிடைக்கப் போவதில்லை அது கூட்டமைப்புக்கு முன்னரே தெரியும் ஜெனிவாவுக்கு வந்து அவமானப்பட்டு,உங்களிடம் திட்டு வாங்குவதை விட வராமல் இருப்பதே நல்லது என யோசித்திருப்பார்கள்

un11.jpg

உங்களுக்கு, சாத்திரமும் தெரியுமோ...

இதுவரை... ஜெனிவா போராட்டத்தில் தமிழர் மட்டுமே... கலந்து கொண்டவர்கள்.

தொப்பி பிரட்டிகளுக்கு, அங்கு என்ன வேலை? ஜெனிவாவை... மதினா என்று, நினைக்கப் படாது.

சம்பந்தன் திருகோணமலையில்... சப்பாணி கட்டி இருப்பதிலும் பார்க்க... ஜெனிவாவுக்கு போயிருக்கலாம். அல்லது வாயை.... மூடிக் கொண்டிருந்திருக்கலாம்.

http://www.yarl.com/...l=&fromsearch=1

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியே கறுப்பு ஜூலைக்கு பயந்து கொண்டு வாழ்ந்தால்.. விடுதலை என்பது இந்தப் பூமிப் பந்து அழியும் வரை நமக்குக் கிடைக்காது..!

மனித உரிமைகள் விடயத்தை அமெரிக்கா தனது இந்து சமுத்திரப் பிராந்திய இருப்பின் உறுதிப்பாட்டை நிலை நிறுத்த முன்னிறுத்தும் அதேவேளை.. சீனாவும்.. இந்தியாவும்.. இடையில் போட்டி போட்டுக் கொண்டு நிற்கின்றன. இதற்கிடையில் கூட்டமைப்பு.. கொசுவும் அடிக்க முடியாது. இதுதான் யதார்த்தம்.

கூட்டமைப்பு.. ஜெனிவா போகாதது என்பது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது அதாவது.. புலி அழிப்பாக இதர தமிழ் ஒட்டுக்குழுக்களைப் போல காட்ட விளைகிறது என்பதே யதார்த்தம். இதன் மூலம் கூட்டமைப்பின் கீழ்த்தரமான மக்களை ஏமாற்றும் நிலைப்பாடு தெளிவாக வெளிப்பட்டுள்ளதாகவே உணர முடிகிறது..!

சிங்களப் பேரினவாதத்திற்கு சாமரம் வீசுவதன் மூலம் இனக் கலவரங்களை தடுத்திருக்க முடியும் என்றால் 1950 களில் இருந்து 1982 வரை கலவரங்களே இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக நடந்திருக்கக் கூடாது.

எந்த அடிப்படையில் கூட்டமைப்பு சிங்கள அரசை நம்புகிறது.. தமிழ் மக்களை நம்பச் சொல்கிறது என்பது தான் புரியவில்லை.

கூட்டமைப்பும் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யும் நிலை தோன்றினால்.. மீண்டும் தமது உரிமைகளை நிலைநாட்ட வன்முறையை தமிழ் மக்கள் நாடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்..!

நெடுக்ஸ் அண்ணா,

இதற்கு பதிலையும் நீங்களே எழுதிவிட்டீர்கள்

[/b]மனித உரிமைகள் விடயத்தை அமெரிக்கா தனது இந்து சமுத்திரப் பிராந்திய இருப்பின் உறுதிப்பாட்டை நிலை நிறுத்த முன்னிறுத்தும் அதேவேளை.. சீனாவும்.. இந்தியாவும்.. இடையில் போட்டி போட்டுக் கொண்டு நிற்கின்றன. இதற்கிடையில் கூட்டமைப்பு.. கொசுவும் அடிக்க முடியாது. இதுதான் யதார்த்தம்.[b]

நீங்களே இப்படி சொல்கிறீர்கள் அதற்குப்பிறகு கூட்டமைப்பு எதற்கு போகவேண்டும்?

அமெரிக்கா தலைமையிலான தீர்மானத்தை கொண்டுவர உத்தேசித்துள்ள நாடுகளுக்கு தெரியாத ஒன்றையா கூட்டமைப்பு சொல்லிவிடப்போகுது?

இல்லை இலட்சக்கணக்கான மக்கள் அழிந்த போது பார்த்துக்கொண்டிருந்த சர்வதேசமா இன்னொரு கறுப்பு ஜூலை நடந்தால் தடுக்க போகுது?

பயந்து வாழவேண்டும் என்று சொல்லவில்லை,பயந்து வாழவேண்டிய சூழ்நிலை தான் தாயகத்தில் இருக்கும் போது அவர்கள் யோசிக்கத்தான் வேண்டும்.

ஜெனிவா மாநாடு முடியும் வரைக்கும் அமைதியாக இருப்பதே நல்லது அதன் பின்னர் தான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எடுத்த முடிவு சரியா, பிழையா என்பதை சொல்ல முடியும் அத விடுத்து இப்போதே எமது அபிலாசைகளை திணித்து பிழவை அதிகரித்தால் அது எதிரிக்கே வாய்ப்பாகிவிடும், அவன் செய்ய நினைப்பதை நாமே செய்து முடித்திடுவோம் போல.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களை அழித்தால் தான்.....

இந்தியா வல்லரசாகும்.

எண்டு ...அந்தப் பன்னாடைக்கு, மலையாளத்தான் சொல்லிப் போட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களை அழித்தால் தான்.....

இந்தியா வல்லரசாகும்.

எண்டு ...அந்தப் பன்னாடைக்கு, மலையாளத்தான் சொல்லிப் போட்டான்.

ஏன் ...... இந்தியாக்காரனுக்கு ஈழத்தமிழன் என்ன சுப்பர் பவரா ....?

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(I received this via email from someone)

02-03-2012

முதன்மை ஆசிரியர்

உதயன்

வணக்கம். இந்த வார தலையங்கம் படித்தேன்.

ஒருமுறைக்கு இருமுறை அதைப் படித்த போது தமிழில் உள்ள ஒரு பழமொழி நினைவுக்கு வந்தது!

பாம்பும் சாகவேண்டும் தடியும் முறியக் கூடாது என்பதுதான் அந்தப் பழமொழி.

ஜெனிவாவில் பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை வரும் என்று சில தமிழர்கள் எதிர்பார்த்திருக்கலாம். அல்லது அவர்களது விருப்பமாக இருந்திருக்கலாம். ஆனால் அமெரிக்கா முதல் படியாக கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கத்துக்கான ஆணையத்தின் (கபாமநஆ) பரிந்துரைகளை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் தவறினால் நாடு ஒரு பன்னாட்டு விசாரணை தேவை என்ற அழுத்தத்துக்கு ஆளாக வேண்டிவரும் என்று அமெரிக்கா சொல்கிறது.

கபாமநஆ இன் பரிந்துரைகள் பல உடன்பாடாக இருக்கின்றன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு சிறிதளவு நன்மை கிடைக்கும். எடுத்துக்காட்டாக படைகளை விலக்கி சிவில் நிருவாகத்தைக் கொண்டுவருதல்.

அய்யன்னா மனிதவுரிமை அவையில் அமெரிக்கா கொண்டுவர உள்ள தீர்மானமானது போர்க்குற்ற விசாரணை பற்றியது அல்ல. இது சிறிலங்கா அரசால் நியமிக்கப்பட்ட பபாந தனது அறிக்கையில் தெரிவித்துள்ள சில ஆக்கபூர்வமான பரிந்துரைகளை செயற்படுத்துமாறு கோரும் ஒரு தீர்மாமாகும். இந்த பபாநஆ அறிக்கையைத் ததேகூ நிராகரித்து விட்டது. இதுபற்றி 105 பக்க அறிக்கை மும்மொழிகளிலும் வெளிவந்தது.

அய்யன்னா மனிதவுரிமை அவையில் இரண்டு விதமான அமர்வுகள் நடைபெறுகின்றன. ஒன்று அரச பிரதிநிதிகளுக்கான அமர்வு. இதில் அரசாங்கப் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்வர். மற்றது அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான அமர்வு. இதில் அரச சார்பற்ற அமைப்புச் சார்பாக வருபவர்கள் கலந்து கொள்வர். ததேகூ இந்த இரண்டு பிரிவிலும் அடங்காது.

அய்யன்னா மனிதவுரிமை அவையில் அரச பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டமே முதன்மையானது. இதில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் தத்தம் நாட்டு அரசுகள் முன்கூட்டியே எடுக்கும் முடிவுகளுக்கு அமையவே பேசுவர். வாக்களிப்பர். அந்தந்த நாட்டு அரசுகளோடு பேசித்தான் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்க வேண்டும். இந்தப் பணியை ததேகூ செவ்வனே செய்து வருகிறது. மேற்படி கூட்டத்தில் பங்கு கொள்ளும் 47 நாட்டுத் தூதர்களோடு தொடர்பு கொண்டு சிறிலங்காவில் தொடர்ந்தும் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களையும் தமிழர்களுக்கான பாதுகாப்பற்ற ஒரு நிலையும் எடுத்துச் சொல்லி வருகிறார்கள்.

போரினால் இடம்பெயர்ந்த 3 இலட்சம் மக்கள் இன்னமும் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியமரும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அண்மைய காலங்களிலும் கூடச் சிலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். மக்களின் நாளாந்த வாழ்க்கையில் கூட இராணுவத்தின் தலையீடு அதிக அளவில் உள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் வடக்குப் பகுதியில் நிர்வாகமும் சீர்கெட்டுப் போயுள்ளது. தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் மக்கள் மீண்டும் குடியேறிவரும் இடங்களிலும் அதிகப்படியான இராணுவ முகாம்களை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற விடயங்களிலிருந்தே சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் சமூக மற்றும் அரசியல் சுதந்திரங்களில் நிலவும் ஒருதலைச் சார்பான நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இராணுவத்தினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் அதிகப்படியானோர் பெண்களும் சிறார்களும் தான். போரினில் கணவனை இழந்த பெண்கள், உறவுகளை இழந்து ஏதிலிகள் ஆக்கப்பட்டவர்களை குறிவைத்தே வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. விடுதலைப்புலிகள் அமைப்பில் பணியாற்றிய பெண்கள் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பெண்கள் துணை இராணுவப் படையினரால் கற்பழிக்கபட்டும் பெரும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றனர். ஆட்கடத்தல், திட்டமிட்ட பரத்தமை போன்றவற்றிலும் இவர்கள் பயன்படுத்தப் படுகின்றனர்.

எமது பக்க நியாயங்களையும் தமிழ் மக்களது அவலங்களைகளையும் எடுத்துரைத்து தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறது. இது தொடர்பாக தமிழ்மக்கள் பக்க நியாயத்தை சொல்லும் ஒரு கடிதத்தை இந்த நாடுகளுக்கு ததேகூ இன் தலைவர் திரு சம்பந்தன் அனுப்பியுள்ளார்.

மே 2009 க்குப் பின்னர் நாம் புதிய இராசதந்திர உத்திகளைக் கையாள வேண்டியுள்ளது. இப்போது முதன்முறையாக எமது சிக்கல் அனைத்துலக மயப்படுத்தப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் எம்மை கைவிட்ட நாடுகள் இப்போது எமது உரிமைகளை பெற்றுத்தர முன்வந்துள்ள. இது ஒரு பெரிய மாற்றம். இப்போது பந்து (விளையாட்டு) சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடைபெறுகிறது. இதில் நாம் பார்வையாளர்கள். ததேகூ ஜெனிவாவுக்கு வந்திருந்தால் பார்வையாளர்களாகவே வந்து போயிருப்பார்கள். எமக்கு சலசலப்புத் தேவையா? பணியாரம் தேவையா? என்பதுதான் கேள்வி.

இன்றைய உலக ஒழுங்கில் தமிழர் தரப்பு அனைத்துலக சமூகத்தை வெட்டி ஓடமுடியாது. ஒட்டித்தான் ஓட வேண்டும். எமது சிக்கல் அனைத்துலத்தின் தலையீடு இல்லாமல் தீர்த்துவைக்கக் கூடிய சாத்தியம் அறவே இல்லை. சிங்கள வுத் பேரினவாத அரசு தானாக முன்வந்து எதையும் தரப் போவதில்லை. வி.புலிகளின் பிடியில் இருந்து தமிழ்மக்களை விடுவிக்கப் போவதாகச் சொன்னது பொய்யுரை என்பது இப்போது தெரிந்து விட்டது. மக்கள் இப்போது சிங்கள இராணுவத்தின் பிடிக்குள் சிக்குண்டு தவிக்கிறார்கள். எனவே தமிழ் மக்கள் தரப்பு நகர்வுகள் இந்த அனைத்துலக சமூகத்துக்கு இசைவாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல. எமது கோரிக்கைகள் நீதியாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும்.

ப்படியான இராசதந்திர உத்திகளையே ததேகூ கையாள்கிறது.

ததேகூ ஜெனிவா போயிருந்தால் எல்லோர் மனதுக்கும் அது ஒரு தெம்பைக் கொடுத்திருக்கலாம். அதற்கு மேல் ஒன்றும் நடந்திருக்காது. இதனால் சிறிலங்கா அரசு எதிர்கொள்ளும்

அழுத்தம் கூடியிருக்க வாய்ப்பில்லை. ததேகூ நட்பு சக்திகளான நாகதஅ, பன்னாட்டு தமிழர் ஒன்றியம், கனடிய தமிழ் காங்கிரஸ் களத்தில் நின்று தங்களால் ஆன பணியைச் செய்கிறார்கள்.

2009 இல் மிக இலகுவாக கன்னடா கொண்டுவந்த தீர்மானத்தை சிறிலங்கா தோற்கடித்தது. தன்னைத் தானே பாராட்டும் தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது. இன்று சிறிலங்கா 70 க்கும் மேற்பட்ட

அமைச்சர் பட்டாளத்தை ஜெனிவாவில் இறக்கியிருக்கிறது. வெளியறவு அமைச்சர் பீரீஸ் நாடு நாடாக பறந்து கொண்டிருக்கிறார். இது பெரிய மாற்றம். சிறிலங்கா அரசு கொஞ்சமும் எதிர்பாராத மாற்றம்.

அது சரி. காணி அதிகாரம் வேண்டாம், காவல்துறை அதிகாரம் தேவையில்லை, வட கிழக்கு இணைப்புத் தேவையில்லை என்று கூறிக் கொண்டு ஜெனிவாவுக்கு வந்திருக்கும் டக்லஸ் தேவானந்தாவைக் கண்டித்து

ஒரு வார்த்தை இல்லையே? ஏன்?

நாங்கள் ததேகூ இன் தலைமையில், குறிப்பாக திரு சம்பந்தரின் தலைமையில் நம்பிக்கை வைத்துள்ளோம்.

தேரான் தெளிவும், தெளிந்தான் கண் அய்யுறவும் தீரா இடும்பை தரும் என்பது வள்ளுவர் வாய்மொழி. அதில் எமக்கு நம்பிக்கையுண்டு.

முடிவாக மக்கள் ததேகூ ஒரு ஆணை வழங்கியுள்ளார்கள். அதன் அடிப்படையில் ததேகூ சிக்கல்களை எதிர்கொள்கிறது. அதில் தோல்வி கண்டால் மக்கள் ததேகூ யை தண்டிப்பார்கள்.

நக்கீரன்

  • தொடங்கியவர்

நாங்கள் ததேகூ இன் தலைமையில், குறிப்பாக திரு சம்பந்தரின் தலைமையில் நம்பிக்கை வைத்துள்ளோம்.

தேரான் தெளிவும், தெளிந்தான் கண் அய்யுறவும் தீரா இடும்பை தரும் என்பது வள்ளுவர் வாய்மொழி. அதில் எமக்கு நம்பிக்கையுண்டு.

முடிவாக மக்கள் ததேகூ ஒரு ஆணை வழங்கியுள்ளார்கள். அதன் அடிப்படையில் ததேகூ சிக்கல்களை எதிர்கொள்கிறது. அதில் தோல்வி கண்டால் மக்கள் ததேகூ யை தண்டிப்பார்கள்.

அடுத்த தேர்தலில் தாயக உறவுகள் கூட்டமைப்பை தண்டிக்கலாம் என்ற வாதம் சரியாகவே படுகிறது. அதை உணர்ந்தே கூட்டமைப்பும் செயல்படுகின்றது.
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றிகள் குயீன்.. தெளிந்த நீரோடை போலுள்ளது..! :D

அய்யன்னா மனிதவுரிமை அவையில் இரண்டு விதமான அமர்வுகள் நடைபெறுகின்றன. ஒன்று அரச பிரதிநிதிகளுக்கான அமர்வு. இதில் அரசாங்கப் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்வர். மற்றது அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான அமர்வு. இதில் அரச சார்பற்ற அமைப்புச்சார்பாக வருபவர்கள் கலந்து கொள்வர். ததேகூ இந்த இரண்டு பிரிவிலும் அடங்காது.

கூட்டமைப்பு பாசிங்கில் இதற்கு ஏதாவது எதிர்க்கருத்து இருக்கிறதா?

எமக்கு சலசலப்புத் தேவையா? பணியாரம் தேவையா?

ஏற்கனவே நேற்று எழுதியதைத் தான் மீண்டும் எழுதுகின்றேன்....த.தே.கூ ஜெனிவா போகாதது சரியான முடிவு

இந்த கட்டுரை எழுதியவர் கூட்டமைப்பின் பிரதிநிதியாக கனடாவில் இருந்து செயற்படுபவர்.

கூட்டமைப்பு ஜெனிவா போவது அவசியமா அல்லது இல்லையா என்பது ஒரு புறம இருக்க ,

அவர்கள் அந்த நிலைபாட்டை எடுக்க மக்களை குழப்பியடித்ததுதான் அவர்கள் மீதான விமர்சனத்திற்கு வழி வகுத்தது .நேற்று போவதில்லை என்பதற்கான காரணங்களை வைக்க முதல் சுரேஷ் ஒரு பேட்டி ,சிவாஜிலிங்கம் ஒரு பேட்டி ,சம்பந்தர் ஒரு அறிக்கை எல்லாம் ஏடாகூடமாக இருந்தது .அதற்குள் பல்கலைகழக மாணவர் சுமேந்திரனின் கொடும்பாவியை தூக்கிவிட்டார்கள்.

ஜெனிவாவில் இந்த மகாநாடு நடப்பது உங்களுக்கு என்ன நேற்றுத்தான் தெரிந்ததா? முதலே கூடி ஒரு தீர்கமான முடிவை ஆணித்தரமாக நீங்கள் வைத்தால் நாங்கள் ஏன் உங்களை விமர்சிக்க போகின்றோம் .நீங்களும் குழம்பி மக்களையும் குழப்புவது தொடர்கதையாகின்றது .

இனிமேலாவது ஒன்று கூடி முடிவை எடுத்து அறிக்கை விடுங்கள் .அவனன் தமிழ்நாடு காங்கிரஸ் மாதிரி ஆளுக்கொரு அறிக்கை விட்டு கேலிக்குரியவர்கள் ஆகாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் எங்காவது, ஒற்றுமையாக இருந்தானா.

சம்பந்தன் அதில் ஏன்... விதி விலக்காக இருக்க வேண்டும்.

பிறவிக்குணம் நம்மை.. ஆட்டிப் படைக்குது.

இந்த கட்டுரை எழுதியவர் கூட்டமைப்பின் பிரதிநிதியாக கனடாவில் இருந்து செயற்படுபவர்.

கூட்டமைப்பு ஜெனிவா போவது அவசியமா அல்லது இல்லையா என்பது ஒரு புறம இருக்க ,

அவர்கள் அந்த நிலைபாட்டை எடுக்க மக்களை குழப்பியடித்ததுதான் அவர்கள் மீதான விமர்சனத்திற்கு வழி வகுத்தது .நேற்று போவதில்லை என்பதற்கான காரணங்களை வைக்க முதல் சுரேஷ் ஒரு பேட்டி ,சிவாஜிலிங்கம் ஒரு பேட்டி ,சம்பந்தர் ஒரு அறிக்கை எல்லாம் ஏடாகூடமாக இருந்தது .அதற்குள் பல்கலைகழக மாணவர் சுமேந்திரனின் கொடும்பாவியை தூக்கிவிட்டார்கள்.

ஜெனிவாவில் இந்த மகாநாடு நடப்பது உங்களுக்கு என்ன நேற்றுத்தான் தெரிந்ததா? முதலே கூடி ஒரு தீர்கமான முடிவை ஆணித்தரமாக நீங்கள் வைத்தால் நாங்கள் ஏன் உங்களை விமர்சிக்க போகின்றோம் .நீங்களும் குழம்பி மக்களையும் குழப்புவது தொடர்கதையாகின்றது .

இனிமேலாவது ஒன்று கூடி முடிவை எடுத்து அறிக்கை விடுங்கள் .அவனன் தமிழ்நாடு காங்கிரஸ் மாதிரி ஆளுக்கொரு அறிக்கை விட்டு கேலிக்குரியவர்கள் ஆகாதீர்கள்.

அர்ஜுன் இண்டைக்கு நல்ல தெளிவா இருக்கார் எழுத்தும் தெளிவா இருக்கு கருத்தும் தெளிவா இருக்கு

ஆளும் தெளிவா இருந்து தான் இதை எழுதி இருப்பார் எண்டு நினைக்கிறன் காலை தானே கனடாவில இப்ப

இந்த கட்டுரை எழுதியவர் கூட்டமைப்பின் பிரதிநிதியாக கனடாவில் இருந்து செயற்படுபவர்.

கூட்டமைப்பு ஜெனிவா போவது அவசியமா அல்லது இல்லையா என்பது ஒரு புறம இருக்க ,

அவர்கள் அந்த நிலைபாட்டை எடுக்க மக்களை குழப்பியடித்ததுதான் அவர்கள் மீதான விமர்சனத்திற்கு வழி வகுத்தது .நேற்று போவதில்லை என்பதற்கான காரணங்களை வைக்க முதல் சுரேஷ் ஒரு பேட்டி ,சிவாஜிலிங்கம் ஒரு பேட்டி ,சம்பந்தர் ஒரு அறிக்கை எல்லாம் ஏடாகூடமாக இருந்தது .அதற்குள் பல்கலைகழக மாணவர் சுமேந்திரனின் கொடும்பாவியை தூக்கிவிட்டார்கள்.

ஜெனிவாவில் இந்த மகாநாடு நடப்பது உங்களுக்கு என்ன நேற்றுத்தான் தெரிந்ததா? முதலே கூடி ஒரு தீர்கமான முடிவை ஆணித்தரமாக நீங்கள் வைத்தால் நாங்கள் ஏன் உங்களை விமர்சிக்க போகின்றோம் .நீங்களும் குழம்பி மக்களையும் குழப்புவது தொடர்கதையாகின்றது .

இனிமேலாவது ஒன்று கூடி முடிவை எடுத்து அறிக்கை விடுங்கள் .அவனன் தமிழ்நாடு காங்கிரஸ் மாதிரி ஆளுக்கொரு அறிக்கை விட்டு கேலிக்குரியவர்கள் ஆகாதீர்கள்.

மக்களை கூட்டமைப்பு குழப்பவில்லை. ஊடகங்களும் கருத்தெழுதுவோரும் மட்டும்தான் அதைசெய்தது.

தேர்தலில் சொல்வதை ஆட்சிக்கு வந்தபின் அரசியல் கட்சிகள் செய்வதில்லை. எங்கும் மக்கள் அதைக்கேட்கிறார்கள். தொடந்து வாழ்க்கையும் நடத்துகிறார்களும் கூட. எதோ உலக சரித்திரத்தில் அதை கூட்டமைப்பு மட்டும்தான் செய்துவிட்டது மாதிரி....

கூட்டமைப்பு ஐ.நா போக நினைத்தது. அரசியல் அவதானிகள் கூட்டமைப்பு போய் சில தந்திர(shrewd) அசைவுகளை முன்வைக்கட்டும் என்று விரும்பினார்கள். மகிந்த சமரசிங்காவின் கூட்டமைப்பு பற்றிய பேச்சிலிருந்து அவர்கள் கூட்டமைப்பை ஐ.நாவில் சந்திக்க விரும்பவில்லை என்பது தெளிவு. இதனால் கூட்டமைப்பு அங்கு செல்வது தந்திரமில்லாததாக மாற்றப்பட்டது. அவர்கள் அந்த முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு மட்டுமல்ல அதை விளங்க வைக்க கூடிய நிலையில் இல்லாமல் போகவும் செய்தது அரசாங்கமும் தன் காவு கூலிகளும் மட்டும் தான்.

சுமந்திரன் மட்டும்தான் கூட்டமைப்பல்ல. அரசாங்கத்தின் அராஜரீகத்தில் அடக்கப்பட்டிருக்கும் கல்லூரிமாணவர்கள் அதை எதிர்த்துக் காட்டத்தக்க இடங்களில் அதை செய்யும் போது கூட்டமைப்பு அதை அரசியாலாக ஏற்று வெளிநாட்டு கூட்டங்களில் தான்தோன்றித்தனமாக நடக்க முடியாது. இது கூட்டமைப்பு ஆரம்பித்த ஒரு நல்ல செயலை அவர்களுக்கெதிராக மாற்றி, அவர்களை இளிவு படுத்த அரசாங்கம் எடுத்த முயற்சியின் வெற்றி என்பதை அனுபவம் வரத்தொடங்க மாணவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

இப்போது கூட்டமைப்பின் உள்ளாள் ஒருவர் சில தடைகளை உடைத்து சிலவற்றை விளங்க வைத்திருக்கிறார். திருப்தி அளிக்கிறது. அவருக்கும் அந்த உண்மையைத் தெரிய தந்ததிற்கும் நன்றி.

போக வேண்டிய தேவை இன்னும் இல்லை.

நல்ல முடிவு.

எதுக்கெடுத்தாலும் குறை கூறுவதை விடுத்து ஆக்க பூர்வமாக ஒன்று திரள்வதே நல்லது.

un11.jpg

உங்களுக்கு, சாத்திரமும் தெரியுமோ...

இதுவரை... ஜெனிவா போராட்டத்தில் தமிழர் மட்டுமே... கலந்து கொண்டவர்கள்.

தொப்பி பிரட்டிகளுக்கு, அங்கு என்ன வேலை? ஜெனிவாவை... மதினா என்று, நினைக்கப் படாது.

சம்பந்தன் திருகோணமலையில்... சப்பாணி கட்டி இருப்பதிலும் பார்க்க... ஜெனிவாவுக்கு போயிருக்கலாம். அல்லது வாயை.... மூடிக் கொண்டிருந்திருக்கலாம்.

http://www.yarl.com/...l=&fromsearch=1

இது ஜெனிவா இல்லை, இது கொழும்பில் உள்ள UN அலுவலகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.