Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரத்தத்தை உறைய வைக்கும் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை

Featured Replies

இரத்தத்தை உறைய வைக்கும் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை – பிரித்தானிய ஏடு [ ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2012, 01:56 GMT ] [ கார்வண்ணன் ] bala.jpgவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த, கைது செய்யப்பட்ட போராளிகளும், முன்னணித் தலைவர்களும், சிறுவர்களும் கூட- சிறிலங்கா படையினரால் திட்டமிட்ட அடிப்படையில் நீதிக்குப்புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பிரித்தானியாவின் ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏடு தகவல் வெளியிட்டுள்ளது.

march-news1.jpg

bala-son-of%20prrabaharan.jpg

march-news2.jpg

http://www.puthinappalakai.com/view.php?20120311105756

  • தொடங்கியவர்

இரத்தத்தை உறைய வைக்கும் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை – பிரித்தானிய ஏடு [ ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2012, 01:56 GMT ] [ கார்வண்ணன் ] bala.jpgவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த, கைது செய்யப்பட்ட போராளிகளும், முன்னணித் தலைவர்களும், சிறுவர்களும் கூட- சிறிலங்கா படையினரால் திட்டமிட்ட அடிப்படையில் நீதிக்குப்புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பிரித்தானியாவின் ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏடு தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று வெளியாகியுள்ள ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏட்டில் சனல்- 4 ஆவணப்படத்தை தயாரிக்கும் Callum Macrae எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தரையில் கிடக்கும் - இரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகளையும் சனல்-4 வெளியிடவுள்ளதாக Callum Macrae கூறியுள்ளார்.

இதுபற்றி ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏட்டில் அவர் கூறியுள்ளதாவது,

“12வயது சிறுவன் தரையில் கிடக்கிறான். இடுப்பில் சுடப்பட்டுள்ளது., அவரது மார்பில் 5 துப்பாக்கிச் சூட்டுத் துவாரங்கள் காணப்படுகின்றன. அவரது பெயர் பாலச்சந்திரன் பிரபாகரன்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான இவர் நீதிக்குப்புறம்பான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு அருகே ஐந்து ஆண்களின் சடலங்கள் கிடக்கின்றன. அவர்கள் அவரது மெய்க்காவலர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அவர்களைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உடைகளும் தரையில் கிடக்கின்றன. அவர்கள் கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை அது சுட்டிக்காட்டுகிறது.

bala-son-of%20prrabaharan.jpg

மேலதிகமாக, சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட பல விடுதலைப் புலிப் போராளிகளும், முன்னணித் தலைவர்களும், சிறுவர்களும் கூட, சிறிலங்கா அரசபடைகளால் முறைப்படியான கொள்கையின் அடிப்படையில் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சியாகிறது.

இந்த ஒளிப்படத்தில் மே-18ம் நாள் என்று குறிக்கப்பட்டுள்ளது. 12 வயதான பாலச்சந்திரன் மரணம் தொடர்பான புதிய ஆதாரங்கள் அழுத்தங்களை அதிகரிக்கும்.

பாலச்சந்திரன் அவரது மெய்க்காவலர்களின் சடலங்கள் கிடக்கும் மிகத்தெளிவான - உயர் துல்லியம் கொண்ட ஒளிபடங்களை சனல்-4 பெற்றுள்ளது.

இவை மதிப்புமிக்க தடயவியல் நிபுணரான பேராசிரியர் டெரிக் பௌண்டர் மூலம் ஆராயப்பட்டது.

கண்கள் கட்டப்பட்டிருந்த அவரது மெய்க்காவலர்கள் பார்க்கும் படியாக பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளதாக அவர் கருத்துக் கூறியுள்ளார்.

முதலாவது சூடு சிறுவனின் மீது சுடப்பட்டிருக்க வேண்டும் என்று பேராசிரியர் பௌண்டர் நம்புகிறார்.

பொட்டுப் போன்ற துவாரப் பகுதியில் பச்சை குத்தப்பட்டது போன்ற அடையாளம் உள்ளது.

அதனால், சிறுவனின் நெஞ்சில் இருந்து இரண்டு அல்லது மூன்று அடி அல்லது அதற்குக் குறைவான தூரத்திலேயே சுடப்பட்ட துப்பாக்கியின் குழல்வாய் இருந்துள்ளது.

சிறுவன் கையை நீட்டித் துப்பாக்கியை தொடும் நேரத்தில் சுடப்பட்டிருக்கக் கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்காப் படையினரால் எடுக்கப்பட்ட இந்தக் காட்சிகள் முதல்முறையாக வரும் புதன்கிழமை இரவு சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

‘சிறிலங்காவின் கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்‘ என்ற பெயரில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.

இது கடந்த ஆண்டு ஒளிப்பரப்பப்பட்ட சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் ஆவணப்படத்தின் தொடர்ச்சியாகும்.“ என்று குறிப்பிட்டுள்ளார்.

இறுதிப்போரில் நாம் விலைமதிக்க முடியாத பலரையும் இழந்து நிற்கிறோம்.

தலைவர் பிரபாகரன் தனது பிள்ளைகளை london இல் வைத்துக்கொண்டு அடுத்தவர் பிள்ளைகளை படையில் சேர்க்கிறார் என்று கூறியவர்கள் இதனை பார்த்து என்ன கூறப்போகிறார்கள்?

இறந்தவர்கள் ஆவியாக வருவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் இப்பொழுதெல்லாம் இறந்தவர்கள் ஆவியாக வந்தாவது தமக்கு கொடுமை செய்தவர்களை பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால் உயிருடன் இருப்பவர்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

காலம் எல்லாவற்றையும் மாற்றும் மருந்து என்று சொன்னாலும், வருடங்கள் மூன்று தாண்டியும் இந்தச் செய்தியை வாசிக்கும் கணத்தில் கோபத்திலும் ஆற்றாமையிலும் இதயம் வேகமாகத்தான் துடிக்கின்றது..

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே மார்பிலே குண்டேந்தி விழுந்திருப்பது தலைவன் வளர்த்த பிள்ளை மட்டும் இல்லை.

தலைவனின் கனவுகள், இலட்சியங்கள், தமிழனின் எதிர்காலம் என்பதை நாங்கள் உணரும் காலம் எப்போது வரும்.

அன்று எங்களுக்கு நிச்சயம் விடிவு கிடைக்கும்.

தலைவன் போராடி முடிந்து இன்று அவரின் பிள்ளையின் உடலை வைத்து விடிவுக்காக போராடும் நிலை தமிழனுக்கு ஏன் வந்தது . சிந்தித்து பாருங்கள்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் செத்தாலும் ........ எழுத முடியவில்லை. நீங்களே எழுதிகொள்ளுங்கள்.

Edited by முதல்வன்

தலைவன் போராடி முடிந்து இன்று அவரின் பிள்ளையின் உடலை வைத்து விடிவுக்காக போராடும் நிலை தமிழனுக்கு ஏன் வந்தது . சிந்தித்து பாருங்கள்.

வலிக்க வைக்கும் யதார்த்தம்.....

இந்த பாலகனைக் கொன்ற சிங்களவர்களுக்கு என்றோ ஒருநாள் அழிவு நிச்சயம். பல்லாயிரம் அப்பாவி உயிர்களை துடிக்கத் துடிக்க அழித்துவிட்டு, இராஜதந்திரப் போர்வையில் நீண்டகாலம் நிம்மதியாக இருக்க முடியாது.

இது 2009 இல் பல இணையங்களில் வந்த படம். பாலச்சந்திரனின் மரணத்தை சுயநலன் (பணநலன்) கருதி பல புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

பணப்பட்டுவாடாடா முடிந்த இன்னுமொருநாளில் பிரபாகரனின் மரணத்தையும் ஏற்றுக்கொள்வார்கள். கேவலம் கெட்டதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை போராளிகள் பற்றி வரிக்கு வரிக்கு முழங்கிய யுனிசெப்பில் இருந்து ஒட்டுக்குழுக்கள் வரை மனச்சாட்சி ஒன்று இருந்திருந்தால் 12 வயது பாலச்சந்திரன் பற்றி ஒரு வரி எழுதி இருப்பார்கள்.

பிரபாகரன் ஏன் பங்கருக்குள் இருந்தவர் என்று கேள்வி கேட்கும் சிங்கத்தை இந்தப்பக்கம் காணவில்லை.தந்திரமாக பம்மி விடுவார்.

இந்த பாலகனைக் கொன்ற சிங்களவர்களுக்கு என்றோ ஒருநாள் அழிவு நிச்சயம். பல்லாயிரம் அப்பாவி உயிர்களை துடிக்கத் துடிக்க அழித்துவிட்டு, இராஜதந்திரப் போர்வையில் நீண்டகாலம் நிம்மதியாக இருக்க முடியாது.

இது 2009 இல் பல இணையங்களில் வந்த படம். பாலச்சந்திரனின் மரணத்தை சுயநலன் (பணநலன்) கருதி பல புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

பணப்பட்டுவாடாடா முடிந்த இன்னுமொருநாளில் பிரபாகரனின் மரணத்தையும் ஏற்றுக்கொள்வார்கள். கேவலம் கெட்டதுகள்.

உண்மை தான். மாவீரர்களிக்கு அஞ்சலி செலுத்திய தலைவருக்கு இன்னும் யாரும் அஞ்சலி செலுத்தவில்லை.

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாலகனைக் கொன்ற சிங்களவர்களுக்கு என்றோ ஒருநாள் அழிவு நிச்சயம். பல்லாயிரம் அப்பாவி உயிர்களை துடிக்கத் துடிக்க அழித்துவிட்டு, இராஜதந்திரப் போர்வையில் நீண்டகாலம் நிம்மதியாக இருக்க முடியாது.

இது 2009 இல் பல இணையங்களில் வந்த படம். பாலச்சந்திரனின் மரணத்தை சுயநலன் (பணநலன்) கருதி பல புலம்பெயர்ந்த புண்ணாக்குகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

பணப்பட்டுவாடாடா முடிந்த இன்னுமொருநாளில் பிரபாகரனின் மரணத்தையும் ஏற்றுக்கொள்வார்கள். கேவலம் கெட்டதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் நடந்த நாட்களில் செய்தியோடு நானும் யாழில் இணைத்திருந்தேன் காணாமல் போய்விட்டிருந்தது அதுமட்டுமல்ல. பானு ஜெயம். பிரபாகரன் போன்றவர்கள் செய்திகளும் காணாமல் போயிருந்தது. இப்ப யாரோ வெளிநாட்டு காரன் சொல்லி 3 வருசத்துக்கு பிறகு படத்தை போட்டு அதைவைச்சு போராட்டம் நடத்தி ஆதரவு தேடுறம்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் நடந்த நாட்களில் செய்தியோடு நானும் யாழில் இணைத்திருந்தேன் காணாமல் போய்விட்டிருந்தது அதுமட்டுமல்ல. பானு ஜெயம். பிரபாகரன் போன்றவர்கள் செய்திகளும் காணாமல் போயிருந்தது. இப்ப யாரோ வெளிநாட்டு காரன் சொல்லி 3 வருசத்துக்கு பிறகு படத்தை போட்டு அதைவைச்சு போராட்டம் நடத்தி ஆதரவு தேடுறம்.

நீங்கள் இணைக்க முதல்.. சிறீலங்கா இராணுவத்தின் இணையத்தளங்களில் வந்துவிட்டது..! அதற்கும் நீங்களோ படம் கொடுத்தனீங்கள்..???! இந்த எல்லாம் என்னால் தான் என்பதை விட்டு வெளில வாங்க சார். அவர் சம்பந்தன் ஒருத்தர்.. ஜெனிவாவில எல்லாம் தன்னால என்கிறார். நீங்கள் புலம்பெயர் மண்ணில் எல்லாம்.. என்னால் தான் எங்கிறீர்கள்..???! இந்தப் போட்டியில்.. கொடுமை என்னவென்றால்.. எமக்காக போராடி வீழ்ந்தவர்கள் என்ற அந்த உணர்தலையே சாகடிக்க துடிக்கிறார்கள் பலர்.

எனி சொல்லுவீனம் ஆக்கும் நான் தான் சொன்னனான் முதலில.. தலைவர் செத்திட்டார் என்று. இப்ப என்ன சொல்லுறியள் என்று. அதுக்கு இப்ப என்ன..???! அதனால என்ன நன்மையை எமது இனத்துக்கு நீங்கள் கொண்டு வந்து சேர்த்தீர்கள்..??????????????????! தலைவர் வீரமரணம் என்று சொல்லி பெரிய படத்தை வாங்கி மாட்டிக்கிட்டா.. சனத்துக்கு விடிவு வந்திடுமா..??! அப்படின்னா அதை எல்லோரும் செய்யுங்கோ..???! :rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

இப்படியான நிகழ்வுகள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் தான் பல சமூக ஆர்வலர்களும் மிக அக்கறையுடன் இருந்தார்கள்,

ஆனால் புலம் பெயர் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்திற்கு அழிவில்லாமல் நாடு இல்லை என ஒரு கோசம் வேறு வைத்தார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.