கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
நான் இசைப்பிரியா ஓயாத கடலின் அலைகள் இடைவிடாது என்னுடலில் மோதியபடி மடிந்து சரிகின்ற வேளையில் ஆழமாய் வேர்ப் பரப்பி விரிந்திருக்கும் நீர்த்தாவரத்தைப் போல என்னை இழுத்துச் செல்கிறாய் என் காலடியிலிருந்து ஒழுகி வழியும் நீர்த்துளிகள் உன் அழித்தொழிப்புக்குச் சாட்சியாய் வெளியெங்கும் உருண்டு கொண்டிருக்கும். அடர்ந்த வனத்தில் தனித்துத் திரியும் மிருகத்தின் வெறிகொண்டு என்னை வல்லுறவு செய்கின்றாய் சதையை ஊடுருவிய உன்னால் என் நிலத்தின் நிணநீர் ஓடும் எலும்புகளை என்ன செய்ய இயலும்? என் மார்பகங்களை அரிந்து வீசிய உனக்கு அதன் அடியிலிருக்கும் நெருப்பின் சூடு தகிக்கவில்லையா? நீ ஏந்திய இரும்புக் கருவியும் பாய்ச்சிய உடற்குறியும் இனி எழுச்சியின் அமிலத்தில் கரைந்தே போகும் …
-
- 3 replies
- 951 views
-
-
எங்கேனும் இருந்தால் எழுது ஒரு பதில் நீ வருவதாய் கனவுகள் நீ எம்மோடு வாழ்வதாய் நினைவுகள்.... நினைவுகள் தின்று நெஞ்சில் துயர் மீதமாய்க் கனக்கிறது..... இரத்தம் செறிந்த புழுதியில் நீயும் புழுதியாய் கலக்கையில் ய…
-
- 5 replies
- 1.7k views
-
-
என் வீடும் அயலும் என் நினைவில் வந்து போனது பக்கத்து வீட்டு பாட்டியும் பாட்டனும் பொக்குவாய் கொண்டு சிரிக்கும் சிரிப்பும் பாக்கு வெற்றிலை இடிக்கும் சத்தமும் பழைய நினைவாய் வந்து போனது எதிர் வீட்டு அக்காள் எமக்குத் தெரியாமல் எம்வீட்டுப் பூக்களை பறித்து வந்ததும் எதுவும் கூறாமல் கொடுப்புள் சிரித்து எதிரி வேறென எமக்கே சொன்னதும் இன்று நினைப்பினும் சிரிப்பு வருகுது எங்கள் துலாவில் ஏக்கங்கள் அற்று எவ்வளவு தண்ணியும் அள்ள முடித்ததும் வாக்கால் வழிந்தோட கால்கள் நனைத்து வரம்புடைந்து வளவு நனைந்ததும் வீட்டுக்காரரின் வசைகள் கடந்து வசந்தமாய் சிரித்ததும் நினைவில் நிக்குது கிட்டிப் புள்ளும் கிளித்தட்டும் கீரைக் கறியும் கிழங்குகளும் பக்கத்து வீட்டில் பறித்த மாங்காய் பருவம் …
-
- 12 replies
- 1.1k views
-
-
-
தவிக்க விட்டாய் யாரையுமே விரும்பக்கூடாது என்றிருந்தேன் யாரையும் இதயத்தினுள் விடக்கூடாது என்றிருட்ந்தேன் எங்கிருந்து வந்தாய் நீ என்னை அருகில்... எப்படியடா என்னை இழக்கவைத்தாய் உன்னிடம் மனம் நெருங்கத்தொடங்கிய வேளை உன்னுடைய மனம் வேறொருத்தியை நாடியது நான் வளர்த்த ஆசைகள் அனைத்தும் ஒரே நொடியில் தேய்பிறை போலல்லவா தேயத்தொடங்கியது உங்கள் மனமே உங்களிடம் இல்லையே பின்னர் நான் எப்படி உங்களை நினைப்பது... நீங்களே வேறொருத்தியை நினைத்தபின் நான் உங்கள் நிழல்மேல் ஆசைபடுவது தவறன்றோ.. என்னையே நான் வெறுக்கத்தொடங்கினேன் எண்ணங்களை மறக்கத்தொடங்கினேன் என் ஆசைகள் அனைத்தும் நிராசைகள் ஆகின என் கனவுகள் என் கண்களை போல் கலங்கின உன்னை நினைத்த இந்த மனதி…
-
- 2 replies
- 1k views
-
-
அரோகரா! அரோகரா! அரோகரா அரோகரா நல்லூர்க் கந்தனுக்கு அரோகரா வண்ணமயில் ஏறிவரும் வடிவேலனுக்கு அரோகரா முருகா! என்னப்பா இது? இனம் மொழி தாண்டி உன்ர வாசலிலை நிறையுது பக்தர்கள் வெள்ளம் கடையில விக்கிற பிள்ளையார் சிலையில மேடின் சைனா இருக்கு கடைக்குட்டிக்கு வாங்கிற அம்மம்மா குழலை வடக்கத்தையான் விற்கிறான் ஐப்பான் காரன் வந்து “சோ” றூம் போடுறான் பாகிஸ்தான் காரன் வந்து பாய் வி(ரி)க்கிறான் கண்ணுக்கு தெரியிற இடமெல்லாம் துரோகிகள் கூட்டம் கண்கட்டி வித்தை காட்டுது சிங்கள தேசம் வெள்ளை வேட்டி கட்டி சுது மாத்தையாக்கள் வெறும் மேலோட களு பண்டாக்கள் போதாக்குறைக்கு விமானச் சீட்டுக்கு…
-
- 8 replies
- 2.6k views
-
-
முரண் இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை ~நாயே!பன்றியே!குரங்கே!
-
- 42 replies
- 10.3k views
-
-
கல்வாரிப்பூக்கள் உடைந்த மனங்களினை ஒட்ட வைப்போம் உறுதியுடன் அன்பைப் பற்ற வைப்போம் நிறைந்த துயரினையே நிறுத்தி வைப்போம் நெஞ்சில் துணிவுதனை நிலைக்க வைப்போம் சோகச் சுமைகளினை இறக்கி வைப்போம் சொல்லில் இனிமைகனை சுவைக்க வைப்போம் மனதின் காயங்கள் மறக்க வைப்போம் மண்ணின் மனிதத்தை மதிக்க வைப்போம் சிந்திக்கும் ஆற்றலினை வளர வைர்போம் சிரிப்பில் துயரங்கள் துரத்தி வைப்போம் ஞாபகத் திறன்களை குவித்து வைப்போம் ஞானிலம் மகிழ்ந்துமே களிக்க வைப்போம் தீய சிந்தனைகளை அகற்றி வைப்போம் தீமைகள் அணுகிடா விலக்கி வைப்போம் அனுபவப் பாடங்கள் படித்து வைப்போம் ஆசைப் பேய்களினை அடக்கி வைப்போம் வாழ்வின் அர்த்தங்கள் புரிய வைப்போம் வளமாய் வாழ்வுதனை வாழ வைப்போம் ஆன்மீக தேவைகளில் …
-
- 1 reply
- 968 views
-
-
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் உண்மை தானடா புத்தன் நிற்கின்ற பூமியில்தான் இந்தப் படுகொலைகள் போதிச் சாமிக்கு வீதியெங்கும் தமிழ் பலிகள் ஒருவன் புலம் பெயர்ந்தது சென்றாய் ஒரு இனத்தையே புலம் பெயர்ந்து ஒடூகிறது அன்பை போதித்த நீ அடக்குமுறையை போதித்தது எப்போது ஆசையின்றி வாழ சொன்னாய் ஒசையின்றி ஒரு இனத்தை அழிக்கிறார்கள் உன் பெயரால் அண்டத்தின் அனைத்துயிர் பிண்டத்தை உண்டபின்தான் அடங்குமா உன் பசி…
-
- 3 replies
- 1.2k views
-
-
இது கவிதையல்ல...... வாழ விடு!!! நான் நல்லவனாக வாழ்வது உனக்கு பிடிக்கவில்லையா? நான் நிம்மதியில்லாது வாழ்வது உனக்கென்ன இன்பம்? மனிதனை மனிதன் மதிப்பது தப்பா? விடு என்னை வாழ விடு.
-
- 28 replies
- 4.4k views
-
-
உலகப் போருக்கு முன்னால் உள்ளம் கதிகலங்க யூதர்கள் அனுபவித்த இனக் கொடுமையும், தென்னாப்பிரிக்க மண்ணிலே தோலை மட்டும் வெண்மையாய்க் கொண்டோர் கொண்டாடிய இனவெறியும், தமிழனின் தலையெழுத்தில் சிலையில் எழுத்தாய்ப் பொறிக்கப் பட்டுவிட்டது. மொத்தமாய் அவனிடமிருந்து எல்லாம் பறிக்கப் பட்டுவிட்டது. சொந்தமாக உறவுகளை மட்டுமல்ல அத்தியாவசியப் பொருளைக் கூட வைத்துக் கொள்ள வாய்ப்பில்லாத நிலை. ஈழத்து சோகம் ஆழத்தில் நெஞ்சை அழுத்தி விடுகிறது. அதில் புதையுண்டு மனம் அழுது விடுகிறது. புலிகளைத் தீவிரவாதப் பட்டியலில் சேர்த்துத் தடை விதித்தால் மட்டும் தீர்ந்து விடாது பிரச்னை. மனித உரிமைகள் மறுக்கப் படுவதும், மாற்றான் தாய்க் கொடுமை…
-
- 2 replies
- 872 views
-
-
உன்னை எழுதுவதைவிட உன்னை வாசிப்பதில்தான் அதிக ஆர்வம் எனக்கு * உனக்காய் கவி எழுத கற்பனைக் குதிரையை தட்டிவிட்டேன் அது உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு தூங்கிவிட்டது * என் கண்கள் காட்டிக் கொடுத்ததில் துரோகமில்லாத ஒன்று என்றால் அது உன்னைக் காட்டிக் கொடுத்தது மட்டும்தான் * நீ குளிக்கையில் தண்ணீரோடு நானும் குளிக்கிறேன் * உன்னைக் கவிதையாய் வெளியிட விரும்பி இன்றுவரை உன் கண்களை பற்றித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 942 views
-
-
https://fb.watch/sMOjOYe7Et/?mibextid=0NULKw&fs=e&s=TIeQ9V கேட்டுப் பாருங்கள்
-
-
- 1 reply
- 651 views
- 1 follower
-
-
கம்பனிற்கு கவி படித்தார்கள் நம் கற்றோர்கள் ஆறுமுகதானுக்கும் கவி படித்தார்கள் நம் அறிஞர்கள் கற்பனா சக்திக்கு பாராட்டு தெரிவித்தார்கள் நம் கவிஞர்கள் அட நம் அன்டனின் அறிவை அண்டம் புகழ பாட அறிஞர்கள் இல்லையா ஆசியா புகழ்பாடும் அரிடி உண்ணும் அண்டத்தில்
-
- 4 replies
- 1.3k views
-
-
ஒளித்து வைக்கப்பட்ட நாடு என் கிராமத்தின் பெயரை திரித்தனர் மிக மிக எளிதாக என் தேசத்தின் பெயரை ஒளிக்க முடியுமென நினைத்தனர் என் நாட்டின் அடையாளமோ பாறைகளைப் போல உறுதியானது எனது பெயரின் இறுதி எழுத்தை மாற்றி என்னை அவர்களாக்க முடியுமென நினைத்தனர் சூழச்சிகளால் மறைக்க முடியாத என் நெடு வரலாறோ நதிகளைப் போல நீண்டது எனது அடையாளங்களில் எனது குருதியையே பூசி என் பொருட்களை அழிக்க முடியுமென நினைத்தனர் தந்திரங்களை கடந்து பிரகாசிக்கும் எனது உறுதியான அடையாளங்களோ தீயைப் போலப் பிரகாசமானது கண்ணுக்குப் புலப்படாமலெனை மிக மிக எளிதாக அழிக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
சின்ன சின்ன ......ஆசை வானத்து நிலவை பிடித்துவிட ஆசை முகில் மீது சவாரி செய்ய ஆசை பூங் காற்று போல உலகம் சுத்தும் ஆசை மழைத்துளியை மாறி தாகம் தீர்க்க ஆசை சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை ...... தமிழ் ஈழ மண்ணில் பிறந்து விட ஆசை வானத்தில் சிட்டாய் பறந்துவர ஆசை அன்னையின் மடியில் தூங்கி விட ஆசை முற்றத்து மண்ணில் விளையாட ஆசை துள்ளிவரும் மானை பிடித்து விட ஆசை சவர்க்கார குமிழி பிடித்து வர ஆசை நீலக்கடல் நீரில் நீந்தி குளிக்க ஆசை படித்த பள்ளி எண்ணி நினனவு மீட்க ஆசை பனைமர நுங்கும் ,பழமும்தின்ன ஆசை மாமரம் ஏறி காய் பறிக்க ஆசை முக்கனியும் சுவைக்க மீளவும் ஆசை ........... ************ தலைவனின் மண்ணை முத்தமிட ஆசை ****…
-
- 7 replies
- 6.6k views
-
-
தீவினில் ஒரு தீபம் அது வீர தீபம் உடல்தனை உருக்கி உயிரினை அளித்து மூட்டிய தீபம் கார்த்திகை மாதம் மலர்ந்திடும் மலரும் காட்டினில் சிறுத்தையும் வளவினில் செம்பகமும் வீதியில் வாகையும் வணங்கிடும் தீபம் அது வீர தீபம் மக்களின் மனங்களில் மலர்ந்திடும் நினைவுகள் சொரிந்திடும் விழினீரில் உருகியே தாழ்ந்திடும் தீபம் அது வீர தீபம் விடியலின் ஒளிதேட இருளோடு கலந்திட்ட தமிழீழ மைந்தரவர் ஏற்றிய தீபம் அது வீர தீபம் காற்றோடு சாயினும் மழையோடு மாழினும் தமிழீழ மண்ணிலது அணையாத தீபம் அது வீர தீபம் வேங்கைகள் உயிரது வேள்வியில் கலந்திட்ட வேளையில் பிறந்திட்ட மாவீர தீபம் அது வீர தீபம் அழியாத நினைவோடு நெஞ்சினில் வாழ்ந்திடும்…
-
- 4 replies
- 1.6k views
-
-
[size=4]கள்ளமில்லா உன் பார்வையால் என்னைக் கொள்ளை கொண்டு சென்று விட்டாய் திசை மறந்த பறவையாய் திகைக்கிறோம் நானும் என் காதலும் நாணயத்தை தடவிப்பார்த்து மதிப்பிடும் கண்ணில்லாக் கிழவி போல் உன் மனம் தடவி அறிந்து கொண்டேன் நீ சொல்லாத காதலை.. சாளரத்தின் வழியே உடல் நனைக்கும் மழைத்தூறலாய் என் மனதை நனைத்தது காதலுக்கு நம் பெற்றோரிடம் சம்மதம் கிடைத்த தருணங்கள் பூட்டிய கதவை இழுத்து சரிபார்ப்பதாய் ஒவ்வொரு முறையும் என்னிடம் செல்லச் சண்டையிட்டு உறுதி செய்து கொள்கிறாய் உன் மீதான என் காதலை செடி முழுக்க பூத்திருக்கும் ரோஜாவாய் நம் மனத்தோட்டத்தில் மலர்ந்திருக்கின்றன என்றும் வாடாத காதல் பூக்கள்...[/size]
-
- 0 replies
- 725 views
-
-
[size=5]மரணம் கூடு கட்டிய மரங்கள்,,[/size] [size=5]முறிந்து விழுகின்றன![/size] [size=5]பூரண சந்திரனின் வெளிச்சம்,[/size] [size=5]புதைகுழிகளின் ஓரங்களில்,[/size] [size=5]பட்டுத் தெறிக்கின்றது![/size] [size=5]மழை வெள்ளம் தேங்கிய,[/size] [size=5]குழிகளின்,மத்தியில்,,[/size] [size=5]கார்த்திகைப் பூக்களின்,,[/size] [size=5]கைவிரல்கள் அசைகின்றன![/size] [size=5]அமைதியடையாத ஆத்மாக்கள்,,[/size] [size=5]உலகத்தை நோக்கிக்,[/size] [size=5]கரங்களை விரித்து,[/size] [size=5]நியாயம் கேட்கின்றன![/size] [size=5]உண்மைகள் நிதர்சனமாகி,[/size] [size=5]உலகை உலுக்குகின்றன![/size] [size=5]கண்கள் கட்டப்பட்ட,[/size] [size=5]நீதித் தேவதைக்கும் கூடக் ,[/size] [siz…
-
- 12 replies
- 1.1k views
-
-
பிள்ளைகளின் மரணம் நடுரோட்டில் இரத்ததால் குதறப்படும் குடும்பங்கள் உலகம் கண்டுகளித்த இனப்படுகொலைகள் கொடூரர்களின் ஆட்சி முன்ஜென்ம பாவங்கள் ஏதுமறியா அகால மரணங்கள் போராளிகளின் வீழ்ச்சி விவசாயிகளின் கண்ணீர் ஏழைகளின் வயிற்றடுப்பு பணம் பணமென பேயாய் அலையும் பதர்கள் தீயின் நாக்குக்கு தவறாது பலியாகும் குடிசைகள்(மட்டும்) பிஞ்சுகளை சிதறடிக்கும் குண்டுகள் அப்பாவிகளை நோக்கியே நீளும் ஆயுதங்கள் காமத்திற்கு இரையாகும் பால்முகங்கள் கழுத்தறுக்கப்பட்ட கனவுகள் இவற்றைக் கண்டு நாணாதவன் கடவுளெனில் நானும் கடவுள். http://aazhkadal.blogspot.fr/2012/01/blog-post_28.html
-
- 4 replies
- 880 views
-
-
சென்று வா இரண்டாயிரத்து எட்டே வென்று விட்டதாய் நினைத்தால் வெற்றி உனக்கல்ல என்பேன் பற்றி எரிவது தமிழ் ஈழக் கனவே! பொறுமையை இழந்தோம் தனிமையாய் தொடர்ந்தோம் இனிமையான வாழ்வுக்காய் தனி நாட்டைக் கேட்டோம்! பொறுக்காத நாடுகள் வெறுக்கவே செய்தனர் விடை தர மறுத்து தடையினைப் போட்டனர்! குனிந்ததும் குட்டு வாங்கியதும் வலி பட்டவர்க்கே வலிக்கும் எலி வளையானாலும் எமக்கு தனி வளை வேண்டும் என்றோம்! சிங்களம் வெங்களம் விரும்பியது கங்கணம் கட்டி தமிழினம் அழிக்க விரைந்து படை திரட்டியது உலகிடம் இரைந்து ஆயுத பிச்சை கேட்டது! சர்வமும் மயங்கி சர்வதேசமும் சோரம்போனது ஐ.நா.…
-
- 1 reply
- 611 views
-
-
ஏன் மறுக்கிறாய் பெண்ணே!!!!! பட்டுப் புடவை அணிந்து பவுண் கணக்கில் நகை அணிந்து உண்மை முகம் மறைத்து மேக்கப் தனில் உனை அழித்து உன் அழகும் அந்தஷ்தும் காட்டி நிற்கவென உன் வீட்டு மௌசுக் காரில் உனை அழைத்து வந்து தெருவிலே அணிவகுத்து அன்ன நடை போடச் சொன்னால் அணி அணியாய் திரண்டு வர துடிதுடிக்கும் புலத்து பெண்டுகளே......... தாய் மண்ணில் தினம் தினம் செத்து மடியும் எம் உறவுகளிற்காய் பாலின்றி உணவின்றி தவிக்கும் பாலகருக்காய் அரக்கர்களால் தினம் தினம் பாலியல் வதைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உன் போன்ற பெண்களுக்காய் ஒட்டிய மார்பை பசியால் துடிக்கும் தன் குழந்தையின் வாயில் திணித்து விட்டு மற்றய கையால் இறந்து போன தன்…
-
- 7 replies
- 1.4k views
-
-
சொந்த நாட்டு வீட்டுக்கு... எப்பத்தான் நான் போவேன்? என் சொந்தக்காரர் நாலுபேரை... அப்பத்தான் நான் பாப்பேன்! வந்த நாட்டை எண்டைக்கும்... எந்தன் நாடாய் ஆக்கமாட்டேன்! சொந்த நாட்டை மீட்குமட்டும் நிம்மதியா தூங்கமாட்டேன்...!??? வல்லைவெளிக் காற்றாக.... மனம் எல்லைதாண்டிப் பறக்கிறது! நெல்லுவயல் கதிர் பார்க்க.... தினம் எண்ணமெல்லாம் துடிக்கிறது! முல்லை நில கடலோரம்.... அலை ஓயாமல் அடிக்கிறது! ஓயாத அலை ஞாபகங்கள்.... மீண்டும் நெஞ்சில் வந்து துளிர்க்கிறது! ஓடக்கரை அப்பம் தோசை... வாங்கி நல்லா தின்ன ஆசை! பருத்தித்துறை வடையோட... பங்குனிக் கள் அடிக்க ஆசை! வல்வெட்டிதுறை எள்ளுப்பா... வாய் இனிக்க கடிக்க ஆசை! தப்பி ஓடி வந்த பாவியாகி... தஞ்சம் தேடி வந்த அகதியாகி... செல…
-
- 5 replies
- 1.2k views
-
-
என்னாங்க நம்ம தமிழ்நாட்டில பாட்டெழுதுறவங்க நம்மூரில உள்ள எதையாவது கோத்து பாட்டாக்கிடுவாங்க.. ஏங்க ஈழத்துல இப்பிடி எழுத மாட்டாங்களா? இது நாட்டுப்புறப்பாட்டுங்க புடிச்சிச்சு கொண்டாந்து போடறேன்... ஆக்கம் :- கொ. பெ. பிச்சையா முத்தமிழாய் தோணுதடி முத்துப்போல பல்லழகி முறுவலாய் சொல்லழகி கொத்துக்குலை கனியழகி கோவைப்பழ இதழழகி செப்புச்சிலை சீரழகி – உன்னை சேர்த்தணைக்கத் தோணுதடி திருவாரூர் தேரழகி தென்மதுரை ஊரழகி திருச்செந்தூர் அலையழகி தஞ்சாவூர் கலையழகி ஶ்ரீரங்கக் கோபுரமே – உன்னை சேவிக்கத் தோணுதடி தேனியூர் செங்கரும்பே திருவண்ணைக் கற்கண்டே வேம்பூறுக் கருப்பட்டியே வெள்ளியணை அ…
-
- 16 replies
- 1.2k views
-
-
வேட்டு வைக்காதே தமிழா வேட்டு வைக்காதே ஒருவனுக்கொருவன் வேட்டு வைக்காதே நாட்டை மீட்கப் போகையிலே நல்ல பாம்பும் நாடி வரும் கெட்ட பாம்ப்பும் தேடி வரும் நல்ல பாம்பை சேர்த்துக் கொள் கெட்ட பாம்பை விலத்திச் செல் நாதி கேட்ட நாம் இன்று நாகரிக உலகினிலே நமக்குள்ளே வேண்டாம் நம்பியார் வேலைகள் ஆயுத பலம் வேண்டாம் அழிவுகள் நமக்கு வேண்டாம் வேண்டும் எமக்கு இப்போ மனிதபலம் இதற்கு ஒப்பு உண்டா உலகில் நிகர் ஒருவன் வருவான் என்று ஒவ்வொரு நாளும் நாம் ஏங்குவதை விடுத்து எழுவோம் ஒன்றாகி ஒரு நாள் இந்த உலகிற்கேதிராக கூட்டுவோம் நம் உறவுகளை காட்டுவோம் நம் பலத்தை கொட்டுவோம் முரசைத் தமிழன் விட்டுக் கொடுக்கமாட்டான் என்றும் …
-
- 21 replies
- 2.1k views
-