Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் கம்பஹா மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டு, அவற்றுக்கு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சுமார் 200 கோடி ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அரசில் அங்கம் வகிக்கும் கம்பஹாவை சேர்ந்த அமைச்சர் ஒருவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்று எதிர்க்கட்சி வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது. வன்னியில் இடம்பெற்ற போரினால் சேதமடைந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் வாகனங்கள் பெருவாரியாக கம்பஹா மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டன. இவற்றில் லான்ட் குரூஸர், லான்ட் ரோவர், இன்ரர் கூலர், குண்டு துளைக்காத வாகனங்கள் ஆகியவை அடங்கும். இவ்வாறு கொண்டுவரப்பட்ட சேதமடைந்த வாகனங்கள் கம்பஹா மாவட்டத்தில் திர…

  2. தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 8வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றார். நேற்று 12 மணித்தியாலங்கள் நடந்து 41 கிலோமீற்றர் தூரத்தை சிவந்தன் கடந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி லண்டனில் இருந்து மனிதநேயப் பயணத்தை ஆரம்பித்த இவர், நூற்றுக்கும் மேற்பட்ட தூரத்தை நடந்து கடந்திருந்தார். கடந்த திங்கட்கிழமை இரவு பிரான்சின் கடற்கரையான கலையை சென்றடைந்த பின்னர் இன்று காலை 11:00 மணிவரை காலைப் பிரதேசத்தில் இருந்து 52 மணித்தியாலங்களில் சுமார் 170 கிலோமீற்றர்கள் அவர் நடந்து கடந்துள்ளார். பரிஸ் நகரை அடைவதற்கு இன்னும் 126 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியிருப்பதுடன், அங்கிருந்து ஜெனீவா நோக்கி 600 கிலோமீற்றர்கள்…

    • 7 replies
    • 1.1k views
  3. புலிகளைப் போல் புலனாய்வு அமைப்புக்களை ஒருங்கிணைக்க வேண்டும்: எல்லாவெல மேதானந்த தேரர் தமிழீழ விடுதலைப் போல சிறிலங்காவின் அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட நீட்டிப்பின் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது: புலனாய்வு அமைப்புக்கள் தனித்தனியே இயங்கி வருவதுதான் நமது பலவீனம். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை புலனாய்வு அமைப்பானது ஒரே பிரிவாக பொட்டு அம்மானின் கீழ் செயற்படுகிறது. அதைப்போல் அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். தற்போதைய அவசரகாலச் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன. மன்னர்கள் ஆட்சிக்கா…

    • 7 replies
    • 2k views
  4. யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வளாகத்திற்குள் இந்தமுறை திருவிழாவின் போது இரண்டாவது தடவையாகவும் சட்டம் வளைந்து கொடுத்துள்ளது. ஆலயத்திற்கு வருபவர்களிற்கான பொது நடைமுறை என ஆலய நிர்வாகமும், மாநகரசபையும் இணைந்து கடைப்பிடித்து வரும் நடைமுறை இரண்டாவது தடவையாகவும் நேற்று மீறப்பட்டது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலய வளாகத்திற்குள் ஏற்கனவே மேர்வின் சில்வா வாகனத்தில் பிரவேசித்ததைப் போல, நேற்று வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வாகனத்தில் பிரவேசித்தார். நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள எப்.எம்மின் கலைகத்தை திறந்து வைக்க வந்த விக்னேஸ்வரன், ஆலயத்திருவிழாவிற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்புத்தடை பகுதியில் வாகனத்தை நிறுத்தாமல் உள்ளே பிரவேசித்தார். துவிச்சக்கர வண்டிகள் கூட…

  5. குடாநாட்டில் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு 1 கிலோ சீனி 400 ரூபாவுக்கும் வாங்க முடியாத அவலம் -அரிசி 120 ரூபா-160 ரூபா, வெளிச்சந்தையில் பால்மா இல்லை, கோதுமை மா கறுப்புச் சந்தையில் ரூபா 150 யாழ். குடாநாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கப்பல் மூலம் தொடர்ந்து அனுப்பிவைக்கப்படுவதாக கூறப்படுகின்ற போதும் பொருட்களுக்கான விலைகள் மிக மோசமாக அதிகரித்துள்ளதுடன் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடும் நிலவுகின்றது. ஒருகிலோ சீனி சில இடங்களில் 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற போதும் பல இடங்களில் அந்த விலைக்கும் சீனியைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ அரிசி தற்போது 120 ரூபா முதல் 160 ரூபாவரை விற்பனை செய்யப்படுகின்றது. கூட்டுறவு சங்கங்களூடாக குடு…

    • 7 replies
    • 1.9k views
  6. மாகாண சபை தேர்தல் தேவையில்லை : எம்.ஏ.சுமந்திரன்! மாகாண சபை தேர்தல் தேவையில்லை என சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில் ”நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக உரையாடுவதற்கு என்று கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வல் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள் அந…

  7. போருக்கு அழைப்பு விடுத்து கொழும்பில் சுவரொட்டிகள். "யுத்தத்திற்குத் தயாராகுங்கள்" என்று யுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் நேற்று கொழும்பு நகர வீதிகளெங்கும் ஒட்டப்பட்டிருந்தன. "கலாசாரத்துக்காகப் போராடும் முன்னணி" என்ற புதிய அமைப்பு ஒன்றின் பெயரில் இந்தச் சுவரொட்டிகள் காணப்பட்டன. -Uthayan-

  8. இலங்கையில் நடைபெறவுள்ள பெரும் போருக்கு பின்னர் தமிழ் ஈழம் உருவாகும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் வைகோ தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டம் புதுவயலில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:வீரமுள்ள இளைஞர்கள் கொண்ட ம.தி.மு.க. வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. தமிழக ஆட்சியில் விரைவில் மாற்றம் ஏற்படும். அப்போது ஊரும், உற்றமும் எங்களை தேடி வந்து ஆதரவு கேட்கும். ஈழத் தமிழர்கள் துயரில் இரு ந்து மீள வேண்டும். அங்கு பெரும் போர் விரைவில் உருவாக போகிறது. அதற்கு ஈழ தமிழர்கள் தயாராகி விட்டனர்.போருக்கு பிறகு விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழம் உருவாகும்.அண்ணாத்துரை தமிழர்களை பாதுகாக்க தி.மு.க. வை உருவாக்கினார். அது குடும்ப …

  9. கொழும்பு – மட்டக்களப்பிற்கு புதிய விமான சேவை மட்டக்களப்பு வவுனதீவு விமான நிலையத்தில் செரண்டிப் ஏயார்வைஸ் நிறுவனம் தனது இரண்டாவது உள்நாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்துள்ளது. இவ்விமான சேவை கொழும்பு – மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இந்த விமான சேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள், செரன்டிப் ஏயார்வைஸ் நிறுவன தலைவர் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்த விமான சேவை திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் சேவைய…

  10. புரியாத புதிராக குடாநாட்டின் வேலை வாய்ப்பு அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தின் ஏற்பாட்டில் “யாழ் மற்றும் வடக்கில் புதிராக விளங்கும் தொழிலாளர் சந்தை” எனும் தலைப்பிலான பகிரங்க பொது மன்றம் ஒன்று யாழ் பொது நூலகத்தில் இந்த மாதம் மூன்றாம் திகதி இடம்பெற்றது. இதன் பிரதான ஆய்வாளரான கலாநிதி.மு.சர்வானந்தா, இங்கு பரிமாறப்பட்ட கருத்துக்களை தொகுத்து ஆய்வு கட்டுரை ஒன்றினை ஒன்லைன் உதயனுக்காக வழங்கியிருந்தார். இதிலிருந்து சில பகுதிகள் : அரசாங்க வேலையே வேண்டும்! தனியார் பொறியியலாளர் நிறுவனம் ஒன்று அண்மையில் சில வேலை வாய்ப்புக்களுக்காக விண்ணப்பங்களை யாழ்ப்பாணத்தில் கோரியிருந்த போது, அதற்கு எதுவிதமான விண்ணப்பங்களும் கிடைக்கவில்லை. மறுபுறத்தில், மாவட்டச் செயலாளர் இமெல்டா…

  11. Published on January 2, 2016-10:48 pm · வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்ரவன் அவர்களை இணைத்தலைவராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் பணிகளில் முக்கியமான ஒன்று கடந்த காலத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதியாளர்களின் முன் நிறுத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் மட்டுமன்றி அதற்கு முற்பட்ட காலத்தில் கல்விமான்கள், பிரஜைகள் குழுக்களின் தலைவர்கள் என பலரை சிறிலங்கா இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்துடன் இணைந்து தமிழ் இயக்கங்கள் படுகொலை செய்தன. இதில் தமிழ் மக்கள் பேரவைக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது. அதுவும் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் துணிச்சலுடனும் நேர்மை…

  12. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகள் இலங்கை இராணுவத்திடம் தொடர்ச்சியாக வீழ்ந்து வருவதாகவும், இருப்பினும் புலிகள் பெரும் தாக்குதல் ஒன்றை நடாத்தும் திறனை இன்னமும் கொண்டிருப்பதாக பிரபல ஆங்கில செய்தி இணையமான AFP செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் வெளியேறிய போதும் ஆனையிறவு பெருந்தள வீழ்ச்சியின் போதும் 1000 திற்க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஒர் இரு தினங்களில் கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் வன்னி பெருநிலப்பரப்பு கைப்பற்றப்பட்டது. இத்தாக்குதலானது தற்போது உள்ள நிலை ஒத்ததாகும் என குறிப்பிட்டுள்ள AFP செய்திச் சேவை, அன்று புலிகள் 19 மாத காலமாக …

    • 7 replies
    • 3.2k views
  13. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த பாராளுமன்ற உறுப்பினர் வி.முரளிதரன் எம்பி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உத்தியோகபூர்வ தலைவரும் கிழக்கு மாகாண சபையின் மான்புமிகு முதலமைச்சருமான திரு. சி. சந்திரகாந்தன் அவர்களை விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுவானது இன்று நண்பகல் கட்சியின் செயலகத்தில் அவசரமாக ஒன்று கூடியது. கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை உத்தியோகபூர்வமாக தலைவர் அவர்கள் ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுவானது முரளிதரன் எம்பியால் ஆங்கில ஊடகமொன்றில் இன்று (03-01-2009) வெளியான பேட்டியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரையும்சூ கிழக்குமாகாண சபையையும் அவமதித்ததை மிக வன்மையாகக் கண்டிப்பதோடுசூ இ…

  14. இருவரில் ஒருவர்தான் வரப்போகிறார் யார் வருவதன் மூலம் தமிழருக்கு ஓரளவுக்கு சாதகமாக அமையும் வாக்களித்து விட்டு தங்கள் கருத்தை இங்கே குறிப்பிடவும் விவாதிப்பதன் மூலம் தெளிவான முடிவினைப் பெற்றுக் கொள்ளலாம்.

  15. புதிய இடதுசாரி முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விக்ரமபாகு கருணாரத்னவும், சுயேட்சை வேட்பாளரான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கமும் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இருவரும் ஒன்றாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து விக்ரமபாகு கருணாரத்னவிடம் வினவியபோது, இருவரும் யுத்தத்திற்கு எதிரானவர்கள் என்பதுடன் இருவரும் இடதுசாரிகள். அத்துடன் தாம் இருவரினதும் அடிப்படைக் கொள்கைகள் இணையானது எனவும் இருவரும் வடக்கு கிழக்கில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் இனவாத முகாம்களில் இருக்கின்றனர். இனவாதமற்ற, நடுநிலையான அனைத்துத் தமி…

  16. மலேசிய நிருபர் திங்கட்கிழமை, மே 30, 2011 சிங்களப் படையினரால் தமிழ்க்கைதிகள் கொலை செய்யப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்படும் வீடியோ காட்சி இன்று ஆரம்பமாகும் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 17ஆவது அமர்வில் காண்பிக்கப்பட உள்ளது.இந்த வீடியோ காட்சி பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பானமை குறிப்பிடத்தக்கது. . இந்த வீடியோவின் தொழில்நுட்பம் குறித்த அனைத்து உறுதிப்படுத்தல்களையும் ஐ.நாவின் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான விசேட நிபுணர் கிரிஸ்ட்ரோப் ஹெய்ன்ஸ் மேற்கொண்டுள்ளார். . இருப்பினும், இந்தக் காட்சிகளை இலங்கை அரசு போலியானது எனக் கூறிவருகிறது.ஐ.நாவின் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான நிபுணராக கிரிஸ்ட்ரோப் ஹெய்ன்ஸ் 20…

  17. இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்பிற்கும், தனது இந்திய பயணத்திற்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு - விஜயராம பகுதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில், தமிழ் ஊடகவியலாளர்களை இன்று (செவ்வாய்க்கிழமை ) காலை சந்தித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னர் மேற்கொண்ட இந்திய பயணத்திற்கும், ஆட்சி கவிழ்ப்பிற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கேள்விக்கு அளித்த பதிலில் அவர் இதனைக் கூறியிருந்தார். …

  18. Published By: VISHNU 05 OCT, 2024 | 02:04 AM யாழ்ப்பாண நீர்வேலிப்பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலையினை எதிர்த்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை (4) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். தற்போது அரசாங்கம் மதுபானசாலை அனுமதிகளை தடை செய்கின்ற போதும் புதிதாக வழங்கப்பட்ட அனுமதியின் பிரகாரம் நீர்வேலிப்பகுதியில் மதுபானசாலை ஒன்றினை தொடர்ந்து திறப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றவரும் நிலையில் அதனை உடனே நிறுத்துமாறு கோரி கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (4) மாலை இந்த ஆர்ப்பாட்டம் எடுக்கப்பட்டது. நீர்வேலி பகுதியில் அத்தியார் இந்துக்கல்லூரி, கந்த சுவாமி கோவில் என்பவற்றிற்கு அருகிலே குறித்த மதுபான சாலை திறக்க…

  19. யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களில் விசேட சோதனை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வரும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் முன்னெடுத்துள்ளனர். வவுனியா புளியங்குளம், ஓமந்தை, நொச்சிமோட்டை மற்றும் இரட்டை பெரியகுளம் ஆகிய பகுதிகளில் வீதி தடைகளை ஏற்படுத்தி இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ள…

  20. இலங்கை இராணுவம் மீது போர்க்குற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை.! - அரசு திட்டவட்டம் இலங்கை இராணுவம் படுகொலைகளில் ஈடுபடவில்லை. போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. எனவே, நாம் எதற்கும் அஞ்சமாட்டோம்." - இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தன தெரிவித்தார். 'இராணுவத்தினருக்கு எதிராக அடுத்துவரும் காலப்பகுதியில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படலாம். இதற்கு சில அரசியல் கடசிகளும் தயாராகி வருகின்றனர்' என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரை மையப்படுத்தியே மேற்படி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், "2009ஆம் …

    • 7 replies
    • 1.2k views
  21. மோடி பெயரை குறிப்பிட்டது எனக்கு மிகப்பெரும் கௌரவம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எனது பெயரை குறிப்பிட்டதை மிகப்பெரும் கௌரவமாக கருதுகிறேன் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார். சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளுக்காக இலங்கைக்கு வந்திருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மலையகத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது, மக்கள் மத்தியில் வெள்ளிக்கிழமை பேசிய அவர், முத்தையா முரளிதரன், மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களால் உலகுக்கு வழங்கப்பட்ட பரிசு என்று புகழ்ந்துரைத்தார். இதற்கு முத்தையா முரளிதரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரபல வௌிநாட…

  22. சனிக்கிழமை, 24, ஜூலை 2010 (9:31 IST) இலங்கைக்கு தைரியத்தை கொடுத்தது யார்? வைகோ இலங்கை ராணுவத்தினர் தாக்கி மீனவர் படுகொலையை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசை கண்டித்தும் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன், ம.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, இலங்கை ராணுவத்தினர் தாக்கி 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை இறந்துள்ளனர். இதுபோல, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இலங்கை அரசை ஒரு முறை கூட மத்திய அரசு கண்டித்ததில்லை. மீனவர்களுக்கு ஆதரவாக உள்ளது போல, முதல்வர் கருணாநிதி ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார். இலங்கை போரில் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த இலங்கை ராணுவத்துக்கு யார் தைரியத்தை கொடுத்தது? இத…

    • 7 replies
    • 1.4k views
  23. யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை? பாடகி யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற 71 வயதான அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்“ மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டில் திறமையானவர்கள் பலர் உள்ளனர். எனவே கிரிகெட், காற்பந்து, வலைப்பந்து போன்ற அனைத்து விளையாட்டுகளுக்குமான மைதானங்களை புனரமைப்பு செய்வதற்கு நிதி தேவைப்…

    • 7 replies
    • 881 views
  24. வித்தியா கொலை குற்றவாளிகள் 10 பேரையும் பகிரங்கமாக தூக்கில் போட வேண்டும்! - நாடாளுமன்றத்தில் விஜயகலா ஆவேசம் [Thursday 2015-05-21 08:00] புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான பாலியல் வல்லுறவு, படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய பத்துப் பேருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். புலிகளின் காலத்தில் இத்தகைய பாலியல் வல்லுறவுகள் இடம்பெற்றதில்லை. அப்படி நடந்தால் 24 மணித்தியாலத்தில் தண்டனை வழங்கிவிடுவர் என்றும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிரு…

    • 7 replies
    • 1.8k views
  25. 20 NOV, 2024 | 07:16 PM தொடர்ச்சியாக பெய்து வரும் மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/315 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரும், ஜே/328 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் ஊர்காவல்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/56 கிராம சேவகர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.