ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143479 topics in this forum
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் வீதியில் இறங்கி போராடவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் நேற்று மாலை ( 21.01.2025) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, இராமநாதன் அர்ச்சுனா, இந்து சமயத்தையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மற்றும் இந்து சமய மக்கள் பூசுகின்ற திருநீற்றைப் பற்றியும் மோசமான வார்த்தை பிரயோகங்களை முகநூலில் பதிவிட்டமைக்கு குறித்த சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். …
-
-
- 33 replies
- 2k views
- 1 follower
-
-
கடும் குளிரால் இறக்கும் கால்நடைகள்! நாட்டில் நிலவும் கடும் குளிரால் கால்நடைகள் பல்வேறு நோய் நிலைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள் பல இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவரது பண்ணையில் இருந்த கால்நடைகளே இவ்வாறு உயிரிழந்தும், உயிருக்காக போராடியும் வருகிறது. இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன. கால்நடைகளில் உயிரை பாதுகாக்கும் செயற்பாட்டில் பண்ணையாளரும், அயல…
-
- 33 replies
- 1.9k views
- 2 followers
-
-
போரின் போது அரசபடைகள் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட பேரழிவு நடவடிக்கைகள் இனப்படுகொலை என்றால் வடக்கிலிருந்து முஸ்லீம்கள் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டமை இனச் சுத்திகரிப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் தமிழ் மக்களால் தெரிசெய்யப்பட்டவர் அல்ல என்பதும் திரு சம்பந்தனால் இறக்குமதி செய்யப்படடவர் என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும். ஏற்கனவே அவர் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் எனவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எப்போதுமே பயங்கரவாதத்தை ஆதரித்ததில்லையெனவும் தெரிவித்திருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஒப்பற்ற அர்ப்பணிப்புடன் களமாடிய காலத்தில் அரசியல் உறக்கத்திலும்…
-
- 33 replies
- 2.3k views
- 1 follower
-
-
வடக்கில் 9 ஆயிரம் தமிழ் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க திட்டம்..! ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையிலான கூட்டத்தில் பேச்சு.. வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் சுமார் 9 ஆயிரம் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த விடயம் இன்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் -4500, வன்னி - 4500 என்ற அடிப்படையில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் சுமார் 9 ஆயிரம் பேரை இராணுவத்தில் இணைக்கவுள்ளனர். இவ்வாறு இராணுவத்தில் இணைக்கப்படுவோர் வடக்கில் வேலை செய்ய இடமளிக்கப்படுவதுடன், 60 ஆயிரத்திற்கும் அதிகமான மாத சம்பளம் வழங்கப்படும் எ…
-
- 33 replies
- 3.8k views
-
-
தலைமைத்துவத்திற்கான போட்டியில் சுமந்திரன், சிறீதரன் ! இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கான போட்டியில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இவர்கள் தலைமைப் பதவிக்காக போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை கட்சியின் தற்காலிக செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்திடம் கையளித்துள்ளனர். சுமந்திரனை தலைவருக்கான வேட்பாளராக முன்மொழிந்து, சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட 12 பேர் கையொப்பமிட்டுள்ளனர். இதேநேரம், சிறிதரனை தலைவருக்கான வேட்பாளராக முன்மொழிந்து குருகுலராஜா, வேழமாலிகிதன், விஜகுமார், உள்ளிட்ட 6 பேர் கையொப்பமிட்டுள்ளனர். கடந்த 5ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக…
-
- 33 replies
- 2.9k views
- 1 follower
-
-
இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் (KKS) இடையிலான படகுச் சேவை ஏப்ரல் 29, 2023 முதல் தொடங்கும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கே.கே.எஸ் துறைமுகத்துக்கு ஏப்ரல் 29-ம் தேதி புதிய படகு சேவையின் முதல் கப்பல் போக்குவரத்து வரும் என்றார். அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த புதிய படகுச் சேவையின் பங்குதாரர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். படகு சேவை உரிமையாளர்களின் கூற்றுப்படி, ஒரு பயணத்திற்கு ஒரு பயணிக்கு US$50 வசூலிக்கப்படும் மற்றும் 100 கிலோ சாமான்கள் அனுமதிக்கப்படு…
-
-
- 33 replies
- 3.8k views
- 1 follower
-
-
எனி விடுதலைப்புலிகளால் இராணுவ வெற்றிகளைப் பெற்று போராட்டத்தைக் கொண்டு செல்ல முடியாது. இந்த உண்மையை அவர்கள் புரிந்து கொண்டு ஆயுதங்களை போட்டுவிட்டு அரசியல் ரீதியில் போராடி பேச்சுக்களின் மூலம் தீர்வைப் பெறுவது பற்றி யோசிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது என்று முன்னாள் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கைம் இந்தியாவில் வைத்து நேற்றுத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் சிறீலங்கா நிலவரம் தொடர்பாக ஐநா பொதுச்செயலர் மற்றும் இந்திய தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு செய்தியாளர்களிடம் மேற்படி கருத்தை சொல்கைம் முன் வைத்துள்ளார். இதே கருத்தையே இணையத்தலைமை நாடுகளும் நோர்வேயும் ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் வெளியிட்டிருந்தன. இதற்கிடையே நேற்றைய தினம் சிறீலங்காவில் போர் கட்டுப்பாடின…
-
- 33 replies
- 4.8k views
-
-
யாழ். குடாநாட்டு மக்களின் அடிமனதில் உறவாடும் பல ஆத்மார்த்தமான வினாக்களையும், ஐயங்களையும் துப்பாக்கி முனைகளும் குண்டுகளும், காக்கிச் சட்டைகளும் காற்றில் வராது தடுத்து வருவது பல ஆண்டுகாலமாக நிகழ்கின்ற ஒன்று. இன்று யாழ்ப்பாண குடாநாட்டில் 1,85,619 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் 6,35,300 மக்கள் தொகையினராவர். இவர்கள் அனைவரையும் பிற சிறிலங்காப் பகுதிகளுடனும் குறிப்பாக ஏனைய தமிழ்ப் பகுதிகளுடனும் இணைக்கும் முக்கிய தரைவழி, ஏ-9 எனப் பிரபலம் பெற்ற யாழ். - கண்டி நெடுஞ்சாலையாகும். இது யாழ். டீயளவலையn சந்தியில் ஆரம்பித்து கண்டிவரை நீள்கின்றது. இதில் யாழ்ப்பாணம் தொடக்கம் முகமாலை முன்னரங்க இராணுவ மையம் வரையான பகுதிகள் இராணுவத்தினதும், அடுத்து முகமாலை சூனியப் பிரதேசம் தாண்டி ஒமந்தை…
-
- 33 replies
- 7.4k views
-
-
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததுதான் விடுதலைப் புலிகள் செய்த தவறுகளிலேயே மிகப் பெரிய தவறாகும் என்று அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். இதுகுறித்து என்டிடிவிக்கு ராஜபக்சே அளித்துள்ள பேட்டியில், ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததன் மூலம் இந்தியாவிடமிருந்து கிடைத்து வந்த அனுதாபத்தையும், ஆதரவையும் இழந்து விட்டார் பிரபாகரன். அந்த சம்பவத்திற்கு முன்பு வரை இந்தியாவின் அனுதாபம் பிரபாகரனுக்கு இருந்தது. ஆனால் ராஜீவ் காந்தியைக் கொன்றதன் மூலம் அதை இழந்து விட்டார் பிரபாகரன். துப்பாக்கியால் எதையும் சாதிக்க முடியும் என நினைத்தார் பிரபாகரன். ராஜீ்வ் காந்தி அமைதியான தீர்வை ஏற்படுத்த முயன்றார். அதை பிரபாகரன் ஏற்கவில்லை. இதனால் ராஜீவ் காந்தி மீது கோபம் கொண்டார்.…
-
- 33 replies
- 4.2k views
-
-
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக் கொடுக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.கூட்டமைப்பின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 20ம் திகதி கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன இணைந்து, கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்கவுள்ளன. இதன் போது 11 உறுப்பினர்களை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பே அங்கு முதலமைச்சர் பதவியை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெற்றிருந்த போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பதாக அறிவித்தும், முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புடன் இணையாது அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கத…
-
- 33 replies
- 2.1k views
-
-
23 DEC, 2023 | 02:15 PM சட்டவிரோதமான முறையில் ரிவோல்வர் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் சிறிய கத்திகளை கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்டவர் 54 வயதுடைய இங்கிலாந்து பிரஜையாவார். இவர் இங்கிலாந்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று (22) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அனுமதியின்றி ஆயுதங்களை கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் …
-
- 33 replies
- 3.3k views
- 1 follower
-
-
சிட்னியில் அவுஸ்திரேலியா, சிறிலங்கா இரு அணிகளுக்கும் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு நாங்கள் தமிழர்கள் நாங்கள் தமிழீழத்தைத் சேர்ந்தவர்கள் என்பதை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் துணிவுடனும் பெறுமையோடும் துணிந்து போராடுவோம் என்று சொல்வதற்காக எங்களுடைய தமிழீழத் தேசியக் கொடியை பறக்கவிட்டேன். பல ஊடகங்களில் எமது கொடியை கவால்துறையினர் பறித்ததாக வெளியிடப்பட்டடுள்ளது. ஆனால் அங்கு அவ்வாறு நடைபெறவில்லை பல ஆயிரக்கணக்கான சிங்களவர்களின் மத்தியில் தேசியக்கொடியை பறக்கவிட்டேன். கொடியை பார்த்த சிங்களவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர். பின்பு காவல்துறை என்னிடம் கூறியது துடுப்பாட்டத்தை பார்வையிடுவதென்றால் கொடியை தம்மிடம் தரலாம் இல்லை என்றால் தம்முடன் பேசுமாறு கே…
-
- 33 replies
- 1.9k views
-
-
இந்த வருடத்துடன் யாழ்ப்பாணம் அரசு, போர்த்துகேயரிடம் மண்டியிட்ட 500 வருட நினைவு. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தது 1505ம் ஆண்டு. யாழ்ப்பாண அரசு, போர்த்துகேயரிடம் மண்டியிட்டஆண்டு 1520 அப்போது இலங்கையில் கோட்டை, சீதாவாக்கை, கண்டி, யாழ்ப்பாணம் ( நல்லூர்) ஆகிய நான்கு ராஜிஜங்கள் இருந்தன. யாழ்ப்பாணம், கண்டி தவிர்ந்த ஏனைய இரண்டையும் ஆண்ட வியாஜபாகு மன்னரை கொன்று மூன்றாக (கோட்டை, சீதாவாக்கை, ராய்கம) பிரித்து பதவிக்கு அமர்ந்த அவனது மூன்று மகன்மாருக்கு இடையே நடந்த போராடங்களினால் பெரும் கொதி நிலை நிலவியது. அதனை லாவமாக பயன்படுத்திக் கொண்டனர் போர்த்துக்கேயர்கள். தென்னிந்திய அரசர்களின் பாதுகாப்பில் தைரியமாக இருந்தது பக்கத்தில் இருந்த யாழ்ப்பாணம் ராஜ்யம். அங்கிருந…
-
- 33 replies
- 2.7k views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில் சிங்கள மாணவ ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி விரிவுரை மண்டபங்களில் “ரொமான்ஸ் பண்ணாதீர்கள்” என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிங்கள மாணவ ஜோடிகள் விரிவுரை மண்டபத்திற்குள் ஜோடியாக இருந்தல் மற்றும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருத்தல் மற்றும் முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாணவர்களால் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மேற்படி சிங்கள மாணவர்களிடம் இது தொடர்பாக தெரியப்படுத்தியபோதும் அது தொடர்பாக அந்த மாணவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த திடீர் சுவர் ஒட்டி முடிவை எடுத்துள்…
-
- 33 replies
- 2.8k views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதியான கேணல் பானு கொலை : April 27, 2011, 4:58 pm[views: 997] வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய கட்டளை தளபதிகளில் ஒருவரான கேணல் பானு கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட புகைப்படங்களில் இருந்து இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஈழ மண் மீட்புக்காக பல வெற்றி சமர்களங்கள் களமாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது . நேற்றைய தினம் வீர சாவை தழுவிக் கொண்ட பல போராளிகளின் புகைப்படங்கள் வெளியாகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. http://www.paristamil.com/tamilnews/news_detail.php?id=10190&v=990
-
- 33 replies
- 4.4k views
-
-
ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் தாயகத் தமிழ் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இணைந்து தமிழீழத்தில் சிங்கள அரசால் நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்பதை ஒரே குரலாக எடுத்துரைக்க முற்பட்டவேளையில், கனடாவில் வசித்துவரும் திரு. கரி ஆனந்தசங்கரி அவர்கள் தலைமையிலான ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் இனப்படுகொலை எனும் பதத்தினைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஏனையோருக்கு பாரியளவில் அழுத்தம் கொடுத்திருந்தனர். இதன்போது ஐ.நா.வில் உரையாற்ற வந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. அனந்தி சசிதரன் அவர்களும் பல அழுத்தங்களை திரு. கரி ஆனந்தசங்கரியினால் எதிர்நோக்கியிருந்தார். இதுபற்றி அண்மையில் கனடா சி.ரி.ஆர். வானொலியில் திருமதி. அனந்தி சசிதரன் அவ…
-
- 33 replies
- 2.9k views
-
-
யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலையொன்றில் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசிலில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள் ஆதாரம் வீரகேசரி வாரவெளியீடு
-
- 33 replies
- 4.7k views
-
-
பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை தீவுச்சேனைப் பகுதியில் சிறிலங்காப் படையின் துணை இராணுவக் குழுவினரின் முகாம் தாக்கியழிக்கப்பட்டதாகவும் இதில் 15-க்கும் மேற்பட்டார் கொல்லப்பட்டதாகவும் பலரைக் காணவில்லை என்றும் மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முகாம் முற்றாக தாக்கியழிக்கப்பட்டதாகவும் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது முகாமை நோக்கி ஆட்லறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பிறிதொரு தகவல்களின் படி இம் முகாம் பகுதியில் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் வாகனமும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போதிலும்…
-
- 33 replies
- 6.9k views
-
-
ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் சுமந்திரனின் பெயரை உச்சரிக்கவேண்டிய தேவை ஏற்படாது- கஜேந்திரகுமார் July 20, 2020 ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் சுமந்திரனின் பெயரை உச்சரிக்கவேண்டிய தேவை ஏற்படாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சுமந்திரன் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் என்ற தகுதியை இழந்து வெறுமனே ஒரு சட்ட ஆலோசகராகவே இருக்கின்றார் இதன் காரணமாக அவ்வாறான ஒருவருடன் நாம் விவாதிக்கவேண்டிய தேவையுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் கட்சிகளுக்கு இடையிலான விவாதமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் இந்த நிகழ்வு இரத்துச்செய்யப்பட்டது என்பதை அவர…
-
- 33 replies
- 3k views
-
-
கொழும்பு சென்ற இந்திய உயர்மட்டக்குழு பொட்டம்மானை பணயமாக கேட்டது: "சுடரொளி" வார ஏடு
-
- 33 replies
- 4.6k views
-
-
யாழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக இப் புதிய கட்சி போட்டியிடவுள்ளது. இதில் தமிழரசுக் கட்சியில் அதிருப்பியடைந்துள்ளவர்கள் மற்றும் வேறு சில கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரையும் உள்ளடக்கி இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுவை நாளை காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். இக் கட்சியின் உருவாக்கம் மற்றும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதன் தலைவரான ஐனாதிபதி சட்டத்தரணி தவராசா இன்றைய ஊடக சந்திப்பில் இதனை அறி…
-
-
- 33 replies
- 2.6k views
- 2 followers
-
-
என்று மின்னஞசலில் கிடைக்கப்பெற்ற இணைப்பு http://www.yarl.com/forum3/uploads/mp3/nagulan.mp3
-
- 33 replies
- 6.7k views
-
-
வீரகேசரி நாளேடு 5/19/2009 8:39:55 PM - விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்தவாறு கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக பேசபவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். இதனை மறந்து விடக்கூடாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து முப்படைகளை சிறப்பாக வழிநடத்தி முப்பது வருடங்கள் நாட்டுக்…
-
- 33 replies
- 5.4k views
-
-
தம்புள்ளயில் உள்ள அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த ஜும்மாபள்ளிவாசல் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் சிங்களக் காடையர்களால் இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் அங்கு சென்ற நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் தொழுகையில் இருந்த இஸ்லாமிய மக்களை பலவந்தமாக வெளியேற்றிவிட்டு பள்ளிவாசலை அடித்து நொருக்கியிருக்கின்றனர். பள்ளிவாசலை உடைப்பதற்கு முன்பாக கதிரை ஒன்று போடப்பட்டு அதில் பௌத்த பிக்கு ஒருவர் அமர்ந்து இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே பள்ளிவாசல் உடைக்கப்பட்டிருக்கின்றது. தம்புள்ள புனித பிரதேசம் என்பதால் அங்கு வேறு இனத்தின் அடையாளங்கள் இருக்க முடியாது என்று தெரிவித்தே பள்ளிவாச…
-
- 33 replies
- 3.4k views
-
-
இவரைப் பற்றி பெரிதாக எனக்குத் தெரியாது அதைவிட ஈழத்து தமிழர்கள் என்றவகையில் எப்படி இதை எதிர்கொள்கின்றீர்கள்? சிலர் சில கருத்துக்களை தட்ஸ் தமிழில் வைத்துள்ளனர் வாசிக்க. என் கருத்து இது க...க...க...கருணாநிதி செய்யும் மோசடி என்றே சொல்வேன்.
-
- 33 replies
- 3.2k views
-