Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கையை வளைக்கப்போகின்றதா அல்லது முறிக்கப்போகின்றதா இந்தியா? முத்துக்குமார் 13வது திருத்தம் பற்றிய அரசியல் தொடர்ந்து சூடான நிலையில் இருக்கின்றது. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும், 13வது திருத்தம் பற்றியே கவனம் குவிந்திருக்கின்றது. எல்லாத் தரப்பினையும் எல்லாவற்றையும் மறக்கச் செய்து 13வது திருத்தப் பக்கம் திருப்பியதில் மகிந்தர் வெற்றி கண்டிருக்கின்றார் என்றே கூறவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு 13வது திருத்தத்தைப் பாதுகாக்கும் காவலனாக புதுடில்லி வரை சென்று வந்திருக்கின்றது. அரசியல் தீர்வு விவகாரத்தை புதுடில்லியிடம் அது ஒப்படைத்ததினால் எடுத்ததற்கெல்லாம் புதுடில்லிக்கு ஒடவேண்டிய நிலை அதற்கு. அங்குகூட எஜமான்கள் சொன்னதா…

    • 8 replies
    • 1.2k views
  2. ரொஹிங்கிய முஸ்லீம்கள் மீது தனது ராணுவத்துடன் சேர்ந்து திட்டமிட்ட முறையில் இனக்கொலை ஒன்றினை நடத்தியதற்காக பர்மாவின் தலைவரும் முன்னாள் மனிதவுரிமைக்கான நொபெல் பரிசினை வென்றவருமான ஆங் சான் சூசி மீது ஐக்கியநாடுகள் சபையினூடாக விசாரணைதொன்று நடந்துவருகிறது. முஸ்லீம் நாடுகளின் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஒன்றினையடுத்து சின்னஞ்சிறிய ஆப்பிரிக்க நாடான கம்பியா இந்த குற்றச்சாட்டினை எழுப்பியுள்ளதுடன், அமெரிக்க வழக்கறிஞர்களைக்கொண்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் ரொஹிங்கிய அகதிகள் தங்கியிருக்கும் பகுதியொன்றிற்குச் சென்றிருந்த கம்பியாவின் வெளிவிவகார அமைச்சர் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் மூலமும், கண்ணால்க் கண்ட சாட்ச…

    • 8 replies
    • 1.9k views
  3. பெண் உடலை கட்டுப்படுத்துவதிலிருந்து வெளிப்படும் தீவிரவாதம் பட மூலம், REUTERS புர்காவைப் பெண்கள் விரும்பி அணிகிறார்கள் என்பதிலெல்லாம் எனக்குத் துளியும் உடன்பாடு இருந்ததில்லை. இப்போதும் இல்லை. பெண் உடல் மீதான ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடு மட்டுமே இந்த புர்கா. இந்த உடை எப்படி அடிப்படைவாதத்தின் கூறாக இருந்து வந்திருக்கிறது என்பதற்கு புர்கா/ நிகாப் தடை ஒரு நல்ல எடுத்துக்காட்டு. 2016 செப்டம்பர் 23ஆம் திகதி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளியிட்ட ஒரு பத்வாவில் “நிகாப் முஸ்லிம் பெண்கள் மீது விதிக்கப்பட்டது” என்றது. (பத்வா இல. 008/F/ACJU/ 2009). அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் இந்த பத்வா, நிகாப் அணியாத பெண்களை விபச்சாரிகள் என்று சொல்லவைத்தது. அதே ஜம்மியத்துல் உலமாத…

    • 8 replies
    • 1.6k views
  4. சோவியத் மீதான தாக்குதலை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாக விட்ட நிலையில் தமது ராணுவ வல்லாண்மையில் அவர்கள் வைத்த நம்பிக்கை காரணமாக மூன்று அல்லது நான்கு மாதங்களில் மொஸ்கோவை பிடித்து விடலாம் என்றே நம்பினர். ஜூன் 22, 1941 அதிகாலை 3 மணி. நாசி போர் விமானங்கள் சோவியத்யூனியனுக்குள் சீறிப்பாய்ந்தன. ஆயிரக்கணக்ககான ஜேர்மன் விமானங்கள் குண்டுகள் வீச ஆரம்பித்தன. ஆயிரக்கணக்கான டாங்கிகளும் பீரங்கிகளும் எல்லைகளை மீறி உள்ளே புகுந்து தாக்க ஆரம்பித்தன. மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட ஜேர்மன் துருப்புக்கள் மூன்று சம வரிசையாக சோவியத்திற்குள் பாரியளவான தாக்குதலை முன்னெடுத்தனர். இதற்கு முன்னர் இப்படியொரு பிரமாண்டமான படையெடுப்பு நடத்தப்படவில்லை என்று உலகம் சொல்லவேண…

  5. உலக நாடுகள் இனி என்ன செய்யும்? இலங்கை அர­சி­ய­லில் கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு அப்­பாற்பட்ட மாற்­றங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. தான் நினைக்­கும்­போது ஆட்­சி­யைக் கவிழ்க்­கும் பலத்­தைப் பெற்­று­விட்­டேன் என்று முழக்­க­மிட் டுள்­ளார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச. அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் தோல்­வி­ய­டைந்து சில ஆண்­டு­களே ஆகி­யி­ருக்­கும் நிலை­யில் மீண்­டெ­ழுந்து வந்து இந்த முழக்­கத்தை அவர் நிகழ்த்­தி­யி­ருக்­கி­றார். கடந்த மே தினத்­தில் தலை­ந­கர் கொழும்­பின் காலி முகத்­தி­ட­லில் கூடிய தனது ஆத­ர­வா­ளர்­க­ளின் கூட்­டத்­தைப் பார்த்த பின்­னரே மகிந்த இப்­படி ஆர்ப்­ப­ரித்­தி­ருக்­கி­றார். சிங்­கள, பௌத்த மக்­கள் மத்­தி­யில்…

  6. ஆபிரிக்காவில் பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்த முதலாவது நாடு தென் ஆபிரிக்கா: அங்கு வாழ்ந்த வெள்ளையர்களிடம் கொடுத்ததால், 'போராட்டம் இன்றி' கொடுக்கப் பட்டது. கடைசியாக 'போராடி' பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்தவர்கள், ரொடிசியா என அழைக்கப் பட்ட சிம்பாவே. இரு நாடுகளிலும் பெரும்பான்மையினர் கருப்பர்கள். வெள்ளை சிறுபான்மையினர் ஆட்சி பொறுப்பில் இருந்தார்கள். தாம் சிறுபான்மையினர் என்ற எண்ணம் இல்லாது, மேற்குலகம் ஆதரவு தரும் என இறுமாந்து எந்த வித சமரசமும் இன்றி, பெரும்பான்மை இனத்தவருடன் மோதி, தோற்று, பின்னர், பலவீனமான நிலையில் பேச்சு வார்த்தைக்குப் போய், வெள்ளையர் நலன்களை உறுதிப் படுத்தி பின்னர் சுதந்திரம் வழங்கி, இன்று பிரித்தானியா என்றாலே பாம்பாகச் சீ…

    • 8 replies
    • 816 views
  7. வடக்கில் தலைகாட்டும் மதவாதம் கே. சஞ்சயன் / 2020 மார்ச் 06 நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ் அரசியல் பரப்பும் சூடுபிடித்திருக்கிறது. வடக்கில் மாற்று அணி, மாற்றுத் தலைமை என்ற கோசத்தை முன்னிறுத்தியும், கிழக்கில் தமிழர் ஒற்றுமை என்ற கோசத்தைப் பயன்படுத்தியும், புதிய அரசியல் அணிகள் தோற்றம் பெற்று, இம்முறை தேர்தல் களத்தில் தீவிரமான உள்ளகப் போட்டியை உருவாக்கியிருக்கின்றது. வடக்கில், பேரினவாதக் கட்சிகள், அவற்றின் செல்லப்பிள்ளைகளாக இருக்கின்ற தமிழ்க் கட்சிகள், ஆசனங்களைக் குறிவைத்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகளின் முரண்பாடு, அவற்றுக்குச் சாதகமாக மாறும் சூழல் உள்ளது. கிழக்கில் தமிழ்த் தரப்…

    • 8 replies
    • 982 views
  8. மகிந்த கொல்லாத நாய்கள் - நிலாந்தன் கடந்த டிசம்பர் மாதம் யாழ்.பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தேன். வீதியை திடீரென்று குறுக்கறுத்து ஓடிய ஒரு தொகை நாய்களின் மீது மோதி விழுந்ததில் எனது கைவிரல் ஒன்று அறுந்து தொங்கியது. யாழ்.போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் எனது விரலைக் காப்பாற்றினார். நாய்களில் மோதிப் படுகாயம் அடைந்தவர்கள் மட்டுமல்ல, கோமாநிலைக்கு சென்றவர்களும் உண்டு என்று போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தின் சிறிய ஒழுங்கைகளில் கட்டாக்காலி நாய்கள் பெருகிவிட்டன. காலை வேளைகளில் எல்லாச் சிறிய தெருக்களிலும் நாயின் கழிவுகளைக் காணலாம். எனக்கு தெரிந்த ஒரு ஆசிரியை திருநெல்வேலி பகுதியி…

  9. ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்ட ஈழத் தமிழர் ஒற்றுமையோடு ஒரே இலக்கோடு ஒரே கொள்கையோடு பயணித்திருப்பதற்கு மாறாக. இம் முறையும் தமிழர் தலைமையும் தமிழ் மக்களும் தங்கள் விடுதலைக்கான பாதையில் இருந்து இன்னும் ஒரு முறை தோல்வி கண்டிருக்கிறார்கள். ஐக்கியசக்தியோடு (United Force) பயணிக்கும் சிங்கள மக்களிடம் இருந்தும் இந்த சக்தியை ஒன்றுபட வைக்கும் சித்தாந்தங்களில் இருந்தும் இவர்களது தலைமையிடம் இருந்தும் சில பாடங்களை தமிழர்கள் கற்றுக்குகொள்ள வேண்டும்.படித்த தமிழர் என்று பட்டம் வேண்டிய உங்களால் பாதை சரியாகப் போட முடியவில்லையே.ஐக்கியம் என்னும் சக்தியை எப்பொழுது தமிழர்கள் உணராமல் போனார்களோ அப்பொழுதில் இருந்தே உனக்கான தோல்வியின் ஆரம்பம் என்பதை உணர்ந்துகொள். அவிவி…

  10. பொருளாதார நெருக்கடி: தமிழ்த் தரப்பு, என்ன செய்யலாம்? நிலாந்தன். நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளாகவும் யாப்பு நெருக்கடிகளாகவும் மாறியுள்ளன. தென்னிலங்கையில் ஏற்பத்துள்ள அரசியல் ஸ்திரமின்மை தொடர்பாக தமிழ்த் தரப்பு என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? இது விடயத்தில் தமிழ்த் தரப்பு முடிவெடுப்பதாக இருந்தால் முதலில் தென்னி லங்கையில் இடம்பெறும் கொந்தளிப்புகள் தொடர்பாக ஒரு சரியான படத்தை பெறவேண்டும். தென்னிலங்கையில் நான்கு பரப்புக்களை நோக்கி தமிழ் தரப்பு கவனத்தை குவிக்க வேண்டி இருக்கிறது. முதலாவது நாடாளுமன்றம். இரண்டாவது காலிமுகத்திடல்.மூன்றாவது பௌத்த மகா சங்கங்கள்.நாலாவது அரசாங்கத்துக்கு உதவ முற்படும் வெளித்தரப்புக்கள். முதலில் நாடாளுமன்றம். ம…

  11. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை? ஈழத் தமிழர்களை சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறது? – நிலவன் 66 Views இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்ந்தும் ஈழத் தமிழர்களை வேறு வழியின்றி சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. இன்று இலங்கையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால், இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் ஈழத் தமிழர்களையும் சீனாவை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளி விட்டுள்ளது. கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் இந்திய தேசம் இரட்டை வேடம் போட்டு வந்த நிலையில், ஈழத் தமிழர்கள் சீனாவை ஆதரிக்கும் போக்கு காணப்படுகிறது. குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் சீன நிறுவனங்களி…

  12. நான் ஏன் வைகோவை தேர்ந்தெடுத்தேன்? ஒரே சிந்தனை கொண்ட நண்பர் இல.கோபால்சாமியின் பதிவு. நீண்ட நாட்களாகவே பகிர எண்ணி இருந்த அனுபவம். தற்போதுதான் நேரம் வாய்த்தது. நான் மாணவனாக இருந்த பொழுது, ஒரு அடிமைச் சமூகம் போல நடத்தப் பட்டிருக்கிறேன். வெறும் படிப்பு, அளவான பொழுதுபோக்கு, செய்தித் தாள்களில் வரும் நாடு நடப்புகள் தவிர வேறெதுவும் அறிந்திருக்கவில்லை. போட்டி நிறைந்த எதிர்காலத்தை கல்வி என்ற ஒற்றை ஆயுதம் கொண்டு எதிர்கொள்ள வேண்டி இருந்ததால் அதை மட்டுமே பட்டை தீட்ட வேண்டிய நிர்பந்தம். ஆயினும் கற்ற கல்வி கைவிட வில்லை. அந்தக் கல்விதான் பின்னாளில் எதையும் ஆராய்ந்து மெய்ப்பொருள் கண்டறியும் கருவியாயிற்று. இன்றைக்கு தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் தற்போதைய…

  13. ஜெனிவாவை நோக்கி ஒன்றுதிரள முடியாத தமிழர்கள் – நிலாந்தன். September 12, 2021 கடந்த 31ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கும் ஐநாவுக்கும் ஓர் அறிக்கையை அனுப்பியது. ஆங்கிலத்தில் 14 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையின் தலைப்பு “மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்” என்பதாகும். வரும் 14ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஐநா கூட்டத்தொடரையொட்டித் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் அரசாங்கம் பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறது. முதலாவதாக அனைத்துலக விசாரணை மற்றும் அனைத்துலக தகவல் சேகரிப்பு பொறிமுறைகள் தொடர்பாக பின்வருமாறு கூறப்பட்டு…

  14. "தந்தை செல்வாவின் அரசியல் அணுகுமுறையும் அவரின் சொந்தக் குணாதிசயமும் ஒன்றாகவே இருந்தது. அவர் ஒத்து ஓடுகின்றவர் அல்லர். அதாவது அடம்பன்கொடி திரண்டு இருக்க வேண்டும் என்பதற்காகச் சேரக் கூடாதவர்களோடு சேருபவர் அல்லர்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமந்திரன் எம்.பி. உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "தந்தை செல்வநாயகம் சென்தோமஸ் கல்லூரியில் கற்பிக்கும் வேளையிலே சகோதரனின் உடல்நிலை கருதி விடுமுறை கோரியபோது…

  15. [size=2][size=4]மே 17 என்ற அமைப்பின் தலைவர் திருமுருகன் ஐ.நாவிற்கு எதிராகவும், சர்வதேச சமுதாயத்தின் கபடச் செயல்களுக்கு எதிராகவும் போராட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]மே 17 வன்னியில் நடந்து முடிந்த பெருங் கொலைகளுடன் தமிழகத்தின் தலைமைகள் தோல்வியடைந்துவிட்டன என்பதன் அடையாளமாக அமைக்கப்பட்டதே மே 17 என்ற இயக்கமாகும்.[/size][/size] [size=2][size=4]சிறீலங்காவும், மற்றய நாடுகளும் சேர்ந்து இனப்படுகொலைக்கு தயாராகிவிட்டதை 2008 லேயே ஐ.நாவிற்கு சுட்டிக்காட்டிய அறிக்கை வெளியாகிவிட்டது.[/size][/size] [size=2][size=4]ஆனால் இது பற்றி யாதொரு பிரக்ஞையும் இல்லாமல் ஐ.நா இருந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.[/size][/size] [size=2…

    • 8 replies
    • 1.4k views
  16. பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை முருகானந்தன் தவம் இலங்கையின் எம்.பிக்களின் சொத்து பற்றிய அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 30ஆம் திகதி முடிவடைந்த போதிலும், 175 எம்.பிக்களில் 80 பேர் இன்னும் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவில்லை, அதன்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்காத எம்.பி.க்கள் மீது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது . இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்தின்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறும் எம்.பிக்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அதிகாரமும் ஆணையத்திற்கு உள்ளது. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒவ்வொரு ஆண…

  17. (வேறொரு தலைப்பிற்கு பதிலாக எழுதப்பட்ட கருத்தாயினும் தாயகத்தின் இன்றைய தேவை கருதி இங்கு தனித்தலைப்பில் இணைத்திருக்கிறோம். இது தொடர்பில் உங்கள் கருத்துக்கள் நிலைப்பாடுகள்.. இந்த முன்மொழிவுகளில் இருக்கக் கூடிய குறைகள் நிறைகள்.. அவற்றை எவ்வாறு சீர்செய்வது.. எப்படி அந்நிய ஆதிக்கத்தில் இருந்து எமது பொருண்மியத்தை மீட்டு எமதாக்குவது என்பவற்றை இட்டு உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.) தமிழர் தாயகத்தில் சிங்கள ஆதிக்கமும் இந்திய வல்லாதிக்கமும் வலுப்படுவதை அனுமதிக்கக் கூடாது. புலம்பெயர்ந்த மக்கள் அங்கு முதலீடுகளைச் செய்வதோடு மேலதிக வருவாயை புலம்பெயர் நாடுகளுக்கு எடுத்து வர வேண்டும் அல்லது தாயகத்தில் கட்டுமானத்தில் முதலீடாக்க வேண்டும். சிறீலங்காவில் சேமிப்புக்களை வைப்பதை விட்டு ச…

    • 7 replies
    • 2.3k views
  18. புருஜோத்தமன் தங்கமயில் நீண்ட நெடிய தேடுதல்களுக்குப் பின்னராக தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் (அரியம்) அறிவிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இரு தடவைகள் பதவி வகித்த அவர், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராவார். யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் கடந்த வியாழக்கிழமை பொதுக் கட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளராக அரியநேத்திரன் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த அறிவிப்பு வெளியானதும், சமூக ஊடகங்களில் யாழ். மையவாதிகளினால் கிழக்கில் இருந்து இன்னொரு பலியாடு களமிறக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்…

  19. தமிழரோடு முஸ்லிம்கள் இணைந்து போராடும் தருணம் இது! -எஸ். ஹமீத்- இன்றைய இலங்கைச் சூழலில் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனை கொண்டோர் திட்டமிட்ட வகையில், ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடியொற்றி சிறுபான்மைச் சமூகங்களின் மீது மேற்கொள்ளும் கருத்தியல் மற்றும் பௌதீகத் தன்மை வாய்ந்த தாக்குதல்களைக் கிஞ்சித்தேனும் குறைத்து மதிப்பிட முடியாது. இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் மீதான இத்தகு தாக்குதல்களுக்கு அரசாங்கத்தின் அதியுயர் பீடம் தொடக்கம் சாதாரண தரத்திலுள்ள இனவெறி இதயம் தாங்கிகளினால் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஆதரவளிக்கப்படுகின்றதென்பதும் மறுக்க முடியாத உண்மையே. தன்னுடைய எதிர்கால அரசியல் இருப்பை இலங்கையின் அரச சிம்மாசனத்தில் இருத்தி அழகு ப…

  20. நவிப்பிள்ளையும் தமிழர்களும் - நிலாந்தன் 08 செப்டம்பர் 2013 விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான தமிழர்களின் கூட்டு உளவியலின் பெரும் போக்கெனப்படுவது ஒருவித கொதி நிலையிலேயே காணப்படுகின்றது. கொதிப்பான இக்கூட்டு உளவியலானது பின்வரும் மூலக் கூறுகளின் சேர்க்கையாகக் காணப்படுகின்றது. 01. பேரழிவுக்கும் பெருந்தோல்விக்கும் பின்னரான கூட்டுக் காயங்களும் கூட்டு மனவடுக்களும். 02. தோல்வியினால் ஏற்பட்ட தாங்க முடியாத அவமானமும் பழிவாங்கும் உணர்ச்சியும் 03. அப்படிப் பழிவாங்க முடியாதபோது ஏற்படும் அதாவது பிரயோகிக்கப்பட்டவியலாத கோபத்தின் பாற்பட்ட சலிப்பு, விரக்தி, சுயபச்சாதாபம், கையாலாகாத்தனம். 04. தோல்விக்குத் தங்களுடைய சுயநலமும் கோழைத்தனமும் ஒரு காரணம் என…

  21. முஸ்லிம்களின் ’இதயம்’ என்னவாகும்? ஒரு பொதுத் தேர்தல் கணிப்பு முகம்மது தம்பி மரைக்கார் நாட்டில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் இரண்டு காணப்படுகின்றன. அவை, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களாகும். கடந்த நாடாளுமன்றில், இறுதியாக அங்கம் வகித்த 20 உறுப்பினர்களில் எட்டுப் பேர், இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்தவர்களாவர். அதிலும் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தை ஐந்து உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களில் இருவர், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். இலங்கை முஸ்லிம்களின் இதயமா…

  22. கோட்டாபயவை துரத்துவதில் மூளையாக செயற்பட்ட தமிழர்

  23. பல வேறுபட்ட முகங்களுடன் செயற்பட்ட கே.பி. தனது லீலைகளைச் சிங்கள அரசுக்குச் சார்பாகத் தற்போது செய்து வருகிறார்.கனடாவில் வாழ்ந்துவந்த சுரேஷ் மாணிக்கவாசகத்தை கனேடியக் காவல்துறையினர் கைது செய்து நாடு கடத்த நடவடிக்கைகளை எடுத்தபோது ‘பெரிய மீன்’பிடிபட்டுவிட்டதாகத் தம்பட்டம் அடித்த சிங்களம், விடுதலைப் புலிகளுக்கு ஆயுத முகவராகச் செயற்பட்டவருக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு நிகழ்வுகளை நடத்துவதுடன்,சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் பாதுகாப்பு வழங்கும் நிலையில் கே.பி. இருக்கிறார் என்றால் இவர் எந்தளவு விசுவாசமாக மகிந்தவுக்கு இருக்கிறார் என்பதை ஒரு குழந்தையினாலேயே இலகுவாகவே அறிய முடியும். சுதந்திரப் பறவையாகப் பறக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் கே.பியைப் பேட்டியெடுக்க டி.பி.எஸ்.…

  24. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைப் பற்றி...தமிழ் நாட்டைநோக்கி ஓர் மடல் November 13, 2013 at 11:22pm முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைப் பற்றி அதிகம் கவலைப்படும் உண்மைத் தமிழ்த்தேசிய அன்பர்களுக்கு தமிழ் நாட்டைநோக்கி ஓர் மடல்... இந்த நினைவிடம் நன்றேதான். அது அமைக்கப்பட்டவிதமும் அதற்காக உழைத்த ஓவியர் வீர சந்தானம் போன்றவர்களும் சிற்பிகள் முருகன் குழுவினரும் பாராட்டப் படவேண்டியவர்கள்தான். அவர் தேர்ந்த கல்லும் அதன் நிறமும் “மயமதத்திலோ” “சிற்பசாத்திரத்திலோ” முன்மொழியப்பட்டதைவிட அதிகம் முரண்படாத வகையில் அமைந்தவைதான். நினைவிடத்திற்காகன இருப்பிடமும் அமைந்த திசையும் நன்றேதான். இன்றைக்கான உலகில் தவறைச் செய்துவிட்டு அதை சரியானதாக்க முயல்வதை யாரும் கருணை கொண்டு பார்ப்பதில்ல…

  25. இந்தியாவில் இருந்து அவரை நாடுகடத்தியநாள் இன்று1982,நவம்பர்,05-38,வருட்ம்அவர்தொடர்பான பதிவு இது1978 இல் அவை ஐ நா சபையில் தாம் தமிழ் ஈழத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி தமிழ் ஈழம் என்ற நாட்டை ஐ நா வில் பிரகடனம் செய்தார்.அளவெட்டியைப் பிறப்பிடமாக் கொண்ட கிர்ஷ்ணா வைகுந்தவாசன் சட்டத்தரணியாகி சம்பியாவுக்கு நீதவான் பதவி பெற்றுப் பின்னர் லண்டன் சென்று லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் இலங்கைக் கிளையின் முக்கியத்தராகப் பணியாற்றினார்.ஐ நாவில் தனியொருவராக இவர் செய்த சாதனை இன்று பேரவையாக நிற்கும் தமிழர் அமைப்புகளுக்கெல்லாம் ஒரு படிப்பினையும் சவாலுமாகும் எனலாம்.இலங்கையின் வெளிநாட்டு அமைச்சராக அன்று விளங்கிய ஏ சி எஸ் ஹமீத் அவர்கள் ஐ.நாவில் பேசுவதற்குத் தனது இருக்கையை விட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.