Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    13720
    Posts
  2. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    1836
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    10
    Points
    15791
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/28/23 in all areas

  1. * Making of the "Thuvaraka"? உண்மையாக அவரின் மகளா ? அவர்கள் சொன்னது உண்மை தானா? நீங்கள் நம்புகிறீர்களா ? இவை தான் இன்று என்னிடம் பலரும் முன்வைத்த கேள்விகள். இதுவே, இன்று தாயகத்திலும், தமிழர்கள் வாழும் நாடுகளிலும் பிரதான பேசுபொருள். தமிழர்கள் மத்தியில் சமூகவலைத்தளப் பதிவுகளையும் இன்று ஆக்கிரமித்த பேசுபொருளும் இதுவே. என்னைப் பொறுத்தவரையில், இவ்வாறான கேள்விகள் மக்களிடம் உலாவருவதே நம் சமூகத்தில் அரசியல் தெளிவின்மையின் வெளிப்பாடே. யாரும் எப்பொழுதும் நம்மை இலகுவில் இயக்கிவிடலாம் அல்லது குழப்பிவிடலாம் என்பதற்கான சான்றுகளே இவை. இன்னொருவிதத்தில் கூறுவதானால், முள்ளிவாய்க்களுக்குப் பின்னர் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு சார்ந்த விடயங்களில் நாம் மிகவும் பலவீனப்பட்ட சமூகமாக உருவெடுத்துள்ளோம் என்பது நம்மைக் குழப்பிவிட நினைப்பவர்களுக்குக் கிடைத்த பெரு வெற்றி என்றே கூறலாம். ஆனால், வேடிக்கை என்னவெனில், ஈழத்தமிழர்களின் அரசியலைக் கையாள நினைக்கும் சக்திகள், தாமும் குழம்பி, நம்மையும் குழப்புகிறார்கள் என்பதே. ஆனால், இது இன்று நேற்றல்ல, ஈழத்தைக் கையாள முற்பட்ட காலம் முதல் இவ்வாறுதான் தீர்க்கதரிசனம் அற்றவகையில் Trial and Error போன்று பரீட்சார்த்த முனைப்புகளையே முன்னெடுக்கிறது அத்தரப்பு. ஈற்றில் 2009 இல் ஒரு தலைமைத்துவத்தை, பூண்டோடு அழிப்பதன் ஊடாக அனைத்தையும் மீளச்சரிசெய்துவிடலாம் (RESET) என்று கணக்குப்போட்டது. ஆனால், 14 ஆண்டுகள் கடந்தும் அந்த சக்தி, தான் விரும்பிய இலக்கை அடையவில்லை என்பதை இன்று சிறுபிள்ளைத்தனமாக ஆடிய வாரிசு உருவாக்க விளையாட்டு அமைந்துவிட்டது. ஆனால், ஒன்றை அவர்கள் புரிந்துகொண்டார்கள், அழிக்கப்பட்ட தலைமையின் வழிவந்தவர்கள் அல்லது வாரிசுகளைத் தவிர ஈழத்தமிழர்கள் எந்தத் தலைமைகளையும் நம்பமாட்டார்கள் என்பதே. இந்நிலை, கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் போன்றது. அதன் விளைவுதான், தம்மிடம் இருந்த அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்தி, தலைவர் வருகிறார்....அவரின் மகள் வருகிறார்....என்ற நம்பிக்கையூட்டல்களை தமிழர்களிடம் விதைக்க முற்பட்டமை. இதற்காக தமது மேற்பார்வையில் இருந்த, தமிழ்த் தேசியவாதிகளைப் பேசவைத்து அவர்களின் தனிமனித நம்பகத்தன்மைகளை தனக்கான ஆயுதமாகப் பயன்படுத்தினர். எனினும், அவ்வாறான முயற்சிகள் சலசலப்புகளைக் கடந்து போதிய பெறுபேறுகளை அறுவடைசெய்யாத நிலையில், இன்று தாம் விதைத்த பொய்கள் உண்மை என்று நிரூபிக்க ஒரு 'பொய்மானை' மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளனர். உண்மையில் இது மிகப்பெரிய International Operation. தமிழ்த்தேசிய வாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட அல்லது தம்மை அவ்வாறு இனம்காட்டிக்கொண்ட பலர், குறித்த செயற்திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். தனிநபர்கள், செயற்பாட்டுத்தளத்தில் பயணிப்போர், ஊடகங்கள் என்று பல தளங்களில் உள்ளவர்களும் உள்வாங்கப்பட்டு, நம்பிக்கையூட்டல்கள் விதைக்கப்பட்டு, இறுதியில் திரையில் உரை வெளியாகியுள்ளது. ஆனால், என்ன? Very Low Budget திரைப்படம். Hollywood க்கு நிகராக திரைப்படங்களை வசூல் வேட்டைக்கு விடுகிற தேசம், தமது கதையின் நாயகிக்கு ஒப்பனை செய்வதற்குக்கூட முறையான ஒப்பனைக் கலைஞரை அமர்த்த முடியாமற்போனமை வியப்புக்குரியதே. அளவுக்கு மீறிய முகப்பூச்சு, கீறி விளையாடிய புருவ அலங்காரம், கருவளையத்தை மேவிநிற்கும் கருமை, இமைகளை மினுங்கவைக்கும் வெளிர்வர்ணம், பொருந்தாத உதட்டுச்சாயம் என்று சிறுபிள்ளைகள் Powder அலகாரம் செய்ததுபோல் தமது கதையின் நாயகியை மேடையேற்றியுள்ளனர். இங்குதான் மீளவும் மீளவும் Research & Analysis இல் பிழைவிடுகின்றனர் ஈழத்தமிழரை ஆட்டிவைக்க நினைப்பவர்கள். ஈழத்தின் போராட்ட மரபில் வந்த பெண்கள் எவ்வாறு உடை உடுத்துவார்கள்? எவ்வாறு தலைமுடியை வாருவார்கள்? எந்த அளவுக்கு அலங்காரம் செய்வார்கள்? என்பதைக்கூடப் புரிந்துகொள்ளவில்லை. குறிப்பாக தலைவிரிகோலமாக முடி அலங்காரம் செய்து தமது கதாநாயகியை அறிமுகம் செய்தமை, குறுதிப்படிந்த ஈழத்து மரபை சம்பந்தப்பட்டவர்கள் பூரணமாகப்படிக்கவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது. மேலும் தொழில்நுட்ப ரீதியாகக்கூட புலமைத்துவம் இல்லாத சொதப்பல். பின்னணித் திரை (Chroma Key) அமைப்பு மற்றும் ஒளியமைப்பிலும் கூட நேர்த்தியில்லை. தரம் குறைந்த ஒளிப்பதிவுக் Camera. ஒலிவாங்கி அற்ற செயற்கையான Podium. ஆடையிற் பொருத்தும் ஒலிவாங்கியைக் கூடக் காணவில்லை. ஒளிப்பதிவில் தேர்ச்சியற்றவர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஒரு காணொளி. ஆக, ஒன்றை மட்டும் ஊகிக்க முடிகிறது. ...அன்னை இந்திராவின் பாணியில் ஆடை உடுத்தி, தங்கை துவா_ கா... என்று ஒருவரை தமிழ் மக்களிடம் அரசியல் வாரிசாக அறிமுகம் செய்துவிடலாம் என்று எண்ணியுள்ளனர். இவ்வாறான வாரிசு அரசியல் விளையாட்டு ஈழத்தமிழருக்குப் பரீட்சயம் இல்லாத ஒன்று என்பதைக்கூடக் கணிக்கமுடியாத புலனாய்வு. தமது தேசத்தின் வாரிசு அரசியல் சமன்பாட்டை (Formula) கண்ணைமூடிக்கொண்டு ஈழத்தமிழர்களிடம் பிரயோகித்துள்ளனர். மேலும், பல கணக்குகள் இதிலே பிழைக்கின்றன. முதலில் தந்தை வருகிறார்.. மக்கள் முன் தோன்றுவார்.. என்று அறிவித்துவிட்டு, இப்போது மகள் என்று ஒருவரை அறிமுகம் செய்யும் அளவுக்குக் கதையில் மாற்றம் செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன? உங்கள் கதையின் பிரகாரம் தந்தை உள்ள நிலையில், மகள் திரையில் தோன்றக் காரணம் என்ன? நீங்கள் எதிர்பார்த்த தந்தைக்குப் பொருத்தமான கதாபாத்திரம் இன்னமும் கிடைக்கவில்லையோ? அப்படியாயின், தந்தை உள்ளார் என்று தம்மவர் மூலம் சொல்லவைத்தது பொய் என்றுதானே எடுத்துக்கொள்ளவேண்டும். கடைசியாக யாரோ ஒரு அப்பாவிப்பெண்ணை சம்பந்தம் இல்லாமல் சோடித்து, வேடிக்கை காட்டியுள்ளனர் சம்பந்தப்பட்ட தரப்பினர். இந்நிலையில், தமிழ் மக்கள்- ஏகோபித்த அளவில் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைமையை தமது சுயலாப அரசியலுக்காக அந்த தேசம் ஈழத்தில் உருவாக்க முனைகிறது. என்னவிதப்பட்டேனும், வேலுப்பிள்ளை குடும்பத்தில் இருந்து ஒருவரை முடிசூடிவிடப் படாதபாடு படுகிறது என்றால், வேலுப்பிள்ளையின் மகன் விட்டுச்சென்ற வெற்றிடம், இட்டு நிரப்பமுடியாத ஒன்று என்ற கசப்பான உண்மையை அத்தேசக் கொள்கை வகுப்பாளர்கள் உணரத்தலைபட்டுள்ளனரோ? என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், எல்லாம் காலம் கடந்த ஞானம். நிமிரவே முடியாவண்ணம் ஈழத்தமிழினத்தின் அரசியற்தளம் உங்களால் சிதைக்கப்பட்டுவிட்டது. இப்போதைக்கு ஒரு ஆளுமை மிக்க தலைமை உருவாக்கம் என்பது கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. அதுவரைக்கும், உங்களுக்கான தெரிவுகள் குறுக்குவழிகள் தான். எது எவ்வாறு இருப்பினும், சீனாவையும் சிங்களத்தையும் கையாள, வேலுப்பிள்ளையின் மகன்தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் அந்த தேசம், முடிந்தால் ஒருமுறையேனும் ஈழத்தமிழருக்குப் பரிகாரம் செய்யட்டும். ஒருவேளை, அண்டத்தில் இருந்து மண்ணுக்காக மாண்டவர்கள் உங்களை ஆசீர்வதிப்பார்கள். ஆக, அன்னை இந்திராவின் ஆடை அலங்காரத்துடன், 'Making Of துவா_கா' படுமோசம். Copied: Thanks, Uthayan S Pillai
  2. "தங்கை துவாரகா இந்தியாவின் உறுதுணையுடன் களத்தில் நிற்பாள்" -காசியானத்தன் “இந்தியாவின் உறுதுணையுடன்”’ இந்த ஒற்றை சொல்லிலேயே காசி உண்மையை கக்கிவிட்டார்.. இந்தியாவும் புலம் பெயர் தீய சக்திகளும் சேர்ந்து தமிழர்களையும் மாவீரத்தையும் களங்கப்படுத்த உதயமானதுதான் இந்த துவாராக ஒப்பிறேசன… ஆனால் அது தமிழ்நாடு ஈழம் புலம்பெயர் தேசம் என்று ஒட்டு மொத்த தமிழ் மக்களாலும் யாரும் எதிர்பாராத அளவுக்கு எதிர்ப்புடனும் கேலி கிண்டலாகவும் கடந்து செல்கிறது.. அதேவேளை மறுவளத்தில் மாவீரர்களையும் போராட்டத்தையும் மனதில் சுமக்கும் லட்சோப லட்சம் சாதாரண பொதுமக்கள் இம்முறை வழமைக்கு மாறாக தாமாக தமிழர் தேசமெங்கும் அதிகளவாக கூடி மாவீரத்தை போற்றி உள்ளனர்… இது தமிழர்களின் தணியாத வேட்கையினை உலகுக்கு பறை சாற்றுவதாக உள்ளது.. இவளவு உயிர் போயும் விடுதலை இல்லையே என சில வேடீக்கை மனிதருள்ள பூமியின் நூறு வருடங்களைக் கடந்து விடுதலை அடைந்த அடையப் போராடும் மனித குலம் பற்றிய சரிதத்தை எடுத்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது… அந்தத் தேவையின் ஆணிவேரில் தழைத்த பூஞ்செடிகளே இன்று துயிலுமில்லம் தோறும் ஏற்றப்பட்ட பல்லாயிரம் அக்னிச் சுடர்கள் என்பதை உலகறியும்.. இத்தகு தருணத்தில் எம்மைக் கொன்றொழித்த இந்திய மத்திய அரசும் அதன் ஒத்தோடிகள் செய்யும் துரோகமும் இனியும் எடுபடாது என்பதை இம் மாவீரர்தினம் உணர்த்தியுள்ளது இன்னும் உணர்த்தும்…
  3. சரி இப்ப உங்களுக்கு தலைவரும் குடும்பமும் வீரச்சாவடையவில்லை என்பதுதான் உண்மை.. அதன் மூலம்தான் மக்களுக்கான இலட்சியங்களை கொன்றொழிக்க முடியாது.. இல்லையா.. அப்படி என்றால் நீங்களும் உங்களைபோன்ற சிந்தனையில் இருப்பவர்களும் என்ன செய்திருக்கவேண்டும்..? துவாரக இருக்கிறார் ஆனால் இந்த பவுடர் டப்பா துவாரகா இல்லை என்று சொல்லி இருக்கவேண்டும்.. ஒரு பவுடர் டப்பாவை வைத்து ஒரு குழு செய்யும் பித்தலாட்டத்தை எதிர்த்து நிஜமான துவாரக வருவார் என்று எழுதி இருக்கவேண்டும்.. ஆனால் இந்த கூட்டம் துவாரகா என்ற அடையாளத்தையே காமடி ஆக்குவதை மெளனமாக கடந்து சென்றுகொண்டு துவாராக இருக்கிறார் அவர்தான் இவர் என்பது இந்த வீடியோ தயாரித்த போட்டோ சொப் குரூப்புக்கு ஆதரவு கொடுப்பதுதான..
  4. துவாரகா வருவா என நம்பியவர்கள், நம்பி அதனை வெளியே காவித்திரிந்தவர்கள் அனைவரும் கபட நோக்கில்தான் செய்தனர் என்று கூற முடியாது. பலர், உண்மை என நம்பி இருந்தனர். விடுதலைப் புலிகள் மீதும், தலைவர் மீதும் கட்டமைக்கப்பட்டு இருக்கும் அதீத நம்பிக்கை அவர்கள் ஒரு போதும் இறந்து போக மாட்டார்கள் என்று நம்பும் அளவுக்கு சிலருக்கு இருந்ததை அவதானித்துள்ளேன். அந்த அதீத நம்பிக்கை, சரி பிழைகளை சீர் தூக்கிப் பார்க்கும் அறிவை மேவி இருந்தது. ஆனால், இந்த காணோளி வந்த பின்பும், அப்பட்டமாக அது துவாரகா இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிந்த பின்னும் கூட, தம் தவறை ஒத்துக்கொள்ள மறுத்தும், சாக்கு போக்கு சொல்லி தம் நம்பிக்கையை நியாயப்படுத்தியும், நேரடியாக மன்னிப்பு கேட்காமல் சமாளிக்கின்றவர்களையும், "இல்லை அது துவாரகா தான்" என்று இன்னும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களையும் இனி ஒரு போதும் தமிழ் இனம் நம்பக் கூடாது. இப்படியானவர்களுக்கு தலைவர் பெயர் சொல்வதற்கும், புலிகளின், மக்களின் தியாயங்களைப் பற்றி கதைப்பதற்கும் கூட அருகதை அற்றவர்கள். இவர்களுக்கு தமிழ் தேசியம் பற்றி இனி வாயைத் திறப்பதற்கு கூட தார்மீக உரிமை இல்லை. இந்த போலி நாடகம், பலரை எமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. எனவே இந்த நாடகத்தை நடாத்தியவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டு, எம்மைச் சுற்றி இருந்த போலித் தமிழ் தேசிய வியாதிகளுக்கு ஒரே அடியாக நன்றி வணக்கம் சொல்வோம்.
  5. உடான்ஸ் சுவாமிகள் வலு பிசி. என்னமோ அவசரமா சொல்லிட்டு போக வந்தேன் எண்டுட்டு போட்டார். கதைக்க நேரமில்லையாம். ஆறுதலா வரட்டுமன். நாலு சிஸ்சயலை கரைசேர்க்க மும்மரமா இருக்கிறார் போலை கிடக்குது. 😁🤣
  6. RAW ஒரு மூன்றாம் தரப்பு நாட்டின் உளவுத்துறையல்ல. தொழில்நுட்பத்தை கையாளுவதில் அவர்களிற்கு பெரிய சிக்கல் இருக்கப்போவதில்லை. அப்படியிருக்கையில் இப்படி ஒரு மட்டமான அரைவேக்காட்டுத்தனமான காணொளியை ஏன் வெளியிட வேண்டும்? பார்ப்பவர்கள் இவ்வளவு இலகுவாக இது பொய் என்று கண்டுபிடிக்க கூடிய ஒரு காணொளியை வெளியிடவேண்டிய தேவை என்னவென்று புரியவில்லை. ஒன்றில் அவர்கள் தெரிந்தே இந்த தவறை செய்திருக்கவேண்டும். அல்லது இந்திய உளவுத்துறை அப்படி தரம்குறைந்து போயிருக்கவேண்டும் (இதை நான் பெரிதும் நம்பவில்லை). 2009இல் இருந்து தமிழர் பிரச்சனையில் "யாரோ" ஒரு மீட்பர் வருவார் அதுவரை காத்திருங்கள் என்று ஆசைகாட்டியே தமிழர்களின் போராட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ அமைப்பு தாங்கள் தான் என்று சொல்பவர்கள் கூட தலைவர் வருவார் என்ற ஒரு மாயைக்குள் தான் தமிழர்களை வைத்திருக்கிறார்கள். அந்த மாயைக்குள்ளயே தமிழர்கள் இருக்கும் வரை அடுத்த கட்டத்திற்கு நகரமுடியாது. பெரும்பாலானவர்கள் இனி தலைவர் வருவார் என்பதை 14 ஆண்டுகள் சென்றபின்னர் நம்புவதாக இல்லை. ஆனாலும் தலைவர் வருவார் என்று நம்புகிற ஒரு சிறிய கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அது புலம்பெயர்ந்த முதலாம் தலைமுறை பெரியவர்கள் தான். இந்த காணொளி அவர்களை மறுபடியும் அந்த மாயைக்குள்ள வைத்திருப்பதற்காக இருக்கலாம். ப்ரொஜெக்ட் தலைவர் குடும்பம் என்று ஒன்றை தொடங்கி அடுத்த 10 ஆண்டுகள் காலத்தை ஒட்டட்டும் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை.
  7. யாழில் சிலரை பார்க்க பரிதாபமாக உள்ளது. இதை விட சொல்ல ஏதும் இல்லை. ஒரு விடயத்தை திறந்த மனதோடு அணுகலாம், ஆனால் மலை போல் ஆதாரம் இருந்த பின்னும், கற்பனையில் உழல்கிறார்கள். @பாலபத்ர ஓணாண்டி நேற்று காசி ஆனந்தன் முதல் சேரமான் வரை ஒரு லிஸ்டை திண்ணையில் வெளியிட்டு இருந்தார். இந்த லிஸ்டில் உள்ளோர் மீது மிக அவதானமாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் யாழில் ஆரம்பம் முதலே தெளிவை உருவாக்கி, நான் உட்பட பலரை உரை வர முன்னமே சரியான பாதையில் வழி நடத்திய, @வைரவன், @MEERA @நன்னிச் சோழன். @நந்தன் ஆகியோருக்கு நன்றி🙏.
  8. படம் சொல்லும் கதை......! 😂
  9. துவாரகா திரைப்படத்துக்கு blue சட்டை மாறனின் review வந்துவிட்டதா?! 😂
  10. பின்னை எங்களை மாதிரி 3 வேலை செய்யும் அகதிகள் மேற்குக்கு கிடைப்பார்களா?
  11. முழுமையாக கேளுங்கள், பலருக்கும் பகிருங்கள்.
  12. துவாரகா வின் பேச்சு என்ற கபட நாடக உரையை வெளியிட்டவர்கள் ஆகக் குறைந்தது செய்யும் களவிலாவது கொஞ்சம் மினக்கெட்டு இருக்கலாம். 'அவர்களின்' வளத்தையும் காசையும் கொள்ளை அடித்த இந்தக் கூட்டம், Deep fake போன்ற நவீன தொழில் நுட்ப விடயங்களுக்காகவது கொஞ்சம் காசை செலவழித்து இதனை வெளியிட்டு இருக்கலாம். இனை கூட பயன்படுத்தவில்லை இந்த மூடர்கள். இனி இதைச் சொல்லி உண்டியல் குலுக்கிக் கொண்டு இவர்கள் உங்கள் வீட்டிற்கு வரும் போது, கக்கூஸ் கழுவ பயன்படுத்தும் துடைப்பத்தை எடுக்க மறந்து விடாதீர்கள்
  13. குறிப்பாலை இந்தியன் பொருள் உணர்த்த முற்பட்டிருக்கிறான், எங்கட கோடாரிக்காம்புகளுடன் சேர்ந்து/ வைத்து. எலேய், படம் ஒரு விளக்கத்திற்குத் தாம்லே. 😄
  14. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ச‌கோ...........அண்ண‌ன் சீமான் இந்த‌ விடைய‌த்தில் மூக்கை நுழைத்து இருந்தால் அவ‌ர் ம‌ன்னிப்பு கேக்க்க‌ வைச்சு இருப்போம் அவ‌ர் இதுவ‌ரை துவார‌கா ப‌ற்றி வாய் திற‌க்க‌ல‌........துவார‌கா பெய‌ரில் இய‌ங்கும் இந்த‌ போலி பெண் அண்ண‌ன் சீமானுட‌னும் க‌தைச்ச‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருது பாப்போம் அவ‌ரின் முடிவு............க‌ட்சி பெடிய‌ங்ளே இதை போலி என்று அவ‌ர்க‌ளின் யூடுப்பில் ப‌ர‌ப்ப‌ தொட‌ங்கிட்டின‌ம் ஆன‌ ப‌டியால் உண்மைய‌ அறிந்த‌ பின்பு தான் அண்ண‌ன் சீமான் அறிக்கை விடுவார்.............. I know she is Rajiv Gandhi s mother.......Indira Gandhi Ammaiyar much better in Rajiv Gandthi.........Rajiv Gandthi very Stupid😏.............
  15. நீங்கள் எதிர்த்ததை மறுக்கவில்லை. ஆனால் நான் தெளிவடைய உங்கள் கருத்து உதவவில்லை. ஏன் என்றால் - இதில் மாற்று நிலைப்பாட்டை சீமான் எடுத்திருந்தால்…தோன்றிய போலி-க்கா, தான் துவாரகா என நீங்கள் வாதாடி இருப்பீர்கள் என்பது என் அபிப்பிராயம். ரஜீவின் தாயின் வடிவில், தலைவரின் மகள்….. Can you see what they are trying to do subliminally? Dear RAW, We know you.
  16. அவ‌ரின் வ‌ய‌து என‌க்கு சரியா தெரியாது அவ‌ரிட‌ம் ப‌ல‌ திற‌மைக‌ள் இருக்கு.........அவ‌ரும் நானும் முத‌ல் முறை போனில் க‌தைச்ச‌து 2004அத‌ற்கு பிற‌க்கு க‌தைக்க‌ வில்லை MSNனில் தொட‌ர்வில் இருந்த‌வ‌ர் இருந்துட்டு எப்ப‌வாவ‌து எழுதுவோம் 2009க்கு பிற‌க்கு நான் MSN பாவிக்க‌ வில்லை .........அன்மையில் அவ‌ரின் முக‌ நூலை பார்க்க‌ தான் தெரிஞ்ச‌து என்ர‌ அக்காட‌ ம‌க‌ளுக்கும் ப‌டிப்பித்து இருக்கிறார் என்று...........அவ‌ர் த‌ன்னை பெரிய‌ ஆள் போல் காட்டி கொள்வ‌து கிடையாது..........
  17. அவசரத்தில கவனிக்க மறந்திட்டம். அடுத்த முறை மஞ்சள் சிவப்பு சாரியில அக்காவை செட்பண்ணுறம்!❤️
  18. களவுறவு எங்கண்ட சாந்தி அக்காவும் களத்திலை.... இதில என்ன விசயம் என்றால், இந்த விசயம் தமிழ்நாட்டினையும் குழப்பி விட்டுள்ளது. ஏர்போர்ட் மூர்த்தி ஒரு அரசியல் வாதியாக கருத்து சொல்கிறார் எண்டால், அட நம்ம நம்ம பயில்வான் ரங்கநாதனும் இறங்கி கருத்து சொல்கிறார்.
  19. ஆடி அடங்கும் வாழ்க்கையடா........! 😢
  20. எங்களுக்கு விண்ணாணம் கதைப்பது இருக்கட்டும்........திண்ணையில் உங்கள் நண்பன் வந்திருக்கிறார் போய் குசலம் விசாரியுங்கள்......! 😂
  21. அய்யோ, அய்யோ!! நீங்கள் சொல்லுற இடங்களுக்கு இழுத்து வர முன்னமே வெக்கைல உருகி, ஆவியா போயிடும். அதிலும் பார்க்க, ஆப்பிரிக்கா, அரேபியாவை இழுத்துக் கொண்டு போய் பக்கத்தில விடலாம்!!
  22. YouTube நிர்வாகம்...அவனே ஒத்துக்கிட்டான்...போலி என்கிறவிடயத்துக்கு நாம் ஏன் குத்தி முறிவான்...வாருங்கள் நம்மினமே ...ஒற்றுமையாய் எமது விடுதலைப் பயணத்தை தொடர்வோம்...எல்லா நாட்டிலுமே மாவீரர்நாள் நிறைவுக்கு வருகிறது....நாம் என்னவென்றால் பொய்யான ஒன்றுக்கு விவாதம் செய்கின்றோம்....வாருங்கள் ஓன்றாய் பயணிப்போம்..
  23. நிச்சமாக.. அவர்கள் உயிரோடு இருந்தாலோ இல்லையோ.. மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு வரமாட்டார்கள். ஊக்குவிக்கவும் மாட்டார்கள். அதற்கான பூகோள ஏதுநிலைகளும் இல்லை. அரசியலில் குதிக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில்.. தலைவர் போராட்ட களத்தில் இருந்த போதே தேடி வந்த பதவிகளை உதறித்தள்ளிவிட்டு கொண்ட இலட்சியத்துகாக போராடிக் கொண்டிருந்தவர். தலைவர் இருக்கிறாரோ இல்லையோ.. அவர் சுமந்த இலட்சியம் வாழ்ந்து கொண்டு தான் இருக்குது. அது.. தலைவரின் அயலவரான..தாயகத்தில் வாழும்.. மாவீரர் ஒருவரின் அம்மாவின் கருத்தில் கூட தொனித்தது.
  24. யாழ் களம் மே மாதத்தில் 17 , 18 திகதிகள் வரும் வாரத்தில் தான் தலைவருக்கு படத்துடன் கூடிய அஞ்சலியை செலுத்துவது. இந்த வருடமும் அதனையே செய்தோம். நன்றி.
  25. தனிமனித மரணங்கள்.. ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் என்றால்.. பல தேசிய இனங்கள் இன்று விடுதலை அடைந்திருக்க முடியாது. இதே துவாரகாவும் சாள்ஸ் அன்ரனியும்.. 1987 இல் யாழில் ஹிந்திய சுற்றிவளைப்புக்குள் வந்த போதே.. இறக்க வேண்டியவர்கள். அதே தான் தலைவருக்கும். தலைவர் சாகடிக்கவும் பட்டார். நீங்கள் அப்போது இருந்திருந்தால்.. அப்பவே தலைவரை சாகடித்தவர்கள் அணியில் இருந்து கொண்டிருப்பீர்கள். எங்களைப் பொறுத்தவரை.. தேசிய தலைவர் கொல்லப்பட முடியாதவர். அவர் கொள்கைகள்.. இலட்சியங்கள்.. எப்போதும்.. வழிகாட்டியாக இருக்கும். நேற்றுக் கூட ஒரு சிங்களவர் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வில்.. தலைவரின் கொள்கைகள் தனக்குப் பிடிக்கும் என்று சொல்கிறார்.. ரோகண விஜயவீர தமக்குப்போராடியது போல என்று ஒப்பிடுகிறார். ஆனால்.. நாம்.. தலைவரின் பெளதீக இருப்பை எதிர்பார்த்து அவரின் இலட்சியங்களை குழிதோண்டிப் புதைக்க முனையும் கூட்டங்களின் எதிரிகளின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறோம். இது தான் தலைவரை சாகடிப்பதற்கு நிகர். இது பழைய பல்லவி அல்ல. கடந்து வந்த வரலாறு. இப்பவும் சீமான் அண்ணாவை முன்னால் தள்ளி விட்டிட்டு தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். துவாரகா நகலா.. நிஜமா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள். இது.. தமிழீழத்துக்கு எந்த வகையில்.. உதவும்.. என்று சொன்னால் உங்கள்.. புதிய.. புரட்சிகர வழியை நல்வழி என்று இனங்காட்ட உதவியாக இருக்கும்.
  26. துவாரகா என்பவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையாஎனும் விவாதம் எமக்கு எள்ளளவும் பயன் தரப்போவதில்லை. தற்போதைய சூழலில், துவாரகா என்கிற ஒருவரை இலங்கைத் தமிழர்களுக்கு முன்னே கொண்டு சென்று அவரை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது? இப்படி ஒருவரை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது? இப்படி ஒருவரை முன்னிலைப்படுத்துவதன் ஊடாக அவர்கள் அடைய நினைப்பது என்ன? இப்படி ஒருவரை முன்னிலைப்படுத்தி, அவரை ஈழத் தமிழர் ஏற்றுக்கொண்டால், அதனால் யாருக்கு இலாபம்? யாருக்கு நட்டம்? ஈழத் தமிழருக்கு இதனால் நன்மையா தீமையா? இவை தொடர்பான ஆய்வுகள்தான் தற்போதைய தேவை.
  27. நன்னிச் சோழன் உங்கள் கருத்துக்களில் இப்போதெல்லாம் ஒருவித வன்ம, காழ்ப்பு பாணி இருப்பதை போல தெரிகிறது. நீங்கள் எதோ ஒரு ஆர்வத்தில் அப்படி பதிவிட்டாலும், உங்கள் தாயகம், தேச விடுதலை நோக்கிய செயல்பாடுகளுக்கு சற்றே நெருடலாக இருக்கிறதை போல நான் உணர்கிறேன். தவறாக எதுவும் சொல்லி இருந்தால் மன்னிக்க.
  28. நான் உரையை கேட்டேன். முன்னைய மாவீரர் தின உரைகளில் இருந்து பலவற்றை உருவித் தொகுக்கப்பட்டுள்ளது. புதிய செய்தி என்னவென்றால் புலம்பெயர் தமிழர்கள் வறுமையில் வாடும் மக்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் உதவவேண்டும் என்பதுதான். தேசியத்தலைவரின் மகள் என்று சொல்லும் ஒருவர் போராளிகளாக தமது உயிரையும் கொடுக்க துணிந்தவர்களை முன்னாள் போராளிகள் என்று ஏன் விளிக்கின்றார்? ஒரு அமைப்பை தலைமைதாங்க வருபவர் உறுப்பினர்களை முன்னாள் போராளிகள் என்றால் இந்த அமைப்பின் தற்போதைய உறுப்பினர்கள் யார்? மேலும், துவாரகாவாகத் தோன்றியவருக்கு தமிழ் உச்சரிப்பை சரியாகச் சொல்லிக்கொடுக்கவில்லை. லகரம் மோசமாக இருக்கின்றது. இறுதியாக அவர் சொன்னது சரிதான்! ”புளிகளின் தாகம் தமிளீளத் தாயகம்”
  29. விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ? வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ? மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே! அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும் அன்னக்காவடிகளே! விலை எங்கு போனீர்? வலை பின்னி வாரீர் வார்த்தைகள் பொய்க்கின்றீர் நிசம் இது இல்லை விழிகளே கூறும் மெய்நிலை உணர்கின்றேன். தமிழச்சாதி இவ்வளவு தூரத்திற்கு மலினப்பட்டுவிட்டதா?
  30. இதில் ஒரு நல்ல விடயம், ஏமாற்றுக் கும்பல் பொல்லைக் கொடுத்து அடி வாங்கியுள்ளது. சமூக வலைத் தளங்களிலும் வறுத்தெடுக்கிறார்கள். உண்மையென நம்பி இவர்கள் வலையில் சிக்கிய அப்பாவிகள் பாவம்.
  31. இந்த துவாரகா பார்ட்டி கொஞ்சம் ஓவராக ஆட்டம் போடுகிறார்கள் என்பதை தவிர தமிழர்களின் அரசியலை கொண்டு செல்கிறோம் என்று கூறி தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் தேசிய அரசியல் என்று (ஏமாற்றும்) செயற்படும் ஒட்டு மொத்தமான எல்லா அமைப்புகளுக்குமே சாத்தியமான அரசியல் தீர்வை நோக்கி நகரும் எந்த அக்கறையும் இல்லை. ஆகவே, இந்த துவாரகா குறூப்புக்கும் மற்றய தேசிய அமைப்புகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதே நிஜம். தாயகத்தில் தமிழ் மக்களின் இருப்பு காப்பாற்றப்பட வேண்டுமானால் தற்போதைய நிலையில் சாத்தியமான, விரைவான, அரசியல் தீர்வை நோக்கிய நகர்வு மிக அவசியம். அதைச் செய்ய ஒருங்கிணைந்த புரிந்துணர்வுடன் கூடிய செயற்பாடு அவசியம் என்ற அரசியல் பாலபாடத்தை கூட புரிந்து கொள்ளாது தமக்குள் குறுகிய அரசியல் செய்யும் தாயக/ புலம் பெயர் தேசிய அமைப்புகளுக்களுக்குள் கொஞ்சம் விசர் கூடிய அமைப்பே இந்த துவாரகா பார்ட்டி.
  32. இக்காணொளியில் விடுதலைப்புலிகள் பாவிக்காத ஒரு சொல்லை பலதடவை பாவிச்சிருக்கிறார் அதாவது ஒரே சொல்லை அதுவும் விடுதலைப்புலிகள் தங்கள் உரையில் பாவிக்காத சொல்லைப் பலதடவைகள் பாவித்ததால் துவாரகா என்று சொல்லி உரை நிகழ்த்தும் இவரைப் போட்டியிலிருந்து விலக்குகிறோம். அந்தசொல் என்னவெனில் நாம் என்று தேசியத்தலைவர் பாவிக்கும் சொல்லை நான் எனப் பல இடங்களில் இவர் பாவிக்கிறார் அதாவது தேசியத்தலைவர் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் வெளியிடும் கொள்கை விளக்க உரையை எப்போதும் நான் தெரிவித்துகொள்கிறேன் எனச்சொல்வதில்லை அதாவது "நாம் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றே உரைப்பது வழக்கம். ஆனால் மிகவும் அருவருக்கத்தக்கதும் புலிகளது ஈகத்தை மலினப்படுத்துவதும் தலைவரது குடும்பத்தை இழிவுபடுத்துவதும் தவறு எனச்சொல்லிக்கொண்டு போரில் மரணித்துவிட்ட ஒரு உயிரை கண்டவர்கள் எல்லாம் நக்கல் நையாண்டி செய்ய திட்டமிட்டே நாடகமாடிவிட்டது "தமிழர் விரோததேசமாகிய இந்தியா" இந்தியா நாசமாகிப்போகும் காலம் மிகவிரைவில் வரும். கொசுறாக இந்தியாவின் வேண்டுதலின் பிரகாரம் விடுதலைப்புலிகளது படங்கள் மற்றும் காணொளிகள் அனைத்தையும் தடை செய்து அதனை வெளியிட்டவர்களது கணக்குகளைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடைசெய்யும் முறைமையை இப்போது முகப்புத்தகம் தவிர்த்திருக்கிறது. இதன்மூலம் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்னுமாப்போல் இந்தியா தனது கபடமுகத்தைத் தோலுரித்துக்காட்டி மிகவும் அசிங்கமாகச் சிரிக்கிறது.
  33. குஷ்பு பாஜக. நாம் தமிழர் கட்சி இல்லை. உறவே சேரி தவறான சொல் இல்லை. துடியர், பாணர், பறையர், கடம்பர் நால் வகை தமிழ் குடியில், பறையர் குடிப் பெருமக்கள் வாழ்ந்த இடத்தைத்தான் சேரி என அழைப்பார்கள்.
  34. இந்த வேலையை செய்த ஆளை... ஒருக்கால் பார்க்க வேணும் போலை இருக்கு. 😂 🤣
  35. அட .....இதை இழுத்துச்சென்று அரேபியாவுக்கு அருகில் விட்டால் சில வருடங்களுக்கு குடிநீர் பஞ்சம் தீர்ந்துடும்.......! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.