Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87990
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    31968
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46783
    Posts
  4. putthan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    14676
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/16/24 in all areas

  1. எதிர்பார்க்கப்பட்ட ஒரே ஒரு தகுதி, சும்முக்கு யால்ரா போடத்தெரிதல் வேண்டும். அது தெரிந்தால் போதுமானது. வேறு விடயங்களைக் கிளறக்கூடாது. அது பிறகு சும்முக்கு பிடிக்காமல் ஐரீ அணியால் சைபர் தாக்குதல் செய்தால் பிறகு எப்படி எழுதுவீர்கள்?
  2. கிளிநொச்சி பரந்தன் மற்றும் பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் அதன் பயனாளிகளிடம் இன்று (16) காலை கையளிக்கப்பட்டன. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் சிவபுரம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த 05 பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு, அதன் உரிமையாளரிடம் இன்று காலை 9 மணிக்கு கையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராமத்தில் இராணுவத்தில் பணியாற்றும் கணவன் - மனைவி மற்றும் அவர்களுடன் சேர்ந்து வாழும் மாற்றுத்திறனாளியான தாய், தந்தையரை உள்ளடக்கிய குடும்பத்துக்கான வீடொன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது இராணுவ உயரதிகாரிகள், இராணுவ பதவி நிலை உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், வீடுகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள், பொதுமக்கள் என பலர் இணைந்திருந்தனர். https://www.virakesari.lk/article/196440
  3. எல்லாவற்றிற்கும் எமது தமிழ் சுயநல அரசியல்வாதிகள் விட்ட தவறுகளே ஒழிய வேறொன்றுமில்லை. கிந்தியனை எதிர்க்கும் பலம் கூட அவர்களிடம் இருந்தது.
  4. சின்ராசு..... நம்ம தமிழ் தேசிய அரசியல் இம்புட்டு நாறு நாறும்னு நான் கனவுல கூட நெனைக்கல்ல 😢
  5. தாயகத்திலிருக்கும் சில உறவினர்களான இளையோருடன் தொடர்பிருக்கிறது. ஒருவர், தற்போது தேர்வுப் புள்ளிகள் வெளிவந்த பின்னர் பல்கலை அனுமதி கிடைக்காது எனத் தெரிந்த பின்னர் அடுத்த வாழ்வாதார முயற்சிகளில் கவலைகளுக்கு மத்தியிலும் ஈடுபட்டிருக்கிறார். இரவு 11 மணி வரை வேலை செய்து பெறும் ஊதியத்தை, அடுத்த வேலைக்கு நேர்முகம், பரீட்சை என்று செல்லப் பயன்படுத்துகிறார். இன்னொருவர், சில வருடங்களாக வங்கியில் வேலை. பொருளாதாரச் சரிவின் போது செலவுகள் சமாளிக்க இயலாத நிலையில், ரியூசனும் கொடுத்து உழைத்து பெற்றோரின் மருத்துவச் செலவு, படிப்புக் கடன் என்பவற்றை அடைத்து வருகிறார். இதனால் திருமணப் பேச்சையும் 2 வருடம் தள்ளிப் போட்டு விட்டு உழைக்கிறார். ஓரளவு படித்த, இளவயதினருக்கே இவ்வளவு சுமைகள் இலங்கையில் இருக்கும் போது , ஏனைய தற்காலிக தொழில்கள் செய்யும் குடும்ப காரர்களின் நிலையை ஊகிக்க முடிகிறது. இவர்களிடம் போய் "தமிழ் தேசியத்திற்காக கொஞ்சம் பொறுத்துக் கொள், அதற்கேற்ப வாக்குப் போடு" என்று யாரும் கேட்க முடியுமென நினைக்கவில்லை. பொருளாதாரம், அடிப்படை வசதிகள் இவை இந்த தேர்தலில் முக்கியமான காரணிகள். இவற்றை தமிழ் அரசியல் தலைமைகள் கவனிக்காமல் இருந்தது பாரிய தவறு, விளைவுகள் இருக்கும்.
  6. பிள்ளைகள் பெண்ணாய் பிறந்து விட்டதே தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும் நிலம் வாங்கி சேர்க்க வேண்டும் செலவை குறைத்து சேமித்த பணத்தை வங்கியில் சேர்கனும் என்று ஏங்கித் தவிக்காதீர்கள் தூக்கம் மறந்து துவழாதீர்கள் துக்கம் கொள்ளாதீர்கள் நீங்கள் ஆற்ற வேண்டியது ஒன்றே ஒன்று தான் பெண் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுங்கள் எதையும் எதிர்த்து ஏறி மிதித்து வாவென்று தன்னம்பிக்கையை கொடுங்கள் விரும்பிய படிப்பை படிக்க வையுங்கள் இசை பயில நடனம் பயில தற்காப்பு கலைகள் பழக ஆர்வமாயிருந்தால் அதற்கான வழிகளை செய்து கொடுங்கள் இன்னொரு வீடு இல்லத்தரசியாய் வாழப் போறவள் என்று சமையல் பழக்குவதை விடவும் சட்டி பானை கழுவப் பழக்குவதை விடவும் தையல் பழக்குவதை விடவும் பிரச்சனைகளின் போது எப்படி மீள வேண்டும் பிரிவுகளின் போது தனித்து எப்படி வாழ வேண்டுமென்று தையிரியத்தை சொல்லிக் கொடுங்கள் அதட்ட வேண்டிய நேரம் அதட்டி வளருங்கள் தட்டிக் கொடுக்க வேண்டிய நேரம் தட்டிக் கொடுங்கள் பெண்ணுக்கு அறிவை விடவும் தங்கமோ நிலமோ பெரியதில்லை படிப்பிருந்தால் தங்கமும் நிலமும் பணமும் தானாய் வந்து கதவு தட்டும் உங்கள் வளர்ச்சியைக் கண்டு உலகம் கைகள் தட்டும் சிறப்புடன் வாழ சிரிப்புடன் வாழ வைப்போம் படித்ததில் பிடித்தது .
  7. நிச்சயம் தேசிய அரசாங்கம்தான் வரும் ...யாழ்ப்பாணச்சனம் ஏ.கே.டி யை தலையில் தூக்கீ கொண்டாடுவதை பார்த்தால் ..தெற் கு தழும்பிவிடும்....இதில் முசுலிமுகள்...தங்கள் வாக்கு வங்கியின் ஆதாரவால் பெரும் எண்ணிக்கையில் எம்பியாவர்...பலன் அவர்கள்தான் கூடிய அமைச்சுப் பதவியைப் பெறுவர்....நம்ம சனம் கனடாவுக்கு...விசிட்டர் விசா பெறுவதை மார் தட்டிச் சொல்லிக்கொண்டு திரியவேண்டியதுதான்..
  8. நான் வசிப்பது, ஆப்கானிஸ்தான். 😂 நீங்கள் சொன்ன விஷயங்கள் எல்லாம் எனக்கு புதுசாய் இருக்குது. 🤣
  9. அதைதான் பலரும் யோசிப்பார்கள், ஒரு சில கிலோமீற்றர் நீளமான வல்லைவெளி வாகனங்களின் எண்ணிக்கை குறைவான காலங்களிலேயே விபத்துக்கும் உயிர்பலிகளுக்கும் பெயர் போனது, இப்போ வீட்டுக்கு மூன்று இரு சக்கர மற்றும் வாகனங்கள் உள்ள காலத்தில் விபத்துக்கான சாத்தியங்கள் சொல்லவே தேவையில்லை.. அந்த இடத்தில் கொளுத்தும் வெயிலில் நின்றுகொண்டு 40 வருடங்களுக்கு முற்பட்ட சமிஞ்சைகளை கையாள்வது அந்த ஊழியர்களின் உடலுக்கும் உயிருக்கும் ஆப்பு வைக்கும் செயல், அவர்களை சில முரட்டு ஆசாமிகள் மதிக்கவும் போவதில்லை, குறுந்தூர இடைவெளியில் வேக தடுப்புகளூம் அங்கங்கே போக்குவரத்து பொலிசாரை நிறுத்தி பெரும்தொகை அபராதமும், சாரதி அனுமதி பத்திரம் பறிமுதலும் செய்தால் அரசுக்கும் வருமானம் ஆகும், அங்கவீனம் மற்றும் உயிர்பலிகளும் குறையும்.
  10. சும் திருடன் என்று சும் இன் அல்லக்கைகளே ஏற்றுக் கொண்டாச்சு…🤣🤣
  11. வட கிழக்கில் வெல்பவர் யாராக இருந்தாலும் ஆளும. அரசுடன் நல்லுறவை வளர்த்து அதன் மூலம் வட கிழக்கு தமிழ் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். அதற்கு தான் மக்கள் அவர்களை தெரிவு செய்கிறார்கள். அரசுடன் இணைந்து அமைச்சர் பதவிகளை எடுக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஆனால் அநுரவுடன் ஒத்துளைத்து மக்களுக்கு நன்மை யார் செய்தாலும் அது வரவேற்கப்பட வேண்டியதே. மக்களும் அவ்வாறானவர்களை தான் தெரிவு செய்ய வேண்டும்.
  12. உங்கள் அபிமானியின் சுயநலத்திற்காக இன்னும் வேறு எதை பயன்படுத்துவீர்கள்? தமிழ் இனத்தில் எத்தனை வீதம் கிறிஸ்தவர்கள்? அவர்கள் வாக்கில் மட்டுமா அவர் பாராளுமன்றம் போகிறார்? தமிழரசை கைப்பற்றியதுபோல் கிறிஸ்தவத்தையும் அவரின் பதவிக்காக கைப்பற்றும் நோக்கமா? ஏன் சார்ள்ஸ் நிர்மலநாதன் கிறிஸ்தவரில்லையா? செல்வம் அடைக்கலநாதன் கிறிஸ்தவரில்லையா? அப்படியிருக்க, சுமந்திரனை மட்டும் ஏன் கிறிஸ்தவர் என்பதற்காக வெறுக்கிறார்கள் என்கிற புரளியை கிளப்புகிறீர்கள்? அவர் என்ன கிறிஸ்தவராகவா வாழுகிறார்? கிறிஸ்து சொன்னார், "தலைவனாக இருக்க விரும்புபவன் மற்றவருக்கு சேவை செய்யட்டும், முதலிடத்தில் இருக்கைகளை விரும்பாதிருக்கட்டும், கேட்க்கிறவன் எவனுக்கும் மறுக்கக்கூடாது, தன் மந்தைகளுக்காக உயிரை கூட கொடுக்க துணிந்தவனே உண்மையான தலைவன், பின்கதவால் நுழைபவன் உண்மையான ஆயன் அல்ல, அவன் மந்தைகளை கொள்ளையிடும் ஓநாய். தமிழ் தேசியத்தை இன்று வரை உயிரோடு வைத்திருப்பவர்கள் மக்கள். அதற்காக தங்கள் உறைவுகளின் உயிர்கள், உடைமைகள், சொத்துக்களை இழந்து நடு வீதியில் நிற்கிறார்கள். அவர்கள் வாக்கிற்தான் தமிழரசு என்று நீங்கள் பிதற்றித்திரிகிறீர்கள். இழப்பு மக்களுக்கு, அதன் பலன், எதையும் அந்த தேசியத்திற்காக இழக்க விரும்பாமல் ஓடி ஒளித்தவர்களும், அதை சிதைத்தவர்களுமே. ஒரு தலைவரின் பதவியை அடாத்தாக நிஞாயமற்ற வகையில் கைப்பற்றி, கட்சியின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்காமல், மற்றவர்களுடன் கலந்தாலோசியாமல் தானே முடிவுகளை எடுத்து, ஆட்களை நியமிப்பது நிஞாயமானதா? இது கட்சியல்ல, சர்வாதிகாரம்! தயவு செய்து கிறிஸ்தவத்தை இதில் இழுத்து உங்கள் அழுக்குகளை மறைக்கப்பார்க்காதீர்கள். நீங்கள் எதை கைப்பற்றி வாக்கு தேட நினைத்தாலும் அது உங்கள் அபிமானியாக இருக்கலாம் அல்லது நலன் விரும்பியாக இருக்கலாம், உங்கள் குண இயல்புகளும் அப்படியானதாக இருக்கலாம். பொய் புரட்டுகளை எழுந்த மானத்திற்கு அவிட்டு விடாதீர்கள். அவர் தனது பெயரை தெளிவாக எழுதுகிறார், அதை மக்கள் அழைக்கின்றனர். பெயர் இடுவது அழைப்பதற்கே. மற்றவர்களை பெயரிட்டு அழைக்கும்போது யாரும் அதில் காரணம் தேடுவதில்லை. சில சமயம் முழுப்பெயரை அழையா விட்டால்; அதற்கு வேறு காரணம் சொல்வார்கள். பிழையை சீர்செய்வதற்கு காரணங்கள் தேவையில்லை. தமிழ் அரசியல் வாதிகளை மட்டுமல்ல எல்லோரையும் முழுப்பெயர் கொண்டு அழைப்பதுதான் முறை!
  13. பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024] [அன்பும் மகிழ்வும் நிறைந்த ஒரு அற்புதமான இன்ப ஆண்டாக மலர நிலனுக்கு அகவை நாள் வாழ்த்துக்கள்! ] "நான்காவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன் நான் யாரென்று உணரும் நாளிது! நட்சத்திரம் ஒளிர்ந்து உன்னை வரவேற்க நம்பிக்கை கொண்டு வளர்வாய் என்றும்!" "இங்கிலாந்து மண்ணில் மகிழ்ச்சியாய் உதித்தவனே இதயம் மகிழ பாலர்பாடசாலை போறவனே இனிய சிரிப்பும் தளிர்நடையும் கொண்டவனே இடையூறுகளைத் தாண்டி உலகை வெல்வாயே!" "நாலாவது ஆண்டு தொடங்கும் இன்று இதயத்தை தொட்டு மகிழ்ச்சி நடனமாடுமே! ஆசீர்வாதங்கள் காற்றில் குளிர்ந்து பொழிந்து ஒவ்வொரு விடியலையும் உனக்கு வழிநடத்துமே!" "அச்சம் தவிர்த்து துணிந்து நின்று அழகு வார்த்தைகள் நாவில் தவழ அன்பு ஒன்றால் உலகை ஆள அறிவு பெற்று உயர்ந்து எழுகவே!" "ஆராய்ந்து உண்மை கண்டு விளங்கி ஆக்கமான செயலில் ஈடு பட்டு ஆலமரம் போல் நிழல் கொடுத்து ஆனந்தமாக வாழ தாத்தாவின் ஆசிகள்!" "இளமைக் கல்வி மனதில் நிற்கும் இனிதாய் உணர்ந்தால் அறிவு சிறக்கும் இணக்கம் கொண்ட கொள்கை எடுத்து இதயம் சேர வாழ வேண்டும்!" "பதினொன்று அக்டோபர் பிறந்த அழகனே பகலோன் போல உலகில் ஒளிர்ந்து பகைவர்கள் அற்று கவலைகள் அற்று பல்லாண்டு நிலன் வாழ வாழ்த்துகிறேன்!" தாத்தா [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
  14. தாங்கள் புலம்பெயர்ஸ் RSS ஆ? சொல்லவேயில்ல,....🤣 இதே விடயத்தைப் பலதடவை என்னால் கூறப்பட்டபோது எனக்கு சூட்டப்பட்ட பட்டம் துரோகி, சிங்களக் கைக்கூலி. 😁 அல்வாயனுக்கு யதார்தம் பிடிபடத் தொடங்கியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.
  15. நாங்கள் கோமிய ,RSS கோஸ்டிகள் எங்களிடமிருந்து வேற😅 என்னத்தை எதிர்பார்க்கின்றீர்கள்😅 அப்படியென்றால் அணுரா அரசு நீண்ட காலம் தாக்கு பிடிக்காது என்று சொல்லுறீயல்...
  16. எம்மவர் தவறுகள் திருத்தப்பட வேண்டுமே தவிர கொள்ளிக்கட்டையில் போய் தலையை வைக்க முடியாது அல்லவா? வரலாறும் உண்மையும் கசக்கத்தான் செய்யும். சுடத் தான் செய்யும்..
  17. 2009க்கு பின்னர் உங்கள் அரசியல்வாழ்க்கையில் பாலாறும் தேனாறும் தானே ஓடுகின்றது. அனுர வந்த பின் தயக்கங்களும் அச்சம்களும் ஏன்? அந்தக்கால வெளியேற்றங்கள் நியாயமனதுதான் என்பதை நீங்களே மறைமுகமாக நியாயப்படுத்தும் காலம் நின்றறுக்கும்...
  18. ஏ.கே.டி ...காற்று பலமாக வீசும்ப்போது ... இந்த படமெல்லாம் எடுபடாது விசுகர்...யூ ரியூப் காரர் எல்லாம் படமாய் கொட்டுகினம் ...போதாக்குறைக்கு கனடாவில் இருந்த்தும்போய் நடிக்கினம்...மொத்தமாய் எல்லோரும் முனைக் கடலில் விழுந்து சாகவேண்டியதுதான்...என் செய்வது எம்மினத்தின் தலைவைதியை
  19. இல்மனைட் மட்டுமில்ல இப்ப கோபால்ற்றும் இருக்காமெல்லோ! அவங்கட 11 திட்டங்கள் மீளத்தொடங்கிற்றாங்கள், அப்ப பதற்றமா இருக்குமெல்லோ!
  20. அவர் முதலே உள்ளூராட்சி சபை உறுப்பினராக இருந்தவர் தானே அண்ணை. அப்பவே வீட்டில சொல்லித்தான் விட்டது, தொடர்ந்து இருக்கக் கூடாது, மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேணும். தன்னுடைய சம்பளப்பணம் 15000*60 மாதம் முழுவதும் பல்ப் போடவும் 2 இலட்சம் ரூபா பெறுமதியில் கற்றல் செயற்பாடுகளுக்கு கொட்டகை போடவும் பயன்படுத்தினவர்.
  21. @MEERA இணைக்க விரும்பிய படம் இதுவா. மான் சின்னத்தில் போட்டியிடும், முன்னாள் யாழ் நகரபிதா மணிவண்ணனும் மற்றைய வேட்பாளர்களும்.
  22. அர்ச்சுனா முன்னர் அங்கேயும் இங்கேயும் என்று தாவித்தாவி நாளுக்கொரு கொள்கையோடு நின்றவர். இப்போது என்ன கொள்கையோடு நிற்கிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? அகில இலங்கை கணிதத்தில் முதலாமிடம் என்பது தனிப்பட்ட ரீதியில் சிறப்பு, வாக்குப் போடும் மக்களுக்கு இதனால் என்ன பயன் என்று தெரியவில்லை.
  23. மேற்கு நாடுகள் ரசியா இவைகளைப் பார்த்து இந்தியாவும் எப்போதோ தொடங்கிவிட்டது. அமெரிக்காகாரர் இதில் கில்லாடிகள்.விட்டுட்டு பின்னால் திரிந்து முழுவதுமாக அள்ளுவார்கள்.
  24. யாழில். பொலிஸ் அதிகாரியின் வீட்டில் கொள்ளை: ஒருவர் கைது! யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டினுள் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நவாலி பகுதியில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டினுள் கடந்த 12ஆம் திகதி உட்புகுந்த திருடர்கள் ஆறரை பவுண் நகை மற்றும் 29ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவரை கடந்த திங்கட்கிழமை பொலிஸார் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளை திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும்,அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://athavannews.com/2024/1404402
  25. முஸ்லிம் தோற்றுப்போவன். நீங்கள் தான் அசலான முஸ்லிம் உடனாடியாக சுன்னத்து செய்யவும் 😂😂😂 உதவி தேவையெனின் கு. .....ய. ...ஈ. உடன் தொடர்பு கொள்ளுங்கள் 🙏
  26. நல்ல செயல், இப்படி இன்னும் பல பரிகாரங்கள் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்ய இருக்கு👍
  27. தண்டனையே! தரமுயர்த்தும் நாட்டை! ********************************************* அன்று.. பசியில் பாண் திருடி தம்பி தங்கைக்கும் பசியாற்றிய பாலகிக்கு திருடியெனும் பட்டம் கொடுத்து மரத்தில் கட்டிவைத்த செய்தி…. இலங்கையின் இரக்கமற்ற நீதி இன்றோ.. மக்கள் பணத்தை கோடி கோடியாக திருடி கொள்ளையடித்த வெள்ளை வேட்டி கள்ளர்களை விட்டுவைத்த-பழய அரசர்களையும் திருடர்களையும் அதியுச்சத் தண்டனை கொடுப்பதே! நாட்டு மக்களுக்கான இன்றைய மனுநீதியாகும். அன்புடன் -பசுவூர்க்கோபி.
  28. (எம்.மனோசித்ரா) பொருளாதார நெருக்கடி காரணமாக மீன்பிடித்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களை குறைத்து மீன்பிடித்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 6 மாதங்களுக்கு மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை (15) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் விலை மிகவும் பெருமளவில் அதிகரித்தமை காரணமாக மீன்பிடித்துறையில் ஏற்படும் பாதகமான தாக்கத்துக்கு தீர்வு வழங்குவதற்கு கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், குறித்த தீர்மானம் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை. எனவே, மீனவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதனை குறிக்கோளாக கொண்டு இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 6 மாத காலத்துக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக விவசாய, காணி, கால்நடை வள, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. அதற்கமைய எரிபொருளாக டீசல் பெற்றுக்கொள்ளும் மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளும் ஒரு லீற்றர் டீசலுக்கு 25 ரூபா பணம் கிடைக்கும் வகையில் ஒரு மாதத்துக்கு 300 000 ரூபா வரையான உச்ச எல்லைக்குள் மீன்பிடித்துறையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்hன கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. எரிபொருளாக மண்ணெண்ணை பெற்றுக்கொள்ளும் மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளும் 15 லீற்றர் மண்ணெண்ணைக்கு 25 ரூபா பணம் கிடைக்கும் வகையில் ஒரு மாதத்தில் ஆகக்கூடியது 25 நாட்கள் என்ற அடிப்படையில், தொழிலில் ஈடுபடும் நாட்களுக்கு மட்டும் வரையறுக்கப்படும் வகையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணைக்கு 25 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். டீசல் மற்றும் மண்ணெண்ணை விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் டீசலுக்கான உச்ச நிவாரண விலையை 250 ரூபா என்ற மட்டத்திலும், மண்ணெண்ணைக்கான உச்ச விலை 150 ரூபா என்ற மட்டத்திலும் ஆக்க்கூடியது 6 மாத காலம் வரை டீசலுக்காக ஆக்ககூடியது சந்தை விலையிலிருந்து 7.5 சதவீத நிவாரணமும், மண்ணெண்ணைக்கு ஆக்ககூடியது சந்தை விலையிலிருந்து 12.5 சதவீத நிவாரணமும் மீனவர்களுக்கு கிடைக்கும் வகையில் மேற்குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/196406
  29. மேற்குலகு இலங்கைத் தமிழருக்கு எழுத்தையும் கொடுத்து, பணத்தையும் கொடுத்தபோதும், புலம்பெயர்ஸ் இந்தியாவிற்கும் RSS ன் கோமியத்தைக் குடித்தால் , மேற்கு எங்களுக்குப் பின்னால் நிற்குமா ? இல்லையே,..?
  30. இண்டைக்கு தொலைஞ்சசீங்க போங்கோ! காலையில் சொன்னதை மாலையில் மறுப்பது, தனக்கு பிடிக்காதவர்களை திட்டம் போட்டு தாக்கும் தந்திரம், திறமை, பொருத்தமானவர்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் முடக்குவது, ஓரங்கட்டுவது, மற்றவர் அவர்களை தொடர்வதை தடுத்து தன்னை முன்னிலைப்படுத்துவது இன்னும் பல....
  31. தாய்வான் பிரச்சனையில் இந்தியா அமேரிக்கா பின்னால் நிற்கினம்...
  32. சுமந்திரனின் பிரசங்கத்திற்கு கைதட்ட தெரிந்தால் போதும், கேள்வி ஏதும் கேட்கக்கூடாது. அவர்களையே தேடி எடுத்திருப்பார். இவருடன் கூட்டு வைப்பவர்களின் திறமையை இலகுவில் கணக்கிட்டு விடலாம்
  33. அமெரிக்காவும் மேற்கும் இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் பின்னாலேயே நின்றது. தமிழர்கள் எம்மாத்திரம்?
  34. மேற்கின் பின்னால் போவதற்கு ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம். ஆனால் இந்தியாவின் பின்னால் செல்வதற்கு சமயத்தையும் சாதியையும் தவிர வேறு என்னத்தைச் சொல்ல முடியும்?
  35. சும்முக்கு அல்லகைகள் உண்டா? 😅அவர்தான் சுத்தமானவராச்சே ...அவருக்கு அல்லகைகளும்மில்லை,ஆதரவுகையும் இல்லை .என நினைத்தேன் ..அவர் சுயம்பு கை
  36. கார்ட்டூனின் ஆழமான அரசியல் சிந்தனை மற்றும் தர்க்க ரீதியான விளக்கம் கொடுக்கும்போது, நாம் இலங்கையின் இன்றைய அரசியல் சூழலைப் பொருத்தி, இங்குள்ள பல குறியீடுகளை நுணுக்கமாக ஆய்வு செய்யவேண்டும். இக்கார்ட்டூன் சிங்கள தேசியவாதம், சிங்கள சovinism, தமிழ் சமூகத்தின் பாதிப்பு, மற்றும் இந்தக் கருத்துக்களை முன்வைக்கும் அரசியல் பிரவேசம் போன்ற பல்வேறு கூறுகளை வெளிப்படுத்துகிறது. ### 1. **சிங்கள தேசியவாதம் மற்றும் சிங்கள சovinism:** முதன்மையாக, இந்த இரண்டு கருத்துக்களை வேறுபடுத்த வேண்டும். "சிங்கள தேசியவாதம்" என்பது பொதுவாக ஒரு இனத்துக்கு சொந்தமான கலாச்சார, மொழி மற்றும் பாரம்பரிய அடையாளங்களை உயர்த்திப் பேசும் ஒரு கலாச்சார இயக்கமாக இருக்கலாம். இது பெரும்பான்மை சிங்கள இனத்தின் உரிமைகளை முன்னிலைப்படுத்தும் அரசியல் அடிப்படையில் இயங்குகிறது. இது இலங்கையின் வரலாற்று பின்னணியில், குறிப்பாக 1948 சுதந்திரத்திற்கு பின்னர், பெரும்பான்மையாக உருவாகியபோது சிங்கள இனத்தின் அடையாளத்தை பாதுகாக்க ஒரு வழியாகத் தோன்றியது. ஆனால், "சிங்கள சovinism" என்பது இதைவிட மிகக் கடுமையானது. சovinism என்றால், இது ஒரு இனத்தின் அல்லது சமூகத்தின் வன்மையான மேலாதிக்க எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. சிங்கள சovinism என்பது, சிங்கள இனத்தின் மேலாதிக்கம் நிலைநிறுத்தப்பட வேண்டும், மற்றும் மற்ற இனங்கள், குறிப்பாக தமிழர்கள், இரண்டாம் வகுப்பினராக பார்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனை. கார்ட்டூனில், சிந்தனை மற்றும் பாவனையின் அளவில் சிங்கள தேசியவாதத்தின் பின்னாலேயே இந்த சovinism வேலை செய்கிறது என்பதை இச்சித்திரம் காட்டுகிறது. தர்க்கரீதியாக, இது ஒரு அடிப்படையான அரசியல் இயக்கத்தின் மாற்றி நிற்கும் ஆழமான சிந்தனைகளைக் காட்டுகிறது. சிங்கள தேசியவாதம், உண்மையில், பெரும்பான்மை சிங்கள இனத்தை மற்ற இனங்களின் மீது மேலடிக்கச் செய்வதற்கு ஒரு மூலமாக மாறிவிட்டது. இந்த சovinism-இன் உருவம் தன்னார்வம் போன்றதாகவும், தீய நோக்கங்களுடன் நடக்கின்றதாகவும் வெளிப்படுகிறது. ### 2. **அரசியல் சார்ந்த சித்திரவாதம்**: கார்ட்டூனில் உணவைச் சமர்ப்பிக்கும் சபையாளர் (waiter) பங்கும் ஆழமாகப் பார்க்கப்பட வேண்டும். சபையாளர், சிங்கள இனத்தின் அரசியல் சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது போல சிங்கள தேசியவாதத்தைத் தட்டில் வைத்து சமர்ப்பிக்கிறார். இது அரசியல் நிலவரத்தை எளிதாக்கி தருகிறது – அரசாங்கம், தனது அதிகாரத்தின் மூலம், சிங்கள இன மேலாதிக்கத்தை விதிக்கின்றது. ஆனால் சிங்கள சovinism, சிங்கள தேசியவாதத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் தீவிர மற்றும் ஆபத்தான விசயம் என்பதை இதன் உருவத்தில் வெளிப்படுத்துகிறது. தர்க்கரீதியாக, சபையாளர் அரசியல் அதிகாரத்தின் சித்திரவாதியாகவும் (symbol) பார்க்கப்படலாம். அவர் ஒரு நடுநிலை முறைமை போன்றவராக இருப்பினும், அவர் சிங்கள இனத்தின் தேவைகளையே முக்கியமாகக் கவனிக்கிறார். இது அரசியல் மற்றும் அரசின் செயல்பாடுகளில் இருக்கும் எதார்த்த நிலையை வெளிப்படுத்துகிறது. ### 3. **தமிழரின் நிலை மற்றும் அடிமைப்படுத்தல்:** வலதுபுறத்தில் இருக்கும் பெண் (தமிழ் பெண்) ஒரு வாதவாதம் செய்யும் உருவாக்கமாக இருக்கிறார். அவர் சிங்கள சovinism மற்றும் தேசியவாதம் இரண்டு சந்தர்ப்பங்களாலும் கொடுக்கப்படும் கொடுமையால் அச்சமடைந்தவர். சிங்கள இனத்தின் தேசியவாதத்தை அவர் ஒரு நியாயமான கலாச்சார தேசியவாதமாக ஏற்கவேண்டிய சூழ்நிலையில், அதன் பின்னால் இருக்கும் சovinism அவரைக் கொடுமைப்படுத்துகின்றது. இது அவரின் மவுனத்தை வெளிப்படுத்துகிறது. தமிழ் சமூகத்தின் அரசியல், சமுக, கலாச்சார உரிமைகள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுள்ளன, இப்பெணின் நிமிர்ந்திருக்கும் (அச்சமடைந்த) தோற்றம் அதை காட்டுகிறது. ### 4. **தற்கால அரசியல் விளைவுகள்:** தற்போது இலங்கை அரசியலில், சிங்கள தேசியவாதத்தின் அரசியல் விளைவுகள் தமிழ் மக்களின் உரிமைகளை மீண்டும் மீண்டும் அடக்குகின்றன. அரசின் மதவாத மற்றும் இனவாத செயல்பாடுகள், தமிழ் மக்களின் அரசியல் நிலையை பலவீனமாக்குகின்றன. இது தமிழக மக்களைப் பற்றிய அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளிலும், இந்த சிங்கள தேசியவாதம் ஒரு முக்கியமான தடையாக அமைகிறது. தர்க்கரீதியாக, இது இந்தியாவில், தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகளின் ஆதரவுகளுக்கும் மாற்றான பலரின் சிந்தனைக்கும் இணையாக இருக்கிறது. தமிழரின் அடிப்படை உரிமைகளை ஒழிக்கவும், இன அடிப்படையில் கொடுமையை வளர்க்கவும் சிங்கள சovinism பயன்படுத்தப்படுகிறது. ### 5. **முடிவுரை:** இந்த கார்ட்டூன் இலங்கையின் தற்கால அரசியல் நிலைமைகளின் ஒரு தர்க்கரீதியான பிரதிபலிப்பாக இருக்கிறது. சிங்கள தேசியவாதம், இப்போது தமிழ் சமூகத்திற்கு ஒரு சான்றான துரோகமாக இருப்பது மட்டுமின்றி, அதன் பின்னால் உள்ள சிங்கள சovinism, பெரும்பான்மையினரின் அடக்குமுறைகளை உணர்த்துகின்றது. See lesshttps://www.facebook.com/photo/?fbid=122120845610460178&set=a.122099946026460178
  37. அடுத்த‌ மாத‌ம் இந்தியா அவுஸ்ரேலியா போகும் போது ரெஸ் விளையாட்டில் தோப்பின‌ம் 20ஓவ‌ர் விளையாட்டில் கூட‌ அவுஸ்ரேலியா சொந்த‌ ம‌ண்ணில் வெல்ல‌லாம்.........................
  38. 2009ம் ஆண்டு இல‌ங்கை வீர‌ர்க‌ளை பாக்கிஸ்தானில் வைச்சு சுட்ட‌து இந்தியா றோ அதுக்கு பிற‌க்கு தான் பாக்கிஸ்தானில் ச‌ர்வ‌தேச‌ கிரிக்கேட் விளையாட‌ கூடாது என்று த‌டை போட்ட‌வை ப‌ல‌ வ‌ருட‌ம் க‌ழித்து மீண்டும் இல‌ங்கை அணி பாக்கிஸ்தானில் போய் விளையாடி பாக்கிஸ்தானில் பாதுகாப்பு எல்லாம் ப‌ல‌மாய் இருக்கு வீர‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ பாதுகாப்பை பாக்கிஸ்தான் கிரிக்கேட் வாரிய‌ம் கொடுக்குது என்று சொன்ன‌ பிற‌க்கும் இந்தியா ச‌தி செய்து ம‌ற்ற‌ நாடுக‌ளை பாக்கிஸ்தானில் விளையாட‌ விடாம‌ ப‌ண்ணிவை கிட்ட‌ த‌ட்ட‌ 10 வ‌ருட‌த்துக்கு மேல் பாக்கிஸ்தானில் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் ந‌ட‌க்க‌ வில்லை ஜ‌ந்து வ‌ருட‌த்துக்கு முத‌ல் தான் ப‌ழைய‌ நிலைக்கு பாக்கிஸ்தான் திரும்பி இருக்கு.................இப்ப‌ எல்லா நாடுக‌ளும் பாக்கிஸ்தான் போய் விளையாடுகின‌ம்................. இந்தியா போக‌ விட்டு பின்னால் குத்தும் நாடு அது அர‌சிய‌ல் என்றாலும் ச‌ரி விளையாட்டு என்றாலும் ச‌ரி😡 2009 இந்தியாவுக்கு மிக‌வும் ம‌கிழ்ச்சியான‌ ஆண்டு எம் உற‌வுக‌ளை ப‌டுகொலை செய்து எம் போராட்ட‌த்தையும் அழித்த‌து பாக்கிஸ்தானில் துப்பாக்கி சூடு ந‌ட‌த்தி பாக்கிஸ்தான் பாதுகாப்பில்லாத‌ நாடு போல் சித்த‌ரித்த‌தில் இந்தியாவின் ப‌ங்கு பெரிது 2009க‌ளில் இவ‌ர்க‌ள் செய்த‌ அட்டூழிய‌ங்க‌ள் கொடுமைக‌ளுக்கு இவ‌ர்க‌ளின் நாடு உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போகும்...............................
  39. மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ம் இடம் adminOctober 15, 2024 கல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இவர் யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும், மகரகம ஜனாதிபதி கல்லூரியில் 3/8/2024 ல் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்று சாதனையினை படைத்துள்ளாா். இவர் 2018 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற English Resitation போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/207538/
  40. அனுர அரசில் இந்த வெள்ளை வேட்டி கள்ளர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இல்லையேல்… எந்த அரசிலும் இவர்களுக்கு தண்டனை கிடைக்கப் போவதில்லை. கவிதைக்கு நன்றி கோபி.
  41. நேதாஜி ஆயுத‌ம் தூக்கி போராட‌ம‌ல் விட்டு இருந்தால் காந்தின்ட‌ அகிம்சை காற்றில் ப‌ற‌ந்து இருக்கும்..................காந்திய‌ தூக்கி போட்டு மிதிச்சு இருப்பாங்க‌ள் பிரிடிஷ் இராணுவ‌ம் போலி அகிம்சை நாடு...................... சிறு முன்னேற்ற‌ம் கூட‌ இல்லை இதுவ‌ரை . க‌ழிவ‌றை வ‌ச‌தி இல்லை . ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே கையால் அள்ளும் நாடு பிரிடிஷ் கார‌ன் துப்பின‌ துப்ப‌ல்ல‌ உருவாகின‌ நாடு தான் இந்தியா..................................
  42. இவர்களே… ஆறு இடத்தையும் எடுத்தால், தமிழரசு கட்சியை எரிக்கிறதா, புதைக்கிறதா… என்ற நிலைமை நெருங்கி விட்டது போலுள்ளது. 😂 இப்போது களத்தில் இறங்கியுள்ள அர்ச்சுனா போன்ற புதிய முகங்களும், தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்களும்…. தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் இருந்தே தமது வாக்கை பெற்றுக் கொள்வார்கள். அப்போது, தமிழரசு கட்சி மரண அடி வாங்கும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு நிரந்தரமான வாக்கு வங்கி உள்ளது. அதில் பெரும் மாற்றம் இருக்க வாய்ப்பிலை. அத்துடன் அனுர அலையும்… வடக்கு, கிழக்கில்… புதிதாக கிளம்பியுள்ளதால், தமிழரசுக் கட்சி தூக்கி வீசப்படும். எல்லாவற்றுக்கும் அந்த உளறுவாயன் சுமந்திரனும், கொம்பு சீவி விட்ட அல்லக்கைகளும் தான் காரணம். 🤣
  43. இந்தியா கனடாவில் விட்டதை அமெரிக்காவிலும் விட நினைத்து கையும்களவுமாக மாட்டிக் கொண்டது. இப்போ அதைப்பற்றி மூச்சே விடுவதில்லை.
  44. நமது அன்றாட வாழ்வும் பாலியலும் .... இன்றைய காலகட்டத்தில் உலகில் பெரும்பாலானோர் அவசர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அந்த குடும்ப வாழ்க்கையிலே எவ்வளவு சிரமங்கள்,சலிப்புகள்,தடங்கல்கல்கள் என கடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வேலை சிரமங்களினால் குடும்ப அன்னியோன்யங்கள் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் இது. பல இடங்களில் விவாகரத்திலும் கதைகள் முடிகின்றன. இதற்கான காரணங்களில் முக்கியமாக பாலியல் சம்பநதப்பட்ட விடயங்களும் அமைகின்றன நான் நினைக்கின்றேன். உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள். பேச வெட்கப்படும் விடயங்களை பேசுவோம்.💕
  45. அருமையான கதை வாழ்த்துகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.