Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    22
    Points
    87990
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19122
    Posts
  3. putthan

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    14676
    Posts
  4. valavan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1569
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/02/24 in all areas

  1. @நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Sabesh, @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi யாழ்கள இலங்கை பாராளுமன்ற போட்டியில் கலந்து கொள்ள இன்னும் 12 நாட்களே உள்ளன. உங்கள் கணிப்பையும் பதிந்து, உங்கள் அரசியல் அறிவை பரீட்சித்துப் பார்க்க அரிய சந்தர்ப்பம். அரசியலில்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கலாம். ஆனால்.... யாழ். களத்தில் ஒரு போட்டி என்று வரும் போது... எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிப்பதே, யாழ்.களத்துக்கு நாம் செய்யும் கௌரவம். தாமதிக்காமல் இன்றே கலந்து கொள்ள, உங்களை அன்புடன் அழைக்கின்றோம். 🙂
  2. ஒவ்வொரு ஆட்சியிலும் பதவி பெற்று ஆசனத்தில் அமர்ந்ததும் பேட்டிகளின்போது ஒருபக்கமா சரிந்துகொண்டு நக்கல் சிரிப்பு சிரித்தபடி , ’'’பிரபாகரன் என்னை கொல்லபாத்தார் அவர் கனவிலும் நினைச்சிருக்கமாட்டார் நான் இருப்பேன் அவர் சாவார் எண்டு’’, ‘’புலிகளுக்கும் முள்ளி வாய்க்கால் நினைவுகளுக்கும் பல்கலை கழக வளாகத்தில் நினைவு சின்னம் அமைக்கப்பட கூடாது” புலிகளால் எமது இனம் அழிவைமட்டுமே சந்தித்தது என்கிறமாதிரி சொல்லுவீங்களே இந்த தேர்தல் நேரம் அதை எல்லாம் பேசி தமிழர்களிடம் வாக்கு கேக்கலாமே, எதுக்கு அதுபற்றி ஒண்டும் பேசாமல் ஒரு ஆறு ஆசனம் எண்டாலும் தாங்கோ எண்டு அழுகிறீர்கள்? பதவியிருக்கும்போது சிங்களவர்கள் கழுத்திலிருந்து தமிழர்களை பார்த்து கருடா சவுக்கியமா என்று கேட்பது , பதவி பறிபோனதும் மறுபடியும் தமிழர்களிட்டையே வந்து அழுவது. மூன்று தசாப்தங்களாக சிங்களவர்கள் தயவில் தமிழர்களை அதட்டி வாழ்ந்தீர்களே, அதே சிங்களவர்களின் கட்சி ஒன்றில் இணைந்து சிங்கள பகுதியொன்றில் நின்று வென்று காட்டுங்கள் அப்போ தெரியும் நீங்கள் காட்டிய சிங்கள எஜமானர்களின் விசுவாசத்துக்கு சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள மக்களும் ஒரு எலும்பு துண்டாவது உங்களுக்கு போடுவார்களா என்று. இந்த பொது தேர்தலில் தமிழர் பகுதியில் யார் வென்றாலும் பரவாயில்லை, காலம் காலமாக தமிழ்கட்சிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் எம்மண்ணிலிருந்து அடியோடு களையப்பட்டு புதியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகி நேர்மையுடன் இவர்கள் கண்முன்னாலேயே நடமாடினால் மகிழ்ச்சி.
  3. இந்தியாவில்... சட்டத்தை மதித்து ஒழுங்காக வீதிகளில் ஒடத் தெரியாதவர்கள், வானில் ஒழுங்காக பறப்பார்களா. ( மேலிருந்து வெத்திலை துப்பல், சிறுநீர் கழித்தல்... வேறு தொல்லை) 😂 எனக்கென்னவோ... வானத்தில் விபத்து ஏற்பட்டு.. பொத்து பொத்து என்று, வீட்டுக் கூரைகளிலோ, மக்களின் தலைகளிலோ இவை விழ சந்தர்ப்பங்களே அதிகம். 😎
  4. "கென்ட் ‍ டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எம்மைத் துன்புறுத்தி வந்த சிங்களக் காடையர்களே, மாறாக அப்பாவிச் சிங்கள மக்கள் அல்ல" - ‍ தமிழ் மக்கள் ஜெயவர்த்தனவினதும் அவரது இனவாத அமைச்சரவையினதும் திட்டங்களுக்கான பதிலை 1984 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 30 ஆம் திகதி பிரபாகரன் வழங்கினார். நன்கு ஆயுதம் தரித்த, பயிற்றப்பட்ட 50 புலிகள் கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் நோக்கி இரு பேரூந்துகளில் பயணமாகினர். ஒரு அணியினர் கென்ட் பண்ணை மீது தாக்குத‌ல் நடத்த, மற்றைய அணி டொலர் பண்ணை மீது தாக்குதலை நடத்தியது. கென்ட் பண்ணை மீதான தாக்குதலில் 29 சிங்களக் கைதிகள் கொல்லப்பட டொலர் பண்ணையில் மேலும் 33 கைதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 62 பேரில் மூவர் சிறைக்காவலர்கள். மறுநாளான மார்கழி 1 ஆம் திகதி லோரன்ஸ் தலைமையிலான புலிகளின் அணியொன்று கொக்கிளாயிலிருந்து வெளியே நாள் ஒன்றிற்கு இருமுறை பயணம் செய்யும் எல்ப் ரக வாகனம் ஒன்றைக் கடத்திக்கொண்டு கொக்கிளாயில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றம் நோக்கிப் பயணித்தனர். அப்போது மாலை 6:30 மணி. சில சிங்கள மீனவர்கள் ஆங்காங்கே வீதிகளில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தனர். சிலவிடங்களில் பெண்களும், சிறுவர்களும் வீதிகளில் காணப்பட்டனர். எல்பில் வந்த புலிகள், அங்கு நின்ற சிங்களக் குடியேற்றக்காரர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தனர். மனுவேல் அந்தோணி, அவரது மனைவி மற்றும் அவரது மகன் ஆகியோரும் வீதியில் நின்ற கூட்டத்தில் அடங்குவர். சூடுபட்டு கீழே வீழ்ந்த அந்தோணி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். அவரது ஒன்பது வயது மகனுக்கும் சூட்டுக் காயம் ஏற்பட்டது. அவரைக் காவிக்கொண்டு அந்தோணியின் மனைவி படகுகள் நோக்கி ஓடினார். ஆனால் மகனைக் காப்பாற்ற முடியவில்லை. இத்தாக்குதலில் 14 சிங்களக் குடியேற்றக்காரர்கள் கொல்லப்பட்டதுடன் இன்னும் நால்வர் காயமடைந்தனர். பின்னர் அங்கிருந்து அகன்ற புலிகள் 15 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த நாயாறு சிங்கள மீனவக் குடியேற்றம் நோக்கிச் சென்றனர். இரவு 8:30 மணியளவில் நாயாறு குடியேற்றத்தை புலிகளின் அணி சென்ற‌டைந்தது. அங்கு காணப்பட்ட மக்கலின் கொஸ்ட்டா வின் பலசரக்குக் கடைக்குச் சென்ற புலிகள் துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தனர். அருகிலிருக்கும் தமிழ்க் கிராமங்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டு வந்த சிங்களக் காடையர்களின் தலைவியாக‌ மக்கலின் விளங்கினார். எல்ப் வாகனத்தில் இருந்து பாய்ந்திறங்கிய புலிகள் கடைக்குள் கிர்ணேட்டுக்களை வீசி எறிந்தனர். மகலினை புலிகள் தேடினர், ஆனால் அவர் இருக்கவில்லை, தலைமறைவாகிப் போயிருந்தார். ஆகவே மக்கலினின் இரு புதல்விகளான மேரி திரேசா மற்றும் மேரி மார்கரெட் ஆகியோரைப் புலிகள் சுட்டனர். அங்கு நடைபெற்ற தாக்குதலில் நால்வர் கொல்லப்பட மேலும் இருவர் காயமடைந்தனர். கொக்கிளாயில் புலிகள் தாக்குதல் நடத்தியபோது பல சிங்களக் குடியேற்றக்காரர்கள் கடலை நோக்கி ஓடியதுடன், படகுகளுக்குள்ளும், அவற்றின் பின்னாலும் ஒளிந்துகொண்டனர். பின்னர் நடந்த விசாரணைகளின்போது நள்ளிரவு வரை சிங்களவர்கள் படகுகளுக்குப் பின்னால் ஒளிந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சிலர் ஆறு கிலோமீட்டர்கள் கால்நடையாக புல்மோட்டையூடாக திருகோணமலை மாவட்டத்திற்குள் பிரவேசித்து இராணுவத்தினருக்கு தாக்குதல் குறித்துத் தெரிவித்தனர். கொக்கிளாய் நோக்கி விரைந்துசென்ற இராணுவ அணிமீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. வீதியின் அருகிலும், மதகுகளின் கீழும் மறைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் வெடிக்கவைக்கப்பட்டன. நாயாறு குடியேற்றக் கிராமத்தின்மீது தாக்குதல் நடந்தபோது அங்கிருந்த சிங்களக் குடியேற்றக்காரர்கள் அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டிருந்தனர்.மறுநாள் காலை இராணுவத்தினர் அவர்களைக் கண்டு மீட்கும்வரை அவர்கள் காடுகளுக்குள்ளேயே மறைந்திருந்தனர். இத்தாக்குதலில் காயப்பட்ட சிங்களவர்களை அநுராதபுர வைத்தியசாலைக்கும், குருநாகல் வைத்தியசாலைக்கும் இராணுவம் அழைத்துச் சென்றது. திருகோணமலைக்கும், முல்லைத்தீவிற்கும் இடையிலான கரையோரப் பகுதிகள் அரசால் முன்னெடுக்கப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களில் மிகவும் வடக்காக அமைந்திருப்பது கொக்கிளாய் சிங்கள மீனவக் குடியேற்றமாகும். இங்கு குடியேற்றப்பட்டிருக்கும் சிங்களவர்கள் நீர்கொழும்பு, சிலாபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். புலிகளின் தாக்குதலில் முதன்முதலாக சிங்களவர்கள் கொல்லப்பட்ட இச்சம்பவம் குறித்து நான் விலாவாரியாக முன்னர் எழுதியிருந்தேன். அரசால் சேகரிக்கப்பட்ட இத்தாக்குதல் குறித்த ஆவணங்கள், மற்றும் இத்தாக்குதல் குறித்து அமைச்சரவையில் அங்கத்துவம் கொண்டிருந்த அமைச்சர் தொண்டைமானின் கருத்துக் குறித்தும் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். இரு காரணங்களுக்காக இச்சம்பவங்கள் நான் இங்கே மீளவும் பதிவிடுகிறேன். முதலாவது, இச்சம்பவங்கள் நடைபெற்ற காலக் கிரகத்தின் அடிப்படையில் பதிவது. இரண்டாவது இத்தாக்குதல் குறித்த தமிழ் மக்களின் மனவோட்டத்தினைப் பதிவது. தொண்டைமான் இத்தாக்குதல்களை வரவேற்றிருந்தார். அவ்வாறே எனக்குத் தெரிந்த ஒவ்வொரு தமிழரும் இதனை வரவேற்றிருந்தனர். கொல்லப்பட்டவர்களை அப்பாவிச் சிங்கள மக்கள் என்று அவர்கள் கருதவில்லை. தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்தி, தினம் தோறும் சித்திரவதை செய்துவந்த காடையர்களே கொல்லப்பட்டிருப்பதாக அவர்கள் கருதினர். அது மட்டுமல்லாமல் ஜெயவர்த்தன, லலித் அதுலத் முதலி, காமிணி திசாநாயக்க, ரவி ஜெயவர்த்தன ஆகிய இனவாதிகளின் கொடூரங்களுக்கான பதிலடியாகவும் இதனை அவர்கள் பார்த்தனர். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல்களினூடாக, தம்மை தனியான தேச மக்களாக தமிழர்கள் உறுதியாக நம்பத் தலைப்பட்டனர். ஒரு இனமாக தாம் உயிர்தப்பி வாழ்வதென்றால், சிங்கள ஆக்கிரமிப்பிற்கெதிராகத் தாம் திரண்டெழுந்து போராட‌ வேண்டுமென்று அவர்கள் நம்பத் தொடங்கினர். இதனை செய்வதற்குப் பிரபாகரனைத் தவிர அவர்களுக்கு வேறு எவரும் இருக்கவில்லை.
  5. நிச்சயமாக…. இலங்கையிலேயே நம்பகமான கருத்து கணிப்புகள் ஏதும் இல்லை எனும் போது எனது உரையாடல்கள் வெறும் அவதானிப்புகள் மட்டுமே. விஞ்ஞான முறைப்படியான கருத்து கணிப்புகள் கூட பிழைப்பதை நாம் மேனாடுகளிலேயே கூட காண்கிறோம். எனவே நான் சொல்வது ஒரு பார்வை மட்டுமே. அத்தோடு இதில் நீங்கள் சொல்வது போல நிச்சயம் confirmation bias உம் இருக்கும். சிங்கள மக்களின் இனவாதம் மீது உங்களை போலவே எனக்கும் அசராத நம்பிக்கை உண்டு. ஆனால் அண்மையில் ஒருவர் எனக்கு சொன்னது “நீங்கள் அறிந்த நாடு இல்லை இது இப்போ. அவர்களும் மாரி விட்டார்கள், நாங்களும் மாறி விட்டோம், இனி ஒரு பெரும் இன முறுகல் வர வாய்ப்பில்லை. நீங்கள் பழையதையே நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.” எனக்கு இது கொஞ்சம் மிகைப்பட்டதாகவே தோன்றியது. ஆனாலும் ஏனைய நாடுகளில் இப்படி பரம வைரிகளாக இருந்த இனங்கள் பின்னர் சேர்ந்து வாழ்ந்தமை நடந்துள்ளது என்பதையிம் மறுக்க முடியவில்லை. காலம் பதில் சொல்லும்.
  6. எனக்கு இன்னும் ஒர் 5 நாள் அவகாசம் தேவை 😅 எந்த கட்சி எப்ப பிளவு படும் என யாருக்கும் தெரியாது....அர்ச்சுனாவின் ஊசியும் உடைஞ்சு போய்யிட்டாம்..
  7. 1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4) சுவைபிரியன் 5) தமிழ்சிறி 6)கிருபன் 7)alvayan 8 ) சுவி 9) பையன்... சுவியர்... ஏற்கனவே போட்டியில் கலந்து கொண்ட 9 பேரை மேலுள்ள பட்டியலில் இணைக்க வில்லை என்பதை தற்போதுதான்... புரிந்து கொண்டேன். 🙂
  8. நேற்று தமிழ்நாடு என்று கொண்டாடினார்;கள். சம நேரத்தில் கேரளஈதெலுங்கு கன்னட மக்களும் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாடுர்கள். அண்ணா கேட் ட திராவிடநாடு தமிழ்நாடு ஆந்திராஈகேரளா மற்றும் கர்நாடகா நான்கையும் உள்ளடக்கியது. காலப்போக்கில் அண்ணா திராவிட நாட்டுக்கொள்கையைக் கைவிட்டார். ஆனால்கட்சிப்பெயரில் திராவிடத்தை சுமந்துகொண்டு இன்னும் திமுக இருக்கிறது. அதிலிருந்து பிரிந்த கட்சிகளும் அதே திரவிடத்தைச் சுமந்த நிற்கின்றன. இந்த நிலை தமிழ்நாட்டைத்தை; தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.மலையாளிகளோ >தெலுங்கர்களோ கன்னடர்களோ தங்களை ஒருபோதும் திராவிடர்கள் என்று அழைத்ததுமில்லை.அழைக்கப் போவதும் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சியில்மதராசுப்பட்டினம் (மெட்ராஸ்)தென்னிந்தியாவில்மிகவும் மக்கியமான ஆட்சிமையமாக விளங்கியதால் அயல் மாநிலங்களில் இருந்தவர்கள் பலர் குடியேறினார்கள்.அவர்களின்வாரிசுகளே தெடர்ச்சியாக ஆட்சிக்கடடிழல் அமர்ந்து வருகிறார்கள். திமுகவுக்கு முதல் திராவிடம் என்ற சொல் தமிழ்நாட்டில் புழக்கத்தில் பெரிய அளவில் இலலை. அரசியல் கட்சிகளும்; திராவிடத்தின் பெயரில் இருக்கவில்லை.இப்பொழுது லரலாறு திரும்புகிறது. சீமனுக்குப் பிறகு அரசியல்கட்சிகளைத்துவங்கிய யாரும் திராவட என்ற சொல்லைக்கவனமாகத் தவர்த்தே வருகிறார்கள.இது தமிழத்தேசியத்தின் மீள் எழுச்சியையே காட்டுகிறது. சீமானினின் கட்சிக்கு எம்எல்ஏக்களோ எம்பிக்களோ இல்லாமல் இருக்கலாம் ஆனால் இனிகட்சி துவங்கும் யாரும் தமிழ்த்தேசியததை புறக்கணித்து கட்சியை நடத்த முடியாது என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. சீமான் பிலபலம் இல்லையென்பதால் அவர் வெற்றியைப் பெற முடியாதுபோனாலும் அவரின் கொள்கைைகள் வெற்றிபெறுவது பெரிய வெற்றியே. கொள்கை வெல்வதையே ஒரு நல்ல தலைவன் விரும்புவான்.மற்றைய மாநிலத்வர்கள் திராவிடத்தைச் சுமக்க விரும்பாதபோது தமிழர்கன் மட்டும் ஏன் திராவிடத்தை அந்த எக்ஸரா லக்கேஜைச் சுமந்து கொண்டு திரிய வேண்டும்.மற்றவர்களைச் சொல்லிவிட்டு விஸயைே எக்ஸ்ரா லக்கேஜைச் சுமந்து கொண்டு திரிவதும் கத்திப் பேசுவமதும் நியாயமா?
  9. இந்த விமான டாக்சிகளை பயன்பாட்டுக்கு விட முன்னர் அதன் ஓட்டுனர்களுக்கு நிலத்தில் ஓடும் சாதரண டாக்சிகள் போலவே நடுவானத்திலும் ஹாரன் (horn) அடிக்கவும் ப்ரேக் (brake) போடவும் கற்றுக்கொடுக்கவும். ஜன்னலை திறந்துவைத்தபடி விமானத்தை பறப்பது மேலும் பல டாக்சிகளுக்கே உரிதான இன்னோரன்ன வித்தைகளை செய்வது எப்படி என்றும் பழகிக்கொள்ளவும்..
  10. நீங்கள் தெரியாத்தனமா இந்த ஒப்பீட்டைச் செய்துவிட்டீர்கள். இனி இந்தத் திரியில் ஒருசில மாவீரர்களின் படம் இணைக்கப்பட்டு திரிக்குத் தொடர்பே இல்லாமல் மாவீரர்களுகு வீரவணக்கம் செலுத்தப்படும். அதுக்கு லைக்குகளும் அளிக்கப்பாடும்!😂
  11. 1) அத்தோடு ஒருவர் 2 தடவைக்கு மேல் பாராளுமன்றம் செல்வதை தடைசெய்ய வேண்டும். 2) குறிப்பிட்ட ஒரு வயதுக்கு மேல் போட்டியில் இறங்குவதை தடை செய்ய வேண்டும். 3) தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்துப்பத்து விபரங்களை தெரிவிக்க வேண்டுமென்று சட்டம் இருந்தும் சமர்ப்பிக்காத விண்ணப்பங்களை நிராகரிக்கப்பட வேண்டும்.
  12. சரியாக சொன்னீர்கள். இவர்கள் அனைவரும்... மக்களை சிங்களக் கட்சிகளை நோக்கி தள்ளிக் கொண்டு இருக்கும் பணியைத்தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். மேற்கு நாடுகளில் பெரும்பாலானோர் அரசியலுக்குள் நுழைய முன்... அரசியலை ஒரு பாடமாக எடுத்து படித்து இருப்பார்கள். எனக்குத் தெரிந்து சில தமிழ்ப் பிள்ளைகள், அரசியல் படித்து இங்குள்ள பிரபல கட்சிகளில் வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள். அதன் பலன் இன்னும் 5-10 வருடங்களில் தெரிய வரும். தாயகத்திலும் இதே வழியை பின்பற்ற... இளைய சமுதாயம் முன் வரவேண்டும் இதற்கு உரிய ஊக்கத்தை பல்கலைக்கழகங்கள் செய்ய முன் வர வேண்டும். சுத்துமாத்து "லோயர்" மார் எல்லாரும் எம்.பி. என்ற மிதப்பில் திரிவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
  13. சீமானின் அரசியலையும்,அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் வாட்டி வதக்கி ருசி பார்ப்பவர்கள் திருமாவின் அரசியலையும் தனிப்பட்ட வாழ்க்கையும் தெரியாதது போல் இருப்பார்கள். அதிலும் திமுக....அப்பப்பா சொல்லி வேலையில்லை. திமுக அரசியலையும் தனி திருவிளையாடல்களையும் இஞ்சித்தும் வாய் திறக்கவே மாட்டார்கள்..🤣 விமர்சனம் என்பது சரி சமனாக இருக்க வேண்டும் என்பது என்கருத்து. நான் சமநிலைவாதியானவன் அல்ல. அதனால் எனக்கு பிடிக்காதவர்களை விமர்ச்சிக்கின்றேன்.
  14. இந்திய அணியினை நியுசிலாந்து போட்டு புரட்டி எடுப்பது என்பது அதுவும் இந்தியாவிலே என்பதால் இந்த தொடர் ஒரு ஆர்வ மிகுதியினை ஏற்படுத்தியுள்ளது அதனால் இதனை பின் தொடர்கிறேன், பெரும்பாலும் ஆட்ட முடிவில் நிலமையினை அவதானிப்பதுண்டு அல்லது யூரியூப்பில் சில வேளை கைலைற்ஸ் பார்பதுண்டு வேறு ஆட்டங்களை பின் தொடர்வதில்லை.
  15. எதிகால பிரதமரை இப்படிச் சொன்னதிற்கு எனதி கண்டனங்கள்...வசாவிளான்வீதியின் வள்ளல்.. மயிலிட்டி விகாரையை தூக்கி ரெயினில் அனுப்பும் செம்மல் சுமந்து நீ வாழ்க..🤣
  16. ஓணாண்டியாருக்கு என்ன ஆயிற்று😂? ஒரு விடயம் மேற்கிலும் கிழக்கிலும் பரவலாக நடக்கிறது என்பதற்காக அந்த முறை தான் "வழமை - convention" என்று வாதிடுகிறீர்கள் போல தெரிகிறது. ஜனநாயகத்தில் தலைமைத்துவம் என்பது இருவழிப்பாதை - மக்கள் தலைவர்களை மாற்ற வேண்டும், தலைவர்களும் மக்களை சில சமயங்களில் வழிக்குக் கொண்டு வர வேண்டும். மக்கள் "பெருவாரியாகக் கைதட்டுகிறார்கள்/லைக் போட்டு வரவேற்கிறார்கள்" என்பதற்காக ஒரு தலைவர் மூன்றாம் பிறை கமலஹாசன் போல குரங்கு வித்தை காட்டுவது தலைமைத்துவம் கிடையாது! இதற்குப் பெயர் ஜனத்திரள்வாதம் - populism. ஹிற்லர் போன்ற கொடிய மனிதர்கள் கூட கைக்கொண்ட நச்சுத் தனமான உத்தி. ஜனத்திரள்வாதம் இல்லாமல், மக்கள் முட்டாள் தனமாக நடந்து கொள்ளாமல் தலைவர்கள் இருக்க வேண்டுமென்றால், கொஞ்சம் கல்வியறிவு, உள்ளக நேர்மை, சரி பிழை எதுவென்று உணரக் கூடிய அறத்திசை காட்டி என்பன தலைவர்களிடம் இருக்க வேண்டும். இந்த அளவு கோல்களை வைத்துப் பார்க்கும் போது தமிழக மக்கள் தங்கள் அனேகமான பிரதிநிதிகளை இது வரை சரியாகத் தான் தேர்ந்திருக்கிறார்கள். ஜனத்திரள்வாதம் மூலம் வாக்குத் திரட்டும் சீமான் போன்றவர்ளுக்கான வாக்குகள் தான் நீங்கள் குறிப்பிடும் "சிந்தனையில்லாத" தமிழக வாக்காளர்களிடமிருந்து வருகின்றது என நான் நினைக்கிறேன். சரியா நான் சொல்வது?
  17. உங்களுக்கு தமிழ்நாட்டு மக்களைபற்றி புரியவில்லை.. சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் உங்களைப்போல் ஜெண்டில்மானாக சிந்திப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்.. ஆனால் அதுதான் தப்பு.. அப்படி அல்ல.. தமிழ் நாட்டு பெரும்பான்மை சமூகம் அறிவு மட்டம் வேறு.. அதனால்தான் திமுக அதிமுக ஜெயிக்க முடிகிறது.. விஜய்க்கு கூட்டம் சேர்கிறது.. சீமானுக்கு விசில் பறக்கிறது.. அய்யா நல்லகண்ணு போன்ற அரசியல்வாதிகளுக்கு ஆளே இருப்பதில்லை ஓட் போட.. அப்போ அரசியல்வாதிகளும் பெரும்பான்மை மக்களின் விரும்பங்களுக்குதான் பேசவும் செயற்படவும் முடியும்.. அம்மணமாய் திரிபவர்கள் ஊரில் கோவனத்துடன்போகிறவர்கள் பைத்தியக்காரர்களாம்.. வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இப்போ வலதுசாரிகள்தான் முன்னுக்கு வரும்போது பஞ்சத்தில் அடிபட்ட தமிழ்நாட்டில் நீங்கள் எதிர்பார்க்கும் லெவலில் அரசியல் நடக்க ஜந்து நூற்றாண்டானாலும் சாத்தியமோ தெரியவில்லை.. உங்கள் அமெரிக்காவிலேயே டிரெம்புக்கு அவ்வளவு சப்போர்ட்டு.. தேர்தல் பெரும்பானமை மக்கள் சொல்வதுதான் முடிவு.. தகரத்தில் தட்டி கொரோனோவை விரட்டு என்று பெரும்பான்மை மக்கள் ஓட்டு போட்டால் அதுதான் சட்டம்.. அதைத்தான் அரசியல்வாதிகள் பின்பற்றனும்.. பாயாசம் பாசிசம்னு பேசினால்தான் ஓட்டு போடுவேன் என்று பெரும்பான்மை மக்கள் நின்றால் அதைத்தான் அரசியல்வாதியும் ஓட்டு வாங்க செய்வான்.. அரசியல்வாதி என்ன நாட்டை திருத்தவா அரசியலுக்கு வருகிறான்..? ஓட்டு வாங்கி அதிகாரம் பெறத்தான் வருகிறான்.. ஆக அரசியல்வாதி மாற மக்கள் மாறனும்.. மக்கள் மாறாவிட்டால் பேசாமல் அந்த நாட்டில் வசிக்கும் அறிவார்ந்தவர்கள் வெளிக்கிட்டு நல்ல ஒரு நாட்டுக்கு போவது அவர்கள் பிள்ளைகுட்டிகளுக்கு நல்லது.. இல்லாட்டி பைத்தியம் பிடித்துவிடும் சிந்திக்ககூடியவர்களுக்கு..
  18. எனது பயணகட்டுரையில் யாழில் ஜேவிபிக்கு பெருகும் ஆதரவு இட்டு எழுதி இருந்தேன். அதை பலர் நம்பாமலும் இன்னும் சிலர் ஜீரணிக்க முடியாமலும் கருத்து கூறினர் யாழ் களத்திலும், வெளியே புலம்பெயர் மக்களிடம் பேசிய போதும். அதன் பின் இரு தடவை போய் வந்தேன். ஆதரவு கூடியே உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின் இன்னும் கூடி உள்ளது. எமது மக்களில் கணிசமானோர், குறிப்பாக இளையோர் பின் வருமாறு சிந்திக்கிறனர். NPP ஏனையோர் போல இல்லை. இவர்கள் மனப்பூர்வமாக இனவாதமற்ற, ஒரே இலங்கையர் என்ற அடிப்படையில் செயல்படுகிறார்கள். 48 இல் இருந்து தனித்துவத்தை காக்க போராடி நாம் அடைந்தது எதுவும் இல்லை. டக்லஸ் அங்கயன் வழி ஒத்தூதும் அரசியலும் வேண்டாம், மூன்று கட்சிகள் காட்டும் தேசியமும் வேண்டாம். புதிய வழியாக NPP யில் பங்காளர் ஆவோம். பெரும்பான்மை அல்ல, யாழ் மாவட்டத்தில் இப்போதும் தமிழ் தேசிய கொள்கைக்கே ஆதரவு அதிகம், ஆனால் யாழில் கணிசமனா பலர் இப்படி நினைப்பதாக எனக்குப்படுகிறது. மட்டகளப்பில் நிலமை அவ்வளவு மாறி இருப்பதாக படவில்லை. கொழும்பு வாழ் வடகிழக்கு தமிழர் கிட்டதட்ட பெரும்பான்மை NPP யுடன் என்றே நினைக்கிறேன். காலம் மாறுகிறது - அதற்கேற்ப யூடியூப்பர்ஸ்சும் மாறுகிறார்கள். விற்கும் பொருளைத்தான் அவர்கள் விற்பனை செய்வார்கள்.
  19. சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்? என்னால் பதில்கூற முடியவில்லை, பதில்கூறிப் பிள்ளையின் மனதில் இனத்துவேசத்தையும், என் இயலாமையையும் தெரிவித்து அவர் மனதில் வன்மத்தையும், கவலையையும் வளர்த்துவிட விரும்பவில்லை. உழுகிற மாடானால் உள்ளூரில் விலைப்டாதா! என்ற பொன்மொழியும் என்மனதைக் குடைகிறது. என் மதிப்புக்குரிய யாழ்கள உறவுகளே!! அவருக்கு நான் என்ன பதில் கூறலாம்?????
  20. கவலை வேண்டாம் சிறியர் . ....... எனது வரலாற்றுச் சிறப்பு மிக்க கணிப்பு ஏற்கனவே பதியப் பட்டு( 3ம் பக்கத்தில்) தேர்தல் ஆணையாளராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன் ......... ஆயினும் கவனித்துத் தேடியமைக்கு நன்றி . .....! 😂
  21. இந்த எருமை தானே... அமைச்சு பதவியில் இருக்கும் போது, முழு வெறியில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு துப்பாக்கியுடன் சென்று, தமிழ் கைதிகளை முழங்காலில் இருக்கச் செய்து, தனது துப்பாக்கியை காட்டி சுட்டுக் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்தது. மேல் நாட்டில்... அப்படி வாயாலோ, செய்கையாலோ கொலைக்கான எச்சரிக்கை விடுத்தால்... கொலை செய்ய எத்தனித்த வழக்காக பதிவு செய்யப் படும். காலம் எவ்வளவு விசித்திரமானது. நீ செய்ததை, உனக்கே திருப்பி அடிக்கும். வினை விதைத்தவன்... வினையைத்தான் அறுவடை செய்வான்.
  22. கணிப்புத்தானே... எப்படியும் இருக்கலாம், ரசோதரன். ஆனால்... நிஜம் வேறாக இருக்கும் என்பது என் கணிப்பு. சுமந்திரன் வென்றாலும், தோற்றாலும்... வெடி கொளுத்தி கொண்டாட இரண்டு குரூப், வெகு ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கு. 🤣
  23. அது என்ன தெரியுமா தமிழ்சிறி, இவர்கள் என்னதான் படிச்சிருந்தாலும் இவர்கள் சார்ந்த கட்சியும் அதன் கொள்கைகளும் வாக்குறுதிகளும் பரப்புரைகளும் மிக மிக பழமையான உத்திகள். அந்த உத்திகள் இந்த டிஜிட்டல் காலத்தில் பத்து வயசு பையனைகூட ஏமாற்ற பயன்படாது என்பது தெரியாமலே ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.. அதற்கு உதாரணம் இது உழுத வயலை மட்டுமல்ல ஏற்கனவே முளைவிட்ட நிலத்தில் ஏரோட்டும் முதல் தமிழனும் இவர்தான். ஏர் கார ஐயா என்னமோ குனிஞ்சு பாக்குறமாதிரி தெரியுது , அவர் மைண்ட் வாய்ஸ் குறுக்காலபோனது படம் காட்டுறன் எண்டு நான் வைச்சிருந்த ஒரு ஏரையும் உடைச்சு போட்டுதே என்றொரு சுமந்துவ திட்டுற மாதிரி இருக்கு .
  24. "என் பிறந்த நாளில்" [01 / 11 / 2024] "நவம்பர் ஒன்று கதிரவன் ஒளிர்கிறான் நவீன உலகில் புத்தன் அழுகிறான் நலிந்த மக்கள் விடிவை நோக்கினம் நம்பிக்கை கொண்டு நானும் எழுகிறேன்!" "வானில் விண்மீன் கண்ணைச் சிமிட்டுது வாழையிலைத் தோரணம் காற்றில் ஆடுது வாசனைப் பண்டம் மகிழ்வைக் கொடுக்குது வாழ்த்துப் பாடி வெண்புறா பறக்குது!" "அத்தியடி மண்ணில் நானும் உதித்தேன் அ-க-தி என்று பெயரைப் பொறித்தேன் [அத்தியடி - கந்தையா - தில்லைவிநாயகலிங்கம்] அன்பு கொண்ட உலகம் கண்டேன் அளந்து எடுக்கும் அறிவும் கொண்டேன்!" "அயராது உழைக்கும் தந்தை உடன் அனைவரையும் அணைக்கும் தாய் உடன் அண்ணன் அக்கா துணை உடன் அடி எடுத்து நடக்கத் தொடங்கினேன்!" "விளையாட ஒரு துணை வந்தது விழுந்தால் கைகொடுக்க கை வந்தது விவேகம் படைத்த தம்பி பிறந்தான் விழிப்பு அடைந்து பொய்களை எறிந்தேன்!" "யாழ்மத்திய கல்லூரி என்னை வரவேற்றது யானை முகத்தானின் உண்மை அறிந்தேன் யாகத்தீயில் சமயம்சாதி போட்டு எரித்தேன் யார் என்பதின் விளக்கம் அறிந்தேன்!" "அறிவிற்கு பத்தொன்பதில் பேராதனை சென்றேன் அயராது படித்து பொறியியல் கற்றேன் அறுபது ஆயிரம் கனவு கண்டேன் அடையாளம் மறுக்கும் அரசை வெறுத்தேன்!" "ஆக்கம் கொண்ட சமூகம் வேண்டும் ஆசை அடக்கம் இரண்டும் வேண்டும் ஆதிரனாக என்றும் வாழ வேண்டும் ஆராய்ந்து எடுக்கும் திறன் வேண்டும்!" "இறுமாப்பு என்னுடன் பிறந்த ஒன்று இதயங்கள் என்றும் உண்மை ஒளி இகழ்ச்சி புகழ்ச்சி கடந்து வாழபவன் இன்பம் துன்பம் சமமாக மதிப்பவன்!" "ஈரம் இல்லா உலகமும் பார்த்தேன் ஈவிரக்கம் அற்ற அரசையும் கண்டேன் ஈன்றவளும் இல்லை இணைந்தவளும் இல்லை ஈசனைக் கேள்விகேட்க நெஞ்சம் துடிக்குதே!" "உலகத்தை கட்ட பொறியியல் படித்தேன் உண்மையைக் காண பகுத்தறிவு கொண்டேன் உண்பது நாழி உடுப்பவை இரண்டே உணர்ந்து நடந்தால் மனிதம் வாழுமே!" "ஊரை விட்டு ஊரு போனேன் ஊசி முனையில் உயிரைப் பிடித்தேன் ஊதிக் கெடுக்கும் கொடியவர் முன்னே ஊமையாய் இருந்து கடந்து சென்றேன்!" "எறும்புகள் போல் சுமை தாங்கினேன் எண்ணங்கள் வளர்த்து அறிவைக் கூட்டினேன் எச்சில் இலை நக்குவான் அல்ல எரிவனம் கண்டு அஞ்சுபவனும் அல்ல!" "ஏற்றம் இறக்கம் என்னை வாட்டவில்லை, ஏழை பணக்காரன் என்னிடம் இல்லை ஏசி எவரையும் திட்டுவதும் இல்லை ஏமாற்று பேர்வழியை நம்புவதும் இல்லை!" "ஐயம் அற்ற வாலிப பருவத்தில் ஐயனார் கோயிலிலும் கும்மாளம் அடித்தேன் ஐதிகம் மதம் சடங்குகள் அறியேன் ஐயன் என்னை வாழ விடுங்கள்!" "ஒருவராய் இருவராய் பலராய் திரிந்தேன் ஒருவருக்கு ஒருவர் துணை புரிந்தேன் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒதுங்கிப் போனால் இருப்பதும் போகும்!" "ஓடும் உலகில் நானும் ஓடினேன் ஓதி எவரையும் கெடுக்க மாட்டேன் ஓசைநயம் கொண்ட வாழ்க்கை வாழு ஓரமாய் பதுங்கும் வாழ்வைத் துற!" "ஒளவையார் உரைத்த அறிவுரை ஆகினும் ஒளதடமாய் ஏற்றத்தை மட்டும் எடுப்பேன் ஔவியம் என்னும் அழுக்காறு இல்லை ஔரப்பிரகம் என்னும் ஆட்டுமந்தை நானல்ல!" "எளிமை வாழ்வு தூய்மை தர எதிலும் பற்றற்ற தனிமை வர எனக்குள் நானே எதையும் அலச என்போக்கில் வாழப் பழகி விட்டேன்!” "பச்சிளம் குழந்தையாய் தவழ்ந்து வளர பருவ வாலிபனாய் முரடாய் நடக்க படிப்பு கொஞ்சம் திமிராய் மாற பழக்க வழக்கம் கரடாய் போச்சு!” "நானாய் வாழ அமைதி தேடினேன் நாலும் தெரியாதவன் என்று திட்டினர் நாலு பக்கமும் ஓடித் திரிந்தேன் நாயாய் அலைகிறான் என்று கூறினர்!” "உறங்கி கிடைக்கா நெஞ்சு ஒருபக்கம் உலகம் துறக்கா ஆசை ஒருபக்கம் உருவம் மாற்றும் வயது ஒருபக்கம் உறவை நினைக்கும் மனது ஒருபக்கம்!” "என்னை நினைக்க சிரிப்பு வருகுது என்னவளை நினைக்க அழுகை வருகுது எழுதுகோல் எடுத்து ஆத்திரம் தீர்க்கிறேன் எழுச்சி கொண்ட தேசம் தேடுகிறேன்!" "பேச்சு மூச்சு நிற்க முன்பு பேயென என்னை விரட்ட முன்பு பேரப் பிள்ளைகள் சூழ்ந்து நிற்க பேரானந்தம் தரும் மரணம் தழுவட்டும்!” [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  25. காகம் இருக்க பனம்பழம் விழுந்ததா? பனம்பழம் விழுந்தா பிறகு காகம் இருக்குதா?
  26. பிறந்த நாள் வாழ்த்துகள்.
  27. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குங்கள்: மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் ஜனாதிபதிக்கு கடிதம் November 1, 2024 2024 செப்டம்பர் ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான காலப்பகுதியிலும் நவம்பரில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னதாகவும் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் இந்த கடிதத்தை எழுதுகின்றது. இலங்கை தொடர்ந்தும் பல சவால்களை எதிர்கொண்டுள்ள ,மிக மோசமான பொருளாதார வன்முறைகள்; மற்றும் வன்முறைகளில் இருந்து மீண்டு மீட்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்ற சூழமைவில் உடனடியாக கவனம் செலுத்தப்படவேண்டிய முக்கிய விடயங்கள் குறி;த்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றோம். 2022 அரகலய இயக்கம் ஆட்சிமுறை மாற்றம்,ஊழலிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், வெளிப்படைதன்மை ஆகியவற்றினை வெளிப்படுத்தியது. இவை மக்களின் நம்பிக்கையை அழித்துள்ள விடயங்கள். இலங்கையில் காணப்படும் நிறைவேற்று அதிகாரம் ,அரசியலமயப்படுத்தப்பட்ட நிறுவனங்கள், மற்றும் தண்டனையின்மை கலாச்சாரம், போன்றவற்றை முடிவிற்கு கொண்டுவருவதற்காக நிர்வாக சீர்திருத்தங்களின் முக்கிய தேவையாக உள்ளதை மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் உட்பட ஏனைய அமைப்புகள் தொடர்ந்து சுட்டிக்காட்டிவந்துள்ளன. அர்த்தபூர்வமான ஆட்சிமுறை சீர்திருத்தம்,நாட்டில் ஊழல் கலாச்சாரத்திற்கு எதிராக போராடவேண்டியதன் அவசியம்,நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தல் உட்பட பொறுப்புக்கூறலை கொண்டுவருதல் போன்ற விடயங்கள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது நீங்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பை நாங்கள் அறிந்துள்ளோம் அங்கீகரிக்கின்றோம். மேலும் சமீபத்தைய நிகழ்வுகள் இலங்கையின் வன்முறை மற்றும் பலவீனமான சமாதானங்கள் குறித்த அனுபவங்களை மீள நினைவுபடுத்துகின்றன. மோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் தீர்வைகாண தவறியமை ஏற்கனவே காணப்படும் மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன் புதிய பதற்றங்களை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த நேரத்தில் 2024 ஒக்டோபரில் பயங்கரவாத தடைச்சட்டம் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.இது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து நீங்கள் வெளியிட்ட முக்கியமான வாக்குறுதி குறித்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது. சவால்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில் ,நீங்கள் உங்கள் தேர்தல் விஞ்;ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளை திரும்பிபார்க்கவேண்டும், எனவும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை வெளிப்படையான அனைவரையும் உள்வாங்கி முன்னெடுக்கவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த மாற்றங்களில் பலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் அவசியம் என்பதையும்,புதிய நாடாளுமன்றத்திலேயே இதனை முன்னெடுக்க முடியும் என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எனினும் அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகள் குறித்த உறுதி;ப்பாட்டை மீள உறுதி செய்யவேண்டும்.மேலும் புதிய நாடாளுமன்றம் இந்த சீர்திருத்தங்களை தாமதமின்றி முன்னெடுப்பதற்கான ஆயத்தவேலைகளை செய்யவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகி;ன்றோம். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கு அடையாளமாக விளங்குகின்ற சம்பவங்கள்- இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கு அடையாளமாக விளங்குகின்ற நன்குஅறியப்பட்ட சம்பவங்கள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்வது பொதுமக்களின் நம்பிக்கையை மீள ஏற்படுத்துவதற்கு மிகவும் அவசியமான விடயம். இதில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் உட்பட ஏனைய சம்பவங்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துதல் அடங்கும். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குதல்- நிறைவேற்றதி;கார முறையை நீக்கவேண்டும் என நீண்டகாலமாக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது, உங்கள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் கடைசி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விடயத்தில் சீர்திருத்தங்களை ஆரம்பிப்பதற்கு நீங்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும்- 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தேசிய இனப்பிரச்சினை மற்றும் இலங்கையின் சிறுபான்மையினர் மத்தியில் பல தசாப்தங்களாக நிலவும் துயரங்களை தீர்ப்பதற்கான அர்ப்பணிப்பை காண்பிப்பதற்கான முதல்படியாகும். தற்போதுள்ள அரசியலமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது இனமத சிறுபான்மையினரின் நம்பிக்கைகளை மேம்படுத்துவதற்கு இன்றியமையாத முன்நிபந்தனை என்பதை நாங்கள் கவனத்தில் கொள்கின்றோம். சட்ட சீர்திருத்தம் முன்மொழியப்பட்ட சட்டங்கள் மனித உரிமைதராதரங்களிற்கு ஏற்ப காணப்படுவதை உறுதி செய்யவும், சிறுபான்மையினத்தவர்களை பாதிக்கும் தவறான பயன்பாட்டிலிருந்து பாதுகாக்கவும்,சீர்திருத்தங்களை நாங்கள் கோருகின்றோம். பயங்கரவாத தடைச்சட்டம் இணையவழிபாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை நீக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம், கடந்த காலங்களில் வன்முறைகள் நிகழ்ந்ததை ஏற்றுக்கொள்ளுதல் – இலங்கை முழுவதிலும் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் உண்மை நீதியை தேடி மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களின் வேண்டுகோளிற்கு தீர்வை காண்பதற்கான நேர்மையான முயற்சிகள் அவசியம். பொறுப்புக்கூறல் தொடர்பான சுயாதீனமான நடவடிக்ககளை ஆரம்பித்தல் ,ஆழமாக வேரூன்றியுள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்தி;ற்கு முடிவை காண்பதற்காக உண்மையை தெரிவிக்கும் முயற்சிகளையும் முன்னெடுக்கவேண்டும். https://www.ilakku.org/பயங்கரவாத-தடைச்சட்டத்த-5/
  28. பிஜேபி,காங்கிரஸ்.திமுகவோடு சீமான் கூட்டணிவைத்தால் நான் முதல் ஆளாக எதிர்ப்பேன். ஆனால் விஜய் பிஜேபியோடு எதிர்காலத்தில் கூட்டணி வைக்கமாட்டார் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? அப்படி வைத்தால் விஸஜயை எதிர்ப்பீர்களா? எப்படி இருந்த போதும் இப்போது விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.திராவிட வாக்குகள் சிதறட்டும். தமிழத்தேசியம் உறுதியாக வளரட்டும்.உறுதியற்ற கற்பனையான திராவிடத் தேசியம் அழியட்டும். விஜய் மோடி சந்திப்பு https://www.vikatan.com/government-and-politics/26950-
  29. இந்த ஆடுகளத்தினை சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக்கியுள்ளார்கள் இந்தியர்கள் என நினைக்கிறேன், முதல் நாள் ஆட்டத்திலேயே வேகப்பந்திற்கு பெரிதும் உதவவில்லை, நியுசிலாந்து இந்த ஆட்டத்தினை 3 ஆம் நாளுக்கு எடுத்து சென்றால் இந்தியாவின் நிலை இன்னும் மோசமாகும், ஒப்பீட்டளவில் இந்திய அணியே சிறந்த சுழல் பந்து வீச்சாளரைக்கொண்ட அணி இந்தியணிக்கு தற்போது வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளது ஆனாலும் நியுசிலாந்து அணியினை 150 ஓட்ட்டங்களுக்குள் சுருட்டி விட்டால் வெற்றி வாய்ப்புண்டு. இந்த ஆடுகளம் புனே ஆடுகளம் போல பந்து தரையில் பட்டு வேகமாகவோ அல்லது சமச்சீரற்ற பந்து எழுச்சி கொண்ட ஆடுகளம் அல்ல என கூறுகிறார்கள், பந்து தரையில் பட்டு மெதுவாக எழுவதாக கூறுகிறார்கள்(தூசி உள்ள) பெரும்பாலும் அதிக வெப்பம் காரணமாக தரை விரைவாக உடைய வாய்ப்புண்டு அத்துடன் பந்து வீச்சாளர்களின் பாதத்தடத்தினால் உருவாக்கப்படும் பகுதிகளில் பந்தினை கணிப்பது சிரமாகும், இந்தியா குறைந்த ஓட்டங்களில் விரைவாக நியுசிலாந்தினை அவுட்டாக்கினால் வெற்றி பெறலாம் என கருதுகிறேன்.
  30. எனக்கு வாக்கு அளியுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார். அப்போ அவர் அதிகரித்த சம்பளத்தை அளிக்கும்வரை தேர்தலை தள்ளிப்போடலாமா? இவர் ஆட்சிக்காலத்தில் கொடுத்த உறுதி மொழிகளை நிறைவேற்றினாரா? சுதந்திர தினத்துக்கு முன் தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என்று அறிவித்தாரே, அதற்கு என்னாயிற்று? அனுராவின் வாயை கிளறி அவரது வாக்குகளை குறைக்கவும், அதேநேரம் தமது வாக்கு வங்கியை உயர்த்தவும் பலர் முயற்சிக்கின்றனர். ஆனால் அவரும் தேர்தல் முடியும்வரை எந்த விளக்கமும் பதிலும் அளிப்பதாக இல்லை. அதன் பின் இவர்கள் எதுவும் கேட்க போவதில்லை ஆகவே கேட்க வேண்டியவற்றையெல்லாம் இப்போதே கேட்டு விடட்டும். பதில் செயலில் கிடைக்கும், ஆட்சி முழுமையாக அவர் கையில் வந்தபின். அதுசரி.... ஜனாதிபதியாக எத்தனையோ பேர் வந்தார்கள், போனார்கள், ரணிலார் அரசை கவிழ்த்தார்கள், அவர்கள் மேற்கூட இவர் கோபப்பட்டதில்லை, ஏன் அனுரா மீது இவ்வளவு கடுப்பு, சாபம்? ஒருவேளை தமிழருக்கு ஏதாவது நன்மை செய்து விடுவாரோ என்ற பயமா? அரசியல்வாதிகளுக்கு கஸ்ரகாலந்தான். ஆனாலும் பின்னாளில் இந்த திட்டங்களை கைவிடும் நிலையும் வரலாம். இப்போ தனது அரசியல் எதிரிகளை தள்ளி வைப்பதற்கும் மக்களின் ஆதரவை பெறுவதற்கும் அதிரடியாக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், பின்னாளில் தாமும் அதனால் பாதிக்கப்படுவோம் எனும்போது மாற்றப்படலாம்.
  31. என்னிடம் அப்படி கூறியவருக்கு நான் நீங்கள் மேலே எழுதியதையே பதிலாக கொடுத்தேன்🙏.
  32. குழப்பம் வேண்டாம். சாப்பாட்டில் ஒரு கறியில் காரம் இல்லை, மற்ற கறியில் உப்பு குறைவாக உள்ளது, புளி குறைவாக உள்ளது, வடை , பாயசம், மிளகாய்ப் பொரியல் இல்லை என்று ஒவ்வொரு பந்தியிலும் இருந்து எழுந்து வெளியே வருபவன் இறுதியில் சோறும் இல்லாது இருப்பான். அந்த நிலையிலேயே மக்கள். அது தான் மக்களை இவ்வாறான சிந்தனைகளை நோக்கித் தள்ளியது.
  33. இந்தியா இராணுவகாலத்தின் போது வரலாற்று சமரான நெடுங்கேணி பாடசாலை தாக்குதலை நேரடியாக வழிநடத்தி பெரும் வெற்றியை பெற்று முல்லை மண்ணிக்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்து அனைத்து போராளிகளிடமும் அன்பாக பழகி பல போராளிகளை சண்டைகாறராக வளர்த்த பெரு வீரன். பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் மேற்பார்வையில் பல சமர்களை வென்றவர். மணலாற்றில் தலைவர் தங்கியிருந்த போது விசேடமாக அழைக்கப்பட்டு முன்னணி முகாமான கையிலமலை முகாமின் பெறுப்பாளாராக தலைவரால் நியமிக்கப்பட்டார். எல்விற்ரனை தாண்டிதான் இந்திய இராணுவம் உள்ளே வரமுடியும் என தலைவர் சொன்னாராம். பின் இலங்கை அரசுடன் 1990களில் சண்டை தொடங்கிய போது பலாலி வசாவிளான் முன்னரங்க பகுதியில் முன்னேற முற்பட்ட இராணுவத்தை முன்னேற விடாது தடுத்தார். கொக்காவில் முகாம் தகர்ப்பு, மாங்குளம் முகாம் தகர்ப்பு, என பல வெற்றிசமர்களை நேரடியாக களத்தில் பேராடி பல விழுப்புண்களை தாங்கியவர். இடைப்பட்ட காலத்தில் விலத்தி இருந்தாலும் இறுதி சமரில் களத்திற்கு போய் முடியுமட்டு களமாடிய எங்கள் போர்வீரன் இன்று எம்மைவிட்டு தாய் மண்ணை விட்டு இறுதி பயணத்தில் இணைத்துவிட்டார். அண்ணன் உங்களின் தியாகம் எமது மண் கனம் செய்யும். உங்களின் சாதனைகள் பேசப்படவேண்டியவை. வலிகளுடன், ஈழவன்
  34. இல்லை இதுதான் உங்கள் போன்றோரின் பிழை. நடப்பதை சொன்னால், சொல்லுபவருக்கு வண்ணம் பூசுவதில் நேரத்தை கடத்தி விட்டு, சொன்ன விசயம் நடந்த பின் வானத்தை பார்ப்பது🤣. அனுரவுக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் தமிழர் சுய நிர்ணயத்தின் சவப்பெட்டியில் விழும் ஆணிகள் என்பதே என் நிலைப்பாடு. ஆனால் களயதார்த்தம் வேறு. நான் மேலே எழுதி இருப்பது களயதார்தத்தை, என் அரசியல் தெரிவை/ஆலோசனையை அல்ல.
  35. ஆகா ..... ஆகா ..... நட்டு நறுக்காக சொல்லிவிட்டார். அவருக்கும் தெரியும், இதில் தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அரசியல் செய்வார்கள் என்று. இனி வருங்காலத்தில் இவர்கள் மக்களுடன் கூட இருந்து சேவைசெய்தாலே அவர்கள் மக்களின் பிரதிநிதிகள். இல்லையேல் மக்கள் நேரடியாக ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநரிடம் தமது வேண்டுகோளை சமர்ப்பிக்கலாம். அதற்கு பிரதிநிதிகள் என்கிற தரகர்கள், மக்களின் வாக்குகளையும், அதிக பணவிரையத்தையும் பெற வேண்டிய அவசியமில்லை. இப்ப பாருங்கள்! அனுரா யாழ்ப்பாணம் வரும்போது மக்கள் கொடுக்போகும் வரவேற்பை. செய்வோம் என்று வாக்களித்தவர்களை வரவேற்று வாக்களித்து வாழ்த்துச்சொல்லி காத்திருந்து ஏமாற்றப்பட்டவர்களுக்கு, செய்து காட்டிவிட்டு வாக்குக்கேட்டு வருபவரை காணாமல் இருப்பார்களோ? இதோடு அனுரா நல்லவராக இருந்தால்; அந்த மக்களின் வெள்ளை உள்ளத்தை பார்த்து, மனம் மாறுவார் இல்லையேல் பத்தோடு பதினொன்று. இவரை அனுரா ஆளுநராக நியமித்தபோது, யாரோ ஒரு உறவு, அதற்கான காரணத்தை பதிந்திருந்தார், யாரென்று மறந்துவிட்டேன். அந்த திரியில் பார்த்தீர்கள் என்றால் தெரிந்து கொள்ளலாம். போன ஆண்டு என நினைக்கிறன், இங்குள்ள ஒரு ஆலயத்தை திறக்கப்போகிறார்கள் என்று சொல்லி இராணுவம் புடைசூழ தாடியர் வாகனத்தில் வந்தவர், அப்போது செய்தியாளர் உட்ச்செல்ல அனுமதியளிக்கப்படவில்லை. தாடியரிடம் தாங்களும் உட்ச்செல்ல அனுமதி வாங்கித்தருமாறு கேட்டிருந்தார்கள். அவர் உள்ளே போனவர்தான் காத்திருந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஏனென்றால், அங்குள்ள நிலைமைகளை இவர்கள் படமெடுத்து மக்களுக்கு தெரியப்படுத்தி பிரச்சனையை உருவாக்குவார்களாம். தங்கள் நிலத்தை பார்வையிட மக்களுக்கு உரிமையில்லை. இது ஜனநாயக நாடு, இறைமையுள்ள நாடு என கர்ச்சிப்பார்கள்.
  36. மிக தெளிவான பார்வை. பாயாசம், தேவர் ஜெயந்தி பற்றிய உங்கள் கூற்றுடன் முழுவதும் உடன்பாடுதான். ஆனால் தமிழ் நாடு நாள் விடயத்தில் திமுகவுக்கு மாறான நிலைப்பாட்டை எடுத்தாலும், சங்கரலிங்கனார், அண்ணா இருவரின் முயற்சியையும் சுட்டி காட்டி, ஒரு கண்ணியமான அணுகுமுறையை கடைபிடிக்கிறார். சீமானை போல “அண்ணா தமிழருக்கு துரோகம் இழைத்தார்” என வரலாற்றை புரட்டவில்லை. சீமான், விஜை இருவரும் அரசியல் செய்யும் நோக்கம் வேறு. ஒரு தோல்வி பட இயக்குனராக - சிங்கிள் டீக்கு நடிகர்களுக்கு வசனம் சொல்லி கொடுக்கும் இணை இயக்குனராக போக வேண்டிய நிலையில், அரசியலுக்கு வந்து, பஜரோ, ஊட்டி எஸ்டேட், காளிமுத்து மகள் என செட்டிலாகிவிட்டவர் சீமான். அவரின் நோக்கம் ஒரு போதும் தேர்தலில் வெல்லுவதில்லை. அவரின் நோக்கம் எல்லாம் இதை வைத்து மேலும் எப்படி சம்பாதிப்பது என்பதே. ஆனால் விஜை அப்படி அல்ல, சும்மா பப்படம் எடுத்தாலே பெரிய ஹிட் ஆகும் நடிகர். அவர் வருவது - புகழுக்காக. முதலமைச்சர் ஆவதுதான் குறி. ஆகவே இருவரும் ஒன்றல்ல. ஆனால் விஜை இறங்கி வேலை செய்ய வேண்டும். இல்லாவிடின் தேறாத கேசுதான். இந்த கருத்தில் ஈழத்தமிழன் அரசியல் ஞானம் உடையவன், தமிழ் நாட்டு தமிழன் காட்டுமிராண்டி என்பதாக ஒரு தொனி தெரிகிறது. ஆனால் உண்மை எதிர்வளமானது. 75 வருடங்களில் வன்முறை இல்லா அரசியல் கலாச்சாரத்தை கைக்கொண்டு, சரியான தலைமைகளை தேர்ந்து, இந்தியாவின் 2ம் மாநிலமாக வளர்ந்து நிற்பவர்கள் அவர்கள். தமிழக மக்கள் அரசியல் தன்மையானது. வாழ்க்கை சுட்டி, கல்வியறி அதிகமாய் இருந்தும் ஒரு நியாயமான விடுதலை போராட்டத்தையே போட்டடித்த கூட்டம் நாம். ஒப்பீட்டளவில் அரசியல் காட்டுமிராண்டிகள் ஈழத்தமிழர்தான். தன்மையான தமிழக அரசியல் கலாச்சாரத்தில் ஈழத்தமிழர் பாணி காட்டு மிராண்டி அரசியல் செய்பவர் சீமான்.
  37. டூ பிலஸ்சிய‌ விட‌ தென் ஆபிரிக்காவில் ந‌ல்ல‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ளை ஏல‌த்தில் எடுக்க‌லாம் 40வ‌ய‌தை தாண்டின‌வ‌ர்க‌ள் ஓய்வை அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம் இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விட‌னும் ப‌ல‌ கோடி காசு சாம்பாதிச்சாச்சு குடும்ப‌ம் ம‌னைவி பிள்ளைக‌ளுட‌ன் நேர‌த்தை ஒதுக்க‌லாம்.........................
  38. நீங்கள் கூறியது சரிதான் ஐசிசி இணையத்தளத்தில் இரண்டு தொடர் மட்டும் குறிப்பிடப்பட்டதால் முன்பு பதிந்தது தவறென நினைத்து அவ்வாறு பதிவிட்டேன் மேல் உள்ள பதிவில் நியுசிலாந்து கேரல்டினை கூகிள் மொழிபெயர்ப்பின் உதவியுடன் பதிந்துள்ளேன் , அதில் இந்த இந்திய தொடரிலும் அவர் பணியாற்றுகிறார் எனப்தனை உறுதிப்படுத்தியுள்ளது.
  39. கழகங்களைவிட செந்தமிழன் சீமான் அண்ணா ஜாஸ்தியாக பயப்படுகின்றார்போல் உள்ளது. கடைசிவரை மாநாட்டுக்கு தனக்கு அழைப்பு கிடைக்கும் என அண்ணண் எதிர்பார்த்தார். சீச்சீ இந்த பழம் புளிக்கும் மொமண்ட் இது!😂
  40. தமிழரின் தாயகத்தைக் கூறுபோட்டு, அவர்களின் வளங்களைச் சூறையாடவே அமைக்கப்பட்ட சிங்கள‌க் குடியேற்றங்கள் கொக்கிளாய் சிங்கள‌க் குடியேற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பெள‌த்த விகாரை வவுனியா மாவட்டத்தின் பதவிய பகுதியில் ஜெயவர்த்தனவின் அரசாங்கம் நடத்திவரும் அவசர அவசரமான சிங்கள் குடியேற்றங்கள் குறித்த தமது அதிருப்தியினைத் தெரிவிக்க அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஜெயவர்த்தனவையும், லலித் அதுலத் முதலியையும் கார்த்திகை மாதம் 13 ஆம் திகதி சந்தித்தனர். நடைபெற்றுவரும் சிங்களக் குடியேற்றத்தினை உடனடியாக நிறுத்துமாறு அவர்கள் கோரினர். இக்குடியேற்றம் முன்னெடுக்கப்படுவதால் தமிழர்கள் அடைந்துவரும் மனதளவிலான பாதிப்புக்களை அவர்கள் எடுத்துரைத்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் செல்வாக்கு தமிழ் மக்கள் மத்தியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருவதையும் ஜெயாரிடம் அவர்கள் எடுத்துரைத்தனர். "இந்த அரசாங்கத்துடன் எதற்காகப் பேசி வருகிறீர்கள்? என்று தமிழ் மக்கள் எங்களிடம் கேட்கிறார்கள்" என்று அமிர்தலிங்கம் ஜெயாரிடம் தெரிவித்தார். ஜெயாருடனான சந்திப்பிற்குப் பின்னர் கடுந்தொனியில் ஒரு கடிதத்தையும் முன்னணியினர் ஜெயவர்த்தனவிற்கு அனுப்பினர். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் குடியேற்றப்பட்டிருக்கும் சிங்களச் சிறைக்கைதிகளும், சிறைக் காவலர்களும் அருகிலிருக்கும் தமிழ்க் கிராமங்களுக்குள் நுழைந்து தமிழர்களை துன்புறுத்தி வருவதாக அவர்கள் அதில் தெரிவித்திருந்தனர். தமிழ்க் கிராமங்களுக்குள் நுழையும் சிங்களைச் சிறைக்கைதிகள் அக்கிராமங்களைக் கொள்ளையிட்டு வருவதாகவும், வீடுகளும் உடமைகளும் அவர்களால் அழிக்கப்பட்டு வருவதாகவும், பல தமிழ்ப் பெண்களை இவர்கள் பாலியல் வன்புணர்வு செய்துவருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். பாலியல் வன்புப்ணர்வுகள் தொடர்பான குறிப்பில் ஒவ்வொரு சம்பவமும் விலாவாரியாக முன்னணியினரால் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் முன்னணியினரின் எந்த வேண்டுகோளையும் ஜெயார் கண்டுகொள்ளவில்லை. மேலும் அவரது அமைச்சர்களால் முல்லைத்தீவுக் கரையோரப்பகுதிகளில் சிங்கள மீனவக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்காக 1,000 வீடுகளைக் கட்டப்போவதாக வெளிப்படையாக அறிவிக்கப்பட்டபோது தமிழ் மக்கள் மேலும் கொதித்துப் போயினர். மீன்பிடி அமைச்சரான பெஸ்ற்றஸ் பெரேரா, இந்த ஆயிரம் வீடுகளும் கொக்கிளாய் நாயாறு ஆகிய தமிழ்க் கிராமங்களிலேயே அமைக்கப்படவிருப்பதாக அறிவித்தார். தமிழர் தாயகத்தில் சிங்கள அரசாங்கம் செய்யவிருக்கும் கைங்கரியம் பெஸ்ற்றஸ் பெரேராவின் முல்லைத்தீவுச் சிங்களக் குடியேற்றத் திட்ட அறிவிப்பினூடாக வெட்ட‌ வெளிச்சமாகியது. வலி ஓய சிங்களக் குடியேற்றத்தினூடாக தமிழ் மக்களின் வளமான பயிர்ச்செய்கை நிலங்களை சிங்களவர்கள் ஆக்கிரமிக்க முல்லைத்தீவு கரையோரத்தில் திட்டமிடப்பட்டிருக்கும் சிங்கள மீனவக் குடியேற்றங்களால் தமிழரின் மீன்பிடி வளமும் சிங்களவர்களால் சூறையாடப்படும் நிலை உருவாக்கப்பட்டிருந்தது.
  41. உங்கள் பேரபிள்ளை பல்லாண்டு காலம் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ மனதார வாழ்த்துகின்றேன்🙏
  42. இனி நான் கந்தையரை றோட்டில தெருவில கண்டால் இப்பிடித்தான் கண்டும் காணாத மாதிரி.....
  43. திரியோடு தொடர்புடைய காணொளி என்பதால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி காணொளியெடுப்பவரது அண்மைய காணொளிகள் ஏறக்குறைய அநுரவிற்கான பரப்புரையாளர்போல உள்ளதும் நோக்கப்பட வேண்டியது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  44. பிறந்தநாள் வாழ்த்துகள் தில்லை ஐயா.
  45. 🤣............... யார் மறந்தாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போல, அண்ணை.........😀. அநுர பெயில் அண்ணை, நான் பாஸ்............... அந்த வித்தியாசத்தை வைத்துத் தான் அவர் ஜனாதிபதியானவர்..............🤣. (பிறகு அவர் வேறு இடம் போய் பாஸாகியும் விட்டார்.........)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.