Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    87990
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    7048
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46783
    Posts
  4. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    10209
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/14/25 in all areas

  1. தம்பி, கேக்கிறது தனிபட்ட தேவைக்காக இல்லை. நீங்கள் எப்ப ஊரில் இருந்து புலம் வந்தீர்கள்? 2010??😎
  2. 😂🤣 அருமையான காரணம்! 2009 இலும் நீங்கள் சிறுவனா? அந்தக் காலப் பகுதியில் தானே ஆட்கள் காணாதென்று புலிகள் வலுக்கட்டாயமாக ஆட் சேர்த்தார்கள்? வெளிநாட்டிலிருந்து கூட சிலர் போனார்கள் என்று அறிந்தேன். இந்த சொத்தைக் காரணங்களை வைத்துக் கொண்டு "ஏனையோர் தப்பி வந்த கோழைகள், நான் சின்னப் பையன்" என்று அளக்காதீர்கள். சீமான் என்ற வாய்வீச்சு, தமிழக சராசரி அரசியல் வாதியை, நேரடியாக ஆயுதம் தூக்கா விட்டாலும் கூட துன்பங்களை அனுபவித்த ஈழவர்களோடு ஒப்பிட்டு ஈழ மக்களை அவமானம் செய்யாதிருங்கள்.
  3. மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த “சிலப்பதிகாரம்” ! மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த “சிலப்பதிகாரம்” ! January 4, 2025 — சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா — (அவுஸ்திரேலியாவில், விக்ரோறிய மாநிலத்தில் உள்ள பாரதிபள்ளி தயாரித்து வழங்கிய, “சிலப்பதிகாரம்” நாடக ஆற்றுகையின் அரங்கேற்ற நிகழ்ச்சிகள் கடந்த 2024 டிசெம்பர் 6 ஆம், 8ஆம் திகதிகளில் விக்டோரியாவில், டண்டினோங்க் நகரத்தில் அமைந்துள்ள, ட்றம்ப் எனப்படும் அழகிய உள்ளரங்கில்நடைபெற்றன. இந்த நாடக ஆற்றுகை பற்றிய எனது பார்வையைப் பதிவுசெய்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.) இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் முழுவதையும் உரைவடிவில் எழுதியும், உரைச்சித்திரமாக வெளியிட்டும், சிலப்பதிகாரம் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியும், பட்டி மன்றங்களை, வழக்காடு மன்றங்களையும் நடத்தியும் உள்ளவன் என்பதால், அந்த ஒப்பற்ற காப்பியத்தில் எனக்குள்ள ஒரளவு பரிச்சியத்தின் பின்னணியில் இந்த நிகழ்ச்சி எப்படி இருக்கப்போகின்றது என்ற ஆர்வத்துடனும், அங்கலாய்ப்புடனும் இரண்டாம் நாள் அரங்கேற்றத்தின்போது, மண்டபத்தின் மத்தியில் வசதியான பார்வைக் கோணத்தில் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன். குறிப்பிட்டபடி, சரியாக பி.ப. 5.30 மணிக்கு, நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் அறிவித்தல் கம்பீரக் குரலில் ஒலித்தது. மங்கல விளக்கேற்றும் சம்பிரதாயமான நிகழ்ச்சி சில நிமிடங்களில் நிறைவு பெற்றதும், “திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்று இவ் அம்கண் உலகு அளித்த லான்” என்று தொடங்கும், சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்துப் பாடல், பின்னணிப் பாடகர்களின் கணீரென்ற குரலும், பக்கவாத்தியங்களின் இசையும் கலந்து இனிமை ததும்ப மண்டபத்தில் எழுந்து, பார்வையாளர்களை இருக்கைகளில் நிமிர்ந்து உட்காரவைத்தது. பாடலுக்குப் பொருத்தமாக மேடையின் பின்னணியில் தோன்றிய அழகான காட்சி, இது நடப்பது திரையிலா அல்லது தரையிலா என்று அடையாளம் காண்பதற்கு அரியதாக, இனிமையான பாடலுக்குப்பொருத்தமாக இருந்தது. முறையான நல்ல தொடக்கம்! மேடையில் அடுத்ததாக என்ன நடைபெறவிருக்கிறது என்பதைச் சொல்வதற்காகக் காட்சிகளுக்கு இடையே கதைசொல்லியாக பேச்சுக் கலையில் திறமைமிக்க இரண்டு இளம்பெண்கள், ஒருவர்மாறி ஒருவர் தோன்றி, தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம்கொடுத்துக்கொண்டிருந்தனர்.இடையிடையே, கூத்தில் கட்டியங்காரன் வருவது போல, நடனமணிகளின் நடனம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவே, பின்னணிப் பாடல்களுடன் அழகிய காட்சிப்படுத்தலாக இடம்பெற்றுக்கொண்டிருந்தது. சிலப்பதிகாரம் உண்மையில் ஒரு நாடகக் காப்பியமே. அதன் முதலாவது அங்கம் கோவலன் கண்ணகி திருமணமே!அவ்வாறே, இந்த நாடகமும், இனிய பாடல்களின் பின்னணியோடு அழகாக நடனம் ஆடியவாறு நடனமணிகள் அந்தத் திருமண அறிவித்தலைப் பூம்புகார் நகர மக்களுக்கு அறிவிப்பதில் இருந்து தொடங்குகிறது. திருமண அறிவிப்பு சிறப்பாக நடந்தது. “கோவலன் வந்தான் அவைக்குக் கோவலன் வந்தான் என்றும், கண்ணகி வந்தாளே அவைமுன்னே கண்ணகி வந்தாளே”என்றும் கோவலனும் கண்ணகியும் முதன்முதலில் மேடையில் தோன்றும்போது, கூத்து மரபின் அடிப்படையில், பாடிக்கொண்டே தம்மை அறிமுகம் செய்து ஆடிவருகின்ற காட்சி மிகவும் அற்புதமாக இருந்தது. திருமணத்தின் பின்னர் கோவலனும் கண்ணகியும் மங்கல மன்றலில் மகிழ்ந்திருக்கும் வேளையில், கோவலன் கண்ணகியைப் புகழ் மொழிகளால் பாராட்டுவது சிலப்பதிகாரத்தில் மிகவும் சிறப்பான பகுதி. அப்போது கோவலன் சொல்வதாகச் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பாடல், “மாசறு பொன்னே வலம்புரி முத்தே…”என்று தொடங்குகின்றது. இந்தப்பாடல் காதல் உணர்வோடு பாடப்படவேண்டியது. காதல்பாடல்களுக்குரிய மெல்லிசையில் பாடல் அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். உதாரணமாக “தர்பாரி கானடா” இராகத்தில் பாடியிருக்கலாம். அதற்கேற்றவாறு, மிகவும் இயல்பான முகபாவமும், மிகைப்படாத அபிநயமும் இருந்திருந்தால் காட்சிக்குப் பொருத்தமாக இருந்திருக்கும். கூத்துப்பாடல் போலத் துள்ளல் இசையில் பாடலும், அதற்குரிய அபிநயமும் இடம்பெற்றிருப்பது முதலிரவன்று கோவலனும் – கண்ணகியும் கதைபேசி மகிழ்ந்து குலாவியிருக்கும் காட்சியோடு ஒன்றிணையவில்லை என்பதுடன், பாடலின் பொருளுக்கும் பொருந்துவதாக இல்லை என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். இற்றைக்கு 1800 வருடங்களுக்கு முன்னர், காவிரிப்பூம் பட்டினம் என்று சொல்லப்படும் பூம்புகார் என்ற துறைமுக நகரத்தில், இந்திரவிழா எப்படி நடைபெற்றது என்பதை, சிலப்பதிகாரத்தை நன்கு படித்தறிந்தவர்களும்கூடக் கற்பனை செய்திருக்க முடியாத அளவுக்கு, மேடையிலே அழகாக, கச்சிதமாக, என்றுமே மனதை விட்டு அகலாத வகையில் நம்கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது இந்த நிகழ்ச்சி. இந்திர விழாக்காட்சியைப் பார்க்கிறோமா அல்லது அதில் கலந்துகொண்டிருக்கிறோமா என்ற மயக்க உணர்வில் சிலநிமிடங்கள் நம்மை நாமே மறந்திருந்தோம். இந்திரவிழா, மாதவி தாளம்பூவின் மடலில் கோவலனுக்குக் கடிதம் எழுதி வசந்தமாலையிடம் கொடுத்து அனுப்பும் காட்சி, கோவலன் – கண்ணகி மதுரைப் பயணம், காளி கோவில் காட்சி, கோவலனை அடையாளம் காண்பதற்காகக் கௌசிகன் மாதவிக் கொடியிடம் பேசுவதும், அடையாளம் காணலும், குரவைக்கூத்து, கண்ணகி அரண்மனை செல்லல், பாண்டிய மன்னனின் அரண்மனைக் காட்சிகள், எல்லாம் மிகவும் நேர்த்தியாக அமைந்திருந்தன. கோவலனுக்குச் சோறு படைக்கும்போது, “பனை ஓலையிலே செய்யப்பட்ட பாயிலே கோவலனை அமரவைத்து, நிலத்தின் வெப்பத்தைப் போக்க நீர் தெளித்து, அதில் வாழை இலைபோட்டு, அந்த வாழை இலையிலே சோறு படைத்தாள்”என்று சிலப்பதிகாரத்தில் சொல்லியிருப்பதை அப்படியே காட்சியாகக் காட்டியிருப்பது அற்புதம். ஆம்! பாயிலே கோவலன் அமர்ந்திருக்கிறான், அந்தப் பாயிலே இலை போடப்படவில்லை. இலை தரையிலே போடப்பட்டிருந்தது! இவ்வளவு நுணுக்கமாக சிலப்பதிகாரத்தின் நிகழ்ச்சிகளைக் காட்சிப்படுத்தியிருப்பதை எண்ணும்போது எப்படிப் பாராட்டுவது என்று வார்த்தைகளைத் தேடவேண்டியிருக்கிறது. கொலைக்களக் காட்சி மிகவும் தத்ரூபமாக அமைந்திருந்தது. கோவலன் கொல்லப்பட்டபோது பார்வையாளர்களைப் பரிதவிக்க வைத்துவிட்டது. கோவலனும், பொற்கொல்லனும், காவலர்கள் அத்தனை பேரும் அற்புதமாக நடித்திருந்தார்கள். யாராவது ஒருவரின் செயற்பாடு கண் இமைக்கும் பொழுதாயினும் முந்திப் பிந்தி ஆகிவிட்டிருந்தால் முழுக் காட்சியுமே நகைப்புக்கு இடமாகிவிடக்கூடிய, சவாலான விடயங்களை, மிகவும் வெற்றிகரமாக நிறவேற்றியிருந்தார்கள். கோவலனை வெட்டிய காவலனை மறக்க முடியவில்லை. (கண்டால் யாரும் வரச்சொல்லுங்கள்!) கோவலன், கண்ணகி பாத்திரங்களை ஏற்று நடித்தவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். அதிலும், இந்த நாடகத்தின் கோவலனைப் பார்த்த பின்னர், இது வரையில் கற்பனையாக நம் உள்ளத்தில் நீண்டகாலமாக இருந்த கோவலனின் உருவமும், பூம்புகார் திரைப்படத்தில் கோவலனாக நாம் பார்த்த எஸ்.எஸ்.இராஜேந்திரன் அவர்களது தோற்றமும் நம் மனதை விட்டு மறைந்து விட்டதுடன் இந்தக் கோவலனின் உருவமே அழுத்தமாகப் பதிந்துவிட்டது. சற்றுக் குனிந்தவாறான நடையும், பக்கவாட்டில் தலைசாய்ந்து நோக்கும் சுபாவமும் கொண்ட இந்த நடிகரின் தோற்றமும், அவரது இயல்பான அழுத்தமான நடிப்பும், அந்தக் கோவலனும்இப்படித்தான் இருந்திருப்பானோ என்ற உணர்வை நாடகத்தைப் பார்க்கும்போது தந்தது மட்டுமன்றி இப்போது நிலையாகவும் நம் நெஞ்சத்தில் பதிந்து விட்டது. கண்ணகி பாத்திரத்தை ஏற்றிருந்தவரை, கண்ணகியைத் தவிர்த்துத் தனியாக நினைத்துப் பார்க்க முடியவில்லை. மாதவியிடம் இருந்து மீண்டு திரும்பிவரும் கோவலனை விரும்பி உபசரிக்கும் போதும், ஏதும் அறியாதவளாகக் கோவலன் பின்னால் மதுரைக்குச் செல்லும்போதும், கோவலன் கொலையுண்ட செய்தியை அறிந்து, வெம்பி வெடித்து, வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்த போதும், சின்னச் சின்ன உடல் மொழிகளைக்கூட அற்புதமாக அவர் வெளிப்படுத்தியிருந்தமை, இந்தச் சிறிய வயதில் இப்படியோர் அசாத்தியத் திறமையா என்று வியந்து பாராட்டவைத்தது. மதுரையை எரித்த காட்சியின்போது, கண்ணகியோடு கையிலே எரிதழல் கொண்டு நாமும் உடன் செல்வதுபோன்ற உணர்வில் காட்சியிலும் கானத்திலும் கலந்துவிட்டிருந்தோம். இந்த இடத்தில் ஒரு தகவலைச் தரவேண்டியது சொல்லவேண்டியது அவசியம் என்று நினைக்கின்றேன். அதாவது, கோவலன் பிரிந்து சென்ற பின்னர், “மங்கல நாண் மட்டுமே” இருக்க மற்றெல்லா நகைகளையும் கண்ணகி துறந்தாள்” என்று நாடகத்தில் பாடலில் சொல்லப்படுவதை “மங்கல அணி மட்டுமே” என்று மாற்றுவது நல்லது. “மங்கல அணியின், பிறிது அணி மகிழாள்……….” என்றுதான் சிலப்பதிகாரம் சொல்கிறது. மங்கல நாண் என்றால் அது தாலி என்று பொருள் படுகிறது. திருமணத்தில் கண்ணகிக்குத் தாலி கட்டப்பட்டதாகவோ, வேறெந்த ஒரு சமயத்திலாவது அவள் தாலி அணிந்திருந்ததாகவோ செய்திகள் இல்லை. மாதவி சிலப்பதிகாரத்தில் பெரிதும் பேசப்படவேண்டிய தனித்துவம் மிக்கதொரு பாத்திரப் படைப்பு. இந்த நாடகத்தில் இடம்பெற்றிருந்த மாதவிக்கான பகுதிகளை, அந்தப் பாத்திரத்தை ஏற்றிருந்தவர் சிறப்பாகப் பூரணப்படுத்தியிருந்தார். அதிலும், கோவலனின் பாடலைக் கேட்டு, மாதவி சந்தேகப்படும் போது அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த நாடகத்தில், மாதவியின் நாட்டியப் பகுதி போதுமானதா என்ற கேள்வி என் மனதில் எழுகிறது. இந்திர விழாவில் மாதவி ஆடிய நடனம் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற ஆடற்கலைச் சிறப்பின் உச்சம். எனவே, பார்வையாளர்கள், மண்டபத்தை விட்டு வெளியேறும்போது கண்ணகியின் சீற்றத்தை மட்டுமல்லாமல், மாதவியின் ஆட்டத்தையும் நெஞ்சில் சுமந்து செல்லக்கூடியதாக விறுவிறுப்பான ஒரு நடனத்தைக் குறைந்தது ஐந்து நிமிடங்களுக்காவது அதில் இடம் பெறவைத்திருக்கலாமே என்ற அங்கலாய்ப்பு நமக்கு வருகிறது. பாண்டிய மன்னனும், பாண்டிமாதேவியும் அரண்மனையில் நடன நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியிலும், கண்ணகி வழக்குரைக்கும் போதும், பாண்டியன் உயிர் துறக்கும் போதும், பாண்டிய மன்னனின் நடிப்பு அருமையாக இருந்தது. பாண்டிமாதேவியின் கண் அசைவும், முகபாவமும், நடையழகும் மிகச் சிறப்பாக இருந்தன. இரண்டு பாத்திரங்களையும் ஏற்றிருந்தவர்கள் அந்தப் பாத்திரங்களின் கனதியை நன்கு உணர்ந்து, உள்வாங்கி, வெளிப்படுத்தியிருந்தார்கள். சிலப்பதிகாரத்தில் வில்லன் பாத்திரம் ஒன்றே ஒன்றுதான். அரண்மனைப் பொற்கொல்லனே அந்த ஒரேயொரு வில்லன். அந்தப் பாத்திரத்தில் நடித்தவர் மிகவும் பொருத்தமானவராகவே இருந்தார். தனக்குள்ள சிறப்பான திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அதேவேளை, ஒரு விடயத்தைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. சற்று நகைச்சுவை உணர்வைப் பார்வையாளர்களுக்கு ஊட்டக் கூடியவிதமாக அவரின் உடல் மொழிகள் சில இடங்களில் வெளிப்பட்டமை பொருத்தமாக இருக்கவில்லை. “கோவலன் மீது திருட்டுக் குற்றத்தைச் சுமத்தி அவனை மரண தண்டனைக்கு ஆளாக்கிவிடவேண்டும், அதன்மூலம், தான் களவு செய்த சிலம்பைத் தனக்கே சொந்தமாக்குவதுடன், தனக்கு வரக்கூடிய உயிராபத்திலிருந்து தப்பிக்கொள்ளவும் வேண்டும்” என்று நன்கு திட்டமிட்டுத் தன் பேச்சாலும், செயலாலும் இயங்கிக்கொண்டிருக்கும் பொற்கொல்லனது மகா வில்லத்தனத்தைப் பார்த்து, பார்வையாளர்களின் உள்ளங்களில் அவன்மீது கடுமையான கோப உணர்ச்சி மட்டுமே எழவேண்டும். அவரைப் பார்க்கும்போது யாருக்கும் ஒரு சிறு புன்னகை வருவதற்கும் இடம் கொடுக்கக்கூடாது. அதுதான் அந்தப் பாத்திரத்தின் குணாதிசயம். நாடகத்தின் காட்சிகள் நகரும்போது, ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதுபோல இருந்தன. சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள கதைக் களங்கள் நமது மனக்கண்களில் தோன்றுவதைப்போலவே அப்படியே மேடையில் காட்சியமைப்புகள் அமைந்திருந்தன. இன்னும் சொல்லப்போனால் அதைவிடச் சிறப்பாக என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் மேடையில் பின்னணிக் காட்சிகள் அழகான வண்ணங்களில் மிகவும் நேர்த்தியாக இருந்தன. இசையமைப்பு இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியாது என்னுமளவுக்கு அருமையாக இருந்தது. காட்சியமைப்பும், இசையமைப்பும் பெரும்பாலும் எல்லாக் காட்சிகளிலுமே, உயிரோட்டத்துடன், மிகவும் அருமையாக இருந்தமை பார்வையாளர்களின் உள்ளங்களைக் கவர்ந்தது. இன்றைய சமூகத்திற்கு, சிலப்பதிகாரத்தை, அதன் உண்மைத் தன்மைகளை அப்படியே உணர்த்தும் வகையில், உயிரோட்டமுள்ள காட்சிகளாக வெளிக்கொணர்ந்தமை ஒரு சாதனையே! சிலப்பதிகாரம் என்ற அந்தச் சிறப்பான காப்பியத்தில் உள்ள முக்கியமான எந்த காட்சியும் நழுவி விடக்கூடாது என்றும், மூலக் காப்பியத்தின் செய்திகளுக்கு எந்த வழுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்றும் மிகவும் கவனமாகவும், ஆழ்ந்த ஈடுபாட்டுடனும், இயன்றவரையில், அக்கறையெடுத்து இரண்டே முக்கால் மணி நேரத்திற்குள் அடங்கியதாக இந்தப் படைப்பை ஆக்கியளித்திருக்கிறார்கள். அத்துடன், எண்பதுக்கு மேற்பட்ட கூத்து மெட்டுப் பாடல்களின் ஊடாக, இந் நாடகம் நகர்த்திச் செல்லப்பட்டிருகிறது என்பதும் ஒரு வியத்தகு செயற்பாடாகும். நாற்பதிற்கும் மேற்பட்ட நடிகர்களும், இருபதிற்கும் அதிகமான இசை, வாத்திய மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களும் இந்த நாடகத்தில் அங்கம் வகித்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது வியப்பின் உச்சத்தில் முக்கில் விரல் வைத்து நிற்கின்றோம். இத்தனை பேரையும், அதுவும் இந்தநாட்டில்…..எப்படி? இதுவும் ஒரு சாதனையே…..உண்மையில் இதுதான் பெரிய சாதனை! இந்த நாடகத்தில், பங்குபற்றி, தமது பாத்திரங்களை உணர்ந்து, அதற்கான பயிற்சிகளிலும், ஒத்திகைகளிலும், ஆர்வத்துடன் கலந்து கொண்டு, இறுதியில் எல்லோரும் பெருமைப்படும்படியாக நடித்த நடிகர்கள், பண்பட்ட பின்னணிப் பாடகர்கள், திறமையான இசைக் கலைஞர்கள், மிகச் சிறந்த காட்சியமைப்பு விற்பன்னர்கள், கைதேர்ந்த ஒப்பனைக் கலைஞர்கள், அனுபவம் மிக்க ஓலி, ஓளிக் கலைஞர்கள் என்போருடன், அக்கறை யோடு செயற்பட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகிய எல்லோரும் விருப்புடன் உவந்தளித்த பங்களிப்பின் பெறுபேறாகவே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காப்பியத்தை, மேடையிலே வெற்றிகரமாக உலவவிட்டுச் சாதனை நிகழ்த்த முடிந்திருக்கிறது என்பதை இதன் வெற்றி நமக்கு வெளிப்படுத்தி நிற்கிறது. இதனை எழுதித் தயாரித்தவரான பாரதி பள்ளி நிறுவனரும், பிரபல நாடகச் செயற்பாட்டாளருமான மாவை நித்தியானந்தன் அவர்களையும், இதனை நெறியாள்கை செய்திருந்த பகீரதி பார்த்திபன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இத்தகைய சிறப்பான படைப்புக்காக அவுஸ்திரேலியத் தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்கள் எல்லோரதும் நன்றி கலந்த பாராட்டுக்கு இவர்கள் எல்லோரும் உரித்துடையவர்கள். “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்” ஆகிய மூன்று பெரும் அறக்கருத்துகளின் அடிப்படையில் எழுந்த, சிலப்பதிகாரத்தின் கதை, சோழ நாட்டிலே தொடங்குகிறது. பாண்டிய நாட்டிலே உச்சம் பெறுகிறது, சேரநாட்டிலே நிறைவு பெறுகிறது. இவ்வாறு, முடியுடை மூவேந்தர்களின் ஆட்சிகளோடும், பூம்புகார், வஞ்சி, மதுரை ஆகிய மூன்று நகரங்களோடும், பேரியாறு, காவிரி ஆறு, வைகை ஆறு ஆகிய மூன்று பெரும் நதிகளோடும் தொடர்பு பட்டதாகவும், இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழையும் தன்னகத்தே கொண்டதாகவும் விளங்குகின்ற ஒப்பற்ற செந்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தை நாடகமாக்கி மேடையேற்றிய இந்தப் பாரிய முயற்சியில், அவுஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்குபற்றியிருக்கிறார்கள் என்பதை அறியும்போது, இது தற்செயலா அல்லது தமிழ் அன்னையின்அருட்செயலா என்று வியந்து, நினைந்து, மகிழ்ந்து நிற்கிறோம். இந்த நாடகத்தைப் பார்த்தவர்கள் தங்கள் வாழ்வில் நல்லதொரு கலைப் படைப்பைப் பார்க்கக் கிடைத்த பாக்கியசாலிகள். பார்க்காதவர்கள், பார்க்கக்கூடிய இடத்தில் மீண்டும் இந்த நாடகம் மேடையேற்றப்படுமானால், தவறாமல் சென்று பார்த்து மகிழுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். வாழ்க தமிழ், வாழ்க சிலம்பின் புகழ்! https://arangamnews.com/?p=11614
  4. புறநானூறில் இருந்து சங்க கால தமிழர் பொங்கல். புறநானூறு 168 வது பாட்டு அருவி பாயும் மூங்கில்-காடு. அந்த மூங்கிலில் மிளகுக் கொடிகள் படர்ந்திருக்கும். காட்டுப் பன்றிக் குடும்பம் அங்குள்ள காந்தள் கிழங்குகளைக் கிண்டி உண்ணும். அவை கிண்டிய புழுதியில் அங்கு வாழும் குறவர்-மக்கள் தினையை உழாமலேயே விதைப்பர். அதில் விளைந்த தினையை மரையான் என்னும் காட்டுப்பசுக்கள் மேயும். அந்த மரையானின் பாலைக் கறந்து ஊற்றி மான்கறியை அதில் ஊற்றிப் புன்கம் (பொங்கல்) சமைப்பர். சந்தன விறகில் தீ மூட்டிச் சமைப்பர். அவர்களின் வீட்டு முற்றத்தில் கூதளம்பூ பூத்துக் கிடக்கும். வரும் விருந்தினர்களுக்கெல்லாம் வாழை இலையில் அந்த முற்றத்தில் பங்கிட்டுத் தருவர்.
  5. அதாவது பதிவு செய்து நான் சென்றால் ஸ்டாலின் மேடையின் ஓரத்திலும் நான் மேடையின் நடுவில் விழாத்தலைவரின் பக்கத்திலும் நிற்போம் என்கிறீர்கள்? விமானங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் வரை பணத்திற்கேற்ப படிநிலை வரிசை இருக்கும் போது உங்களுக்கு புங்குடுதீவு அதுவும் 80 களில் நடந்தது ஞாபகம் வருகிறது என்றால்..... அதுவும் புங்குடுதீவு முதலாளி. இதன் அர்த்தம் எனக்கு மட்டுமல்ல இங்கே எல்லோருக்கும் தெரியும். இனி மேல் மதம் சாதி பிரதேசவாதம் சார்ந்த கருத்துருக்களை எழுதும் தகுதியை இழந்தநிலையை நீங்களாகவே ஏற்படுத்தி விட்டீர்கள். இந்த பழிவாங்குவது மற்றும் ஊர் பெயரை நேரடியாக குறிப்பிட்டு சீண்டுவது எல்லாமே உங்கள் தவறை மறைக்க தொடரும் நாடகங்கள் தான். அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனங்கள் பெரிதாக உறைப்பதில்லை காரணம் நீங்கள் அதுக்கு முதலே இங்கே அதை விட பலமடங்கு அதிகமாக எல்லோருடனும் சொறிந்துள்ளீர்கள். தொடருங்கள். நீங்கள் அம்மணமாக நிற்கும் வரை.
  6. இலங்கை அகதிகள் விடயத்தில் இந்தியாவின் செயல்கள், கொள்கை இந்தியாவிற்கே அவமானம்.
  7. ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம் கிடைக்கிற சந்தர்ப்பத்தை பாவித்து கொள்ள வேணும் என்று பாடம் எடுப்போம் ...அப்படி அவர்கள் முண்டியடித்து படம் எடுத்தால் உடனே திட்டுவம் ... அணுராவுக்கு மத்திய அரசு செம்கம்பள வர்வேற்பு கொடுத்தல்லோ ...அப்ப எங்கே போனது கடற்தொழிலார்களின் ஆவேசம் ,கோபம்,காட்டம் எல்லாம் எங்கன்ட எம்.பி மாருக்கு இந்த வ்ரவேற்பை ஸ்டாலின் கொடுத்ததே பெரிய விடயம்.. .. அன்று எம்.ஜி.ஆர் தொடக்கம் இன்று ஸ்டாலின் வரை தமிழ் மக்களை பொறுத்தவரை ..படம் எடுப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது...
  8. சரியாகச் சொன்னீர்கள்👍. இலங்கையில் இருந்து பல்வேறு விசாக்கள் வழியாக அமெரிக்கா வந்து (சிலர் அசைலம் மூலம் கூட வந்து, மாமன் மச்சானையெல்லாம் கூப்பிட்டு, பல்கிப் பெருகியிருக்கின்றனர்) பிரஜையான எம்மவர் பலர், ட்ரம்பிற்கு வாக்குப் போட்டிருக்கின்றனர். காரணம் குடியேறிகளைப் பிடிக்காது என்கின்றனர். "கமலா கறுப்பினம்" என்பதால் பிடிக்காதாம் என்றும் சிலர் சொல்கின்றனர். "1960 களில் MLK Jr. உயிரைக் கொடுத்துப் பெற்றுத் தந்த சிவில் உரிமைகள் சுவறியதால் தான் நீங்களே இன்று பாதுகாப்பாக அமெரிக்காவில் இருக்கிறீர்கள்!" என்று சுட்டிக் காட்டினால் இல்லையென்று மறுக்கும் அளவுக்கு "அறிவிழந்த, வாசிப்புமற்ற" வெற்று மண்டைகளாக விழிக்கின்றனர்😎!
  9. இது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம்... கடந்த சில தினங்களாக ஜெயச்சந்திரன் அய்யாவுடைய பாடல்களை தேடித்தேடி கேட்டுவருகிறேன். ஒரு விடயம் அவதானிக்க கூடியவாறு இருந்தது. அவர் பாடிய எந்த ஒரு பாடலையும் கடந்து போகவோ, இந்த பாட்டு நல்லா இல்லை என்ற உணர்வோ மேலோங்கவில்லை. SPB , KJY இவர்கள் பாடிய பாட்டுகளில் கூட இந்த பாட்டு சரியாக இல்லை என்ற உணர்வுகள் மேலிட்டதுண்டு. ஆனால் ஜெயச்சந்திரன் ஐயா பாடிய எல்லா தமிழ் பாட்டுகளுமே தனிச்சிறப்பு!! நான் நினைக்கிறன் அவரின் முதல் பாடல் நான் கேட்டது, பொன்னென்ன பூவென்ன கண்ணே - படம் அலைகள். எனக்கு 5 வயது இருக்கும். அம்மா, அக்காமாரோடு கம்பளை ஆனந்தா தியேட்டரில் பார்த்த ஞாபகம். ஹீரோ சைக்கிள் ஒடி ஓடி இந்த பாட்டை பாடுவார் என்று ஞாபகம்.
  10. வெளிநாடுகள் அகதிகளாக ஏற்றுகொண்ட மக்களுக்கு நிரந்தர வதிவுடமை, குடியுரிமை ஆகியவற்றை கொடுக்கின்றன. இந்தியா இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்த வாய்ப்புக்களை வழங்கவில்லை. இந்தியா தனது இந்த கொள்கையை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
  11. என்னவொரு pristine voice! பி. ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்களை அவரால் மட்டுமே பாடமுடியும் என்று நான் அடிக்கடி நினைத்துக்கொள்ளுவது உண்டு.
  12. இன்பமும் இனிமையும் பொங்க வளமும் வண்ணமும் பொங்க அன்பும் அறமும் பொங்க அறிவும் ஆற்றலும் பொங்க புதுமையும் பழமையும் பொங்க இளமையும் நலமும் பொங்க கனிவும் களிப்பும் பொங்க யாழ்க்கள உறவுகள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் உரித்தாகுக! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. முதலில் யார் இவர் என்று விளங்கவில்லை சீமானை பாராட்டுகிறேன் என்ற போது விளங்க தொடங்கியது😂
  14. இது கண்டிக்கு அருகில் அம்பிட்டியவில் இருக்கும் கத்தோலிக்க குருக்கள் பயிற்சிக் கல்லூரி (National Seminary) யில் நிகழ்ந்த பொங்கல் நிகழ்வு: https://www.facebook.com/Philosophate.Kandy/ கபிதான் குறிப்பிட்ட மாற்றங்கள் 70 களில் நிகழ்ந்தன. இரண்டாம் வத்திக்கான் சங்கம் (Vatican Council II) என்ற தொடர் ஆய்வு 1965 வரை நடத்தப் பட்டு, ஒவ்வொரு இனமக்களினதும் பண்பாட்டு அடிப்படையில் வழிபாடு செய்யப் பட வேண்டுமென்ற அறிவுறுத்தல் 70 களில் கொண்டு வரப் பட்டது. ஆனால், 90 களில் தான் யாழ் மறைமாவட்டத்தில் இந்த மாற்றங்களில் பெரும்பாலானவை நடைமுறைப் படுத்த ஆரம்பித்தார்கள். "பண்பாட்டுத் திருப்பலி" என்ற முறையில் தமிழ் பாரம்பரியங்களில் ஒன்றாக பொங்கல் நிகழ்வுகளும் சேர்க்கப் பட்டன. கீழே இருப்பது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ஆவணங்கள் பற்றிய இணைப்பு. https://www.britannica.com/event/Second-Vatican-Council
  15. இது துரோகம் தம்பி! நீங்க சொல்ல வேண்டியது: "அண்ணன் சாப்பிடுவதே இல்லை தெரியுமா?" (ஒரு படத்தில் " எங்க அண்ணன் பஸ்ஸில எதையும் பிடிக்காமத் தான் நிற்பார் தெரியுமா?" என்றது போல😂!)
  16. வேள்விக்கு விடுகிற ஆட்டுக்குக் கூட..மாலை மரியாதை மஞ்சள் தண்ணியெல்லாம் தெளிக்கிறது வழமைதானே...இந்தியாவில் என்ன நடந்தது தெரியும்தானே..
  17. சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தகவிழாவின் ஒரு நாளில் எழுத்தாளர் சாருநிவேதிதாவை அங்கு போயிருந்த ஒரு வாசகர் ' என்ன சார், இப்படிச் சோர்ந்து போய் இருக்கிறீர்களே. மெலிந்தும் இருக்கிறீர்கள். உடம்புக்கு ஏதாவது ஆயிட்டுதா...........' என்று அக்கறையுடன் விசாரித்து இருக்கின்றார். அந்த வாசகரின் அக்கறைக்கு சாரு கொடுத்த பதில் நெத்தியடியையும் மிஞ்சியது. அந்தக் கேள்வியால் சாருவிற்கு எக்கச்சக்கமான கோபம் வந்துவிட்டது. இதற்கு ஏன் சாரு இவ்வளவு பதட்டப்பட வேண்டும் என்று எனக்கு விளங்கவில்லை. ஆனால் விளங்கவில்லை என்றவர்கள் மீதும் பாய்ந்திருக்கின்றார் சாரு.................🤣. ******************************************* இலக்கியச் சிக்கல் ----------------------------- புத்தக விழாவில் என்ன இப்படி இளைத்து சோர்ந்து இருக்கிறீர்களே எழுத்தாளரே என்றிருக்கின்றார் ஒரு வாசகர் வந்ததே கண்மண் தெரியாத கோபம் மொத்தமாக இன்றிருக்கும் மூன்று தமிழ் இலக்கியவாதிகளில் ஒருவர் தான் என்று சொல்லும் அந்த படைப்பாளிக்கு என் முகத்தில் ஒளிரும் தேஜஸ் உனக்குத் தெரியவில்லையா என் சருமத்தில் மின்னும் பொற்கதிர்கள் உன்னை வந்தடையவில்லையா ஐம்பது வருடங்களாக உங்களுக்காக மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றேனே நீங்கள் திருந்தவே மாட்டீர்களா என்ன சமூகம் இது இப்படி ஒரு கேள்வியை நீ ஐரோப்பாவில் ஒருவரை கேட்பாயா அமெரிக்காவில் கேட்பாயா அங்கே உன்னை சுட்டு விடுவார்கள் எழுபது வயதிலும் இருபது வயது இளைஞன் போல் துள்ளிக் குதிக்கின்றேனே என்னை நீ எப்படி இப்படி வன்கலவி செய்யலாம் என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு துள்ளினார் எழுத்தாளர் கேள்வியை கேட்டவர் ஒரு கணம் பொறி கலங்கி நின்றார் இவர்கள் எழுதும் இலக்கியம் மட்டும் இல்லை இவர்களுக்கு வந்து போகும் வருத்தங்களும் தனித்துவமானவை இவர்களை விட எவருக்கும் அதுவும் புரியாது போல என்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் அப்பாவி வாசகர்.
  18. இனரீதியானது ...ஆனால் இன்று சிறிலங்காவில் சிறிலங்கா தேசிய விழாவாக கொண்டாடுகிறார்கள் ...தேசிய மக்கள் சக்தியினர்...இதற்கு ஏற்ற வகையில் சுயேட்சையில் வென்ற எம்.பி வீடியோ வெளியிட்டுள்ளார் .,தமிழ் சிங்கள தை பொங்கல் எண்டு...
  19. Justin உங்கள் கருத்தின் படி சும் பங்கு பற்ற விரும்பி நீங்கள் இணைத்திருந்த இணைப்பினூடாக ஒரு தொகையைச் செலுத்தியதால் பங்கு பற்றுனராக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது முகநூலில் “தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் “
  20. உண்மையில் பார் சிறிதரன் அவர்களை முன் இருக்கையில் அமர்த்தியிருக்கவேண்டும். அவருக்கு புரிந்த ஒரே மொழியில் நடக்கும் நிகழ்விலாவது அவருக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.
  21. அந்த பாடலுக்கு கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன், சந்திரகலா நடித்தனர். இப்பாடல் இலங்கை வானொலியால் மட்டுமே பிரபலமாந்து.
  22. சைவர்களுக்கு நிறைய பொங்கல் வகைகள் இருக்கின்றன. புதுமனை புகுதலுக்கும் பொங்குவார்கள். நெல் கதிர் அறுவைக்கும் பல இடங்களில் பொங்கல் வைப்பர். இப்படி பல பொங்கல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.அதிலும் விவசாயிகள் எல்லா தொடக்க செயலுக்கும் பொங்கல் பொங்குவார்கள்.
  23. முதலாவது சந்ததியை விடுங்கள். அடுத்த சந்ததியின் எதிர்காலம் என்ன? அங்கு சிறுவயதில் பெற்றோருடன் சென்ற, மற்றும் அங்கு பிறந்த பிள்ளைகளின் வாழ்க்கை, எதிர்காலம் மிகவும் இடர்மிக்கது.
  24. உதயநிதி ஸ்ராலினின்... காலில் செருப்புடன், அடுப்பில் நெருப்பு இல்லாத கோமாளி பொங்கல். அருகில் வடிவேலு???? 😂 ஒருவர் கையில் பைபிளுடன், மற்றவர் கையில் செல்போனுடன்... 🤣
  25. ஓம். இப்படி ராமதாஸ், வைகோவுக்கு இருந்த அங்கீகாரம் பின்னர் பறிபோயுள்ளது. அடுத்து வந்த தேர்தல்களில் மீள கிடைத்தும் உள்ளது. திருமா தொடர்சியாக சின்னத்தை தக்க வைத்து வருகிறார் என நினைக்கிறேன்.
  26. ஸ்ரீதரன் விழா மேடையில் தமிழக முதல்வர் ஸ்ராலினுடன் அமர்ந்திருக்க, சுமந்திரனும், சாணக்கியனும்.... கீழே 2500 பார்வையாளர்களுடன், 24´வது வரிசையில் குந்தி இருந்து வேடிக்கை பார்க்க, அவமானமாக இருக்கும் என்றுதான்.... கட்டுநாயக்கா விமான நிலையத்திலேயே... புலனாய்வுத் துறைக்கு பெட்டிசம் போட்டு, ஸ்ரீதரனின் பயணத்தை, தடை செய்ய திட்டம் போட்டிருக்கின்றார்கள். 😎 ஸ்ரீதரன் அதனையும் தாண்டி... நிகழ்வில் கலந்து கொண்டு, சுமந்திரன், சாணக்கியன் முகத்தில் அசடு வழியப் பண்ணியுள்ளார். 😂 இவர்களின்... ஊத்தைவாளி வேலை, மக்களுக்கு அம்பலப் படுத்தப்பட்டுள்ளது இன்னும் சிறப்பு. 👍 இந்த அரசியல் அநாதை... செய்யும் சுத்துமாத்து எல்லாம், உடனே அம்பலத்துக்கு வருவது தெரியாமல், வெட்கமில்லாமல் பல்லைக் காட்டிக் கொண்டு திரிவதை பார்க்க... தமாசாக இருக்கு. 😂
  27. கால‌ம் ப‌தில் சொல்லும் உற‌வே சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி தூய‌ த‌மிழில் பேசினால் சீமான் குடும்ப‌ அர‌சிய‌ல் செய்ய‌ தொட‌ங்கி விட்டார் இப்ப‌டி விம‌ர்ச‌ன‌ம் வைப்பின‌ம்😁👎.....................
  28. தலைப்பு சரி ஆனால் கீழே எங்கேயும் தலைவர் இப்படி சொன்னதாக இல்லையே?
  29. உதறுதா?….உள்ள உதறணும் மாமே… பதறுதா….உள்ள பதறணும்டா… வருவது….அண்ணன் ஆண்டனிடா… விஜை வெல்லாவிடிலும் கூட ஓக்கே, ஜோம்பிகளுக்கு இப்படி இருந்த இடத்தில் கழிய வைப்பதற்கே ஒரு சலூட்.
  30. பதட்டப்படாதீர்கள். நீங்கள் உயர் குலத்தவர் என நம்புகின்றேன். நான் அவர்களில் ஒருவன்.
  31. இது வரை ஒரு "கிராமிய மட்ட" மாநாட்டில் கூட பங்கு பற்றாத பலர் இங்கே உலவுகிறார்கள் போல தெரிகிறதே😂? இணைக்கப் பட்டிருப்பது விழாவின் நிகழ்ச்சி நிரல் - எனவே விருந்தினர்களாக அழைக்கப் பட்டவர்களின் (invited guests) பெயர்கள் இருக்கும். நிகழ்ச்சி நிரல் என்பது அழைப்பிதழ் அல்ல. இது போன்ற மாநாடுகளுக்கு சில மாதங்கள் முன்பாகவே ஆர்வமுள்ள யாரும் பதிவு செய்து, கலந்து கொள்ளும் இணையத்தள இணைப்பும் வழங்கப் பட்டிருக்கும்👇. https://nrtamils.tn.gov.in/ அந்த இணைப்பில் சென்று பங்குப் பற்ற விரும்புவோர் ஒரு தொகையை செலுத்தி பதிவு செய்தால், அவர்கள் பங்கு பற்றுனர்களாக (attendees) அனுமதிக்கப் படுவர். இப்படி பதிவு செய்து பங்கு பற்றுவோருக்கு விசா அனுமதிகளுக்கு அவசியமெனில், ஒரு அழைப்பிதழ் கடிதமும் வழங்கப் படும். ஒரு விடயம் முழுதாகத் தெரியாவிட்டால், முதலில் தெரிந்து கொள்ள வேண்டும், பின்னர் "படம் பார் பாடம் படி"😎 அலட்டலைச் செய்யலாம்!
  32. ஒன்றாக இருந்திருக்கிறார்கள் பயணிக்கிறார்கள் .இங்கே தான் சந்தேகமாக உள்ளது.
  33. வசந்த கால நதிகளிலே வைர மணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிரெண்டின் நினைவலைகள் நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள் இந்தப் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று. எம்எஸ்வியின் இசை, ஜெயச்சந்திரன் குரல் எல்லாமே சிறப்பாக இருந்தாலும், பாடலை அந்தாதியில் கவிஞர் கண்ணதாசன் அழகாக எழுதியிருந்தார். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப் பட்டதால் பாடல் மனதில் அழகாகப் பதிந்து விட்டது. இதேபோல்தான் “ஆடி வெள்ளி ஓடி வந்து…” பாடலும், இதை சற்று வித்தியாசமாக கண்ணதாசன் எழுதியிருப்பார். நாயகன் பாடி முடிய இறுதிச் சொல்லலெடுத்து நாயகி பாடுவாள். ஆக, நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்தான். ஜெயச்சந்திரனின் குரலை நான் முதன் முதலில் கேட்டது இந்தப் பாடலில்தான்,
  34. அப்படியானால் பெரியாரிஸ்ருகளுக்கு அன்று இருந்த தமிழ் உணர்வு சீமான் போற்றும் மபொசி க்கு இல்லாமல் இருந்தது ஏன்? உங்கள் கருத்துப்படி அவர் இன்னும் தீவிரமாக புலிகளை ஆதரித்து இருக்க வேண்டுமல்லவா? மிக தீவிமாக புலிகளை எதிர்தத்துடன் இந்திய அமைதிகாக்கும் படையை வென்று வரவேற்று அவர்களை கொண்டாடினாரே! சீமானுக்கு அது துரோகமாக தெரியாதது ஏன்? சீமான் போற்றி புகழும் பச்சை தமிழர் காமராஜர் தமிழ் தேசியத்தை முற்றாக வெறுத்து இந்திய தேசியத்தை மிக தீவிரமாக ஆதரித்தாரே! அது ஏன்? அவரை தமிழ் தேசியம் என்று வாய் கிழிய கத்தும் சீமான் போற்றுவது ஏன்? தமிழ் நாடு என்ற பெயரை சூட்ட உண்டாவிரதமிருந்த சங்கரலிங்கம் என்பவரை தனது ஆட்சியில் சாக விட்டதுடன் அவரது கோரிக்கையை கூட நிறைவேற்ற வில்லையே காமராஜர். அது ஏன்? திராவிட இயக்க தொழர்கள் ஈழப்போரளிகளை ஆதரித்து பல உதவிகள் செய்து அதற்காக பல ஆண்டுகள் சிறையில் இருந்த தடா பொடா சட்டம் பாய்நத காலத்தில் சீமான் எங்கு இருந்தார்? கோமாவில் இருந்தாரா? அல்லது தடா பொடா சட்டங்களுக்கு பயந்து பம்மிக்கொண்டு இருந்தாரா? எல்லாம் முடிந்த பின் இனி புலிகள் இங்கு வர மாட்டார்கள், அவர்கள் இனி எனக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள், எனவே அவர்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்யலாம் என்று புறப்பட்டவரே இந்த சீமான் என்ற நபர். உங்கள் கூற்றுப்படி தனது அரசியலுக்காக புலிகளை எதிர்தத ஜெயலலிதாவை சீமானின் சொல்லுக்காக கண்டும் காணாமல் விடலாம் என்று கூற வருகின்றீர்களா? அப்படியானால் உங்கள் புலிகள் ஆதரவு என்பது சீமானுக்காகவா? புலிகளின் அரசியல் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டும் என் போன்றவர்களை துரோகிகளாக முத்திரை குத்தும் நீங்கள் தனது அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் புலிகளை வாழ்நாள் முழுவதும் எதிர்த்த, இந்தியாவில் புலிகளுக்கான தடையை வலியுறுத்தி அதை நடைமுறைப்படுத்த தனது அரசியல் ஆளுமையை முழுமையாக பயன்படுத்திய தடா பொடா சட்டங்களை தீவிரமாக அமுல்படுத்தி பல ஈழ ஆதாரவாளர்களை சிறையில் அடைத்த, புலிகளின் போராட்டத்திற்கு பல தடைகளை செய்த, தமிழகத்தில் வாழுத் ஈழ அகதிகளின் கல்வி வாய்பபுகளை மறுத்த ஜெயலலிதாவுடன் soft அணுகுமுறை எடுப்பது ஏன்?
  35. உள் அரசியல் தெரியாமல் வெளி அரசியலை பார்த்து எழுதுகின்றீர்கள்.
  36. அமெரிக்கன் அமெரிக்கன் தான்யா. பணம் பத்தல்ல ஆயிரமும் செய்யும். இதுவே சிறீலங்கா போன்ற நாடுகளில் நடந்தருந்தால் நம்ம அமெரிக்கன் சிற்றிசன்ஸ் பொங்கியிருப்பினம்.😂
  37. அடிக் கணக்காக பனி கொட்டிக்கிடக்க நீச்சல் தடாகத்தில் ஈழப்பிரியன் குடும்பம். இதுவும் கலிபோர்ணியா தான்.
  38. தமிழ் நாட்டில் திமுக மீது எவ்வளவு விமர்சனம் இருப்பினும் இது போன்ற விஷயங்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. மேலே இந்த அறிவுப்புக்கு குதர்க்கமாக பதிலளித்து இருந்தவர்கள் தங்கள் தகமையை தாமகவே பறை சாற்றிக் கொண்டார்கள் என்று வைத்துக்கொள்ளலாம் குடும்ப உறவுகள், திருமணம் செய்யும் முறை, உண்ணும் உணவு, தாய்வழி சமூக ஒற்றுமை, உருவ ஒற்றுமை, DNA, ஆகியவற்றை ஒப்பிட்டால் தமிழர் தெலுங்கர் கன்னடர் என நாம் எல்லோரும் ஒரே இனத்தவரே. அவர்கள் தாம் வேறு என்று சொன்னாலும் நாம் அந்த உண்மையை அப்படியே விட்டுவிட முடியாது. ஏனென்றால் தாய் நாம் தான். பிள்ளைகள் தாயை மறுத்தலித்தாலும் தாய் அதை ஏற்று சும்மா வாய் பொத்தி இருக்க முடியாது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி!
  39. மிக முக்கியமான அறிவுப்புகள். தானும் தின்னான் நாய்க்கும் கொடான் என்பது ஈழத்தமிழரோடு பிறந்த குணம். தாமும் உருப்படியாக எதுவும் செய்யமாட்டார்கள். செய்பவர் மீதும் வசை பாடுவார்கள். இந்த அறிவிப்புகள் மூலம் சிந்துவெளியில் இருந்தது தொல் தமிழர் நாகரிகமே என்பதை குறிப்பாக அந்த எழுத்தை படிக்க முடிந்தால், தென்னிந்திய மொழிகளுக்கு தாய் மட்டும் அல்ல, இந்திய மொழிகளிலும் முந்தையது தொல்தமிழே என்பதை நிறுவ முடியும். ஒரு ஈழத்தமிழனான நன்றியும் வாழ்த்துக்களும் முதல்வர் ஸ்டாலினுக்கு.
  40. இந்தப் பதிவைக் கண்டதும்.ஒரு விடையத்தை சுட்டிக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்..யாரும் தவறாக நினைக்க வேணாம். இந்த ரிக்ரொக், யூருப், முகப் புத்தகத்தில் இருக்கும் சில மேககப் விற்பன்னர்கள் பொதுவாக பெண்கள் சேலை கட்டத் தெரியாதவர்களுக்காக கட்டிக் காட்டுறோம் என்று அவர்களிடம் மேக்கப் செய்யப் போகும் சில பெண்பிள்ளைகளை பாவாடை, சட்டையோடு நிற்க விட்டு சேலை கட்டும் விதத்தை வீடியோடு எடுத்து பப்பிளிக்கில் போடுகிறார்கள்.அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைக்கிறார்கள் இல்லை..ரிக்ரொக் போன்ற தளங்களை பார்ப்பர்கள் எதனால் இப்படியான விடையங்களை சொல்கிறேன் என்று புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேுன்..மிக, மிக குப்பைத் தளம் என்றால் அது ரிக் ரொக் தான்..தங்கள் வருவாய்க்காக இப்படி நடக்கிறது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.