Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராசவள்ளிக்கிழங்கு கஞ்சி

Featured Replies

இராசவள்ளிக்கிழங்கு கஞ்சி

  • இராசவள்ளிக் கிழங்கு - 1

  • தேங்காய்ப்பால் (முதற்பால்) - 1/2 கப்

  • தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) - 2 கப்

  • சீனி - 1 - 11/2 கப்

  • உப்பு - 1 சிட்டிகை

  • இராசவள்ளிக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டவும் - ~2 கப் வர வேண்டும்.

  • பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும்.

  • கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து மெல்லிய நெருப்பில் கொதிக்க விடவும்.

  • சீனி கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும்.

  • பின்னர் தேங்காய் முதற் பாலை விட்டு காய்ச்சவும்.

  • ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

  • சுவையான இராசவள்ளிக்கிழங்கு கஞ்சி தயார். சுடச்சுடவும் குடிக்கலாம். அல்லது ஆறவிட்டும் குடிக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு:

தேங்காய்ப்பாலில் அவிய விடுவதற்குப் பதிலாக தண்ணீரில் அவிய விட்டும் இறுதியாக முதற்பால் விட்டும் இறக்கலாம். தேவைக்கேற்ப சீனியை கூட்டி குறைக்கலாம். இதனை சிறிது வற்றக் காய்ச்சி தடிப்பான பதத்தில் எடுத்து புடிங் கிண்ணத்தில் ஊற்றி(வட்டமான சிறிய கிண்ணங்கள்) ஆறியதும் ஃபிரீஸரினுள் வைத்து சிறிது இறுகியதும் புடிங் போலவும் சாப்பிடலாம். அல்லது கேக் பானில் ஊற்றி ஃபிரீஸரில் வைத்து சிறிது இறுகியதும் துண்டுகளாக்கியும் சாப்பிடலாம்

நன்றி:arusuvai.com

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி

அண்ணனை அனுப்ப முடிவு செய்து விட்டீர்களா?

முதல் தேங்காய்ப்பால்

இரண்டாம் தேங்காய்ப்பால்

சீனி ...........என்று நீளுதுதுதுதுதுதுதுது :lol::D :D

Edited by விசுகு

  • தொடங்கியவர்

விசுகு அண்ணா இந்த செய்முறை என் சொந்த தயாரிப்பு இல்லையே :D

எப்பவாவது ஒரு முறை சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இராசவள்ளிக் கிழங்கு

என்ன கிழங்கு என்றே எனக்கு தெரியல . ஏதாவது புது கைபிரிடாக இருக்கும் போல கிடக்கு. படிக்கிற எனக்கே புரியல நடுவில புகுந்து குழப்பத்தை உண்டு பண்னாதீங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தமிழினி,

இராசவள்ளி கிழங்குடன் கொஞ்ச சௌவ்வரிசி சேர்த்தால் மேலும் சுவைகூட்டும்.

சின்ன வயசில் எனக்கு மிகவும் பிடிக்கும், இப்போது பெரிதாக பிடிப்பது இல்லை .............. ஆனாலும் எனது குழந்தைகளுக்கு பிடிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினி!தேங்காய்ப்பால் கஞ்சிக்கு நன்றி

சகோதரி

அண்ணனை அனுப்ப முடிவு செய்து விட்டீர்களா?

முதல் தேங்காய்ப்பால்

இரண்டாம் தேங்காய்ப்பால்

சீனி ...........என்று நீளுதுதுதுதுதுதுதுது :lol::D :D

இப்ப எந்தமட்டத்திலை நிக்குது? குளிசையோ?இல்லாட்டி ஊசியோ? :D:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கிழங்கு என்றே எனக்கு தெரியல . ஏதாவது புது கைபிரிடாக இருக்கும் போல கிடக்கு. படிக்கிற எனக்கே புரியல நடுவில புகுந்து குழப்பத்தை உண்டு பண்னாதீங்கோ..

Purple%2Byam.jpg

இப்படித்தான்... அதன் கொடி இருக்கும் புரட்சி.

இதன் கிழங்கின் தோலை சீவினால், நாவல் பழ நிறத்திலிருக்கும்.

.

purpleyam.jpg

MTMyODA3MDk5MDUwNTRfMQ.jpg

df11_01_28_purple.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இராசவள்ளிகிழங்கு கழியோ இல்லாட்டில் கஞ்சியோ :rolleyes: ?

இது இராசவள்ளிகிழங்கு கழியோ இல்லாட்டில் கஞ்சியோ :rolleyes: ?

கஞ்சிய கொஞ்சம் ஆறவிட்டா கழியாகும்.

ஃப்ரிட்ஜ்ஜில வைச்சால் தொதல் ஆகும்.

ஃப்ரீசரில கொஞ்ச நேரம் வைச்சால் ஐஸ் கிரீமாகும்.

சூழ்நிலைக்குத் தக்கமாதிரி ராசவள்ளி ஸ்பெஷல் போட வேண்டியது தான். :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எந்தமட்டத்திலை நிக்குது? குளிசையோ?இல்லாட்டி ஊசியோ? :D:lol::D

பிரான்சில் 30 வயது வந்ததும் அரச கடிதம் ஓன்று ரும். இலவசமாக உங்களை பூரணமாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என. எனக்கும் அது வந்ததால் அதை எடுத்துக்கொண்டு சென்று பரிசோதனை செய்து பார்த்தால் 50 வயதுக்கு இருக்கவேண்டியதெல்லாம் இப்பவே இருக்கு ராசா கவனம் என வைத்தியர் ஆலோசனை சொன்னார். பரிகாரம் என்ன? என்றபோது மருந்து வேண்டாம் முதல்படி என்ன என்ற எனது கேள்விக்கு பதில் இனிப்புவகைகளையும் கொழுப்புக்கூடிய சில சாப்பாட்டு வகைகளையும் நிறுத்தும்படி சொன்னார். அதன்படி தேத்தண்ணிக்கு சீனி போடாது விட்டதிலிருந்து பன்றி இறைச்சி வரை தாரை வார்த்து இன்றுவரை எந்த வருத்தமும் இல்லை. மருந்து மாத்திரைகளும் இல்லை. இதுவே எனது ஆலோசனையும் எல்லோருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆ இராசவள்ளிக் கிழங்கு பார்க்கவே வாய் ஊறுது :D

கஞ்சிய கொஞ்சம் ஆறவிட்டா கழியாகும்.

ஃப்ரிட்ஜ்ஜில வைச்சால் தொதல் ஆகும்.

ஃப்ரீசரில கொஞ்ச நேரம் வைச்சால் ஐஸ் கிரீமாகும்.

சூழ்நிலைக்குத் தக்கமாதிரி ராசவள்ளி ஸ்பெஷல் போட வேண்டியது தான். :D

ஈசனுக்கு வர,வர லொல்லுக் கூடிப் போச்சு :lol:

இணைப்பிற்கு நன்றி தமிழினி... :) தேங்காய்ப்பாலுக்குப் பதிலாக பசுப்பால் விட்டுச் செய்யலாம் என்று நினைக்கிறன்... எனக்கும் இராசவள்ளிக் கிழங்கு விருப்பம், ஆனால் அதை வெட்டிய பின்பு கை கடிக்கும்... :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறையையும் உறவுகள் இணைத்த படங்களையும் பார்ர்க்கும்போது

ஆசையாகத்தான் இருக்கின்றது.

தமிழ்க்கடைக்கு ஒருமுறை செல்லவேண்டும்.

இணைப்பிற்கு நன்றி.

  • தொடங்கியவர்

இணைப்பிற்கு நன்றி தமிழினி... :) தேங்காய்ப்பாலுக்குப் பதிலாக பசுப்பால் விட்டுச் செய்யலாம் என்று நினைக்கிறன்... எனக்கும் இராசவள்ளிக் கிழங்கு விருப்பம், ஆனால் அதை வெட்டிய பின்பு கை கடிக்கும்... :mellow:

வீட்டில் பசுப்பால் விட்டுதான் அதிகமாக செய்வதுண்டு அத்துடன் தமிழரசு சொன்னமாதிரி சிறிதளவு சவ்வரிசி போட்டு செய்தால் சுவை நன்றாக இருக்கும்.

இந்த கிழங்கு வெட்டும் போது கை கடிக்குமா? :rolleyes: கறுணைக்கிழங்கு வெட்டினால் தான் கை கடிக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன் :icon_idea:

இணைப்பிற்கு நன்றி தமிழினி... :) தேங்காய்ப்பாலுக்குப் பதிலாக பசுப்பால் விட்டுச் செய்யலாம் என்று நினைக்கிறன்... எனக்கும் இராசவள்ளிக் கிழங்கு விருப்பம், ஆனால் அதை வெட்டிய பின்பு கை கடிக்கும்... :mellow:

கரணை கிழங்குக்கு தான் வெட்டிய பின் கை கடிக்கும். இராசவள்ளி கிழங்குக்கும் அப்படியா? யாராவது தெரிந்தால் சொல்லுங்கோ... நான் சாப்பிட்டிருக்கிறேனே தவிர கிழங்கு ஒருநாளும் வெட்டினதில்லை...

கருணை கிழங்கு தான் வெட்டின பின் கை கடிக்கும் அதில கறி தான் வைப்பினம் இதுவுமா கை கடிக்கும் :unsure: ?

:rolleyes:கறுணைக்கிழங்கு வெட்டினால் தான் கை கடிக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன் :icon_idea:

கருணை கிழங்கு தான் வெட்டின பின் கை கடிக்கும் அதில கறி தான் வைப்பினம் இதுவுமா கை கடிக்கும் :unsure: ?

கரணை லை...

இதில எந்த கிழங்கு சரி :lol:

வீட்டில் பசுப்பால் விட்டுதான் அதிகமாக செய்வதுண்டு அத்துடன் தமிழரசு சொன்னமாதிரி சிறிதளவு சவ்வரிசி போட்டு செய்தால் சுவை நன்றாக இருக்கும்.

இந்த கிழங்கு வெட்டும் போது கை கடிக்குமா? :rolleyes: கறுணைக்கிழங்கு வெட்டினால் தான் கை கடிக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன் :icon_idea:

நன்றி தமிழினி! நேரம் இருக்கும் போது செய்து பார்த்து பதிவிடுகிறேன்...

கரணை கிழங்குக்கு தான் வெட்டிய பின் கை கடிக்கும். இராசவள்ளி கிழங்குக்கும் அப்படியா? யாராவது தெரிந்தால் சொல்லுங்கோ... நான் சாப்பிட்டிருக்கிறேனே தவிர கிழங்கு ஒருநாளும் வெட்டினதில்லை...

கருணை கிழங்கு தான் வெட்டின பின் கை கடிக்கும் அதில கறி தான் வைப்பினம் இதுவுமா கை கடிக்கும் :unsure: ?

...

வெட்டிய பின்பு கை கடிக்கும்!

Edited by குட்டி

  • தொடங்கியவர்

கூகிள் ஆண்டவரின் தரவுப்படி கருணைக்கிழங்கு தான் சரி என்று நினைக்கிறன் :)

  • கருத்துக்கள உறவுகள்

கருணை கிழங்கு தான் வெட்டின பின் கை கடிக்கும் அதில கறி தான் வைப்பினம் இதுவுமா  கை கடிக்கும் :unsure: ?

இதில எந்த கிழங்கு சரி :lol:

கூகிளும் தவறும் :lol:கரணைக்கிழங்கு தான் என் அறிவிற்கு சரியாகத் தெரிகின்றது

இதில எந்த கிழங்கு சரி :lol:

கூகிள் ஆண்டவரின் தரவுப்படி கருணைக்கிழங்கு தான் சரி என்று நினைக்கிறன் :)

எனக்கு தெரிந்து கரணை கிழங்கு தான் சரி. இதனை சட்டிக்கரணை என்றும் அழைப்பார்கள்.

Edited by காதல்

கரணை கிழங்குக்கு தான் வெட்டிய பின் கை கடிக்கும். இராசவள்ளி கிழங்குக்கும் அப்படியா? யாராவது தெரிந்தால் சொல்லுங்கோ... நான் சாப்பிட்டிருக்கிறேனே தவிர கிழங்கு ஒருநாளும் வெட்டினதில்லை...

கைக்குக் கிளவ்ஸ் போட்டு கரணைக்கிழங்கை வெட்டினால் கை கடிக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைக்குக் கிளவ்ஸ் போட்டு கரணைக்கிழங்கை வெட்டினால் கை கடிக்காது.

அப்ப..வாய்...நாக்கு...தொண்டைக்கு எதை போடுறது? :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப..வாய்...நாக்கு...தொண்டைக்கு எதை போடுறது? :D

கரணைக்கிழங்கைப் போட்டால் போச்சு :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் விருப்பமான சாப்பாடு.இணைப்புக்கு நன்றி.

இப்போ தகரங்களில் அடைத்து வருவதால் எல்லா இடமும் வாங்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.