Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஹைக்கூ எழுதிய கூப்பாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருவருக்கிடையே இன்ப

இரகசியம் அறியும் பொழுது

இயற்கையை ரசிக்க நேரமேது

  • Replies 348
  • Views 30.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் அண்ணா, எனக்கு ஒழுங்கா ஹைக்கூ எப்படி எழுதுவது என்று தெரியாது. இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கோ.

வானம் விரிக்கும் வெண்சிறகுகள்

யுத்த பூமியில் கானல் நீர்

சமாதானம்

என்று எழுதினான். இதில்,

வானம் விரிக்கும் வெண்சிறகுகள் = சமாதானம்

யுத்த பூமியில் கானல் நீர் = சமாதானம்

என்ற அர்த்தத்தில் சமாதானம் என்ற சொல்லை கீழே போட்டு விட்டேன்.

ஆனால் இரண்டு வரிகளையும் ஒன்றாக வாசித்து அதற்கான மூன்றாவது வரியை கீழே போடுவதென்றால் சமாதானம் என்ற சொல் படு பிழையாக வரும் என்று தோணுது.

வானம் விரிக்கும் வெண்சிறகுகள் யுத்த பூமியில் கானல் நீர் = ?

இதில் எந்த முறை ஹைக்கூ. :( :(

நானும் உங்களைப் போலத்தான், காதல்!

நான் அவதானித்த வரையில், ஒரு காட்சியை, நீங்கள் காணும்போது, அந்தக் காட்சியில் ஒரு, கருப்பொருள் இருக்கும்! அது அந்தக் காட்சியைக் கான்பவரின், கற்பனைக்கேற்ப வேறு படும்!

அந்தக் கருப்பொருளை, சில வார்த்தைகள் மூலம், இரண்டு மூன்று வரிகளில், விபரித்து விட்டுக், கடைசியில், வெட்டு ஒன்று துண்டு இரண்டாக, ஒரு தனிச்சொல்லில், அல்லது மிகச் சிறிய கோவையாக, அழுத்திச் சொல்வது என நினைக்கின்றேன்!

பின்வரும் படத்தில் எனக்குத் தோன்றுவது, ஒரு அழகிய சூரிய அஸ்தமனம்!

நிலாமதியக்காவுக்கும், மாலை நேரச் சூரியன் தான் தெரிகின்றது!

கொமகனுக்குக், கரையில் இருக்கும் காதலர்கள் தெரிகின்றது! அதே வேளை, அந்த ஒளியின் வடிவம், இதழ்களை நினைவூட்டுகின்றது!அவர் சூரியனை, இதயங்களோடு இணைக்கின்றார்!

நான், எனது கருப்பொருளை, பின்வருமாறு தொடுக்கிறேன்!

11531324.jpg

கடலென்னும் தாழியில்,

சுடர் ஏற்றுகிறான், சூரியன்!

அஸ்தமனம்!

ஏனெனில், நான் சூரியனின், அளவுக்கதிகமான, பிரகாசத்தை முன்னிறுத்த விரும்புவதால், மேலுள்ளவாறு எழுதினேன்!

நீங்கள், கடலில் போகும் போர்க்கப்பலை, முன்னிலைப் படுத்தி, வானத்தையும், கடலையும் இணைக்க எண்ணுகின்றீர்கள் என எண்ணுகின்றேன்!

ஒரு போலியான 'சமாதானமே; இங்கே உங்கள் கருப் பொருளாகின்றது எனில், அந்தக் கருத்தை நீங்கள், கடலையும், ஒளியையும், போர்க்கப்பலையும், உங்கள் கருப்பொருளைப் பலமாக, வெளிப்படுத்தும் வண்ணம் தொடுத்து விடுங்கள்!

வானம் விரிக்கும் வெண் சிறகுகளில்,

வண்ணங்களாய் விரிகின்றன, கந்தகத் துளிகள்!

சமாதானம்!

வானம் விரிக்கும் வெண்சிறகுகள்

யுத்த பூமியில் கானல் நீர்

சமாதானம்

உங்கள் கருவின் பொருளும், முதலிரண்டு வசனங்களும் சரியானவையே!

இரண்டு வசனங்களும், சமாதானத்தைக் காட்டுகின்றன! ஆனால், இரண்டையும் 'தொடர்பு' படுத்துங்கள்!

அது உங்கள், மூன்றாவது வரியான, 'சமாதானம்' என்பதை, மேலும் அழுத்தமாக வெளிப்படுத்தும் என்றே நான் கருதுகின்றேன்!

நன்றிகள், காதல்! :D !

நன்றி புங்கையூரன் அண்ணா விளக்கத்திற்கு. :)

எல்லாரும் அஸ்தமனத்தை வைத்து எழுதுவார்கள் என்பதால் நான் கொஞ்சம் வித்தியாசமா முயற்சிப்பம் என்று நினைச்சு எழுதினான். :lol:

இரு வரிகளையும் தொடர்புபடுத்தும் அந்த மூன்றாவது வரி தான் என் சிந்தனைக்கு பிடிபடுதில்லை. :D

நீங்கள் கூறிய முறை அழகாக உள்ளது.

உங்கள் இரு ஹைக்கூவும் நல்ல பொருள் தருகிறது. :)

Edited by காதல்

11531324.jpg

உரசும் உதடுகள் கண்டதும்

நிலவின் உதடு தேடி

தன் இதழ் விரித்து ஒளியும் சூரியன்.

சூரிய அஸ்தமனம்.

  • கருத்துக்கள உறவுகள்

11531324.jpg

மாலை நேரத்து வெயிலெனும்,

சேலைக்குள் மறைகிறாள்,கடற்கன்னி!

நாணம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

303638_401075953276236_239970157_n.jpg

ஏற்றிவிட்டாய் ஏறிவிட்டேன்

தேடுகிறேன்

தட்டவும் தட்டுப்படவும் கூடும்

மூடி..

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணம் தீட்டும்

போட்டி வைத்தால்,

உன்னை விட யாரும்

முந்திக்கொள்ள

முடியாது.

Edited by யாயினி

மிக நல்ல படைப்புக்கள் நம்மவர் மொழியில் நமக்காய்.. வாழ்த்துகிறேன் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் நன்றி.

பிடிபட்ட மீனின்

கண்களில் நிரம்பி வழிகிறது

மரண பயத்தைவிடவும் அதிகமாய்

சிறு புழுவுக்ககாச் சென்று

ஏமாந்த அவமானம்!

post-9051-0-13022800-1340980508.jpg

Edited by யாழ்அன்பு

post-9051-0-83876700-1340980854.jpg

தூறல் மட்டும்மல்ல தும்பலும் பெரும்மழையாகின்றது!

Edited by யாழ்அன்பு

ஈசன் அண்ணா, யாழ் அன்பு அண்ணா, ஜீவா அண்ணா ஆகியோர் தொடர்ந்து கவிதை எழுதுங்கள். :)

மிக நல்ல படைப்புக்கள் நம்மவர் மொழியில் நமக்காய்.. வாழ்த்துகிறேன் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் நன்றி.

அண்ணை, இந்த ஹைக்கூ கவிதை எமக்கானது மட்டுமல்ல. உங்களுக்கானதும் தான். எமக்கென்று கைவிடாமல் நீங்களும் முயற்சி செய்யுங்கோ. குட்டி குட்டி கவிதைகள் எழுதுங்கோ.

உங்களிடம் இருந்து கவிதையை நான் எதிர்பார்க்கிறன். :lol:

எனக்கு இந்த கவிதை இர‌ண்டு வரி என்டாலும் சுட்டுப் போட்டால் கூட‌ எழுத வருதில்லை ஆனால் எல்லோரும் நன்றாக எழுதுகிறீர்கள்...பாராட்டுக்கள்...கோமகன் நல்ல பட‌ங்களாய் பார்த்து கொண்டு வந்து இணைக்கிறீர்கள்

அக்கா நீங்களும் முயற்சி செய்யுங்கோவன். நாங்களும் தெரிந்தா எழுதிறம். ஏதோ குட்டி குட்டியா எழுதி பழகிறம். நீங்களும் எழுதுங்கோ. பிழை என்றால் அடிக்கவா போறம். இல்லை தானே. நீங்கள் கவிதையை போடுங்கோ. அதை பார்த்து விட்டு நாங்கள் சொல்லுறம் உங்களுக்கு கவிதை எழுத வருமா இல்லை சுட்டுப்போட்டாலும் எழுத வராதா என்று. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

post-9051-0-13022800-1340980508.jpg

தன் வயிற்று பசிக்காக

தனக்கு வரப்போகும்

ஆபத்தை உணராத மீன்,

தான் தூண்டிலில்

மாட்டியபின்பு

உணர்ந்து கொண்டது !

இன்றுதான் வாழ்வின்

கடைசி நாள் என்று .....

28236939825087688831514.jpg

நானும் நீயும்

ஐந்தறிவாம்

சொல்கிறான்

ஆறறிவன்

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆறிடம் காணமுடியாத

ஒற்றுமையை பாசத்தை

ஐந்து அறிவு ஜீவனுகளாம்

உங்களிடம் பார்க்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

28236939825087688831514.jpg

அணைப்பைத் தேடும் இதயங்கள்,

இணைக்கின்ற தொடு பாலம்!

ஸ்பரிசம்!

  • கருத்துக்கள உறவுகள்

post-9051-0-13022800-1340980508.jpg

நீ தேடுவதும்,

நான் தேடியதும்,

இரை!

  • கருத்துக்கள உறவுகள்

ஓ பெண்ணே

உன் விழிகள்

கயல் போலவென

யார் சொன்னது..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

உன் கையில்

அகப்பட்டதற்காய்

இப்படி ஒரு தூக்குத்,

தண்டனையா...

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

post-9051-0-13022800-1340980508.jpg

நீ பிணம்

நான் கருவாடு

மரணத்தின் பின்

கடலில் நீ வீழந்திருந்தால்

என் இரை நீ

நப்பாசை(??????????????????)

Edited by putthan

IMG_4931.JPG

புது அம்மியில்,

புதுக் குளவி..

தாங்குவேனோ என்று அம்மியும்,

தாங்குவானோ என்று குளவியும்..

17955840150716321848695.jpg

சிறியவர்கள் ஆனாலும்

எமைத் தாங்க

இருகைகள்

பாதுகாப்பு

ஐ, படமும் நல்லாயிருக்கு, கவிதையும் நல்லாயிருக்கு. :) நன்றி பட இணைப்பிற்கும் கவிதைக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

11531324.jpg

கரையில் இருப்போரின்

கனவும்

பெருமூச்சும்

வானத்தில் வரைபடமாய்.. :wub:

கரையில் இருப்போரின்

கனவும்

பெருமூச்சும்

வானத்தில் வரைபடமாய்.. :wub:

நன்றாக இருக்கு விசுகு அண்ணா. தொடர்ந்து எழுதுங்கோ. :)

  • கருத்துக்கள உறவுகள்

17955840150716321848695.jpg

தாயின் அணைப்பு

ஒரு சுகம் !

இப்போ இந்த அணைப்பு

வேறு சுகம் !

அடுத்த அணைப்பு

என்னவாக இருக்கும் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.