Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிகின்றதா எங்களை ?????????????

Featured Replies

சூதிலும் சூழ்ச்சியிலும்

வெள்ளைக்கொடி பிடித்தவர்கள் நாங்கள்

தெரிகின்றதா எங்களை ??

மகசீன் சிறை என்றும்

காலி சிறை என்றும் வருடங்கள்

காறித் துப்பியதே எங்களை!!

தெரிகின்றதா எங்களை ??

சிறையில் இருக்கும் நாங்கள்

வாழக்கூடாதாம் என்று ஒருகூட்டம் ,

வாழவேண்டும் என்று

இன்னுமொருகூட்டம் !!

தெரிகின்கிறதா எங்களை ??

சிங்களம் அடித்த அடி வலிக்கவில்லை

உங்கள் அடியின் வலி.........

குப்பிக்கடியின் வலியைவிட கொடுமை ஐயா!!

கொட்டும் மழையும்

பாம்புக் கடியும் பயிற்சிக் கடுமையும்

ஒருநாள் இனித்தது எங்களுக்கு,

எங்களைப் போல் பலர் களத்தில்

பகைவருடன் பொருதி நின்றபொழுது

அடித்த விசில்களால் குளம்பித்தான் போனோம்.......

எல்லா மக்களும் எங்களுடன் தான் என்று,

இன்றுதான் தெரிகிறது அடித்த விசில்

பந்தயக் குதிரைகளுக்கு என்று .

பந்தயக் குதிரைகள் நொண்டியானபோது

கோவேறு கழுதைகளாகப் போய்விட்டது........

தெரிகின்றதா எங்களை ??

நாங்களும் உங்களைப்போல்

ரத்தமும் சதையும்

ஆசாபாசங்களும் உடைய மனிதப்பிறவிகள் .

சிங்களத்தின் கையில் சிக்கினாலும்,

உங்களைச் சிக்கவைக்காத

மனிதர்கள் ஐயா!!

நாங்கள் வாழவேண்டும்.....

உங்களைப்போல

நாங்களும் வாழவேண்டும் .

தெரிகின்றதா எங்களை ???

***எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன

Edited by கோமகன்

  • Replies 98
  • Views 5.6k
  • Created
  • Last Reply

காலத்திற்கேற்ற கவிதை. நன்றாகவும் யதார்த்தமாகவும் உள்ளது.

வலிகளை உளமார உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள். தொடருங்கள்.

சிங்களம் அடித்த அடி வலிக்கவில்லை

உங்கள் அடியின் வலி.........

குப்பிக்கடியின் வலியைவிட கொடுமை ஐயா!!

இன்றுதான் தெரிகிறது அடித்த விசில்

பந்தயக்குதிரைகளுக்கு என்று .

பந்தயக்குதிரைகள் நொண்டியானபோது

கோவேறு களுதைகளாகப் போய்விட்டது........

தெரிகின்றதா எங்களை ??

நாங்களும் உங்களைப்போல்

ரத்தமும் சதையும்

ஆசாபாசங்களும் உடைய மனிதப்பிறவிகள் .

சிங்களத்தின் கையில் சிக்கினாலும்,

உங்களைச் சிக்கவைக்காத

மனிதர்கள் ஐயா!!

நாங்கள் வாழவேண்டும்.....

உங்களைப்போல

நாங்களும் வாளவேண்டும் .

தெரிகின்றதா எங்களை ???

வலிக்கிறது கோமகன்.

குறிப்பு :

சொல்லுகிறேன் என்று குறை நினைக்காதீர்கள். உங்கள் கவிதையில் இருக்கும் எழுத்து பிழைகளையும் கொஞ்சம் கவனியுங்கள் முக்கியமாக (ல ள ழ )

Edited by பகலவன்

  • தொடங்கியவர்

காலத்திற்கேற்ற கவிதை. நன்றாகவும் யதார்த்தமாகவும் உள்ளது.

வலிகளை உளமார உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள். தொடருங்கள்.

வலிக்கிறது கோமகன்.

குறிப்பு :

சொல்லுகிறேன் என்று குறை நினைக்காதீர்கள். உங்கள் கவிதையில் இருக்கும் எழுத்து பிழைகளையும் கொஞ்சம் கவனியுங்கள் முக்கியமாக (ல ள ழ )

முதலில் உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் பகலவன் . நான் எப்பொழுதும் குறைநிறைகளை சுட்டிக்காட்டுவதையே விரும்புபவன் . சும்மா " நல்லாயிருக்கு " என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை . மேலும் எழுத்துப்பிழைகளை இயன்ற அளவு திருத்தி உள்ளேன் . தவறுகள் காணப்பட்டால் சுட்டிக்காட்டுங்கள் . மீண்டும் உங்கள் நேரத்திற்கு மிக்கநன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]காலத்துக்கேற்ற வரிகள். படிப்பவர்கள் சிந்திப்பார்களா ? .......[/size]

[size=4]...தங்கள் நேரத்துக்கும் பதிவுக்கும் என் நன்றிகள். [/size]

கவிதையிலேயே விளக்கமாகக் கூறிவிட்டீர்கள்.

போராட்டம் ஒன்று நடந்ததென்பதையே சனம் மறந்திட்டு வருகிறது. கூடிய கெதியில் மறக்கப்பட்டு விடுவார்கள். சொல்வதற்கு ஒன்றுமில்லை. பல தடவை எழுதியாயிற்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கோமகன்! ஆழம் நிறைந்த கவிதை.

[size=5]நாங்களும் உங்களைப்போல்

ரத்தமும் சதையும்

ஆசாபாசங்களும் உடைய மனிதப்பிறவிகள் .

சிங்களத்தின் கையில் சிக்கினாலும்,

உங்களைச் சிக்கவைக்காத

மனிதர்கள் ஐயா!![/size]

இது விடுதலைக்காய் தன்னை அர்ப்பணிக்கும் மாவீரன் மண்டையில் தோன்றும் சிந்தனை போல் எனக்கு தோன்றவில்லை

Edited by தமிழ்சூரியன்

அவர்களை வாழ விட்டால் சிங்களவனுக்கும் அரசியல் இல்லை ,எமக்கும் அரசியல் இல்லாமல் போய்விடும் .

நல்ல கவிதை கோ ,ரொம்ப எழுத்து பிழைகள் .

மாவீரன் மண்டையில் உதிக்கும் சிந்தனையை தமிழ்சூரியன் திறந்து பார்த்தவர் ,அப்படி இருக்க இல்லையாம் .

அது ஆசாபாசம் எமக்கு இல்லை விடுதலை விடுதலை என்று சொல்லி சாக சொன்னதாம் , இவரையும் நாட்டைவிட்டு ஓடிப்போய் குடும்பம் குட்டியுடன் விடுதலை விடுதலை என்று சொல்ல சொன்னதாம் .

  • கருத்துக்கள உறவுகள்

வலிக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அற்புதமாய் அமைந்து இருக்கிறது.

அதிலும் இவ்வரிகள் மனதைத் தொடுகிறது.

இன்றுதான் தெரிகிறது அடித்த விசில்

பந்தயக் குதிரைகளுக்கு என்று .

பந்தயக் குதிரைகள் நொண்டியானபோது

கோவேறு கழுதைகளாகப் போய்விட்டது........

தெரிகின்றதா எங்களை ??

  • தொடங்கியவர்

காலத்துக்கேற்ற வரிகள். படிப்பவர்கள் சிந்திப்பார்களா ? .......

...தங்கள் நேரத்துக்கும் பதிவுக்கும் என் நன்றிகள்.

எல்லாருக்கும் போகவேணும் எண்டு நான் எதிர்பார்கேல . ஆனால் கொஞ்சப்பேருக்காவது ( குறிப்பிட்ட வீதம்) போய்சேந்தாலே இந்தக் கவிதை வெற்றியை அடைஞ்சிட்டுது எண்டு நினைக்கிறன் . மிக்க நன்றிகள் நிலாமதி அக்கா உங்கடை நேரத்துக்கு .

அர்ச்சுனின் பதிலுக்கு நான் பதில் எழுதி கவிதையின் புனிதத்தை கெடுக்க விருப்பமில்லை ............ஆனாலும் கவிதை வடிப்போர் கவனத்திற்கு சில வரிகளை கொண்டு வர விரும்புகிறேன் ..............கவிதையின் பெருமையை ஏற்கனவே கவிகள் கவியாய் எமக்கு தந்துவிட்டனர்,,,,,,,,,,,,,,,அவை கவிதைகளாய் தமிழீழ வரலாற்றிலும் சரி,தமிழரின் வரலாற்றிலும் சரி பின்னி பிணைந்து விட்டன ...........அவை உரம் சேர்க்கும் உன்னதமான ,தூய்மையான ,பல உண்மைகளை எமக்கு காட்டி நின்றன ..........ஆனால் சில கவிதைகளில் அந்த உன்னதமான புனிதத்தை .உண்மையை காணமுடியவில்லை .....அது ஏன்தானோ இதுவே என் கேள்வி ............கேள்வி கேட்பதற்கு உரிமை இருக்குது..........அது போல் பதில் எழுதவும் உரிமை இருக்குது............ஆனால் அனைத்தும் உண்மை சார்ந்து இருக்க வேணும் ............நன்றி ....

  • தொடங்கியவர்

கவிதையிலேயே விளக்கமாகக் கூறிவிட்டீர்கள்.

போராட்டம் ஒன்று நடந்ததென்பதையே சனம் மறந்திட்டு வருகிறது. கூடிய கெதியில் மறக்கப்பட்டு விடுவார்கள். சொல்வதற்கு ஒன்றுமில்லை. பல தடவை எழுதியாயிற்று.

எருமை மாட்டிலை மழை பெஞ்சது போலை எண்டு சொல்லுறியள் . உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றிகள் தப்பிலி .

கவிதையிலேயே விளக்கமாகக் கூறிவிட்டீர்கள்.

போராட்டம் ஒன்று நடந்ததென்பதையே சனம் மறந்திட்டு வருகிறது. கூடிய கெதியில் மறக்கப்பட்டு விடுவார்கள். சொல்வதற்கு ஒன்றுமில்லை. பல தடவை எழுதியாயிற்று.

http://www.yarl.com/forum3/index.php?showforum=153

  • தொடங்கியவர்

வணக்கம் கோமகன்! ஆழம் நிறைந்த கவிதை.

உங்களைப் போன்றவர்களது ஆசீர்வாதங்கள் என்னை உரமூட்டி வளர்க்கும் . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துகளுக்கு .

இன்றுதான் தெரிகிறது அடித்த விசில்

பந்தயக் குதிரைகளுக்கு என்று .

பந்தயக் குதிரைகள் நொண்டியானபோது

கோவேறு கழுதைகளாகப் போய்விட்டது........

தெரிகின்றதா எங்களை ??

ஆழமான வரிகள்....

உண்மையை எழுதியிருக்கிறீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கனதியான கவிதை, கோமகன்!

எட்டுக் குதிரைகள் பூட்ட வேண்டிய வண்டியை, இரண்டு குதிரைகள் மட்டும், இழுக்கும் போது சுமை மிகவும் அதிகமாக இருக்கும்!

உங்கள் கவிதை, மிகுதி ஆறு குதிரைகளை நோக்கியே, எழுதப் பட்டுள்ளது என எண்ணுகின்றேன்!

தொடர்ந்து எழுதுங்கள், எல்லாக் குதிரைகளும், ஒன்று சேரும் வரை!

  • கருத்துக்கள உறவுகள்

------

இது விடுதலைக்காய் தன்னை அர்ப்பணிக்கும் மாவீரன் மண்டையில் தோன்றும் சிந்தனை போல் எனக்கு தோன்றவில்லை

எனக்கும்... அந்த சந்தேகம் வந்தது, தமிழ்ச்சூரியன்.

ஆனால்... கவிதை எழுதியவர், கோமகன் என்பதால்....

வேறு... என்னத்தை, எதிர்பார்க்க முடியும்.

சட்டியில்... உள்ளது தான்... அகப்பையில் வரும்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

அவர்களை வாழ விட்டால் சிங்களவனுக்கும் அரசியல் இல்லை ,எமக்கும் அரசியல் இல்லாமல் போய்விடும் .

நல்ல கவிதை கோ ,ரொம்ப எழுத்து பிழைகள் .

மாவீரன் மண்டையில் உதிக்கும் சிந்தனையை தமிழ்சூரியன் திறந்து பார்த்தவர் ,அப்படி இருக்க இல்லையாம் .

அது ஆசாபாசம் எமக்கு இல்லை விடுதலை விடுதலை என்று சொல்லி சாக சொன்னதாம் , இவரையும் நாட்டைவிட்டு ஓடிப்போய் குடும்பம் குட்டியுடன் விடுதலை விடுதலை என்று சொல்ல சொன்னதாம் .

மிக்க நன்றகள் அர்ஜுன் உங்கள் நேரத்திற்கு . எழுத்துப்பிழைகள் இயன்றவரை திருத்தியுள்ளேன் . ஏதாவது பிழைகள் இருந்தால் சொல்லுங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்.. தான் இதைப் படிக்கேக்க நினைவில் வந்து தொலையுது.

இன்று நேற்றல்ல.. சிங்களச் சிறைக் கொடுமை என்பது எமது ஆயுத விடுதலைப் போராட்ட காலத்திற்கு முந்தி இருந்து இருக்கிறது. எமக்காக அரசியல் பேசி.. 20... 30 வருடங்களாக சிறையில் உள்ளவர்களும் உளர். ஏன் மரண தண்டனை பெற்றோரும் உளர். ஏன் ஒட்டுக்குழுக்களால் கடத்திச் செல்லப்பட்டு ரகசியமாக போடப்பட்டோரும் உளர். சிங்கள அரசால் ரகசியமாகக் கொல்லப்பட்டோரும் உளர்..! இப்படி பல ரகம். இன்னும் விடுதலையாகி நீண்ட சுகவீனமுற்று உளரும் உளர்..!

அடிப்படையில் எல்லா அரசியல் கைதிகளுக்கும்.. சிங்களவனின் பாசையில் தமிழ் பயங்கரவாதிகளுக்கும்.. ஒட்டுக்குழுக்களின் பாசையில் புலிப் பாசிசவாதிகளுக்கும்.. பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற குரலை சர்வதேச அரங்கிலும்.. பிராந்தியத்திலும்.. உள்ளூரிலும் பலப்படுத்த வக்கில்லாத நிலையில்.. எழுதப்படும் கோழைத்தனமாகவே இதைப் பார்க்க முடிகிறது..!

இந்தக் கவிதைகள் சித்தார்த்தனும்.. டக்கிளசும்.. சங்கரியும்.. வரதராஜப்பெருமாளும்.. கருணாக்களும்.. பிள்ளையான்களும்.. இன்னும் இன்னும் பலரும்.. தாம் தாம் காட்டிக்கொடுத்து பிடித்துக் கொடுத்தவற்றிற்கு பரிகாரமாக... கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்க ஒரே குரலில் சிங்கள அரசின் மீது அழுத்தம் பிரயோகிக்கச் செய்யுமோ..??????!

தங்கள் இயலாமைக்காக.. எதற்கும் மக்களைத் திட்டி தீர்ப்பதே சில செயலற்ற கோழைகளின் தொழிலாப் போச்சுது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் சுடத்தான் செய்யும் . இங்கு எழுதும் சிலர் மாயைகளில் இருந்து இன்னும் தெளியவில்லை . தொடருங்கள் கோ உங்கள் பணியை

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவன் மாயையில் கிடக்கிறான் என்று சொல்லிக்கொண்டு கவிதைகளால்... கதைகளால் சிறையுடைப்புச் செய்யும் புத்திசாலிகளை இங்கு தான் நாம் தாராளமாகக் காண்கிறோமே..!

இவர் இதுவரை கவிதைகளால் கதைகளால் விடுவித்தோரின் எண்ணிக்கை.. என்னவாம்..???!

இப்படி எல்லாரும் கவிதைகளால் சிறை உடைக்க முடிந்திட்டால்.. ஏனாம் இந்தப் புலம்பல்கள்..????! நேரா சிங்களவனுக்கு ஒரு கவிதை எழுதிட வேண்டியது தானே..! :rolleyes::lol:

சிறை விடுவிப்பும்... சிறை உடைப்பும் மக்களின் கைகளில் மட்டுமல்ல.. ஆட்சியாளர்கள் மீதான பல்வேறு அழுத்தங்களால் வருவது..! இவை ஒன்றும் மக்களை திருந்தச் சொல்லி எழுதும் சமூகக் கவிதைகள் செய்யக் கூடியவை அல்ல..! ஆட்சியாளர்களும்..அரசியல்வாதிகளும்.. காட்டிக்கொடுப்பாளர்களும் திருந்தினால் அன்றி.. மக்கள் கூச்சல் போட்டு இவற்றிற்கு விடை காண முடியாது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இக்கவிதை ஆட்சியலர்களுக்கல்ல உங்களுக்கும் , எனக்குமானது .

கோ அண்ணா இந்த விதண்டாவாதம் எண்டா என்ன எண்டு கேட்டநீங்கால்லோ எனக்கு விடை கிடைச்சிட்டுது . உங்களுக்கு ?

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்.. தான் இதைப் படிக்கேக்க நினைவில் வந்து தொலையுது.

இன்று நேற்றல்ல.. சிங்களச் சிறைக் கொடுமை என்பது எமது ஆயுத விடுதலைப் போராட்ட காலத்திற்கு முந்தி இருந்து இருக்கிறது. எமக்காக அரசியல் பேசி.. 20... 30 வருடங்களாக சிறையில் உள்ளவர்களும் உளர். ஏன் மரண தண்டனை பெற்றோரும் உளர். ஏன் ஒட்டுக்குழுக்களால் கடத்திச் செல்லப்பட்டு ரகசியமாக போடப்பட்டோரும் உளர். சிங்கள அரசால் ரகசியமாகக் கொல்லப்பட்டோரும் உளர்..! இப்படி பல ரகம். இன்னும் விடுதலையாகி நீண்ட சுகவீனமுற்று உளரும் உளர்..!

அடிப்படையில் எல்லா அரசியல் கைதிகளுக்கும்.. சிங்களவனின் பாசையில் தமிழ் பயங்கரவாதிகளுக்கும்.. ஒட்டுக்குழுக்களின் பாசையில் புலிப் பாசிசவாதிகளுக்கும்.. பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற குரலை சர்வதேச அரங்கிலும்.. பிராந்தியத்திலும்.. உள்ளூரிலும் பலப்படுத்த வக்கில்லாத நிலையில்.. எழுதப்படும் கோழைத்தனமாகவே இதைப் பார்க்க முடிகிறது..!

இந்தக் கவிதைகள் சித்தார்த்தனும்.. டக்கிளசும்.. சங்கரியும்.. வரதராஜப்பெருமாளும்.. கருணாக்களும்.. பிள்ளையான்களும்.. இன்னும் இன்னும் பலரும்.. தாம் தாம் காட்டிக்கொடுத்து பிடித்துக் கொடுத்தவற்றிற்கு பரிகாரமாக... கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்க ஒரே குரலில் சிங்கள அரசின் மீது அழுத்தம் பிரயோகிக்கச் செய்யுமோ..??????!

தங்கள் இயலாமைக்காக.. எதற்கும் மக்களைத் திட்டி தீர்ப்பதே சில செயலற்ற கோழைகளின் தொழிலாப் போச்சுது..! :icon_idea:

யதார்த்தமான உண்மையான இந்த வசனங்களுக்கு பிறகு இங்கு இன்னொரு விளக்கம் நான் எழுதி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை ............ஒருதடவை நெடுக்ஸ் எழுதியதை ஆழமாக வாசித்து பாருங்கள் ..........பல உண்மைகள் உங்களுக்கு புலப்படும்...............கவிதைகள் ,கவிஞ்சர்கள் புதுமையானது,புதுமையானவர்கள் ................மனிதனின் வாழ்வியலில்,,,,,,,,,அல்லது இன்றைய எம் தமிழ் சமூகத்தில் ஒரு புதுமையை ,புரட்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதே என் அவா .மாறாக அது மேலும் எம் அழிவுப்பாதையை நோக்கி செல்லக்கூடாது என்பது அதை விட அதிகமான அவா ...............நன்றி..........

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தமான உண்மையான இந்த வசனங்களுக்கு பிறகு இங்கு இன்னொரு விளக்கம் நான் எழுதி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை ............ஒருதடவை நெடுக்ஸ் எழுதியதை ஆழமாக வாசித்து பாருங்கள் ..........பல உண்மைகள் உங்களுக்கு புலப்படும்...............கவிதைகள் ,கவிஞ்சர்கள் புதுமையானது,புதுமையானவர்கள் ................மனிதனின் வாழ்வியலில்,,,,,,,,,அல்லது இன்றைய எம் தமிழ் சமூகத்தில் ஒரு புதுமையை ,புரட்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதே என் அவா .மாறாக அது மேலும் எம் அழிவுப்பாதையை நோக்கி செல்லக்கூடாது என்பது அதை விட அதிகமான அவா ...............நன்றி..........

ஒரு 60 அடி ஆழம் காணுமா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.