Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்பை வெளிப்படுத்துங்கள் ஆண்களே! பெண்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!!

Featured Replies

தம்பதியரிடையேயான பிரச்சினைக்கு மூல காரணமே அன்பை சரியான அளவில் வெளிப்படுத்தாமல் விடுவதுதான். மனதில் டன் கணக்கில் அன்பும், பாசமும் இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது வெற்றியின் ரகசியம்.

நான் இங்கே தவிக்கிறேன். அவருக்கு என்மேல அக்கறை இல்லாம இருக்கிறாரே என்று நினைத்தாலே போதும் விரிசலின் விதை ஊன்றப்பட்டு விடும். எனவே ஆண்களே உங்களின் மனைவி மீதான பிரியத்தை ஏதாவது ஒரு விதத்தில் வெளிப்படுத்துங்கள் ஏனெனில் அவர்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான் என்கின்றனர் நிபுணர்கள். கணவரிடம் இருந்து மனைவி என்ன எதிர்பார்க்கிறார்? அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து மனைவியின் இதய சிம்மாசனத்தில் இடம் பெறுவது எப்படி என்றும் நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

நம்பிக்கைதான் வாழ்க்கை

நகை விளம்பரத்தில் சொல்வதைப் போல ‘நம்பிக்கை அதானே எல்லாம்' இது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ இல்லற வாழ்க்கைக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். எந்த சூழ்நிலையிலும் தன்னை சந்தேகப்படாத தன்மீது முழு அளவில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது மனைவியின் எதிர்பார்ப்பாகும். அதேபோல கணவன் நேர்மையானவனாக, தன்னை ஏமாற்றாதவனாக இருக்கவேண்டும் என்றும் பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.

புரிந்து கொள்ளுங்கள்

பொதுவாகக் கணவன் மனைவிக்கு இடையில் புரிந்துணர்வு முக்கியம். எந்த அளவு புரிந்துணர்வு இருந்தாலும், சந்தேகம் என்பது எப்போதும் வரலாம். அதனால், புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளும் அதே நேரம், எந்தப் பிரச்சினை மனதில் தோன்றினாலும், தெளிவாக அதைப் பேசி அதற்கான தெளிவான முடிவைக் காண்பதே இதற்குச் சிறந்த வழி.

உங்கள் மனைவி உங்களது நண்பர் ஒருவருடன் யதார்த்தமாகப் பழகும் விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவருடன் அன்பாகப் பேசி, நீங்கள் எந்த அளவுக்கு அவரை நேசிக்கின்றீர்கள் என்பதை உணர்த்தி, எதிர்காலம் பற்றியும் குழந்தைகள் பற்றியும் பேசி, பிரச்சினை இல்லாத ஒரு அழகான வாழ்க்கையைக் கண்ணில் காட்டி, உங்களது மனதில் உள்ள சந்தேகத்தை எடுத்துக் கூறினால், மனைவி அதை எளிதாக புரிந்து கொள்வார். இதைத்தான் பெரும்பாலான மனைவிகளும் எதிர்பார்க்கின்றனர் என்கிறது சர்வே ஒன்று.

திருப்தியான உறவு

குடும்ப உறவுகளுடன் நமக்கு ஏற்படும் அன்பு வேறு தம்பதியரிடையே ஏற்படும் அன்பு வேறு. இந்த அன்பு மற்றைய எல்லா அன்பை விடவும் வேறு பட்டது. பொதுவாக ஆண்களும் பெண்களும் ஒரேயடியாகத் தாம்பத்திய உறவில் திருப்தி காண்பது குறைவு. சிலவேளை கணவன் முதலில் திருப்தி அடையலாம் அல்லது மனைவி முதலில் திருப்தி அடையலாம். இதில் முதலில் திருப்தி அடைந்தவர் மற்ற நபரின் திருப்தி அடையாத நிலையை உணர்ந்தாலே பாதிப் பிரச்சினை தீர்ந்து விடும். எனவே உறவின் போது ஆணின் திருப்தியை பற்றி மட்டுமே கருத்தில் கொள்ளாமல் பெண்களையும் கொஞ்சம் பரிவோடு கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் பெண்கள்.

அன்பாய் இருங்களேன்

ஆண்களை விடப் பெண்கள் பொதுவாக ஆரம்பத்தில் போலவே கடைசிவரைத் தனது கணவனிடம் இருந்து அன்பை எதிர் பார்க்கின்றனர். அதே நேரம் சில ஆண்களும் இதை எதிர் பார்க்கின்றனர். இது கடைசிவரை ஒரே மாதிரி இருக்க வாய்ப்புக் குறைவாகவே அமைகிறது.

வேலைப் பளு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக மனைவி மீது அன்பு செலுத்தும் வாய்ப்பு குறைவாகவே அமைகிறது. மனைவிக்கு ஏதாவது துன்பம் வந்தாலோ, ஒரு நோய் வாய்ப்பட்டாலோ அல்லது அவர்களது உறவினர்களில் யாருக்காவது ஏதேனும் துன்பம் நேர்ந்தாலோ, அவற்றை கணவர் அக்கறையாய் அணுகி ஆறுதல் அளிக்கவேண்டும் என்பது மனைவியின் எதிர்பார்ப்பாகும்.

இடைவெளி வேண்டாமே

தம்பதியரிடையே இடைவெளி ஏற்படாமல் இருக்க மாதத்திற்கு ஒரு நாலாவது இருவரும் சேர்ந்து எங்காவது சென்று சாப்பிடலாம் அப்பொழுது கிடைக்கும் தனிமையில் மனதுவிட்டுப் பேசலாம். எந்தப் பிரச்சினை வந்தாலும் கோபத்தில் வார்த்தைகளை வெளிவிடாமல் இருப்பதோடு, ஆத்திரத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கவேண்டும். ஒருவரது உணர்வை மற்றவர் மதித்து, புரிந்து கொண்டு நடக்கலாம். பெண்களின் அன்பான இந்த எதிர்பார்ப்புகளை மதித்து அவற்றிர்க்கு ஏற்ப நடந்து கொள்ளும் கணவரை மனைவிகள் இதய சிம்மாசனத்தில் வைத்து பூஜிப்பார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

நீங்க எப்படி நல்ல கணவரா நடந்துக்கிறீங்களா?

http://www.paristamil.com/tamilnews/view-news-MjE4ODQyMjg0.htm

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு, நல்லதொரு பதிவு

  • கருத்துக்கள உறவுகள்
:huh: :huh: :huh:
  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையள் எல்லாம் புத்தி சொல்லுற அளவுக்கு, நம்மட ஆண்களின் நிலை போயிற்றுது என்பதை நினைக்கத் தான் மனதுக்குக், கஸ்டமாக் கிடக்குது!!! :(

  • கருத்துக்கள உறவுகள்

கணவன்மார்... சினிமா நடிகைகளின் படங்களை, கொம்புயூட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் போது மட்டும்...

மனைவி மாருக்கு, எப்படி மூக்கில் வேர்க்கிறதோ... தெரியவில்லை. திடீரென்று பின்னால்... தோன்றி, தலையில்... குட்டாமல் இருந்தால்... குடும்பத்தில் ஒரு பிரச்சினையும்... ஏற்படாது. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கைத்துணை சந்தேகப்படுறாங்களான்னு தெரிஞ்சுக்க சில டிப்ஸ்!!!

.

ஒரு அழகான, ஆரோக்கியமான உறவுகளுக்கு அடிப்படையானது நம்பிக்கை. ஒரு முறை அந்த நம்பிக்கை போய்விட்டால், மீண்டும் அந்த இடத்தில் நம்பிக்கை இருக்காது, சந்தேகம் தான் இருக்கும். மேலும் அவர்கள் என்ன செய்தாலும், அதில் ஒரு சந்தேகம் தோன்றும். ஆனால் இந்த சந்தேகம் சிலருக்கு தெரியாத வகையில் இருக்கும். ஆகவே தங்கள் வாழ்க்கை துணை சந்தேகப்படுகிறார்களா என்ற தெரிந்து கொள்ள ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அது என்னவென்று படித்து, அதை தெரிந்து கொண்டு, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வையுங்களேன்...

* எப்போது எதை செய்தாலும். உங்கள் துணை உங்கள் பின்பற்ற நினைப்பார்கள். அதிலும் துணையுடன் வெளியே செல்லாமல் இருந்தால், அப்போது தொடர்ந்து போன் அல்லது மெசேஜ் என்று, நீங்கள் இப்போது இருக்கும் நிலவரத்தை தெரிந்து கொள்வதற்கு வந்து கொண்டிருக்கும். ஆனால் அதுவே உங்கள் துணை எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் இருந்தால், ஒரு முறை மட்டுமே வரும். மேலும் சந்தேகம் வந்த பின்பு, அவர்கள் அடிக்கடி போன் செய்யும் போது, சாரி, போர் அடிச்சது அதான் போன் பன்றேன் என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் அந்த இடத்தில் சந்தேகம் உள்ளது.

* சந்தேகம் வந்த பின்பு, துணைக்கு எந்த ஒரு சேம்பேறித்தனமும் ஏற்படாமல் காணப்படுவார்கள். இந்த சந்தேகம் நம்பிக்கையின்மை மற்றும் சரியான பாதுகாப்பு இல்லாததாலும் தான் வருகிறது. அதனால் தான், உங்கள் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் தொடர்ந்து கவனிக்கின்றனர்.

* எப்போதெல்லாம் எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் துணை உங்களுடனேயே இருக்கிறார்களோ, அப்போது அவர்கள் உங்கள் மீதும், உங்களின் விசுவாசம் மீதும் சந்தேகப்படுகின்றனர் என்று அர்த்தம்.

* முக்கியமாக உங்களை உங்களது நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து பிரிப்பார்கள். அதிலும் வேறு பாலினம் என்றால் சொல்லவே வேண்டாம். உடனேயே ஆக்சன் தான்.

சந்தேகப்படுபவரை எப்படி புரிய வைப்பது?

* முதலில் உங்கள் துணையிடம் தெளிவாக பேச வேண்டும். அவர்கள் பிரச்சனையை கொண்டு வரும் போது எந்த ஒரு கோபமும் படாமல், அமைதியாக பேச வேண்டும். அதற்கான காரணத்தை சொல்லி, புரிய வைக்க வேண்டும்.

* உங்கள் துணை சந்தேகப்படுகிறார்கள் என்று தெரிந்தால், அனைத்தையும் அவர்கள் கேட்கும் முன்பே சொல்லிவிடுங்கள். இதனால், அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை மற்றும் நீங்கள் எதையும் மறைக்கவில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

* சந்தேகம் வேறு எங்கிருந்தும் வரவில்லை. அதற்கு கண்டிப்பாக ஏதேனும் காரணம் இருக்கும். அது கடந்த வாழ்க்கையில் ஏற்பட்ட ஏதேனும் ஒரு தவறின் காரணமாக இருக்கலாம். அந்த காரணத்தினால் தான் இவை நடக்கிறது. எனவே அதனைப் பற்றி, அவர்களிடம் தெளிவாக பேசி, உங்கள் அன்பை வெளிப்படுத்தி, உறவுகளைஇன்னும் வலுப்படுத்தலாம்.

மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், வாழ்க்கை நன்கு மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக இருக்கும்.

http://tamil.boldsky...79.html#cmntTop

Edited by nunavilan

  • தொடங்கியவர்

கருத்துகள் வழங்கிய அனைவருக்கும், நுணா அண்ணாவின் இணைப்பிற்கும் நன்றிகள்... :)

:huh: :huh: :huh:

ரொம்ப குழம்பாதையுங்கோ.... :D

குழந்தையள் எல்லாம் புத்தி சொல்லுற அளவுக்கு, நம்மட ஆண்களின் நிலை போயிற்றுது என்பதை நினைக்கத் தான் மனதுக்குக், கஸ்டமாக் கிடக்குது!!!

இணைத்தது மட்டும் தான் நான். எழுதியது வேறு யாரோ தான்...... :D

கணவன்மார்... சினிமா நடிகைகளின் படங்களை, கொம்புயூட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் போது மட்டும்...

மனைவி மாருக்கு, எப்படி மூக்கில் வேர்க்கிறதோ... தெரியவில்லை. திடீரென்று பின்னால்... தோன்றி, தலையில்... குட்டாமல் இருந்தால்... குடும்பத்தில் ஒரு பிரச்சினையும்... ஏற்படாது.

நீங்கள் பார்க்கிற நடிகைகளின் படங்கள் அப்பிடி ரகமாச்சே.... :D செருப்படி வாங்காமல் விட்டால் சந்தோசப்படலாம்.... :lol:

என்ன துளசி,

'ஒரு தலைக் காதல்', 'அன்பை வெளிப்படுத்துங்கள் ஆண்களே' என்று பதிவெல்லாம் ஒரு மார்க்கமாய்க் கிடக்கு. மாட்டுப்பட்டிடீங்களா? :D

  • தொடங்கியவர்

என்ன துளசி,

'ஒரு தலைக் காதல்', 'அன்பை வெளிப்படுத்துங்கள் ஆண்களே' என்று பதிவெல்லாம் ஒரு மார்க்கமாய்க் கிடக்கு. மாட்டுப்பட்டிடீங்களா? :D

இல்லை அண்ணா, இனியெல்லாம் லவ்வில மாட்டுப்பட மாட்டன். :D

நெடுக்ஸ் அண்ணா பூக்களை காதலிக்கிற மாதிரி நான் இயற்கையை காதலிக்கிறதா இருக்கிறன். :D

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அன்பை வெளிப்படுத்துங்கள் ஆண்களே! பெண்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!!

நிச்சயமாய்...futureஇல இங்கை வந்து எழுதுவம்.. :D நன்றி பகிர்விற்கு...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்

நிச்சயமாய்...futureஇல இங்கை வந்து எழுதுவம்.. :D நன்றி பகிர்விற்கு...

"அன்பை வெளிப்படுத்துங்கள் பெண்களே! ஆண்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!!" என்றா? :D

  • கருத்துக்கள உறவுகள்

"அன்பை வெளிப்படுத்துங்கள் பெண்களே! ஆண்களின் எதிர்பார்ப்பும் அதுதான்!!" என்றா? :D

நன்றி முற்கூட்டிய காலநிலை எதிர்வுகூறலுக்கு....... :D

Edited by சுபேஸ்


  • அற்புதமான ஓர் பதிவை தேடி இணைத்ததற்கு நன்றி காதல் ................நானும் ஒரு குடும்பஸ்த்தவன் என்ற வகையில் நிறைய பயனுள்ள விடயங்களை இங்கே காண்கிறேன் .......நன்றி.......
    வெகு விரைவில் திருமணமாகி பலதும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்று உங்களை அண்ணாவாக வாழ்த்துகிறேன் ....

  • தொடங்கியவர்

  • அற்புதமான ஓர் பதிவை தேடி இணைத்ததற்கு நன்றி காதல் ................நானும் ஒரு குடும்பஸ்த்தவன் என்ற வகையில் நிறைய பயனுள்ள விடயங்களை இங்கே காண்கிறேன் .......நன்றி.......
    வெகு விரைவில் திருமணமாகி பலதும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் என்று உங்களை அண்ணாவாக வாழ்த்துகிறேன் ....

நன்றி தமிழ்சூரியன் அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். :) ஆனால் இந்த வாழ்த்துக்கும் எனக்கும் சம்பந்தமிருப்பதாக எனக்கு தெரியேல்லை.... :D

  • கருத்துக்கள உறவுகள்

கணவன்மார்... சினிமா நடிகைகளின் படங்களை, கொம்புயூட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் போது மட்டும்...

மனைவி மாருக்கு, எப்படி மூக்கில் வேர்க்கிறதோ... தெரியவில்லை. திடீரென்று பின்னால்... தோன்றி, தலையில்... குட்டாமல் இருந்தால்... குடும்பத்தில் ஒரு பிரச்சினையும்... ஏற்படாது. :D:lol:

சிறி அண்ணா உதால இப்ப என்ட மனிசிக்கு திரிசாவையே கண்ணில காட்டக் கூடாது. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி சகோதரி..

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சூரியன் அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். :) ஆனால் இந்த வாழ்த்துக்கும் எனக்கும் சம்பந்தமிருப்பதாக எனக்கு தெரியேல்லை.... :D

துளசிக்குப் பாட்டு மூலம் பதில் சொன்னால், கூட விளங்கும், தமிழ்சூரியன்! :D

  • தொடங்கியவர்

கருத்து கூறிய அனைவருக்கும் பாடல் தந்த புங்கையூரன் அண்ணாவுக்கும் :D நன்றி...

பெண்களுக்கு அன்பை வெளிபடுத்துவதில் தவறில்லை அதற்க்கு பலனும் உடன் கிடைக்கும் ஆனால் பெண்கள் என்ற பெயரில் உலாவரும் பிசாசுகளுக்கு எதை வெளிக்காட்டுவது?

  • தொடங்கியவர்

பெண்களுக்கு அன்பை வெளிபடுத்துவதில் தவறில்லை அதற்க்கு பலனும் உடன் கிடைக்கும் ஆனால் பெண்கள் என்ற பெயரில் உலாவரும் பிசாசுகளுக்கு எதை வெளிக்காட்டுவது?

:D :D

ரொம்ப அடி பட்டுட்டீங்கள் போலிருக்கு. :D

பிசாசுகளை விட்டிட்டு பெண்களை கல்யாணம் பண்ணினா பிரச்சினை இல்லை. :icon_idea:

கல்யாணம் செய்த பின்னர் அவர்கள் பிசாசு மாதிரி நடந்தால் அன்பால் அவர்களின் பிசாசு தனத்தை மாற்ற முயலுங்கள். முடியாவிட்டால் உங்களை பிசாசாக மாற்றி விடுவார்கள். :icon_idea:

அன்பை வெளிக்காட்ட வேண்டும் என்று தான் நிறைய தடவை நினைப்பேன்.

அவள் வார்த்தைகள் மூலமான அன்பை தான் அதிகம் எதிர் பார்ப்பாள்.

"அன்பாய் கதையுங்கோவனப்பா " இது அவள் வாயிலிருந்து அடிக்கடி வரும் ஒரு வார்த்தை. (மிச்சம் எல்லாம் தணிக்கை :lol: )

ஆனால் சில வேளைகளில் வார்த்தைகள் மூலமான அன்பு , சும்மா போலியாக நடிக்கிறமோ என்றும் எண்ண தோன்றும்.

தொடுகை, அணைப்பு, முத்தம் (சில வேளைகளில் மட்டும்),...... எனக்கு தெரிய நான் அன்பை வெளிபடுத்தும் வழிமுறைகள்.

என்னை பொறுத்தவரை மனைவியில் அக்கறையாக இருந்தாலே போதும், அதுவே எங்களின் அன்பை அவளுக்கு புரிய வைத்துவிடும்.

அண்மையில் நடந்த சம்பவமொன்று, எப்பவும் போல முரட்டுத்தனமாக அவளை கூப்பிடுவதை விடுத்து, இந்த கட்டுரையில் கூறியது போல முயற்சி செய்வோம் என்று ,

இன்றைக்கு என்னம்மா சாப்பாடு .. (பழைய முறை : இன்றைக்கு என்னடி சாப்பாடு).

உங்கட கையாலே சாப்பிடுவதே ஒரு தனி சுவை ... (பழைய முறை : கெதியிலே வந்து போடு எனக்கு நிறைய வேலை கிடக்கு)

இன்றைக்கு இந்த குழம்பு சூப்பராக இருக்கு ... (பழைய முறை : என்னடி குழம்பு இது ..மனுஷன் சாப்பிடுவானா )

இப்படி கொஞ்சம் வழமைக்கு மாறாக எடுத்து விட்டேன்.

அதற்கு அவள் ..

என்னப்பா நடந்தது வரேக்க தலையிலே நிலை ஏதாவது இடிசுட்டுதே. எங்க காட்டுங்கோ பார்ப்பம் என்று கிட்ட வந்தாள் .. :icon_idea:

இது எனக்கு தேவையா ..??? :lol:

  • தொடங்கியவர்

:lol: :lol: :lol:

பகலவன் அண்ணா பிறகு வந்து பச்சை போடுறன். :D

நீங்கள் மனைவியோட அன்பா தானே இருக்கிறீர்கள்? (பயணக்கட்டுரை வாசித்தவர்களுக்கு தெரியும் :icon_idea:) பிறகு ஏன் இந்த முயற்சி? :D இது அன்பு காட்டாதவர்களுக்காக இணைக்கப்பட்டிருக்கு.... :D

அன்பை வெளிக்காட்ட வேண்டும் என்று தான் நிறைய தடவை நினைப்பேன்.

அவள் வார்த்தைகள் மூலமான அன்பை தான் அதிகம் எதிர் பார்ப்பாள்.

"அன்பாய் கதையுங்கோவனப்பா " இது அவள் வாயிலிருந்து அடிக்கடி வரும் ஒரு வார்த்தை. (மிச்சம் எல்லாம் தணிக்கை :lol: )

ஆனால் சில வேளைகளில் வார்த்தைகள் மூலமான அன்பு , சும்மா போலியாக நடிக்கிறமோ என்றும் எண்ண தோன்றும்.

தொடுகை, அணைப்பு, முத்தம் (சில வேளைகளில் மட்டும்),...... எனக்கு தெரிய நான் அன்பை வெளிபடுத்தும் வழிமுறைகள்.

என்னை பொறுத்தவரை மனைவியில் அக்கறையாக இருந்தாலே போதும், அதுவே எங்களின் அன்பை அவளுக்கு புரிய வைத்துவிடும்.

அண்மையில் நடந்த சம்பவமொன்று, எப்பவும் போல முரட்டுத்தனமாக அவளை கூப்பிடுவதை விடுத்து, இந்த கட்டுரையில் கூறியது போல முயற்சி செய்வோம் என்று ,

இன்றைக்கு என்னம்மா சாப்பாடு .. (பழைய முறை : இன்றைக்கு என்னடி சாப்பாடு).

உங்கட கையாலே சாப்பிடுவதே ஒரு தனி சுவை ... (பழைய முறை : கெதியிலே வந்து போடு எனக்கு நிறைய வேலை கிடக்கு)

இன்றைக்கு இந்த குழம்பு சூப்பராக இருக்கு ... (பழைய முறை : என்னடி குழம்பு இது ..மனுஷன் சாப்பிடுவானா )

இப்படி கொஞ்சம் வழமைக்கு மாறாக எடுத்து விட்டேன்.

அதற்கு அவள் ..

என்னப்பா நடந்தது வரேக்க தலையிலே நிலை ஏதாவது இடிசுட்டுதே. எங்க காட்டுங்கோ பார்ப்பம் என்று கிட்ட வந்தாள் .. :icon_idea:

இது எனக்கு தேவையா ..??? :lol:

இதனை ஓரிரண்டு மாதங்கள் தொடர்ந்து கடைப்பிடித்துப் பாருங்கள். அதன் பிறகு தெரியும் அதன் பலாபலன்கள். யாழுக்கு வரவே உங்களுக்கு நேரமிருக்காது. :lol: :lol: :lol:

இதனை ஓரிரண்டு மாதங்கள் தொடர்ந்து கடைப்பிடித்துப் பாருங்கள். அதன் பிறகு தெரியும் அதன் பலாபலன்கள். யாழுக்கு வரவே உங்களுக்கு நேரமிருக்காது. :lol: :lol: :lol:

சரி உங்களுக்காக கடைபிடிச்சு பார்க்கிறேன். பிறகு நான் யாழுக்கு வராவிட்டால் என்னை குற்றம் சொல்ல கூடாது. :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் ராசா

இந்த ஆற்றில் கரைக்கும் விளையாட்டு

பெண்களுக்கு போதும் என்ற மனம் என்றுமே வராத ஒன்று. :lol::D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.