Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எரிக் சோல்ஹெய்ம்

Featured Replies

உறவுகளே , நடந்தது ஒரு தந்திர யுத்தம் , இது வெளிநாடுகளுக்காக நடத்தப்பட்ட மிகவும் தந்திரமான யுத்தம் . நிலங்களை மீட்ட பின்பு தமிழீழத்துக்கான அங்கீகாரம் வேண்டி இந்த மேற்கு நாடுகளில் காலில் தான் போய் விழவேண்டிய யதார்த்தம் இருந்தபோது . இரண்டு தெரிவுகள் இருந்தன :

1 . நிலத்தை மீட்ட பின்பு அங்கீகாரத்துக்கு போவது .

2 . அங்கீகாரம் கிடைத்த பின்பு நிலத்தை மீட்பது .

இதில் முதலாவது நடக்கப் போவதில்லை என்பது பேச்சுவார்த்தை களத்தில் நன்கு புரிந்தது. பல வேற்று நாட்டு விடுதலை போராட்டங்கள் இந்த வழியில் சென்று இன்றுவரை அங்கீகாரம் பெறமுடியாமல் இருக்கிறார்கள்.

எனவே இரண்டாவது தெரிவு செய்யப்பட்டது . எனவே குழப்பம் வேண்டாம் , தமிழீழத்தை ஐ. நா அங்கீகரிப்பதற்கான செயற்பாடுகளை விரைவு படுத்துங்கள் , அந்த அங்கீகாரம் கிடைக்கும் போது நிலமும் மிகக் குறைந்த இழப்புகளுடன் மீட்கப்படும் . அதுவரை வெளிநாட்டவர்கள் எழுதுவதையும் சொல்லுவதையும் பார்த்தும் கேட்டும் குழம்ப வேண்டாம் . மீண்டும் சொல்ல்கிறேன் , நடந்தது மிகவும் தந்திரமான யுத்தம் , குழப்பம் வேண்டாம் .

உங்களை அரிச்சுவடியில் வரவேற்க தவறியமைக்கு வருந்துகிறேன் ....நல்வரவு...........

  • Replies 163
  • Views 14.3k
  • Created
  • Last Reply

http://www.yarl.com/...=40#entry705935

நன்றி நாரதர். தேன்மொழி சில உள் விசையங்களை சொல்லியிருக்கிறார். பொயட்டின் வேறும் ஒரு சறடு சாத்திரியார் இன்னொரு போராடத்திற்கு தயார் செய்துகொண்டிருக்கிறார் என்பதுமாகும். அதை நான் இதுவரையில் சாத்திரியாரின் திரிகளில் பார்க்கவில்லை.

அப்படி வேலை செய்கிறவர்கள்தான் எங்கள் அடுத்த கட்ட விடுதலைப் போராட்டத்தின் அத்திவாரக்கற்கள். தோழர் சாத்திரி போன்றவர்கள் அந்த மட்ட பணிகளைச் செய்கிறார்கள்.

Edited by மல்லையூரான்

தாம் செய்த மனிதாபிமானமற்ற பிழைகளை மறைக்க இன்னொருவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

அதேசமயம், இதை காரணமாகக் காட்டி இலங்கை அரசு நடத்திய குறிவைத்த தாக்குதல்களை நியாயப்படுத்தமுடியாது. மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் என்று தெரிந்தே, இலங்கை அரசு தாக்குதல்களை நடத்தியது என்பதற்கான பல சான்றுகள், அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அதிலும் குறிப்பாக துப்பாக்கிச் சூடுகள் நடத்தமுடியா 'பாதுகாப்பு வலயம்' என்று அரசே ஒரு பகுதியை அறிவிப்பதும் அந்த பகுதிக்கு மக்கள் வந்த பிறகு அங்கே குறிவைத்து தாக்குதல் நடத்துவதுமாக அரசு செயற்பட்டிருக்கிறது என்பதற்கான வலுவான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

மூதூர் படுகொலைக்கெதிராக பிரான்ஸ் அமைப்பு நியாயம் கேட்கவுள்ளார்கள்.

அவர் வரலாற்று தவறு விட்டார் இவர் வரலாற்று தவறு விட்டார் என்று கூற மட்டும் சொல்கேயுமால் முடிகிறது. ஆனால் சிங்களத்தின் படுகொலை பற்றி கையில் ஆதாரங்களை வைத்துக்கொண்டும் அது பற்றி ஐ.நா சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க மட்டும் முடியாது.

வெளியிடப்பட்ட ஆதாரங்களை விட பதுக்கி வைத்திருக்கும் ஆதாரங்கள் ஏராளம். எல்லாம் விக்கிலீஸ் வெளியிட்டால் தான் வெளிவருமோ தெரியவில்லை.

முன்னர் தான் எரிக் சொல்கெய்ம் பிழை விட்டார். இன்று அதனை மறைக்க இன்னொருவர் மேல் பழி போடுவதை விடுத்து இனியாவது திருந்தி, தமது பிழைகளை ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சிங்களம் செய்த அநியாயத்திற்கெதிராக ஏதும் செய்தால் கூட பரவாயில்லை... அதை விடுத்து இப்படியொரு பொய் அறிக்கை... அது கூட தம்மை காப்பாற்றிக்கொள்வதற்காக.... இங்கும் சர்வதேச சுயநலமே மிஞ்சி நிற்கிறது....

உருத்திரகுமார் அண்ணாவுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தை ஐ. நா அங்கீகரிப்பதற்கான செயற்பாடுகளை விரைவு படுத்துங்கள் , அந்த அங்கீகாரம் கிடைக்கும் போது நிலமும் மிகக் குறைந்த இழப்புகளுடன் மீட்கப்படும் . அதுவரை வெளிநாட்டவர்கள் எழுதுவதையும் சொல்லுவதையும் பார்த்தும் கேட்டும் குழம்ப வேண்டாம் . மீண்டும் சொல்ல்கிறேன் , நடந்தது மிகவும் தந்திரமான யுத்தம் , குழப்பம் வேண்டாம் .

மாலதி அகா எழுதிய புத்தகத்தில் எழுதிய விடயம் முக்கியமானது. சமாதான காலத்தில் வன்னிக்குச் சென்ற முதல் ராசதந்திரி சீனத் தூதுவர்.அவர் புலிகளுக்கு வன்னியில் பல முதலீட்டுத் திட்டங்களுக்கான ஆலோசனைகள் உதவிகளுடன் வந்திருந்தார் எனக் கூறி உள்ளார். ஆனால் புலிகள் இந்த உதவிகளைப் பெற்றால் இந்தியாவையும் , மேற்குலகையும் பகைக்க வேண்டி வரும் எனக் கருதி அந்த உதவிகளைப் பெற வில்லையென. புலிகளின் வீழ்ச்சிக்கான உண்மையான காரணம் இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது.

இவை பயனுள்ள கருத்துகள். அமெரிக்க அரசும் சில உதவிகளை 80களின் பிற்பகுதியில் கேட்டிருந்ததாகவும் அவற்றையும் இந்தியா விரும்பாது என்ற காரணத்துக்காக செய்யவில்லை என்றும் முன்னர் தெரியவந்தது.

இது மிகவும் சிக்கலான கவனமாக கையாளப்பட வேண்டிய ஒரு போராட்டம். போராளிகள் தமது ஆற்றலுக்கும் மனித சக்திக்கும் முடிந்த அளவு முயற்சித்திருந்தார்கள். ஆயுதப்போராட்டம் நிறுத்தப்பட்டிருப்பதும் பெருமளவு மக்கள் இறந்து போனதும் யாவரும் அறிந்ததே. ஜே.வி.பி கிளர்ச்சியிலும் பல்லாயிரக்கணக்கில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். ஒரு குரூரமான அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவது வரலாற்றில் பல முறை தவிர்க்கப்பட முடியாமல் போயிருக்கிறது.

சர்வதேச இராஜதந்திரிகள் மக்களின் இறப்பை தவிர்ப்பதற்கும் தமது நாடுகளின் நலன்களுக்கும் முதலிடம் கொடுக்கும் தீர்வுகளை அடைய முயற்சித்தார்கள். அந்த முயற்சிகள் நீண்டகால நோக்கில் தமிழ்மக்களுக்கு நன்மையானவையா? என்பது கேள்விக்குரியது. ஆனாலும் அவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டதற்காக அந்த இராஜதந்திரிகளை எதிரிகளாக கருதுவது பயனற்றது. அவர்களுக்கு தேவையானதை அவர்கள் பெறும்போது நமக்கு கிடைக்கவேண்டியது கிடைக்குமா? என்று பார்க்க வேண்டும். கிடைக்குமானால் அவர்களுடைய முயற்சிகளுக்கு ஒத்துழைக்கலாம். இல்லாவிட்டால் நாகரிகமாகவும் மதிப்புக்கு உரிய விதத்திலும் அவர்களது ஆர்வத்துக்கு நன்றி தெரிவித்து அவர்களது உதவியை நிராகரிக்க வேண்டும். இதுவே 2009ல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

இங்கே கருத்து எழுதும் பலர் தமது பின்னணியிலும் அனுபவத்தில் இருந்தும் நிலைமைகளை விளங்கிக் கொண்டு எழுதுகிறார்கள். அந்த அனுபவமும் பின்னணியும் இல்லாதவர்களுக்கு அவர்களின் கருத்துகளை ஏற்றுகொள்ளவது கடினமாக இருக்கும். அதற்காக அவர்கள் மனம் வருந்தும் விதமாக கருத்துகளை எழுதினால் கருத்துப்பரிமாற்றம் சாத்தியமற்று போய்விடும். ஒரே கருத்து கொண்டவர்கள் அதே கருத்துகளை பரிமாற்றம் செய்வதால் என்ன பயன்? மாற்று கருத்து கொண்டவர்கள் கருத்து பரிமாற்றம் செய்வதால் நாம் புதிய விதமாக சிந்திக்க முடிகிறது. இந்த சிக்கலான பிரச்சினைக்கு புதிய அணுகுமுறைகளை பற்றி விவாதிக்க முடிகிறது. ஆகவே மாற்று கருத்துகளை நாம் வரவேற்க வேண்டும். அவற்றை முன்வைப்பவர்கள் மனம் வருந்தாது, தமது கருத்துகளை மற்றவர்கள் ஆர்வத்துடன் விமரிசிப்பது கண்டு ஊக்கம் கொண்டு மேலும் கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட வைக்கவேண்டும். இவை புதிய அணுகுமுறைகளுக்கு வழிவகுக்கும். எமது பிரச்சினைக்கு இன்னுமொரு ஐயன்ஸ்ரைனை நாம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது என்பதை நாம் மறக்க கூடாது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

tHIS IS 2END POSTING. 1ST POSTING REMOVED. PLEASE ALLOW THIS OR REMOVE AND BLOOCK ME FROM YAL.COM

2END SENDING.

என்னுடைய கோப வார்தைகளுக்காக மல்லையூரானும் நாரதரும் மன்னிக்க வேணும். நானும் அவர்களை மன்னித்து விட்டேன்.

எனக்கு நாரதர் மல்லையூரான் போன்றவர்கள் யார் என்று தெரியாது. நாம் விடுதலை பெறுவதென்றால் நாளை அரசியல் ரீதியாக நாரதர் மல்லையூரான் போன்றவர்களுடன் சேர்ந்து ஏன் அவர்கள் தலைமையில்கூட வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதை ஒருபோதும் மறக்கவும் மறுக்கவும் இல்லை.

இங்கே கருத்து எழுதும் பலர் தமது பின்னணியிலும் அனுபவத்தில் இருந்தும் நிலைமைகளை விளங்கிக் கொண்டு எழுதுகிறார்கள். அந்த அனுபவமும் பின்னணியும் இல்லாதவர்களுக்கு அவர்களின் கருத்துகளை ஏற்றுகொள்ளவது கடினமாக இருக்கும். அதற்காக அவர்கள் மனம் வருந்தும் விதமாக கருத்துகளை எழுதினால் கருத்துப்பரிமாற்றம் சாத்தியமற்று போய்விடும். ஒரே கருத்து கொண்டவர்கள் அதே கருத்துகளை பரிமாற்றம் செய்வதால் என்ன பயன்? - ஜூட்

யாழ்க் களம் இன்றைய நிலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயனுள்ள ஒரு ஊடகம். ஆனால் கருத்துக்கள் அடிப்படையில் மட்டும் விவாதம் என்கிற நாகரீகம் சூழ்நிலை உருவாக்கப் பட வேண்டும்.

.

.

2006க்குப் பின்னர் தான் வன்னிக்குப் போகவில்லை.

நான் திரும்ப திரும்ப 1996 - 2006 காலக் கட்டத்தில் வன்னிக் காடு ஆறுமாதம் வெளிநாடு ஆறுமாதமாக வாழ்ந்தேன் என்று எழுதியிருக்கிறேன்.

நான் அஞ்சுகிறவனல்ல ஆனால் அனியாயமாக கொல்லப் படக்கூடாது என்பதில் வன்னி உட்பட என் நண்பர்கள் கரிசனையாக இருந்தனர். மல்லையூரானுக்காக ஆதரப் படுதிய சில தகவல்கலை வெளியிடுகிறேன்

1. 1990கலின் பிற்பகுதியில் போராளிகள் விருப்பப்படி இந்திய போராளிகளுக்கிடையில் இணக்கம் ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டேன்.“ராஜீவ்காந்தியில் வளக்கு தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்டு விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் பிரபாகரனுக்கும் பொட்டம்மானுக்கும் பொது மன்னிப்பு வளங்கி போராட்டத்தை ஆதரிப்பது தொடர்பாக பேச்சிருந்த்து. இதை ஊகிதிருந்த பதிரிகையாளர் ஞானி பிரபாகரனையும் பொட்டம்மானையும் கையளிக்குமாறு வன்னியைக் கேட்ப்பீர்களா என கேட்டார். பிரபாகரனில் hard evidence இல்லை. அரசியல் ரீதியாக இணைக்கப் பட்டிருக்கிறார். hard evidence அடிப்படையில் குற்றப் பதிரிகை திருத்தப் பட்டால் நான் வன்னியை press பண்ணுவேன் என்றேன். அப்போ பொட்டம்மானை கையளிக்கச் சொல்வீர்களா என்று கேட்க்கப் பட்டது. .hard evidence உள்ளவர்களை கையளிக்கும்படி வலியுறுத்துவேன் என்று பதில் சொன்னேன். இதன்பின் வன்னிக்கு வந்தபோது வன்னியில் நேர்முகம் வாசித்ததாக மட்டுமே சொன்னார்கள் வேறு ஒன்றும் கேட்க்கவில்லை. பொட்டம்மனைக் கையலித்தால் பொது மன்னிப்பு வளங்குவார்கள் தலைவரை கேட்க்க மாட்டார்கள் என்பதற் என்ன உத்தரவாதம் என்பது பற்றித்தான் கேட்டார்கள். என்னை சந்தித்தபோது நிலாந்தனும் திருவும் அதிர்ந்து போய்விட்டார்க்கள். பொட்டம்மனை கையளிப்பதுபற்றி பேட்டிகொடுத்துவிட்டு வந்திருக்கிறாயே என அவர்கள் என்பாதுகாப்புப் பற்றி பெரும் கவலை கொண்டார்கள். எனக்கும் வன்னிக்கும் இருந்த உறவை திருவும் நிலாந்தனுமே புரிந்துகொள்ளாதபோது கள உறவுகள் புரிந்து கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.

நான் முஸ்லிம் மக்கள் தொடர்பாகவும் பிற இயக்கத்தொடர்பு கருத்த்ஹு வேறுபாடுகலுக்கு கொலை என்பாதுகாப்புப் பற்றி

னையும் கையளிக்கும்படி

1. நோர்வே பேராசிரியர் ஒய்வின் புளரூட் முன்னிலையில் கிழக்குமாகண எல்லையில் இராணுவதினருடன் நான் மோதி இருக்கிறேன். தொடற்சியாக கிழக்குமாகாண தழபதியாக இருந்த மேயர் ஜெனரல் சாக்கியிடம் ஒய்வின் புக்ளரூட் மற்றும் முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் பசீர் சேகுதாவுத் முன்னிலையில் கரசாரமாக விவாதித்தேன். அந்த விவாததில் எலிபன்ற் சோடா கம்பனி போல உங்கள் இராணும்தான் இலங்கையில் பெரிய அமைப்பு ஆனால் எங்கள் பையன்கள் கொக்காகோல கம்பனி போல மாறிவிட்டார்கள் என்றேன். ஒயிவின் அச்சத்துடன் இருந்தார். இறுதியில் அரசை மீறி இராணுவமும் புலிகளும் நேரடியாக பேசுவது பயனுள்ளது என்று சொன்னேன். அவர் தனது மினஞ்சல் தந்தார்/. அதை வன்னியில் சேர்த்தேன்.

2. நீ வெறும் கவிஞன் மட்டுமே என்கிற தோரணையில் “எரிக் சோல்கைமுக்கும் தமிழ்க் கவிதைக்கும் என்ன தொடர்பு” என்றுகூடக் கேட்கிறார்கள்.. ஒய்வினுடன் சோதனைகளும் காத்திருப்புமில்லாமல் முல்லைதீவு சென்று அமரர் சூசையுடன் பேசியபோது ஏறக்குறைய 5 மணித்தியாலங்கள் நோர்வே பேராசிரியர் ஒய்வின் புக்ளரூட் வெளியில் காத்திருக்க நேர்ந்தது. நாம் தனிமையில் கவிதை பற்றி ஒரு வார்த்தைகள்தானும் பேசவில்லை.

3. கருணா வெளியேற்றத்தின்போது குளோபல் தமிழ் வனொலி குருபரன் ”கிழக்கு மாகாண போராளிகளை தாக்குவதற்க்கு பிரபாகரனுக்கு மக்கள் ஆணையில்லை. போராளிகளை விட்டுக்கு செல்ல ஆணயிடலாம்” என்கிற என்னுடைய அறிக்கையை சூரியன் எப் எம்மில் பலதடவை ஒலிபரப்பினார். அதே அறிக்கை ஞாயிறு வீரகேசரியிலும் வெளி வந்தது. அதன்பின் நான் வன்னிக்குச் சென்றபோது பலர் என்னைத் தடுத்தார்கள். ஆனால் எனக்கு விடுதலைப்பணி இருக்கு என்றபடி வன்னி சென்றேன். வன்னியில் சூரியம் எப் எம் கேட்டோம் என்பதுதவிர அதுபற்றி வேறு ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை.

4. ஜெனீவா பேச்சுவார்த்தையின் பின்னர் நான் அரசையும் போராளிகளையும் எனது பிபிசி பேட்டியில் கடுமையான விமர்சனம் செய்திருந்தேன். அதுபற்றி சார்பு ஊடகங்கள் என்மீது அவதூறு எழுத வன்னி அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் வன்னி சென்றபோதும் அதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை. எனக்கும் கஸ்ரோ அணியினருக்குமிடையில் சிக்கலுக்கு இதுவும் ஒரு காரணமாகலாம். தனக்கு வெளியில் ஒருவர் இயங்குவதை கஸ்ரோ விரும்பவில்லை..நானும் கஸ்ரோவின் அமைபினூடாக வன்னிக்குள் நுழைய மறுத்ததால் மாதவனூடாக என் நுழைவுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

5. என்பாதுகாப்புத் தொடர்பாக வன்னியிலும் வவுனியாவிலௌம் விடுதலைப் புலிகளும் தென்னிலங்கையில் முஸ்லிம் தலைமை என் தனிப்பட்ட சிங்கள தோழர்கள் கரிசனையுடன் இருந்தார்கள். போராளிகளுக்கு இந்திய தூதரகத்துக்கும் இடையில் பணியாற்றினேன். ஒருமுறை நான் இந்தியதூதர் நிருபம்சென்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது என்னை கொலைசெய்ய இலங்கை அரசுடன் செயல்படும் ஒரு குழு திட்டமிடும் செய்தி அவருக்கு தெரிவிக்கப் பட்டது. எனக்கு முன்பே அக் குழுவின் தலைவரை தொலைபேசியில் அழைத்து கடுமையாக எசரிக்கப் பட்டது. அப்பொழுதுதான் இந்திய தூதரகமும் என் பாதுகாப்புத் தொடர்பாக அக்கறையாக இருப்பது தெரிய வந்தது.

வன்னியில் பாதுகாப்புக் காரணங்களுக்காக பெயர் குறிப்பிட முடியாத சிலரும் தயாமாஸ்ட்டரும், அமரர்கள் யாழ்வேந்தன் சிறீ நியூட்டன் போன்றவர்களும் தோழர்கள் புதுவை இரத்தினதுரை ஊடகவியலாலர்கள் பாலகுமார் உடகவியல் தோழர்கள் ஜெயராஜா கவிஞர் கருணாகரன் போன்றவர்களும் என் பாதுகாப்பில் கருசனையாக இருந்தனர்.

6. சரி தோழர்களே.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

Jude அண்ணாவிற்கு ஒரு பச்சை இதுக்கு தான் நீங்கள் அடிக்கடி இந்த பக்கம் வர வேணும் எண்டு சொல்லுறது

மற்றது மதிப்பிற்குரிய கவிஞர் ஐயா அவர்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்த்து யாழுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி SUNDHAL, யூட்டுக்கு என்னிடம் இருந்தும் ஒரு

பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்துக்கு பலர் எதிர்வினை ஆற்றி இருக்கின்றீர்கள். நன்றி. இவற்றுக்கு பதில் எழுதாமல் தவிர்ப்போம் என்றுதான் இருந்தேன். ஆனாலும் எழுத வைத்திருக்கின்றீர்கள்.

இங்கே எவர் மீதும் எனக்கு கோபம் வரப் போவது இல்லை. ஏனெனில் முன்னர் பல விடயங்கள் கூறிய போது எனக்கு எவ்வாறு தெரியும் என்று கேள்வி எழுப்பியவர்கள் பின்னர் உரியவர்கள் கூறிய போது மௌனித்து விட்டார்கள்.

நான் எழுதுகின்ற விடயங்களில் சந்தேகம் இருப்பின்- இன்றும் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தீவிரமாகச் செயற்பட்ட பலர் வெளியிலும் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

இது தொடர்பில் யாரோ ஒருவர் எழுதத்தான் போகின்றனர். சிலவேளைகளில் அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதினால் அவரையும் துரோகி ஆக்காது விட்டால் சரி.

பால்ராஜ் அவர்கள் தொடர்பில் கேட்டிருந்தீர்கள். இறுதிக் காலத்தில் அவரும் மனவேதனையுடன்தான் இருந்து சாவடைந்தார் என்பதனை வன்னியில் அன்று வாழ்ந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

2006 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன். விடுதலைப் புலிகளின் தலைவரும் தளபதிகளும் எந்த இடத்தை தாக்கினால் எதிரிகளை விரட்டலாம் என திட்டம் தீட்டிக்கொண்டிருந்த போது- பால்ராஜ் அவர்கள், மணலாற்றின் ஊடாக கிழக்கு மாகாணம் நோக்கி நாம் தாக்குதலை மேற்கொண்டால் அது வெற்றி அளித்தால்- பெருமளவிலான இளைஞர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைவார்கள் என்றார். அப்போது, இல்லை யாழ்ப்பாணம் நோக்கி படை நகர்த்தி- யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டால்- அங்குள்ள மக்களிடம் வரி அறவிடுவதோடு இளைஞர்களும் எமது அமைப்பில் இணைவார்கள் என்றாராம் சு.ப.தமிழ்ச்செல்வன்.

இறுதியில் நடந்தது யாவரும் அறிந்த விடயம். பூநகரியில் இருந்து மண்டைதீவினை கைப்பற்றிய புலிகளால்-

முகமாலை ஊடாக தென்மராட்சிப் பகுதியை நோக்கிய முன்னேறிய புலிகளால்-

கிளாலிப் பகுதியினை புலிகளால் கைப்பற்ற முடியாமல் போய்விட்டது. அங்கே பெருமளவிலான பெண் போராளிகள் வீரச்சாவடைந்திருந்தமையும் யாழ்ப்பாணம் நோக்கிய நகர்வில் பெருமளவிலான போராளிகள் அநியாயமாக வீரச்சாவடைந்திருந்தமையும் யாவரும் அறிந்திருப்பீர்கள்.

அன்று மட்டும் பால்ராஜின் ஆலோசனையினை விடுதலைப் புலிகளின் தலைவர் கேட்டிருந்தால் இன்று வேறொரு நிலையில் விடுதலைப் புலிகள் இருந்திருப்பர்.

காஸ்ட்ரோ விடயம் சிலர் இங்கே கருத்துக்கள் பதிந்து இருக்கின்றீர்கள். அவரைப்பற்றி முன்னரும் பல தடவை நான் இங்கே கருத்துக்கள் எழுதி இருப்பதால் மேற்கொண்டு எதனையும் எழுதும் எண்ணம் இல்லை.

வித்தி அவர்கள் பெருமளவிலான விடயம் எழுதினால் தெரிய வரும் என்று சுண்டல் எழுதி இருக்கின்றீர்கள். உண்மைதான். பெருமளவிலான தகவல்கள் அவருக்கு தெரிந்தே உள்ளது. அவரும் எழுதினால் அவரையும் துரோகி ஆக்கவே ஒரு கூட்டம் திரிகின்றதே அதற்கு என்ன செய்வது?

நெடுக்காலபோவான், உங்களின் கருத்துக்களை அதிகம் விரும்பிப் படிப்பவன் என்கிற வகையில் உங்களுடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

நீங்கள் எந்தப் பக்கம் தெளிவாக இருக்க வேண்டுமோ அந்தப் பக்கம் உறுதியாகவே இருக்கின்றீர்கள். அதனை நான் வரவேற்கின்றேன். அதற்காக கண்மூடித்தனமாக பிழை என்கின்ற அனைத்தையும் சரி என்று வாதிடும் உங்கள் அணுகுமுறைதான் சரியாகத் தென்படவில்லை.

விடுதலைப் புலிகள் தவறே செய்யாதவர்கள் அல்லது அதற்கு அப்பாற்பட்டவர்கள் என்கின்ற தொனியிலே உங்களுடைய பெருமளவிலான கருத்துக்கள் பதிவாகின்றன.

விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர்களையும் தூற்ற வேண்டும் என்று திட்டமிட்டு இங்கே நான் எதனையும் எழுதவில்லை. நான் அறிந்த தகவல்கள் யாவும் நூறு வீதம் உண்மையான தகவல்கள். விடுதலைப் புலிகளுடன் உயர்மட்டத்துடன் தொடர்புடைய பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடன் தொடர்பு கொண்டு கேளுங்கள்.

தவறுகளை சரி செய்ய வேண்டும் என்றுதான் பல தடவை நான் இங்கே குறிப்பிடுகின்றேன். பிழையான வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றே நான் வேண்டிக் கொள்கின்றேன்.

எரிக் சொல்ஹெய்மின் செய்தியினை தமிழ்நெட் உள்ளிட்ட தமிழ்த் தேசியம் பேசுகின்ற எந்த ஒரு இணையத்தளமும் வெளியிடவில்லை. பார்தீர்களா? இவர்கள் எல்லாம் ஆரோக்கியமான கலாச்சாரத்துக்கு நுழைய இன்று தயங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

Edited by nirmalan

எனது கருத்துக்கு பலர் எதிர்வினை ஆற்றி இருக்கின்றீர்கள். நன்றி. இவற்றுக்கு பதில் எழுதாமல் தவிர்ப்போம் என்றுதான் இருந்தேன். ஆனாலும் எழுத வைத்திருக்கின்றீர்கள்.

இங்கே எவர் மீதும் எனக்கு கோபம் வரப் போவது இல்லை. ஏனெனில் முன்னர் பல விடயங்கள் கூறிய போது எனக்கு எவ்வாறு தெரியும் என்று கேள்வி எழுப்பியவர்கள் பின்னர் உரியவர்கள் கூறிய போது மௌனித்து விட்டார்கள்.

நான் எழுதுகின்ற விடயங்களில் சந்தேகம் இருப்பின்- இன்றும் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தீவிரமாகச் செயற்பட்ட பலர் வெளியிலும் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

இது தொடர்பில் யாரோ ஒருவர் எழுதத்தான் போகின்றனர். சிலவேளைகளில் அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதினால் அவரையும் துரோகி ஆக்காது விட்டால் சரி.

பால்ராஜ் அவர்கள் தொடர்பில் கேட்டிருந்தீர்கள். இறுதிக் காலத்தில் அவரும் மனவேதனையுடன்தான் இருந்து சாவடைந்தார் என்பதனை வன்னியில் அன்று வாழ்ந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

2006 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன். விடுதலைப் புலிகளின் தலைவரும் தளபதிகளும் எந்த இடத்தை தாக்கினால் எதிரிகளை விரட்டலாம் என திட்டம் தீட்டிக்கொண்டிருந்த போது- பால்ராஜ் அவர்கள், மணலாற்றின் ஊடாக கிழக்கு மாகாணம் நோக்கி நாம் தாக்குதலை மேற்கொண்டால் அது வெற்றி அளித்தால்- பெருமளவிலான இளைஞர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைவார்கள் என்றார். அப்போது, இல்லை யாழ்ப்பாணம் நோக்கி படை நகர்த்தி- யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டால்- அங்குள்ள மக்களிடம் வரி அறவிடுவதோடு இளைஞர்களும் எமது அமைப்பில் இணைவார்கள் என்றாராம் சு.ப.தமிழ்ச்செல்வன்.

இறுதியில் நடந்தது யாவரும் அறிந்த விடயம். பூநகரியில் இருந்து மண்டைதீவினை கைப்பற்றிய புலிகளால்-

முகமாலை ஊடாக தென்மராட்சிப் பகுதியை நோக்கிய முன்னேறிய புலிகளால்-

கிளாலிப் பகுதியினை புலிகளால் கைப்பற்ற முடியாமல் போய்விட்டது. அங்கே பெருமளவிலான பெண் போராளிகள் வீரச்சாவடைந்திருந்தமையும் யாழ்ப்பாணம் நோக்கிய நகர்வில் பெருமளவிலான போராளிகள் அநியாயமாக வீரச்சாவடைந்திருந்தமையும் யாவரும் அறிந்திருப்பீர்கள்.

அன்று மட்டும் பால்ராஜின் ஆலோசனையினை விடுதலைப் புலிகளின் தலைவர் கேட்டிருந்தால் இன்று வேறொரு நிலையில் விடுதலைப் புலிகள் இருந்திருப்பர்.

காஸ்ட்ரோ விடயம் சிலர் இங்கே கருத்துக்கள் பதிந்து இருக்கின்றீர்கள். அவரைப்பற்றி முன்னரும் பல தடவை நான் இங்கே கருத்துக்கள் எழுதி இருப்பதால் மேற்கொண்டு எதனையும் எழுதும் எண்ணம் இல்லை.

வித்தி அவர்கள் பெருமளவிலான விடயம் எழுதினால் தெரிய வரும் என்று சுண்டல் எழுதி இருக்கின்றீர்கள். உண்மைதான். பெருமளவிலான தகவல்கள் அவருக்கு தெரிந்தே உள்ளது. அவரும் எழுதினால் அவரையும் துரோகி ஆக்கவே ஒரு கூட்டம் திரிகின்றதே அதற்கு என்ன செய்வது?

நெடுக்காலபோவான், உங்களின் கருத்துக்களை அதிகம் விரும்பிப் படிப்பவன் என்கிற வகையில் உங்களுடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

நீங்கள் எந்தப் பக்கம் தெளிவாக இருக்க வேண்டுமோ அந்தப் பக்கம் உறுதியாகவே இருக்கின்றீர்கள். அதனை நான் வரவேற்கின்றேன். அதற்காக கண்மூடித்தனமாக பிழை என்கின்ற அனைத்தையும் சரி என்று வாதிடும் உங்கள் அணுகுமுறைதான் சரியாகத் தென்படவில்லை.

விடுதலைப் புலிகள் தவறே செய்யாதவர்கள் அல்லது அதற்கு அப்பாற்பட்டவர்கள் என்கின்ற தொனியிலே உங்களுடைய பெருமளவிலான கருத்துக்கள் பதிவாகின்றன.

விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர்களையும் தூற்ற வேண்டும் என்று திட்டமிட்டு இங்கே நான் எதனையும் எழுதவில்லை. நான் அறிந்த தகவல்கள் யாவும் நூறு வீதம் உண்மையான தகவல்கள். விடுதலைப் புலிகளுடன் உயர்மட்டத்துடன் தொடர்புடைய பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடன் தொடர்பு கொண்டு கேளுங்கள்.

தவறுகளை சரி செய்ய வேண்டும் என்றுதான் பல தடவை நான் இங்கே குறிப்பிடுகின்றேன். பிழையான வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றே நான் வேண்டிக் கொள்கின்றேன்.

எரிக் சொல்ஹெய்மின் செய்தியினை தமிழ்நெட் உள்ளிட்ட தமிழ்த் தேசியம் பேசுகின்ற எந்த ஒரு இணையத்தளமும் வெளியிடவில்லை. பார்தீர்களா? இவர்கள் எல்லாம் ஆரோக்கியமான கலாச்சாரத்துக்கு நுழைய இன்று தயங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

எத்தனை தவறுகள் நிகழ்ந்திருப்பினும் அவைகள் எமது சமூகத்தின் அசைவியக்கத்தின் எதிர்வினையே ! குப்பி கடிப்பது, கடும் கட்டுப்பாடுகள், கரும்புலியாய் வெடிப்பது, தண்டனைகள் என எந்த ஒரு விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட விசயத்துக்கும் சமூக அசைவியக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது. ஈழத்தில் தமிழ்ச்சமூகம் பல நுர்ற்றாண்டுகளாகத் தொடர்கின்றது. அதில் 35 வருடம் புலிகளை இச்சமூகம் தோற்றுவித்தது. வெற்றிக்கும் தோல்விக்குமான அடித்தளங்களை இச் சமூகமே தீர்மானித்தது தவிர பிரபாகரன் என்ற தனிமனிதனல்ல. பிரபாகரனை தோற்றுவித்ததும் இச்சமூகம்தான். தேசத்தில் பற்றென்பது இரண்டாம் பட்சமான ஒரு சமூகத்துக்கான தேசவிடுதலைப்போராட்டம் என்பதும் அதற்கான வழிமுறைகள் என்பதும் எனியும் ஒரு வரைமுறைக்கு உட்பட்டதாக அமைய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தவறுகள் நிகழ்ந்திருப்பினும் அவைகள் எமது சமூகத்தின் அசைவியக்கத்தின் எதிர்வினையே ! குப்பி கடிப்பது, கடும் கட்டுப்பாடுகள், கரும்புலியாய் வெடிப்பது, தண்டனைகள் என எந்த ஒரு விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட விசயத்துக்கும் சமூக அசைவியக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது. ஈழத்தில் தமிழ்ச்சமூகம் பல நுர்ற்றாண்டுகளாகத் தொடர்கின்றது. அதில் 35 வருடம் புலிகளை இச்சமூகம் தோற்றுவித்தது. வெற்றிக்கும் தோல்விக்குமான அடித்தளங்களை இச் சமூகமே தீர்மானித்தது தவிர பிரபாகரன் என்ற தனிமனிதனல்ல. பிரபாகரனை தோற்றுவித்ததும் இச்சமூகம்தான். தேசத்தில் பற்றென்பது இரண்டாம் பட்சமான ஒரு சமூகத்துக்கான தேசவிடுதலைப்போராட்டம் என்பதும் அதற்கான வழிமுறைகள் என்பதும் எனியும் ஒரு வரைமுறைக்கு உட்பட்டதாக அமைய முடியாது.

அதாவது எமது சமுகத்தால் கழுத்தில் கொட்டையும் நெற்றியில் பட்டையும் போட்ட சமுகத்தையும் உருவாக்க முடியும்,அதேபோல கழுத்தில் சயனைட் குப்பியும் ,நெற்றியில் பொட்டு வைக்கும் சமுகத்தையும் உருவாக்க முடியும் என சொல்கிறீர்கள்

வித்தி அவர்கள் பெருமளவிலான விடயம் எழுதினால் தெரிய வரும் என்று சுண்டல் எழுதி இருக்கின்றீர்கள். உண்மைதான். பெருமளவிலான தகவல்கள் அவருக்கு தெரிந்தே உள்ளது.

நான் அறிந்த தகவல்கள் யாவும் நூறு வீதம் உண்மையான தகவல்கள். விடுதலைப் புலிகளுடன் உயர்மட்டத்துடன் தொடர்புடைய பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடன் தொடர்பு கொண்டு கேளுங்கள்.

முதலாவது வித்தி தெரிந்து வைத்துள்ளவை 95% ஆனவை கேள்வி ஞானமே ஒழிய நேரடித் தகவல்கள் இல்லை.

கருணாவுக்கு தெரிந்த விடயங்களில் 0.01 % ஆவது, அல்லது KP க்கு தெரிந்ததில் 25 % ஆனவை கூட வித்திக்கு நேரடியாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கருணாவும், KP யும் இன்று தாம் சாந்தவர்கள் சார்பாக வெளிவிடும் தகவல்கள் திரிபுபட்டவை என்பது விடயம் அறிந்த பலரும் அறிந்துள்ளனர். இவர்கள் தகவல்களே இப்படியிருக்க - வித்தி எழுதப் போகும் தகவல்களின் நம்பகத்தன்மை / உண்மைத் தன்மை பெரும் கேள்விக் குறியாகவே இருக்கும்.

அமைப்புக்கு மிக நெருக்கமாக நீண்டகாலம் இருந்த பாலசிங்கம் அண்ணர் கூட சில விடயங்களை தவறாக கற்பனை செய்து - அது தான் உண்மை என்று நம்பியிருந்தார். எனவே சில சந்தர்ப்பங்களில் அவரவர் நேரடியாக சம்பந்தப்ட்டுள்ளபோதே உண்மை என்பது 100 % ஆக இருக்காத சந்தர்ப்பங்கள் இருந்துள்ளன.

எனவே சுயநலப் பிழைப்பு நடத்திவரும் வித்திக்கு நிறைய தெரியும் என்பது நல்ல நகைச்சுவை தான்.

அடுத்தது நீங்கள் அறிந்த தகவல்கள் 100 % உண்மை என்பதும் நல்ல நகைச்சுவை தான். யாழ் களங்களில் எழுதியவற்றில் பல கடுமையாக திரிபுபட்ட தகவல்கள் என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூறமுடியும். இவை பரவலாக மக்கள் மத்தியில் பேச்சு வழக்கில் உள்ளவை என்பதைத் தவிர அவை 100 % உண்மை இல்லை.

இங்கு எதையும் பகிரங்கமாக விவாதிக்க முடியாது.

உண்மைகள் காலத்தால் நிலைக்கும்.

நியானி: ஆதாரமற்ற சில சொற்பிரயோகங்கள் நீக்கப்பட்டுள்ளன

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் உங்களை எப்பிடி நம்புறது ஆசான்? :D

  • கருத்துக்கள உறவுகள்

2006 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன். விடுதலைப் புலிகளின் தலைவரும் தளபதிகளும் எந்த இடத்தை தாக்கினால் எதிரிகளை விரட்டலாம் என திட்டம் தீட்டிக்கொண்டிருந்த போது-

பால்ராஜ் அவர்கள், மணலாற்றின் ஊடாக கிழக்கு மாகாணம் நோக்கி நாம் தாக்குதலை மேற்கொண்டால் அது வெற்றி அளித்தால்- பெருமளவிலான இளைஞர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைவார்கள் என்றார்.

. .

மிகவும் தவறானதும்

தளபதி பால்ராஜ் அவர்களை மட்டமாக காட்டும் முயற்சி.

[size=5]எல்லோருக்கும் தெரிந்தது தான்[/size]

[size=5]கிழக்கு மாகாணத்தின் பூகோள அமைப்பின்படி அதனை எவரும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது. பீரங்கத்தாக்குதல் வியூகத்துக்குள் இருந்து கிழக்கின் எந்த பகுதியும் தப்பமுடியாது என முரளிதரனின் பிரிவின் போது கூட சிவராம் குறிப்பிட்டிருந்தார்.[/size]

அதாவது எமது சமுகத்தால் கழுத்தில் கொட்டையும் நெற்றியில் பட்டையும் போட்ட சமுகத்தையும் உருவாக்க முடியும்,அதேபோல கழுத்தில் சயனைட் குப்பியும் ,நெற்றியில் பொட்டு வைக்கும் சமுகத்தையும் உருவாக்க முடியும் என சொல்கிறீர்கள்

நான் என்னத்த சொல்றது அப்படி நடந்திருக்குதானே !

இந்த வாதங்களின் அடிப்படை அவர் சொன்னதை கேட்டிருக்கலாம் அல்து கேட்காமல் விட்டிருக்கலாம். எல்லாத்தையும் சொல்லமுடியாது எழுத முடியாது. அவருக்கு உண்மை தெரியும் இவருக்கு தெரியும். நான் அதச்செய்தன் இங்க போனன் அங்க போனன். இப்படியாக அடுத்த தலமுறைக்கு உண்மை வரலாற்றை எடுத்துச் செல்வதானது முள்ளிவாய்கால் முடிவுக்குப் பின்னர் தொடங்கியது இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இவற்றை எல்லாம் வேறு ஒரு இடத்தில் இருந்து ஆரம்பித்துப் பார்த்தால் எதாவது பிரயோசனம் இருக்குமா என்று நானும் ஒரு கருத்தை எழுதினேன் அவ்வளவுதான்.

Edited by sukan

நாங்களும் உங்களை எப்பிடி நம்புறது ஆசான்? :D

உங்களை யார் நம்பச் சொன்னது?

"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு".

உங்களுக்கும் அறிவு இருக்கும் என்று நம்புகிறேன்!

கபட நோக்கங்களுடன் ஒருசிலர் சேர்ந்து உண்மை என ஒரு கோட்பாட்டை உருவாக்க முயல்வது நிலைக்காது! தகர்ந்து போகும்!! அது கசக்கவே செய்யும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

அதே மாதிரி தான் சில உண்மைகளை சொல்லும் போதும் கசக்கும் எது எப்பிடி இருப்பினும் இது நடக்கவே இல்லை என்று சில விடையங்களை சாதிப்பதை விட உண்மைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை எல்லாம் எங்கள் பாடங்கள் ஆக்கி புதிய உலகியல் மாற்றங்களுக்கு ஏற்ப எங்களையும் ஒழுங்கு படுத்தி மீள் அமைத்து நாங்கள் எல்லாம் வாழுகின்ற இந்த காலத்திலையே தமிழருக்கு ஒரு விடிவு வந்து வருகின்ற அந்த நாள் தான் எங்கள் எல்லோருக்கும் பொன் நாளாக அமையும் என்று கூறி ஒருவருக்கு ஒருவர் மீது புழுதி வாரி தூற்றுவதையும் சேரடிப்பதை தவிர்த்து தமிழர்களின் விடிவு மற்றும் ஒற்றுமை ஒன்றையே உயிர் மூச்சாக நினைத்து களமாடி காவியமான அந்த உத்தமர்களை எங்கள் நெஞ்சங்களில் இருத்தி........

ஆரோக்கியமான விவாதங்கள் மற்றும் எங்கள் விடுதலை போரில் நாங்கள் விட்ட தவறுகளை அடையாளம்கண்டு பொங்கும் தமிழராய் தரணி போற்றும் புலிகளாய் மீண்டும் வீறுகொண்டு எழுவோம் என்று எங்கள் மனங்களில் நினைத்து........விடியலுக்கில்லை தூரம் என்று கூறி.......இந்த திரியில் இருந்து விடைபெற்றுக்கிகின்றேன்

நன்றி

வணக்கம்

Edited by SUNDHAL

என்னை பொறுத்தவரை தலைவர் பிரபாகரன் செய்த மாபெரும் வரலாற்று தவறு இந்த ஈன தமிழினத்துக்காக போராடியது.

அந்த தமிழினத்துக்காகவே தன்னையும் தன குடும்பத்தையும் அர்ப்பணிச்சது. இதை விட பெரிய தவறு ஏதும் இருந்தால் சுட்டி காட்டுங்கள் நான் ஏற்று கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

1. 1990கலின் பிற்பகுதியில் போராளிகள் விருப்பப்படி இந்திய போராளிகளுக்கிடையில் இணக்கம் ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டேன்.“ராஜீவ்காந்தியில் வளக்கு தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்டு விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் பிரபாகரனுக்கும் பொட்டம்மானுக்கும் பொது மன்னிப்பு வளங்கி போராட்டத்தை ஆதரிப்பது தொடர்பாக பேச்சிருந்த்து. இதை ஊகிதிருந்த பதிரிகையாளர் ஞானி பிரபாகரனையும் பொட்டம்மானையும் கையளிக்குமாறு வன்னியைக் கேட்ப்பீர்களா என கேட்டார். பிரபாகரனில் hard evidence இல்லை. அரசியல் ரீதியாக இணைக்கப் பட்டிருக்கிறார். hard evidence அடிப்படையில் குற்றப் பதிரிகை திருத்தப் பட்டால் நான் வன்னியை press பண்ணுவேன் என்றேன். அப்போ பொட்டம்மானை கையளிக்கச் சொல்வீர்களா என்று கேட்க்கப் பட்டது. .hard evidence உள்ளவர்களை கையளிக்கும்படி வலியுறுத்துவேன் என்று பதில் சொன்னேன்.

கவிஞர் அவர்களே..

Hard Evidence இருந்தால் தலைவரையும், பொட்டம்மானையும் ஏன் குற்றத்தை ஒத்துக்கொள்ளச் செய்ய வேண்டும்? :rolleyes: குற்றம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டதாகிவிடுமே..?? :icon_idea:

காரணம் என்னவென்றால் ராஜீவ் கொலைவழக்கில் சந்தேகமற்ற முறையில் புலிகளின் தலைவர்களை இணைக்கும் சான்று என்று ஒன்று இல்லை. அவ்வளவு ஏன்.. தற்கொடையாளர்கள் புலிகள் என்பதற்கே சான்றுகள் இல்லை. இந்தியாவிடம் உள்ள சான்றுகள் இவைதான்.

1) நடந்தது தற்கொலைத் தாக்குதல்.. ஆகவே இது புலி.

2) தாக்குதலுக்கு வந்தவர்கள் தலைவர் எழுதிய கடிதத்தைக் கொண்டு வந்தார்கள். ஆகவே இது புலி.

3) பிடிபட்டவர்களின் வாக்குமூலம் இருக்கிறது. ஆகவே இது புலி.

4) கமராவில் படம் இருக்கு. அதில் இருப்பவர்கள் புலிகள்தான். (ஆளே சுக்குநூறாகிப் போனானாம். கமரா தப்பினதாம். அதில் இருந்த படச்சுறுளை டெவலப் செய்தார்களாம். ஆகா.. :D )

இந்த மூன்றுமே இந்தியா, இலங்கை போன்ற கங்காரு நீதிமன்றங்களிலேயே தகுந்த ஆதாரங்களாகக் கருதப்படும். உள்நாட்டு மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளில் இவ்வாறான சான்றுகளை வைத்து ஒரு மாதம் கூட வழக்கை நடத்த முடியாது.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது, புலிகள் குற்றத்தை ஒத்துக்கொள்ள வேண்டும் என இந்தியா குத்தி முறிந்ததன் காரணம் விளங்குகிறது அல்லவா? :rolleyes:

ஆக, தமிழராகிய நாம் என்ன செய்ய வேண்டும். போராட்டத்திற்க்கு அக்காலத்தில் தலைமை தாங்கிய புலிகள் என்ன சொன்னார்கள் எனப் பார்க்க வேண்டும். கிட்டு சொன்னது இதற்கும் புலிகளின் தலைமைக்கும் சம்பந்தமில்லை என்பது. தலைவர் சொன்னது, இது ஒரு துன்பியல் சம்பவம் என்று. எங்களுக்கு இந்த இரு கூற்றுக்கள் மட்டும்தான் முக்கியமானது. கங்காரு கோர்ட் சொன்னதல்ல. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோக்கியமான விவாதங்கள் மற்றும் எங்கள் விடுதலை போரில் நாங்கள் விட்ட தவறுகளை அடையாளம்கண்டு பொங்கும் தமிழராய் தரணி போற்றும் புலிகளாய் மீண்டும் வீறுகொண்டு எழுவோம் என்று எங்கள் மனங்களில் நினைத்து........விடியலுக்கில்லை தூரம் என்று கூறி.......இந்த திரியில் இருந்து விடைபெற்றுக்கிகின்றேன்.

நன்றி

வணக்கம்

பொங்க வேண்டிய நேரத்தில் கூட பொங்காமல்.. சுக வாழ்வை தேடிய நம்மவர்கள்.. செய்வது ஆரோக்கியமான விவாதம். அதை வைச்சு.. பிரபாகரன் விட்ட தவறை திருத்தி.. போராடி தமிழீழம் பெறுவீங்கள்..????! ம்ம்ம்ம்ம்ம்

வேற ஏதாவது இருந்தா பேசுங்கப்பா...!

தமிழீழம்.. தலைவரோடு போனது போனது தான். எனி அவர் வந்தால் தான். அதுவரை எனி அது கனவு தான்..! அப்படி தப்பித்தவறி எவனாவது தமிழீழம் பெற முயற்சித்தாலும் அது பரம ரகசியமா நடந்தாலே ஒழிய.. மற்றும் படி எதுவும் சாத்தியமில்லை..! :icon_idea::)

நியானி: சீண்டத்தக்க சொற்கள் நீக்கப்பட்டுள்ளன

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தியமற்ரது என்றுகிடப்பவர்கள்கிடக்கலாம்..அது தவறில்லை..அவரவர்களின் நிலையில் அவரவர்கள் பாதுகாப்பாக இருக்கும்வரை தீர்வை பற்றி யோசிக்க வேண்டிய தேவை அவர்க்கிருக்காது..ஆனால் ஒவ்வொரு நாளும் வலிக்குள் வாழும் மக்களுக்கு அது குறித்த தேவை முன்னரிலும் அதிகமாக தற்போது இருக்கும்...எந்த தேவைக்காக தமிழீழ போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட்தோ அந்தக் காரணங்கள் இன்னமும் அப்படியே இருக்கின்றன...அந்தமக்கள் தீர்வை,சுதந்திரத்தை நோக்கி சிந்திப்பதையும்..அந்த மக்களுக்கும் தமக்கும் விடியல் வேணும் என்று புலம்பெயர்ந்த உறவுகள் சிந்திப்பதும் ஒடிந்துபோன எம்போராட்டத்தில் விடியல் நோக்கிய ஏதாவது ஓரு முதல் படியாக இருக்கும்..அதைவிட்டுவிட்டு மீண்டும் மீண்டும் அந்த உன்னதமான போராளித்தலைவன் தான் வரவேண்டும் போராடவேண்டும் எல்லா சிலுவைகளையும் அவன் தான் சுமக்கவேண்டும் அதுவரைக்கும் யாரும் எதைசெய்தாலும் சாத்தியமில்லை என்று சொல்லி சிந்திப்பவர்களையும் முடங்கவைக்கும் வகையில் கருத்தெழுவதும் பேசித்திரிவதும் கூட ஒரு விதத்தில் சிங்கள எதிரியின் பிரச்சார உத்திதான்...அந்த வகையில் எம்மவர்களும் எழுதுவது தவறு..அப்படி உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்..நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் ஒன்றினைந்து பயணிப்போம்..சிந்திப்போம்...

Edited by சுபேஸ்

[size=4]பிரபாகரனையும் பொட்டம்மானையும் இலங்கை அரசிடம் பிடித்துக்கொடுத்துவிட்டு ஏனையவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது என்ற திட்டத்தையே சர்வதேசம் கொண்டிருந்தது.[/size]

[size=4]அதனால் புலிகள் அந்தத் திட்டத்தை நிராகரித்து விட்டனர் என்று நோர்வேயின் முன்னாள் அமைச்ரும், இலங்கையின் சமாதானப் பேச்சுக்களில் ஏற்பாட்டாளராக பணியாற்றியவருமான, எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். [/size]

[size=4]http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=3183838410360314[/size]

[size=4]பிரபாகரனையும் பொட்டம்மானையும் இலங்கை அரசிடம் பிடித்துக்கொடுத்துவிட்டு ஏனையவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது என்ற திட்டத்தையே சர்வதேசம் கொண்டிருந்தது.[/size]

[size=4]அதனால் புலிகள் அந்தத் திட்டத்தை நிராகரித்து விட்டனர் என்று நோர்வேயின் முன்னாள் அமைச்ரும், இலங்கையின் சமாதானப் பேச்சுக்களில் ஏற்பாட்டாளராக பணியாற்றியவருமான, எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். [/size]

[size=4]http://onlineuthayan...183838410360314[/size]

சண்டையில் சாகது சரண்டைந்து சித்திரவதைபட்டு சாகடிக்க நினைத்தார்கள் போல.

ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததுக்கு என்ன காரணம் என இன்னும் எரிக் சொல்ஹையும் சொல்லவில்லை......

சரண்டைதல் எல்லாம் போர் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு வந்த பின் பேசப்பட்ட விடையம். ஆனால் புலிகள் ஏன் தோற்றார்கள் என்பதுக்கு உண்மையான பதில் யாரிடமும் இல்லை.1

tHIS IS 2END POSTING. 1ST POSTING REMOVED. PLEASE ALLOW THIS OR REMOVE AND BLOOCK ME FROM YAL.COM

2END SENDING.

என்னுடைய கோப வார்தைகளுக்காக மல்லையூரானும் நாரதரும் மன்னிக்க வேணும். நானும் அவர்களை மன்னித்து விட்டேன்.

எனக்கு நாரதர் மல்லையூரான் போன்றவர்கள் யார் என்று தெரியாது. நாம் விடுதலை பெறுவதென்றால் நாளை அரசியல் ரீதியாக நாரதர் மல்லையூரான் போன்றவர்களுடன் சேர்ந்து ஏன் அவர்கள் தலைமையில்கூட வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதை ஒருபோதும் மறக்கவும் மறுக்கவும் இல்லை.

இங்கே கருத்து எழுதும் பலர் தமது பின்னணியிலும் அனுபவத்தில் இருந்தும் நிலைமைகளை விளங்கிக் கொண்டு எழுதுகிறார்கள். அந்த அனுபவமும் பின்னணியும் இல்லாதவர்களுக்கு அவர்களின் கருத்துகளை ஏற்றுகொள்ளவது கடினமாக இருக்கும். அதற்காக அவர்கள் மனம் வருந்தும் விதமாக கருத்துகளை எழுதினால் கருத்துப்பரிமாற்றம் சாத்தியமற்று போய்விடும். ஒரே கருத்து கொண்டவர்கள் அதே கருத்துகளை பரிமாற்றம் செய்வதால் என்ன பயன்? - ஜூட்

யாழ்க் களம் இன்றைய நிலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயனுள்ள ஒரு ஊடகம். ஆனால் கருத்துக்கள் அடிப்படையில் மட்டும் விவாதம் என்கிற நாகரீகம் சூழ்நிலை உருவாக்கப் பட வேண்டும்.

.

.

2006க்குப் பின்னர் தான் வன்னிக்குப் போகவில்லை.

நான் திரும்ப திரும்ப 1996 - 2006 காலக் கட்டத்தில் வன்னிக் காடு ஆறுமாதம் வெளிநாடு ஆறுமாதமாக வாழ்ந்தேன் என்று எழுதியிருக்கிறேன்.

நான் அஞ்சுகிறவனல்ல ஆனால் அனியாயமாக கொல்லப் படக்கூடாது என்பதில் வன்னி உட்பட என் நண்பர்கள் கரிசனையாக இருந்தனர். மல்லையூரானுக்காக ஆதரப் படுதிய சில தகவல்கலை வெளியிடுகிறேன்

1. 1990கலின் பிற்பகுதியில் போராளிகள் விருப்பப்படி இந்திய போராளிகளுக்கிடையில் இணக்கம் ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டேன்.“ராஜீவ்காந்தியில் வளக்கு தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்டு விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் பிரபாகரனுக்கும் பொட்டம்மானுக்கும் பொது மன்னிப்பு வளங்கி போராட்டத்தை ஆதரிப்பது தொடர்பாக பேச்சிருந்த்து. இதை ஊகிதிருந்த பதிரிகையாளர் ஞானி பிரபாகரனையும் பொட்டம்மானையும் கையளிக்குமாறு வன்னியைக் கேட்ப்பீர்களா என கேட்டார். பிரபாகரனில் hard evidence இல்லை. அரசியல் ரீதியாக இணைக்கப் பட்டிருக்கிறார். hard evidence அடிப்படையில் குற்றப் பதிரிகை திருத்தப் பட்டால் நான் வன்னியை press பண்ணுவேன் என்றேன். அப்போ பொட்டம்மானை கையளிக்கச் சொல்வீர்களா என்று கேட்க்கப் பட்டது. .hard evidence உள்ளவர்களை கையளிக்கும்படி வலியுறுத்துவேன் என்று பதில் சொன்னேன். இதன்பின் வன்னிக்கு வந்தபோது வன்னியில் நேர்முகம் வாசித்ததாக மட்டுமே சொன்னார்கள் வேறு ஒன்றும் கேட்க்கவில்லை. பொட்டம்மனைக் கையலித்தால் பொது மன்னிப்பு வளங்குவார்கள் தலைவரை கேட்க்க மாட்டார்கள் என்பதற் என்ன உத்தரவாதம் என்பது பற்றித்தான் கேட்டார்கள். என்னை சந்தித்தபோது நிலாந்தனும் திருவும் அதிர்ந்து போய்விட்டார்க்கள். பொட்டம்மனை கையளிப்பதுபற்றி பேட்டிகொடுத்துவிட்டு வந்திருக்கிறாயே என அவர்கள் என்பாதுகாப்புப் பற்றி பெரும் கவலை கொண்டார்கள். எனக்கும் வன்னிக்கும் இருந்த உறவை திருவும் நிலாந்தனுமே புரிந்துகொள்ளாதபோது கள உறவுகள் புரிந்து கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.

நான் முஸ்லிம் மக்கள் தொடர்பாகவும் பிற இயக்கத்தொடர்பு கருத்த்ஹு வேறுபாடுகலுக்கு கொலை என்பாதுகாப்புப் பற்றி

னையும் கையளிக்கும்படி

1. நோர்வே பேராசிரியர் ஒய்வின் புளரூட் முன்னிலையில் கிழக்குமாகண எல்லையில் இராணுவதினருடன் நான் மோதி இருக்கிறேன். தொடற்சியாக கிழக்குமாகாண தழபதியாக இருந்த மேயர் ஜெனரல் சாக்கியிடம் ஒய்வின் புக்ளரூட் மற்றும் முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் பசீர் சேகுதாவுத் முன்னிலையில் கரசாரமாக விவாதித்தேன். அந்த விவாததில் எலிபன்ற் சோடா கம்பனி போல உங்கள் இராணும்தான் இலங்கையில் பெரிய அமைப்பு ஆனால் எங்கள் பையன்கள் கொக்காகோல கம்பனி போல மாறிவிட்டார்கள் என்றேன். ஒயிவின் அச்சத்துடன் இருந்தார். இறுதியில் அரசை மீறி இராணுவமும் புலிகளும் நேரடியாக பேசுவது பயனுள்ளது என்று சொன்னேன். அவர் தனது மினஞ்சல் தந்தார்/. அதை வன்னியில் சேர்த்தேன்.

2. நீ வெறும் கவிஞன் மட்டுமே என்கிற தோரணையில் “எரிக் சோல்கைமுக்கும் தமிழ்க் கவிதைக்கும் என்ன தொடர்பு” என்றுகூடக் கேட்கிறார்கள்.. ஒய்வினுடன் சோதனைகளும் காத்திருப்புமில்லாமல் முல்லைதீவு சென்று அமரர் சூசையுடன் பேசியபோது ஏறக்குறைய 5 மணித்தியாலங்கள் நோர்வே பேராசிரியர் ஒய்வின் புக்ளரூட் வெளியில் காத்திருக்க நேர்ந்தது. நாம் தனிமையில் கவிதை பற்றி ஒரு வார்த்தைகள்தானும் பேசவில்லை.

3. கருணா வெளியேற்றத்தின்போது குளோபல் தமிழ் வனொலி குருபரன் ”கிழக்கு மாகாண போராளிகளை தாக்குவதற்க்கு பிரபாகரனுக்கு மக்கள் ஆணையில்லை. போராளிகளை விட்டுக்கு செல்ல ஆணயிடலாம்” என்கிற என்னுடைய அறிக்கையை சூரியன் எப் எம்மில் பலதடவை ஒலிபரப்பினார். அதே அறிக்கை ஞாயிறு வீரகேசரியிலும் வெளி வந்தது. அதன்பின் நான் வன்னிக்குச் சென்றபோது பலர் என்னைத் தடுத்தார்கள். ஆனால் எனக்கு விடுதலைப்பணி இருக்கு என்றபடி வன்னி சென்றேன். வன்னியில் சூரியம் எப் எம் கேட்டோம் என்பதுதவிர அதுபற்றி வேறு ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை.

4. ஜெனீவா பேச்சுவார்த்தையின் பின்னர் நான் அரசையும் போராளிகளையும் எனது பிபிசி பேட்டியில் கடுமையான விமர்சனம் செய்திருந்தேன். அதுபற்றி சார்பு ஊடகங்கள் என்மீது அவதூறு எழுத வன்னி அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் வன்னி சென்றபோதும் அதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை. எனக்கும் கஸ்ரோ அணியினருக்குமிடையில் சிக்கலுக்கு இதுவும் ஒரு காரணமாகலாம். தனக்கு வெளியில் ஒருவர் இயங்குவதை கஸ்ரோ விரும்பவில்லை..நானும் கஸ்ரோவின் அமைபினூடாக வன்னிக்குள் நுழைய மறுத்ததால் மாதவனூடாக என் நுழைவுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

5. என்பாதுகாப்புத் தொடர்பாக வன்னியிலும் வவுனியாவிலௌம் விடுதலைப் புலிகளும் தென்னிலங்கையில் முஸ்லிம் தலைமை என் தனிப்பட்ட சிங்கள தோழர்கள் கரிசனையுடன் இருந்தார்கள். போராளிகளுக்கு இந்திய தூதரகத்துக்கும் இடையில் பணியாற்றினேன். ஒருமுறை நான் இந்தியதூதர் நிருபம்சென்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது என்னை கொலைசெய்ய இலங்கை அரசுடன் செயல்படும் ஒரு குழு திட்டமிடும் செய்தி அவருக்கு தெரிவிக்கப் பட்டது. எனக்கு முன்பே அக் குழுவின் தலைவரை தொலைபேசியில் அழைத்து கடுமையாக எசரிக்கப் பட்டது. அப்பொழுதுதான் இந்திய தூதரகமும் என் பாதுகாப்புத் தொடர்பாக அக்கறையாக இருப்பது தெரிய வந்தது.

வன்னியில் பாதுகாப்புக் காரணங்களுக்காக பெயர் குறிப்பிட முடியாத சிலரும் தயாமாஸ்ட்டரும், அமரர்கள் யாழ்வேந்தன் சிறீ நியூட்டன் போன்றவர்களும் தோழர்கள் புதுவை இரத்தினதுரை ஊடகவியலாலர்கள் பாலகுமார் உடகவியல் தோழர்கள் ஜெயராஜா கருணாகரன் போன்றவர்களும் என் பாதுகாப்பில் கருசனையாக இருந்தனர்.

6. சரி தோழர்களே.

பொயட்: இதில் நான் பதிலளிக்க வேண்டியதாக எதுவும் இல்லாத்தால். நான் பதிலளிக்கவேண்டும் என்று இல்லை.

ஆனால் நான் எழுப்பியிருந்த கேள்விகளின் சாரத்தை திரும்ப சொல்கிறேன்.

1.சொலெய்ம் தலைவரை நோக்கி தாக்குதல் தொடுப்பதை விவாதிக்கும் திரியில் காஸ்ரோவை விமர்சித்து பதில் வரவேண்டுமா என்பது முதலாவது? இந்த கருத்தில் தன்னும் போராட்டத்தில் இருக்காத ஒருவருக்கு எப்படி தலைவரின் பிழையாக சொல்லெய்ம் விபரித்திருப்பதை கஸ்ரோவின் பிழையாக கருத வேண்டும் என்ற விளக்கம் இல்லை.

2. திண்ணையில் கூறப்பட்ட விசையம் சம்பந்தமாக விளக்கம் கேட்டேன். பதில் வரவில்லை. ஆனால் மட்டுகள் கேள்வியை திண்ணையில் இருந்தது என்ற அடிப்படையில் தொடர்ந்து நீக்குகிறார்கள். எனக்கு அதை திரும்ப எழுத முடியாதென்றாலும், இணையவனின் விளக்கப்படி நீங்கள் மட்டும் அதை திரியில் திரும்ப கூறலாம். எனவே விரும்பினால் நீங்கள் பதில் அளிக்கலாம்.

3. நானாக சொல்லியிருந்த விடையம்: SLFP முதல் அமைச்சர் ஒருவர், முஸ்லீம் காங்கிரசுக்கு, ஒப்பந்த படி வழங்கப்பட்டிருக்கும் முதல் அமைச்சர் பதவியை விட்டுக்கோடுக்க போவதில்லை எங்கிறார். அவர் முஸ்லீம்கள் தனி அலகாக கேட்கும் கிழக்கு மாகணத்தின் அதிகாப்படியான அந்தஸ்தை மறுத்து, திவிநிகும் மாதிரி சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கு எங்கிறார். இப்படி மூஸ்லீம்களின் அதிகாரங்களின் இருப்புகளையே கெடுக்கும் அரச பிரதிநிதி ஒருவருக்காக கூட்டமைப்பு தனது போராட்டங்களை விடவேண்டும் என்பது போல முஸ்லீம்களின் உரிமைகளில் அக்கறை காட்டுவது போல காட்டிக்கொள்ளும் ஒருவர் எப்படி அறிக்கை விட முடியும் எனபதாகும். இது எனக்கு உங்களின் மனசாட்சியை கேள்விக்கிடமாக்கியது.

இவற்றில் ஒன்றை பற்றியும் நீங்கள் இதுவரையில் பேசவில்லை. உங்களை எப்படி பாதுகாத்தீர்கள் என்பதை பற்றி கூறியிருக்கிறிர்கள்.

சிலவேளைகளில் உங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதை ஒத்து கொள்கிறேன்.

ஹெலில் போட்டு திரிந்தும், அறைகளில் போட்டும் முடக்க முயன்ற ரஜீவிக்கு கொடுக்க வேண்டிய வழியில் டிமிக்கி கொடுத்து விட்டு வந்து போராட்டத்தை தொடர்ந்துகொண்டிருந்த தலைவரை பொது பேட்டி ஒன்றில் "ஆதாரம் காட்டினால் கொண்டு வந்து ஒப்படைக்கிறேன்" என்று உறுதி கொடுக்கும் ஒருவரை மேலிடமோ, மதிய நிர்வாகமோ எப்படி கப்பாற்றலாம் என்றுதான் சிந்திப்பார்கள். ஆனால் இளநிலை அதிகாரிகள் அவசரமாக கோபத்தை காட்டலாம். கோபம் யாருக்கும் வரும் என்பதை நீங்களே செய்தும் காட்டியிருக்கிறீர்கள். இதில் மேலிட,மத்திய நிர்வாகம் உங்களை காப்பாற்றியது உங்களின் தகமையை அறிந்து என்று நீங்கள் நினைத்தால் அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கு. இயக்கத்தின் சார்பில், உள்ளே ஊடுருவ அல்லது தலைவரில் கைபோட முடியாதவர் ஒருவரை துரோகி என்று இளநிலை அதிகாரிகள் அவசரமாக கொலை செய்வதை கட்டாயம் மேலதிகாரிகள் கண்காணிக்க முயன்றிருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அது இயக்கதின் நற்பெயரில் கை வைக்ககூடிய இடம்.

இவை தவிர: ஜூட் கூறியிருப்பதை நீங்கள் உங்களுக்கு சாட்சியமாக்க கொண்டுவந்திருக்கீறீர்கள். நான் அதை ஜூட்டின் பதிவில் கண்டிருந்தும் அங்கே பதில் அள்ளிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.

1. நான், 1.நீங்கள் இங்கே குறிப்பிட்டவைக்கு,2. திண்ணையில் கூறியிருந்ததற்கு,3. கைப்பட வெளிவிட்ட அறிக்கைக்கு மட்டுமே கருத்துகூறியிருந்தேன். போராட்டம் பற்றியவை பற்றி அல்ல. நீங்கள், உங்களின் நீக்கபட்ட கருத்தில், நான் பொய்யன் என்று குற்றம் சாட்டி சில பதில் அளிக்க வேண்டிய கருத்துக்களை வைத்திருந்தீர்கள். அதற்கு நான் பதில் அளித்து "போஸ்ட்" செய்ய யாழ் அதை ஏற்கவில்லை. காரணம், நான் பதில் எழுதிக்கொண்டிருக்கும் போது திரி பூட்டபட்டுவிட்டது. நான் பதிலை 'வேட்"டில் சேகரித்து விட்டு காத்திருந்தேன். திரி திறக்கப்பட்ட போது உங்கள் பதிவு நீக்கப்பட்டுவிட்டது. மட்டுகளுடன் முரண் படுவதை தவிர்க்க நான் நீக்கபட்ட கருத்துக்கு பதிலை பதியவில்லை.

2. ஆனால் நாரதர் 1.போராட்ட நிகழ்வுகளையும், 2.உங்களுக்கும் இயக்கத்திற்கும் இருந்த உறவுகள் பற்றியும், சில பதிவுகள் இட்டிருந்தார். நீங்கள் அதே பதிவில் அவரையும் பொய்யன் என்று குற்றம் சாட்டியிருதீர்கள். ஆனால் அவர் திரி பூட்டப்பட முதல் தனது பதில்களை பதிந்து விட்டார். நீங்கள் கோபப்பட்டு, நாரதரை மட்டுகள் யாழில் இருந்து நீக்க வேண்டும் என்று ஒரு விவாதத்தை இதே திரியில் வைத்தீர்கள் . அப்போது தலையிட்ட மட்டுகள் திரியில் இருந்த பலவற்றை நீக்கினார்கள்.

இது ஜூட்டுக்கு தெரியாது.

கருதுக்களத்தில் கருதுக்களை கண்டு கோபப்படுவது ஒருவரின் தனிபட்ட விவகாரம். ஆனால் ஜூட் நினைப்பது , நீங்கள் வரலாற்றை கூறும் முறையை நான் ஏற்க தயாராக இல்லை என்பதால் உங்களை கோபப்படுத்திவிட்டேன் என்பதாகும். அப்படி நினைத்தே அவர் தனது பொது கருத்தை வைக்கிறார். அவர் ஒரு பொது கருத்தை வைப்பதில் எந்த எதிர்கருத்தும் இல்லை. ஆனால் உண்மை தெரிந்த நீங்கள் இங்கே ஜூட்டின் பொது கருத்தை இந்த இடத்தில் பயன் படுத்துவது பொருத்தமில்லாதது.

நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டியதை எழுதவில்லை. என்னை யாரும் மன்னிக்க தேவை இல்லை. அதே நேரம் நீங்கள் எனக்கு மன்னிப்பு சொல்லவேண்டிய அளவுக்கு எதையும் எழுதியதாகவும் கருதவில்லை.

ஆனால் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

1.நீங்கள் நாரதர் மேற்கோள் காட்டும் திரியில் தேன்மொழியிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய வரையும் சென்றீர்கள்.

2.நெடுக்காலைபோவானின் இனத்தை சபித்து இன்னொரு திரியில் மன்னிப்பு கேட்டீர்கள்.

3.நாரதர் மீது இந்த திரியில் கட்டில்லாத கோபத்தை காட்டினீர்கள்.

யாழானது கருத்துகளம் என்பதால் நீங்கள் பதியப் போபவை எல்லாவற்றுக்கும் பதில் வர சந்தர்ப்பம் இருக்கு என்பதை நினைவில் வைத்திருப்பது நல்லது.

Edited by மல்லையூரான்

பாலசிங்கத்தின் கடைசி மூன்று வாரங்களும் வித்தியுடன் தான் கழிந்தது .அதை விட ரணில்,ராஜபக்சா இருவருமே வன்னியுடனான தமது தொடர்புகளை வித்தி ஊடாகத்தான் மேற்கொண்டார்கள் .

ராஜபக்சா பதவிக்கு வந்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்க வித்தியை கூப்பிட்டுத்தான் பாலசிங்கத்தை வரப்பண்ணினார்,விமானநிலையத்தில் வரவேற்று கூட்டிக்கொண்டு போனது வித்திதான் .

அடேல் உயிருடன் தான் இருக்கின்றார் கேட்டால் தெரியும் .

[size=4]பிரபாகரனையும் பொட்டம்மானையும் இலங்கை அரசிடம் பிடித்துக்கொடுத்துவிட்டு ஏனையவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது என்ற திட்டத்தையே சர்வதேசம் கொண்டிருந்தது.[/size]

[size=4]அதனால் புலிகள் அந்தத் திட்டத்தை நிராகரித்து விட்டனர் என்று நோர்வேயின் முன்னாள் அமைச்ரும், இலங்கையின் சமாதானப் பேச்சுக்களில் ஏற்பாட்டாளராக பணியாற்றியவருமான, எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். [/size]

[size=4]http://onlineuthayan...183838410360314[/size]

தலைவரையும் பொட்டுவையும் பிடிக்கத்தான் உலகம் 146,000 தமிழ் மக்களை கொலை செய்தது. இன்று சொலெய்ம் மகிந்த மாட்டப்போகிறார் என்பதால் மகிந்தாவில் நின்று தானாக கொஞ்சம் தள்ளி நிற்க பார்க்கிறார்.

மறுத்தது தலைமை. மே 19ல் தலைமை அழிந்த பின் பின்னர் பொது மன்னிப்புக்கு சொலெய்ம் எத்தனை இடத்தில் எத்தனை முறை பேச்சுவார்த்தைகள் நிகழ்த்தினார்.

இவர் தமிழ் ஈழம் ஒருபோதும் கிடைக்காது என்று கூறுபவர். அதை நிறைவேற்ற தவிக்கிறார்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.