Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்க முடியுமா ??? உண்மைச் சம்பவம்

Featured Replies

சுமோவுக்கு 40 -45 இற்கும் இடையில் இருக்கும் என்பது எனது கணிப்பு!!!  (சுமோ, நீங்கள் சிரிக்கிறது தெரியுது பார்த்தீங்களா உங்கள் வயதைக் குறைத்துச் சொல்லிச் சந்தோசப்படித்திட்டேன்  உங்களை!) :lol:

  • Replies 57
  • Views 15.5k
  • Created
  • Last Reply

எனது சித்தப்பாவும் எம்முடன் வந்திருந்தார். அவர் அப்போது யாழ் பல்கலைக் கழக மாணவர். ஆனாலும் யாழ்ப்பாணம் தாண்டி வேறு எங்கும் செல்லாத பட்டிக்காடு. அப்பா மிகவும் துணிவானவர் என்னைப்போல். ஆனால் சித்தப்பா பயந்தவர். தனிய எங்கும் போகமாட்டார்.எந்த நேரமும்  புத்தகங்களுடன் கிடப்பார். எங்களுடன் வந்து ஏதாவது பம்பலாகக் கதைப்பது  என்று ஒருநாளும் செய்ததில்லை. எனக்கு அவரைப் பார்த்தால் எரிச்சல் தான் வரும்.எங்கள் குடும்பத்தில் இப்படி ஒன்று வந்து பிறந்திருக்கிறதே என்று.

 

உங்க சித்தப்பா மேல் ஏன் இந்தக் கொடூரம்?? ஏதேனும் பங்காளிப் பிரச்சனையோ?? :)

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது வயதை சரியாகச் சொன்ன வந்தியத்தேவனுக்கு வாழ்த்துக்கள். எல்லாரும் என்னெண்டு கேட்கிறது என்று காத்துக் கொண்டிருந்தனியள் எண்டு தெரியுது. இப்ப எல்லாருக்கும் திருப்திதானே. :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனது வயதை சரியாகச் சொன்ன வந்தியத்தேவனுக்கு வாழ்த்துக்கள். எல்லாரும் என்னெண்டு கேட்கிறது என்று காத்துக் கொண்டிருந்தனியள் எண்டு தெரியுது. இப்ப எல்லாருக்கும் திருப்திதானே. :lol: :lol:

 

 

 

சுமே உங்களை பெயர் சொல்லிதான் எழுதவேன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறக்க முடியுமா மிகுதி

கண் விழிச்சுப் பாத்த எனக்கு அதிர்ச்சி. எல்லாரும் என்னை விட்டுவிட்டு இறங்கிவிட்டார்கள் என்று தெரியுது. அனா அடுத்து என்ன செய்யிறது எண்டு தெரியவில்லை. முன்னுக்குப் பின்னுக்குப் பாத்து அம்மா எண்டு கூப்பிட்டுக் கொண்டு எட்டிஎட்டிப் பாக்கிறன்.ஆறாவது தமிழ் தெரிஞ்ச சனங்கள் என்னோட கதைக்க மாட்டினமோ ஏண்ட ஒரு நப்பாசையும் சேர்ந்துகொள்ள இன்னும் மூன்று நாலு முறை கூபிடுறன். ஒரு சத்தமும் இல்லை. கடகடவென பஸ்சை  விட்டு இறங்கிறன். சுற்றவரப் பாக்கிறன்.ஒண்டும் விளங்கேல்லை. இரண்டு மூன்று பேர் இறங்கிய ஆட்கள் தங்களுக்குள் சிங்களத்தில் கதைக்கினம் அதுக்கும் விளங்கேல்லை. நான் அழுதுகொண்டு அம்மா எண்டு திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு நிக்கிறன். கீழ நிண்ட ஒருவர் பஸ்சைப் பார்த்து கெண்டைக்ரருடன் கதைக்கிறார். பஸ்சும் தண்ட பாட்டில வெளிக்கிட்டுப் போட்டுது. எனக்கு என்ன செய்யிறதெண்டு ஒண்டும் தெரியாமல் முழிசிக்கொண்டு நிக்கிறான்.

பஸ்ஸிலிருந்து இறங்கிய ஒருவர் ஒரு முப்பது முப்பத்தைந்து இருக்கும் என்னருகில் வருகிறார். don't  cry, I  will help you என்கிறார். அவரைப் பார்க்கிறேன். எனக்கு பழகிய முகம் போல் எதோ அவரில் நம்பிக்கை வருகிறது. எனக்கு அவர் கதைத்த ஆங்கிலம் விளங்கியதே தவிர எனக்குக் கதைக்கத் தெரியவில்லை. என்ன பெயர் என்று கேட்கிறார். நான் எனது பெயரைக் கூறுகிறேன். கவலைப் படாதே சிஸ்டர், நான் உன்னைக் கவனமாக உன் பெற்றோரிடம் விடுகிறேன் என்கிறார் தொடர்ந்து. பதில் சொல்லத் தெரியாததால் தலையை மட்டும் ஆட்டுகிறேன். எங்கே தங்கி இருக்கிறாய் என்கிறார். அஜந்தா ஹோட்டல் என்கிறேன். அவருக்கு அந்த ஹோட்டல் பற்றித் தெரிந்திருக்கவில்லை. அவரின் முகக் குறிப்பிலிருந்து தெரிகிறது. நாம் இருவரும் ஒரு இடத்தில் நின்று கதைக்காது பெரிய வீதியோரமாக நடந்தபடியே கதைத்துக்கொண்டு போகிறோம். அப்படிச் சொல்ல சிரிப்பாக இருக்கிறது. ஏனெனில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு எனது பதில் ஒருசொல்லே. அவருக்கு ஹோட்டல் பற்றி விளங்கப் படுத்த front of கோட்டை ரயில்வே ஸ்டேஷன் மட்டும்தான் முழு நீள விடை. இடையில் ஒரு சிறிய பாலம் போல்தான் எனக்கு நினைவில் உள்ளது. அங்கெ ஒரு போலீஸ் காரர் கதிரையில் இருக்கிறார். போலிஸ் காரர் எண்டதும் எல்லாருக்குமொரு பயம் வரும். ஆனால் எனக்கு என்னைக் கூட்டி வந்தவர் எதோ என் உறவினர் போலவும் அவருடன் சாதாரணமாக வீதியில் நடந்துபோவது போலவுமே நான் உணர்கின்றேன். போலீசிடம் நின்று என்னைக் காட்டி எதோ சொல்கிறார். இருந்த போலிஸ் எழுந்து நின்று எதோ சொல்கிறது. இவர் தலையாட்டி மறுத்துவிட்டு கம் சிஸ்டர் என்று எனக்குச் சொல்லிவிட்டு நடக்க நானும் சேர்ந்து நடக்கிறேன். சுற்றுமுற்றும் பார்வையைச் சுளற் றியவாறு ஏதாவது தெரிகிறதா எனப் பார்க்கிறேன். எல்லாமே புதிதாய் இருக்கிறது. மீண்டும் இரண்டு மூன்று நிமிடம் நடந்திருப்போம். பச்சை நிறமான ஹோட்டல் என் கண்களுக்குத் தூரத்தில் தெரிகிறது. அவரைப் பார்த்து அங்கே அங்கே  என்று சொல்லியபடி கை காட்டுகிறேன். முதல் நாள் தான் வந்திருந்தாலும் கூட இப்ப எனக்கு விளங்கிவிட்டுது. ஹோட்டலைப் பார்த்தபடி விரைந்து நடக்க இப்ப அவர் எனக்குப் பின்னால் வருகிறார். ஹோட்டல் கண்ணுக்கெட்டும் தூரம் வந்ததும் பார்க்கிறேன் வாசலில் நிறையப் பேர் நிற்கிறார்கள். அதற்குள் அப்பா நிற்ப்பதும் தெரிகிறது.  தூரத்திலேயே அப்பா என்னைக் கண்டுவிட்டார். என்னை நோக்கி ஓடி வருகிறார். ஆனால் நான் ஓடவில்லை. அப்பா ஓடிவந்து என்னை அனைத்து முத்தமிடுகிறார். அவரின் கண்கள் கலங்கியிருப்பதைக் காண்கிறேன். எனக்கும் கண் கலங்குகிறது. ஆனால் பெரிதாக அளவில்லை.

மிகுதி நாளை தொடரும் ...
.

  • கருத்துக்கள உறவுகள்

துணிஞ்ச கட்டைதான்

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம்தான் வாழ்க்கை .. அதன் பின் எப்போதும் அவதானமாய்  இருக்க   பழகி இருப்பீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது சித்தப்பா மேல் எனக்கு ஒரு பங்காளிப் பிரச்சனையும் இல்லை ஆதித்தியன். அண்கள் ஆண்களாக இருக்கவேணும். பயந்தவர்களாக இருப்பவர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது. அதுதான் அப்படி எழுதினேன்.

எனது சித்தப்பா மேல் எனக்கு ஒரு பங்காளிப் பிரச்சனையும் இல்லை ஆதித்தியன். அண்கள் ஆண்களாக இருக்கவேணும். பயந்தவர்களாக இருப்பவர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது. அதுதான் அப்படி எழுதினேன்.

 

 இது உங்களின் பார்வையில்....

 

 

 13 வயதில் அதுவும் வேம்படியில் படித்து ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியவில்லையென்பது நம்ப முடியவில்லை, அப்ப நீங்க வீக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

 

 13 வயதில் அதுவும் வேம்படியில் படித்து ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியவில்லையென்பது நம்ப முடியவில்லை, அப்ப நீங்க வீக்கா?

 

எனக்கும் இதே கேள்வி வந்தது வந்தி. வேம்படி எண்டாலே கொஞ்சம் திமிரான பிள்ளையல் தான் ஆனாலும் சுண்டுக்குளிப் பெட்டயலளவுக்கு எடுப்பு இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13 வயதில ஆறாம் வகுப்புத்தான் படிக்கலாம். வேம்படி எண்டால் ஒருவருடத்தில ஆங்கிலம் கதைக்க முடியுமோ. நீங்களா வேம்பெடிப் பெட்டையளைப் பற்றி கற்பனை பண்ணினா நான் என்னசெய்ய. சிலவேள நானும் வீக்கோ தெரியாது முந்தி. என்னுடைய நண்பிகள் இப்போது கண்டாலும் உன் குழப்படி இப்ப அடங்கிட்டுதா என்று கேட்பார்கள். குழப்படிகாரர் கடைசிவரை வீக்காக இருக்க மாட்டார்கள் என்பது என் கருத்து வந்தி.கெட்டித்தனம் உள்ளவைக்கு திமிர் இருந்தால் என்னதப்பு தும்பளையான். :D

  • கருத்துக்கள உறவுகள்

 

கெட்டித்தனம் உள்ளவைக்கு திமிர் இருந்தால் என்னதப்பு தும்பளையான். :D

 

இந்த கெட்டித்தனம் எனக்குப்பிடிக்கல.

 

எழுதியிருக்கிறா என ஓடி வரும் எம்மவர்களை நாலு வரியில் அதுவும்  பெரிய  எழுத்தில் எழுதி அலைக்கழிப்பது  மற்றும்  இனி  இந்தப்பக்கம  வரும் ஆவலைக்குறைப்பது................ :(  :(  :(  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரிசரி கோவம் வேண்டாம் விசுகு இன்று எழுதி முடித்துவிடுவேன் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா அழுதுகொண்டிருக்கிறா முதல்ல மேல போங்கோ என்று அப்பா என்னை அனுப்புகிறார். நான் படிகளில் ஈறி மேலே செல்லும்போது என்னைப் பலர் சிரிப்புடன் பார்த்து நீக்களா  துலைஞ்சு போன பிள்ளை என்று கேட்க எனக்கு கூச்சமாக இருக்கிறது.  விரைந்து படிகளில் ஏறுகிறேன். அறியத் தட்ட எனது தம்பிதான் கதவைத் திறக்கிறான். அவன் முகத்திலும் சந்தோசம் . கட்டிலில் பளுதுகொண்டு படுத்திருந்த அம்மா உடனே எழும்பி என்னிடம் வந்து என்னை கட்டிப்பிடிச்சுக்கொண்டு பெரிதாக அழுகிறா. அம்மா அழுவதைப் பார்த்த தம்பி தங்கைகள் எல்லோரும் சேர்ந்து அழுகின்றனர். அவர்கள் அழ நானும் அழுகிறேன். சித்தப்பா பின்னால் வந்து அதுதான் வந்துவிட்டாளே  எல்லாரும் ஏன் ஒப்பாரி வைக்கிறியள் என்கிறார். உனக்கெங்க விளங்கப் போகுது ஏதும் நடந்திருந்தா ஐயோ நினைக்கவே நெஞ்சு பதறுது என்கிறார் அம்மா. அதன்பின்தான் எப்பிடி வந்தனீங்கள் என்று என்னைக் கேட்கிறார். நான் முதலிலிருந்து எல்லாம் கூறுகிறேன். கேட்டுவிட்டு கூட்டிக் கொண்டு வந்தவர் எங்கே என்று அம்மா கேட்க, அண்ணா அவரை  உணவகத்துள் கூட்டிக்கொண்டு போய் உபசரிக்கிறார் என்று கூறிவிட்டு வெளியே போகிறார்.

அதன்பின் நான் அம்மாவிடம் அவர்கள் என்ன செய்தார்கள் என்று விசாரிக்கிறேன். பஸ்ஸை விட்டு இறங்கியதும் தான் அம்மா எல்லோரும் சரியா இருக்கிறமோ என்று பார்த்திருக்கிறார். கடைசித் தம்பி அவரின் மடியில் தூங்கிவிட்டபடியால் அவனைத் தூக்கித் தொழில் போடும் வேலையாள் அம்மா என்னைக் கவனிக்க மறந்துவிட்டதாகச் சொன்னா. சித்தப்பாவை தரிப்பிடம் தங்கும் விடுதிக்குப் பக்கத்திலேயே இருந்ததால் அம்மா உடனே அங்கு போய் சொன்னவுடன் அங்கு வேலை செய்த ஆட்கள் எல்லோரும் ஒவ்வொரு பக்கமும் போற பஸ்சுக்குப் பின்னால் ஓடினார்கள் என்றும் என் சித்தப்பா நாம் வந்த பஸ்சின் பின்னால் ஓடிவிட்டு பஸ் எந்தப்பக்கம் போனதெண்டு தெரியவில்லை என்று திரும்பி வந்துவிட்டர் என்றும் கூறினார். அப்பா அவரை அனுப்பிவிட்டு மேலே வந்தார். அம்மா அவரைப் பற்றி அப்பாவிடம் விசாரித்தார். அவர்  ஒரு நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்ப்பவர் என்றும் தனக்கு ஒரு தங்கை என்வயதில் இருப்பதாகவும்  அதனால்த் தான் தான் என்னைக் கவனமாகக் கொண்டுவந்து சேர்க்க எண்ணியதாகவும் கூறியதாக தந்தை சொன்னார். அவருக்கு என்ன பெயர் என்று நான் கேட்டேன். ஓ அதைக் கேக்க மறந்துவிட்டேன் என்றார் அப்பா. அன்று முழுவதும் யாருமே வெளியே செல்லவில்லை. மாலையில் அம்மா நாளை கடற்கரைக்குப் போவமோ என்று நான்கேட்க அப்பாவை அனுப்பிப் போட்டு நேர யாழ்ப்பாணம் தான் என்றார் அம்மா.

இத்துடன் கதை முடிந்தது ஆனால் போலிஸ் காரருடன் என்னைக் கூட்டிவந்தவர் என்ன கதைத்தார் என்று ஒரு விடயம் இன்னும் இருக்கு.அதை நான் சொல்லாது முதலில் உங்கள் ஊகத்துக்கு விடுகிறேன். யார் சரியாக ஊகிக்கிறீ ர்கள் பார்க்கலாம். :)

 அனுபவக் கதை நன்றாக இருக்கிறது.

இத்துடன் கதை முடிந்தது ஆனால் போலிஸ் காரருடன் என்னைக் கூட்டிவந்தவர் என்ன கதைத்தார் என்று ஒரு விடயம் இன்னும் இருக்கு.அதை நான் சொல்லாது முதலில் உங்கள் ஊகத்துக்கு விடுகிறேன். யார் சரியாக ஊகிக்கிறீ ர்கள் பார்க்கலாம். :)

இந்த பிள்ளை சின்ன வயதிலேயே இப்படித் தூங்கினால், வளர்ந்து என்னதான் செய்யப் போகுதோ என்று சொல்லியிருப்பார். lol

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுப முடிவுக்கு நன்றி............மகிழ்ச்சி ......போலீசில் விட்டு வந்திருந்தால் அங்கு நடக்க கூடிய "ஆபத்துக்கள் "  தெரியும் தானே . தங்கை உரு வத்தில் இருக்கும் உங்களை விட மனமில்லை. தன்  வேலை, நேரத்தை யும் பொருட்படுத்தாது ... வழி நடத்தி இருக்கிறார். உங்கள் பெற்றார் செய்த புண்ணியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 உங்கள் பெற்றார் செய்த புண்ணியம்.

 

நன்றி நிலாமதி உங்கள் வரவுக்கு. நீங்கள் சொல்லியது உண்மைதான்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

அவர் பொலீஸ்காரனுக்குச் சொல்லியிருப்பார் இந்தப் பிள்ளையை எந்தத் தாயால் தான் வைச்சிருக்க முடியும் எண்டு! :lol:

ஹாய்; நீ ரெம்ப அழகாயிருக்கே, என்ன யாழ்பாணத்தில் கொக்குவிலா? என் வீட்டுக்கு வாறியா....பயப்படாதே நான் இருக்கேன்...இப்படி ஏதாவது அலட்டியிருப்பான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அவர் பொலீஸ்காரனுக்குச் சொல்லியிருப்பார் இந்தப் பிள்ளையை எந்தத் தாயால் தான் வைச்சிருக்க முடியும் எண்டு! :lol:

 

ஒரு கதையோடு என்னைப் பற்றி வடிவா உங்களுக்குத் தெரிஞ்சிட்டுது அலை :D

 

வந்தி பொலிசும் என்னைக் கூட்டிவந்தவரும் என்ன கதைத்திருப்பார்கள் என்று கேட்டால் நீங்கள் எதோ எழுதியிருக்கிறீர்கள். வடிவா வாசியுங்கோ :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கதையோடு என்னைப் பற்றி வடிவா உங்களுக்குத் தெரிஞ்சிட்டுது அலை :D

 

வந்தி பொலிசும் என்னைக் கூட்டிவந்தவரும் என்ன கதைத்திருப்பார்கள் என்று கேட்டால் நீங்கள் எதோ எழுதியிருக்கிறீர்கள். வடிவா வாசியுங்கோ :D

 

நன்றி சுமே பகிர்வுக்கு. உங்களுக்கு முதலில் என்ன கதைத்தவர்கள் என்று விளங்கியதா, ஆங்கிலமே கதைக்கவில்லை, அதுக்குள்ள சிங்களம் வேறயா  :lol:  :D

சிங்களவன் தமிழன் மாதிரி பந்தா காட்டமாட்டான், அவனின் மொழிதான் முக்கியம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவசரப் பட்டுவிடீர்களே உடையார். எனக்குச் சிங்களம் விளங்கியது என்று நான் எப்போ சொன்னேன். என்னைக் கூட்டி வந்தவர் அப்பாவிடம் கூறியதை அப்பா எமக்குச் சொன்னார். இனிக் கூட என்ன கதைத்திருப்பார்கள் என்று ஊகிக்கலாம் உடையார் :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
சுமோ கதையை தொட‌ங்குகையில் இருந்த ஆர்வம் முடிக்கும் போது இருக்கவில்லை.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையை தொடங்கும்போது என்ன நடந்திருக்குமோ என ஒவ்வொருவரும் உங்கள் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டிருப்பீர்கள். நான் எழுதியது உண்மையில் நடந்தது என்பதால் என்னால் மிகைப் படுத்தி மற்றவரை மகிழ்விக்க முடியவில்லை. அத்துடன் அச் சம்பவம் சுமுகமாக முடிந்துவிட்டதால் வாசிப்பவர்களுக்கு சலிப்பை உண்டுபண்ணும் என்பதிலும் ஐயமில்லை. கருத்துக்கு நன்றி ரதி.

  • கருத்துக்கள உறவுகள்

சுமோவின்... அப்பா, வெளிநாட்டுப் பயணம் வெளிக்கிடும்... அவசர‌ நேரத்தில், மிருகக்காட்சிச் சாலை.. பார்க்கப் போய், திரும்பி வரும் போது... சுமோ... கண்டு பிடிக்கப் படாமல், போயிருந்தால்... அந்தப் பெற்றோர் என்ன, பாடுபட்டிருப்பார்கள் என்று.. நினைக்கவே... பயங்கரமாய்.. இருக்குது. அவர்களின்... குடும்ப நிலையே... திசைமாறியிருக்கலாம். நல்ல மனம் படைத்த‌... அந்தச் சிங்கள எக்கவுன்டன், எங்கிருந்தாலும் வாழ்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.