Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவளை யார் அறிவார் ???

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவளை யார் அறிவார் ???

 

73.jpg

 

 

பால்குடி மாறிப்
பத்துவயது நடந்தபொழுது
அடிவயிற்றில் ஓர்வலி
கீறலாய் உதித்தது .
எதுவுமே புரியாத அவளுக்கு
அவள் அம்மா எடுத்துரைத்தாள்
பருவத்தின் அழைப்பு மணியை
அவள் வாழ்வு பூராக
அவளுடன் தொடரப்போகும்
இந்தப் புரியாத வலி
அவளிற்குச் சத்தியமாகத் தெரியாது ........

பருவத்தின் தூரிகைகள்
அவள் உடலில்
பக்குவமாய்க் கோலமிட ,
அவள் பள்ளிக் கூட்டுகள்
பதறியே அவளை நோக்க
பாவை அவள் மனதும்
கர்வத்தால் பறந்தே திரிந்தது........

முகத்தைக் காட்டும் கண்ணாடி
அவள் உற்ற தோழியானது
றெக்ஸ்சோனாவும்,
பெயர் அண்ட் லவ்லியும்
அடிக்கடி கரைந்தே போனது !!!!

காலதேவன் போட்ட கோலம்
அவளை கட்டிளம் குமரியாக்க,
அவளை கட்டியேபோட
அவள் அப்பா
அலைமோதி அலைந்தார் .......

வெள்ளை நிறத்தவனாம்
வெளிநாட்டு மாப்பிளையாம்
என்ஜினியராம்
கைநிறைய யூறோவாம்
என ஊரெங்கும் இதே பேச்சு ........

பந்தாவாவாக வந்த பொலிகாளை
வக்கிரமாய் அவளைப் பார்க்க
அவள் மனதில் ஊசியாகக் குத்தியது ,
பத்தில் வந்த அதே வலி ...
அவள்மனவலி அவள்
அம்மா அப்பாவின் கண்ணீர் முன்
கதிரவனைக் கண்ட
பனித்துளி போல பாகாய் உருண்டோட ,
அவள் மனவலி மட்டும்
அவள் மனதில் ஆழமாய்க் கோடு கிழித்தது .....

பலவேளை பொலிகாளை
அவள் சம்மதமின்றிப் பொங்கியெள .........
மனம் மரத்த அவள் மரக்கட்டையானாள்
காலதேவன் போட்ட ஓட்டத்தில்
அவள்மனவலியும் ஓடிச்செல்ல
அவன் அம்மா
அவளுக்கு வைத்த பெயர் " மலடி "  ..........

 

மைத்திரேயி

  • கருத்துக்கள உறவுகள்

 கவி வடிவில் அருமையாக தந்துள்ளீர்கள், பாராட்டுக்கள்

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் புறத்தோற்றத்தைக் கொண்டு மேற்கொள்ளும் முடிவுகள் நீண்டகாலத்தில் நிலைக்காது என்பதை உணர்த்தியுள்ளீர்கள்..! கவிதைக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை நிறத்தவனாம்

வெளிநாட்டு மாப்பிளையாம்

என்ஜினியராம்

கைநிறைய யூறோவாம்

என ஊரெங்கும் இதே பேச்சு ........

 

மாநிறம் எல்லாம் கெட்டதும் இல்லை

கறுப்பு அசிங்கமும் இல்லை...

வெளிநாட்டு மாப்பிள்ளைகள்

மாயக் கண்ணன்களும் இல்லை..

எல்லோரும் சராசரி மனிதர்கள்..!

என்ஜினியர் என்பது

வாழ்க்கைத் தகவல்ல...

கல்வித் தகமை..!

யூரோ நாணயம்...

உழைப்பவர்களின் ஊதியம்..!!

இந்த உண்மைகள் மறந்த

ஊராரின் பேச்சில்

மயங்குவது

யார் குற்றம்...

மைத்திரேயி மேம்...??! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரேயி உங்கள் கவி தந்த வலியில் உங்களுக்கு என்னவென்றுஆறுத்தல் சொல்வது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வர் வாழ்வும் வலி நிறைந்தது. வலி களை மீறி வழி காண்பது தான் வாழ்க்கை .

 

பாராட்டுக்கள் மைத்திரேயி

ம்................ என்னத்தைச் சொல்ல :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ற மகள் 'வெளிநாட்டு மாப்பிள்ளையெல்லோ கட்டியிருக்கிறா' என்ற பெருமைக்காக மகளை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு கட்டிக்கொடுத்து பிறகு வேதனையில் வாடும் பல பெற்றோர்களை நான் அறிவேன். 'வெளிநாட்டு மோகம்' என்றுதான் மாறுமோ?!?!!!

 

''ஆணில் குறையிருந்தாலும் பெண்தான் சுமக்க வேண்டியிருக்கிறது 'மலடி' என்னும் பட்டம்!!!....

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் வைத்திய பரிசோதனைக்குப் பின்னர்தான் தரகர்மாருக்குக் காசு கொடுக்க வேண்டும் :)  

 

கவிதைக்கு நன்றி  

  • கருத்துக்கள உறவுகள்
என்ற மகள் 'வெளிநாட்டு மாப்பிள்ளையெல்லோ கட்டியிருக்கிறா' என்ற பெருமைக்காக மகளை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு கட்டிக்கொடுத்து பிறகு வேதனையில் வாடும் பல பெற்றோர்களை நான் அறிவேன். 'வெளிநாட்டு மோகம்' என்றுதான் மாறுமோ?!?!!!

 

''ஆணில் குறையிருந்தாலும் பெண்தான் சுமக்க வேண்டியிருக்கிறது 'மலடி' என்னும் பட்டம்!!!....

 

இந்த கருத்தில் உடன்படமுடியவில்லை.

 

பிள்ளையில்லை  என்றால் முதல் இலக்கு ஆண்மையற்ற  ஆண்மகன் என்று ஆணே???

அது கடைசி  வரை தொடரும்.....?

ஆனால் ஆண் அதை வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்.  அதனால் நாம் அதைப்பற்றி  பேசுவதில்லை.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி.மற்றும் பிள்ளை இல்லாமைக்கும் ஆண்மைக்கும் சப்பந்தம் உன்டா :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி.மற்றும் பிள்ளை இல்லாமைக்கும் ஆண்மைக்கும் சப்பந்தம் உன்டா :rolleyes:

 

இல்லைத்தான்

ஆனால் எமது சமூதாயத்தில் அப்படித்தானே  பார்க்கிறார்கள் :(

(இரண்டையும் ஒன்றாக)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராட்டுக்கள் மைத்திரேயி


 

  • கருத்துக்கள உறவுகள்
கவிதைக்கு நன்றி.மற்றும் பிள்ளை இல்லாமைக்கும் ஆண்மைக்கும் சப்பந்தம் உன்டா :rolleyes:

 

 

ஆண்மை இல்லை என்றால்..........?
எப்படி பிள்ளை பெறுவது?
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக உள்ளது, மைத்திரேயி! :D

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் மைத்திரேயி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 கவி வடிவில் அருமையாக தந்துள்ளீர்கள், பாராட்டுக்கள்

 

உங்கடை கருத்துக்கு நன்றி உடையார் அண்ணை .

வெறும் புறத்தோற்றத்தைக் கொண்டு மேற்கொள்ளும் முடிவுகள் நீண்டகாலத்தில் நிலைக்காது என்பதை உணர்த்தியுள்ளீர்கள்..! கவிதைக்கு நன்றிகள்.

 

 

உண்மைதான் ஒருகட்டத்திலை சொல்லுற அட்வைசுகளும் இளயவர்களுக்கு ஏறாது . நன்றி உங்கடை கருத்துக்கு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மாநிறம் எல்லாம் கெட்டதும் இல்லை

கறுப்பு அசிங்கமும் இல்லை...

வெளிநாட்டு மாப்பிள்ளைகள்

மாயக் கண்ணன்களும் இல்லை..

எல்லோரும் சராசரி மனிதர்கள்..!

என்ஜினியர் என்பது

வாழ்க்கைத் தகவல்ல...

கல்வித் தகமை..!

யூரோ நாணயம்...

உழைப்பவர்களின் ஊதியம்..!!

இந்த உண்மைகள் மறந்த

ஊராரின் பேச்சில்

மயங்குவது

யார் குற்றம்...

மைத்திரேயி மேம்...??! :icon_idea::lol:

 

 

வணக்கம் அண்ணை . உங்கடை கருத்துக்கும் விமர்சனத்த்திக்கும் நன்றி சொல்லிறன் . நான் ஒரு பொம்பிளையின்ரை மனவலியளை சொன்னன் . நீங்கள் ஊர் உலகம் சொன்னால் உனக்கு எங்கை போச்சிது அறிவு எண்டு கேக்கிறியள் . நல்ல கேள்விதான் . ஆனால் நீங்கள் இப்ப சீவிச்சு கொண்டிருக்கற வாழ்க்கை முறையள் ஒரு 70களிலை யாழ்பாணத்திலை இருந்திது எண்டால் நீங்கள் சொல்லிறது சரி . அப்பவே இந்த வெளிநாட்டு மாப்பிளையளின்ரை அலப்பரை தாங்கேலாது . அவையள் மாயக்கண்ணன்களாய் இருந்ததாலைதான் எவ்வளவோ பொம்பிளையள் ஏக்கங்களோடை வாழுகினம் . இப்பவும் அது தொடருது . ஆராவது உள்ளதை சொல்லி கலியாணம் செய்தால் மாப்பிள்ளைக்கு பிரைச்சனை எண்டு சொல்லிற சனங்களையும் கண்டிருக்கிறன் . ஆக இல்லாத விசயத்தை  என்ரை கவிதையின் நாயகி சொல்லேலை அண்ணை :)  :)  :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மைத்திரேயி உங்கள் கவி தந்த வலியில் உங்களுக்கு என்னவென்றுஆறுத்தல் சொல்வது.

 

 

ஏன் எனக்கு நீங்கள் ஆறுதல் சொல்லவேணும் ?? வெளிநாட்டில பாதிச்ச பொம்பிளையளை நானும் பாக்கிறன் அக்கா . உங்கடை கருத்துக்கு நன்றி சொல்லிறன் .

ஒவ்வொரு வர் வாழ்வும் வலி நிறைந்தது. வலி களை மீறி வழி காண்பது தான் வாழ்க்கை .

 

பாராட்டுக்கள் மைத்திரேயி

 

உள்ளதை சொல்லி பாராட்டினதுக்கு உங்களுக்கும் நன்றி சொல்லிறன் .

ம்................ என்னத்தைச் சொல்ல :(

 

கருத்திக்கு நன்றி அக்கா .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
என்ற மகள் 'வெளிநாட்டு மாப்பிள்ளையெல்லோ கட்டியிருக்கிறா' என்ற பெருமைக்காக மகளை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு கட்டிக்கொடுத்து பிறகு வேதனையில் வாடும் பல பெற்றோர்களை நான் அறிவேன். 'வெளிநாட்டு மோகம்' என்றுதான் மாறுமோ?!?!!!

 

''ஆணில் குறையிருந்தாலும் பெண்தான் சுமக்க வேண்டியிருக்கிறது 'மலடி' என்னும் பட்டம்!!!....

 

உங்கடை கருத்துக்கு நன்றி தமிழ்நங்கை . இந்தகவிதையிலை ஒரு பொம்பிளைதானே மத்த பொம்பிளையை பாத்து மலடி என பட்டம் கொடுக்கிறா . முதல்லை பொம்பிளையள் மாறவேணும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிமேல் வைத்திய பரிசோதனைக்குப் பின்னர்தான் தரகர்மாருக்குக் காசு கொடுக்க வேண்டும் :)  

 

கவிதைக்கு நன்றி  

 

நீங்கள் என்னில பிழையா விளங்கீட்டிங்கள் போல கிடக்கு . வைத்திய பரிசோதனை ரெண்டுபக்கமும் இருக்கவேணும் . பொம்பிளையளும் எல்லாரும் சரி எண்டு நான் சொல்லமாட்டன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கருத்தில் உடன்படமுடியவில்லை.

 

பிள்ளையில்லை  என்றால் முதல் இலக்கு ஆண்மையற்ற  ஆண்மகன் என்று ஆணே???

அது கடைசி  வரை தொடரும்.....?

ஆனால் ஆண் அதை வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்.  அதனால் நாம் அதைப்பற்றி  பேசுவதில்லை.

 

வருகைக்கு நன்றி  . உங்கடை கருத்து எனக்கு விளங்கேலை . பொம்பிளை சொல்லித்தான் எல்லாருக்கும் தாங்கள் ஆரெண்டே தெரியிது .

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மை இல்லை என்றால்..........?
எப்படி பிள்ளை பெறுவது?

ஆண்மை இல்லை என்றால் உடலுறவு கொள்ள முடியாது.அதால பிள்ளையும் பெற முடியாதுதான்.ஆனால் ஆணமை இருந்து உயிரனு இல்லாவிட்டால் உறவு கொள்ள முடியும் ஆனால் பிள்ளை பெற முடியாது. :) விசுகுவின் பதிலையும் கவனிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பும் அறவனைப்பும் இல்லாத ஒரு இடம்..

வலியையும் வேதனையையும் மட்டும்தான் கொடுக்கும்...!!

உங்கள் கவிதைக்கு நன்றி..!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைக்கு நன்றி.மற்றும் பிள்ளை இல்லாமைக்கும் ஆண்மைக்கும் சப்பந்தம் உன்டா :rolleyes:

 

வருகைக்கு நன்றி . நல்ல கேள்வி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.