Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதலின் விலை

Featured Replies

காதலின் விலை

 

எனக்கு ஒரு அண்ணாவும் அக்காவும் இருந்தார்கள்.அண்ணாதான் மூப்பு .

அக்காவைவிட எனக்கு பத்து வயது குறைவு.அதனால் நான் வீட்டில் சின்னப்பிள்ளை.எனது அப்புவும் அம்மாவும் பெரிதாக படித்திருக்கவில்லை.எங்களையும் பெரிய படிப்பு படிக்கோணும் என்ற

நினைப்பும் அவர்களிடம் இருக்கவில்லை.அப்பு தோட்டம் தான்.வருசத்தில ஒருக்கா வயலும் விதைக்கும்.வீட்டில பஞ்சம் இல்லை.

ஆனால் அப்பு சரியான பிடிச்சிறாவி. அண்ணனுக்கும் அந்தக்குணம்

தொத்தினதோ பிறப்பிலேயோ வந்ததோ தெரியவில்லை.

 

அம்மா ஒரு பாவி. அப்புவுக்கு சரியான பயம். நான் விரும்பி கல்யாணம்

கட்டினதால அப்புவும் அண்ணாவும் சேர்ந்து என்ர வீட்டுத்தொடர்பை

அறுத்துப்போட்டாங்கள். என்ர  மனுசிக்கும் தாய் மட்டும்தான் இருந்தது.

அதுவும் தொண்ணூற்றி ஒன்பதாம் ஆண்டு இறந்து போட்டுது.அதால

நாட்டை விட்டு வெளிக்கிட்ட பிறகு திரும்பி நாட்டுக்கு போகயில்லை.

என்ர ஊர்ப்பெடியன் ஒருத்தன் இங்க இருக்கிறான்.அவனிட்ட என்ர

வீட்டுப்புதினங்களை அறிந்துகொள்ளுவன். என்ர அப்பு மோசம் போய்

மூன்று வருசமாகுது. முப்பத்தி ஒன்றுக்கு அடிச்ச நினைவுமலரிலையும்

என்ர பெயரை அடிக்கயில்லை அவை.என்ன கல் நெஞ்சு . நான் என்ர ஊர்ப்பெடியன் ஊருக்கு போகைக்க இரண்டு தடவை காசு குடுத்துவிட்டனான்.  அவை வாங்க மாட்டன் என்றிட்டினம். இந்த காலத்திலையும் இப்படி உலகம் இருக்கு.

நான் வீட்டுக்கு கடமை செய்யாதது தனிமையில நெஞ்சைக்குடையுது.

வீட்டில நடந்த தைப்பொங்கல் , தீபாவளி , சித்திரை புது வருஷம் எல்லாம்

மீள் ஞாபகத்தில உயிரைக்குடையுது . எனக்கு இப்படி இருக்கிறமாதிரி

அம்மாவுக்கும் கட்டாயம் இருக்கும்.ஆனால் அப்புவின்ர சொல்லை அவ

மீறமாட்டா.எங்கட வாழ்க்கை இப்படியே தண்டவாளம் மாதிரிப்போய் முடியப்போகுது.

எனக்கு இப்ப ஒரே ஒரு ஆசைதான் . என்ர மகள் இன்னும் ஐந்தரை வருசத்தில டாக்டர் ஆகிடுவாள் பிறகு நான் அவளை கூட்டிப்போய் கோவிலில என்றாலும் அம்மாவோடு கதைக்க விடுவன்.அம்மா யார் தெரியாமல் கதைப்பா. நான் ஒளிச்சு நின்று பார்க்கோணும்.என்னடா

தண்ணி அடிச்சிட்டு எழுதுறான் என்று யோசிக்காதையுங்கோ உண்மையாத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆசை நிறைவேற வாழத்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி வீம்பினால் தாமும் வருந்தி மற்றவர்களையும் வருத்தும் பெற்றோர் பலர் இருக்கின்றனர். நீங்கள் உங்கள் கடமையைசெஇய எண்ணியும் அவர்கள் மறுத்துவிட்டார்கள் என்கிறீர்கள். பிறகு எதற்கு வருத்தம். மகளை விட்டுவிட்டு பின்னால் நீங்களும் போய் உங்கள் அம்மாவுடன் கதையுங்கள். நேரில் பார்க்கும்போது உங்கள் தாயார் கட்டாயம் உங்களுடன் கதைப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

மகளின் மூலம் இப்பவே தொடர்புகளை ஏற்படுத்த முயலுங்கள்..! உங்கள் உடன்பிறந்தவர்கலுக்கு மட்டுமல்ல.. உங்களுக்கும் அம்மாதான்.

 

உங்கள் காதல் திருமணத்தின்போது உங்கள் அம்மா உங்களை வெறுத்திருந்தாரென்றால் கொஞ்சம் கடினம். மீண்டும் சேர்ந்தாலும் உடைந்தபானை ஒட்டாது.

 

It is what it is!

  • தொடங்கியவர்

நண்பர்களே தங்கள் கருத்திடல்களுக்கு நன்றி.நான் நினைக்கவில்லை அம்மா என்னோட கதைப்பா என்று. அப்பு சொன்னா மீறமாட்டா.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை  நினைத்தால் எனக்கு கோபம் கோபமா வருகுது.

 

சொந்த தாயைப்போய்ப்பார்க்கும்  தைரியம் உங்களிடமில்லை.

அதற்கு மற்றவரை  குறை  சொல்லாதீர்கள்.

 

என் தாயை  எவனும் என்னிடமிருந்து மறைக்கவோ தடுக்கவோ முடியாது.

எங்கென்றாலும் நான் புகுந்து எனது தாயைப்பார்ப்பேன்.

 

இப்படியான கோழைகள் எப்படி காதலித்தீர்கள்.................?????????? :(  :(  :(

பதிவுக்கு நன்றி விழி 

 

இப்படியான கோழைகள் எப்படி காதலித்தீர்கள்.................?????????? :(  :(  :(

 

விசுகு அண்ணா, இங்கே வீரம் கோழை அல்ல பிரச்சனை, உணர்வுகள் தான் பிரச்சனை. எந்த ஒரு வீரன் கூட உணர்வுகளுக்கு கட்டுபட்டவன் தான். தன் தந்தைக்கு கட்டுப்பட்ட தாயை மகனின் உணர்வுகளை கொண்டு காயபடுத்தாத எண்ணம் இருக்கலாம்.

 

காலம் சென்ற கணவனின் வார்த்தைகளை எப்படி மீறுவது என்ற தாயின் சங்கடத்தை புரிந்துகொண்ட தனயனாக உங்களின் மகள் மூலம் தாயுடன் பேசுவதே சிறந்தது விழி. உங்களையும் உங்கள் உணர்வுகளையும் நிச்சயமாக உங்கள் அன்னை அறிவார் விழி நம்பிக்கையோடு காத்திருங்கள்.

காதலின் விலை

 

எனக்கு ஒரு அண்ணாவும் அக்காவும் இருந்தார்கள்.அண்ணாதான் மூப்பு . அக்காவைவிட எனக்கு பத்து வயது குறைவு.அதனால் நான் வீட்டில் சின்னப்பிள்ளை.எனது அப்புவும் அம்மாவும் பெரிதாக படித்திருக்கவில்லை.எங்களையும் பெரிய படிப்பு படிக்கோணும் என்ற நினைப்பும் அவர்களிடம் இருக்கவில்லை.அப்பு தோட்டம் தான்.வருசத்தில ஒருக்கா வயலும் விதைக்கும்.வீட்டில பஞ்சம் இல்லை.

ஆனால் அப்பு சரியான பிடிச்சிறாவி. அண்ணனுக்கும் அந்தக்குணம் தொத்தினதோ பிறப்பிலேயோ வந்ததோ தெரியவில்லை.

 

அம்மா ஒரு பாவி. அப்புவுக்கு சரியான பயம். நான் விரும்பி கல்யாணம் கட்டினதால அப்புவும் அண்ணாவும் சேர்ந்து என்ர வீட்டுத்தொடர்பை அறுத்துப்போட்டாங்கள். என்ர  மனுசிக்கும் தாய் மட்டும்தான் இருந்தது. அதுவும் தொண்ணூற்றி ஒன்பதாம் ஆண்டு இறந்து போட்டுது.அதால நாட்டை விட்டு வெளிக்கிட்ட பிறகு திரும்பி நாட்டுக்கு போகயில்லை. என்ர ஊர்ப்பெடியன் ஒருத்தன் இங்க இருக்கிறான்.அவனிட்ட என்ர வீட்டுப்புதினங்களை அறிந்துகொள்ளுவன். என்ர அப்பு மோசம் போய் மூன்று வருசமாகுது. முப்பத்தி ஒன்றுக்கு அடிச்ச நினைவுமலரிலையும்

என்ர பெயரை அடிக்கயில்லை அவை.என்ன கல் நெஞ்சு . நான் என்ர ஊர்ப்பெடியன் ஊருக்கு போகைக்க இரண்டு தடவை காசு குடுத்துவிட்டனான்.  அவை வாங்க மாட்டன் என்றிட்டினம்.

 

இந்த காலத்திலையும் இப்படி உலகம் இருக்கு. நான் வீட்டுக்கு கடமை செய்யாதது தனிமையில நெஞ்சைக்குடையுது. வீட்டில நடந்த தைப்பொங்கல் , தீபாவளி , சித்திரை புது வருஷம் எல்லாம் மீள் ஞாபகத்தில உயிரைக்குடையுது . எனக்கு இப்படி இருக்கிறமாதிரி அம்மாவுக்கும் கட்டாயம் இருக்கும்.ஆனால் அப்புவின்ர சொல்லை அவ மீறமாட்டா.எங்கட வாழ்க்கை இப்படியே தண்டவாளம் மாதிரிப்போய் முடியப்போகுது. எனக்கு இப்ப ஒரே ஒரு ஆசைதான் . என்ர மகள் இன்னும் ஐந்தரை வருசத்தில டாக்டர் ஆகிடுவாள் பிறகு நான் அவளை கூட்டிப்போய் கோவிலில என்றாலும் அம்மாவோடு கதைக்க விடுவன்.அம்மா யார் தெரியாமல் கதைப்பா. நான் ஒளிச்சு நின்று பார்க்கோணும்.என்னடா தண்ணி அடிச்சிட்டு எழுதுறான் என்று யோசிக்காதையுங்கோ உண்மையாத்தான்.

 

 

 

வணக்கம் விழி , உங்கள் கதை நன்றாக இருக்கின்றது .  இந்த உலகில் பணத்திற்கு தங்கள் சுயங்களை விற்காத மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள் . உண்மையில் அவர்கள் போன்றவர்களால்தான் இன்றும் இந்தப் பூமிப்பந்து உயிர்ப்புடன் சுழலுகின்து . உங்கள் கதைக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் . மேலும் , கதை எழுதும் பொழுது நான் திருத்தியுள்ள மாதிரி அளவாகப் பந்திபிரித்து எழுதுங்கள் . அப்பொழுது வாசகர்கள் வாசிக்க இலகுவாக இருக்கும் . ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் எழுத எழுதப் பழக்கத்தில் வந்துவிடும் . தொடர்ந்து கதைகளைத் தாருங்கள் வாசிக்க நாங்கள் இருக்கின்றோம் :) :) .

  • தொடங்கியவர்

நன்றி நண்பர்களே தங்கள் கருத்திடலுக்கும் வருகைக்கும்.என்னில்
பிழையுண்டு என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.எங்கட வீட்டு
நிலைமை வேறுவிதமானது.நான் நேரடியாய்ச் சென்று தீர்க்க முடியாதது.
இன்னும் பிரச்சனை கூடும்.
என் அண்ணனும் விரும்பித்தான் திருமணம் செய்தான்.அது சொந்தத்திட்கை என்றபடியால் பிரச்சனை இருக்கவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நிலைமை சோகமும்  சங்கடமும் நிறைந்தது. விடா முயற்சியுடன் மீண்டும் போங்கள்.

 

ஒரு வேளை ..மனமிரங்கலாம்.

ம்......... என்ன செய்வது! எதற்கும் அம்மாவுக்கு ஒரு தூது விட்டுப் பாருங்கோ அவவும் உங்களைப் போலவே சந்திக்க விரும்பலாம். அவவும் சந்திக்க விரும்பினால் முதலில் நீங்கள் மட்டுமாவது போய் சந்தியுங்கோ. பிறகு மகள் படித்து முடிந்தவுடன்  கூட்டிக் கொண்டு போங்கோ!! உங்கள் விருப்பம்!

  • கருத்துக்கள உறவுகள்

மகளுக்கு 20 வயசிற்கு மேலாகுது...அப்பா செத்து 3 வருடத்திற்கு பிறகு தான் தெரியுது...இவ்வளவு நாளும் பெற்றோரில் இல்லாத அக்கறை என்ன இப்ப திடிரென்று   :(

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனும் பிடிவாதக்காரர் என்கிறீர்கள் அம்மா அண்ணனுடனா இருக்கின்றார்? அண்ணனுடன் இருந்தால் உங்கள் அம்மா வெளிப்பட வாய்ப்பில்லை. அம்மா எப்போதும் அம்மாதான் பிள்ளையின் கோபமும் தாபமும் தாயிடம் மட்டுந்தான். அப்பாவின் ஆளுமைக்குக்கு கட்டுப்பட்டு ( பயந்து ) வாழ்ந்தவர் இப்போது குடும்பத்தின் பொறுப்பைச் சுமக்கும் அண்ணனுக்கும் கட்டுப்பட்டே வாழ்வார். உங்கள் அண்ணனிடம் மனமாற்றம் உருவாகவேண்டும். அம்மாவிடம் அவர் இளகியவராக நடந்திருந்தால் இன்று நீங்கள் இத்தகைய பதிவை மிகவும் மனவேதனையுடன் இட்டிருக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. நிச்சயமாக அழுவதற்கும் அனுமதியற்றுத்தான் உங்களுடைய அம்மா வாழ்ந்து கொண்டிருப்பார். தூர இடத்தில் இருந்து குமுறுவதாலும் முகம் பார்க்காத தொலைபேசி உரையாடல்களாலும் சாதிக்க முடியாதவற்றை நேரே முகம்பார்த்து மனம் கசியும்போது சாதிக்கமுடியும். அம்மாவுக்கு உங்கள் மேல் கோபம் இருக்காது இன்னும் தன்னைக்காண தன்பிள்ளை வரவில்லையே என்ற ஏக்கந்தான் அதிகமாக இருக்கும். எவ்வளவு கோபம் இருந்தாலும் ஓரக்கண்ணால் பிள்ளையை அவதானித்துக் கொண்டிருப்பவள்தான் தாய் நீங்கள் தூர இடத்தில் இருப்பதனால் நெருக்கம் அற்றதாக தெரிகிறது உங்களுடைய உறவு. உறவுகள் இணைவதற்கு இடைவெளிகள் குறையவேண்டும். முயற்சியுங்கள் :rolleyes:

  • தொடங்கியவர்

மனித நேயமுடனான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.அண்ணன்,
அக்கா என்னைவிட பத்து வயதுக்கு மேல் மூத்தவர்கள்.அதனால்
எங்களுக்கிடையில் சிநேகிதத்தன்மை இருக்கவில்லை.முயலுவோம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114235

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் நேரில் பார்க்கும்போது உங்கள் தாயார் கட்டாயம் உங்களுடன் கதைப்பார். தொடருங்கள் உங்கள் படைப்புக்களை

  எவ்வளவு கோபம் வந்தாலும் அம்மாவால் பிள்ளையை வெறுக்கவே முடியாது. கோபம் கூட  காலத்தால் நிச்சயம் குறைந்து விடும். காலம் தாழ்த்தாமல், அம்மா இருக்கும் போதே ,        உடனே ஊருக்குப் போய், நீங்கள்   வந்தது  அண்ணன் காதுக்குப் போய் சேருமுன், அண்ணன் வீட்டில் இல்லாத நேரம் உள்ளே போ ய்  அம்மாவிடம் ஒருக்கால் ஆவது கதைத்து விடுங்கள்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.