Jump to content

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது !


Recommended Posts

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது !

சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது

குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற

போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது.

நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று

நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு...

"பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை.

அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும்

அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை

கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்கணும். இந்த சின்ன டவலால கவனமா

துடைச்சுடு...' என்று, குழந்தையிடம் டவலை கொடுத்தாள். தன்னிடம் முழுப்

பொறுப்பும் ஒப்படைக்கப்பட்ட பெருமை முகத்தில் ததும்ப, அந்த குழந்தை தரையை

சுத்தமாக துடைத்து, பெருமிதத்துடன் அம்மாவைப் பார்த்தது. அதோடு, "இதே

பாட்டில்ல குழாயிலிருந்து முழுதும் தண்ணி பிடிச்சு, கொட்டாம பிரிஜ்ஜில

கொண்டு வைக்க இப்ப பழகிக்கோ...' என்று சொல்லி, குழந்தையை குழாயின் அருகில் அழைத்துப் போனார்.

அந்த தாயை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். "குழந்தைகளை வளர்க்கும்

முறைகளை விளக்கும் ஒரு புத்தகத்தில் படித்ததை, நான் நடைமுறையில்

பயன்படுத்துகிறேன். இந்த முறைகளை பின்பற்றுவதால், குழந்தை, தான் செய்த தவறை

உணர்கிறது. தவறு செய்தால், துடைப்பது போன்ற தண்டனையை தான் அனுபவிக்க

வேண்டும் என்று மென்மையாக குழந்தையை உணர வைக்க முடிகிறது. மீண்டும், அதே

தவறை செய்யாமலிருக்க, பெற்றோராகிய நாம் தான் குழந்தையை பழக்க வேண்டும்.

அதற்கு தான் குழாயில் தண்ணீர் பிடித்து பழகச் சொன்னேன்...' என்று, அவர்

விளக்கிய போது, ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் வளர்ப்பில் இம்மாதிரி

மென்மையான முறைகளை பின்பற்றலாமே என்று தோன்றியது. புத்தகங்களை படித்தால்

மட்டும் போதாது... படிக்கும் நல்ல விஷயங்களை, தக்க தருணத்தில்

நடைமுறைப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற உண்மை புரிந்தது.

fb 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

வைத்தியசாலை ஒன்றில் தமிழ் குடும்பம் ஒன்று இரு பிள்ளைகளுடனும் வெள்ளை இன குடும்பம் இரு பிள்ளைகளுடனும் வரவேற்பறையில் இருக்கிறார்கள்.பிள்ளைகள் அங்கும் இங்கும் ஓடி ஆடி விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.இறுதியில் பகிர்வதில் ஏதோ புடுங்குப்பாடு வந்து விட்டது.வெளி இடத்தில் நிச்சயமாக பெரிய சத்தமாக இருந்தது.வெள்ளை இன தாய் ஹனி என்று தொடங்கி பகிர்ந்து விளையாட பழக வேண்டும் என மென்மையாக சொன்னார்.தமிழ் அம்மாவும் குறைந்தவரா என்ன தொடங்கிய வார்த்தையே அசத்தி விட்டது."குறுக்கால போக" :lol:  :lol:

Link to comment
Share on other sites

நல்லதொரு விடையம். 
"பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை.

-----------------------------என்றார்.--------------சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை

கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்கணும். இந்த சின்ன டவலால கவனமா

துடைச்சுடு...' என்று, குழந்தையிடம் டவலை கொடுத்தாள். :)

 
 
குழந்தையை கத்துவது, அடிப்பது, கூடாது .  அன்பால் திருத்துவது ஆரோக்கியமானது. :) 
 
ஆனால்,
 கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. 
இது சில குழந்தைகளிடம் எதிர் மறையான  விளைவுகளையும் தரும். :icon_idea: என் மூன்று வயது மகளுக்கு தண்ணீ ர் , விளையாட, அதை தானே clean பண்ண கொள்ளை ஆசை. அவவுக்கு இப்படிச் சொன்னால், பிறகு  ஒவொரு நாளும்  கோக் போத்த ல் விழும். :lol: 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை...இணைப்பிற்கு நன்றி அபராஜிதன்...நான் கண்ட பெரும்பாலான எங்கட பெற்றோர் பிள்ளைகள் பொது இடத்தில் குளப்படி செய்தால் பொது இடமென்றும் பாராமல் கத்தோ கத்தென்று கத்துவார்கள் இல்லாட்டில் தங்களுக்கென்ன என்ட மாதிரி பேசாமல் இருப்பார்கள்  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழப்படி செய்யும்போது பொறுமையாகவும் அன்பாகவும் பேசாமல் "அடியாத மாடு படியாது" என்று எங்களைக் கத்தி அடித்தபடியால்தான் படிந்துபோய் இருக்கின்றோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 
 கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. 
இது சில குழந்தைகளிடம் எதிர் மறையான  விளைவுகளையும் தரும். :icon_idea: என் மூன்று வயது மகளுக்கு தண்ணீ ர் , விளையாட, அதை தானே clean பண்ண கொள்ளை ஆசை. அவவுக்கு இப்படிச் சொன்னால், பிறகு  ஒவொரு நாளும்  கோக் போத்த ல் விழும். :lol: 

ஆமாம், கொட்டின  தண்ணீ ரில்  விளையாட விட்டல் , எங்க வீட எல்லா தண்ணீரும்  கொட்டுப் படும். இது பிள்ளை  வளப்பிக்கு  நல்ல முறை இல்லை    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடையளுக்கு பிடரியிலை இரண்டு போடாட்டி ஒரு வழிக்கு கொண்டுவரேலாது....வெள்ளைக்காரனை பாத்து வாழோணுமிண்டால் அது சீரழிஞ்ச வாழ்க்கைக்கு சமன். அன்பு,பாசம் இல்லாத சடவாழ்க்கை........தண்ணி...டிஸ்கோ...தம்...செக்ஸ்.....குளிசை....இது இப்பத்தையான் வாழ்க்கைத்தத்துவம்.

Link to comment
Share on other sites

எங்கடையளுக்கு பிடரியிலை இரண்டு போடாட்டி ஒரு வழிக்கு கொண்டுவரேலாது....வெள்ளைக்காரனை பாத்து வாழோணுமிண்டால் அது சீரழிஞ்ச வாழ்க்கைக்கு சமன். அன்பு,பாசம் இல்லாத சடவாழ்க்கை........தண்ணி...டிஸ்கோ...தம்...செக்ஸ்.....குளிசை....இது இப்பத்தையான் வாழ்க்கைத்தத்துவம்.

 

 

முதலில் பொறுமையுடன் கூடிய அன்பு நல்ல குழந்தைகளை உருவாக்கும்!

அன்பு வேலை செய்யாத பொழுது ஒருசில வேளைகளில் மட்டும் அடிப்பது (பிடரியிலை இரண்டு போடுவது) தவறில்லை!

 

ஆனால் அடிப்பது வருடத்துக்கு 3 அல்லது 4 தரத்துக்கு மேல் இருப்பது நல்லதல்ல!!!

 

நல்லதொரு இணைப்பு அபராஜிதன்!

Link to comment
Share on other sites

549414_558254924186983_1047808331_n.jpg

 

 

 

பறவைகளை, விலங்குகளை அவதானித்தால் பழைய காகம் போன்றவற்றை இன்றும் காணலாம்! ஆனால் படத்திலுள்ள நவீன காகம் வெறும் கற்பனை மட்டுமே!

 

Link to comment
Share on other sites

FB நபருக்கு: நீங்க இருப்பதால் படம் காட்டியிருப்பாவோ?

அதேதான் ,

ஆக்கள் வந்தால் எல்லாரும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கிறது. இவ இரண்டு  step கூடப் போட்டு, கோக்கில விளையாடி பிசுபிசுத்த  பிள்ளை, பிள்ளை கிளீன் பண்ணின நிலம் என்று பிறகு ஆல்லோலகல்லோலப் பட்டிருப்பா.
மொத்தத்தில் ஓவர் ஸ்டேப் உடம்புக்காகாது  என்று அம்மாதான் பாடம் படித்திருப்பா  :D
Link to comment
Share on other sites

மூன்று வயதுக் குழந்தை, இரண்டு லீற்றா கொக்கோகோலாவினை நினைத்த நேரம் எடுத்துக் குடிக்கும் வகையான குழந்தை வளப்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று வயதுக் குழந்தை, இரண்டு லீற்றா கொக்கோகோலாவினை நினைத்த நேரம் எடுத்துக் குடிக்கும் வகையான குழந்தை வளப்பு?

பிள்ளைகள் பார்ட்டிக்கு போன Fanta மட்டுமே கேட்பார்கள், மற்றும் வேலை பழங்கள் & யூஸ் மட்டுமே.

 

சின்ன பிள்ளைகளின் எலும்புகளுக்கு கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று வயதுக் குழந்தை, இரண்டு லீற்றா கொக்கோகோலாவினை நினைத்த நேரம் எடுத்துக் குடிக்கும் வகையான குழந்தை வளப்பு?

உப்பிடியான தாய்தகப்பன்மார் இப்ப எக்கச்சக்கம்.நாங்கள் அவையளோடை ஏதாவது நல்லது,கெட்டது, சீர்திருத்தம் பற்றிகதைக்க வெளிக்கிட்டால்........ பள்ளிக்கூடம் போகாததுகள்,பட்டிக்காடுகள் எண்டு எங்களுக்கு பட்டம் கட்டுவினம். அவையின்ரை பால்குடியள் கொம்பியூட்டருக்கு முன்னாலை இருந்து கொண்டு மவுசை அங்காலை இஞ்சாலை அரக்கி வித்தை காட்டினாலே எங்கடை பெற்றோர் சங்கங்கள்  தங்கடை பிள்ளையளை கொம்பியூட்டர் எஞ்சினியர் ரேஞ்சுக்கு வாயாலை வெளுத்து வாங்குவினம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
    • இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும்,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.   வலைப்பந்தாட்ட போட்டி இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.   செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார். 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது  இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.  இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும்  இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-failed-doping-test-1715314992?itm_source=parsely-special
    • வெற்றிலை மென்றதற்கு வழக்கா? பழுதடைந்த மரக்கறிகளை விற்றதற்கு வழக்கா ? வெற்றிலை மெல்லுவது யாழ்பாணத்தானின் சுய விருப்பம் அல்லவா ?  ( காவிக் கறையும் வாய்ப்பு ற்றையும் கொண்டு  வரும் ) தற்போது அதிகமாக பாவிக்கிறார்கள்  .😢
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.