Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசிக்காமல் இருக்க என்ன செய்யலாம் ?????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு உணவுப் பிரியை. நன்றாக வேறு சமைப்பேன். சமைத்துவிட்டு சாப்பிடாமல்
இருப்பது எப்படி??? ஆனால் எனக்கு எதை உண்டாலும் ஒருமணி நேரத்தில்
சமிபாடடைந்துவிடும். அதனால் ஒரு நாளில் நான்கு தடவையாவது உண்ண வேண்டும்.

ஆனால் நான் மிக ஆரோக்கியமானவள். பசிப்பது நல்லது தானே என என் குடும்ப
வைத்தியரும் கைவிரித்துவிட்டார். பதினெட்டு வயதில்லையாயினும், கொடியிடை
இல்லாவிட்டாலும், மெலிந்து இருக்க ஆசை. அதற்காக என்னை சரியான குண்டு என்று
கற்பனை செய்ய வேண்டாம். பசிக்காமல் இருந்தால் நான் ஏன் அதிகமாக உண்ணப்
போகிறேன். அதனால் உங்கள் ஆலோசனை தேவை. கூற முடியுமா உறவுகளே????

  • கருத்துக்கள உறவுகள்

சோத்துக்குள்ள(அவியிற நேரத்தில), கொஞ்சமா, சீவின பாக்குத்தூள் கொஞ்சம் போட்டு விடுங்கோ! :D

 

கொழும்புச் சோத்துக் கடையளில செய்யிறவை! வாசமாயும் இருக்கும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில எனக்கு மட்டும் உலை வைக்கச் சொல்லுறியளோ புங்கை. பக்கு மணம் அல்லோ.

போக ஏலாத  ஊருக்கு வழி கேக்கிறீங்க. :(

எனக்கும் இதே பிரச்சனை.

 

சுவையாகச் சமைப்பதை நிறுத்துங்கள். பசியெடுக்கும் பொழுது இலை குளை, நார்ச்சத்து உள்ள உணவுகளை உண்ணுங்கள். நார்த்தேங்காய்  (Grape fruit), செலரி போன்றவைகள்  பசிஎடுப்பதைக் குறைக்கும்.

சுமே.....................  நல்லா சொக்லேற் சாப்பிடுங்கோ அல்லது ஹொற் சொக்லேற் குடியுங்கோ . பறக்கும் பசி .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ கோமகன், நான் ஒவ்வொரு  நாளும் ஒரு சொக்லற் கட்டாயம் சாப்பிடுவன். ஆனால் அது எல்லாம் எனக்கு உதவாது.



எனக்குப் பசிக்காமல் இருக்க வழி  சொல்லுங்கோ எண்டா மனிசனையும் பிள்ளையளையும் பட்டினி போடச் சொல்லுறது ஞாயமோ தப்பிலி. :D

சோத்துக்குள்ள(அவியிற நேரத்தில), கொஞ்சமா, சீவின பாக்குத்தூள் கொஞ்சம் போட்டு விடுங்கோ! :D

 

கொழும்புச் சோத்துக் கடையளில செய்யிறவை! வாசமாயும் இருக்கும்!

 

கொழும்பு  சோத்துக்கடை  உரிமையாளர்களும்  நாங்களே :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு  சோத்துக்கடை  உரிமையாளர்களும்  நாங்களே :D

 

எல்லாச் சோத்துக் கடைக்குமேவா ???? எனக்கு வழி  சொல்லுங்கோ தமிழ் முதலில். :D

 

  • கருத்துக்கள உறவுகள்
வீட்டில சும்மா இருந்தால் எந்த நேரமும் பசித்துக் கொண்டு தான் இருக்கும் :lol: [சும்மா பகிடிக்கு]
 
குளிருக்கு எந்த நேரமும் பசித்துத் கொண்டு தான் இருக்கும்.அதற்கு நீங்கள் 3 நேரம் சாப்பாட்டை பிரித்து 6 தரம் சாப்பிடவும்...இடைக்கிடையே பழங்கள்,நட்ஸ் சாப்பிடவும்
  • கருத்துக்கள உறவுகள்

சோத்துக்குள்ள(அவியிற நேரத்தில), கொஞ்சமா, சீவின பாக்குத்தூள் கொஞ்சம் போட்டு விடுங்கோ! :D

 

கொழும்புச் சோத்துக் கடையளில செய்யிறவை! வாசமாயும் இருக்கும்!

 

இவர் அடிக்கடி பொல்லைக்கொடுக்கிறார்

நான் இந்த விளையாட்டுக்கு வரல

சொல்லிப்போட்டன்......... :lol:  :D  :D

கொழும்பு  சோத்துக்கடை  உரிமையாளர்களும்  நாங்களே :D

 

 

சொன்னவுடன் உங்களுக்கு   ஞாபகம் வருகிறது அல்லவா?

அதுதுதுதுதுதுதுதுதுதுதுது...... :lol:  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆலோசனைகளை வழங்கிய புங்கை, தப்பிலி, கோமகன்,ரதி, தமிழ் 31,விசுகு அண்ணா ஆகியோருக்கு நன்றி. ஆனாலும் இதுவரை வந்த யோசனை ஒன்றும் உருப்படியாக வரவில்லை. ம்........... கடைசியில யாழ் உறவுகளும் கைவிட்டாச்சா என்னை :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

சமைமக்கும் போதே தணனி அடிக்க தொங்குங்கள் அப்படியே தொடர்ந்து அடியுங்கள் சமைத்து முடிய சாப்பிட முடியாதளவுக்கு நிலமை வந்தவுடன் குடும்ப உறுப்பினர்களுக்கு சாப்பாட்டை கொடுத்து அவர்களே சுயமாக போட்டு சாப்பிட சொல்லிவிட்டு (முக்கியம் நீங்கள் பரிமாறக்கூடாது)அப்டியே போய் கவின்டு படுங்கள்.சப்ரர் குளோஸ்.  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ உங்கட அநியாயத்தை எங்க போய்ச் சொல்ல சஜீவன். உங்களுக்குத் தெரியாட்டித் தெரியாது எண்டு சொல்லுறது தானே. :D

பசிக்கும் போது முதலில் தண்ணீர் குடியுங்கள் சுமோக்கா :)

 

இல்லாவிட்டால்: உங்களுக்கு பசி எடுக்கும் போது " எனக்கு பசிக்கவில்லை எனக்கு பசிக்கவில்லை" என்று பத்து தரம் சொல்லி பாருங்கள் :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு  சோத்துக்கடை  உரிமையாளர்களும்  நாங்களே :D

ஹி....ஹி.....

 

நாங்கள் சில்லறை இல்லை! மொத்த வியாபாரம் தான்!

 

நாலாம் குறுக்குத்தெரு அல்லது ஆட்டுப்பட்டிதெருப் பக்கம் எங்களை அதிகம் காணலாம்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பசிக்கும் போது முதலில் தண்ணீர் குடியுங்கள் சுமோக்கா :)

 

:o :o :o

இந்த ஆலோசனை சரியில்லை மேடம்.. பசி வரும்போது நாவில் ஊறும் உமிழ்நீர்.. அதில் உணவு சமிப்பதற்கான மூலக்கூறுகள் உள்ளன. உணவுடன் கலந்து அவை வயிற்றுக்குள் செல்லும்போது சமிபாட்டுப் பிரச்சினை வராது. மாறாக தண்ணியைக் குடித்தால் உமிழ்நீர் முதலே உட்சென்றுவிடும்.

 

சாப்பிட முன்பும், சாப்பிடும்போதும் நான் நீர் அருந்துவதில்லை. :unsure:

 

திருத்திய காரணம்: எழுத்துப்பிழை

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பி பசியை முறித்து விடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாப்பிடாமல் இருப்பதர்ற்கு நல்லவழி சாப்பிடாமல் இருப்பதே :)

உங்களுக்கு சலரோகம், இல்லாவிடில் இதை செய்து பாருங்கள்...நீங்கள் ஒரு நேர, அல்லது இரண்டு நேர சாப்பட்டை சாப்பிடாமல் விட்டால், உடலில் உள்ள குளுக்கோசு எல்லாம் முடிந்து போய்விடும்- உண்மையில்/ நான் நினைக்கிறேன் 24? மணித்தியாலத்தில் என்று- அதன் பிறகு கொழுப்பு உடைந்து/ கரைந்து சத்திக்குரிய மூலபொருளாக மாறும், அதன் விளைவாக, உடலில் ketone என்கிற ஒரு பதர்த்த்தம் அதிகளவில் வரும்.. அது பசியை தூண்டும் மையத்தை தூண்ட விடாது...பிறகு என்ன பசி இல்லை...அப்படியே விட்டால் அது -ketone ..கூடிக்கூடி, உடம்பின் எல்லா பகுதியையும் பாதித்து..கடைசியில் கைலாயத்தையும் காட்டும்,...உங்காளுக்கு சலரோகம் இருந்தால் எல்லாம் விரைவாக நடக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் அடிக்கடி பொல்லைக்கொடுக்கிறார்

நான் இந்த விளையாட்டுக்கு வரல

சொல்லிப்போட்டன்......... :lol:  :D  :D

 

 

சொன்னவுடன் உங்களுக்கு   ஞாபகம் வருகிறது அல்லவா?

அதுதுதுதுதுதுதுதுதுதுதுது...... :lol:  :D  :D

 

நக்கலடிக்கிறனெண்டு கோவிக்கக்கூடாது விசுகர்! நீங்கள் உண்மையிலையே  ஒற்றுமையின் சிகரம்.  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒரு உணவுப் பிரியை. நன்றாக வேறு சமைப்பேன். சமைத்துவிட்டு சாப்பிடாமல்

இருப்பது எப்படி??? ஆனால் எனக்கு எதை உண்டாலும் ஒருமணி நேரத்தில்

சமிபாடடைந்துவிடும். அதனால் ஒரு நாளில் நான்கு தடவையாவது உண்ண வேண்டும்.

ஆனால் நான் மிக ஆரோக்கியமானவள். பசிப்பது நல்லது தானே என என் குடும்ப

வைத்தியரும் கைவிரித்துவிட்டார். பதினெட்டு வயதில்லையாயினும், கொடியிடை

இல்லாவிட்டாலும், மெலிந்து இருக்க ஆசை. அதற்காக என்னை சரியான குண்டு என்று

கற்பனை செய்ய வேண்டாம். பசிக்காமல் இருந்தால் நான் ஏன் அதிகமாக உண்ணப்

போகிறேன். அதனால் உங்கள் ஆலோசனை தேவை. கூற முடியுமா உறவுகளே????

 

வயித்துக்கை என்ன பெருங்குடல் சிறுகுடலோ இல்லாட்டி மிசின் ஏதாவது பூட்டிவைச்சிருக்கிறியளோ? :rolleyes:  ஒருமணித்தியாலத்திலை எல்லாத்தையும் அரைச்சு தள்ளுதெண்டால் :o ???????? உந்த மிசினுக்கு உழைச்சுக்கொண்டு வந்து போடுற சிங்கனுக்கு நீங்கள் காலிலை பூ போட்டு கும்புடோணும். :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பசிக்கும் போது முதலில் தண்ணீர் குடியுங்கள் சுமோக்கா :)

 

இல்லாவிட்டால்: உங்களுக்கு பசி எடுக்கும் போது " எனக்கு பசிக்கவில்லை எனக்கு பசிக்கவில்லை" என்று பத்து தரம் சொல்லி பாருங்கள் :lol::icon_idea:

 

தமிழினி உங்களுடையதை வாசித்துவிட்டு இரவு சாப்பிடுவதில்லை என சபதத்துடன் இருந்தேன். மகள் முட்டை பொரித்துத்தரும் படி கூறியதால் முட்டை பொரிக்கும் போதே பசி தொடங்கிவிட்டுது. பசிக்கவில்லை பசிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு முட்டை பொரித்துமுடித்தால் சாப்பிடு சாப்பிடு என்று மனம் சொல்ல வெளிக்கிட்டிது. பிறகென்ன........... எதற்கும் நீங்கள் கூறிய முறையை பின்பற்றப் பார்க்கிறேன். நன்றி தமிழினி.

 

:o :o :o

இந்த ஆலோசனை சரியில்லை மேடம்.. பசி வரும்போது நாவில் ஊறும் உமிழ்நீர்.. அதில் உணவு சமிப்பதற்கான மூலக்கூறுகள் உள்ளன. உணவுடன் கலந்து அவை வயிற்றுக்குள் செல்லும்போது சமிபாட்டுப் பிரச்சினை வராது. மாறாக தண்ணியைக் குடித்தால் உமிழ்நீர் முதலே உட்சென்றுவிடும்.

 

சாப்பிட முன்பும், சாப்பிடும்போதும் நான் நீர் அருந்துவதில்லை. :unsure:

 

திருத்திய காரணம்: எழுத்துப்பிழை

 

எனக்கு சாதாரணமாகவே தண்ணீர் குடிப்பது என்றால் கசக்கும். ^_^

கோப்பி பசியை முறித்து விடும்.

 

எனக்குக் கோப்பி கூடப் பசியைத் தூண்டும் காரணி. அதனால் இப்ப கொஞ்ச நாளா நான் ஆசையாக் குடிக்கிற கோப்பியும் கட்..

சாப்பிடாமல் இருப்பதர்ற்கு நல்லவழி சாப்பிடாமல் இருப்பதே :)

உங்களுக்கு சலரோகம், இல்லாவிடில் இதை செய்து பாருங்கள்...நீங்கள் ஒரு நேர, அல்லது இரண்டு நேர சாப்பட்டை சாப்பிடாமல் விட்டால், உடலில் உள்ள குளுக்கோசு எல்லாம் முடிந்து போய்விடும்- உண்மையில்/ நான் நினைக்கிறேன் 24? மணித்தியாலத்தில் என்று- அதன் பிறகு கொழுப்பு உடைந்து/ கரைந்து சத்திக்குரிய மூலபொருளாக மாறும், அதன் விளைவாக, உடலில் ketone என்கிற ஒரு பதர்த்த்தம் அதிகளவில் வரும்.. அது பசியை தூண்டும் மையத்தை தூண்ட விடாது...பிறகு என்ன பசி இல்லை...அப்படியே விட்டால் அது -ketone ..கூடிக்கூடி, உடம்பின் எல்லா பகுதியையும் பாதித்து..கடைசியில் கைலாயத்தையும் காட்டும்,...உங்காளுக்கு சலரோகம் இருந்தால் எல்லாம் விரைவாக நடக்கும்.

 

அதுக்கும் சரிவராதே எனக்கு வொல்கானோ. சாப்பிடாமல் ஒரு மூன்று மணி நேரம்

இருந்தால் தலை சுற்றி மயக்கமே வந்துவிடும். அதனால் பசித்தவுடன் ஒழுங்காச்

சாப்பிட்டு விடுவேன்.

 

வயித்துக்கை என்ன பெருங்குடல் சிறுகுடலோ இல்லாட்டி மிசின் ஏதாவது பூட்டிவைச்சிருக்கிறியளோ? :rolleyes:  ஒருமணித்தியாலத்திலை எல்லாத்தையும் அரைச்சு தள்ளுதெண்டால் :o ???????? உந்த மிசினுக்கு உழைச்சுக்கொண்டு வந்து போடுற சிங்கனுக்கு நீங்கள் காலிலை பூ போட்டு கும்புடோணும். :(  :(  :(

 

ஏன் குமாரசாமி அண்ணா, நான் வேலை செய்யாமல் மனிசனின் காசில் சும்மா

இருந்து சாப்பிடுறன் எண்டே நினைக்கிறியள் ??? வாரத்தில ஐந்து நாட்கள்

சம்பளத்துடன் முழுநேர வேலை மற்றும் எழு நாட்கள் வீட்டில் சம்பளமில்லா சமையல் வேலையுடன் மற்ற வேலைகளும் செய்யிறன். :( :( :( :(

 

வைத்தியரை நாடினால் நல்லது

 

வைத்தியரிட்ட எத்தினையோ தடவை போயாச்சு. எல்லாரும் தண்ணி குடியுங்கோ பழம்,சாப்பிடுங்கோ எண்டு சொல்லினமே தவிர உருப்படியா ஒன்றும் செய்யவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

வயித்துக்குள்ள இருக்கிறது குடலா அல்லது கடலா எண்டு ஒருக்கா, செக் பண்ணிப்பாருங்கோ, சுமோ! :lol:  :D  :lol:

சாப்பாட்டுப் பிரியை என்று கூறியுள்ளீர்கள். இது மனதோடு தொடர்பான பிரச்சனையாகவும் இருக்கலாம். சுவையான உணவுகளைப் பற்றி நினைத்தாலும் அல்லது சுவையான உணவுகளை எப்படிச் சமைக்கலாமென்று நினைத்தாலும் பசியெடுக்கும்.

 

அடுத்து வீட்டுச் சமையலிலும் கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது நல்லது. ஒவ்வொரு நாளும் சோறு கறி சாப்பிட்டால் அதற்கேற்ப சக்தி இழப்பீடு வேண்டும். எங்கட உணவுகளில் உள்ள ஒரு கெட்ட  குணம் ஒவ்வொரு நாளும் உண்ண, வாய்க்கு ருசியாய் / புதிதாய் கேட்கும். வாரத்தில் சில நாட்களுக்கு காரசாரமில்லாத ஆங்கில உணவுகளை (Grilled மீன், நீராவியில் அவித்த மரக்கறி,பச்சைக் கீரைகள்  ...) சமைத்துப் பாருங்கள்வித்தியாசம் தெரியும்.

சுமோ நீங்கள் Vegetarian ஆய் மாறுங்கள் உங்களுடைய பிரச்சனைக்கு ஒரு வழி பண்ணலாம். அதனுடன் உடற்பயிற்சியைச் செய்யுங்கள் ஒரு நாளைக்கு 30 நிமிடமாவது. கண்டபடி பொரித்த குழம்பு, பொரித்த கறி எண்டு சமைக்காமல் அவியல் கறிகளையும் வையுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.